·   ·  147 posts
  • 2 members
  • 2 friends

திருவாரூர் கமலாலய குளத்தின் நடுவாண் கோயில்

தமிழ்நாட்டில் - திருவாரூரில் மிகப் பிரமாண்டமாக அமைந்துள்ள கமலாலய திருக்குளத்தின் நடுவே நாகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த நாகநாதர் திருக்கோயில் நடு கோயில், நடுவன் கோயில், நடுவான் கோயில் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. குளத்தின் கரையில் இருந்து பார்க்கும்போது இந்த கோயில் மிக சின்னதாக தெரியும்.

திருக்கடல் போன்று திகழும் கமலாலயக் குளத்தின் நடுவே நடுவாண் கோயில் அமைந்துள்ளது. நடுவனக் கோயில், நடுவணாங் கோயில், நடுக்கோயில், நாகநாத சுவாமி கோயில் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ‌இந்தக் கோயிலில் அருளும் ஶ்ரீநாகநாதரும் ஶ்ரீயோகாம்பாளும் யோகக் கலைகள் ஸித்திக்க வரம் தரும் தெய்வங்களாகத் திகழ்கிறார்கள்.

கரையில் இருந்து பார்த்தால் சிறியதாகத் தோன்றும் கோயில், அருகில் நெருங்கினால் பிரமிக்க வைக்கிறது. குளத்தின் நடுவே சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் இக்கோயில் அமைந்துள்ளது; இரண்டு திருச் சுற்றுக்களைக் கொண்டது. மூலவர் சந்நிதியின் நுழைவு வாயிலில் உள்ள சுதைச் சிற்பத்தில் முசுகுந்த சக்கரவர்த்தி இறைவனை பூஜிக்கும் காட்சியைக் காணலாம். விநாயகர், ஜேஷ்டாதேவி, நாகர், சண்டிகேஷ்வரர், நந்தி, அவருக்கு அருகில் ஓர் சிவலிங்க மூர்த்தி ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம்.

நாகநாதர் கோயிலைச் சுற்றிலும் 16 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. அவற்றுக்கு நடுவே அமைந்த ஆலயம் என்பதாலும் இது நடுக்கோயில் எனப் பெயர்பெற்றது என்பர்.

இக்கோயிலின் தல விருட்சம் வில்வ மரம். இக்கோயில் நுழைவுப் பகுதியில் யானை சிலை ஒன்று உள்ளது. கனமழை பொழியும் காலங்களில் கமலாலய குளத்தின் நீர்மட்டம், இந்த யானையின் கால்களைத் தொடுவிட்டால் மழை நின்றுவிடும் என்பது நம்பிக்கை.

‘அஞ்சனை வேலியாரூ ராதரித் திடங்கொண்டார்’ எனும் திருநாவுக்கரசரின் பதிக வரிகள் இக்கோயிலின் மேன்மையைச் சொல்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஐந்து பிரதோஷங்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று, அபிஷேகத் தயிரை வாங்கி அருந்தினால் விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பிரதோஷ காலம் மட்டுமன்றி சோமவாரம், சிவராத்திரி, திருவாதிரை போன்ற சிவபெருமானுக்கு உகந்த புண்ணிய தினங்களில் இந்த ஆலய இறைவனையும் அம்பிகையையும் தரிசித்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்; வியாபாரம் பெருகும்.

இந்தக் கோயிலுக்குப் படகில்தான் செல்ல முடியும். குளத்தின் வடகரையிலிருந்து படகு மூலம் அர்ச்சகர் சென்று வருவார்.

தினமும் மாலை 5 முதல் 6 மணி வரை மட்டுமே கோயில் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. பிரதோஷ தினங்களில் மதியம் 2 முதல் இரவு 10 மணி வரை கோயில் திறந்திருக்கும். சிவராத்திரி அன்று, இங்கு நான்கு கால பூஜை நடைபெறும்.

  • 534
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்