நடிகை பிரமிளாவை வீழ்த்திய திரையுலகம்

12 வயதில் பள்ளியில் படிக்கும் போது தீவிர சிவாஜி ரசிகையாக இருந்த நடிகை பிரமிளா அதன்பின் 14 வது வயதில் சினிமாவில் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என்று வெறுத்து போய் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார்.

நடிகை பிரமிளா 12 வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது சிவாஜி கணேசன் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வந்தால் அவற்றை வெட்டி தனது நோட்புக்கில் வைத்திருப்பாராம். ஒரு கட்டத்தில் டீச்சர் அதனை பார்த்து விட அவரை பள்ளியில் இருந்து விரட்டி விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் அவர் சென்னைக்கு ஒரு திருமணத்திற்காக குடும்பத்தோடு வந்த போது திரைப்பட வாய்ப்பை பெற்றார். முதல் படம் கேஎஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான வாழையடி வாழை. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இரண்டாவது படமாக கே. பாலசந்தர் இயக்கத்தில் உருவாகும் அரங்கேற்றம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இந்த படத்தில் அவருக்கு ஒரு பாலியல் தொழிலாளி வேடம் என்றபோது அவரது பெற்றோர் தயங்கினார்கள். ஆனால் இந்த படத்தின் மூலம் உங்கள் மகள் நிச்சயம் மிகப்பெரிய புகழை பெறுவார், நடிப்புக்காக அவருக்கு பாராட்டு கிடைக்கும் என்று பாலச்சந்தர் உறுதி அளித்ததை தொடர்ந்து அந்த படத்தில் நடிக்க அனுமதித்தனர்.

பாலச்சந்தர் கூறியபடி அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் பிரமிளாவுக்கு வாய்ப்புகளும் குவிந்தன. கோமாதா என் குலமாதா, மனிதரில் மாணிக்கம், தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பள்ளிக்காலத்தில் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகையாக இருந்த பிரமிளா தங்கப்பதக்கம் திரைப்படத்தில் அவருடைய மருமகளாக நடித்தார்.

அதன் பின்னர் பருவ காலம், உன்னை சுற்றும் உலகம், சதுரங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் தான் கஷ்டப்பட்டு சினிமாவில் சம்பாதித்த பணத்தை தன்னுடைய தந்தை தொழில் தொடங்குவதற்காக கொடுத்தார். ஆனால் அவருடைய தந்தை ஆரம்பித்த தொழில் நஷ்டத்தில் முடிந்தது. மகளின் பணத்தை நாம் நஷ்டம் ஆக்கிவிட்டோமே என்று மன உளைச்சல் காரணமாகவே அவரது தந்தை மறைந்து விட்டார்.

அதனையடுத்து அவரது தாயார் புதிய தொழில் தொடங்கவும் பிரமிளா பணம் கொடுத்தார். அவருடைய தாயார் தொடங்கிய சுற்றுலா கம்பெனி நிறுவனமும் நஷ்டத்தில் முடிந்தது. தான் சம்பாதித்த 90% பணத்தை அப்பா அம்மாவுக்காகவே கொடுத்து அவர்கள் நஷ்டம் அடைந்ததால் ஒரு கட்டத்தில் பிரமிளா விரக்தி அடைந்தார்.

இந்த நிலையில் தான் அவர் ஜட்ஜ்மெண்ட் என்ற திரைப்படத்தை தயாரித்தார். தன்னிடம் மீதமுள்ள பணத்தை வைத்து கடன் வாங்கி இந்த படத்தை தயாரித்துக் கொண்டிருந்த நிலையில்தான் பிரமிளா மிகவும் பொருளாதார கஷ்டத்தில் இருப்பதை அறிந்த அமெரிக்காவில் இருந்த அவருடைய அண்ணன் தன்னுடன் அமெரிக்கா வந்துவிடுமாறு அழைத்துள்ளார்.

என்னுடன் அமெரிக்காவுக்கு வா, உனக்கு அமெரிக்காவில் ஒரு நல்ல வழியை காண்பிக்கிறேன் என்று அழைத்தார். இதனை அடுத்து அண்ணனின் பேச்சை கேட்டு கொண்ட பிரமிளா இனிமேல் சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்து தான் தயாரித்த ஜட்ஜ்மெண்ட் என்ற படத்தை அப்படியே இயக்குனரிடம் கொடுத்துவிட்டு தனக்கு ஒரு பைசா கூட வேண்டாம். நீங்களே இந்த படத்தை முடித்துவிட்டு ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அண்ணனுடன் அமெரிக்கா சென்றுவிட்டார்.

அதன் பிறகு அமெரிக்காவில் தொழிலதிபர் பால் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டு கலிபோர்னியாவில் செட்டில் ஆகிவிட்டார். அமெரிக்காவில் பிரமிளா கணவர் தொழிலை பார்த்து கொண்டு, அவருக்கு உதவியாக தொழில் சம்பந்தப்பட்ட பணிகளை கவனித்து கொண்டு வருகிறார். சினிமாவில் மீண்டும் தலைகாட்ட மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கிட்டத்தட்ட 250 படங்களில் நடித்த நடிகை பிரமிளா சினிமாவிலிருந்து சம்பாதித்த ஒரு காசை கூட அவர் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லவில்லை. ஆனால் இன்று அவர் அமெரிக்காவில் ஒரு பிரபல தொழிலதிபரின் மனைவியாக பணக்கார வீட்டு மருமகளாக இருக்கிறார். திரையுலகம் எத்தனையோ பேரை வாழ வைத்திருந்தாலும் பிரமிளா போன்ற சிலரை வீழ்த்தி உள்ளது.

  • 369
  • More
சினிமா செய்திகள்
கேப்ரில்லாவுக்கு லண்டனில் கிடைத்த மோசமான அனுபவம்
அடிக்கடி தனது கிளாமரான புகைப்படங்களையும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் கேப்ரில்லாவுக்கு நெட்டிசன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற
சுந்தர் சி யை கெட்ட வார்த்தையில் திட்டிய மணிவண்ணன் - எதற்காக தெரியுமா?
ஈரோட்டில் பிறந்த விநாயக சுந்தரவேல் என்பவர் தனது தந்தையின் பெயரான சிதம்பரம் என்பதன் முதலெழுத்தைச் சேர்த்து சுந்தர் சி ஆக தமிழ் சினிமாவில் பிரபல இயக்குந
விசுவின் பார்வையில் கண்ணதாசன்
ஒரு பாடலை வாங்கி வருவதற்காக கண்ணதாசனிடம் அனுப்புகிறார் இயக்குநர். விசுவிற்கு மிகுந்த தயக்கம். இருந்தாலும் ‘நாடக உலகப்’புகழ் தந்த துணிச்சலில் சென்று வி
மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளத்தில் ’மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள குறித்து கூ
75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்
தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்போது தொடங்கிய அரண்
42 வயதில் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம்..?
பில்லா, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், சிங்கம் 2, லிங்கா, என்னை அறிந்தால் ருத்ரமா
கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக தன்னுடைய டீனேஜ் வயதிலேயே அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அத
ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் அசத்தும் அழகில் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், படு கிளாமரான உடையில் அசத்தும் நடிகை அமலா பால்
சமூக வலைத்தளங்களிலும் புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணத்தில் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வரும
கிளாமர் உடையில் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
இந்திய அளவில் தற்போது பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில்
பிரபாஸ் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் ராஜமௌலி
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட
அறியப்படாத படம் - இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்
1980 கால கட்டங்களில் வெளியான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பெரும்பாலும் ஹிட் ஆயிருக்கும். அதற்கு காரணம் இசை, பாடியவரின் குரல் வளம் உள்ளிட்ட பல காரணங்கள
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு