சினிமா செய்திகள்
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
Ads
 ·   ·  1410 news
  •  ·  0 friends
  • 1 followers

உடற்கல்வி பாடங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தயவுக்காலமாக ஒரு வருடத்தை இணைத்துக் கொள்ள வேண்டும் - யாழ். மாவட்ட உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் கோரிக்கை

கொரோனாபெரும் தொற்றுக் காரணமாக 2020, 2021 ஆம் ஆண்டுகளில் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறாமையால் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு உடற்கல்வி பாடங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தயவுக்காலமாக ஒரு வருடத்தை அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நேர்முகப் பரீட்சைக்காக இணைத்துக் கொள்ள வேண்டுமென யாழ். மாவட்ட உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது -

தற்போது தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.

இந்நிலையில் ஏனைய பாடங்கள் இசட் ஸ்கோர் அடிப்படையில் உள்வாங்கப்படும் நிலையில் உடற்கல்வி பாடத்துக்கு தெரிவுசெய்யப் படுபவர்கள் நேர்முகப் பரீட்சையில் விளையாட்டு நிகழ்வில் பங்கேற்ற சான்றிதழ் அடிப்படையில் நேர்முகப் பரீட்சையில் புள்ளிவழங்கப்பட்டு உள்வாங்கப் படுகின்றனர்.

அந்த வகையில் தற்போது கல்வியியல் கல்லூரிகளுக்கு உடற்கல்வி பாடத்துக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 2021 க.பொ.த. உயர்தர மாணவர்களின் சான்றிதழ் காலம் 2017.01.01 - 2021.12.31 வரையும், 2022 க.பொ.த.உயர்தர மாணவர்களின் சான்றிதழ் காலம் 2018.01.01 - 2022.12.31 வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா பெரும் தொற்று காரணமாக. கடந்த 2020, 2021 ஆண்டுகளில் விளையாட்டு நிகழ்வுகளில் பாடசாலைகள் பங்கேற்க முடியாத நிலைகாணப்பட்டது.

அதேவேளை 2020 வலய மட்ட போட்டிகள் வரை இடம்பெற்ற நிலையில் குறித்த ஆண்டுக்குரிய விளையாட்டு சான்றிதழ்கள் இலங்கை முழுவதும் கல்வி அமைச்சால் இரத்து செய்யபட்ட நிலையில் அச் சான்றிதழ்களை நேர்முகப் பரீட்சைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்போது கல்வியியல் கல்லூரிகளுக்கு உடற்கல்வி பாடத்துக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 2021 க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கு 2016 ஆண்டு சான்றிதழ்களையும் 2022 க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கு 2017 ஆண்டு சான்றிதழ்களை பயன்படுத்த ஒருவருட மேலதிக தயவுக்காலத்தை வழங்கவேண்டும் எனக் கோருகின்றோம்.

இதன் மூலம் கொரோனா பெரும் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வழியேற்படும் என நம்புகின்றோம்.

தற்போது நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்ட நிலையில் இவ்விடயம் குறித்து வடக்கு கல்வியமைச்சு இதில் கவனம் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றோம் என்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 715
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads