சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  2861 news
  •  ·  1 friends
  • 2 followers

பட்டினி என்பது கட்சி சார்பற்றது - நாட்டு மக்களின் சுமையைக் குறைத்து பிள்ளைகளுக்கான சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் ஜனாதிபதி ரணில் அழைப்பு

இன்று மேடைகளில் மக்கள் படும் துன்பங்களைப் பற்றிப் பேசுபவர்கள் அன்று பொருளாதாரச் சவாலிலிருந்து தப்பி ஓடிவிட்டனர் ஆனால் நாம் பொறுப்பெற்றதன் பின்னர் இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதார அழுத்தத்தைக் குறைக்க அரசாங்கத்தினால் முடிந்தது. அதனடிப்படையில் நாட்டு மக்களின் சுமையைக் குறைத்து பிள்ளைகளுக்கான சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம் எதிர்கால சந்ததியினருக்காக அபிவிருத்தியடைந்த நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு பெண்கள் அமைப்புகள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘பெண்கள் எமது பலம்’ எனும் தொனிப்பொருளில் கொழும்பு இலங்கை கண்காட்சி மண்டபத்தில் நேற்று (09) நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் - எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பட்டினி என்பது பாகுபாடற்றது எனதெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்களின் சுமையைக் குறைத்து அடுத்த தலைமுறைக்கு வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப உதவுமாறு இலங்கையிலுள்ள அனைத்துப் பெண்களிடமும் கேட்டுக் கொண்டார்.

அன்று உணவு வழங்க முடியாமல், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாமல் இந்நாட்டு தாய்மார்கள் அனுபவித்த துன்பங்களை யாரும் மறந்துவிடக் கூடாது என தெரிவித்த ஜனாதிபதி, இன்று மேடைகளில் தேசப்பற்றையும், மக்களின் துன்பங்களையும் பேசும் தலைவர்கள் சவாலுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஓடியதை இந்த நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

கட்சி வேறுபாடின்றி நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான பெண்கள் அமைப்புக்கள், கட்சி கிளைச் சங்கங்களின் தலைவிகள் மற்றும் பிரதிநிதிகள் என பெருமளவானோர் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் நெருக்கடியான பொருளாதார நிலைமைகள் இருந்த போதிலும், இந்நாட்டுப் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதை தாம் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை என்று தெரிவித்தார்.

பெண்கள் வலுவூட்டல் சட்டத்திற்கு ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கும் வழங்குவதற்கான சட்டக் கட்டமைப்பை அமைப்பது உட்பட பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

000

 

  • 1013
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads