சினிமா செய்திகள்
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
Ads
 ·   ·  2864 news
  •  ·  1 friends
  • 2 followers

நான் ராஜபக்சக்களின் நண்பன் அல்ல – ஆனால் பெரமுனவின் ஆதரவினை நிராகரித்திருந்தால் இன்று டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 450 ரூபாவிற்கு மேல் அதிகரித்திருக்கும் – ஜனாதிபதி ரணில்

நான் ராஜபக்சக்களின் நண்பன் அல்ல. ஆனால் பெரமுனவின் ஆதரவினை நிராகரித்திருந்தால் இன்று டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 450 ரூபாவிற்கு மேல் அதிகரித்திருக்கும் என ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் 27 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையை கொண்டாடும் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் -

மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து என்ன செய்கின்றீர்கள் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் 70 முதல் தாமும் மகிந்தவும் இரு வேறு திசைகளில் பயணித்தவர்கள் எனவும் எப்போதும் எதிரிகளாகவே இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நான் ராஜபக்சக்களின் நண்பன் அல்ல. எனினும் நாட்டின் நெருக்கடியான நிலைமைகளில் மக்களின் நலனுக்காக ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன்.

ஆனால் நாட்டை எவ்வாறு நிர்வாகம் செய்ய வேண்டுமென மகிந்த தமக்கு அறிவுரை கூறியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் அரசாங்கம் கவிழும் போது மரபு ரீதியாக எதிர்க்கட்சித் தலைவர் அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் சஜித் பிரேமதாச காணாமல்போய்விட்டார். பொறுப்பினை ஏற்காது ஒளிந்து விட்டார். எதிர்க்கட்சித் தலைவரின் ஜனநாயக ரீதியான பொறுப்பினை அவர் தட்டிக் கழித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், எனது நண்பர் அனுரகுமார திஸாநாயக்க இந்தக் காலப் பகுதியில் எங்கிருந்தார் என யாருக்கும் தெரியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் நடக்காத விடயம் இலங்கையில் நடைபெற்றது, இரண்டு நாள்கள் பிரதமர் பதவியை பொறுப்பேற்றுக் கொள்ள எவரும் இருக்கவில்லை. பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் யாசகம் செய்தது என அவர் தெரிவித்துள்ளார்.

நானாக இந்தப் பதவியை கேட்கவில்லை, உண்மையில் சஜித் பதவியை ஏற்றுக் கொண்டிருந்தால் நான் அவருக்கு உதவியிருப்பேன். நாடு ஒன்று நெருக்கடியில் விழும் போது பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வளவு அடித்துக் கொண்டாலும் மாலை வேளைகளில் சந்திப்போம் பேசுவோம். திருமண நிகழ்வுகளில் ஒன்றாக பங்கேற்றுள்ளோம்.  மொட்டு கட்சி மட்டுமன்றி, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் எனக்கு வாக்களித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எனக்கு ஆதரவு வழங்கியிருந்தாலும் அதனையும் ஏற்றுக் கொண்டு நாட்டை ஆட்சி செய்திருப்பேன் என தெரிவித்துள்ளார்.

இந்தப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என எனக்கு நன்றாகத் தெரியும் அதன் காரணமாகவே இந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். மொட்டு கட்சியின் ஆதரவினை நிராகரித்திருந்தால் இன்று டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 450 ரூபாவிற்கு மேல் அதிகரித்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

  • 604
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads