சினிமா செய்திகள்
ரசிகருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்
சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது ரசிகர்கள் பலரும் கடிதம் எழுதுவார்கள். ஆனால், அதற்கெல்லாம் ஜெயலலிதா எந்த பதில் கடிதமும் எழுதமாட்டார்.அந்த நிலையில்
மக்கள் திலகத்தைப் பற்றி கே.ஆர்.விஜயா
"ஒரே வானம் ஒரே பூமி படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருந்தோம். வெளிநாடு வந்திருக்கிறோம் என்பதால் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓ
எஸ்.வி. ரங்காராவுக்கு இணையாக யாரையும் கூற முடியாது
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம
GOAT ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி
அரசு இதுவரை GOAT படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வெறும் 4 ஷோ மட்டுமே திரையிடமுடியும் என்கிற நிலை இருந்தது. அதனால் ஓப்பன
தவறு செய்த கார் டிரைவருக்கு சம்பள உயர்த்தி கொடுத்த என்.எஸ்.கே
நான் மதுரைக்கு மக்களை பார்க்க போகிறேன். நீ மக்கள் என்னை வந்து பார்க்கும்படி செய்துவிடாதே என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் என்.எஸ்.கே.தமிழ் சினிமாவில் த
சூர்யா ஜோதிகாவின் ரொமான்டிக் புகைப்படம் இணையத்தில் வைரல்
ஜோடிப் பொருத்தம் என்ற வார்த்தைக்கு சூர்யா ஜோதிகா தான் உதாரணம். இரண்டு பேரும் பார்ப்பதற்கு அப்படி ஒரு அழகாக இருக்கிறார்கள். தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ள
நடிகை சில்க் ஸ்மிதா
ஒரு முறை பாலுமகேந்திரா சொன்ன இந்த வரிகள் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது . பேரழகிங்கிறதை தாண்டிஎத்தனை அற்புதமான ஆன்மா அவள். ?ஒருவரை எதுவாக பார்க்கிறோமோ,
கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை
உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கவியரசர்.அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைக
உருவகேலி செய்தவர்களுக்கு சீரியல் நடிகை பதிலடி
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர்கள் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடி
நடிகை கண்ணாம்பா
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நட
நாட்டிய பேரொளி பத்மினி  நடிகர் திலகம்சிவாஜிகணேசனை பற்றி ஒரு பேட்டியில்....
நான் அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு வெளிநாட்டில் இருந்து அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார்.தண்ணீர் கூட அ
லட்சுமிக்கு எம்.ஜி.ஆர். கூறிய அட்வைஸ்
ஒரு முறை நடிகை லட்சுமி எம்.ஜி.ஆரை நேரில்சந்தித்தார்.அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமை
Ads
 ·   ·  1293 news
  •  ·  0 friends
  • 1 followers

T20 தரவரிசையில் ஹர்திக் பாண்டியா முதலிடம்

ஐசிசி T20 சகலதுறை வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

இதன் மூலம் T20 சகலதுறை வீரர்கள் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றுள்ளார்.

ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 9 ஆவது அத்தியாயம் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்றது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

இந்த நிலையில், ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்ததை அடுத்து T20 வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி, ஐசிசி T20 சகலதுறை வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் உதவித் தலைவர் ஹர்திக் பாண்டியா முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நடைபெற்று முடிந்த T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரு துறைகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா, இந்திய அணி இம்முறை சம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

அதுமட்டுமின்றி இந்தாண்டு T20 உலகக் கிண்ணத் தொடரில் துடுப்பாட்டத்தில் 144 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம், இந்திய அணிக்காக T20 உலகக் கிண்ணத் தொடரில் 100 இற்கும் மேற்பட்ட ஓட்டங்கள் மற்றும் 10 இற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் சகலதுறை வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.

இதன் காரணமாக அவர் தற்போது சகலதுறை வீரர்கள் தரவரிசையிலும் முதலிடம் பிடித்து சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

  • 444
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads