சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  2861 news
  •  ·  1 friends
  • 2 followers

நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு புத்துயிர் அளிக்க நிதி வசதி பெக்கேஜ் !

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை மீள வலுவூட்டும் நோக்கில், நுண், சிறு மற்றும் நடுத்தர முயற்சிகளுக்கான முதலீடு மற்றும் செயற்பாட்டு மூலதன வசதிகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய நிதி வசதிப் பெக்கேஜ் ஒன்றை அறிமுகம் செய்யும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மானிய வட்டி விகிதத்தில் அனுமதி பெற்ற வணிக வங்கிகள் மற்றும் அனுமதி பெற்ற விசேட வங்கிகள் உட்பட 15 நிதி நிறுவனங்கள் மூலம் நெருக்கடியை எதிர்கொண்டு செயற்படும் நுண், சிறு மற்றும் மத்திய தொழில்முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்கல் மற்றும் செயற்பாடற்ற கடன் பிரிவின் கீழ் இருக்கும் நுண், சிறு மற்றும் மத்திய தொழில்முற்சிகளுக்காக ஒத்துழைப்பு வழங்குதல் ஆகிய பிரதான இரு பிரிவுகளின் கீழ் இந்தக் கடன் வழங்கப்படும்.

அந்த நோக்கத்திற்காக, தொழில்துறை அமைச்சினால் நிதி உதவி தேவைப்படும் மற்றும் அவர்களின் வணிகங்களை மேலும் மேம்படுத்தும் திறன் கொண்ட தகுதியுள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு பரிந்துரைக் கடிதங்கள் வழங்கப்படும்.

நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை வலுப்படுத்தும் முதலீட்டுக் கடனின் கீழ், 10 வருட காலத்திற்கு 7% சலுகை வட்டி விகிதத்திற்கு உட்பட்டு, அதிகபட்சமமாக 15 மில்லியன் ரூபாய்க்கு உட்பட்டு கடன் வழங்கப்பட இருப்பதோடு இதற்காக 13 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. .

செயற்படாத கடன் பிரிவின் கீழ் உள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு மூலதனமாக 5 வருட காலத்திற்கு உட்பட்டதாக 8 வீத கடன் வட்டியின் கீழ் 5 மில்லியன் ரூபா கடன் வழங்கப்படுவதோடு அதற்காக 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி, ஹட்டன் நேஷனல் வங்கி, செலான் வங்கி, சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, டி.எப்.சி.சி வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, சனச அபிவிருத்தி வங்கி லிமிடெட், யூனியன் வங்கி, பான் ஆசியா வங்கி, கார்கில்ஸ் வங்கி ஆகியவை பங்கேற்பு நிதி நிறுவனங்களாக செயற்படும்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எந்தவொரு நாட்டையும் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களைப் பலப்படுத்த வேண்டும்.

கடந்த பொருளாதார வீழ்ச்சியினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களே என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவர்களின் மீட்சிக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும் தெரிவித்தார். அவர்களுக்குத் தேவையான மூலதனத்தை வழங்குவதற்காக தேசிய அபிவிருத்தி வங்கி ஸ்தாபிக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்று பாரிய தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொது மக்களின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தையும் விளக்கினார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும், காலநிலை மாற்றம் உள்ளிட்ட வணிகச் செயற்பாட்டு சூழலில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் அபாயங்களைக் கையாள்வதற்கும் நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் திறனை மேம்படுத்த இந்தப் புதிய கடன் திட்டம் உதவும்.

விவசாயம், சுற்றுலா, உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த துறைகள் மற்றும் பெண்கள் தலைமையிலான நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் (வர்த்தகம், குத்தகை மற்றும் வாடகை வணிகங்கள் தவிர்த்து) குறித்து இந்த கடன் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படுகிறது.

அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பது மற்றும் பொருளாதாரத்தை இறக்குமதிப் பொருளாதாரத்திலிருந்து ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றுவது ஆகிய அரசாங்கத்தின் நோக்கத்தை அடையவும் இது உதவும் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

  • 642
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads