Scan Mobiles-Apps

Scan to Download Google AppDownload Android AppScan to Download Apple App

Quote of the Day

திருக்குறள்

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

குறள் விளக்கம் : மு.வ : மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.

சாலமன் பாப்பையா : மூங்கில் போன்ற தோளை உடைய அவளுக்கு மேனி இளந்தளிர்; பல்லோ முத்து; உடல் மணமோ நறுமணம்; மையூட்டப் பெற்ற கண்களோ வேல்!
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
·
Added article
·
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூன்று கதாநாயகிகளும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளாக மாறினர்.மற்ற இரு நடிகைகளை விட மடோன்னா செபாஸ்டியன் தமிழில் அதிகமான படங்களில் நடித்தார். ஆனால் சில ஆண்டுகளாக அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. சமீபத்தில் விஜய்யின் லியோ படத்தில் அவரின் சகோதரி வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த கதாபாத்திரத்தால் அவருக்கு பெரிய வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை.அதையடுத்து வாய்ப்புகளைக் கவர்வதற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இப்போது இளவரசி போன்ற உடை மற்றும் ஆபரணங்கள் அணிந்து வெளியிட்டுள்ள போட்டோஷூட் ஆல்பங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. 
  • 207
·
Added a post
·
உடல் எடை அதிகரிப்பு:உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரி அதிகம் உள்ளது. அடிக்கடி இதனை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கலாம். நீரிழிவு நோய்: அதிக கார்போஹைட்ரேட்களை உட்கொள்ளும் போது, இரத்த சர்க்கரையின் அளவு உயரலாம், இது நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உருளைக்கிழங்கை பொரித்தல்: உருளைக்கிழங்கைக் கொண்டு தயாரிக்கும் பல உணவுகள், குறிப்பாக பொரித்த உருளைக்கிழங்கு (போஸ்லைசு, ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் போன்றவை), அதிக கொழுப்பு மற்றும் சோடியம் அளவைக் கொண்டவை. இது இரத்த அழுத்தம், இருதய நோய்கள் போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கக்கூடும். இயல்பாக சாப்பிடுவதின் நன்மைகள்: அதிக அளவில் சமைத்து, எண்ணெய் மற்றும் மசாலா சேர்க்காமல் சாப்பிட்டால் உருளைக்கிழங்கில் உள்ள தாது உப்புகள், நார்ச்சத்து போன்றவை உடலுக்கு நல்லது. உருளைக்கிழங்கை நிதானமாக சமைத்து, மிதமான அளவில் உணவில் சேர்த்து கொண்டால், உடலுக்கு பிரச்சனையில்லாமல் சத்தான உணவாக இருக்கும்.
  • 214
·
Added a news
·
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த ராஜதந்திரச் சிக்கல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இம்முறை இன்னும் வலுவாக. கனடாவில் இருந்து இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் மற்ற அதிகாரிகளை திரும்பப் பெற இந்தியா தீர்மானித்துள்ளது. அத்துடன், டெல்லியில் உள்ள கனடா தூதுரகத்திற்கும் இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.இந்தியாவுக்கான கனடா தூதர் ஸ்டீவர்ட் ராஸ் வீலர் உள்ளிட்ட 6 பேரை வெளியேற்ற இந்தியா முடிவு செய்துள்ளது. அக்டோபர் 19-ம் தேதி இரவு 11.59 மணிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனறு அவர்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
  • 223
·
Added a news
·
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த ராஜதந்திரச் சிக்கல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இம்முறை இன்னும் வலுவாக. கனடாவில் இருந்து இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் மற்ற அதிகாரிகளை திரும்பப் பெற இந்தியா தீர்மானித்துள்ளது. அத்துடன், டெல்லியில் உள்ள கனடா தூதுரகத்திற்கும் இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.இந்தியாவுக்கான கனடா தூதர் ஸ்டீவர்ட் ராஸ் வீலர் உள்ளிட்ட 6 பேரை வெளியேற்ற இந்தியா முடிவு செய்துள்ளது. அக்டோபர் 19-ம் தேதி இரவு 11.59 மணிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனறு அவர்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
  • 224
·
Added a news
·
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நாளை சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னை அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.சென்னையில் நேற்று இரவு முதலாகவே பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 246
·
Added a news
·
இலங்கையையும் இந்தியாவையும் தரைவழியாக இணைக்கும் வகையில் நிர்மாணிக்க உத்தேச திட்டம் தொடர்பான பேச்சுகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயெ அவர் இவ்வாறு கூறியுள்ளார்.”கடந்த மாதம் புதுடில்லியில் இது தொடர்பான கூட்டத்தில் இலங்கையின் உயர்மட்ட குழு பங்கேற்றது.ராமேஸ்வரத்துக்கும் திருகோணமலைக்கும் இடையே நெடுஞ்சாலை மற்றும் புகையிரத இணைப்பை ஏற்படுத்துவது தொடர்பான இறுதிக் கலந்துரையாடல்கள் இதன்போது நடைபெற்றன.முன்மொழியப்பட்ட தரைவழி இணைப்பை ஏற்படுத்த மதிப்பிடப்பட்டுள்ள செலவு சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலராகும். இந்த முழு செலவையும் இந்தியா ஏற்கும்.” என்றும் அவர் கூறியுள்ளார்
  • 720
·
Added a news
·
சர்ச்சைக்குரிய பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் பல அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.இது மத்திய வங்கியின் உள்ளக விசாரணை என்பதால் விபரங்களை குறிப்பிடுவது பொருத்தமானதல்ல என மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீதான மத்திய வங்கியின் உள்ளக விசாரணைகள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.1,000 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமெனத் தெரிவிக்கப்படும் இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி ஊழல் என்பது 2015 பெப்ரவரி 27 ஆம் திகதி இடம்பெற்ற நிதிச் சலவை மோசடியாகும்.நாட்டிற்கு 11 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய இந்த மோசடி இதுவரையில் தீர்க்கப்படாத பிரச்சினையாக தொடர்கிறது.பல ஆண்டுகளாக உறுதியான தொலைநோக்குப் பார்வை கொண்ட வங்கி அமைப்பைக் கொண்ட நாடு என்ற நற்பெயரைப் பெற்ற போதிலும், பத்திர மோசடியானது இலங்கையில் பதிவாகிய மிகப்பெரிய நிதி மோசடியாகவும் கருதப்படுகிறது.மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்திற்கும் பெரும் பின்னடைவாக அமைந்ததுடன் அப்போதைய மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன மகேந்திரன் நியமிக்கப்பட்டார் .இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதபன சந்தேகநபராக கருதப்படும் அர்ஜுன மகேந்திரன் சிங்கபூருக்கு தப்பி சென்ற நிலையில், இலங்கைக்கு நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசுக்கும் சிங்கப்பூர் அரசுக்கும் இடையே சர்ச்சைகள் எழுந்திருந்தன.2019 செப்டம்பர் அன்று, சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சகம், தேவையான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் வெளியிடப்பட்டவுடன், இலங்கையிடம் இருந்து நாடு கடத்தல் கோரிக்கையை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று தெளிவுபடுத்தியதுஅதே மாதத்தில் சிங்கப்பூரின் ஒப்புதலுடன், முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் மனு தாக்கல் செய்தது.
  • 721
·
Added a news
·
அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 8,000 ரூபாவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.000
  • 733
·
Added a news
·
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைபோல கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.இதற்கான தீர்மானம் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்வெளிநாடுகளிலிருந்து கடவுச்சீட்டுகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகை கடவுச்சீட்டுக்கள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.000
  • 726
·
Added a news
·
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர். இதற்கான பதவி விலகல் கடிதங்கள் நேற்று பிற்பகல் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி உடவத்த ஆகியோர் பதவி விலகியுள்ளனர். அத்துடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களும் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட தற்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைகின்றது.000   
  • 725
·
Added a news
·
நாம் முன்னெடுத்துவரும் இணக்க அரசியல் பொறிமுறையூடாக தமிழ் மக்களின் நலன்சார்ந்து பலவற்றை சாதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்  ஊடக பேச்சாளரும் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் எமது தரப்பின் முயற்சியின் காரணமாகவே 13 ஆவது திருத்தச் சட்டமும் இன்றுவரை பாதுகாக்கப்பட்டதாகவும்  தெரிவித்துள்ளார்யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றையதினம் (14.10.2024) மேற்கொண்டு ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் - கிடைத்திருக்கும் உரிமைகளையும் இல்லாமல் செய்யும் போக்கிலேயே சக தமிழ் கட்சிகளின் செயற்பாடுகள் அமைந்து வருகின்றனஎம்மை பொறுத்தளவில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற நிலைப்பாட்டுக்கமையவே எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.  இதேநேரம் இம்முதுறை ஈ.பி.டி.பி 7 தேர்தல் மாவட்டங்களை உள்ளடக்கிய 10 மாவட்டங்களில் போட்டியிடுகின்றது.அத்துடன் நடைபெறவுள்ள தேர்தல் என்பது தமிழ் மக்களுக்கு மிக முக்கியமானது. ஏனெனில் எவர் சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்கின்றார்கள், எவர் மக்களது சேவகர்களாக இருந்து செயற்படுகின்றார்கள், எவர் சுயநலன்களுக்காக செயற்படுகின்றார்கள் என்பதை மக்கள் நிர்ணயிக்கின்ற தேர்தலாக இது இருக்கின்றது. ஏனெனில் மக்கள் தற்போது உண்மையை கண்டுகொண்டுவிட்டனர்.எமது அரசியல் செயற்பாடுகளையும் நாம் முன்னெடுக்கும் பொறிமுறைகளையும் நாம் வெளிப்படையாகவே கூறுகின்றோம். இதை மக்கள் ஏற்று அணிதிரண்டு எமது சின்னமான வீணைக்கு வாக்களித்து எம்மை அரசியல் பலம் மிக்கவர்களாக்குவாரகள் என நம்புகின்றோம்.இதனிடையே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு ஆசனங்களை பெற்றிருந்த ஈ.பிடி.பி இம்முறை எத்தனை ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில் -பல சந்தர்ப்பங்களில் ஒரு ஆசனத்தை தான் மக்கள் எமக்கு தந்திருந்தார்கள். ஆனாலும் கடந்த தேர்தலில் வன்னியிலும் ஓர் ஆசனம் கிடைத்தது இது எமது சேவைக்கும் கொள்கைக்கும் மக்கள் வழங்கிய அங்கிகாரம். நாம் சொல்வதை செய்பவர்கள், செய்வதையே சொல்பவர்கள். அதனால் மக்கள் எம்மை உன்னிப்பாக அவதானிக்க தொடங்கியுள்ளார்கள். இதனடிப்படையில் இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் எமக்கு 7 ஆசனங்களை பெறுவதற்கான ஆணையை தருவார்கள் என நம்புகின்றோம். மக்களது ஆணையே எமது நிலைப்பாடாகவும் உள்ளது. இதேநேரம் பல்வகை மதம் இனம் சார்ந்தவர்கள் இருக்கும் நாட்டில் அவரவர் தத்தமது சார் நிலைப்பாட்டை முன்வைத்தே செயற்படுவார்கள்.  எம்மிடம் சுயநலமற்ற தடம் மறாதா கொள்கை இருக்கின்றது. அதனை முன்னெடுத்துச் செல்லும் ஆற்றலும் சிறந்த தலைமைத்துவ வழிகாட்டலும் இருக்கின்றது இதை கடந்தகால வரலாறுகளே சாட்சி சொல்லும்.அந்தவகையில் மத்தியில் ஏற்பட்டதைப் போன்று தமிழ் அரசியல் பரப்பிலும் மாற்றத்தை கொண்டுவர தமிழ் மக்கள் தற்போது முயற்சிக்கின்றனர் அந்த மாற்றம் எம்மை நோக்கியதாக இருக்கின்றது என்றும் தெரிவித்த அவர் கார்த்திகை 14 ஆம் திகதியன்று தமிழ் மக்கள் அணி திரண்டு வீணைச் சின்னத்திற்கு வாக்களித்து எம்மை அரசியல் ரீதியில் பலம் மிக்கவர்களாக்குவார்கள் என்று நம்புகின்றோம். குறிப்பாக சந்தர்ப்பவாதிகளையும் மக்கள் சேவகர்களையும் மக்கள் இனங்காணும் நேரம் இது என சுட்டிக்காட்டியுள்ள அவர் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள் என்றும்  அந்த மாற்றம் எமக்கு கிடைக்கும் பட்சத்தில்  தமிழ் மக்களது தீர் துயரங்களுக்கும் தீர்வு கிட்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது000 
  • 743
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, புரட்டாசி மாதம் 29 ஆம் தேதி  மேஷம் -ராசி: அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபமுயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்னல் குறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் ரிஷபம் ராசி: குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். சமூகப் பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். திறமைக்கு உண்டான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் மதிப்பு மேம்படும். சிக்கல் விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை மிதுனம் -ராசி: கல்வி சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். உறவினர்களின் வழியில் பொறுமை வேண்டும். வியாபாரம் மந்தமாக இருக்கும். அரசு செயல்களில் அலைச்சல் ஏற்படும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். வெளி வட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு கடகம் -ராசி: பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முடிவெடுப்பதில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். முன்கோபத்தினை குறைத்துக் கொள்வது தேவையற்ற பகைமையை தவிர்க்கும். வியாபாரப் பணிகளில் அலைச்சல் உண்டாகும். தேவையற்ற வாக்குறுதிகளை தவிர்க்கவும். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு சிம்மம் -ராசி:உயர் பொறுப்பில் இருப்பவர்களால் புதிய அனுபவம் ஏற்படும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறப்புகளை பற்றி புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். தேவையில்லாத அலைச்சல் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் கன்னி -ராசி: வெளியூர் பயணம் சாதகமாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். அலுவலகப் பணிகளில் மரியாதை அதிகரிக்கும். புதிய வேலைகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகனம் தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் துலாம் -ராசி: குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாலின மக்கள் விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். புதுவிதமான செயல் திட்டங்களை உருவாக்குவீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் விருச்சிகம்- ராசி: பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். அறிமுகம் இல்லாத எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். எதிர்பாராத வகையில் தனவரவுகள் கிடைக்கும். மனை தொடர்பான வில்லங்கம் விலகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம் தனுசு -ராசி: வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். சிறுதூர பயணங்களால் மனதளவில் மாற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மகரம் -ராசி:அக்கம்-பக்கம் இருப்பவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பண விஷயத்தில் சிக்கனம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பொன், பொருள் சேர்க்கை சார்ந்த எண்ணம் மேம்படும். வாக்கு சாமர்த்தியங்களால் நினைத்ததை முடிப்பீர்கள். அனுபவம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : ஊதா கும்பம் –ராசி:உத்தியோகப் பணிகளில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும். உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உற்சாகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மீனம் -ராசி: உடலில் இருந்துவந்த சில வலிகளுக்கு தீர்வு கிடைக்கும். அனுபவம் மூலம் சில மாற்றமான முடிவுகள் கிடைக்கும். ரகசியமான செயல்பாடுகளால் மேன்மை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் விருத்தி உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உதவி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 837
ஸ்ரீ குரோதி வருடம் புரட்டாசி மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 15.10.2024சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.இன்று அதிகாலை 12.37 வரை துவாதசி. பின்னர் இரவு 10.20 வரை திரியோதசி. பிறகு சதுர்த்தசி.இன்று இரவு 08.52 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி. ஆயில்யம், மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 849
·
Added a post
·
ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில் , கையில் தூக்கு வாளியுடன் ஒரு 10 வயது சின்னக் குழந்தை "அண்ணா... அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க... காசு நாளைக்கு தருவாங்களாம்" என்றது.ஹோட்டல் நடத்துபவர், "ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா.... இப்போ வாங்கிட்டுப்போ... தூக்கு வாளியை தா சாம்பார் ஊத்தி தாரேன்" என்றார் ...இட்லி பார்சலையும், சாம்பார் நிறைத்த தூக்கு வாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்.குழந்தை, "சரி... அம்மாட்ட சொல்றேன்... போயிட்டு வரேன் அண்ணே.... " என்றபடியே குழந்தை கிளம்பிவிட்டாள்.அந்த கடையில் நான் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம். ஆதலால் நான் கேட்டே விட்டேன்... "நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க....?"ஹோட்டல் முதலாளி "அட சாப்பாடு தானே சார்.... நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன். இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல சார்... அதெல்லாம் குடுத்துடுவாங்க... என்ன கொஞ்சம் லேட் ஆகும்.... எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது? குழந்தை பசியால் கேட்டிருக்கும்.. அதான் சார், அந்த அனுப்பி இருக்காங்க.. நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல சார்.... நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு சார்... கட்டாயம் வந்துடும். அதுவும் இல்லாம இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்பிடுதுல, அதுதான் சார் முக்கியம்" "நான் உணவு தரவில்லை என்றால் , அந்த குழந்தை , தன் தாய்க்காக திருட போவான்... அல்லது அந்த தாய்‌ தன் குழந்தை பசிக்காக , தவறான பாதைக்கு செல்வாள்... ஆனால், என்னால் நான் நஷ்டபட்டாலும், இப்பொழுது நம் சமுகத்தில் நடக்க இருந்த, இரண்டு தவறுகளை தடுக்க முடிந்திருக்கிறது" என்றார் ஹோட்டல்காரர்.பாக்கெட்டில் இருந்த பணம் அப்படி ஒன்றும் மதிப்பான விசயமாக தெரியவில்லை எனக்கு. நான் அன்று அளவாக தான் சாப்பிட்டேன்ஆனால் மனது நிறைந்தது ....இறைவன் பூமியிலும் இருக்க தான் செய்கிறார் நமக்கு தான் தெரிவதேயில்லை.....
  • 890
Good Morning...
  • 908
·
Added article
நகைச்சுவை நடிகர் மயில்சாமி பென்ஸ் காரை தொட்டு பார்த்ததற்காக “அந்த” ஆளு அடிச்சாரு.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகர்மறைந்த மயில்சாமி நிகழ்ச்சி ஒன்றுக்கு வெளியே போயிருந்த நிலையில் அங்கு இருந்த பென்ஸ் காரை பார்த்து வியந்து போய் அதை தொட்டதற்காக அங்கு பிரச்சனை ஏற்பட்டு அந்த காரின் உரிமையாளர் அவரை அடித்துவிட்டார் என்ற ரகசியத்தை பல வருடங்கள் கழித்து பிரபல நடிகரான ஆர் ஜே பாலாஜி கூறி இருக்கிறார்.சாதாரண மக்களாக இருந்தாலும் சரி சின்ன சின்ன நடிகர்களாக இருந்தாலும் சரி கார் என்பது எல்லோருக்கும் கனவுதான். சிலருக்கு ஆடம்பரமாகவும் பலருக்கு அது அடிப்படையாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தங்களுக்கு மனதிற்கு பிடித்த காரை வாங்க முடியவில்லை என்றாலும் அது தங்கள் கண்முன்னே போகும்போது ஒரு இனம் புரியாத ஒரு சந்தோஷம் பலருக்கு ஏற்படத்தான் செய்யும் .அந்த வகையில் பல நடிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு கூட தயாரிப்பு நிறுவனம் காரில் தான் போக முடியும். சினிமாவில் நடித்து வரும் பல நடிகர்களுக்கு கார் கிடையாது. அதனால் அவர்களுக்கான கார் வாங்குவது ஒரு பெரிய லட்சியமாக வைத்திருக்கின்றனர். அந்த அதுபோல மறைந்த நடிகர் மயில்சாமிக்கும் பெரிய ஆசை இருந்திருக்கிறது. நடிகர் மயில்சாமி பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்திருக்கிறார்.அதுபோல சின்ன சின்ன நடிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் கூட தன்னால் முடிந்த உதவிகளை செய்து இருக்கிறார். அதனால் தான் அவருடைய மறைவுக்கு பலரும் அவர் செய்த உதவிகளை சொல்லி ஃபீல் பண்ணி இருந்தனர். இப்போ வரைக்கும் அவருடைய மறைவை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு புயல் பாதிப்பு ஏற்பட்ட போது கூட மயில்சாமி வாழ்ந்த பகுதி மக்கள் எல்லாரும் மயில்சாமி இருந்திருந்தால் எங்களுடைய நிலைமை நல்லா இருந்திருக்கும்.எங்களுக்கு சில உதவிகளை அவர் செய்திருப்பார் என்று ஃபீல் பண்ணி பேசி இருந்தனர். அந்த அளவிற்கு மயில்சாமி பலருக்கும் உதவி செய்திருந்தாலும் அவருடைய வாழ்க்கையிலும் சில அவமானங்கள் ஏற்பட்டிருக்கிறது.. ஒருமுறை மயில்சாமி ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்த பென்ஸ் காரை ஆசையாக தொட்டு பார்த்திருக்கிறார்.அப்போது அந்த காரின் சொந்தக்காரருக்கும் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. காருக்கு சொந்தக்காரர் மயில்சாமியை எப்படி என் காரின் மீது கை வைக்கலாம் என்று கேட்டு பிரச்சனை செய்ய அதற்கு ஆரம்பத்தில் மயில்சாமி பொறுமையாக பேசிக் கொண்டிருந்தாலும் பிறகு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.அப்போது காரின் சொந்தக்காரர் மயில்சாமியை அடித்துவிட்டாராம். ஆனால் அதே மயில்சாமிக்கு அவருடைய ஐம்பதாவது பிறந்த நாளில் அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் சேர்ந்து அவருக்கு ஒரு பென்ஸ் காரை பரிசாக வாங்கி கொடுத்தார்கள் என்று ஆர்.ஜே பாலாஜி பேட்டி ஒன்றில் நிகழ்ச்சியோடு பேசி இருக்கிறார். அந்த மாதிரி தான் யாருக்கு எப்போது வாழ்க்கை மாறும் என்று சொல்ல முடியாது .
  • 1403
·
Added a post
அரை பொண்டாட்டியா? அப்போ படுக்கையை பகிர்ந்து கொள்வதை குறிப்பிட்டு இந்த பழமொழியை உருவாக்கியுள்ளார்கள் என நினைத்து விடாதீர்கள். 'அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டியாம்; தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டியாம்' எனும் பழமொழிக்கு பின்னர் பெரும் கதையே உள்ளது. இந்த பழமொழி மட்டுமல்ல உலகில் உள்ள எல்லா பழமொழிக்கு பின்னரும் பெரும் விளக்கவுரை உண்டு.முன்னரெல்லாம் கூட்டு குடும்பம் தான். ஒரே வீட்டில் மாமனார், மாமியார், பாட்டி, தாத்தா, பெரிய மருமகள், சின்ன மருமகள், பத்து பதினைந்து குழந்தைகள் என குடும்பமே குட்டி திருவிழா போல இருக்கும். மாமியார் தான் வீட்டின் எல்லா பொறுப்பையும் பார்த்துக்கொள்வார். முதல் மருமகள் வந்ததும் அந்த பொறுப்பு எல்லாம் மருமகளிடம் சென்றுவிடும். குழந்தைகள், பெரியவர்கள், வீட்டு நிர்வாகம் என எப்போதுமே முதல் மருமகள் ஏதாவது வேலையாகத்தான் (பிசியாக தான்) இருப்பார்.பெரியவர்களுக்கு சாப்பாடு போட்டு, நண்டு, சிண்டையெல்லாம் தூங்க வைத்துவிட்டு, பாத்திர பண்டங்களை துலக்கி, அப்படிஇப்படியென இந்த வேலை எல்லாம் முடித்துவிட்டு கணவருடன் தூங்க செல்ல அரை ராத்திரிக்கு மேல் ஆகிவிடும். அதாவது பன்னிரண்டு மணிக்கு மேல் ஆகிவிடுமாம். இப்படி அரை ராத்திரி ஆகிவிடுவதால் அண்ணனுக்கு அரை பொண்டாட்டியாம். அதுவே தம்பி பொண்டாட்டி, இளைய மருமகளுக்கு அந்த அளவிற்கு வேலை பளு இருக்காது என்பதால் விரைவாக தூங்க போய்விடுவார். அதனால்தான், 'தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டியாம்'.
  • 1417
·
Added a post
ஊடகங்கள் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும், நமக்கு ஏழரை சனி நடக்கிறது என்பதை, ஏழரை சனி நடப்பவர்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். இந்த ஏழரை சனி கெடுதலை செய்யும் என்றும், வாழ்க்கையில் பல பிரச்சனைகளை தரும் என்றும் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் அனைவருக்குமே ஏழரை சனி ஒரே போல் தான் செயல்படுமா ? என கேட்டால், இல்லை! என்பது தான் பதில்.ஏழரை சனி நிச்சயம் வயதுகளுக்கு ஏற்ப கெடு பலன்களை அதிகமாகவும், குறைவாகவும் செய்யும்.ஒரு ராசியின் மீதும், அந்த ராசியின் முன் பின் ராசிகளிலும் சனி பகவான் செல்லும் காலகட்டம் ஏழரை சனி என சொல்லப்படுகிறது. இது 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைவருக்கும் வரும் தான் என்றாலும், பிறந்த பிறகு முதல் முதலில் வரும் ஏழரை சனியே மங்கு சனி என சொல்லப்பட்டுள்ளது.இரண்டாவது முறை 30 ஆண்டுகள் கழித்து வரும் சனியை பொங்கு சனி என சொல்லப்பட்டுள்ளது.மூன்றாவது முறை வரக்கூடிய ஏழரை சனிக்கு மரண சனி என பெயரிடப்பட்டுள்ளது.மங்கு சனி என்பது கடுமையான பலன்களை கொண்டிருக்கும். வாழ்க்கையில் பல போராட்டங்களையும், பல புரிதல்களையும் ஏற்படுத்துவதற்காக, இளமை பருவத்தில் முதலில் வரும் இந்த சனி பல அனுபவங்களை கொடுத்து வாழ்வை புரிய வைக்க வேண்டும் என்பதற்காக பல சிக்கல்களை உண்டு பண்ணும்.இதுவே இரண்டாவது சுற்றாக சொல்லப்படும் பொங்கு சனியை பொருத்தவரை, சில பின்னடைவுகளை தந்த போதிலும் நல்ல முன்னேற்றங்களையும், வாழ்க்கையில் ஏற்றங்களையும் ஏற்படுத்தும்.எனில் மரண சனி என்பது மரணத்தை ஏற்படுத்துமா? என நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. உண்மையில் மரணத்தை ஏற்படுத்தும் என்பதற்காக மரண சனி என்று பெயரிடப்படவில்லை. சனி பகவானின் காரகம் ஆயுளை தருவது தானே! தவிர, மரணத்தை தருவது அல்ல. மரண சனியின் சரியான பெயர் அந்திம சனி. உங்களுடைய வயதான காலத்தில் வரும் ஏழரை சனி என்று பொருள். இதுவும் சற்று கடுமையாக இருக்கும். மங்கு சனியை விட சற்று பரவாயில்லை என்னும் அளவில் இருக்கும், பொங்கு சனியை விட சற்று சிரமங்கள் கூடுதலாக இருக்கும்.ஒற்றைப்படைகளான முதல் சுற்றும், மூன்றாம் சுற்றும் சிரமங்களை தரும் என்றும், இரட்டைப்படைகளான இரண்டாம் சுற்று மற்றும் நான்காம் சுற்று ஏழரை சனி பிரச்சனைகள் தராது என்ற கருத்தும் ஜோதிடத்தில் உண்டு.பொதுவாக இதுபோல் சொல்லப்பட்டிருந்தாலும், இதில் நிறைய ஜோதிட நுட்பங்கள் உண்டு. அந்த நுட்பங்களை இப்போது பார்ப்போம். சிலருக்கு பிறக்கும் போதோ அல்லது சிறுபிள்ளையாக இருக்கும் போது முதல் ஏழரை சனி கடந்திருக்கும், இவற்றையெல்லாம் முதல் சுற்று ஏழரை சனி என கணக்கில் எடுத்துக் கொள்ளவே கூடாது. ஆணோ, பெண்ணோ பருவ வயதை அடைந்த பிறகு தான் ஏழரை சனியின் பலன்கள் தெரியவே தொடங்கும். ஆகவே வாழ்வில் 45 வயது களுக்குள் வரும் ஏழரை சனி என்பது முதல் சுற்று ஏழரை சனியாக மங்கு சனியாகவே செயலாற்றும். ஒரு 50 வயதை கடந்தவர்களுக்கு எல்லாம் ஏழரை சனி பொங்கு சனியை போன்றே செயல்படுகிறது. நன்கு வயதான பிறகு வரும் ஏழரை சனி உடல்நிலை ஆரோக்கியத்தில் சிக்கல்களை ஏற்படுத்தி, மனச்சோர்வை ஏற்படுத்தி பாதிப்புகளை உண்டு பண்ணுகிறது.பெரும்பாலும் பருவ வயதில் இளைய பருவத்தில் வரும் ஏழரை சனியே வாழ்க்கையில் பல கடினமான சூழல்களை உருவாக்கி தெளிவான புரிதல்களை தந்து மீதம் இருக்கும் வாழ்க்கையை நீங்கள் உலகத்தைப் பற்றிய புரிதலுடன் வாழ்வதற்கு உங்களை பக்குவப்படுத்துகிறது. இதன் மூலம் பொதுவாக ஏழரை சனி என்று இல்லாமல் உங்களுக்கு தற்சமயம் எந்த சனி நடக்கிறது ? மங்கு சனி நடக்கிறதா ? பொங்கு சனி நடக்கிறதா ? அந்திம சனி நடக்கிறதா ? என்பதை நீங்கள் புரிந்து இருப்பீர்கள்.
  • 1421
அகத்தியர் மந்திர வாள் என்றும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் சொன்ன அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்:(1) "நசி, மசி" என்றிட எமனையும்வெல்லலாம்.(2) "மசி, நசி" என்றிட மன்னனும்மாண்டிடுவான்.(3) "நங், நங்" நன்மைகள் உண்டாகும்.(4) "அங் அங்" என்றால் மண்டலத்தில் இடி விழாது.(5) "சிங், சிங்" என்றால் மிருகங்கள்ஓடும்.(6) "வங், வங்" என்றால் உலகமெல்லாம்வசியமாகும்.(7) "வசி, வசி" என்றால் பீடைகள்விலகும்.(8) "மசி, மசி" என்றால் சகலவிஷங்களும் இறங்கும்.(9) "அசி, அசி" என்றால்கேட்பவைஅமோகமாக பெருகும்.(10) "உசி, உசி" என்றால் கேட்பவையாவும் ஒழிந்து போகும்.(11) "மசி, நசி, நசி, மசி" என்றால் பேய்பிசாசுகள் ஓடும்.(12) "சிவ, சிவ" என்றால் தீவினைகள்அழியும்.இது போன்ற எத்தனையோ ரகசிய பொக்கிஷங்கள் சித்தர்களால் உலக மக்களின் நலன் கருதி அருளப்பட்டன.(1) மோகன மந்திரம்: "ஓம் ரீங் மோகய! மோகய!"(2) சத்ருக்கள் வசியம்: "ஓம் ரீங் வசி!வசி!"(3) நோய்கள் தீர: "ஓம் ரீங் நசி நசி"(4) துஷ்ட மிருகம் ஓட "ஓம் ரீங் அங்"(5) இகபர சித்தி: "ஓம் ரீங் சிவயவசி"(6) தம்பனம்: "ஓம் ரீங் ஸ்தம்பய!ஸ்தம்பய!"(7) அகர்ஷனம்: "ஓம் ரீங் ஆகர்ஸ்ய!ஆகர்ஸ்ய!"(8) உச்சாடனம் நோய்கள் தீர – "ஓம் ரீங்உச்சாடய! உச்சாடய!"(9) செளபாக்கியம் பெற: "ஓம் ரீங்சிவசிவ!"(10) தெய்வ அருள் பெற: "ஓம் சிவ சிவஓம்!"(12) சத்ரு சம்ஹாரா மந்திரம்: "ஓம் ரீங்மசி நசி நசி மசி"(13) நெற்றிகண் மந்திரம்: "ஓம் லம்சூஷ்மூநாயா நமக"சிவ மந்திரப் பலன்கள்----------------------------------------(01) "நங்சிவாயநம" - திருமணம் நிறைவேறும்.(02) "அங்சிவாயநம" - தேக நோய் நீங்கும், ஆயுள் வளரும், விருத்தியாகம்.(03) "வங்சிவாயநம" - யோக சித்திகள் பெறலாம்.(04) "ஓம்அங்சிவாய" - எதற்கும் நிவாரணம் கிட்டும்.(05) "கிலிநமசிவாய" - வசிய சக்திகள் வந்தடையும்(06) "ஹிரீநமசிவாய" - விரும்பியது நிறைவேறும்(07)"ஐயும்நமசிவாய" -புத்தி வித்தை மேம்படும்.(08) "நமசிவாய" - பேரருள், அமுதம் கிட்டும்.(09) "உங்யுநமசிவாய" - வியாதிகள் விலகும்(10) "கிலியுநமசிவாய" - நாடியது சித்திக்கும்.(11) "சிங்வங்நமசிவாய" - கடன்கள் தீரும்.(12) "நமசிவாயவங்" - பூமி கிடைக்கும்.(13) "சவ்வுஞ்சிவாய" - சந்தான பாக்யம் ஏற்படும்.(14) "சிங்றீங்" - வேதானந்த ஞானியாவார்(15) "உங்றீம்" - ரிஷிகள் ஆவார்.(16) "சிவாயநம" - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.(17) "அங்நங் சிவாய" - தேக வளம் ஏற்படும்(18) "அவ்வுஞ் சிவாயநம" - சிவ தரிசனம் காணலாம்(19)"ஓம் நமசிவாய" - காலனை வெல்லலாம்.(20) "லங்ஸ்ரீறியுங் நமசிவாய" - விளைச்சல் மேம்படும்.(21) "ஓம் நமசிவாய" - வாணிபங்கள் மேன்மையுறும்.(22) "ஓம் அங்உங்சிவாயநம" - வாழ்வு உயரும், வளம் பெருகும்.(23) "ஓம் ஸ்ரீறியும் சிவாயநம" - அரச போகங்கள் கிடைக்கும்.(24) "ஓம் நமசிவாய" - சிரரோகம் நீங்கும்.(25) "ஓங் அங்சிவாய நம" - அக்னி குளிர்ச்சியைத் தரும்.எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ ஜெபம் செய்ய ஆரம்பியுங்கள். உங்கள் பக்தி, சிரத்தைக்கு ஏற்ப பலன் கிடைக்கும்.மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப உருவேற்றி ஜெபிக்க வேண்டும். மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும். மந்திரம் நன்கு செயல்பட சைவ உணவு மற்றும் சில யோக பயிற்சிகள் முக்கியம்.
  • 1421
அர்த்தம் உள்ள புகைப்படம்....
  • 1428
அர்த்தம் புரிகிறதா?
  • 1436
சரிதானே-?
  • 1449
  • 1453
தேவலோக வளம் தரும் நிறைபணி உற்சவம்..! திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் நடைபெறும் விழா ...தியாகராஜர் ஆலயத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிறைபணி உற்சவ விழாவில் ஆலய மூலஸ்தான பிரகாரம் தேவலோகம் போல் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றும். ஆண்டு தோறும் நடைபெறக்கூடிய நிறை பணி விழாவானது புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திர தினத்தில் மாலை சாயரட்சை வேலையில் இவ்வாலயத்தில் மட்டும் நடைபெறக்கூடிய பிரத்தியோக விழா.நிறைபணி விழா என்பது தேவலோகத்தில் உள்ள தேவேந்திரன் பூலோகத்தில் திருவாரூரில் அருள்பாலிக்கும் தியாகராஜ சுவாமியை வழிபட வேண்டுவதாகவும், அதற்கு தியாகராஜ சுவாமி புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திர நாளில் சாயரட்சை காலத்தில் மட்டும் வழிபட அனுமதித்ததாக புராணம் கூறுகிறது.இந்த ஐதீகத்தின் படி நிறைபணி நாளான புரட்டாசி மாத பூரட்டாதி நட்சத்திர தினத்தில் பூலோகத்திற்க்கு தேவேந்திரன் வருவதற்கு ஏற்ப தேவலோகம் போன்று தியாகராஜ சுவாமி அருள்பாலிக்கும் மூலஸ்தான பிரகாரம் முழுவதும் வண்ண வண்ண புடவைகளாலும், பழங்கள், காய்கறிகள், வாழைமரம், தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. சாயரட்சை காலமான மாலை 6 மணிக்கு ஸ்ரீதியாகராஜ சுவாமிக்கு விஷேச பூஜைகளும், இரவு முகுந்தா சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெறும்.. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் நிறைபணி விழாவில் பங்கேற்று ஸ்ரீதியாகராஜ சுவாமியை வழிபட்டால் தேவலோகத்தில் கிடைப்பதை போன்று அனைத்து வளங்களும் பெற்று இன்புற்று வாழ்வாங்கு வாழலாம் என்பது ஐதீகம். இந்த ஆண்டு 15-10-2024. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு பூரட்டாதி நட்சத்திர நாளில் நடைபெறுகிறது ..
  • 1459
·
Added a post
ஜப்பானின் கியூ ஷீராட்டகி என்கிற ஊரில் தினமும் ஒரே ஒரு ரயில் மட்டும் வந்து செல்லும் ரயில் நிலையம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த ரயில் நிலையத்துக்கு போதிய பயணிகள் வராததால் ஜப்பானிய ரெயில்வே அந்த ரயில் நிலையத்தை 2015 ம் ஆண்டு உடனடியாக மூடி விட முடிவு செய்தது. ரயில் நிலையத்தை மூடும் முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்ததில் கன ஹரதா என்கிற ஒரே ஒரு பள்ளி மாணவி மட்டும் தினமும் கியூ ஷிராட்டகி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 35 நிமிடங்கள் பயணம் செய்து மற்றுமோர் ரயில் நிலையத்தை அடைந்து அதன் பின் பள்ளிக்கு செல்வதாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக ரயில் நிலையத்தை மூடினால் மாணவியின் உயர்பள்ளி படிப்பு பாதிக்கும் என்பதால் அந்த மாணவியின் படிப்பு முடியும் வரை கிட்டத்தட்ட 15 மாதங்கள் அந்த ரயில் நிலையத்தை திறந்து வைத்து படிப்பு முடிந்த பின் மூடியது ஜப்பானிய ரயில்வே..!!பொதுவாக ஜப்பானிய மக்கள் உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். அது போல விருந்தோம்பலுக்கும் பெயர் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • 1474
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, புரட்டாசி மாதம் 28 ஆம் தேதி  மேஷம் -ராசி: எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். ஆடம்பரமான செலவுகள் மூலம் விரயங்கள் உண்டாகும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகளிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் ரிஷபம் ராசி: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மருத்துவ துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதம் விலகும். காப்பீடு துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். எதிலும் விழிப்புணர்வுடன் இருக்கவும். உதவி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் மிதுனம் -ராசி: கமிஷன் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வாகனம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். உறவினர்களின் வகையில் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். அலைச்சல் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் கடகம் -ராசி: முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பயனற்ற செயல்களை குறைத்துக் கொள்ளவும். தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். மனதை கட்டுப்பாடுடன் வைத்திருக்கவும். சிறு மற்றும் குறு தொழிலில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் உண்டாகும். திடீர் செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் சிம்மம் -ராசி:மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூல பலன்கள் கிடைக்கும். வெளியூர் பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் அமையும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். குழப்பம் மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம் கன்னி -ராசி: நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு துலாம் -ராசி: வியாபார விஷயங்களில் நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வியாபாரப் பணிகளில் அலைச்சல் இருந்தாலும் லாபமும், அனுபவமும் கிடைக்கும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பாசம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் விருச்சிகம்- ராசி: புதிய வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பூர்வீகம் சம்பந்தமான சுபவிரயங்கள் செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு மேலான பொறுப்புகள் கிடைக்கும். தொலைபேசி தொடர்பான செய்திகளின் மூலம் பயணங்களை மேற்கொள்வீர்கள். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் தனுசு -ராசி: நினைத்த பணிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு பணிகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகப் பணிகளில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நம்பிக்கை மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம் மகரம் -ராசி:குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரிய விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வாகனங்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு கும்பம் –ராசி:வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளின் தயக்கமும், காலதாமதமும் நேரிடும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சுக்கள் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். சிந்தனைப்போக்கில் கவனம் வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை மீனம் -ராசி: கலை சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பிள்ளைகளின் திறமைகளை அறிவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் அலைச்சலுக்கு பின்பு சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். சினம் விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்   இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 1494
ஸ்ரீ குரோதி வருடம் புரட்டாசி மாதம் 28 ஆம் தேதி திங்கட்கிழமை 14.10.2024சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.இன்று அதிகாலை 02.44 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி. இன்று இரவு 10.26 சதயம். பின்னர் பூரட்டாதி. பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 1511
  • 1537