நல்லெண்ணெய் ! எள் , நெய் என்ற சொற்களின் கூட்டாக பிறந்தது , எண்ணெய் . எள் என்ற தானியத்தில் இருந்து பிரித்து எடுக்கும் நெய்யை குறிப்பது தான் இது . ஆனால் , எண்ணெய் என்பது எல்லா வகை தாவர எண்ணெய்களையும் குறிக்கும் பொதுச்சொல் ஆகிவிட்டது . எள் தானியத்தில் எடுக்கப்படுவதை குறிக்க , ' நல்லெண்ணெய் ' என்ற சொல் பயன்படுகிறது . உடல் நலத்துக்கு உகந்தது என்பதால் , ' நல்ல எண்ணெய் ' என்ற பொருள் தருகிறது . தமிழகத்தில் , சமையலில் அதிகம் பயன்படுகிறது நல்லெண்ணெய் .
ஆசியா கண்ட பகுதியில் , சீனர் , கொரியர் , ஜப்பானிய குடும்பங்களிலும் இதை அதிகம் உபயோகிக்கின்றனர் .
தமிழர்மருத்துவம் மற்றும் ஆன்மிகத்துடன் நெருங்கிய தொடர்புடையது . இதன் மகத்துவம் பற்றி பார்போம் ... அடிக்கடி உணவில் நல்லெண்ணெயை சேர்த்தால் உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுக்கும் . உடல் சூட்டை தணிக்கும் . சீராக வியர்வை வெளியேற உதவும் . இதில் , ' சீசேமோல் ' என்ற பொருள் இதய நோயை தடுக்கிறது . மக்னீஷியம் சத்து , நீரிழிவு நோயை தடுக்கும் . இதில் உள்ள ஜிங்க் சத்து எலும்பு வளர்ச்சிக்கு உதவும் . குடலியக்கம் சீராக நடக்கும் . செரிமானப் பிரச்சனையை தீர்க்கும் .
நம்மில் பல பேருக்கு அடிக்கடி காபி, டீ ஆகியவற்றை ஒரு நாளைக்கு பலமுறை நாம் குடிப்போம். இவை நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கக்கூடியவை. இதை ஒரு நாளைக்கு அடிக்கடி குடிப்பதால் நம் உடலுக்கு நல்லதல்ல. இதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதை நாம் குடிப்பதை தவிர்த்து இயற்கையாக தயாரிக்கப்படும் சில மூலிகைகள் நிறைந்த பானங்களை குடிப்பதால் நம் உடலுக்கு நன்மையை அளிக்கிறது. இந்த மாதிரியான மூலிகைகள் நிறைந்த பானங்கை எடுத்துக் கொள்வதால் நம் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
பேரிச்சை விதை தேநீர் :
நாம் பேரச்சம் பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் கொட்டையை தூக்கி எரிந்து விடுவோம். பேரிச்சை பழத்தின் விதையை நன்கு வறுத்து பொடி செய்து பிறகு அதை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து பால், பனங்கற்கண்டு சேர்த்து வாரம் ஒரு முறை இதை குடிக்கலாம்.
மேலும் பேரிச்சை விதை தேநீரில் தாமிரம், செலினியம், இரும்பு போன்ற தாதுபுக்கள் நிறைந்துள்ளது. இரத்த சோகை, தோல் பிரச்னைகள், ஞாபக மறதி ஆகியவை குணமாகும்.
ஆரஞ்சு தோல் தேநீர் :
ஆரஞ்சு பழத் தோலின் வெள்ளை பகுதியை நீக்கி பொடியாக நறுக்கி அதை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து அதில் தட்டிய ஏலக்காய் சேர்த்து அந்த தண்ணீர் பாதியாக சுண்டிய பிறகு அதில் தேன் கலந்து குடித்து வரலாம்.
இதில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட், பிளவனோய்ட்ஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளதால் நம் உடலில் தோல் சம்மந்தமான பிரச்சனைகள் எது வராமல் தடுகிறது.
பெருமைக்காக செய்யும் செயல் எத்தனை உயர்வானதாக இருந்தாலும், அது கடவுளுக்கு விருப்பமானது அல்ல.
செய்யும் செயலை செவ்வனே முடிக்க உள்ளத்தில் துணிவு வேண்டும். ஒருபோதும் ஆத்திரப்படாதே.
பயணமோ மிக நீண்டது. எவ்வளவு தூரம் என்பதை கணக்கிட முடியாது.
தெய்வத்திடம் செய்யும் முறையீடு ஒருபோதும் வீண் போகாது. விடாது முயன்றால் வெற்றி பெறுவது உறுதி.
விருப்பத்திற்கு மாறாக நடந்தால் மனம் உடைந்து விடாதே. சஞ்சலம் சிறிதும் வேண்டாம். எப்போதும் அமைதியாக இருக்கப் பழகிக் கொள்.
உடல் பஞ்ச பூதத்தால் ஆனது. பஞ்சபூதங்களுக்கு அழிவு கிடையாது என்பதை உணர்ந்து கொள்.
படிப்பதை விட்டு விடாதே. நல்ல நூல்களைப் படி.
சகிப்புத்திறன் இல்லாவிட்டால் உலகில் எதையும் சாதிக்க முடியாது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
ரிஷபம்
வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். விவேகமான செயல்படுதல் நன்மதிப்பை உருவாக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தன வரவுகள் தாராளமாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
மிதுனம்
இணையம் சார்ந்த துறையில் புதுமையான சூழல் ஏற்படும். வருங்காலம் சார்ந்து சில பணிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்கள் தடைப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கலை துறையில் தனிப்பட்ட ஈர்ப்புகள் ஏற்படும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
காப்பக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் அமையும். தான தர்ம செயல்களில் ஈடுபாடுகள் உண்டாகும். சுப செலவுகளால் கையிருப்பு குறையும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை மேம்படுத்த முடியும். ஆடம்பரமான பொருள்கள் மீது ஈர்ப்புகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
சிம்மம்
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். சிக்கலான செயல்களையும் செய்து முடிப்பீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். புதிய முதலீடு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடன் பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகப் பணிகளில் உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
செயல்பாடுகளில் ஒரு விதமான படபடப்பு ஏற்பட்டு நீங்கும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். நெருக்கமானவர்கள் இடத்தில் அதிக உரிமை கொள்வதை தவிர்க்கவும். எதிர்பார்த்த சில வரவுகள் தாமதத்திற்கு பின்பு கிடைக்கும். உத்தியோகத்திலும் மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார முதலீடுகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். தடங்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
துலாம்
பொதுக் காரியங்களில் ஈடுபாடுகள் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். பெற்றோரின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனை குறையும். வீடு வாகனங்களை சரி செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு புதிய முடிவுகளை எடுப்பீர்கள். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
விருச்சிகம்
வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். மற்றவர்களின் பேச்சுகளுக்கு செவி சாய்க்காமல் செயல்படவும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். வேலையாட்கள் இடத்தில் பொறுமையை கையாள்வது நல்லது. அலுவலகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீடு மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அன்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மகரம்
தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகள் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
கும்பம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கணவன், மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உயர் கல்வியில் இருந்த குழப்பங்கள் மறையும். பெரியோர்களின் வழிகாட்டுதல் மாற்றத்தை உருவாக்கும். கால்நடைகள் மூலம் ஆதாயம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
மீனம்
தொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். மூத்த உடன் பிறப்புகள் அனுகூலமான செயல்படுவார்கள். பணி நிமித்தமான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனை சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிலும் ஆய்வு இன்றி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 2.1.2026.
திதி
சுக்ல பக்ஷ சதுர்தசி - Jan 01 10:22 PM – Jan 02 06:53 PM
சுக்ல பக்ஷ பௌர்ணமி - Jan 02 06:53 PM – Jan 03 03:32 PM
நட்சத்திரம்
மிருகசீரிடம் - Jan 01 10:48 PM – Jan 02 08:04 PM
திருவாதிரை - Jan 02 08:04 PM – Jan 03 05:27 PM
கரணம்
கரசை - Jan 01 10:22 PM – Jan 02 08:38 AM
வனசை - Jan 02 08:38 AM – Jan 02 06:53 PM
பத்திரை - Jan 02 06:54 PM – Jan 03 05:11 AM
பவம் - Jan 03 05:11 AM – Jan 03 03:32 PM
யோகம்
சுப்ரம் - Jan 01 05:12 PM – Jan 02 01:06 PM
பராம்யம் - Jan 02 01:06 PM – Jan 03 09:05 AM
நல்ல நேரம்:
12:00 PM – 12:46 PM
12:15 PM – 01:40 PM
05:01 AM – 05:49 AM
கனடாவின் வன்கூவர் விமான நிலையத்தில், மது அருந்திய நிலையில் பணிக்கு வந்ததாக ஏர் இந்தியா விமானி ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனால் டெல்லி வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் பல மணி நேரம் தாமதமானது.
வன்கூவரில் இருந்து டெல்லிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானத்தின் விமானி, விமானம் புறப்படுவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட சோதனையில் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.
விமானியின் உடலில் மதுவின் வாசனை வீசுவதை கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை உடனடியாக கைது செய்தனர். கனடா சட்டப்படி விமானிகள் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபடுவது கடுமையான குற்றமாகும். விமானி கைது செய்யப்பட்டதால், பயணிகள் அனைவரும் விமான நிலையத்திலேயே காத்திருக்க நேரிட்டது. மாற்று விமானி ஏற்பாடு செய்யப்படும் வரை விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய அந்த விமானி மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இன்று இரவு, கனடியர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுடன் ஒன்று கூடி, புத்தாண்டின் தொடக்கத்தை கொண்டாடுவார்கள். நாடு முழுவதும் உள்ள குடும்பங்களும் நண்பர்களும் ஒன்றாகச் சேர்ந்து, வரவிருக்கும் ஆண்டை வரவேற்கும் நேரமிது.
புத்தாண்டு முன்னிரவில், கடந்த ஆண்டில் நமக்கு மகிழ்ச்சியளித்த தருணங்களையும், அவற்றை சிறப்பாக்கிய நமது வாழ்வில் உள்ள மனிதர்களையும் நாம் நினைவுகூருகிறோம்.
இந்த ஆண்டு எமது நாட்டிற்கு பல சவால்களை கொண்டு வந்திருந்தாலும், நாம் ஒரு விசேடமான, தாராள மனம் கொண்ட, அக்கறையுள்ள தேசத்தின் ஒரு பகுதியாக இருப்பது எவ்வளவு அதிஷ்டம் என்பதையும் அது நினைவூட்டியுள்ளது.
நாம் ஒன்றுபட்டிருக்கும்போது, ஒருவருக்கொருவர் கவனம் செலுத்தும்போது, ஒருவரை ஒருவர் பாதுகாத்துக்கொள்ளும்போது தான் நாம் மிக வலிமையானவர்களாக இருக்கிறோம். அதுவே கனடாவை வலிமையான நாடாக உருவாக்குகிறது. இந்த ஆண்டு முடிவடையும் தருணத்தில், அதே ஊக்கத்தையும் அதே பெறுமதிகளையும்2026 ஆம் ஆண்டிலும் கொண்டு செல்ல வேண்டும் என்று நாம் உறுதி செய்கிறோம்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள், கனடா.” என மார்க் கார்னி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சுக்கை தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.
மூட்டு வலிக்கு தேங்காய் எண்ணெய் சிறிதளவு மற்றும் எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். இதற்கு தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.
வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது. ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.
வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.
உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
ஜானி படத்தில் இடம்பெற்ற ஆசைய காத்துல தூது விட்டு பாடலில் இவர் நடித்திருப்பார், இவர் யார் என தெரியுமா? தமிழ் தெலுங்கில் பிரபல நடிகையாக விளங்கிய ஜெயசுதா, அதாவது பாண்டியன் படத்தில் ரஜினிகாந்தின் சகோதரியாக வரும் ஜெயசுதாவின் தங்கை ஆவார்.
இவரின் பெயர் சுபாஷினி, ஜானி படத்தில் இடம்பெற்ற அந்த ஆசைய காத்துல தூதுவிட்டு பாடல் இவருக்கு அதிகம் பெயர் வாங்கிக்கொடுத்தது.
இவர் 1980ல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த கரும்பு வில் என்ற படத்தில் சுதாகருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பழம்பெரும் நடிகையான விஜய நிர்மலாவின் மருமகளும் இவரே. தமிழ், மலையாளம், கன்னடம், தாய்மொழி தெலுங்கில் அதிகம் நடித்துள்ளார் சுபாஷினி.
இவரை அறிமுகப்படுத்தியது இயக்குநர் ஸ்ரீதர், இவர்தான் தனது அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தில் சுபாஷினியை அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து நட்சத்திரம் , கொண்டாட்டம், பாய்ஸ் என சில தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் நடித்ததில் முக்கியமான திரைப்படம் கரும்பு வில் திரைப்படம்தான். நல்ல நடிகையான இவர் தெலுங்கில் நல்ல படங்களில் நடித்து இருந்தாலும், தமிழில் ஸ்ரீதரால் அறிமுகமாகி இருந்தாலும் தமிழில் நறுக்கு சுறுக்குன்னு பெரிய பெயர் பெற்ற படங்களில் நடிக்காதது வருத்தமே. அவ்வப்போது இடைவெளி விட்டே இவர் தமி சினிமாவில் நடித்து வருகிறார்.
இன்றும் இவர் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - 2026
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை 1.1.2026.
இன்று இரவு 08.57 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி
இன்று இரவு 9:48 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.
இன்று மாலை 04.18 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.
இன்று காலை 09.36 வரை கௌலவம். பின்னர் இரவு 08.57 வரை தைத்தூலம். பின்பு கரசை.
இன்று காலை 06.29 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30 முதல் 12.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
சிந்தியா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகை சிந்தியா லூர்டே தயாரித்து, ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம், ‘அனலி’.
அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா எழுதி இயக்கியுள்ள திரைப்படத்தில், சக்தி வாசுதேவன், குமரவேல், இனியா, கபிர் துகான் சிங், அபிஷேக் வினோத், ஜென்சன் திவாகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் சிந்தியா லூர்டே கூறும்போது, “‘வர்ணாஸ்ரமம்’, ‘தினசரி’ படங்களுக்குப் பிறகு 'அனலி' என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன். இதில் வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை. கொஞ்சம் தனித்துவமானதாக இருக்கும்.
90-களில் தமிழ் சினிமாவில் விஜயசாந்தி ஆக்ஷன் படங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் முதன் முறையாக முழுநீள ஆக்ஷன் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். நாயகர்களே நடிக்கத் தயங்கும் காட்சிகளிலும் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறேன். ஆக்ஷன் காட்சிகளில் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன்.
இதில் ஹீரோ என்று யாரும் கிடையாது. நிறைய வில்லன்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் நிறைய கற்றுக் கொள்கிறேன். இந்தப் படத்திலும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என கற்றுக்கொண்டேன்” என்றார். இந்தப் படம் ஜன.2-ம் தேதி வெளியாகிறது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் காதலித்து வருகிறார்கள். இதனை மறைமுகமாக பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஹைதராபாத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் கலந்துக் கொண்ட திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் எப்போது என்பது தெரியாமல் இருந்தது.
தற்போது, விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் உதய்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெறவுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதனை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள புதிய படமொன்றின் நாயகியாக ராஷ்மிகா ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு பின்பும் ராஷ்மிகா தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
’கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படத்தில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதன் மூலமே இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
























