சினிமா செய்திகள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
Ads
 ·   ·  1390 news
  •  ·  0 friends
  • 1 followers

தப்பியோடியவா்கள் மக்கள் ஆணையைக் கோரத் தகுதியில்லை - ஜனாதிபதி ரணில்

பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காது தப்பியோடிய சஜித்தும் அநுரவும் இன்று மக்களின் ஆணையை கோருவதற்கு தகுதி அற்றவர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ருவன்வெலயில் நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா என்ற வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முன் வராத சஜித்தும் அநுரவும் தற்போது மக்கள் முன்வந்து பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதாக ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியிருந்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

கடந்த காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களை வேடிக்கைப் பார்க்க முடியாது என்பதாலேயே நாட்டை நான் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

இன்று எல்லாப் பொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. மக்களின் கஷ்டங்களை தீர்ப்பதற்காக ஒன்றுபடுமாறு அனுரவிற்கும் சஜித்துக்கும் அன்று அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர்கள் முன்வரவில்லை.

மக்களின் கஸ்டங்களை புரியாத இந்த இருவரும் இன்று மக்களின் ஆணையை கோர என்ன உரிமை இருக்கிறது என்று நான் கேள்வி எழுப்புகிறேன்.

நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதே எனது இலக்கு. அதற்கு இடமளியுங்கள். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தையும் பாதுகாப்போம்.

இந்த பொருளாதாரத்தைப் பலப்படுத்தி நாட்டு மக்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கவே நான் மக்கள் ஆணையை கேட்கிறேன்.

சஜித் எல்லாவற்றையும் இலவசமாக தருவேன் என்கிறார். மறுமுனையில் ஜேவிபி ‘மக்களுக்கு நல்வாழ்வு’ என்ற திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

ஆனால் எனது ஆட்சியில்தான் மக்கள் நல்வாழ்வை உணர்துகொண்டிருந்தனர். ஜேவிபி முன்வைத்துள்ள வரவு செலவு திட்ட யோசனையும் முரண்பாடுகள் நிறைந்ததாக காணப்படுகிறது.

வருமானத்தை பெருக்குவதற்கான வழிமுறைகள் அதில் இல்லை. மக்கள் கஷ்டம் புரியாதவர்களிடம் எப்படி ஆட்சியை கொடுப்பது.

மக்கள் மீது கஷ்டத்தை சுமத்தவே அனுர முயற்சிக்கிறார்.

கேள்வி கேட்கும்போது பாய்ந்தோடுகிறார்கள். எனவே, சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது ரூபாவும் வலுவடையாது” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

  • 1212
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads