சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  2861 news
  •  ·  1 friends
  • 2 followers

ரணிலின் வெற்றியை உறுதிசெய்ய யாழ்ப்பாணத்தில் அலையென திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்!

 

தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை காணும் நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை எவ்வாறு பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை எமக்கானது மாறாக உத்தரவு போடுவதற்கு இங்கு எமக்கு எவரும் எஜமானர்கள் இல்லை என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கொரு ஒரு முகத்தையும், இங்கொரு  முகத்தையும் காட்டுபவர்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்ட  மாபெரும் பிரசார கூட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சியுடன் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரிஸ் பிளையாட்டு மைதானத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் குறித்த பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

யாழ் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் இருந்தும் அணிதிரண்ட பல ஆயிரக்கணக்கான மக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியுள்ள ஆதரவை வலுப்படுத்தும் வகையில் தமது ஆதரவை வழங்கியிருந்தனர். இதன்போது உரையாற்றுகையி லயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

குறித்த கூட்டத்தில் அவர் மேலும் கூறுகையில் -

எமது மக்களின் அரசியல், அபிவிருத்தி, அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வை தரக்கூடிய ஒரு தலைவராக ரணில் விக்ரமசிங்கவே இருந்துவருகின்றனர்  இதேநேரம் தேசிய நல்லிணக்க வழிமுறையு{டாக நடைமுறைச் சாத்தியமான தீர்வை எவ்வாறு பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கான அரசியல் பிரச்சினைக்புரிய தீர்வுக்கு ஆரம்பம் எவ்வாறானதாக இருக்கமுடியும் என்று தொடர்ச்சியாக நாம் கூறிவருவதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சாதகமாக வெளிப்படுத்தியுள்ளார்

குறிப்பாக தமிழ் மக்களின் பிரதேசங்களை  அபிவிருத்தியால் கட்டியெழுப்பவும் வாழும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சிறந்த பொறிமுறைகளை ஜனாதிபதி ரணில் தனது விஞ்ஞாபனத்தில் உள்வாங்கியிருக்கின்றார்.

இதேநேரம் அதலபாதாளத்தில் வீழ்ந்துகிடந்த நாட்டுக்கும் தத்தளித்துக்கொண்டிருந்த மக்களுக்கும் ஆபத்பாண்டவர்பொன்று வந்து மீட்சியை கொடுத்துள்ளார்

குறிப்பாக மறைபொறுமானத்தில் கிடந்த நாட்டின் பொருளாதாரத்தை கடந்த இரண்டு வருடங்களில் தனது ஆற்றல்மிக்க தலைமைத்துவத்தினூடாக தூக்கி நிறுத்தியிருக்கின்றார்.

இவ்வாறான நிலையில் அந்த மயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அவருக்கு மேலும் ஒரு சந்தர்ப்பத்தை நாட்டு மக்கள் ஒன்றிணைந்து வழங்க வேண்டும் என   கோருகின்றேன்.

இதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆற்றலையும் ஆழுமையையும் அருகில் இருந்து பார்த்துவரும் வகையில் இருப்பதை பாதுகாத்துக்கொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அவரே தலைமை வகிக்க வேண்டும் என அவரது எரிவாயு சிலிண்டர் சின்னமே உங்கள் ஒவ்வொருவரது தெரிவாகவும் இருக்க வேண்டும். அதனூடாக அந்த வெற்றியில் தமிழ் மக்களும் முழுமையான பங்காளிகளாக இருக்க வேண்டும் என்பதை நான் உங்களிடம் வலியுறுத்துகின்றேன்.

இதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளுக்கும் நான்  உங்கள் முன்னால் கூறியவற்றுக்கும் நாமே பொறுப்பாகவும் இருப்போம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் அரசியலுக்காகவோ அல்லது வாக்குக்காகவோ எதையும் நான் பேசுவதில்லை. உங்களதும் நாட்டினதும் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் வேலைத் திட்டங்களை அவர் செய்து காட்டியுள்ளார். இதேநேரம் மக்கள் நலன் சார்ந்தே எனது அனைத்து செற்பாடுகள் அமையும். அதனடிப்படையில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

அந்த வகையில் எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உங்கள் ஒவ்வொரு வாக்கினூடாக எரிவாயு சிலிண்டர் சின்னத்தை வலுப்படுத்தி அந்த சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுப்பதன் ஊடாகவும் அவரோடு நாம் ஒவ்வொருவரும் சேர்ந்து பயணிப்பதன் ஊடாகவும் எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் இருந்து விடுதலைபெற முடியும் எனவும்  அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

  • 1136
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads