Category:
Created:
Updated:
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 6 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளது.
கொழும்பு 13, 15, முகத்துவாரம், களுத்துறை, தெஹிவளை, இரத்தினபுரி பகுதிகளை சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்ட ஆறு பேரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர். இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 270 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட 13 பேர் இதுவரை தற்கொலை, விபத்து, துப்பாக்கி சூடு மற்றும் பிற நோய்கள் காரணமாக மரணமடைந்துள்ளனர்.
இவர்களில் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக சிறைகளில் இருந்து தப்பிக்க முயன்ற போது மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.