சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  2861 news
  •  ·  1 friends
  • 2 followers

”ஈரான் செய்தது மிகப் பெரிய தவறாம்” - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேல் - பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இப் போரில் ஈரானின் முழு ஆதரவுப் பெற்ற லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறிருக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை ஈரானில் வைத்து இஸ்ரேல் கொலை செய்தது.

இச் சம்பவத்துக்காக இஸ்ரேலை பழி தீர்ப்போம் என ஈரான் கூறியிருந்தது. ஆனால், எதுவித நேரடி தாக்குதலையும் நடத்தவில்லை.

கடந்த வாரம் லெபனான் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் மற்றும் ஈரானின் மூத்த இராணுவ தளபதி உள்ளிட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து இஸ்ரேலை பழி தீர்ப்போம் என ஈரான் வெளிப்படையாக அறிவித்தது.

இதனை நிகழ்த்திக் காட்டும் விதமாக, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, இஸ்ரேல் தலைநகர் டெல் அவில் மற்றும் ஜெருசலேம் நகரங்களை இலக்காக வைத்து ஏவுகணைகளை வீசியது ஈரான்.

இத் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் பதட்டமான சூழல் நிலவ, மக்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் சென்று பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டன. இத் தாக்குதலினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் தகவல் வெளிவரவில்லை.

இந்நிலையில், இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரது எக்ஸ் தளத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “ஈரான் இன்றிரவு பெரிய தவறு செய்துவிட்டது. இதற்கு அவர்கள் பதில் கொடுத்தே ஆக வேண்டும். ஈரானின் இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது. எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் எமது உறுதியை ஈரான் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

எங்களுடன் மோதவேண்டாம்...என ஏற்கனவே இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கியான் எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

'ஈரான் மக்களை பாதுகாக்கவே இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் போரை விரும்பவில்லை என்பதை நெதன்யாகு புரிந்துகொள்ள வேண்டும்.

எங்களுடன் மோத வேண்டாம். அதையும் மீறி ஏதேனும் அச்சுறுத்தல் வந்தால் அதனை வலிமையாக எதிர்கொள்வோம்' எனப் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

  • 1181
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads