சினிமா செய்திகள்
இயக்குநர் நாகேந்திரன் காலமானார்
இளம் திரைப்பட இயக்குநர் நாகேந்திரன் இன்று (ஏப்.26) காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவரது திடீர் மரணம் சக திரை
நிராகரிக்கப்பட்ட அதே பாடல் பின்னர் பட்டிதொட்டியெல்லாம் பாடப்பட்டது
மிஸ் மாலினி, ஏழைபடும்பாடு, மகாத்மா உதங்கர் முதலிய படங்களில் நடித்தவர், வி.கோபாலகிருஷ்ணன் (கோபி). படங்களில் நடனம் மட்டும் ஆடிக்கொண்டிருந்த லலிதா -பத்மி
'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...' எப்படி உருவானது தெரியுமா?
'அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்புத் தளத்தில் பாடலுக்கான கலந்துரையாடலில் எம்.எஸ்.வியிடம் பாலசந்தர் பேசிக்கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் எல்லா வேல
நடிகை கண்ணாம்பா
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நட
நடன இயக்குநர் ஸ்ரீதர்
பழம்பெரும் நடன இயக்குநர்களைத் தேடிப்பிடித்து கௌரவித்து வருகிறார் நடன இயக்குநர் ஸ்ரீதர்.‘நாக்க முக்க’ பாடலுக்கு நடனம் அமைத்தது மூலம் தமிழ் ரசிகர்களைக்
ஒல்லியான தோற்றத்துக்கு மாறினார் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குநர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
எஸ்.வி.சேகர் யாரென்றே எனக்கு தெரியாது - சீரியல் நடிகை பேட்டி
76 வயதான எஸ்.வி சேகர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள மீனாட்சி சுந்தரம் என்ற தொடரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஷோபனா என்பவர் நடிக்க
கமல்ஹாசனை அமெரிக்காவுக்கு அனுப்ப போகும் உதயநிதி ஸ்டாலின்
உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்று ஏஐ டெக்னாலஜியை படித்து வந்தார் என்பதும், அவருடைய அடுத்த படத்தில் ஏஐ டெக்னாலஜி ச
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
Ads
 ·   ·  2883 news
  •  ·  1 friends
  • 2 followers

பட்டினி என்பது கட்சி சார்பற்றது - நாட்டு மக்களின் சுமையைக் குறைத்து பிள்ளைகளுக்கான சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் ஜனாதிபதி ரணில் அழைப்பு

இன்று மேடைகளில் மக்கள் படும் துன்பங்களைப் பற்றிப் பேசுபவர்கள் அன்று பொருளாதாரச் சவாலிலிருந்து தப்பி ஓடிவிட்டனர் ஆனால் நாம் பொறுப்பெற்றதன் பின்னர் இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதார அழுத்தத்தைக் குறைக்க அரசாங்கத்தினால் முடிந்தது. அதனடிப்படையில் நாட்டு மக்களின் சுமையைக் குறைத்து பிள்ளைகளுக்கான சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம் எதிர்கால சந்ததியினருக்காக அபிவிருத்தியடைந்த நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு பெண்கள் அமைப்புகள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘பெண்கள் எமது பலம்’ எனும் தொனிப்பொருளில் கொழும்பு இலங்கை கண்காட்சி மண்டபத்தில் நேற்று (09) நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் - எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பட்டினி என்பது பாகுபாடற்றது எனதெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்களின் சுமையைக் குறைத்து அடுத்த தலைமுறைக்கு வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப உதவுமாறு இலங்கையிலுள்ள அனைத்துப் பெண்களிடமும் கேட்டுக் கொண்டார்.

அன்று உணவு வழங்க முடியாமல், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாமல் இந்நாட்டு தாய்மார்கள் அனுபவித்த துன்பங்களை யாரும் மறந்துவிடக் கூடாது என தெரிவித்த ஜனாதிபதி, இன்று மேடைகளில் தேசப்பற்றையும், மக்களின் துன்பங்களையும் பேசும் தலைவர்கள் சவாலுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஓடியதை இந்த நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

கட்சி வேறுபாடின்றி நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான பெண்கள் அமைப்புக்கள், கட்சி கிளைச் சங்கங்களின் தலைவிகள் மற்றும் பிரதிநிதிகள் என பெருமளவானோர் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் நெருக்கடியான பொருளாதார நிலைமைகள் இருந்த போதிலும், இந்நாட்டுப் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதை தாம் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை என்று தெரிவித்தார்.

பெண்கள் வலுவூட்டல் சட்டத்திற்கு ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கும் வழங்குவதற்கான சட்டக் கட்டமைப்பை அமைப்பது உட்பட பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

000

 

  • 1018
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads