சினிமா செய்திகள்
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
ஜெயம் ரவி மீது மனைவி ஆர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தனது மனைவியுடன் விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டு
Ads
 ·   ·  1381 news
  •  ·  0 friends
  • 1 followers

ரணிலின் வெற்றியை உறுதிசெய்ய யாழ்ப்பாணத்தில் அலையென திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்!

 

தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை காணும் நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை எவ்வாறு பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை எமக்கானது மாறாக உத்தரவு போடுவதற்கு இங்கு எமக்கு எவரும் எஜமானர்கள் இல்லை என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கொரு ஒரு முகத்தையும், இங்கொரு  முகத்தையும் காட்டுபவர்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்ட  மாபெரும் பிரசார கூட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சியுடன் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரிஸ் பிளையாட்டு மைதானத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் குறித்த பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

யாழ் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் இருந்தும் அணிதிரண்ட பல ஆயிரக்கணக்கான மக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியுள்ள ஆதரவை வலுப்படுத்தும் வகையில் தமது ஆதரவை வழங்கியிருந்தனர். இதன்போது உரையாற்றுகையி லயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

குறித்த கூட்டத்தில் அவர் மேலும் கூறுகையில் -

எமது மக்களின் அரசியல், அபிவிருத்தி, அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வை தரக்கூடிய ஒரு தலைவராக ரணில் விக்ரமசிங்கவே இருந்துவருகின்றனர்  இதேநேரம் தேசிய நல்லிணக்க வழிமுறையு{டாக நடைமுறைச் சாத்தியமான தீர்வை எவ்வாறு பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கான அரசியல் பிரச்சினைக்புரிய தீர்வுக்கு ஆரம்பம் எவ்வாறானதாக இருக்கமுடியும் என்று தொடர்ச்சியாக நாம் கூறிவருவதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சாதகமாக வெளிப்படுத்தியுள்ளார்

குறிப்பாக தமிழ் மக்களின் பிரதேசங்களை  அபிவிருத்தியால் கட்டியெழுப்பவும் வாழும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சிறந்த பொறிமுறைகளை ஜனாதிபதி ரணில் தனது விஞ்ஞாபனத்தில் உள்வாங்கியிருக்கின்றார்.

இதேநேரம் அதலபாதாளத்தில் வீழ்ந்துகிடந்த நாட்டுக்கும் தத்தளித்துக்கொண்டிருந்த மக்களுக்கும் ஆபத்பாண்டவர்பொன்று வந்து மீட்சியை கொடுத்துள்ளார்

குறிப்பாக மறைபொறுமானத்தில் கிடந்த நாட்டின் பொருளாதாரத்தை கடந்த இரண்டு வருடங்களில் தனது ஆற்றல்மிக்க தலைமைத்துவத்தினூடாக தூக்கி நிறுத்தியிருக்கின்றார்.

இவ்வாறான நிலையில் அந்த மயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அவருக்கு மேலும் ஒரு சந்தர்ப்பத்தை நாட்டு மக்கள் ஒன்றிணைந்து வழங்க வேண்டும் என   கோருகின்றேன்.

இதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆற்றலையும் ஆழுமையையும் அருகில் இருந்து பார்த்துவரும் வகையில் இருப்பதை பாதுகாத்துக்கொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அவரே தலைமை வகிக்க வேண்டும் என அவரது எரிவாயு சிலிண்டர் சின்னமே உங்கள் ஒவ்வொருவரது தெரிவாகவும் இருக்க வேண்டும். அதனூடாக அந்த வெற்றியில் தமிழ் மக்களும் முழுமையான பங்காளிகளாக இருக்க வேண்டும் என்பதை நான் உங்களிடம் வலியுறுத்துகின்றேன்.

இதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளுக்கும் நான்  உங்கள் முன்னால் கூறியவற்றுக்கும் நாமே பொறுப்பாகவும் இருப்போம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் அரசியலுக்காகவோ அல்லது வாக்குக்காகவோ எதையும் நான் பேசுவதில்லை. உங்களதும் நாட்டினதும் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் வேலைத் திட்டங்களை அவர் செய்து காட்டியுள்ளார். இதேநேரம் மக்கள் நலன் சார்ந்தே எனது அனைத்து செற்பாடுகள் அமையும். அதனடிப்படையில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

அந்த வகையில் எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உங்கள் ஒவ்வொரு வாக்கினூடாக எரிவாயு சிலிண்டர் சின்னத்தை வலுப்படுத்தி அந்த சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுப்பதன் ஊடாகவும் அவரோடு நாம் ஒவ்வொருவரும் சேர்ந்து பயணிப்பதன் ஊடாகவும் எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் இருந்து விடுதலைபெற முடியும் எனவும்  அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

  • 1071
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads