ஹிட் பாடல்கள் கொடுத்தும் கொண்டாடப்படாத பாடகி

ஹிட் பாடல்கள் கொடுத்தும் கொண்டாடப்படாத பாடகி... பி.எஸ்.சசிரேகா பற்றி தெரியுமா?

1978-ம் ஆண்டு வெளியான லட்சுமி என்ற படத்தில் மேளம் கொட்ட நேரம் வரும் என்ற பாடல் மூலம் ரீ-என்டரி கொடுத்த சசிரேகா இளையராஜா இசையில் முதன் முதலாக பாடினார்.

இந்திய திரை இசையில் பல பாடகிகள் தங்களது இனிமையான குரல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான உள்ளனர். இதில் ஒரு சில பாடகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும் அதே சமயம் அவர்களுக்கென தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருக்கும். ஆனாலும் தனது குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த சில பாடகிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இல்லாமலும் இருக்கின்றனர்.

அப்படி ஒரு பாடகிதான் பி.எஸ்.சசிரேகா. 70-80 களில் தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் தான் சசிரேகா. 1973-ம் ஆண்டு சிவக்குமார் நடிப்பில் வெளியான பொண்ணுக்கு தங்க மனசு என்ற படத்தில் இடம்பெற்ற தஞ்சாவூரு சீமையிலே என்ற பாடல் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய சசிரேகா, வாணி ஜெயராமுடன் இந்த பாடலை பாடியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வராகங்கள் படத்தில் கேள்வியின் நாயகனே என்ற பாடலை பாடியிருந்தார். அதன்பிறகு சில ஆண்டுகள் பாடல்களுக்கு ஹம்மிங் மட்டும் செய்து வந்த சசிரேகா, அதன்பிறகு1978-ம் ஆண்டு வெளியான லட்சுமி என்ற படத்தில் மேளம் கொட்ட நேரம் வரும் என்ற பாடல் மூலம் ரீ-என்டரி கொடுத்த சசிரேகா இளையராஜா இசையில் முதன் முதலாக பாடினார்.

அதனைத் தொடர்ந்து, காயத்ரி பத்தில் வாழ்வே மாயமா? வட்டத்துக்குள் சதுரம் என்ற படத்தில் இதோ இதோ என் நெஞ்சிலே, கிராமத்து அத்தியாயம் படத்தில் பூவே இது பூஜை காலமே, அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் திறன்பாடியே போற்றிடுவேன், ஒரு ஓடை நதியாகிறது படத்தில் தென்றல் வந்து முத்தமிட்டது உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை கொடுத்து தவிர்க்க முடியாத பாடகியாக உருவெடுத்தார். சசிரேகா.

இளையராஜா இசையில் பல பாடல்களை பாடி வந்தாலும், சசிரேகாவுக்கு பிரேக் கொடுத்த பாடல் என்றால் அது விழியில் விழுந்து இதயம் நுழைந்து பாடல் தான். அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் அந்த காலத்தில் காதலர்களின் ஃபேவரெட் பாடலாக ஒளித்துக்கொண்டிருந்தது. இளையராஜா மட்டுமல்லாது டி.ராஜேந்தர் இசையிலும் பல பாடல்களை பாடியுள்ளார் சசிரேகா.

அதிலும் உறவை காத்த கிளி என்ற படத்தில் இடம்பெற்ற எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி என்ற பாடல் சசிரேகாவுக்கு பெரிய வெற்றியை கொடுத்தது, டி.ராஜேந்தர் இசையில் அவர் பாடிய அனைத்து பாடல்களுமே ஹிட் பாடலாக அமைந்தது. அதேபோல் ஊமை விழிகள் படத்தில் ராத்திரி நேரத்து பூஜையில், மாமரத்து பூவெடுத்து, கண்மணி நில்லு காரணம் சொல்லு, உழவன் மகன் படத்தில் செம்மரி ஆடே உள்ளிட்ட பாடல்கள் சசிரேகாவின் ஹிட் லிஸ்டில் உள்ளது.

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா கங்கை அமரன் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள சசிரேகா, அவ்வப்போது மேடையில் இசை கச்சேரியும் நடத்தியுள்ளார். 90-களின் முற்பகுதியில் பிரபலமான பாடகியாக வலம் வந்த சசிரேகா, ஏ,ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான கிழக்கு சீமையிலே படத்திலும் பாடல்கள் பாடியுள்ளார்.

1973-ம் ஆண்டு தனது இசை பயணத்தை தொடங்கிய சசிரேகா 2023-ம் ஆண்டில் தனது 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். சினிமாவில் தனது குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும், இன்றைய காலக்கட்டத்தில் சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திராத ஒரு பாடகியாகத்தான் சசிரேகா இருக்கிறார் என்று சொல்லலாம்.

  • 887
  • More
சினிமா செய்திகள்
கேப்ரில்லாவுக்கு லண்டனில் கிடைத்த மோசமான அனுபவம்
அடிக்கடி தனது கிளாமரான புகைப்படங்களையும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் கேப்ரில்லாவுக்கு நெட்டிசன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற
சுந்தர் சி யை கெட்ட வார்த்தையில் திட்டிய மணிவண்ணன் - எதற்காக தெரியுமா?
ஈரோட்டில் பிறந்த விநாயக சுந்தரவேல் என்பவர் தனது தந்தையின் பெயரான சிதம்பரம் என்பதன் முதலெழுத்தைச் சேர்த்து சுந்தர் சி ஆக தமிழ் சினிமாவில் பிரபல இயக்குந
விசுவின் பார்வையில் கண்ணதாசன்
ஒரு பாடலை வாங்கி வருவதற்காக கண்ணதாசனிடம் அனுப்புகிறார் இயக்குநர். விசுவிற்கு மிகுந்த தயக்கம். இருந்தாலும் ‘நாடக உலகப்’புகழ் தந்த துணிச்சலில் சென்று வி
மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளத்தில் ’மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள குறித்து கூ
75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்
தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்போது தொடங்கிய அரண்
42 வயதில் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம்..?
பில்லா, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், சிங்கம் 2, லிங்கா, என்னை அறிந்தால் ருத்ரமா
கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக தன்னுடைய டீனேஜ் வயதிலேயே அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அத
ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் அசத்தும் அழகில் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், படு கிளாமரான உடையில் அசத்தும் நடிகை அமலா பால்
சமூக வலைத்தளங்களிலும் புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணத்தில் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வரும
கிளாமர் உடையில் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
இந்திய அளவில் தற்போது பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில்
பிரபாஸ் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் ராஜமௌலி
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட
அறியப்படாத படம் - இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்
1980 கால கட்டங்களில் வெளியான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பெரும்பாலும் ஹிட் ஆயிருக்கும். அதற்கு காரணம் இசை, பாடியவரின் குரல் வளம் உள்ளிட்ட பல காரணங்கள
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு