சினிமா செய்திகள்
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
Ads
 ·   ·  1406 news
  •  ·  0 friends
  • 1 followers

பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் - நீதியான தீர்வு விரைவில் வழங்கப்படும் - அடுத்த வாரம் அமைச்சரவை பத்திரம் என அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிப்பு

பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குதல் தொடர்பில் நீதியான தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தள்ளார்.

இது தொடர்பான இறுதிப்பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பித்து, நீதிமன்ற இணக்கப்பாட்டையும் பெறவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் உள்ள பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பு தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். இதற்கு விரிவான பதிலளித்த கல்வி அமைச்சர் -

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு இரண்டு தடவைகளில் நியமனங்கள் வழங்கப்பட்டன. முதலாவது 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் அதனை மேற்கொண்டது. அதன் போது ஒரே தடவையில் 40 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. அவர்கள் பல்வேறு ரீதியாக அரச நிறுவனங்களில் இணைக்கப்பட்டனர்.

இதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இரண்டாவது தடவையாக 52,000 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. இவர்கள் அரசாங்க நிறுவனங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டனர். கல்வியமைச்சை நான் பொறுப்பேற்ற போது இருந்த நிலைமையே இது.

இறுதியாக அமைச்சர் பேராசிரியர் ஜீ .எல்.பீரிஸ் அமைச்சரவைக்கு பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தார். மேற்படி 23 ஆயிரம் பட்டதாரிகள் பாடசாலைகளில் ஆசிரிய பயிற்சிக்காக நியமிக்கப்பட்டு, மூன்று வருட பயிற்சியின் பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்படும் வகையில் அந்த பத்திரம் அமைந்திருந்தது.

எனினும், ஆசிரிய சேவை யாப்பில் பட்டதாரிகள் நியமனம் வழங்கப்படும் போது மாகாண மட்டத்தில் அல்லது தேசிய மட்டத்தில் அவர்களுக்கு பரீட்சை நடத்தப்பட்டு பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மற்றும் பொருத்தமான பாடங்களுக்கு ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அமைச்சரவைப் பத்திரம் வேறு விதமாக இருந்தது.

நியமனங்களை வழங்கிவிட்டு அதன் பின்னர் பரீட்சை நடத்துவது என்பது என்ன முறைமை என்பதை நான் அறியேன். ஏனைய சந்தர்ப்பங்களில் பரீட்சைகள் நடத்தப்பட்டே நியமனங்கள் வழங்கப்படுகின்றன.அதன் பின்னர் நான் ஆசிரியர் சேவை யாப்பின்படி நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தேன். அதற்கிணங்க விண்ணப்பங்களைக் கோரினோம்.

முன்பதாக அரசாங்கம் 52,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கியிருந்தது. நாம் மீண்டும் அவர்களிடம் விண்ணப்பங்களை கோரினோம். 2023 மார்ச்சில் இப்பரீட்சை நடைபெறவிருந்தது. இதே மாதம் 23 இல், முப்பது பேர் நீதிமன்றத்திற்குச் சென்றனர். நான்கு எதிர் மனுக்களை அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். தாக்கல் செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

  • 448
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads