நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பூ மற்றும் முன்னணி இயக்குனர் சுந்தர் சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகா சுந்தர் - ஸ்ரவண் ஸ்ரீனிவாசன் திருமணம், கோவாவில் மிக நெருக்கமான உறவினர்கள் மத்தியில் பிரம்மாண்டமாகவும் அதேசமயம் எளிமையாகவும் நடந்து முடிந்தது. மணமக்களின் விருப்பப்படி மிகவும் எளிமையாக, நெருங்கிய சொந்தங்கள் மற்றும் திரைத்துறை நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் நெகிழ்ச்சியான, எமோஷனலான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமண சடங்குகள் தொடங்குவதற்கு முன்பு குஷ்பூ குத்துவிளக்கு ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து, மணமகன் ஸ்ரவண், அவந்திகாவின் கழுத்தில் தாலி கட்டும் அந்த நொடியில், குஷ்பூ உணர்ச்சிப் பெருக்கால் கைகளைக் கூப்பி கும்பிட்டபடியே ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுகிறார். அருகில் நிற்கும் கணவர் சுந்தர் சி-யும், ஆர்த்தி ரவியும், இளைய மகள் அனந்திதாவும் குஷ்பூவைத் தேற்றினார்கள். இந்த எமோஷனல் வீடியோ ரசிகர்களின் இதயத்தை தொட்டது. ஒரு தாய்க்கு தான் தனது மகளின் கழுத்தில் தாலி ஏறும் போது மனம் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கும் அந்த மகிழ்ச்சயின் வெளிப்பாடு தான் குஷ்பு கண்ணில் இருந்து வந்த ஆனந்த் கண்ணீர்.
திருமணம் முடிந்த கையோடு திருமண போட்டோவை பகிர்ந்து தனது மகளுக்கு திருமணதை அனைவருக்கும் அறிவித்தார். அந்த பதிவில், ஒரு பெற்றோராக எங்கள் மனதில் இருக்கும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவந்திகா - ஸ்ரவண் விருப்பப்படியே இந்தத் திருமணம் மிக நெருக்கமானவர்கள் மத்தியில் நடத்தப்பட்டது. வாழ்க்கையின் மிகச் சிறந்த நினைவுகள் நம் அன்பானவர்களுடன் இருக்கும் போதுதான் உருவாகிறது என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருந்தார்.
குஷ்புவின் மகளுக்கு பலரும் வாழ்த்து சொல்லிய நிலையில் ஒரு சில விஷமிகள் கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். திரையுலகமே சோகத்தில் மூழ்கியிருந்த அந்த நேரத்தில், குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து மகளின் திருமணப் போட்டோவை பகிர்வது சரியில்லை என்றும், திருமணப் போட்டோக்களைப் போட எப்படி மனசு வருகிறது? என்று விமர்வித்தனர். இந்த விமர்சனங்களால் ஆத்திரமடைந்த குஷ்பூ, என் மகளின் திருமணம் நடந்து 48 மணி நேரம் கூட இன்னும் முழுமையாக முடியவில்லை. என் குடும்பத்தின் மிக முக்கியமான ஒரு மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாட எனக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது. ஒருத்தரின் மரணத்திற்கு மரியாதை கொடுப்பது என்பது வேறு, அதற்காகத் தன் சொந்த மகளின் திருமணக் கொண்டாட்டத்தையே நிறுத்தச் சொல்வது முட்டாள்தனம் என சரியான பதிலடி கொடுத்து இருந்தார்.
தமிழில், வினய் நடித்த ‘மிரட்டல்’ படத்தில் நாயகியாக நடித்தவர் ஷர்மிளா மந்த்ரே. கன்னடத்தில் சில படங்களில் நடித்துள்ள இவர், விமல் நடித்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’, ‘சண்டக்காரி’, தினேஷின் ‘நானும் சிங்கிள்தான்’ ஆகிய தமிழ்ப் படங்களைத் தயாரித்துள்ளார்.
இவருக்கும் பிரபல தமிழ்ப் பட தயாரிப்பாளர் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரத்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமணத் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று ஷர்மிளா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குக் கன்னட, தமிழ்த் திரைப்படத் துறையினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கனடாவின் வடமேற்கு பிராந்தியத்தில் காட்டுத்தீ கட்டுப்பாடின்றி பரவி வருவதை அடுத்து, அங்குள்ள தொலைதூர கிராம மக்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாகாண அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத் தகவலின்படி, 'டெஹ்சோ' (Dehcho) காட்டுத்தீயானது ஃபோர்ட் சிம்ப்சன் விமான நிலையத்திற்கு மேற்கே வெறும் 7 கிலோமீட்டர் தொலைவில் சுழன்றடித்து வருகின்றது.
இக்காட்டுத்தீ தற்போது சுமார் 4.2 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு தீவிரமாகப் பரவியுள்ளது.
ஃபோர்ட் சிம்ப்சன் கிராம அதிகாரிகள் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பில், அங்கு வசிக்கும் சுமார் 1,300 குடியிருப்பாளர்களும் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி, கிழக்கு நோக்கி 630 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யெலோநைஃப் நகரின் 'மல்டிபிளக்ஸ் அரங்கம்' நோக்கிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
யெலோநைஃப் நகர நிர்வாகம் தனது சமூக ஊடகப் பதிவில், இந்த மல்டிபிளக்ஸ் அரங்கத்தின் உடற்பயிற்சிக் கூடம் தற்காலிக தங்குமிடமாகவும், அவசர உதவி மையமாகவும் செயல்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.
விமானம் மூலம் வெளியேற விரும்பும் பொதுமக்கள் உடனடியாக உள்ளூர் பொழுதுபோக்கு மையத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
திங்கட்கிழமை அதிகாலையுடன் கடைசி அவசரகால விமான சேவை நிறைவடைந்தது. சாலை வழியாக வெளியேறும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பைக் கருதி, எரிபொருள் நிலையங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் தொடர்ந்து திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளைச் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வடமேற்கு பிராந்திய காட்டுத்தீ தடுப்பு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீ இன்னும் கிராம குடியிருப்புப் பகுதிக்குள் நுழையவில்லை என்றும், இதுவரை பொதுக் கட்டடங்களுக்கோ அல்லது வீடுகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
உடைப்பு
நட்பு உடைந்து ,
முக நூலானது ...
சுற்றம் உடைந்து ,
வாட்சப் ஆனது ...
வாழ்த்துக்கள் உடைந்து ,
ஸ்டேட்டஸ் ஆனது ...
உணர்வுகள் உடைந்து ,
ஸ்மைலியாய் ஆனது ...
குளக்கரை உடைந்து ,
குளியலறை ஆனது ...
நெற்களம் உடைந்து ,
கட்டடமானது ...
காலநிலை உடைந்து ,
வெப்பமயமானது ...
வள நிலம் உடைந்து ,
தரிசாய் ஆனது ...
துணிப்பை உடைந்து ,
நெகிழியானது ...
அங்காடி உடைந்து
அமேசான் ஆனது ...
விளை நிலம் உடைந்து ,
மனை நிலம் ஆனது ...
ஒத்தையடி பாதை உடைந்து ,
எட்டு வழியானது ...
கடிதம் உடைந்து ,
இ மெயிலானது ...
விளையாட்டு உடைந்து ,
வீடியோ கேம் ஆனது ...
புத்தகம் உடைந்து ,
இ-புக் ஆனது ...
சோறு உடைந்து
'ஓட்ஸ்'சாய்ப் போனது...
இட்லி உடைந்து ,
பர்கர் ஆனது ...
தோசை உடைந்து ,
பிட்சாவானது ...
குடிநீர் உடைந்து
குப்பியில் ஆனது ...
பசும்பால் உடைந்து ,
பாக்கெட் ஆனது ...
வெற்றிலை உடைந்து ,
பீடாவானது ...
தொலைபேசி உடைந்து ,
கைப்பேசியானது ...
வங்கி உடைந்து ,
பே டி எம் ஆனது ...
நூலகம் உடைந்து ,
கூகுளாய்ப் போனது ...
புகைப்படம் உடைந்து ,
செல்ஃபியாய் ஆனது ...
பொது நலம் உடைந்து ,
சுய நலமானது ...
பொறுமை உடைந்து ,
அவசரமானது ..
"நிரந்தரம் உடைவது
நிதர்சனம்...
ஆகையால் ,
உடைவது
உலகினில்
நிரந்தரமானது " ..!
எல்லாவற்றையும் இழந்து
புலம்பிக் கொண்டு
இருக்கின்றான்,
இன்றைய கால மனிதன்....
தொலைந்துபோன காலம்
மீண்டும் தொடருமா...?
*படித்தேன்...*
*கனத்தேன்...*
*நெகிழ்ந்தேன்...*
பகிர்கிறேன்.
(30.06.2026)
கேரளாவில் 1973ஆம் ஆண்டு பிறந்தவர் சித்தாரா (இயற்பெயர் சித்தாரா நயர்). மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழித் திரையுலகங்களிலும் தடம் பதித்த இவர், சிறு வயதிலேய நடனத்தில் ஈடுபாடு கொண்டு தனது பதின்மூன்றாம் வயதில் அரங்கேற்றம் செய்தார்.
இடம்: கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், முழக்குன்னு – மிருதங்க ஷைலேஸ்வரி திருக்கோயில்
இந்தியாவில் ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன.
சில கோயில்கள் தங்கள் பிரம்மாண்டமான கட்டிடக் கலைக்காக புகழ் பெற்றவை.
சில கோயில்கள் அங்கே நிகழ்ந்த அற்புதங்களால் உலகம் முழுவதும் அறியப்பட்டவை.
ஆனால்...
திருடர்களாலேயே உலகம் முழுவதும் பேசப்பட்ட கோயில் ஒன்று இருக்கிறது என்றால் நம்புவீர்களா?
ஒரு சிலையை...
ஒருமுறை அல்ல...
இருமுறை அல்ல...
மூன்று முறை திருடிச் செல்ல முயன்றும்...
ஒவ்வொரு முறையும் அந்தத் தேவி...
மீண்டும் தனது சொந்த ஆலயத்திற்கே திரும்பி வந்ததாகப் பக்தர்கள் நம்பும் ஒரு அதிசய வரலாறு இன்றும் கேரள மண்ணில் வாழ்ந்து வருகிறது.
அந்த அற்புதத் தலம்தான்...
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், முழக்குன்னுவில் அமைந்துள்ள மிருதங்க ஷைலேஸ்வரி திருக்கோயில்.
பரசுராமர் நிறுவிய 108 சக்தி தலங்களில் ஒன்று
கேரளத்தின் பல புனிதத் தலங்களைப் போலவே...
இந்த ஆலயமும் பக்தர்களிடம் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.
புராணங்களின்படி...
பரசுராமர் கடலிலிருந்து நிலத்தை உருவாக்கி...
அந்தப் புனித பூமியில் 108 துர்கை ஆலயங்களை நிறுவியதாக நம்பப்படுகிறது.
அவற்றில் ஒன்றாகவே இந்த மிருதங்க ஷைலேஸ்வரி திருக்கோயிலும் கருதப்படுகிறது.
'மிருதங்க ஷைலேஸ்வரி' என்ற பெயருக்கு பின்னால் இருக்கும் மர்மம்
"மிருதங்கம்" என்பது இந்தியாவின் மிகவும் தொன்மையான தாள இசைக்கருவிகளில் ஒன்று.
இந்த இசைக்கருவி தெய்வீக இசையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
புராணக் கதையின்படி...
வானிலிருந்து மிருதங்க வடிவத்தை ஒத்த ஒரு கல் இந்தப் பகுதியில் விழுந்ததாகவும்...
அந்தக் கல்லில் ஆதிபராசக்தியின் தெய்வீக சக்தியை பரசுராமர் உணர்ந்ததாகவும்...
அந்த இடத்திலேயே தேவிக்கு ஆலயம் எழுப்பப்பட்டதாகவும் தல புராணம் கூறுகிறது.
அதனால்தான்...
அம்பாள் "மிருதங்க ஷைலேஸ்வரி" என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார்.
கதகளி கலையின் பிறப்பிடம் என்ற நம்பிக்கை
இந்த ஆலயத்தைப் பற்றிய மற்றொரு சிறப்பும் மிகவும் சுவாரசியமானது.
கேரளத்தின் உலகப் புகழ்பெற்ற கதகளி கலை வடிவம் முதன்முதலில் இந்தத் தலத்திலேயே உருவானதாக உள்ளூர் மரபு நம்பிக்கை கூறுகிறது.
அதனால்...
இந்த ஆலயம் இசைக்கும்...
