சினிமா செய்திகள்
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
Ads
 ·   ·  2864 news
  •  ·  1 friends
  • 2 followers

வளைகுடாவில் போர் பதற்றம் இலங்கையை நேரடியாக தாக்கும் - தேர்தல் தாமதமாகுவதற்கும் வாய்ப்பு என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை

இஸ்ரேல் - ஹமாஸ், இஸ்ரேல் - ஈரான் மற்றும் இஸ்ரேல் - லெபனான் இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மத்திய கிழக்கில் அதாவது முழு வளைகுடா நாடுகளிலும் பரவும் அபாயம் உருவாகி வருவதால் அதன் தாக்கத்தை தீவிரமாக இலங்கை எதிர்கொள்ளும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

ஹமாஸ் அமைப்பின் உயர் தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த 31 ஆம் திகதி ஈரான் தலைநகர் தெஹரானில் கொலை செய்யப்பட்ட விவகாரம் உலகளாவிய மற்றும் வளைகுடா அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காசாவிலோ அல்லது பலஸ்தீனத்திலோ இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டிந்தால் அது மிகப் பெரிய உலகத்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது.

ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான மற்றும் எப்போதும் இஸ்ரேல் முட்டிமோதும் நாடாக உள்ள ஈரானில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டமை அதுவும் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த தருணத்தில் என்பதால் அது முழு மத்திய கிழக்கையும் உலுக்கியுள்ளது.

இஸ்ரேலுக்கு பலமான பதிலடியை கொடுக்கும் உத்தரவை ஈரானின் உயர் தலைவர் அலி காமெனி பிறப்பித்துள்ளதால் 99 வீதம் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போர் மூளுமானால் அது ஒட்டுமொத்த உலக அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏற்கனவே, ரஷ்யா - உக்ரைன் போர் ஆரம்பமான காலகட்டத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு, கோதுமை மற்றும் தானிய வகைகளின் விலை உயர்வு என பல்வேறு எதிர்விளைவுகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டிருந்தது.

அதேபோல் இஸ்ரேல் - காசா போர் ஆரம்பமான காலகட்டம் முதல் எரிபொருள் விலை தொடர்பில் ஒரு தளம்பலான நிலைமை காணப்படுகிறது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் எரிபொருளில் 65 சதவீதமான எரிபொருள் உற்பத்தி செய்யப்படுவது வளைகுடா நாடுகளில்தான்.

ஈரான் - இஸ்ரேல் இடையில் யுத்தம் மூண்டால் உலக எரிபொருள் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டு அது இலங்கையின் பொருளாதாரத்திலும் அரசியலிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படும்.

எரிபொருள் விநியோகத்துக்கு தடை ஏற்பட்டால் கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் வரிசை யுகம் போன்றதொரு இக்கட்டான நிலையை எதிர்கொள்ள நேரிடலாம்.

அத்துடன், இலங்கையில் இருந்தான மத்திய கிழக்குக்கான ஏற்றுமதிக்கும், உலக ஏற்றுமதிக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதுடன், உள்நாட்டிலும் போக்குவரத்து முடக்கங்களும் விநியோக நடவடிக்கைககளும் பாதிக்கப்படும். இதனால் மீண்டும் பொருட்களின் விலையேற்றம் உட்பட பல்வேறு நெருக்கடிகளை இலங்கை எதிர்கொள்ள நேரிடலாம்.

அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலை பிற்போடவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது பதவிக்காலத்தை நீடித்துக்கொள்ளும் அரசியல் களநிலையும் தானாக இதன் ஊடாக அமையலாம்.

இலங்கை போன்ற நாடுகளில் எரிபொருளை களஞ்சியப்படுத்தி வைத்துக்கொள்ளும் வசதிகள் மிகக் குறைவாகும். குறிப்பாக ஓர் அல்லது இரண்டு மாதங்கள் வரையே இலங்கையால் எரிபொருள் கையிருப்பை பேண முடியும். அத்தகையதொரு பொருளாதார கட்டமைப்பும் களஞ்சிய வசதியும்தான் இலங்கைக்கு உள்ளது.

ஈரான் - இஸ்ரேல் இடையில் போர் மூண்டால் அது இலங்கையின் பொருளாதாரத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன், ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 1102
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads