·   ·  14 news
  •  ·  3 friends
  • R

    5 followers

முள்ளிவாய்கால் நோக்கி சென்றுகொண்டிருந்த நினைவேந்தல் ஊர்தியை இடை நடுவில் மறித்த பொலிசார்

கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்கால் நோக்கி சென்றுகொண்டிருந்த நினைவேந்தல் ஊர்தியை புதுக்குடியிருப்பு பொலிசார் இடை நடுவில் மறித்து சில்லறை சாட்டுகளை வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இறுதி யுத்தத்தில் மக்கள் பட்ட துன்பங்களை காட்சிபடுத்தி சுமந்தபடி ஊர்தி முள்ளிவாய்க்கால் நோக்கி சென்று கொண்டிருந்த போது புதுக்குடியிருப்பு பொலிசார் இடையில் மறைத்து குறித்த ஊர்தியை சோதனையிட்டு பின்னர் சாரதியிடம் உழவு இயந்திரத்தின் ஆவணங்களை காண்பிக்குமாறு கூறி குறித்த ஆவணங்களை தொலைபேசியில் புகைப்படமும் எடுத்துள்ளனர்.

மேலும் உழவு இயந்திரத்தையும் புகைப்படம் எடுத்துள்ளனர்.நீண்ட நேரமாக வழிமறித்து பின் செல்லுமாறு அனுமதித்துள்ளனர் சற்று நிமிடம் அவ்விடத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

  • 685
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.