
9 ஆயிரம் யாத்திரிகர்களின் வரகை - கச்சதீவு பெருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக முன்னெடுப்பு – பதில் அரச அதிபர் பிரதீபன்
இந்தியா மற்றும் இலங்கை யாத்திகர்கள் உள்ளிட்ட 9 ஆயிரம் யாத்திரிகர்கள் கச்சதீவு பெருந்திருவிழாவுக்கு வருகை தருவர் என்ற எதிர்பார்ப்புடன் இவ்வாண்டுக்கான பெருவிழா 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக யாழ் மாவட்டத்தின் பதில் அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு திருவிழா தொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம்(07.02.2025) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற இந்த கூட்டத்தில் யாழ். இந்திய துணை தூதரகத்தின் அதிகாரி திரு.நாகராஜா, முப்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து துறைசார் தரப்பினருடன் மேற்கொண்ட நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்க கருத்தத் தெரிவித்த அரச அதிபர் பிரதீபன் கூறுகையில் –
திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளதற்கான குறிப்பாக குடிநீர், மலசலகூடம், சுகாதாரம் பேணல், சுகாதார சேவைகள், பேருந்து போக்குவரத்து, கடற் போக்குவரத்து உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட அதிகாரிகள் தயாராகியுள்ளனர்.
இதேநேரம் சிறந்த பேருந்து போக்குவரத்து சேவையை முன்னெடுக்க இ. போ. ச மற்றும் தனியார் பேருந்து சேவையிலீடுபடும் தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று கடற் போக்கவரத்து சேவையும் செவையை மேற்கொள்ளவள்ள படகுகளின் தரம் தொடர்பில் கடற்படையினர் ஆய்வகளை தேற்கொண்டு அதற்கான அனுமதிகள் வழங்கப்படவுள்ளது.
அத்துடன் கடற் போக்குவரத்து சேவைக்கான போக்குவரத்து கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கான ஒரு வழி கடற் போக்குவரத்து கட்டடணமாக 1000 ரூபாவும், குறிகாட்டுவன் துறைமுகத்திலிருந்து 1300 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வருகைதரும் யாத்திரிகர்களுக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இந்நிலையில் பெருந்திருவிழாவுக்கு இம்முறை இந்தியாவிலிருந்து 4 ஆயிரம் யாத்திரிகர்களுக்கும் இலங்கையின் 4 ஆயிரம் யாத்திரிகர்களுக்கும் அனுமதிக்கப்படவுள்ளதுடன் இரு நாடுகளினதும் அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் என 1000ம் பேருமாக 9 ஆயிரம் பேர் வருகைதரவுள்ளனர்.
அந்தவகையில் குறித்த பெருந்திருவிழாவுக்கு வருகைதரவுள்ளவர்கள் ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி எதுவித இடையூறுகளும் இன்றி கலந்துகொள்ளுமாறும் அரச அதிபர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000