சினிமா செய்திகள்
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
Ads
 ·   ·  1406 news
  •  ·  0 friends
  • 1 followers

வளைகுடாவில் போர் பதற்றம் இலங்கையை நேரடியாக தாக்கும் - தேர்தல் தாமதமாகுவதற்கும் வாய்ப்பு என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை

இஸ்ரேல் - ஹமாஸ், இஸ்ரேல் - ஈரான் மற்றும் இஸ்ரேல் - லெபனான் இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மத்திய கிழக்கில் அதாவது முழு வளைகுடா நாடுகளிலும் பரவும் அபாயம் உருவாகி வருவதால் அதன் தாக்கத்தை தீவிரமாக இலங்கை எதிர்கொள்ளும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

ஹமாஸ் அமைப்பின் உயர் தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த 31 ஆம் திகதி ஈரான் தலைநகர் தெஹரானில் கொலை செய்யப்பட்ட விவகாரம் உலகளாவிய மற்றும் வளைகுடா அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காசாவிலோ அல்லது பலஸ்தீனத்திலோ இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டிந்தால் அது மிகப் பெரிய உலகத்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது.

ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான மற்றும் எப்போதும் இஸ்ரேல் முட்டிமோதும் நாடாக உள்ள ஈரானில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டமை அதுவும் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த தருணத்தில் என்பதால் அது முழு மத்திய கிழக்கையும் உலுக்கியுள்ளது.

இஸ்ரேலுக்கு பலமான பதிலடியை கொடுக்கும் உத்தரவை ஈரானின் உயர் தலைவர் அலி காமெனி பிறப்பித்துள்ளதால் 99 வீதம் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போர் மூளுமானால் அது ஒட்டுமொத்த உலக அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏற்கனவே, ரஷ்யா - உக்ரைன் போர் ஆரம்பமான காலகட்டத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு, கோதுமை மற்றும் தானிய வகைகளின் விலை உயர்வு என பல்வேறு எதிர்விளைவுகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டிருந்தது.

அதேபோல் இஸ்ரேல் - காசா போர் ஆரம்பமான காலகட்டம் முதல் எரிபொருள் விலை தொடர்பில் ஒரு தளம்பலான நிலைமை காணப்படுகிறது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் எரிபொருளில் 65 சதவீதமான எரிபொருள் உற்பத்தி செய்யப்படுவது வளைகுடா நாடுகளில்தான்.

ஈரான் - இஸ்ரேல் இடையில் யுத்தம் மூண்டால் உலக எரிபொருள் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டு அது இலங்கையின் பொருளாதாரத்திலும் அரசியலிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படும்.

எரிபொருள் விநியோகத்துக்கு தடை ஏற்பட்டால் கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் வரிசை யுகம் போன்றதொரு இக்கட்டான நிலையை எதிர்கொள்ள நேரிடலாம்.

அத்துடன், இலங்கையில் இருந்தான மத்திய கிழக்குக்கான ஏற்றுமதிக்கும், உலக ஏற்றுமதிக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதுடன், உள்நாட்டிலும் போக்குவரத்து முடக்கங்களும் விநியோக நடவடிக்கைககளும் பாதிக்கப்படும். இதனால் மீண்டும் பொருட்களின் விலையேற்றம் உட்பட பல்வேறு நெருக்கடிகளை இலங்கை எதிர்கொள்ள நேரிடலாம்.

அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலை பிற்போடவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது பதவிக்காலத்தை நீடித்துக்கொள்ளும் அரசியல் களநிலையும் தானாக இதன் ஊடாக அமையலாம்.

இலங்கை போன்ற நாடுகளில் எரிபொருளை களஞ்சியப்படுத்தி வைத்துக்கொள்ளும் வசதிகள் மிகக் குறைவாகும். குறிப்பாக ஓர் அல்லது இரண்டு மாதங்கள் வரையே இலங்கையால் எரிபொருள் கையிருப்பை பேண முடியும். அத்தகையதொரு பொருளாதார கட்டமைப்பும் களஞ்சிய வசதியும்தான் இலங்கைக்கு உள்ளது.

ஈரான் - இஸ்ரேல் இடையில் போர் மூண்டால் அது இலங்கையின் பொருளாதாரத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன், ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 1009
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads