சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  2861 news
  •  ·  1 friends
  • 2 followers

சரியான வழிகாட்டலுக்கு வலுச்சேருங்கள் - இல்லையேல் நாடாளுமன்ற பிரதிநிதித்தவமும் கேள்விக்குறியாகும் - திருமயைில் அமைச்சர் டக்ளஸ்

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கிவருகின்றேன். எமது வழிமுறையே சாத்தியமானது என்பதும் இன்று நிரூபணமாகியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த அனுபவத்தினூடாகத்தான் இம்முறை ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியும் நாட்டுக்கு அவசியமாக இருக்கின்றது. அவரை வெற்றிபெறச் செய்யுங்கள் என கோருகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு வலுச்சேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

குறித்த மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்களுடனான பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு இவ்வாறு உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில் -

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதில் வடக்கு கிழக்கு மக்கள் தெளிவாக உள்ளனர்  குறிப்பாக அனுபவமும் ஆற்றலும் உள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்கள் முழுமையாக வாக்களிப்பார்கள் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்

இதேநேரம் ஈ.பி.டி.பியினராகிய எமது வழிமுறையே வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு சாத்தியமான தீர்வை தரும். எம்முடன் இணைந்து பயணியுங்கள் என நான் மூன்று தசாப்தங்களாக திருமலை மாவட்ட மக்களிடம் அழைப்பு விடுத்து வந்திருந்த போதும் அவர்கள் தவறானவர்களின் வழிநடத்தலிலிருந்து மீளமுடியாதிருந்தமையால் பல்வேறு அசௌகரியங்களை இன்றுவரை எதிர்கொண்டுவர நேர்ந்துள்ளது.

இதேநேரம் குறித்த தவறான வழிநடத்தலை மக்கள் ஓரங்கட்டி அதிலிருந்து வெளிவராவிட்டால் இம்மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் இன்வரும் காலத்தில் இல்லாதுபோகும் சூழ்நிலை உருவாகும் அபாய நிலை உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இன்றுவரை இருந்துவருவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே முக்கிய காரணமாக இருந்திருக்கின்றது

அதற்கு திருமலை மாவட்டத்தில் நாம் அன்று எமக்கிருந்த அரசியல் பிரதிநிதித்துவத்தினூடான செய்த குடியேற்றத் திட்டங்களும் சேவைகளுமே காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தற்போது ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வந்துவிட்டது. அதேபோன்று நாடாளுமன்றம் மற்றும் மாகாணசபை உள்ளூராட்சி மன்ற தேர்தல்களும் விரைவில் வருவதற்கான காலச் சூழலும் வந்துகொண்டிருக்கின்றது.

நாட்டுக்கு ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி எவ்வாறு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகின்றேனோ அதேபோன்றுதான் இம்மாவட்டத்திற்கு ஈ.பி.டி.பியின் அரசியல் பிரதிநிதித்துவ பலமும் அவசியமானதொன்றாக இருக்கின்றது.

அதனடிப்படையில் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தின் வெற்றியை வலுப்படுத்துவது போன்று எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஈ.பிடி.பியின் பலத்தையும் நீங்கள் வலுப்படுத்த வேண்டும். அதனூடாகவே இம்மாவட்டத்தில் வாழும் எமது மக்களின் அபிலாசைகள் அதன் இலக்கை எட்டும் என நினைக்கின்றேன்.

இதேவேளை தேர்தலைப் புறக்கணிப்பதன் ஊடாகவோ அல்லது பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதன் ஊடாகவோ கடந்த காலங்களில் என்ன கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் நன்கு அறிவார்கள்

எம்மை நம்பி உங்கள் வாக்குகளை ரணில் விக்ரமசிங்கவுக்கு அளியுங்கள். கட்சி என்ற ரீதியில் அதற்கு நாம் பொறுப்பாக இருப்போம். நாம் சொல்வதைத்தான் செய்வோம். ஜனாதிபதி ரணிலின் மீது நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டும். என்று அவர் வலியுறுத்தியதுடன் அவரது வெற்றியே காலத்தின் தேவை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

 

  • 1711
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads