சினிமா செய்திகள்
நாகேஷ்
தன் முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லை நாகேஷ்.நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்கத்திற்குப் போய்விட்
" கவியரசரின் " பதிவு
சமீபத்தில் நண்பர்கள் சந்திப்பில் அருமை நண்பர் கேள்வி கேட்கநான் அளித்த பதில் உங்கள் முன் இதோ...வீரம் என்றால் என்ன என்று நண்பன் ஒருநாள் கேட்டான்..கட்டபொ
கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித
விசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்
விசுவின் படங்களை பொறுத்தவரைக்கும் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்தாற் போல் தன் படங்களில் காட்டியிருப்பார் விசு. மிடில் கிளாஸ் வாழ்க
தலை குனிந்து வணங்கினார் கமல்ஹாசன்
இந்தியத் திரைத் துறையில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களை இயக்கிய இவர், தமிழ், இந்தி, மலை
நடிகர் டணால் தங்கவேலு
தன் வாழ்நாளில் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில் ஒரு வழக்கத்தை கடைபிடித்து வந்தார் நடிகர் டணால் தங்கவேலு .ஒவ்வொரு தீபாவளி அன்றும் புத்தாடைகள் அணியாமல்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீர
வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்ட
‘விடாமுயற்சி’ திரைப்படம் எப்போது வெளிவரும்?
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தினால் பொங்கல் ரிலீஸ்
Ads
 ·   ·  2417 news
  •  ·  1 friends
  • 1 followers

இலங்கையின் 77 ஆவது சுதந்திரதினம் இன்று - 'தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்" எனும் தொனிப்பொருளில் கொண்டாட்டம்

இலங்கையின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வு 'தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்" எனும் தொனிப்பொருளில் இன்றாகும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இதில் 1,873 இராணுவ சிப்பாய்கள் மாத்திரமே பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, சுதந்திர தின நிகழ்வில் 3,384 இராணுவ சிப்பாய்கள் பங்கேற்றிருந்த நிலையில் இந்த முறை அந்த எண்ணிக்கை 1,511 ஆல் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு முப்படைகளின் கவச வாகனங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடற்படையினால் வழமையாக நடத்தப்படும் 25 துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.

கடந்த ஆண்டு சுதந்திரதின விழாவிற்கு 19 விமானப்படை விமானங்கள் பயன்படுத்தப்பட்டிருந்த போதிலும், இந்த ஆண்டு சுதந்திர தின விழாவிற்கு மூன்று விமானங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்தைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 77 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, அனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பாகவும் கடந்த மாதம் 10 ஆம் திகதி பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாதம் முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியைப் பறக்கவிடுமாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றும் இன்றும் அனைத்து அரச நிறுவனங்களையும் மின் விளக்குகளால் அலங்கரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவிக்கப்பட்டது.

எனினும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அரச நிறுவனங்களின் மின் விளக்குகளால் அலங்கரிக்கும் செயற்பாட்டை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக நேற்று அறிவித்தது.

மின்சார பாதுகாப்பு மற்றும் மின் அலங்காரத்திற்கான செலவைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

000

  • 558
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads