சினிமா செய்திகள்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
Ads
 ·   ·  2980 news
  •  ·  1 friends
  • 2 followers

நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு புத்துயிர் அளிக்க நிதி வசதி பெக்கேஜ் !

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை மீள வலுவூட்டும் நோக்கில், நுண், சிறு மற்றும் நடுத்தர முயற்சிகளுக்கான முதலீடு மற்றும் செயற்பாட்டு மூலதன வசதிகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய நிதி வசதிப் பெக்கேஜ் ஒன்றை அறிமுகம் செய்யும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மானிய வட்டி விகிதத்தில் அனுமதி பெற்ற வணிக வங்கிகள் மற்றும் அனுமதி பெற்ற விசேட வங்கிகள் உட்பட 15 நிதி நிறுவனங்கள் மூலம் நெருக்கடியை எதிர்கொண்டு செயற்படும் நுண், சிறு மற்றும் மத்திய தொழில்முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்கல் மற்றும் செயற்பாடற்ற கடன் பிரிவின் கீழ் இருக்கும் நுண், சிறு மற்றும் மத்திய தொழில்முற்சிகளுக்காக ஒத்துழைப்பு வழங்குதல் ஆகிய பிரதான இரு பிரிவுகளின் கீழ் இந்தக் கடன் வழங்கப்படும்.

அந்த நோக்கத்திற்காக, தொழில்துறை அமைச்சினால் நிதி உதவி தேவைப்படும் மற்றும் அவர்களின் வணிகங்களை மேலும் மேம்படுத்தும் திறன் கொண்ட தகுதியுள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு பரிந்துரைக் கடிதங்கள் வழங்கப்படும்.

நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை வலுப்படுத்தும் முதலீட்டுக் கடனின் கீழ், 10 வருட காலத்திற்கு 7% சலுகை வட்டி விகிதத்திற்கு உட்பட்டு, அதிகபட்சமமாக 15 மில்லியன் ரூபாய்க்கு உட்பட்டு கடன் வழங்கப்பட இருப்பதோடு இதற்காக 13 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. .

செயற்படாத கடன் பிரிவின் கீழ் உள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு மூலதனமாக 5 வருட காலத்திற்கு உட்பட்டதாக 8 வீத கடன் வட்டியின் கீழ் 5 மில்லியன் ரூபா கடன் வழங்கப்படுவதோடு அதற்காக 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி, ஹட்டன் நேஷனல் வங்கி, செலான் வங்கி, சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, டி.எப்.சி.சி வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, சனச அபிவிருத்தி வங்கி லிமிடெட், யூனியன் வங்கி, பான் ஆசியா வங்கி, கார்கில்ஸ் வங்கி ஆகியவை பங்கேற்பு நிதி நிறுவனங்களாக செயற்படும்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எந்தவொரு நாட்டையும் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களைப் பலப்படுத்த வேண்டும்.

கடந்த பொருளாதார வீழ்ச்சியினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களே என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவர்களின் மீட்சிக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும் தெரிவித்தார். அவர்களுக்குத் தேவையான மூலதனத்தை வழங்குவதற்காக தேசிய அபிவிருத்தி வங்கி ஸ்தாபிக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்று பாரிய தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொது மக்களின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தையும் விளக்கினார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும், காலநிலை மாற்றம் உள்ளிட்ட வணிகச் செயற்பாட்டு சூழலில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் அபாயங்களைக் கையாள்வதற்கும் நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் திறனை மேம்படுத்த இந்தப் புதிய கடன் திட்டம் உதவும்.

விவசாயம், சுற்றுலா, உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த துறைகள் மற்றும் பெண்கள் தலைமையிலான நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் (வர்த்தகம், குத்தகை மற்றும் வாடகை வணிகங்கள் தவிர்த்து) குறித்து இந்த கடன் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படுகிறது.

அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பது மற்றும் பொருளாதாரத்தை இறக்குமதிப் பொருளாதாரத்திலிருந்து ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றுவது ஆகிய அரசாங்கத்தின் நோக்கத்தை அடையவும் இது உதவும் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

  • 663
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads