
யாழில் இன்று 14,000 பேர் வரை தடுப்பூசி பெற்றனர்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று மூன்றாவது நாளாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மூன்றாவது நாளில் 13 ஆயிரத்து 892 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கையானது, தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் எதிர்பார்க்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் 70.99 வீதம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக இந்தத் தடுப்பூசித் திட்டம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகிறது.
இந்தத் தடுப்பூசித் திட்டம், மக்கள் தொகையின் அடிப்படையில் கணிக்கப்பட்டு 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் உள்ள 83 கிராம அலுவலகர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.