சினிமா செய்திகள்
தாயின் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகர்
கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் இறுதிச்
மூன்றாவது திருமணம் செய்ய போகும் நடிகர்
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா  தமிழில் அன்பு என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் சுமாராக ஓடிய போதும், இந்த படத்தில் வரும்
அமெரிக்காவில் ஷார்ட் உடையில் நடிகை அஞ்சலி
தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலர் நடிகை அஞ்சலி. அவருக்கு ஏராளம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.தற்போது நியூயார்க்கில் இருக்கும் அஞ்சலி ஷார்ட் உடைய
கங்குவா படம் பற்றிய அப்டேட்
நடிகர் சூர்யா நடித்துள்ள படங்களில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக உள்ளது கங்குவா.சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த பட
கனிகாவிற்கு வளையல் அணியும் விழா
கடந்த சில நாட்களுக்கு முன் சினேகன்-கனிகா இருவரும் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷ செய்தி வெளியிட்டார்கள். இந்த நிலையில் கனிகாவின் 5வது மாத நிகழ்ச்சி அழகாக
9 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் மொத்த வசூல்
தனக்கு கிடைத்த வாய்ப்பை வேட்டையன் என்ற படத்தை இயக்கி தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார் ஞானவேல்.இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரி
நடிகை ரம்யா கிருஷ்ணன் விவகாரத்து செய்கிறாரா?
தமிழில் 1983ம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு என்கிற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.ஐட்டம் டான்ஸ், அம்மன் வேடம், போல்டான கதாபாத
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
மடோனா செபாஸ்டியனின் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நட
நடிகர் மயில்சாமியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி பென்ஸ் காரை தொட்டு பார்த்ததற்காக “அந்த” ஆளு அடிச்சாரு.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகர்மறைந்த மயில்சாமி நிகழ்ச்சி ஒன்றுக்கு
நடிகர் அரவிந்த்சாமி பெற்ற புத்தக அனுபவம்
அரவிந்த்சாமி ஒரு நிறுவனத்தின் இயக்குநர். சினிமா நடிகர். அவருடைய அனுபவத்திலிருந்து, பணம் குறித்து தான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்தபோது, The Psychology O
வேட்டையன் படத்தில் நடிக்க ராணா வாங்கிய சம்பளம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படத்தை லைகா தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் ரஜ
Ads
 ·   ·  1646 news
  •  ·  0 friends
  • 1 followers

சிறந்த வேலைத் திட்டத்தின் காரணமாகவே நாட்டை முன்னோக்கி நகர்த்தும் பயணத்திற்கு நட்பு நாடுகள் ஆதரவு - ஜனாதிபதி ரணில்

 

இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களில் முன்னெடுத்த வேலைத் திட்டத்தின் காரணமாக, நாட்டை முன்னோக்கி நகர்த்தும் பயணத்திற்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட அனைத்து நட்பு நாடுகளினதும் ஆதரவும் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கந்தளாய் புகையிரத நிலையத்திற்கு முன்பாக  நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மக்களினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீளப் புனரமைத்தல், கைத்தொழில் வலயம் அமைத்தல் மற்றும் வெருகல் பாலத்தை நிர்மாணித்தல் உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுப்பதாக ஜனாதிபதி அறிவித்தார்.

பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிடுகையில்,

இன்று தேசப்பற்றை பற்றி பேசும் சஜித்தும் அநுரவும் கடந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களை கைவிட்டு ஓடிவிட்டனர். இரண்டு வருடங்களின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று 38 பேர் நாட்டை மீட்க போராடி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

''2005 தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக போட்டியிட்டேன். வடக்கு மக்கள் வாக்களிக்காதால் தோற்றேன். அடுத்த தேர்தலில் சந்திரிகாவுடன் போட்டியிட்டேன். 2016 இல் பிரதமராக ஐ.எம்.எப் உடன் பேசினேன். வரியைக் குறைத்தால் IMF உதவி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. 2019 இல் நான் போட்டியிடவில்லை. கோட்டாபயவுடன் சஜித் பிரேமதாஸ போட்டியிட்டார். வரியைக் குறைக்க வேண்டாம் என்று அன்று கோரினேன். ஆனால், கேட்டாபய ஆட்சிக்கு வந்த பின் வரியைக் குறைத்தார். சர்வதேச நாணய நிதியம் உதவி வழங்குவதை நிறுத்தியது.

பொருளாதாரம் வீழ்ந்தது. வரிசையில் நீங்கள் கஷ்டப்பட்டது போதும். பிரதமர் பதவி பொறுப்பேற்கக் கேட்டு பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டது. இது கின்னஸ் சாதனையாகும். அவர்களின் நாட்டின் மீதான தேசப்பற்றும் உங்கள் மீதான அர்ப்பணிப்பும் அவ்வளவு தான்.

ஆட்சியை முன்னெடுக்க மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான குழு எனக்கு உதவியது. அதற்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர்களின் உதவியுடன் தான் திட்டங்களை முன்னெடுத்தேன். வஜிர அபேவர்தன எம்.பி ஆதரவு வழங்கினார். ஏனைய கட்சிகளின் ஆதரவும் கிடைத்தது.

சமையலறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து சிந்தித்தே அநேகமான விடயங்களை மேற்கொண்டேன். 2025 இல் சமையலறை யுத்தத்தை நிறைவு செய்வேன். இவ்வாறு வீழ்ந்த நாடுகள் எழுச்சி பெற பல வருடங்கள் பிடித்தன. அரச ஊழியர்கள் வேலை நீக்கப்பட்டனர். சம்பளம் குறைக்கப்பட்டது. ஆனால் நான் அதில் எதனையும் செய்யவில்லை. ஸ்தீரநிலை ஏற்பட்டாலும் மீண்டும் சரிவு ஏற்படலாம். உறுதியான நிலையை ஏற்படுத்தவே 5 வருட காலம் கோருகிறேன்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தைத் தவிர வேறு வழியில்லை. அந்தத் திட்டத்தைப் பாதுகாத்து முன்னேற வேண்டும். அதனால் தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்கள் ஆணையை கோருகிறேன்.

போட்டி நிறைந்த ஏற்றுமதி பொருளாதாரத்தை மேற்கொண்டு பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்காக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இப்பகுதியில் துரியன் சாகுபடி செய்ய வேண்டும். துரியன் பழங்களை எடுத்து சீனாவுக்கு அனுப்பலாம். துரியன் ஏற்றுமதி மூலம் தாய்லாந்து 1,000 மில்லியன் டொலர்களைச் சம்பாதிக்கிறது. அடுத்த 05 வருடங்களில் கந்தளாய் பிரதேசத்தை விவசாய பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

மேலும், திருகோணமலை துறைமுகம் இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யப்படுகிறது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலைக்கு கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது. சம்பூர் சூரிய சக்தி பிரதேசமாக அபிவிருத்தி செய்யப்படுகிறது. சுற்றுலாத் துறையும் மேம்படுத்தப்படும். இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை அபிவிருத்தி செய்ய இருக்கிறோம். கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நாம் ஆரம்பித்த வேலைத் திட்டத்தின் காரணமாக ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது. இந்தப் பயணத்தை நாம் தொடர வேண்டும்.

எனவே, சமையலறை பிரச்சனையைத் தீர்க்க அனைவரும் கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்

தேர்தல் கடமைகளுக்காக 1500ற்கும் மேற்ப்பட்ட பொலிசார் வவுனியா மாவட்டத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் கடமைகளில் ஈடுபடுபவர் அவர் மேலும் தெரிவித்தார்.

000

  • 996
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads