சினிமா செய்திகள்
நாகேஷ்
தன் முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லை நாகேஷ்.நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்கத்திற்குப் போய்விட்
" கவியரசரின் " பதிவு
சமீபத்தில் நண்பர்கள் சந்திப்பில் அருமை நண்பர் கேள்வி கேட்கநான் அளித்த பதில் உங்கள் முன் இதோ...வீரம் என்றால் என்ன என்று நண்பன் ஒருநாள் கேட்டான்..கட்டபொ
கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித
விசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்
விசுவின் படங்களை பொறுத்தவரைக்கும் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்தாற் போல் தன் படங்களில் காட்டியிருப்பார் விசு. மிடில் கிளாஸ் வாழ்க
தலை குனிந்து வணங்கினார் கமல்ஹாசன்
இந்தியத் திரைத் துறையில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களை இயக்கிய இவர், தமிழ், இந்தி, மலை
நடிகர் டணால் தங்கவேலு
தன் வாழ்நாளில் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில் ஒரு வழக்கத்தை கடைபிடித்து வந்தார் நடிகர் டணால் தங்கவேலு .ஒவ்வொரு தீபாவளி அன்றும் புத்தாடைகள் அணியாமல்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீர
வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்ட
‘விடாமுயற்சி’ திரைப்படம் எப்போது வெளிவரும்?
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தினால் பொங்கல் ரிலீஸ்
Ads
 ·   ·  2401 news
  •  ·  1 friends
  • 1 followers

அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை வடக்கு மாகாணம் உரிய வகையில் செலவு செய்வதில்லை - மத்திக்கு ஏன் திருப்பி அனுப்புகின்றீர்கள் - அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி அநுர

வடக்கு மாகாண அபிவிருத்திக்காக மத்திய அரசால் நிதி ஒதுக்கப்படும்போது உரிய வகையில் செலவு செய்யாமல் மீண்டும் மத்திக்கு ஏன் அனுப்புகின்றீர்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கின் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.  

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (31) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கலந்துரையாடலின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபை விடயதானங்கள் தொடர்பில் நிதி வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்த நிலையிலே ஜனாதிபதி இவ்வாறு கேள்வியை முன்வைத்திருந்தார்.

மேலும் மத்திய அரசால் வடக்கு மாகாண அபிவிருத்திக்காகப் பல்வேறு நிதி மூலங்கள் ஊடாக நிதி ஒதுக்கப்படுகின்றது. ஆனால், ஒதுக்கப்படும் நிதிகள் பலவும் செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்படும் நிலை காணப்படுகின்றது.

இந்த மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. இருந்தபோதிலும் அதிக நிதிகள் திருப்பி அனுப்பப்படுகின்ற நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ளக வீதிகளைப் புனரமைப்பதற்கு எவ்வளவு நிதி வேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது கேள்வி எழுப்பினார்.

இதன்போது துறைசார் அதிகாரி விவரங்கள் தெரியாது தடுமாறிய நிலையில், ஜனாதிபதி மீண்டும், "வீதிகளைப் புனரமைப்பதற்கு எவ்வளவு நிதி வேண்டும் எனச் சரியாகக் கூறுங்கள், ஏறக்குறைய என்று கதை கூற வேண்டாம் என கோரியிருந்தார்

மேலும் நாடு பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து இன்னும் மீளவில்லை. இங்கு பெற்றோல் இருக்கின்றது, எரிவாயு இருக்கின்றது என்றால் பொருளாதார நெருக்கடி இல்லை என நினைக்க வேண்டாம்.

நாங்கள் இன்னும் பொருளாதார நெருக்கடியில் இருந்து கொண்டே இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவுள்ளோம்.

ஆகவே, அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்தால் அதனை உரிய முறையில் பயன்படுத்துவது  அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இதேபோன்று ஐனாதிபதி பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் தகவல்களைக் கேட்ட போதும் துறை சார்ந்த ரீதியில் உரிய தகவல்கள் தெரியாமல் அதிகாரிகள் தடுமாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

  • 326
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads