சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  2861 news
  •  ·  1 friends
  • 2 followers

2024 நாடாளுமன்ற தேர்தல் - வேட்பு மனு கையேற்பு இன்றுடன் நிறைவு

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு இன்றுடன் (11) நிறைவடையவுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் நேற்றையதினம் வேட்பு மனுக்களில் கைச்சாத்திடும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தன.  இதுதவிர, பல கட்சிகள் நேற்றையதினம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.

அந்தவகையில் தேசிய மக்கள் சக்தி மாத்தறை மாவட்டத்திற்கான வேட்பு மனுவை நேற்றைய தினம் கையளித்திருந்தது.

அந்தக் கட்சியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் இந்த வேட்பு மனு கையளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தேசிய மக்கள் சக்தி குருணாகல் மாவட்டத்திற்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்திருந்தது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்திற்கான வேட்பு மனு நேற்றைய தினம் கையளிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்த வேட்பு மனு கையளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தறை மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களையும் ஐக்கிய மக்கள் சக்தி கையளித்துள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொழும்பு, கம்பஹா, மாத்தறை, மாத்தளை, ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களில் கையெழுத்திடும் செயற்பாடு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

இந்தநிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று காலை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளது.

அதேநேரம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்கள் கம்பஹா, களுத்துறை, பதுளை, புத்தளம், அநுராதபுரம், உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களில் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த கட்சியின் சார்பில் நேற்றைய தினம் மாத்தறை மாவட்டத்திற்கான வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஈ.பிடி.பி ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய வேட்புமனுக்கள் யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் எம்.பிரதீபனிடம் நேற்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

000

  • 1387
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads