Quote of the Day

பழமொழி: அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
sivam 80
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
·
Added article
·

இப்போ கூட கவர்ச்சி நடிகைகளில் பார்த்தால் பாவம் தோணுற நடிகைன்னா அது நம்ம குயிலி தான்.

குல்நார் என்கிற இயற்பெயர் கொண்ட குயிலி ஆரம்ப காலத்தில் ஸ்டார் ஹோட்டல்களில் இசைக்கு நடனமாடித்தான் வாழ்க்கை நடத்தி இருந்தார். அதைப் படித்ததினால் எனக்கு அப்படி தோணுச்சோன்னு தெரியல. குயிலி பூவிலங்கு படத்தில் நடிச்ச சில காலங்களில் அவரோட சட்டையில்லாத முதுகுப்பக்கப் படத்தை திரைச்சித்ரா அப்படிங்கிற பத்திரிக்கை வெளியிட்டது. அதனாலயான்னும் தெரியல. அல்லது அந்த இடுங்கிய கண்களான்னு தெரியல. குயிலியுடைய முகத்துல ஒரு சோகம் இருக்கும். எதுனாலயோ அவரிடம் ஒரு பரிதாபம் தோணும்.

பாலச்சந்தர் பொய்க்கால் குதிரையில் சிறிய ரோல் கொடுத்தாலும், கல்யாண அகதிகளில்நடித்தாலும் 'பூவிலங்கு' படம் ரிலீசான போது முதல் காட்சியே பார்த்ததும் படம் பிடிச்சிடுச்சு. முரளியோட துள்ளல் நடிப்பும், செந்தாமரையோட வில்லத்தனம், கல்லூரி, அழகான பாடல்கள் இதோட குயிலியும் பிடிச்சிருந்தது. ஆனா முரளிக்கு முன்னாடி குயிலி வயதான பெண் மாதிரியான தோற்றம் தந்தது நிச்சயம் அந்தப்படத்தோட கேமராமேன் தவறுன்னு தான் சொல்லணும். ஏனோ அதுக்கப்புறம் குயிலியை நாயகியா பின்னே அதிகம் படங்களில் காணவில்லை. அந்த நேரத்தில் குயிலிக்கு டூப் மாதிரியே மோகனப்ரியான்னு ஒரு நடிகை நடிச்சிட்டிருந்தாங்க.

நாயகன் படத்தில் பல ஆச்சர்ய திருப்பங்கள் நம்மை புருவம் உயர வைக்கும். அதில் ஒண்ணு தான் குயிலியோட நிலா அது வானத்து மேலே பாட்டு. யாருமே நினைச்சுப்பார்க்காத திருப்பம். ஒரு பாலச்சந்தர் நாயகி கவர்ச்சி நடனத்துக்கு இறங்கி வருவார்னு. அதுவும் அந்தப்பாட்டு எடுத்த சூழல் புதுசா இருந்தது. ராஜாவின் குரலும் கச்சும் கச்சும் கூட புதுசா இருந்தது.

அப்பவே முடிவாயிடுச்சி. கவர்ச்சி நடனம்னா குயிலி தான்னு. கட்டுக்கடங்காத காளையான முரளியோட கையில தன் தலையில வச்சிருக்கிற பூவால விலங்கு போட்டு இனிமா யாரையும் அடிக்க கை ஓங்கக்கூடாதுன்னு சொல்லி "போட்டேனே பூவிலங்கு. அன்பாலே நீ அடங்கு"ன்னு பாடின அதே பெண் தான் "போய்யா...என்னோடு மல்லுக்கட்ட வாய்யா"ன்னு வேதாளம் வந்து நிக்குதுன்னு ஆடும் சூழல் ஏற்பட்டது தமிழ் ரசிகர்களால் தான்னு சொன்னா மிகையில்லை.

மனோவோட மெஹபூபா மெஹபூபா குரலோடு ஷைலஜாவோட அழுத்தமான குரலில் கமலோட ஏரோபிக்ஸுகளுக்கிடையே குயிலி அசராம ஆடினதுக்கு குயிலியோட டான்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் தான் காரணம். அதோடு தூங்காதே தம்பி தூங்காதேயில் வானம் கீழே வந்தாலென்ன பாடலுக்கும் கமலோடு ஆடிய அனுபவமும் அவருக்கு இருந்தது வசதியாப்போச்சு. இந்த மூணு பாட்டுக்கப்புறம் நாலாவதா கமலோடு 'அடிச்சிடு கொட்டம் விடியற மட்டும்' அவ்வளவா எடுபடலை. குயிலி மேலே இருக்கும் பரிதாப உணர்ச்சியைத்தான் அது கூட்டியது.

சின்னப்பதாஸ் படத்துல 'பாக்கு வெத்தல வச்சுக்க..வச்சுக்க' பாட்டு தனி ஃப்ளேவர். (கார்த்திக்கோட) 'ஜவ்வாது சந்தனப்பூவு' அப்படிங்கிற மழைப்பாடல் அன்றைய மிட்நைட் மசாலா..சோலைக்குயில் படத்தில் முராரியோட இசையில் 'மலைநாட்டு மச்சானே' அசல் காட்டுவாசி காதல் பாடல். அது அச்சு அசலா இளையராஜா சில்க்குக்காக போட்ட 'புழையோரத்தில் பூந்தோணி எத்தியில்லா' என்கிற மலையாளப்பாட்டிலிருந்து எடுக்கப்பட்ட பேட்டர்ன். புதியபாதை படத்தில் (பார்த்திபனோடு) 'கண்ணடிச்சா கல்லெடுப்பேன் கருப்பு மூஞ்சிக்காரி' பாட்டும் குயிலியோட ஸ்பெஷல் தான்.

இந்த டான்ஸ் கூத்துகளுக்கிடையே 'உன்னை சொல்லிக்குற்றமில்லை' படத்தில் அமீர்ஜான் தன் நாயகிக்கு கொஞ்சம் நல்ல ரோலை தந்திருந்தார்னு சொல்லலாம்.

திடீர்னு பார்த்தா ஜோதிகா அம்மாவா ஒரு படத்துல வர்றாங்க குயிலி...அட....அந்த 'பூவிலங்கு' போட்டவங்களா இவங்க. நிறைய அம்மா ரோல்கள். அதன் பின் டிவி சீரியல்களில் ஒரு கலக்கு. அது வரை தனக்கிருந்த நடிப்புப்பசியையெல்லாம் டிவி சீரியல்களில் சாப்பிட்டு போக்கிக்கிட்டாங்கன்னு சொல்லலாம்.

விதவிதமான பாத்திரங்கள். விதவிதமான நடிப்பு. சீரியல்களில் நல்ல பெயரும் கிடைத்தது அவருக்கு. ஆனாலும் பெரியத்திரை அவரை நிராகரித்தது வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்.

பாலிவுட்டை சேர்ந்த ஸ்டண்ட் இயக்குனரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான குயிலி சிலகாலம் நடிப்பை விட்டு ஒதுங்கி இருக்கார்

  • 55
·
Added article
·

மலேசியா வாசுதேவன் பாடுவதை நிறுத்தியதற்கு இதுதான் காரணமா?.. ஆச்சரியம் ஆனால் அதுதான் உண்மை

ரஜினி நடித்த மனிதன் மனிதன் என்ற பாடல் ரஜினி என்ற அந்த உச்ச நட்சத்திரத்தையும் தாண்டி மலேசியா வாசுதேவனை நினைவுபடுத்துகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட வசீகரக்குரல் திடீரென நின்று போனது ஏன்? இவரது வெண்கலக் குரலில் தண்ணீ கருத்துருச்சி, ஆகாய கங்கை, ஆசை 100 வகை, கூடையிலே கருவாடு, பட்டு வண்ண சேலைக்காரி ஆகிய பாடல்கள் இன்றும் இனிப்பவை.

சந்திரபோஸ் இசையில் மனிதன் படத்தில் மனிதன் மனிதன் பாடல் ரெக்கார்டிங் ஆகி ஓடிக்கிட்டு இருக்கு. இது ரஜினிக்கே தெரியாது. இந்தப் பாட்டை நம்ம படத்துல வைத்தால் என்னன்னு கேட்கிறார் ரஜினி. அதன்பிறகு தான் அவருக்கே தெரிந்தது இது நம்ம படத்தோட பாட்டு தான் என்று. முதலில் இந்தப் பாடலைப் படத்தில் எங்கு வைப்பது என்று சிக்கல் வந்ததாம். அதன்பிறகு தான் டைட்டிலில் வைத்தார்களாம்.

தமிழ்சினிமாவில் மலேசியா வாசுதேவனின் குரல் மாறுபட்டது. குரலில் பாவங்களைக் கொண்டுவருவதில் ஆற்றல் மிக்கவர் தான் அவர். முதல் மரியாதை படத்தில் அவரது பூங்காற்று திரும்புமா என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். ஒரே வரியில் உங்களைப் பாட்டோடு கலக்கச் செய்து விடுவார் அந்தப் பாடகர். அவர் ஒரு பாடலைப் பாடி விட்டார் என்றால் அது சக்சஸ் தான்.

பாரதவிலாஸ் படத்தில் தான் மலேசியா வாசுதேவன் பாடகராக அறிமுகமானார். அதன்பிறகு வாய்ப்பு வரவே இல்லையாம். இளையராஜா சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி நாட்டுப்புறப் பாடல் சம்பந்தமாக ஒரு இசை ஆல்பம் பண்ணினாராம். அதில் மலேசியா வாசுதேவன் பாடியிருப்பார். 16 வயதினிலே படத்தில் இருந்து தான் அவர் ஹிட் ஆனார். ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற அந்தப் பாடல் உண்மையிலேயே சூப்பர்ஹிட். பட்டிக்காட்டுல எதுவுமே தெரியாத ஒரு அப்பாவிப் பயலின் உணர்ச்சிகளை குரலிலேயே கொடுத்து விடுகிறார் மலேசியா வாசுதேவன்.

எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் சம கால நண்பர்கள். கல்யாணராமன் படத்திலும் அப்பாவி, அறிவாளிக்குமான சிறுவித்தியாசத்தை மலேசியா வாசுதேவன் குரலில் கொண்டு வந்து அசத்தியிருப்பார். அதுதான் காதல் வந்திரிச்சி…பாடல். எதுக்கு வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கக்கூடிய குரல் அம்சம் கொண்டவர் தான் மலேசியா வாசுதேவன்.

சினிமாவிலும் வில்லத்தனத்தில் வெளுத்துக்கட்டினார். ஒரு கைதியின் டைரி படத்தில் இவரது வில்லத்தனத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. அவ்வளவு அருமையாக நடித்து இருப்பார். அந்த நக்கல், நய்யாண்டி, குறும்புத்தனம் எல்லாம் ரொம்பவே நம்மை ரசிக்க வைக்கும்.

நடிப்பாசையைத் தாண்டி சொந்தப்படம் எடுப்பதில் தான் அவர் சிக்கினார். இதில் தான் அவர் ஒரு இடத்துக்கு மேல் அவரால் பண்ண முடியவில்லை. குறிப்பிட்ட காலகட்டத்தில் அவர் படங்கள் இல்லாமல் இருந்தார். அதனால் தான் அவர் பாடுவதையே நிறுத்தி விட்டார்.

மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

  • 57
·
Added article
·

நடிகர் சசிகுமார் அவர்களின் பேட்டி ஒன்றை சமீபத்தில் பார்த்தேன்.

சொந்தமாக படம் எடுத்து நஷ்டப்பட்டு ஏகப்பட்ட கடன்களில் அகப்பட்டு இருக்கிறார்.

நண்பர்தான் அனைத்து வரவு செலவுகளும் அவரும் உயிரை மாய்த்துக்கொள்ள நடுக்காட்டில் தவிப்பது போல் தடுமாறி உள்ளார்.

முதல் படத்திலே தமிழ் திரையுலகை தன் திரைக்கதை புதுமையால் புரட்டிப்போட்டவர் எதிர்காலமே சூனியமாகி நின்றிருக்கிறார்.

பின் அயராத உழைப்பார் கடன்களை கொஞ்ச கொஞ்சமாக அடைத்து மீண்டு இருக்கிறார்.

அவரின் பேட்டியில் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால்,

"எனக்கே ஏற்பட்ட இக்கட்டிற்கும்,கடனுக்கு யார் காரணமும் இல்லை முழுக்க முழுக்க நானே காரணம்!கடன் வந்துவிட்டது யார் மேலேயும் பழி போட்டு தப்பிக்க கூடாது.முதலில் நமது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் பிறகு நம் மனம் சோர்ந்து விடாமல் இதில் இருந்து எப்படி மீளப்போறோம் என யோசிக்க வேண்டும்.நான் கடன்காரர்களிடம் வலிய போன் செய்து டைம் கேட்டு அடைத்தேன்"என பேட்டியில் சொல்கிறார்.

தனக்கு ஏற்படும் இன்னல்கள்,தடைகள்,கஷ்டங்கள் என எல்லாவற்றிற்கும் யார் மற்றவர்கள் மீது பழி போடுகிறார்களோ அவர்களால் அதை கடந்து வெற்றிப்பெற முடியாது.

பொதுவாக எனக்கு காதல் தோல்வி பாடல்கள் பிடிக்காது காரணம் அந்த பாடல்களில் வரிகள் எல்லாமே என்னை ஏமாற்றிவிட்டு போய்விட்டாள் என புலம்பலாகத்தான் இருக்கும்.

ஆனால்,அபூர்வ சகோதரர்கள் படத்தில்,"உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்"பாடல் மிகவும் பிடிப்பதற்கு காரணம்,

காதல் தோல்வி பாடல்களில் இந்த பாடல் மட்டும்தான்,"என் மேலதான் தவறு,எனக்கு அதிர்ஷ்டம் இல்லை"என காதலியை உயர்வாக சொல்லப்பட்டு இருக்கும்.

"ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம் மற்றவரை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்"என நாயகன் பாடுவதாக வாலி எழுதி இருப்பார்.

எப்போதெல்லாம் வாழ்வில் பின்னடைவை சந்திக்கிறீர்களோ,அப்போது உங்களின் வாழ்வில் பின்னடைவுக்கு யாரும் காரணம் இல்லை நாம் மட்டும் காரணம் என எப்போது எண்ண தொடங்கிறீர்களோ அப்போதே வாழ்க்கையில் வெற்றிப்பெற தொடங்கிறீர்கள் என அர்த்தம்.

- முகநூலில் வந்தது...

  • 57
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மனதளவில் இருந்த சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வர்த்தக பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். தடைப்பட்ட வேலைகளை முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். சுபகாரிய செலவுகள் உண்டாகும். பயணம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

ரிஷபம்

செயல்களில் ஒருவிதமான தாமதம் உண்டாகும். தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். தூர பயணங்களில் கவனம் வேண்டும். நிம்மதி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மிதுனம்

ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார ரீதியான அறிமுகத்தால் லாபம் மேம்படும். மனதிற்கு இதமான செய்திகள் கிடைக்கும். நவீன கருவிகள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். புத்திர வழியில் சுபச்செலவுகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வழக்குகளில் சாதகமான நிலை உண்டாகும். குடும்பத்தில் ஆதரவுகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

சிம்மம்

வரவுக்கு ஏற்ப செலவுகளும் இருக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பயணம் மூலம் வரவுகள் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

 

கன்னி

பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் குறையும். சுபகாரிய செயல்களில் தாமதம் உண்டாகும். வாகன பராமரிப்பு தொடர்பாக விரயம் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உழைப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

துலாம்

குடும்பத்தில் சுப காரிய முயற்சிகள் கைகூடும். சகோதர வழியில் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். புதிய பொருள்கள் மீது ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களால் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். நலம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

விருச்சிகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வேலையாட்களிடம் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

தனுசு

சில விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். வேலை ஆட்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். பணி சார்ந்த ரகசியங்களில் கவனம் வேண்டும். வழக்கு பணிகளில் அலைச்சல் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மகரம்

குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். வெளி உணவுகளை தவிர்க்கவும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவு பெருகும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவும். பெற்றோர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். சிக்கல் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

கும்பம்

வியாபாரத்தில் புதிய பாதைகள் புலப்படும். எதிர்பாராத வரவு வந்து சேரும். எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் சாமர்த்தியம் ஏற்படும். மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகும். கவலைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மீனம்

சமூக பணிகளில் மதிப்பும், மரியாதையும் உயரும். இழுபறியான சில வழக்குகள் முடிவுக்கு வரும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். பணிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

  • 131
·
Added a post
·

விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 5 ஆம் தேதி சனிக்கிழமை 20.12.2025.

இன்று காலை 07.54 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.

இன்று அதிகாலை 12.04 வரை கேட்டை. பின்னர் மூலம்.

இன்று மாலை 04.50 வரை கண்டம். பிறகு விருத்தி.

இன்று காலை 07.54 வரை நாகவம். பின்னர் இரவு 08.44 வரை கிமிஸ்துக்கினம். பிறகு பவம்.

இன்று அதிகாலை 12.04 வரை மரண யோகம். பின்னர் காலை 06.23 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=363&dpx=2&t=1766235528

 நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.00 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 150

Good Morning...

  • 144
·
Added article
·

இயக்குநர், நாயகன், நாயகி என்று பலரும் அறிமுகமாக இருக்கும் படங்களின் பாடல்களோ, டிரெய்லரோ வெளியானால், அவை சட்டென்று கவரும் வகையில் இருந்தால் தவிர ரசிகர்களின் ஆதரவு கிடைக்காது. அந்த ஆதரவை ‘ரெட் லேபிள்’ படத்தின் ‘மிளிரா’ என்கிற பாடல் இணையத்தில் பெற்றுள்ளது. மலையாளத்தில் 30 படங்களுக்கு மேல் இசையமைத்த கைலாஷ் மேனன் தமிழில் இசையமைத்துள்ள முதல் படம்.

ஒரு பொறியியல் கல்லூரியில் கதை நடக்கிறது. கல்லூரியின் மாணவர் தலைவராக இருக்கும் நாயகன் மீது விழும் கொலைப்பழியின் பின்னாலி ருக்கும் பிளாஷ்பேக் கதையை எழுதி யிருக்கிறார் பொன்.பார்த்திபன். கே.ஆர்.வினோத் இயக்கத்தில், ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் இப்படத்தைத் தயாரித்து நாயகனாக அறிமுகமாகிறார் லெனின். அவருக்கு ஜோடியாக மலையாளத்திலிருந்து அஸ்மின் அறிமுகமா கிறார். ‘மிளிரா’ பாடலில் அஸ்மின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

  • 414
·
Added article
·

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோ-பிக்கில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

உலகளவில் பிரபலமான கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக் கலைஞர் இவர்தான். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படமொன்றை உருவாக்க இருக்கிறார்கள். இதனை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோ-பிக்கை இயக்குநர் கெளதம் தின்னூரி இயக்கவுள்ளார். இவர் ‘ஜெர்சி’, ‘மல்லி ராவா’ மற்றும் ‘கிங்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். சாய் பல்லவியும் சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் அனைத்தும் முடிவானவுடன் முறையாக அறிவிக்கவுள்ளது படக்குழு. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான ‘தண்டேல்’ படத்தில் நாயகியாக நடித்தவர் சாய் பல்லவி. அந்த நட்பின் மூலம் எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோப்பிக்கிலும் நடிக்க அணுகியிருக்கிறார்கள்.

  • 419
·
Added a news
·

கனடாவின் மத்திய ஒன்டாரியோ மற்றும் வடமேற்கு கியுபெக் பகுதிகளில் கடும் பனிப்புயல் தாக்கம் காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒன்டாரியோவில் இந்த பனிப்புயல் வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் 30 முதல் 50 செ.மீ. வரை பனிப்பொழிவு பதிவாகக்கூடும். சில இடங்களில் இதைவிட அதிகமாகவும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

வடக்குத் திசையில் இருந்து வீசும் காற்று வேகம் 50–60 கிமீ/மணி வரை இருக்கும் என்றும், Lake Nipigon-க்கு தெற்கான பகுதிகளில் 70 கிமீ/மணி வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

பலத்த வடக்குக் காற்றும் கனமழை போன்ற பனிப்பொழிவும் சேர்ந்து, சில நேரங்களில் வீதிகளில் கடும் பனிமூட்டம் நிலவும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சாலைகள் மற்றும் நடைபாதைகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும், திடீரென பார்வைத் தூரம் மிகக் குறையக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவசியமற்ற பயணங்கள் மற்றும் வெளிப்புற செயல்பாடுகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து, அத்தியாவசிய சேவைகள் மற்றும் மின் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும்; அதற்காக முன் தயாராக இருக்க வேண்டுமென கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

  • 420
·
Added a post
·

* வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்து சீழ் வெளியேறி விடும்.

* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.

  • 421
  • 422
·
Added a post
·

இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் பல மூலிகைகள் புகழ்பெற்று விளங்குகிறது. இன்றளவும் மக்கள் மூலிகை மருத்துவத்தை நம்பத்தான் செய்கிறார்கள்.

நம் நலம் காக்கும் சில மூலிகைகள் இதோ…

துளசி:

  • துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து அருந்துவது தொற்றுநோய்களைத் தடுக்க உதவும், ஏனெனில் துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • ஒரு லிட்டர் நீரில் சுமார் இருபது துளசி இலைகளைப் போட்டு, கொதிக்க வைத்து, காய்ச்சி வடிகட்டிப் பருகுவது சிறந்த தீர்வாகும்.

முருங்கை இலை

  • முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம் ,சுண்ணாம்பு சத்து போன்றவை இருக்கின்றன.
  • இந்த இலைகளை நெய்யில் பொரித்து சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும்.
  • பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.

தண்ணீர் விட்டான் கிழங்கு :

  • இதன் வேரில் ஏறக்குறைய 100 கிழங்குகள் இருக்கும்
  • இக்கிழங்கை பாலில் வேக வைத்து அந்தப் பாலை பருகினால் உஷ்ணத்தால் உண்டான சுவையின்மை, உணவு செரியாமையினால் ஏற்படும் வயிற்றுப்போக்கு இவை அனைத்தும் சரியாகும்.
  • இக்கிழங்குச்சாற்றுடன் தேன் சேர்த்து சாப்பிட வயிற்றில் உண்டாகும் சூலை நோய் சரியாகும்.

திருநீற்றுப்பச்சிலை:

இந்த இலையின் சாற்றில் வசம்பை இழைத்து அந்த விழுதை முகத்தில் ஏற்படும் பருக்களுக்கு போட பருக்கள் குணமாகும்.

  • 435
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மறைமுக எதிர்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பலதர பட்ட சிந்தனைகளால் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். பிறரை நம்பி எந்த பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். வெளி இடங்களில் அமைதி காக்கவும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

ரிஷபம்

சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஏற்படும். பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடலில் இருந்த சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

மிதுனம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோக தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

கடகம்

எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புகள் அமையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். இளைய சகோதரர்கள் வழியில் இணக்கம் ஏற்படும். வழக்கு பிரச்சனைகள் ஓரளவு குறையும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்

 

சிம்மம்

விலகிச்சென்ற உறவுகள் தேடி வருவார்கள். அரசு வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மறதியால் அலைச்சல் உண்டாகும். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறுவதில் தாமதங்கள் உருவாகலாம். விமர்சன பேச்சுக்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

கன்னி

ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்யும் எண்ணம் உருவாகும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

துலாம்

பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். செயல்களில் தனித்திறமை வெளிப்படும். சிலர் நகை, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் உண்டான சங்கடம் தீரும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

விருச்சிகம்

பல வேலைகளை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று செயல்படுத்தவும். வியாபாரத்தில் விவேகத்துடன் நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்களில் கவனம் வேண்டும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

தனுசு

சிறு சிறு பணிகளிலும் அலைச்சல் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். வாகனத்தில் மிதவேகம் நல்லது. வியாபாரத்தில் லாபங்கள் முயற்சிக்கு ஏற்ப கிடைக்கும். அலுவலகத்தில் விமர்சன கருத்துக்களை தவிர்க்கவும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

மகரம்

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிற இன மக்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பொதுவாழ்வில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். முடிவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கும்பம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் உண்டாகும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் முயற்சிகள் சாதகமாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மீனம்

மனதளவில் இருந்த சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தடைப்பட்ட வேலைகளை முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். சுபகாரிய செலவுகள் உண்டாகும். ஆர்வம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்

  • 551
·
Added a post
·

விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 19.12.2025.

இன்று அதிகாலை 05.56 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.

இன்று முழுவதும் கேட்டை.

இன்று மாலை 04.31 வரை சூலம். பிறகு கண்டம்.

இன்று அதிகாலை 05.56 வரை சகுனி. பின்னர் மாலை 06.55 வரை சதுஷ் பாதம் . பிறகு நாகவம்.

இன்று காலை 06.23 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=362&dpx=2&t=1766127434

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 560

Good Morning...

  • 575
·
Added a post

முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது. பிஸ்தாவில், நல்ல கொழுப்புகள் மற்றும் ஃபைபர், மெக்னீசியம், செலினியம் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.

பிஸ்தா பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்களுக்கு தெளிவான பார்வையை தரும். மேலும் கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கும்.

பிஸ்தா பருப்பு உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்வதால் இதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

மற்ற பருப்பு வகைகளை விட பிஸ்தாவில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாகவே உள்ளது. கர்ப்ப காலத்தில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் பிஸ்தாவில் உள்ளது.

பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்தை சரி செய்து மலச்சிக்கல் பிரச்சனை வரவிடாமல் தடுக்கும். தினமும் மாலையில் சூடான பாலில் பிஸ்தா பருப்பை ஊற வைத்து சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

பிஸ்தா பருப்பு இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை கரைத்து ரத்தத்தை சுத்தமாக்கும்.

பிஸ்தாவில் மெக்னீசியம் மற்றும் அர்ஜினைனின் அளவு அதிகமாக இருப்பதால் இதய தமனிகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

  • 741
·
Added a post

தும்பைப்பூ அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. காணும் இடம் எங்கும் சாலையோரங்களில் மலர்ந்திருக்கும் வெண்ணிற தும்பை மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன

தும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது.

சிறிதளவு தும்பைப் பூக்களைப் பறித்து, நன்கு அலசிவிட்டு வெறும் வாயில் போட்டு மென்று தின்றால் இருமல், சளி தொல்லை உடனடியாக நீங்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்.

சிறிதளவு தும்பைப் பூக்களை எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து சாற்றினை வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் பனங்கற்கண்டு கலந்து குடித்தால் கடுமையான நீர்க்கோவை நீங்கும்

சிறிதளவு தும்பைப் பூ தேன், மிளகுத்தூள் சேர்த்து இருநாட்களுக்கு காலையும் மாலையும் சாப்பிட அடுக்குத் தும்மல், தொண்டைக்கட்டு நீங்கும்

தும்பைப்பூ, ஏலக்காய், அக்கரகாரம் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை தேனில் குழைத்து சிறிது சிறிதாக வாயில் போட்டு வைத்திருந்தால் குரல் கம்மல், தொண்டைக்கட்டு நீங்கும்

25 தும்பை பூக்களை,காய்ச்சிய பாலில் இட்டு, ஒரு மணி நேரம் ஊற வைத்து, குழந்தைகளுக்குக் குடிக்க கொடுத்தால் அவர்களின் தொண்டை பிரச்சனை நீங்கும்

ஒரு கைப்பிடி அளவு தும்பைப்பூவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 10 மிளகு, 100 கிராம் தேங்காய்த் துருவல், 2 பச்சை மிளகாய் எடுத்து அனைத்தையும் சிறிதளவு நெய் விட்டு வதக்கி அரைத்து தினமும் ஒருவேளை துவையலாகச் சாப்பிட்டு வந்தால் மார்பிலுள்ள சுபம் கரைந்து வெளியேறும். ஆஸ்துமா நோயும் கட்டுப்படும்

தேவையான அளவு தும்பைப் பூவையும், தும்பை இலையையும் சேகரித்து அரைத்து சிரங்கு மேலும் உடலில் அரிப்பு இருந்தால் உடல் முழுவதும் தடவிவிட்டு ஒரு மணி நேரம் ஊறவிடவேண்டும். பிறகு சுட்ட சீயக்காய் மற்றும் மஞ்சளை அரைத்து அதைத் தேய்த்துக் குளித்து வந்தால் சொறி, சிரங்கு குணமாகும்

கண் தொடர்புடைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கைப்பிடியளவு தும்பைப் பூவை சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து வதக்கி ஒரு டம்ளர் வீதம் எடுத்து தேக்கரண்டியளவு தேனும் சேர்த்து சாப்பிட்டு வர கண் நோய்கள் குணமடையும்

தலைபாரம், சீதளம் உள்ளவர்கள் தும்பைப்பூவுடன் குறைந்த அளவில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்

ஜலதோஷம், இருமலால் அவதிப்படுபவர்கள் தும்பைப்பூவை நீர்விட்டு கொதிக்க வைத்து, அதன் சாறை குடித்தால் பிரச்னை சரியாகும். தலைவலி, தலைபாரம் உள்ளவர்கள் தும்பைப்பூவை பசும்பால் விட்டு அரைத்து நெற்றியில் பூசினால் நிவாரணம் கிடைக்கும்

தீராத தலைவலி உள்ளவர்கள் தும்பைப்பூவை கசக்கி இரண்டு சொட்டு மூக்கில் வைத்து உள்ளே இழுத்தால் உடனடித் தீர்வு கிடைக்கும்.

சளியினால் மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருக்கும் நிலையிலும் தும்பைப்பூ, இலை, சமஅளவு எடுத்து கசக்கி அதில் சாறு எடுத்து 2 துளிகள் தினமும் இருவேளை மூக்கில் விட எளிதில் குணம் தெரியும்

கால் டீஸ் பூன் அளவு மிளகை பொன் வறுவலாக வறுத்து எடுத்து அத்துடன் ஒரு டீஸ்பூன் அளவு தும்பைப்பூவும், சிறிதுவெல்லமும் சேர்த்து லேகியம் போல செய்து தினம் இருவேளை சாப்பிட குளிர் ஜுரம், வாதஜுரம் குணமடையும்

காய்ச்சலுக்கும் தும்பைப்பூ நல்ல மருந்தாகிறது. தும்பைப்பூவுடன் சம அளவு மிளகு சேர்த்து மையாக அரைத்து சிறுசிறு உருண்டைகளாக்கி நிழலில் காய வைத்துக்கொள்ளுங்கள். நிலவேம்பு கஷாயத்தில் இந்த உருண்டையில் ஒன்றை எடுத்து கலந்து உள்ளுக்கு சாப்பிட்டால், காய்ச்சல் உடனே நிற்கும். இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் காலகட்டத்தில் மட்டும் உணவில் உப்பு, புளி, அசைவ உணவுகள் சேர்க்கக் கூடாது

  • 748
·
Added a post

அல்சர் போன்ற வயிற்று புண்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகும் தண்ணீர் விட்டான் கிழங்கு

தண்ணீர் விட்டான் கிழங்குகள் பல்வேறு நம் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பணப்பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. இது நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கும்.

இதற்கு சாத்தாவாரி, சதாவேரி, நீர்வாளி, நீர்விட்டான், வரிவரி, சதாமூலம், தண்ணீர் விட்டான், நாராயண முலி, சதாவேலி, சதமுலை, உதக மூலம், சீக்குவை, பறனை, பீருதந்தி என வேறு பல பெயர்களும் உள்ளன. இதன் தண்டு, வேர், இலை, கிழங்கு ஆகிய அனைத்துமே மருத்துவ குணம் கொண்டதாகும்.

தண்ணீர் விட்டான் கிழங்கை பயன்படுத்தினால் சிறுநீர் சம்மந்தமான பிரச்சனைகள் குணமாகும். நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.

ரத்தத்தை சுத்திகரித்து நல்ல தூக்கத்தை தரக் கூடியது. குடல் வலி, வயிற்றுப் போக்கு, பசியின்மை போன்ற அனைத்தையும் குணமாக்க கூடியது. இது வெள்ளை வெட்டு நோய் தொந்தரவுகளில் இருந்து நம்மை காக்கும். பித்தம், எலும்புருக்கி நோய், நாள் பட்ட காய்ச்சல் ஆகிய அனைத்துப் நோய்களையும் குணமாக்கும்.

இது உடல் உள்உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் புண்களை ஆற்றுகிறது. அல்சர் போன்ற வயிற்றுப் புண்களுக்கு தண்ணீர் விட்டான் கிழங்கு மிகச்சிறந்த மருந்து ஆகும்.

தண்ணீர் விட்டான் கிழங்கு வேர்த்தூளை, ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனைப் பசுவின் நெய்யோடு சேர்த்து நாள் ஒன்றுக்கு காலை, மாலை என இரு வேளைகள் உட்கொண்டு வந்தால் சோர்வு நீங்கி உடல் நன்கு பலம் பெறும்.

  • 750
·
Added a post

40 வயதில் மூளையில் கட்டி வந்திருப்பது மருத்துவர்கள் மூலம் ஆங்கில நாவலாசிரியரும் விமர்சகருமான ஆண்டனி பர்ஜஸ் தெரிந்து கொண்டார். அவருக்கு முன்னால் ஒரே ஒரு குளிர் காலம், ஒரே ஒரு வசந்த காலம் ,ஒரே ஒரு கோடை காலம் இருந்தது. இன்னும் மிச்சம் இருக்கும் ஒரு வருடத்தை எப்படி அர்த்தம் உள்ளதாக ஆக்குவது என்று நினைத்தார். இதுவரை

நாவல் எழுதி இருக்காத அவர் நாவல் எழுதத் தொடங்கினார். ஒரே ஆண்டில் அவசரமாக ஐந்து நாவல்கள் எழுதினார். டி எச் லாரன்ஸ் வாழ்நாள் முழுவதும் எழுதியதை ஒரே ஆண்டில் முடித்தார். அவரது மூளையில் இருந்த கட்டி மறையத் தொடங்கியது.

76 ஆண்டுகள் வரை வாழ்ந்த அவர் 70 நாவல்கள் எழுதி முடித்தார்.A clockwise orange உலகப் பிரசித்தி பெற்றது. மிகப்பெரிய விமர்சகராக விளங்கினார் .

இந்த உண்மை சம்பவம் சொல்லும் விஷயம் இதுதான் ..நம் கஷ்டங்களை நினைத்துக் கொண்டு கண்ணீர் விடுவதை காட்டிலும் கஷ்டங்களை மறந்து பிடித்த விஷயத்திலே கவனம் செலுத்துகின்ற போது நம் கஷ்டங்கள் மறைவதோடு நினைத்துப் பார்க்க முடியாத வாழ்க்கையை இறைவன் அருள்வான்..!!

  • 755
·
Added a post

நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற பொது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர் . நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார் . ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .

ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்..

கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள் “ஹிட்லர்” என்றார் . ஹிட்லருக்கு ஒரே வியப்பு…

ஹிட்லர் நேதாஜியிடம் ” எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது ” என்று கேட்டார்.

நேதாஜி அவர்கள் “இந்த உலகத்தில் சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது” என்றார்…!

(எத்தனைமுறை படித்தாலும் மறுபடியும் படிக்கத்தூண்டுகிற ஒரு சரித்திர நிகழ்வு

  • 756
·
Added a post

பூசணிப்பழம் சுவையான சமையலுக்கு மட்டுமல்ல, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.

பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள பீட்டா கரோட்டின் உடலில் வைட்டமின் ஏ-ஆக மாறி, கண் பார்வை திறனை பாதுகாக்கவும், சரும ஆரோக்கியத்தை பேணவும் உதவுகிறது.

பூசணியில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து, நாள்பட்ட நோய்கள் ஏற்படும் ஏற்படும் அபாயத்தை குறைக்கின்றன.

குறிப்பாக, இதில் உள்ள வைட்டமின் சி சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், பூசணி விதைகளில் மெக்னீசியம் மற்றும் ஜிங்க் சத்துக்கள் இருப்பதால், அது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எலும்புகளின் வலிமைக்கும் உதவுகிறது.

  • 765
·
Added a post

புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளரும் கோவைக்கொடியின் முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை.

கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை. கோவைக்காய் நீரிழிவு வியாதியை குறைக்கும் குணமுடையது.

நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும்.

வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.

  • 764
·
Added a post

1. நடக்கும் போது, ஒரு பக்கம் தலைய சாச்சி கிட்டு, செல்போன்ல பேசிகிட்டு நடக்க வேண்டாம். முடிந்தால் செல்போனை வீட்டுல வச்சிட்டு வாங்க. தலையை உயர்த்தி, வயிற்றின் தசைகளை மென்மையாக உள்ளிழுத்து, கைவீசம்மா கைவீசு என்று நடக்க வேண்டும்.

2. சரியான நடைப்பயிற்சியில் வியர்ப்பது இயல்பு. எனவே இறுக்கமான, பாலியெஸ்டர் ஆடைகளைத் தவிர்க்கவும். உடல் சோர்ந்து போகாமல், வியர்வையை உறிஞ்ச ஏதுவாக, தள‌ர்வான காட்டன் ஆடைகளை அணியவும்.

3. கால்களை மூடும் விதமாக, மென்மையாக பாதங்களை இறுக்காமல் ஷீ அணிந்து கொள்வது நல்லது.

4. மூளையில் ஏற்படும் செரோடினின் பகிர்ந்தளிப்பு, உடலில் என்சைம்களின் சுரப்பு…உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும். இதயத் துடிப்பு சீராகி, ப்ரோஸ்டோகிளான்டின்களின் சுரப்பு மூலம், மூட்டுகளுக்கு தேவையான லூப்ரிகேஷன் கிடைத்து, தசைகளின் இலகுவாகி, உடலுக்கு தேவையான சக்தி சேமித்து வைக்கப் பட்டுள்ள கார்போஹைட்ரேட்டிடமிருந்து எடுத்துக் கொள்ளப் படும்.

5. பிரிஸ்க் வாக் மூலம், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் அதிகரித்து, ரத்த ஓட்டம் மூலம் ஆக்சிஜன் சுழற்சி ஏற்பட்டு, சுமார் 6 கலோரிகள் செல்வழிக்கப் படிகிரது.

6. முதல் 5 நிமிடங்களில் உடலுக்கு உற்சாகம், 10 முதல் 20 நிமிடங்களில் உடல் வெப்பமடைதல், தோலுடன் சேர்ந்துள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து வெப்பம் வெளியேறி, உடல் வியர்க்க துவங்கும். சக்தியளிக்கும் ஹார்மோன்களின் சுரப்பு, சுவாசம் அதிகரிப்பு நடைபெறும்.

7. சுமார் 30 முதல் 45 நிமிடங்களில் உடல் லேசாகி, கொழுப்பு சத்து எரிந்து, இன்சுலின் சுரப்பு சீராகும்.

8. ஒரு மணி நேரத்தில், நமது நடையின் வேகத்தை குறைக்க, இதயத் துடிப்பு சீராகி, வியர்வைகள் அடங்கி, அதன் பின்னரும் ஒருமணி நேரம் கலோரிகள் செலவாகும் என்பது மருத்துவ ரீதியான உண்மை.

9. அதிக பருமனானவர்கள், இதயம் பலகீனமானவர்கள், ஆஸ்த்துமா பிரச்சினைகள் உள்ளவர்கள், எலும்பு மர்றும் மூட்டு நோய்களால் பாதிக்கப் பட்டவர்கள்….அதற்கேற்ப மருத்துவ ஆலோசனை பெர்று நடை பயிற்சியை தொடரலாம். இல்லையெனில் சிக்கல் தான்.

  • 766
·
Added a post

திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக்கூடாது. அதற்கு புராணத்தில் ஒரு கதையும் சொல்லப்பட்டுள்ளது அது:

மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்ற இரணியன் மேலும் வரம்பெறும் பொருட்டு மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி.

அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்து நாரதர், "திருவண்ணாமலை திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்!' என்று கூறி, காயத்ரி மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.

அதன்படி திருவண்ணாமலையில் காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி அவள் கிரிவலம் வருகையில், திடீரென்று மழை பொழியத் தொடங்கியது.

பூமியில் நடக்கும் அனைத்தையும் பூமாதேவி மிக்க பொறுமையுடன் தாங்குகிறாள்.அக்கினி மலையிலானது திருவண்ணாமலை. அப்படிப்பட்ட பூமாதேவியை குளிர்விக்க - சாந்தப்படுத்த - இப்படிப்பட்ட அமுத புஷ்ப மழை பொழியுமாம். இந்த மழைப்பொழிவு இறைத்தன்மையுடையது.

ஒரு கோடி மழைத் துளிகளுக்குப்பின் ஒரேயொரு அமுதத் துளி ஒன்று கீழே இறங்கும். இந்தத் துளி எங்கு விழுகிறதோ, அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர். பூமி குளிரும் .விவசாயம் செழித்து வளரும். அமைதி நிலவும். அது மட்டுமின்றி, அங்கு "அமுத புஷ்பமூலிகை' என்கிற அரிய வகை தாவரம் தோன்றும்.

மழைத் துளிகள் கனமாக விழவே, பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி. எனினும், விடாமல் காயத்ரி மந்திரம் ஜெபித்தாள். அப்போது, விழுந்த அமுதத் துளி பாறையில் பட்டு, அவள் வாயில் பட்டது. அதில் அணுவளவு அவளின் கர்ப்பப் பையையும் அடைந்தது. அதைக் கருவிலிருக்கும் பிரகலாதன் உண்டான். அந்தப் பாறையில் அமுத புஷ்ப மூலிகை தோன்றியது.

அப்போது கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள் இந்தக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம் சொல்லி, அந்த மூலிகையைப் பறித்த சித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் லீலாவதியிடம் ஆசி கூறி கொடுத்தார்கள். அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்க இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.

அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள் லீலாவதி. அதனால் அந்த மூலிகையின் சக்தி கருவை அடைந்தது. அதுதான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை பிரகலாதனுக்கு வழங்கியது.

மழையும் வெயிலும் சேர்ந்து வரும்போது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் துதிகளை ஜெபித்தால் நமது வீட்டில் செல்வமழை பொழியுமாம். மழை பொழியாவிட்டாலும் மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் நற்பலன்கள் ஏற்படும். தகுந்த குருவிடம் மந்திர உபதேசம் பெற்றே காயத்ரியை ஜெபிக்க வேண்டும் என்பது விதி.

அந்த அமுத துளி

யார் மேல விழும் ..??

கிரி வலம் வரும்போது

அமுத புஷ்ப மழைத் துளி

நம் மேல விழுமா ..?!

இனி கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால், முடிந்தவர்கள் மழைக்கு ஒதுங்கவேண்டாம் ..!!

  • 765
New People