சினிமா செய்திகள்
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
Ads
 ·   ·  1410 news
  •  ·  0 friends
  • 1 followers

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைச் சான்றளிக்கும் பணி இன்னும் சில நாள்களில் நிறைவடையும் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

 

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைச் சான்றளிக்கும் பணி இன்னும் சில நாட்களில் நிறைவடையும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் - ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் விளக்கமளிக்கப்படும் வரையில் ஜனாதிபதி தேர்தலைப் பிற்போடுமாறு கோரியுள்ள வழக்கில் இடையீட்டு மனுதாரர் தரப்பு சார்பில் தாம் முன்னிலையாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

6 வருடங்களாக இருந்த நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதியின் பதவிக்காலம் அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தில் 5 வருடங்களாகக் குறைக்கப்பட்டது.

மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலப்பகுதியிலேயே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. எனவே அதற்கு முன்னதாகவே பதவியேற்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவரது பதவிக்காலம் குறித்து நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்தார்.

இதன்போது, முன்னிலையான சட்டமா அதிபர் தற்போதைய ஜனாதிபதியின் (மைத்ரிபால சிறிசேன) பதவிக்காலம் 6 வருடங்கள் எனவும் அதன் பின்னர் வருபவர்களின் பதவிக்காலம் 5 வருடங்கள் எனவும் வாதங்களை முன்வைத்தார்.

இருப்பினும் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதை உயர் நீதிமன்றம் பதிவுசெய்திருந்தது.

தற்போது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனு தொடர்பில் எத்தகைய தீர்ப்பு வழங்கப்படும் அல்லது வழங்கப்பட வேண்டும் என்பது பற்றிக் கூற முடியாது.

இந்தநிலையில், இந்த மனு நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் நிலையில், அதன் இடையீட்டு மனுதாரர் தரப்பு தம்மை முன்னிலையாகுமாறு கோரியிருப்பதாகவும் அதன்படி தாமும் முன்னிலையாகவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

000

  • 645
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads