Quote of the Day

பழமொழிகள்: அடக்கமே பெண்ணுக்கு அழகு.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
sivam
200
Senthuran 40
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
·
Added a post

விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 20 ஆம் தேதி திங்கட்கிழமை 6.10.2025

இன்று காலை 11.42 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.

இன்று காலை 06.06 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.

இன்று பிற்பகல் 02.06 வரை விருத்தி. பிறகு துருவம்.

இன்று அதிகாலை 12.33 வரை கரசை. பின்னர் காலை 11.42 வரை வணிசை. பின்பு இரவு 10.46 வரை பத்தரை. பிறகு பவம்.

இன்று காலை 06.01 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=284&dpx=2&t=1759759157

நல்ல நேரம்:

காலை : 06.15 முதல் 07.15 மணி வரை

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 05.00 முதல் 06.00 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 3
·
Added a post
·

எந்த ஊரிலும் இல்லாத அதிசயமாக, குஜராத்தில் உள்ள 'சந்தன்கி' பேரூரில் எந்த வீட்டிலும் பல ஆண்டுகளாக சமைப்பதே இல்லை.அதனால், 'தினமும் காய்கறிகளை வெட்டி, சப்பாத்தி சுட வேண்டியிருக்கிறதே!' என்று எந்தப் பெண்மணியும் அங்கலாய்ப்பதில்லை.

கூட்டாஞ்சோறு' உண்பது போல, ஊரில் உள்ளவர்கள் இணைந்து சமூகக் கூடத்தில் தினமும் இரண்டுவேளை ஒன்றாக உண்கிறார்கள். இது ஒரு நாள், இரண்டு நாள் நடக்கும் நிகழ்வல்ல; 365 நாள்களிலும் அந்த ஊர் மக்களுக்கு உணவு சமூகக் கூடத்தில்தான்!இந்த வழக்கம், சமூகப் பிணைப்பை, பரஸ்பர நட்பை வளர்க்கிறது

. உணவுச் செலவு ஒருவருக்கு மாதம் இரண்டாகிறதாம்.ஊரில் உள்ள குடும்பத்தாருக்காக சமூகக் கூடத்தில் ஊர்க்கார்கள் குழுக்களாகப் பிரிந்து, ஒவ்வொரு நாள் ஒரு குழு சமைப்பார்கள்' என்றுதானே நினைக்கத் தோன்றும். அதுதான் இல்லை! தொழில்முறை சமையல்காரர்களால்தான் தினசரி உணவு தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது.

தனிக் குடும்பங்களும், திருமணமாகாத வாழ்க்கை முறையும் ஆதிக்கம் செலுத்தும் யந்திரமயமான வாழ்க்கை முறைக்கு மாறாக, 'சந்தன்கி' பேரூர் 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற சமூக உணர்வை நிலைநாட்டுகிறது.

சந்தன்கி'யில், வசித்து வந்த இளைய தலைமுறையினர் வேலை, வணிகம் காரணமாக நகரங்களுக்குச் சென்றுவிட்டாலும், அவர்களது வயதான பெற்றோர் 'சந்தன்கி'யை விட்டுச் செல்ல விரும்பவில்லை. அதனால் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்க, வீட்டில் சமையல் என்பது பெரிய சுமையானது.

எனவே முதியவர்களும், அவர்களது வாரிசுகளும் இணைந்து எடுத்த முடிவுதான் 'சமூக சமையல் கூடம்,இந்தக் கூட்டு முயற்சியின் முன்னோடியும், 'சந்தன்கி' ஊராட்சித் தலைவருமான பூனம்பாய் படேல் சொல்கிறார்:

நியூயார்க்கில் 20 ஆண்டுகள் வசித்த நான், 'சந்தன்கி' திரும்பிய பிறகு, இளைய தலைமுறையினர் வீட்டில் இல்லாதச் சூழ்நிலையில், அங்குள்ள முதியவர்களுக்கு அன்றாடப் பணிகள், குறிப்பாக சமையல் வேலை சவாலாக மாறி, அவர்கள் சிரமப்படுவதைக் கண்டேன்.

முதியவர்களுடன் இளைய தலைமுறையினர் சேர்ந்து வசிக்காத சூழ்நிலையில், ஊர் மக்கள் தொகை 1,100 இலிருந்து 500 ஆகக் குறைந்துவிட்டது.

சமையல் வேலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் விரும்பினர்.சமையல் கூடம் முதலில் கொட்டகை போன்ற இடத்தில் தொடங்கப்பட்டாலும், ஆண்டுகள் செல்ல செல்ல அதன் தரமும் உயர்த்தப்பட்டது.

சூரிய சக்தியில் இயங்கும் குளிரூட்டப்பட்ட மண்டபத்தில் உணவு பரிமாறப்படுகிறது. சமூக சமையல் கூடம் என்பதையும் தாண்டி மக்கள் கூடும் சமூக மனமகிழ் மன்றமாக மாறியுள்ளது

. இப்போது 'சந்தன்கி' ஒருவருக்காக ஒருவர் வாழும் கிராமமாக மாறிவிட்டது. வீட்டில் முதியோர் தனிமையில் இருப்பதைக் குறைத்துள்ளது.

சமூக சமையல் கூடத்தின் நன்மைகள் தெளிவாகத் தெரிந்தவுடன், 'சந்தன்கி' ஊர் மக்கள் அதை ஏற்றுக்கொண்டனர். 'நாளை என்ன சமைக்கலாம்?' என்று முதியவர்கள் உணவு சமைப்பது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்பதையும் உறுதி செய்துள்ளது.

சமூக சமையல் கூடம் ஊருக்கு வெளியில் இருப்பதனால், வீட்டிலிருந்து நடந்து செல்ல வேண்டும். அது முதியோருக்கு நடைப்பயிற்சியாகவும் அமைந்து விடுகிறது. ஆக, 'சந்தன்கி'யின் சமூக சமையல் கூடத்தின் வெற்றி, இதர ஊர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது'' என்கிறார் பூனம்பாய் படேல். இதனைக் கேட்ட வலைத்தளவாசிகள் அருமையான யோசனையாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.

உண்மையில் மிகவும் பாராட்டப்பட வேண்டிய திட்டம். நீங்கள் இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

  • 6
·
Added a post
·

மரணித்து போன ஒருவன் தன் சவப்பெட்டியினுள் எழுந்து உட்கார்ந்து பார்க்க ஆசைப்பட்டான்.

கடவுள் அவன் காதினுள் சொன்னார் 'அப்படியே ஆகட்டும்'.. அவன் மெல்ல எழுந்து உட்கார்ந்தான் ஆனால் யாரும் அவனை அறியவில்லை.

அவனது தாயை நெருங்கி அமர்ந்தான். அவள் அழுது ஓய்ந்திருந்தாள்.. அருகில் இருந்த சின்ன மகளிடம் அடுத்த ஏற்பாடுகள் பற்றி கேட்டுக் கொண்டிருந்தாள். அவளைக் கடந்து தன் தந்தையின் முன் போய்நின்றான்.. அவர் கண்களில் கண்ணீரோடு சாய்ந்திருந்தார். அவர் அழுது பார்த்திராத அவனும் சேர்ந்தே அழுதான். ஆனால் யாருக்கும் கேட்கவில்லை.

ஜன்னலருகே அவன் மூத்த தமயன் எதையோ வெறித்தபடி நின்றிருக்க, அவன் பக்கம் போய் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.. அண்ணன் கண்ணிலும் கண்ணீர்த் துளிகள் காணச் சகியாமல் கலைந்து போனான்.

அடுத்த அறை வாசலில் தான் அவள் சரிந்து கிடந்தாள். அவள் தான் அவனது இல்லாள். இதயமே இழந்து விட்ட வலி அவள் கண்களில் ஒளியற்ற விழியில் வெறித்த பார்வையொன்றே மிஞ்சியிருந்தது.

அடுத்த படியாக அவனை பார்க்கிறான் 'ஓ.. அவன் அவனே தான் ஐந்து வருடங்களுக்கு முன்னால் அவனை விட்டு பிரிந்து போன அவனது நண்பன்' அவன் விழிகளில் விரக்தி அழுதழுதே அரண்டு போயிருந்தான்.

சுற்றம் சொந்தம் என எல்லோரும் திரண்டிருக்க இவனுக்கு ஏதோ உறைத்தது. இரண்டு வாரங்களுக்கு முன் அப்பாவிற்கு கண்ணாடி வாங்கவும், அம்மாவிற்கு அல்சர் மருந்து வாங்கவும் காசில்லை எனக் கடிந்து கொண்டது.

அண்ணியின் பிரசவத்திற்கு அண்ணன் கேட்ட பத்தாயிரம் ரூபாய்க்கு இவன் படுத்தி விட்ட பாடு படம் போல ஓடியது. மனைவிக்கு மல்லிகையும் அல்வாவும் வாங்கி கொடுத்தே வருடங்கள் ஆகிவிட்டது என்று நினைவிற்கு வந்தது. பள்ளிபருவத்திலே இருந்து ஒன்றாய் படித்தவனின் ஒற்றை வார்த்தையை நம்பாமல் போனதன் தார்பரியமும் நம்பியிருக்கலாம் என்ற தற்பரிதாபமும் வாட்டி வதைத்தது.

இருந்தும் என்ன பயன் எல்லாம் தான் முடிந்தாகிவிட்டதே. கடவுளின் குரல் மீண்டும் ஒலித்தது. 'இனி கிடைக்காதென்று நினைத்து வாழ வேண்டிய வாழ்க்கையை இது கிடைக்காதா என்று வாழ்ந்து வீணடித்து விட்டு வருந்தி என்ன பயன்... வந்து படு பெட்டியில்' என. இதோ நான் மீண்டும் படுத்திருக்கிறேன் என் சவப்பெட்டியில்

எல்லோரும் கூக்குரல் இட்டு அழுவது எனக்கு மட்டும் என் இரங்கலாக கேட்கவில்லை பெரும் இரைச்சலாக கேட்கிறது. நான் சேமித்த அந்த பணம் எனக்காக வருந்தவேயில்லை அது அடுத்த எசமானைத் தேடிக்கொண்டிருக்கிறது.

வாழும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழாமல் இருக்கும் அனைவருக்கும் இக்கதை ஒரு பெரிய பாடமாகும். மாறுங்கள்... நிச்சயம் மாறிவிடுங்கள். பணம் அவசியம் தேவைதான். ஆனால், பணம், பணம் என வாழும் (வாழ வேண்டிய) வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே.

  • 9

இறைவன்தாள் பணிந்து இன்றைய நாளை இனிய நாளாக மாற்றிடுவோம்.

  • 14

Good Morning...

எந்த நேரத்தில் எந்த வேலையைச் செய்ய வேண்டுமோ அந்த வேலையை அப்போது முடித்திடவேண்டும்.

முடித்தால் நீங்கள் வெற்றியின் முதல்படியில் நிற்கமுடியும்.

பாராட்டுகள் குவியும்.

  • 14
  • 180
  • 1

Good Morning

  • 180
·
Added a post
·

காலை உணவு நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் நாம் என்ன, எப்படி சாப்பிடுகிறோம் என்பது நாள் முழுவதும் நமது உடல்நலம், ஆற்றல் மற்றும் செரிமானத்தை பாதிக்கிறது. குறிப்பாக, காலை உணவு ஆரோக்கியமான செரிமான அமைப்பைப் பராமரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், நாள் முழுவதும் ஆற்றல் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது.

பலர் அதிகாலையில் தவறான உணவுகளை சாப்பிடுவதால் வாயு, அஜீரணம் அல்லது அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். எனவே, வாயு உருவாவதைத் தடுக்க வெறும் வயிற்றில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

வெதுவெதுப்பான நீர் அல்லது எலுமிச்சை நீர்: காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனுடன் சிறிது எலுமிச்சையைச் சேர்ப்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. இது செரிமான அமைப்பை இலகுவாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது, இது நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது.

ஓட்ஸ் அல்லது கஞ்சி: வெறும் வயிற்றில் எண்ணெய் அல்லது கனமான உணவுகளை சாப்பிடுவது வாயுவை ஏற்படுத்தும். ஓட்ஸ் அல்லது கஞ்சி ஒரு நல்ல வழி. அவை நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் மெதுவாக ஜீரணமாகும், இது உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் அமிலத்தன்மை அல்லது வீக்கத்தைத் தடுக்கிறது.

ஓட்ஸ் அல்லது கஞ்சி: வெறும் வயிற்றில் எண்ணெய் அல்லது கனமான உணவுகளை சாப்பிடுவது வாயுவை ஏற்படுத்தும். ஓட்ஸ் அல்லது கஞ்சி ஒரு நல்ல வழி. அவை நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் மெதுவாக ஜீரணமாகும், இது உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் அமிலத்தன்மை அல்லது வீக்கத்தைத் தடுக்கிறது.

இளநீர்: காலையில் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க இளநீர் சிறந்த வழி. இது உடனடியாக உடலை நீரேற்றம் செய்கிறது, எலக்ட்ரோலைட்டுகளை நிரப்புகிறது மற்றும் வாயு அல்லது அமில தன்மையைக் குறைக்கிறது.

  • 296

அன்பின் வழியில் நடைபோடுவோம்.

என்றும் மாறா அன்பினைத் தேடுவோம்.

  • 291
  • 294
·
Added article
·

நடிகர் ரஜினிகாந்த் தனது 1 வார கால ஆன்மிக சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார். மிகவும் எளிய தோற்றத்துடன் தேக்குமர இலை தட்டில் அவர் சிற்றுண்டி அருந்தும் ஃபோட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

கூலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அவர் ஒரு வார காலத்திற்கு ஆன்மிக சுற்றுப் பயணத்தை தொடங்கியிருக்கிறார்.

தற்போது ரஜினிகாந்த் சம்பந்தப்படாத காட்சிகளை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் படமாக்கி வருகிறார். இந்நிலையில் ஆன்மிக சுற்று பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு உத்ரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷிற்கு சென்றடைந்தார்.

  • 301
·
Added a news
·

கனடாவின் மொன்றியல் நகரில் உள்ள பிளாட்டோ பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு மதுபானசாலை வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் இரு ஆண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள மொன்ட்–ரொயல் அவென்யூ மற்றும் லவல் அவென்யூ சந்திப்பில் உள்ள எம்.ஆர். 250 பார் லொங் பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது இரண்டு ஆண்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர் என தெரிவித்துள்ளனர். இது ஒரு கொலைக்குப் பிறகு நடந்த தற்கொலை சம்பவம் என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது,” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் 40 வயதுடையவர் எனவும் தற்கொலை செய்து கொண்டவர் 30 வயதுடையவர் என கூறப்பட்டுள்ளது. இந்த துயரமான சம்பவத்தின் பின்னணிக் காரணம் இதுவரை வெளிவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • 315
·
Added a post
·

ஜப்பானில் நடந்த அதிசயம்!

ஒரு ஜப்பானிய கணவன், சிறிய சண்டைக்குப் பிறகு மனைவியிடம் பேசாமல் 20 ஆண்டுகள் கழித்தார

அந்த காலத்தில் கூட, இருவரும் சேர்ந்து 3 குழந்தைகளை வளர்த்தார்கள், ஆனால் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

20 ஆண்டுகள் கழித்து, மனைவி மன்னிப்பு கேட்டபோது தான் கணவன் மீண்டும் பேச தொடங்கினார்.

சண்டைகள் எவ்வளவு இருந்தாலும், 20 வருட மௌனம் சாதாரண விஷயம் அல்ல!

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் – இது பாசமா அல்லது பிடிவாதமா?

  • 323

முகநூலில் கூட மூதாளர்களை

உதறிப் போகிறது உலகம்

அவர்களின் ஏக்கம் அன்பின் தேடுதல்

என்று உணராமல்…..!

மூதாளர்களை கொண்டாடுங்கள்

அவர்களுக்கு பொன் பொருள் கொடுக்க வேண்டாம்

நலமா நீங்க என்ற ஒற்றை சொல் போதும்

அத்தனை நோய்க்கும் அது

ஒன்றே மருத்துவம் பார்க்கும்

கடவுளின் பார்வை உங்களை நோக்கும்

  • 321
  • 321

மலர்களும் முட்களும் நிறைந்த பாதை என்றாலும் உங்களோடு புன்னகையையும் நம்பிக்கையையும் கொண்டு சென்றால் தடைகளைக்கடந்து நிலை கொள்ளலாம்.

மலர் வனம் எதிர்கொள்ளும்.

மானுடம் எப்போதும் வெல்லும்.

  • 322
·
Added a post
·

கம்பர் ஒரு முறை சோழ மன்னனைப் புத்தியில்லதாவன் என்று சொல்லியதாக சில புலவர்கள் மன்னரிடம் புகார் தெரிவித்தனர். மன்னன் கடும் கோபம் கொண்டான். உடனே கம்பரைக் கூப்பிட்டு விசாரித்தார்.

அப்போது கம்பர்

"புத்தியில்லாதாவர் என்று சொன்னது உண்மைதான். ஏன் மதியில்லாதவர் என்று கூட சொல்லுவேன்" என்றாராம். உண்மையைக் கூற கம்பன் அஞ்சமாட்டான் என்றும் கூறி சிரித்தார்.

மன்னனின் முகம் கடும் சினத்தால் சிவந்தது. உடனே கம்பர் "மன்னர் புத்தியில் ஆதவர். அதாவது அறிவில் சூரியன், அதுபோல மதியிலும் ஆதவர் " என்று விளக்கமளித்தார் கம்பர்.

  • 328
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மனதளவில் உற்சாகம் பிறக்கும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். பூமி விருத்திக்கான சூழல்கள் ஏற்படும். மற்றவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். சமூக பணிகளில் மதிப்புகள் உயரும். கவலை மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

ரிஷபம்

வியாபாரத்தில் இருந்த மந்த நிலை குறையும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கனிவான பேச்சுகள் ஆதரவை மேம்படுத்தும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சில நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மிதுனம்

தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். இழுபறியான சில பணிகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மகான்களின் சந்திப்புகள் சிலருக்கு ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமை வேண்டும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

நிறை குறைகளை பற்றி புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபார பணிகள் மந்தமாக நடைபெறும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிலும் விவேகத்தோடு செயல்படவும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். பணி சார்ந்த அவசர முடிவுகளை தவிர்க்கவும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

சிம்மம்

திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மனதளவில் இருந்த தடுமாற்றங்கள் விலகும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். சுப காரியங்கள் கைகூடும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

கன்னி

எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்த பணிகளில் லாபம் மேம்படும். முயற்சிக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். அச்சம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு

 

துலாம்

முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். குழந்தைகளின் உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். வியாபார இடமாற்ற முயற்சிகள் கைகூடும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். புதுவிதமான கனவுகள் உருவாகும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

விருச்சிகம்

நினைத்த காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். உறவுகளிடத்தில் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த முயற்சிகளை கைகூடும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வாகன வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் உயரும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

தனுசு

உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு விஷயங்களில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். பழைய பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.  

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மகரம்

மனதளவில் இருந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உருவாகும். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கும்பம்

மனதளவில் சில தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். கருத்துகளுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விவேகமான செயல்பாடுகள் மதிப்பினை உருவாக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

மீனம்

நினைத்த பணிகளில் தாமதம் உண்டாகும். சகோதரர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் சிலருக்கு ஏற்படும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல்கள் அமையும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

  • 380
·
Added a post
·

விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 5.10.2025

இன்று பிற்பகல் 01.24 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

இன்று காலை 06.58 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.

இன்று மாலை 04.30 வரை கண்டம். பிறகு விருத்தி.

இன்று அதிகாலை 02.01 வரை கௌலவம். பிறகு பிற்பகல் 01.24 வரை தைத்தூலம். பின்னர் கரசை.

இன்று காலை 06.01 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=283&dpx=2&t=1759655654

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 387
·
Added a post
·

தாகம் எடுத்த ஒரு மனிதன் ஒரு கிணற்றுக்குச் சென்றான்,

அங்கு ஒரு இளம் பெண் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தாள்.

அந்த மனிதன் அந்தப் பெண்ணிடம் தாகத்துக்கு தண்ணீர் கேட்க அந்தப் பெண் மகிழ்ச்சியுடன் அவனுக்குத் தண்ணீர் கொடுத்தாள்.

தண்ணீர் குடித்த பிறகு, அந்த மனிதன் அந்தப் பெண்ணிடம், பெண்களின் குணம் எந்த மாதிரியானது என்பது பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?

என்று கேட்டான்.

இதைச் சொன்னதும், அந்தப் பெண் சத்தமாக, "என்னைக் காப்பாற்று... என்னைக் காப்பாற்று..." என்று கத்த ஆரம்பித்தாள். அவளுடைய குரலைக் கேட்டதும், கிராம மக்கள் கிணற்றை நோக்கி ஓடத் தொடங்கினர். அந்த மனிதன், "நீ ஏன் இப்படிச் செய்கிறாய்?" என்று கேட்டான்.

நான் இப்படி செய்தால் " கிராம மக்கள் வந்து உன்னை நன்றாக மயக்கம் அடையும் வரை அடித்துப் போடுவார்கள் என்று கூறினாள்.

இதைக் கேட்ட அந்த நபர், "என்னை மன்னியுங்கள், நீ ஒரு நல்ல, மரியாதைக்குரிய பெண் என்று நினைத்தேன்" என்றார். அதற்குள் கிராம மக்கள் அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அந்தப் பெண் கிணற்றுக்கு அருகில் வைத்திருந்த பானையிலிருந்து தண்ணீரை முழுவதுமாக அவள் உடலில் ஊற்றி, அவள் உடலை முழுவதுமாக நனைத்தாள்.

இதற்கிடையில், கிராம மக்களும் கிணற்றுக்கு அருகில் சென்றனர். கிராம மக்கள் அந்தப் பெண்ணிடம், "என்ன நடந்தது?" என்று கேட்டனர்.

அந்தப் பெண், "நான் கிணற்றில் விழுந்தேன், இந்த நல்ல மனிதர் என்னைக் காப்பாற்றினார்" இந்த மனிதன் இங்கே இல்லையென்றால், நான் இன்று இறந்திருப்பேன்.

கிராம மக்கள் அந்த மனிதனை மிகவும் பாராட்டி, அவரைத் தங்கள் தோள்களில் தூக்கி பாராட்டிbஅவரை மிகவும் கௌரவித்தனர், வெகுமதிகளையும் அளித்தனர்.

கிராமவாசிகள் வெளியேறியதும், அந்தப் பெண் அந்த மனிதனிடம், "இப்போது பெண்களின் பெண்மையின் தன்மை உங்களுக்குப் புரிகிறதா???

நீங்கள் ஒரு பெண்ணுக்கு வலியைக் கொடுத்து அவளைத் தொந்தரவு செய்தால், அவள் உங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துவிடுவாள், நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அவள் உங்களை மரணத்தின் தருவாயில் இருந்தும் காப்பாற்றுவாள்" என்று சொல்லி முடித்தாள்.

  • 386
  • 388
·
Added article
·

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவின் காதல் பயணம் ரீல் வாழ்க்கையில் தொடங்கி ரியல் வாழ்க்கையை எட்டியுள்ளது. இருவரும் முதன்முறையாக கீதா கோவிந்தம் படத்தில் ஜோடியாக நடித்தனர். இப்படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பரசுராம் இயக்கிய இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் போது தான் இருவர் இடையே காதல் துளிர்விட ஆரம்பித்தது. இதையடுத்து 2019ல் வெளியான 'டியர் காம்ரேட்' படத்தில் ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்தனர். அப்படத்திற்கு பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டதால், இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவின.

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் தங்கள் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அக்டோபர் 3ந் தேதி அன்று குடும்பத்தினர் முன்னிலையில் இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. திரைத்துறையில் பெரும் வெற்றி பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஜோடி, கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார். இவர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 50 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.

நேஷனல் க்ரஷ்' ராஷ்மிகா மந்தனா, தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.66 கோடி. ஒரு படத்திற்கு ரூ.4 முதல் ரூ.8 கோடி வரை சம்பளம் பெறுகிறார். ராஷ்மிகாவுக்கு கர்நாடகா, மும்பை, பெங்களூரு, கோவா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் சொத்துக்கள் உள்ளன. விராஜ்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் மதிப்பு சுமார் ரூ.8 கோடி. ராஷ்மிகாவிடம் ரூ.1.64 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஆடி க்யூ3, ரூ.50 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் மற்றும் டொயோட்டா இன்னோவா கார்கள் உள்ளன.

விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.50 முதல் ரூ.70 கோடி. அர்ஜுன் ரெட்டி வெற்றிக்குப் பிறகு, ஒரு படத்திற்கு ரூ.10 முதல் ரூ.11 கோடி வரை சம்பளம் பெறுகிறார். பிராண்டுகளுக்கு ரூ.1 கோடி வசூலிக்கிறார். விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள ஆடம்பர மாளிகையில் வசிக்கிறார். இவருக்கு சொந்தமாக ஒரு தனியார் ஜெட் விமானமும் உள்ளது. 'ரவுடி வேர்' என்ற ஃபேஷன் பிராண்டையும் நடத்தி வருகிறார். விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.136 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. திரைப்படங்கள், பிராண்ட் ஒப்பந்தங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் பிற தொழில்கள் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர்.

  • 525
·
Added a news
·

உலகில் முதன் முறயைாக கனடாவில் வித்தியாசமான கழிப்பறையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மனித கழிவுகளை முழுமையான இயற்கை முறையில் உரமாக மாற்றக்கூடிய தொழில்நுட்பத்துடன் இந்த கழிப்பறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் தாவரவியல் பூங்காவில் இந்த நவீன கழிப்பறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பூங்காக்கள் மற்றும் தொலைதூர இடங்களில் இந்த கழிப்பறையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கழிப்பறையில் திட மற்றும் திரவக் கழிவுகள் வேறுபடுத்தப்பட்டு உரமாக மாற்றும் செயன்முறை முன்னெடுக்கப்படுகின்றது. களான்களின் வேர்களைக் கொண்டு இந்த மனித கழிவுகளை உரமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயன்முறைக்கு மின்சாரம், நீர் அல்லது வெறும் இரசாயனப் பொருட்கள் எதுவும் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • 526
·
Added a news
·

இங்கிலாந்து திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பான கேன்டர்பரி பேராயர் பதவி, வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

1,400 ஆண்டுகளில் இந்த பதவிக்கு தகுதி பெற்ற முதல் பெண் 63 வயதான பிஷப் சாரா முலாலே (Dame Sarah Mullally) ஆவார்.

பிரிட்டிஷ் மன்னருக்கு முடிசூட்டுவது போன்ற முக்கியமான கடமைகளைச் செய்யும் கேன்டர்பரி பேராயராக ஒரு பெண் நியமிக்கப்பட்டது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகக் கருதப்படுகிறது. கேன்டர்பரி பேராயர் உலகளாவிய ஆங்கிலிகன் கத்தோலிக்கர்களின் ஆன்மீகத் தலைவராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • 528
New People