சினிமா செய்திகள்
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
Ads
 ·   ·  2864 news
  •  ·  1 friends
  • 2 followers

உடற்கல்வி பாடங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தயவுக்காலமாக ஒரு வருடத்தை இணைத்துக் கொள்ள வேண்டும் - யாழ். மாவட்ட உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் கோரிக்கை

கொரோனாபெரும் தொற்றுக் காரணமாக 2020, 2021 ஆம் ஆண்டுகளில் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறாமையால் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு உடற்கல்வி பாடங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தயவுக்காலமாக ஒரு வருடத்தை அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நேர்முகப் பரீட்சைக்காக இணைத்துக் கொள்ள வேண்டுமென யாழ். மாவட்ட உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது -

தற்போது தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.

இந்நிலையில் ஏனைய பாடங்கள் இசட் ஸ்கோர் அடிப்படையில் உள்வாங்கப்படும் நிலையில் உடற்கல்வி பாடத்துக்கு தெரிவுசெய்யப் படுபவர்கள் நேர்முகப் பரீட்சையில் விளையாட்டு நிகழ்வில் பங்கேற்ற சான்றிதழ் அடிப்படையில் நேர்முகப் பரீட்சையில் புள்ளிவழங்கப்பட்டு உள்வாங்கப் படுகின்றனர்.

அந்த வகையில் தற்போது கல்வியியல் கல்லூரிகளுக்கு உடற்கல்வி பாடத்துக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 2021 க.பொ.த. உயர்தர மாணவர்களின் சான்றிதழ் காலம் 2017.01.01 - 2021.12.31 வரையும், 2022 க.பொ.த.உயர்தர மாணவர்களின் சான்றிதழ் காலம் 2018.01.01 - 2022.12.31 வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா பெரும் தொற்று காரணமாக. கடந்த 2020, 2021 ஆண்டுகளில் விளையாட்டு நிகழ்வுகளில் பாடசாலைகள் பங்கேற்க முடியாத நிலைகாணப்பட்டது.

அதேவேளை 2020 வலய மட்ட போட்டிகள் வரை இடம்பெற்ற நிலையில் குறித்த ஆண்டுக்குரிய விளையாட்டு சான்றிதழ்கள் இலங்கை முழுவதும் கல்வி அமைச்சால் இரத்து செய்யபட்ட நிலையில் அச் சான்றிதழ்களை நேர்முகப் பரீட்சைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்போது கல்வியியல் கல்லூரிகளுக்கு உடற்கல்வி பாடத்துக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 2021 க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கு 2016 ஆண்டு சான்றிதழ்களையும் 2022 க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கு 2017 ஆண்டு சான்றிதழ்களை பயன்படுத்த ஒருவருட மேலதிக தயவுக்காலத்தை வழங்கவேண்டும் எனக் கோருகின்றோம்.

இதன் மூலம் கொரோனா பெரும் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வழியேற்படும் என நம்புகின்றோம்.

தற்போது நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்ட நிலையில் இவ்விடயம் குறித்து வடக்கு கல்வியமைச்சு இதில் கவனம் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றோம் என்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 839
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads