Quote of the Day

பழமொழி: அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
sivam 350
Senthuran 100
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.

ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தாலும் ஆறடி நிலம்தான்

சொந்தம் கோடி ரூபாய் இருந்தாலும் நெற்றிகாசுதான்

மிஞ்சும் ஆடம்பர மாளிகை இருந்தாலும் விறகு மெத்தைதான் மிச்சம்

அன்போ பாசமோ பொருளோ அள்ளிகொடுங்கள்.

  • 7
·
Added a post

தூத்துக்குடி பூல் பாண்டியன் தாத்தா – மனிதநேயத்தால் தமிழ்நாட்டையே நெகிழவைத்த உண்மை கதை!

இன்றைய உலகத்தில், சொந்த குடும்பத்திற்கே உதவ தயங்கும் மனிதர்கள் இருக்கும் நேரத்தில்…

தனக்கு கிடைத்த ஒவ்வொரு ரூபாயையும் சமூக நலனுக்காக செலவழித்து வருகிறார் தூத்துக்குடியை சேர்ந்த பூல் பாண்டியன் தாத்தா!

தூத்துக்குடி மாவட்டத்தின் சாந்திநகர் பகுதியை சேர்ந்த இந்த முதியவர், வாழ்க்கையில் சாதாரண மனிதர் அல்ல…

கஷ்டம், துன்பம், பசி, ஏமாற்றம் – எல்லாவற்றையும் நேரில் சந்தித்து வாழ்ந்த மனிதர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி மும்பைக்கு சென்றிருந்தார்.

அங்கு கட்டிட வேலை, சிறு தொழில்கள், கூலி வேலை என்று கிடைத்த வேலையை செய்து வாழ்க்கையை நடத்தினார்.

ஆனால் வயது ஆக ஆக உடல்நிலை குறைய தொடங்கியது.

அதற்குள் அவரது மனைவியும் இறந்துவிட்டார்.

வாழ்க்கையில் அவருக்கு துணையாக இருக்க வேண்டிய பிள்ளைகளும் அவரை கைவிட்டதாக கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் குடும்பத்திற்காக உழைத்த மனிதர்…

இறுதியில் தனிமையில் நின்றார்.

வேறு வழியின்றி மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்பிய பூல் பாண்டியன் தாத்தா, பேருந்து நிலையங்கள், கோயில் வாசல்கள் போன்ற இடங்களில் பிச்சை எடுத்து வாழ ஆரம்பித்தார்.

ஆனால் அந்த பிச்சை…

அவரது வயிற்றுக்காக மட்டும் இல்லை!

“நான் அனுபவித்த கஷ்டத்தை வேறு யாரும் அனுபவிக்கக் கூடாது…”

என்ற எண்ணமே அவரை ஒரு சாதாரண மனிதரிலிருந்து மாபெரும் மனிதராக மாற்றியது.

ஆரம்பத்தில் அவர் பிச்சையாக கிடைத்த சிறு தொகைகளை சேமித்து, ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், பேனா வாங்கிக் கொடுத்தார்.

சில அரசு பள்ளிகளுக்கு சிறிய உதவிகளும் செய்தார்.

அதன் பிறகு வந்தது கொரோனா காலம்…

நாடு முழுவதும் ஊரடங்கு.

மக்கள் பசி, வேலை இழப்பு, பயம் என்று தவித்துக் கொண்டிருந்த நேரம்.

அந்த நேரத்தில், “இந்த பணம் மக்களுக்கு பயன்பட வேண்டும்” என்று நினைத்த பூல் பாண்டியன் தாத்தா, தானாக சேமித்து வைத்திருந்த ரூ.2 லட்சத்தை தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்!

ஒரு பிச்சைக்காரர் அரசுக்கு லட்சக்கணக்கில் நன்கொடை வழங்கியது அப்போது தமிழகம் முழுவதும் பேசப்பட்டது.

அதன் பிறகு அவர் நிற்கவே இல்லை…

பள்ளி கட்டிடங்களுக்கு உதவி

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி

பொதுநல நிதிக்கு நன்கொடை

சமூக நலத்திட்டங்களுக்கு பண உதவி

இப்படி தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.1.6 கோடி வரை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது!

சொந்தமாக பெரிய வீடு இல்லை…

விலையுயர்ந்த உடைகள் இல்லை…

ஆனால் ஆயிரம் கோடி பணக்காரர்களுக்கும் இல்லாத மனசு இந்த மனிதருக்கு இருக்கிறது!

சமீபத்தில் தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்த பிறகும், அவர் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று பொதுநல நிதிக்காக ரூ.10,000 நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அவரது இந்த செயலை பார்த்து அதிகாரிகளே நெகிழ்ந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசும் அவரை அழைத்து கௌரவித்துள்ளது.

“பணம் இருந்தால்தான் உதவி செய்ய முடியும்” என்று நினைப்பவர்களுக்கு…

“மனசு இருந்தால் போதும்” என்று தனது வாழ்க்கையால் பதில் சொல்லியுள்ளார் பூல் பாண்டியன் தாத்தா!

இப்படிப்பட்ட மனிதர்களுக்கு நாம் தர வேண்டியது மரியாதை மட்டுமல்ல…

இந்த மனிதநேயத்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும்!

  • 7
·
Added a post

வறுமை காரணமாய்

பெற்ற பிள்ளைதனை

வசதியாய் வாழும் பிள்ளையில்லா தமக்கைக்கு

சாகும் வரை ரகசியம் காப்பதாய்

பால்குடி மறக்கும் முன்பே சத்தியம் செய்து

தத்துக் கொடுத்தாள் தங்கை

பசியில்லா வயிறும்

படிப்பும் அறிவும்

பிள்ளைக்கு கிடைத்தால் போதுமென்று

ஊரை விட்டே புலம்பெயர்ந்தாள்

ஆண்டுகள் உருண்டோடியது.

மண்வாசனை மனதோடு ஏக்கம் ஏற்படுத்த

கோயில் திருவிழா சாக்கானது

காலத்தின் பெருங்காற்றில்

அடையாளம் தெரியாமல் மாறிப்போனவள்

திருவிழாக்கூட்டத்தின் பரபரப்பினூடே

ஓரமாய் நின்று கடந்தகாலத்து பல்சக்கரத்தின் பிடியில் வலிய தன்னை செருகிக்கொண்டாள்

வாடிவாசல் திறந்ததும் சீரும் காளையென

கூட்டத்தை கிழித்துக்கொண்டு

எத்தனை முயன்றாலும் மறைக்க இயலா தன் சாயலோடு

வந்த

இளைஞனை பார்த்ததும்

உடல் குலுங்க நடப்பிற்கு வந்தாள்

இரு புருவத்தின் நடுவிலும் தன்னைப்போலவே

சின்னதாய் ஒரு வெட்டு

அப்பனைப்போலவே லேசாய் செம்பட்டை படிந்த தலைமுடி

முரட்டுகைகளின் ரோமங்கள் கூட அப்பனை உரித்தாற் போன்று

தன்னை நோக்கி ஏன் வேகமாய் வருகிறான்?

படபடத்துக்கொண்டாள்

வியர்த்துப் போனது ஒரு நொடியில்

தெரிந்து போனதா நான் தான் அம்மா என்று?

அம்மா என்று அழைக்கும் போது என்ன எதிர்வினை ஆற்றுவது?

செய்த சத்தியம் என்னவாகும்?

எதற்காய் பாழாய் போன திருவிழாவிற்கு வந்தேனோ?

மனம் அடுக்கடுக்காய் கேட்டுக்கொண்டது

நினைத்தது போலவே

பெருங்குரலெடுத்து

‘அம்மா’ அம்மா எனக் கத்தினான்

எந்த விளிக்காய் இத்தனை இரவுகள் தூங்காமல் தவித்தாளோ

இப்போது அது செவிப்பறையில் வந்து மோதுகிறது

எனைப்பெத்தாரே!

என்குலசாமி என உரக்கக் குரலெடுத்து அழுது ஆரத் தழுவ எத்தனிக்கையில்

“அம்மா… கூட்டம் அதிகமா இருக்கு…அங்கேயே இரு

நான் வரேன்" என எங்கோ எட்டி வந்த தன் அக்காவைப்பார்த்து அவன் சொன்ன நொடியில்

தத்து கொடுத்த நாளைவிடவும்

ஏகமாய் நொறுங்கிப்போனாள்

-- சியாமளா ரமேஷ்பாபு

  • 7

நமக்கு வரக் கூடாது என்ற எண்ணத்தைவிட...

நம்மால் அடுத்தவருக்கு (கஸ்டம்) வரக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கும் போதுதான்..

இங்குள்ள நிலைமைகள் அனைத்தும் மாறும்.

  • 11
  • 62
  • 60

Good Morning

  • 61
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: புது திட்டம் தீட்டுவீர். பழைய நண்பர்கள் தேடி வருவர். தாயாரின் மருத்துவச் செலவு குறையும். வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். பொறுப்புகள் கூடும்.

ரிஷபம்: வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்கவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

மிதுனம்: பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பூர்வீக சொத்துப்பிரச்சினையை பேசித் தீர்ப்பீர். மூத்த சகோதரர் உதவுவார். வியா பாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

கடகம்: முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். குடும்பத்தில் அனுசரித்துப் போகவும். வியாபாரம், அலுவலகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

சிம்மம்: பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். இங்கிதமாக பேசி சுற்றியிருப்பவர்களை கவருவீர். பிரபலங்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர்கள். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.

கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். தந்தை வழியில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். வியாபாரம் சூடு பிடித்து, ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மதிப்பு உயரும். உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பர்.

விருச்சிகம்: எதிர்பார்த்தபடி சில பணிகளை முடிப்பீர். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்.

தனுசு: வீட்டில் குழப்பம் ஏற்படலாம். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் இழுபறியாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு வியாபாரத்தில் சிக்கல் வரலாம். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு முக்கிய பணிகளை முடிப்பீர்கள். சொந்த ஊரிலிருந்து நற்செய்திகள் வரும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் வராது என்றிருந்த பாக்கிகள் வந்து சேரும். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். பொறுப்புகள் கூடும்.

கும்பம்: விலையுயர்ந்த அலங்காரப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டி விலகும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார்.

மீனம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர். திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிப்பீர். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் இருந்து வந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.

  • 100
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 7 ஆம் தேதி வியாழக்கிழமை 21.5.2026.

இன்று பிற்பகல் 02.31 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி

இன்று காலை 09.50 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.

இன்று அதிகாலை 03.34 வரை பவம். பின்னர் பிற்பகல் 02.31 வரை பாலவம். பின்பு கௌலவம்.

இன்று அதிகாலை 05.52 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=519&dpx=2&t=1779339747

நல்ல நேரம்:

காலை : 10.30முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 116

Good Morning...

  • 111
  • 312
  • 311
  • 314
  • 324
  • 323
  • 329

இது உண்மையா?

  • 330
  • 329
  • 328
  • 328
·
Added a post
·

கல்யாணம் ஆன ஆண்களுக்கு கடைக்குப் போயி காய் வாங்கி வருவதென்பது ஒரு "ஆசிட் டெஸ்ட்"..

மொதல்ல "சும்மா தானே உக்காந்திருக்கீங்க போய் காய் வாங்கிட்டு வாங்க"ம்பாங்க,

நம்முடைய யூ-டியூப் அறிவைப் பயன்படுத்தி கீரை, பாவக்காய், வாழைத்தண்டுன்னு வாங்கிட்டுப் போனா, "பாவக்காய் வாங்கிட்டு வந்தா இதை வெச்சு சாம்பார் எப்படி வைக்கிறது?" ம்பாங்க,

வெண்டைக்காய் ஃபிரஷ்ஷா இருக்குன்னு கடைக்காரர் சொன்னத நம்பி வாங்குனா "வெண்டைக்காய், முத்தலா இருக்கு"ம்பாங்க. "முருங்கைக்காய் கேட்டா நீங்க முருங்கைக் குச்சியைப் புடுங்கிட்டு வந்திருக்கீங்க"ம்பாங்க

சரி அதாவது பரவாயில்லை.. "வருவலுக்கும் பொறியலுக்கும் காய் வாங்கிட்டு வாங்க" ம்பாங்க..

நமக்குத் தெரிஞ்சதெல்லாம் ரத்தப் பொறியல், மூளைவருவல் தான் தான் அதை வாங்க முடியுமா?.

"என்னென்ன காய்னு சொன்னாத்தானேன்னு வாங்கறதுக்கு"ன்னு நாம எகிறினா, ரொம்ப குத்தலா "தட்டுல வெச்சா நல்லா இருக்குன்னு கூட சொல்லாம , நீ சாப்பிட்டியான்னு கூட கேக்காமத் திங்கத் தெரியுது ஆனால் என்ன காய்னு மட்டும் தெரியலைல்ல..?" அப்படீன்னு ஒரு கூக்ளி சுழலும்..

இது எதுவுமே இல்லாம சரியாப் பாத்து காய் வாங்கிட்டு வந்தம்னா ஒவ்வொன்னுக்கும் விலை என்னான்னு கேப்பாங்க.. நாமும் ரொம்ப புத்திசாலித்தனமா பேப்பர்ல எழுதி வெச்சு சொன்னா, " இங்க தெருவுல வந்துச்சு.. இவ்ளோ விலை இல்லையே உங்களை நல்லா ஏமாத்திட்டான், பேரம் பேச வேண்டியதானே கேட்ட காசை அப்படியே தூக்கிக் குடுத்துறுவீங்களோ"ன்னு

ஒரு யார்க்கர் வரும்..

சரி வம்பே வேணாம்னு காய் கடைல இருந்து போன் செஞ்சு இன்ன காய் இருக்கு இன்ன விலைல இருக்கு வாங்கவா வேணாமான்னு கேட்டா,

" ஒரு நாள் ஒரு பொழுது கடைக்கு அனுப்புனா எத்தனை கேள்வி கேப்பாங்க?"ன்னு இன் ஸ்விங் போடுவாங்க.

இந்த எல்லாத் தாக்குதலுக்கும் ஈடு கொடுத்து கவனமா வாங்கிட்டு வந்து குடுத்தா.. "கருவேப்பிலை கொத்தமல்லி கொசுறு வாங்கவே இல்லையே"ன்னு ஒரு 'ஒரு துல்லிய தாக்குதல்' வரும் பாருங்க..

  • 333
  • 328
  • 327
  • 330
New People