சினிமா செய்திகள்
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
Ads
 ·   ·  1406 news
  •  ·  0 friends
  • 1 followers

வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்து

ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இதற்கமைய வாக்களிப்பு நிலையங்களில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துதல், புகைப்படம் எடுத்தல், காணொளிப் பதிவு செய்தல், ஆயுதங்களை தம்வசம் வைத்திருத்தல் என்பனவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் வாக்களிப்பு நிலையத்தில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் அல்லது போதைப்பொருள் பாவனையுடன் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்வது சட்டவிரோதமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை வாக்காளர் ஒருவர் தமது வாக்கைச் செலுத்தியதன் பின்னர் அதனைக் கையடக்க தொலைபேசியில் படம் எடுத்து, சமூக ஊடகங்களில் பதிவிடுவது சட்டவிரோதமாகும்.

அத்துடன் வாக்கைச் செலுத்தியதன் பின்னர், தாம் வாக்களித்த வேட்பாளரின் பெயரை வாக்களிப்பு நிலையத்திற்கு வெளியில் வந்து கூறுவது தேர்தல் சட்டத்திற்கு முரணானதாகும்.

எனவே குறித்த செயற்பாடுகள் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை வாக்களிப்பு நிலையங்களுக்குள் நுழைய அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் தொடர்பான அறிவிப்பையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் கடமையில் ஈடுபடும் பணியாளர்கள், தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மாத்திரம் வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்கள், அவர்களது தேர்தல் முகவர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், பிரதேச முகவர்கள் மற்றும் உரிய வகையில் நியமிக்கப்பட்ட வாக்களிப்பு முகவர்கள் ஆகியோருக்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு அல்லது வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்க முடியும்.

இவர்களைத் தவிர வேறு எவருக்கும் வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

000

  • 134
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads