கனடா தனது குடியுரிமை விதிகளில் முக்கிய மாற்றங்கள் சிலவற்றைச் செய்ய உள்ளது.
வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள், தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில், அவர்களுடைய கனேடிய குடியுரிமை அவர்களுடைய பிள்ளைகளைச் சென்றடையாது என்னும் நிலை தற்போது உள்ளது.
இந்த விதியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், ’Lost Canadians’ என்றே அழைக்கப்படுகிறார்கள். 2009இல் அறிமுகமான இந்த விடயம், வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள், தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில் அவர்கள் கனேடிய குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவதற்கு தடையாக இருந்தது.
2023ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், ஒன்ராறியோ உச்சநீதிமன்றம், இந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி அதை முடிவுக்குக் கொண்டுவந்தது.
கனடா அரசும், இந்த சட்டத்தின் விளைவுகள் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க இயலாதவைதான் என ஒப்புக்கொண்டு ஒன்ராறியோ உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை.
தற்போது இந்த Bill C-3 என்னும் 2025ஆம் ஆண்டுக்கான கனேடிய குடியுரிமைச் சட்டத்தின் மசோதாவுக்கு மன்னர் தரப்பிலிருந்து ஒப்புதலும் கிடைத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அது தற்போது கனடா நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
இந்த விதிகள் அமுலுக்கு வரும்போது, வெளிநாட்டில் பிறந்த கனேடிய குடிமக்களுக்கு வெளிநாட்டில் பிறந்த அல்லது அவர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது தத்தெடுத்த பிள்ளைகளுக்கும் கனேடிய குடியுரிமை கிடைக்கும் என்பதே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நல்ல செய்தியாகும்.
*அரச மரத்தின் பாலை பாதத்தில் காணும் பித்த வெடிப்புகளுக்குத் தடவிவர குணமாகும்.
*நகப்புண்களுக்கு மருதானி இலையை அரைத்து, புண் மீது வைத்துக்கட்ட விரைவில் குணமாகும்.
*மருதாணிப் பூவை இரவில் தலையணையின் கீழ் வைத்துப் படுக்க நல்ல தூக்கம் வரும்.
*அருகம்புல்லின் ஊறல் நீருடன் பால் சேர்த்து உட்கொள்ள, தலைநோய், கண் புகைதல் ஒழியும்.
*அருகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்தரைத்துத் தடவிவர, சொறி, சிரங்கு, படர் தாமரை சரியாகும்.
*அன்னாசி இலையைச் சாறு பிழிந்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து 1 தேக்கரண்டி உட்கொள்ள, விக்கல் நிற்கும்.
*ஆலம் பட்டையை நீர்விட்டு ஊறவைத்து, அதில் வாய் கொப்பளித்துவர வாய்ப்புண், வாய் நாற்றம், நாவெடிப்பு, ஈறுப்புண் குணமாகும்.
*ஆவாரம் பூவுடன், பச்சைப்பயறைச் சேர்த்தரைத்து, குளிக்க உடலில் தோன்றும் நமைச்சல்கள் நீங்கும்.
*இஞ்சியை வாயிலிட்டு மென்று, உமிழ்நீரைத் துப்ப தொண்டைப்புண், குரல் கமறல் குணமாகும்.
*உணவு செரியாமல் கழிச்சல் ஏற்படும்போது, இஞ்சிச் சாற்றை, தொப்புளைச் சுற்றித் தடவலாம்.
*உளுந்தை வடையாகச் செய்தும், கஞ்சியாகக் காய்ச்சியும் உண்கின்றவர்களுக்கு இளைத்த உடல் பெருக்கும்.
ஒரு முறை நாரத மகரிஷி
கவலையுடன் காணப்பட்டார் .
அவரது கவலையை கண்ட
அன்னை மஹாலக்ஷ்மி
"மகனே ஏன் கவலையாக
இருக்கிறாய்" என்று கேட்டாள்.
நாரதர் - ''தாயே நான் செய்யும் செயல்கள் யாவும் இறுதியில் நன்மையில்
முடிந்தாலும், அந்த நேரம் ஏற்படும் கலகங்களுக்கு நான் தானே காரணமாக
விளங்குகிறேன்.
அதை எண்ணித்தான்
வருத்தமாக உள்ளது தாயே'' என்றார் .
மஹாலக்ஷ்மி -
"நாரதா அப்படி என்றால் ஒன்று செய். ரிஷிகேசம் சென்று
புனித கங்கையில் நீராடிவிட்டு வா
உன் கவலை யாவும் போய்விடும்
பாரேன்'' என்றாள்.
நாரதரும் ரிஷிகேசம் வந்தார்
கங்கையில் நீராடலாம் என்று நினைக்கும் போது பல வண்ணங்கள் கொண்ட
விசித்திரமான மீன் ஒன்று நீரில் நீந்திக்கொண்டே நாரதரிடம்
"என்ன நாரதரே சௌக்கியமா'' என்றது. பேசும் மீனை அதிசியமாக
பார்த்துக்கொண்டே நாரதர்,
ம்ம் எதோ சௌக்கியமாக இருக்கிறேன்
நீ நலமா மீனே''என்று நாரதர்
திருப்பி மீனிடம் கேட்டார்.
மீன் கொஞ்சம் சலித்து கொண்டே
'' நானும் எதோ நலமாக இருக்கிறேன் நாரதரே ''என்றது.
நாரதர் - ''ஏன் மீனே
உன் சலிப்புக்கு என்ன காரணம்
ஏதாவது தேவையா என்று சொல்
நான் வரவழைத்து தருகிறேன்'' என்றார்.
மீன் - "நாரதரே என் நலத்தில் ஒன்றும் குறைச்சல் இல்லை ஆனால் ......
நாரதர் - ஆனால் ......
மீன் - "ஒரே தாகமாக இருக்கிறது
குடிக்க தண்ணீர் தான்
கிடைக்க மாட்டேங்கிறது,
அதுதான் என் சலிப்புக்கு
காரணம்'' என்றது மீன்.
மீன் கூறியதை கேட்டதும்
நாரதருக்கு கோபம் வந்தது
என்ன மீனே என்னிடமே விளையாடுகிறாயா?!!
நீருக்குள் நீந்தி கொண்டே
தாகத்துக்கு நீர் கிடைக்கவில்லை
என்று என்னிடம் சலித்து கொண்டு சொல்கிறாயே உன் முட்டாள் தனத்தை
என்னவென்று சொல்வது ?!!
மீன் சிரித்துக்கொண்டே
"நீர் மட்டும் என்னவாம்
பேரானந்தம் தரும் நாராயண மந்திரத்தை உம்முள் வைத்துக்கொண்டே
கவலையாக எதோ நலமாக இருக்கிறேன் என்று கூறுகிறீரே நீர் கூறுவது மட்டும்
நியாயமோ'' என்று கேட்க நாரதர் வியப்புடன் மீனை பார்க்க, மீன் உருவம்
மறைந்து திருமால் நாரதர் முன் காட்சியளித்து
"நாரதா என் பெயரை
கூறிக்கொண்டு நீ செய்யும் செயல்கள் யாவும் நன்மையில் தானே
முடிவடைகிறது.
கலகம் என்பது அவரவர்கள் மனநிலையை பொறுத்து உள்ளது. அதை நினைத்து
நீ வருந்தி என்ன பயன்.யாவரும் நலம் பெறவேண்டும் என்று எண்ணி தானே நீ
உன் கலகத்தை துவக்குகிறாய்.
உன் நோக்கம் உயர்வாக இருக்கும் போது அதில் நடக்கும் செயல்களை கண்டு
நீ ஏன் வருந்தவேண்டும்" என்று கூறி நாரதரை திருமால் ஆசிர்வதித்து விட்டு
மறைந்து போனார் .
நாரதரும் உள்ளம் தெளிவடைந்து
புனித கங்கையில் நிம்மதியாக
ஆனந்தமாக நீராடினார்.
என்ன கவலையாக இருந்தாலும் சரி கூறுவோம் நாராயண மந்திரம்.
அதுவே நாளும் பேரின்பம்
யாவும் நலமாகவும் முடியும்.
ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
ஓம் நமோ நாராயணா
ஒரு நாட்டின் தளபதி இறந்து போனார்.
அவரது இடத்தை நிரப்புவதற்காக ராஜா பல இளைஞர்களை வரவழைத்துத் தேர்வு நடத்தினார்.
பல கட்டங்களாக நடந்த தேர்வில் இறுதியாக இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
இதில் ஜெயிப்பவன் தளபதியாவான். அது மட்டுமின்றி ஒரு மூட்டை பொற்காசும் அவனுக்குப் பரிசுப் பொருளாக வழங்கப்படும்.
இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்பாகவே இருவரும் வரவழைக்கப்பட்டு சகல வசதிகளுடன் தனித் தனியாகத் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள்.
அதிகாலையிலேயே போட்டி ஆரம்பிக்கப்படும் என்பதால் நேரத்துடனேயே உணவருந்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களில் ஒருவனின் அறைக்குள் தலைமை சமையல்காரன் திடீரென்று நுழைந்தான். அவனிடம் ரகசியமான குரலில் , "தம்பி. நாளை நடக்கும் போட்டியில் நீ மட்டுமே கலந்து கொள்ளப் போகிறாய் .
எனவே போட்டியே இல்லாமல் நீதான் ஜெயிப்பாய்" என்றான். அவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.
சமையல்காரன் மீண்டும் சொன்னான். "இதோ பார். நான் பக்கத்து அறையிலுள்ள உன் போட்டியாளனுடைய உணவில் தூக்கத்திற்கான மருந்தைக் கலந்து விடுவேன்.
அவனால் காலையில் எழுந்திருக்கவே முடியாது. ராஜா சோம்பேறியை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.
அப்புறம் நீதான் தளபதி. இதற்குப் பிரதிபலனாக , நீ பரிசாகப் பெறும் தங்கத்தை எனக்குத் தந்துவிட வேண்டும். சம்மதமா ?" என்றான்.
சமையல்காரன் சொல்லி முடித்தவுடனேயே அவன் அவசரமாய்ச் சொன்னான் , " ஐயா. இது நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய பதவி .
தகுதியுள்ளவன் வென்றால் மட்டுமே நாட்டுக்குப் பாதுகாப்பு. எனவே எனக்குத் தகுதி இருந்தால் நான் வெற்றி பெறுவேன்.
தயவு செய்து குறுக்கு வழி வேண்டாம். அதே நேரத்தில் என் போட்டியாளனிடம் பேரம் பேசி என் உணவில் மருந்தைக் கலந்து விடமாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள்" என்றான்.
சமையல்காரன் புன்னகைத்தபடி , " கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும். நீ புத்திசாலி. சத்தியமாக நான் உனக்கு நல்ல உணவை மட்டுமே பரிமாறுவேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் சமையல்காரனின் உதவியாளன் , மற்றுமுள்ள போட்டியாளனிடம் அதே பேரத்தைத் தொடங்கியிருந்தான்.
ஆனால் அங்கே நடந்ததோ வேறொன்று. அவன் பேரத்திற்கு ஒப்புக் கொண்டான்.
போட்டியில் கிடைக்கும் தங்கப் பரிசு மட்டுமன்றி இன்னும் கொஞ்சம் தங்கமும் சேர்த்துக் கொடுப்பதாக வாக்களித்தான். உதவி சமையல்காரனும் ,
" காரியத்தை சிறப்பாக முடிப்பேன்.
நீங்கள் தான் இந்நாட்டின் தளபதி " என்றான்.
இரவு உணவு முடிந்து இருவரும் உறங்கினார்கள்.
பேரத்துக்கு ஒப்புக் கொள்ளாத வீரன் அதிகாலையில் எழுந்து போட்டிக்குக் கிளம்பினான். அங்கே போய்ப் பார்த்தால், அவனோடு போட்டியிட யாருமே வந்திருக்கவில்லை.
மன்னர் திடீரென அந்த இடத்தில் பிரவேசித்து ,
" புதிய தளபதியாருக்கு வாழ்த்துகள் என்று சொல்லித் தன்னுடைய வீர வாளைப் பரிசளித்தார் .
அவனுக்கோ ஒரே ஆச்சரியம். போட்டியாளன் இல்லாமல் தேர்வான அதிர்ச்சி. மன்னரை நேருக்கு நேராய்ப் பார்த்துவிட்ட மகிழ்ச்சி.
தன்னையறியாமல் கண்களில் நீர் கசிந்தது.
மன்னர் அவனை அணைத்துக் கொண்டார்.
"மகனே! நடப்பதெல்லாம் கனவு போலத் தோன்றுகிறதா ? உங்களுக்கான இறுதிப் போட்டி நேற்றிரவே முடிந்து விட்டது.
காசைக் கொடுத்துப் பதவியை வாங்குபவர்கள், அந்தப் பதவியைக் கொண்டு மேலும் சம்பாதிக்கத்தான் முயல்வார்கள்.
தேசத்தின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இது போன்ற பதவிகளில் அவனைப் போன்ற புல்லுருவிகள் இருந்தால் நாட்டையே கூட விற்றுவிடுவார்கள்.
எனவே அவன் அதிகாலையிலேயே விரட்டப்பட்டான்.
அந்தச் சூழலிலும் உண்மையாய் நடந்து கொண்ட நீ தேர்ந்தெடுக்கப்பட்டாய்" என்றார்.
இது அரசியல் பதிவு அல்ல. நீதிக்கதை மட்டுமே.
காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடிப்பதால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.
இஞ்சியின் தோல் நீக்கி அதை சாறு எடுத்து தேன் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால் குடல் சுத்தமாகி விடும். ஆமணக்கு எண்ணெய் சிறிய அளவில் எடுத்துக் கொள்வது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதில் நல்ல பயனைத் தரும்.
கற்றாழை ஒரு நச்சுக்களை வெளியேற்றும் பொருளாகவும் மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இதன் இலையில் உள்ள சதைப்பற்று பகுதியை மட்டும் எடுத்து அதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்து ஒரு நாளைக்கு பல முறை எடுத்து வாருங்கள்.
நச்சுகளை நீக்கும் போது உணவில் குளிர்ந்த பானங்கள், அதிகப்படியான ஆல்கஹால், காஃபின், புகை பிடிக்கும் பழக்கம், அதிகமாக பால் பொருட்களை சாப்பிடுதல், அதிக இனிப்பு பழங்கள், உணவுகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, மாவு பொருட்கள், பழைய உணவு, பதப்படுத்தப்படும் உணவு, மைக்ரோசாஃப்ட் ஓவனில் சமைக்கப்பட்ட உணவுகள், ஊறுகாய் மற்றும் வினிகர் உட்பட புளிக்க வைக்கப்பட்ட உணவுகள், வறுத்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
தினமும் டீ, காபி குடிப்பதை தவிர்த்து மூலிகை டீயை தினமும் அருந்துவது நல்லது. உடலில் உள்ள நச்சுகளை நீக்க வேண்டும் எனில் அதற்கான பெஸ்ட் சாய்ஸ் பிளாக் டீ அருந்துவது தான். உணவில் நிறைய மஞ்சள், சீரகம், கொத்துமல்லி, கடுகு விதைகள் போன்ற மூலிகை மற்றும் அதிக மசாலாப் பொருட்களை சேர்த்துக் கொள்ளவும்.
மும்பையில் உள்ள தனது மகனின் வீட்டில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்துள்ளார் வாலியின் தாய். தனது சகோதரனின் வீட்டில் இருக்கும் தாய் உங்களைக் காண விருப்பப்படுகிறார் என டி.எம்.எஸ்ஸிடம் கோரிக்கை வைத்தார் வாலி. உடனே சென்று அவரைப் பார்த்து அவருக்கு விருப்பமான இரு பாடல்களைப் பாடி விட்டு வந்திருக்கிறார் டி.எம்.எஸ். அதில்தான், தான் எத்தகையை சிறந்த மனிதாபிமானம் கொண்டவர் என்பதை மிகவும் உணர்வுபூர்வமான விதத்தில் நிரூபித்துள்ளார்.
டி.எம்.எஸ்ஸின் மூத்த மகன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பாகப்பிரிவினை படத்தில் பாட அழைத்துள்ளார்கள். மகனின் நிலை கண்டு அழுதுகொண்டிருந்த டி.எம்.எஸ். பாடச் சென்றுள்ளார். வழக்கமாக பாடும்போது இரண்டு முறையாவது ஒத்திகை பார்ப்பார் டி.எம்.எஸ். அன்றைக்கு டியூனும் பாடல் வரிகளையும் கேட்டார். இசையமைப்பாளரிடம் பாடிக்காண்பித்தார். நேராக டேக்குக்குச் சென்றுவிட்டார். ஒரே டேக்கில் பாடலைத் துல்லியமாகப் பாடிவிட்டார். அன்று அவர் இருந்த நிலைக்குக் கச்சிதமாக இருந்தது பாடலின் வரிகள்.
ஏன் பிறந்தாய் மகனே... பாடல் தான் அது.
பாடலைப் பாடிவிட்டு வீட்டுக்கு வந்தால் மகனின் உயிர் பிரிந்திருந்தது.
மகனின் நினைவு வரும் என்பதால் அந்தப் பாடலை மட்டும் எந்த மேடையிலும் பாடக்கூடாது என முடிவெடுத்தார் டி.எம்.எஸ். எத்தனை பெரிய நபர் கேட்டாலும் பாடமாட்டார். வானொலியில் இந்தப் பாடல் ஒலித்தாலும் அணைத்துவிடுவார்.
1959-ல் அந்தப் பாடலைப் பாடிய டி.எம்.எஸ்., தனது நிலைப்பாட்டை ஒருவருடத்தில் மாற்றிக்கொண்டார், வாலியின் தாய்க்காக.
தன்னைப் பார்க்கவேண்டும் என்று விருப்பப்பட்ட வாலியின் தாய், ஏன் பிறந்தாய் மகனே பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டதும் துடிதுடித்துப் போய்விட்டார் டி.எம்.எஸ். ஆனாலும் சில நொடிகளில் அந்த முடிவை எடுத்தார். உடல்நலமில்லாமல் இருக்கும் இந்தத் தாயின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும். தனது மனத்தை மாற்றிக்கொண்டு அவர் கேட்டபடியே உருக்கமாகப் பாடினார். ஏன் பிறந்தாய் மகனே...
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
சமூக தொடர்பான புதிய கண்ணோட்டம் ஏற்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தவறிய சில ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். வேலையாட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
ரிஷபம்
தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். இழுபறியான சில பணிகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் மறையும். மகான்களின் சந்திப்புகள் சிலருக்கு ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமை வேண்டும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பாசி
மிதுனம்
எந்த ஒரு செயலிலும் சிந்தித்து செயல்பட வேண்டும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சஞ்சலங்களால் மனதளவில் சோர்வுகள் ஏற்படும். செய்தொழிலில் சில மாற்றமான சூழல் அமையும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். கடன் விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கடகம்
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். துணைவர் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
சிம்மம்
எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். சமூக பணிகளில் செல்வாக்கு உயரும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்த பணிகளில் லாபம் மேம்படும். முயற்சிக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். அன்பு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
கன்னி
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமை வேண்டும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். கலைப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படவும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
துலாம்
நினைத்த சில பணிகள் தாமதமாக முடியும். தாயுடன் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் உண்டாகும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில சலுகைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சமூகப் பணிகளில் உயர்வு உண்டாகும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விருச்சிகம்
முயற்சிக்கு ஏற்ப வரவுகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு பணிகளில் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
தனுசு
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். எதிர்பார்த்த சில வரவுகள் சாதகமாகும். இழுபறியான வேலைகளை முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். ஆதரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகரம்
எதிலும் படபடப்பு இன்றி பொறுமையுடன் செயல்படவும். இனம் புரியாத சிந்தனைகள் மூலம் தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் செயல்களில் மேற்கொள்வது மேன்மை தரும். நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும் போது கவனம் வேண்டும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கும்பம்
கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
மீனம்
மனதளவில் உற்சாகம் பிறக்கும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். பூமி விருத்திக்கான சூழல்கள் ஏற்படும். மற்றவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். சமூக பணிகளில் மதிப்புகள் உயரும். ஆசைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 25.11.2025.
இன்று இரவு 08.07 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.
இன்று இரவு 09.26 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.
இன்று காலை 11.18 வரை கண்டம். பின்னர் விருத்தி.
இன்று காலை 07.45 வரை பவம். பின்னர் இரவு 08.07 வரை பாலவம். பிறகு கௌலவம்.
இன்று காலை 06.14 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 08.15 முதல் 09.00 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இன்று (நவம்பர் 24, 2025) மும்பையில் காலமானார். அவருக்கு வயது 89.
பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் காலமானார். 89 வயதான தர்மேந்திரா இந்த மாத தொடக்கத்தில் தெற்கு மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அவர் காலமானார். அவரின் மறைவுக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருகிறார். அவர், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற கார் பந்தய நிறுவனத்தையும் சொந்தமாக வைத்துள்ளார்.
இந்நிறுவனம், துபாய், பெல்ஜியம், ஸ்பெயினின் பார்சிலோனா போன்ற பகுதிகளில் நடந்த கார் பந்தயங்களில் பங்கேற்றது. இதில் அவரது கார் ரேஸ் அணி, இரண்டு முறை மூன்றாவது இடத்தையும், ஒருமுறை 2-வது இடத்தையும் வென்றுள்ளது.
இந்நிலையில், இத்தாலியின் வெனிஸில் மறைந்த தொழிலதிபரும் கார் பந்தய வீரருமான பிலிப் சாரியோலின் நினைவாக, அஜித் குமாருக்கு 2025-ம் ஆண்டின் ‘ஜென்டில்மேன் டிரைவர் விருது’வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான கார் பந்தயத்தில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியதற்காக அவருக்கு எஸ்ஆர்ஓ மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த கவுரவத்தை வழங்கியுள்ளது.
இந்த விருதை பெறுவதற்காக அஜித்குமார் தனது குடும்பத்துடன் இத்தாலிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் மனைவி ஷாலினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
‘குட் பேட் அக்லி’ படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கிறார் அஜித். இப்படத்தின் அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.
ரொம்ப நாளா நாள்பட்ட ஒற்றைத் தலைவலியால அவதிப்படறீங்களா? பார்க்காத வைத்தியமில்ல, ஆனா இந்த தலைவலியை சரிபண்ணவே முடியலையா? இனிமேல் அந்த கவலையை விடுங்க. இந்த ஒரே ஒரு சூப்பர் மூலிகை பானம் மட்டும் போதும். உங்களோட தலைவலி எந்த பக்கம் இருந்துச்சுன்னே தெரியாம போயிடும்.
லைவலியைப் பொருத்தவரைக்கும் பல வகைகள் இருக்கின்றன. அதற்கான காரணங்களும் பல இருக்கின்றன. ஆனால் தலைவலியிலேயே பல வகைகள் உண்டு. அதில் ஒற்றைத் தலைவலி தான் இருப்பதிலேயே சிரமமான ஒன்று. ஏனென்றால் மற்ற தலைவலிகளைப் போல இல்லாமல் இது கொஞ்சம் கொடுமையானதாகவே இருக்கும். மற்ற தலைவலி வந்தால் சில மணி நேரங்களில் சரியாகிவிடும். ஆனால் ஒற்றைத் தலைவலி அப்படியல்ல. நாள்கணக்கில் இருக்கும். எந்த வேலையுமே செய்ய முடியாது.
நெற்றியின் பாதியில் இருந்து ஒருபக்கத்தில் மட்டும் வலிக்கும். அது அப்படியு காதுக்குப் பின்னால் கழுத்தின் பின்பக்கம் வரைக்கும் வலி இருக்கும். வலியைப் பொறுத்துக் கொள்ளவே முடியாது. நீண்ட நேரம் வரைக்கும் இந்த வலி இருக்கும். சில சமயங்களில் ஒரு நாளைத் தாண்டி இரண்டு நாள் வரைக்கும் கூட வலி இருக்கும். மற்ற தலைவலி என்றால் அந்த பகுதியில் தான் வலி இருக்கும். நெற்றி மட்டும் தலையில் வெடுக் வெடுக்கென்று கரண்ட் ஷாக் அடிப்பது போல இழுக்கும்.
சின்னதாக ஏதாவது சத்தம் கேட்பது போல இருந்தால் கூட எரிச்சல் உணர்வு அதிகமாக இருக்கும். ிலருக்கு ஒற்றைத் தலைவலி வந்து விட்டாலே குமட்டல் மற்றும் வாந்தி உள்ளிட்ட உணவுகளும் இருக்கும். குறைந்தது ஒரு நாள் முதல் இரண்டு நாள் வரைக்கும் இந்த வலி இருக்கும். அப்படிப்பட்ட கொடுமையான ஒற்றைத் தலைவலிக்கு தான் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு சூப்பர் பானம் ஒன்றை தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருள்கள்
இஞ்சி - 1 இன்ச் அளவு,
மிளகு - 10,
எலுமிச்சை பழம் - 1,
மஞ்சள் - அரை ஸ்பூன்,
தண்ணீர் - 300 மில்லி,
இந்த எளிமையான வீட்டில் இருக்கும் பொருள்களை மட்டும் வைத்தே ஒற்றைத் தலைவலியைக் குறைக்கலாம். தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் ஆரம்பத்தில் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தலாம்.
இந்த எளிமையான பானத்தைத் தயார் செய்து குடிப்பதன் மூலம் ஒற்றைத் தலைவலி மட்டுமல்ல, நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. இது ஜீரண ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. உடலின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதில சேர்க்கப்படும் மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது. மிளகில் உள்ள பைபரின் மற்றும் எலுமிச்சை பழத்தில் உள்ள வைட்டமின் சி ஆகியவை கல்லீரல் கழிவுகளைச் சுத்தம் செய்யும்.
மேற்கண்ட இத்தனை நன்மைகள் கொண்ட பானத்தைக் குடித்தால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஒற்றைத் தலைவலியை சரிசெய்வதோடு நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கும் மிகப்பெரிய அளவில் உதவுகிறது.
கனடாவில் பிரபல யோகட் பானமான யோப்லாயிட் யோப் Yoplait YOP தயாரிப்புகள் சிலவற்றில், பிளாஸ்டிக் துண்டுகள் கலந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், கனடிய உணவு ஆய்வு அமைப்பு திரும்ப் பெறும் உத்தரவினை பிறப்பித்துள்ளது.
பேக்கேஜ் கூறுகளில் உள்ள குறைபாட்டால் தயாரிப்பில் பிளாஸ்டிக் கலக்க வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த சுய விருப்ப அடிப்படையிலான மீளப் பெறல் மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
200 மில்லி லீற்றர் அளவு கொண்ட புளூபெரி, ஸ்ட்ரோபெரி, ஸ்ட்ரோபெரி–வாழை, பர்த்டே கேக், வனில்லா, வாழை, ராஸ்ப்பெரி, பீச், மந்தரின்,ட்ராபிக்கல், பிளாக்பெரி–ஸ்டார்ஃப்ரூட், லாக்டோஸ் ஃப்ரீ ஸ்ட்ரோபெரி–ராஸ்ப்பெரி, லாக்டோஸ் ஃப்ரீ மாம்பழம் போன்ற பானங்கள் இவ்வாறு மீளப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பான வகைகளினால் இதுவரையில் யாருக்கும் உடல் நலப் பிரச்சினைகள் எற்பட்டதாக தெரியவரவில்லை எனவும் எச்சரிக்கை அடிப்படையில் பானங்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் சில பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் உணவிற்கான செலவுகளை மேற்கொள்ள முடியாது திண்டாடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரின்ஸ் எட்வர்ட் தீவு பல்கலைக்கழகம் (UPEI) மாணவர்கள் வாழ்வாதாரச் செலவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக உணவு வங்கியை பயன்படுத்தும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் 60% வரை அதிகரித்துள்ளது.
2022ம் ஆண்டில் உணவு வங்கிகளின் உதவியை நாடிய மாணவர் எண்ணிக்கை 2,900 எனவும் 2024ம் ஆண்டில் இந்த எண்ணிக்க 4,600 ஆக உயர்வடைந்துள்ளது எனுவும் தெரிவிக்கப்படுகின்றது.
விலைவாசி உயர்வு, வாடகை, கட்டணங்கள், புத்தகங்கள், மின்சாரம், தொலைபேசி பில்கள் ஆகியவற்றின் செலவுகளை சமாளிக்க பலர் இலவச உணவு உதவியை நாடுகின்றனர்.
உணவு மட்டும் அல்ல. வாடகை, கட்டணம், புத்தகம், மின்சாரம் என பல செலவுகள் உள்ளன. பல மாணவர்கள் பிற செலவுகளுக்காக உணவை விட்டு விடுகின்றனர் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர். கனடா முழுவதும் 20 வீதமான மாணவர்கள் உணவு பாதுகாப்பின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
விமர்சித்தவர்கள் உங்கள் உதவிகளை நாடுவார்கள். தடைபட்ட பணிகளை முடிப்பீர்கள். தள்ளிப்போன சில காரியம் கைகூடும். வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். மனதில் இருந்த குழப்பம் விலகும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
ரிஷபம்
பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒரு விதமான ஆர்வமின்மை ஏற்படும். குழந்தைகள் இடத்தில் பொறுமை வேண்டும். நிறை குறைகளை பற்றி புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபார பணிகள் மந்தமாக நடைபெறும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிலும் விவேகத்தோடு செயல்படவும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
மிதுனம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் நிறைவு பெறும். வீடு வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நண்பர்களின் ஆதரவுகள் மேம்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். சமூக தொடர்பான புதிய கண்ணோட்டம் உருவாகும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கடகம்
தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்களிடத்தில் மதிப்புகள் உயரும். கால்நடைகள் மூலம் ஆதாயம் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த தடுமாற்றம் குறையும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். நம்பிக்கை பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
சிம்மம்
மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வியாபார பணிகளில் அனுகூலம் உண்டாகும். பிரபலமானவர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிற்றின்ப விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும். வியாபாரத்தில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனைவி விஷயங்களில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சிந்தனைகளில் கவனம் வேண்டும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம்
எதிலும் விவேகத்தோடு செயல்படுவீர்கள். பாகப்பிரிவினை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பெரியோர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சோதனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விருச்சிகம்
கணவன் மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் குறையும். தோற்றப் பொழிவுகள் அதிகரிக்கும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். வேலையாட்கள் இடத்தில் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். சில வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். முயற்சி சாதகமாகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி
தனுசு
தேக ஆரோக்கியம் பொழிவு கூடும். அலைபாயும் மனதினால் சில சங்கடங்கள் தோன்றும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். பொது பிரச்சனைகளில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகளில் பொறுமை வேண்டும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மகரம்
தனவருவாய் தேவைக்கு இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் ஆதரவான சூழல்கள் அமையும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்புகள் மேம்படும். மனதளவில் ஒருவிதமான தடுமாற்றங்கள் ஏற்படும். சிரமம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கும்பம்
எதிர்பார்த்த சில காரியங்கள் கைகூடும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கமிஷன் பணிகளில் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் உயரும். உடல் ஆரோக்கியப் பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
மனதில் இருந்த கவலைகள் குறையும். நெருக்கமானவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் ஏற்படும். வேலையாட்கள் பற்றிய புரிதல்கள் உருவாகும். உத்தியோகத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 8 ஆம் தேதி திங்கட்கிழமை 24.11.2025.
திதி
சுக்ல பக்ஷ சதுர்த்தி - Nov 23 07:25 PM – Nov 24 09:22 PM
சுக்ல பக்ஷ பஞ்சமி - Nov 24 09:22 PM – Nov 25 10:57 PM
நட்சத்திரம்
பூராடம் - Nov 23 07:27 PM – Nov 24 09:53 PM
உத்திராடம் - Nov 24 09:53 PM – Nov 25 11:57 PM
கரணம்
வனசை - Nov 23 07:25 PM – Nov 24 08:26 AM
பத்திரை - Nov 24 08:26 AM – Nov 24 09:22 PM
பவம் - Nov 24 09:22 PM – Nov 25 10:13 AM
யோகம்
சூலம் - Nov 23 12:08 PM – Nov 24 12:36 PM
கண்டம் - Nov 24 12:36 PM – Nov 25 12:49 PM
நல்ல நேரம்:
காலை : 11.43 முதல் 11,48 மணி வரை
மாலை : 04.34 முதல் 06.20 மணி வரை

























