Category:
Created:
Updated:
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக, அஸ்வெசும நலன்புரி சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.
அஸ்வெசும விண்ணப்பங்களை ஏற்கும் காலம் கடந்த 13ஆம் திகதி நிறைவடைந்தது. இதில், இரண்டாம் கட்டமாக 75,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.
அஸ்வெசுமவின் முதல் கட்டத்தில் கணக்கிடப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 34 இலட்சம் எனவும் அதில் 18 இலட்சம் பேர், அஸ்வெசுமவின் பலன்களுக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது
000