Category:
Created:
Updated:
தேசிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் பல பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இராஜாங்க அமைச்சின் அறிக்கைபடி விசாரணைப்பிரிவின் 6 பணியாளர்களும், இரண்டு சாரதிகளும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து இராஜாங்க அமைச்சின் விசாரணைப்பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதேவேளை இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன உட்பட்டவர்களின் செயலாளர்கள் மற்றும் நெருங்கிய பணியாளர்கள் எவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.