நடனத்திற்கும்...
கலைக்கும்...
அறிவுக்கும் அருள் வழங்கும் தலமாக மதிக்கப்படுகிறது.
ஒரே தேவி... மூன்று அருள்வடிவங்கள்
இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் அம்பாளை...
பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப...
காளியாக...
சரஸ்வதியாக...
மகாலட்சுமியாக...
மூன்று வடிவங்களிலும் வழிபடுகின்றனர்.
அறிவு வேண்டுபவர்கள்...
கல்வி வேண்டுபவர்கள்...
செல்வ வளம் நாடுபவர்கள்...
தீய சக்திகள் விலக வேண்டும் என்று விரும்புபவர்கள்...
அனைவரும் இந்த அம்பாளை தரிசிக்க வருகின்றனர்.
முதல் திருட்டு... ஆனால் நடந்தது என்ன?
1979ஆம் ஆண்டு...
ஒரு நாள்...
அம்பாளின் சிலை காணாமல் போனது.
கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.
பலரும் தேடத் தொடங்கினர்.
ஆனால்...
சில மணி நேரங்களுக்குப் பிறகு...
கோயிலிலிருந்து அதிக தூரம் செல்லாமல்...
ஒரு இடத்தில் அந்தச் சிலை அப்படியே கிடந்தது.
திருடர்கள் ஏன் அங்கேயே விட்டுச் சென்றார்கள்?
என்ன நடந்தது?
யாருக்கும் தெரியவில்லை.
சிலை மீண்டும் ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இரண்டாவது திருட்டு... 42 நாட்கள் கழித்து நடந்த அதிசயம்
சில ஆண்டுகளுக்குப் பிறகு...
மீண்டும் அதே சிலை திருடப்பட்டது.
இந்த முறை...
போலீசாரும் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
ஆனால் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
அப்போது...
கோயில் நிர்வாகத்தினர்...
"அம்பாள் தானாகவே திரும்பி வருவாள்...
42 நாட்களுக்குள் சிலை கிடைக்கும்..."
என்று உறுதியாகக் கூறியதாக பக்தர்கள் நினைவுகூருகின்றனர்.
ஆச்சரியமாக...
42ஆம் நாள்...
பாலக்காடு மாவட்டத்திற்கு அருகிலுள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்நாடு எல்லைப் பகுதியில்...
அந்தச் சிலை கிடைத்தது.
அதன் அருகில் இருந்ததாகக் கூறப்படும் கடிதத்தில்...
"இந்தச் சிலை மிருதங்க ஷைலேஸ்வரி கோயிலுக்குச் சொந்தமானது. இதற்கு மேல் எங்களால் இதை எடுத்துச் செல்ல முடியவில்லை."
என்று எழுதப்பட்டிருந்ததாக தல வரலாற்றில் கூறப்படுகிறது.
மூன்றாவது திருட்டு... ஆனால் திருடர்களே பூஜை செய்த சம்பவம்
அதற்குப் பிறகும்...
மூன்றாவது முறையாக...
கர்நாடகாவைச் சேர்ந்த சிலர்...
வயநாடு வழியாகச் சிலையைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பயணத்தின் போது...
ஒரு விடுதியில் சிலையை வைத்தனர்.
ஆனால்...
திருடர்களே...
அம்பாளுக்கு பூ சாத்தி...
தீபம் ஏற்றி...
பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு...
அவர்களே போலீசாருக்கு தகவல் தெரிவித்து...
"சிலை இங்கே இருக்கிறது...
வந்து எடுத்துச் செல்லுங்கள்..."
என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றதாகப் பக்தர்கள் கூறுகின்றனர்.
திருடர்களின் ஒரே பதில்...
சில ஆண்டுகளுக்குப் பிறகு...
வேறு ஒரு வழக்கில்...
இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சிலர் போலீசாரிடம் சிக்கியபோது...
ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
"ஏன் சிலையை பாதியிலேயே விட்டுவிட்டு ஓடிவிட்டீர்கள்?"
அவர்களது பதில்...
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அவர்கள் கூறியதாவது...
சிலையை எடுத்துச் சென்ற சில நேரத்திலேயே...
"நாங்கள் யார்...?"
"இந்தச் சிலையை ஏன் எடுத்துச் செல்கிறோம்...?"
"எங்கே போகிறோம்...?"
என்பதே நினைவில் இல்லாமல் போய்விட்டது.
மனதில் காரணமே இல்லாத பயம்...
விளக்க முடியாத குழப்பம்...
அவர்களை ஆட்கொண்டதாம்.
அதனால்...
சிலையை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டதாக அவர்கள் கூறியதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இன்றும் பாதுகாப்பின்றி இருக்கும் ஆலயம்
இன்றும்...
இந்த ஆலயம் மிகப்பெரிய பாதுகாப்பு அமைப்புகள் இல்லாமல் இயங்கி வருகிறது.
இருப்பினும்...
அம்பாளின் அருளால்...
யார் சிலையை எடுத்துச் சென்றாலும்...
அவள் மீண்டும் தனது ஆலயத்திற்கே திரும்பி வருவாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை...
இன்றும் அங்குள்ள மக்களின் இதயங்களில் உயிருடன் வாழ்கிறது.
நம்பிக்கையா? அதிசயமா?
இந்த நிகழ்வுகள் அனைத்தும் பக்தர்களால் தலைமுறைகளாகப் பகிரப்பட்டு வரும் தல வரலாறுகளும் நம்பிக்கைகளுமாகும்.
அவற்றை ஒவ்வொருவரும் தங்களது நம்பிக்கையின் அடிப்படையில் அணுகலாம்.
ஆனால்...
ஒரு விஷயம் மட்டும் மறுக்க முடியாது.
இந்த ஆலயம்...
இன்று ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் புனிதத் தலமாகத் திகழ்கிறது.
அதன் பின்னால்...
இந்த மர்மமான வரலாறும் முக்கிய காரணமாக உள்ளது.
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் மறக்க முடியாத ஒரு குடும்ப தருணம் நிகழ்ந்தது.
இந்த சந்திப்பு ஒரு சாதாரண குடும்ப நிகழ்வு அல்ல. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 தலைமுறை பெண்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடிய அரிய தருணமாக இது அமைந்தது. உலகில் மிகவும் அரிதாகவே இத்தகைய நிகழ்வுகள்
வயது எவ்வளவு வித்தியாசமாக இருந்தாலும், அன்பு என்ற மொழி எல்லா தலைமுறைகளையும் இணைக்கிறது என்பதை இந்த தருணம் மீண்டும் நிரூபித்தது.
உங்கள் குடும்பத்தில் எத்தனை தலைமுறைகள் ஒன்றாக வாழ்ந்திருக்கின்றன?
கோபுரத்தின் உச்சியில் கலசம் அல்ல... சுதர்சன சக்கரம்! உலகப் புகழ்பெற்ற ஸ்ரீநாத்ஜி திருக்கோயிலின் ஆச்சரியப்படுத்தும் சிறப்புகள்
இந்தியாவின் பெரும்பாலான இந்துக் கோயில்களின் கோபுர உச்சியில் கலசங்கள் அமைந்திருப்பதை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.
ஆனால்...
ஒரு கோயிலில் மட்டும்...
கோபுரத்தின் உச்சியில் கலசத்திற்குப் பதிலாக பிரம்மாண்டமான சுதர்சன சக்கரம் பொருத்தப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
அதுமட்டுமல்ல...
அந்த சக்கரத்திற்கு குறிப்பிட்ட நேர இடைவெளியில் வாசனைத் திரவியங்களைத் தடவி பராமரிக்கும் ஒரு தனித்துவமான மரபும் இன்றளவும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த அபூர்வமான சிறப்பைக் கொண்ட திருத்தலம்தான்...
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீநாத்ஜி திருக்கோயில்.
இது வெறும் ஒரு கிருஷ்ணர் ஆலயம் மட்டுமல்ல...
பக்தி, வரலாறு, வைணவ மரபு, அரசியல் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் உயிர்ப்புடன் வாழும் ஒரு தெய்வீக உலகம்.
வாங்க...
இந்த அரிய திருத்தலத்தின் மறைக்கப்பட்ட வரலாற்றை விரிவாக அறிந்து கொள்வோம்.
குறிப்பு: இக்கட்டுரையில் இடம்பெறும் சில நிகழ்வுகள் மற்றும் வழிபாட்டு மரபுகள், உள்ளூர் வைணவ மரபுகள் மற்றும் ஆலய பாரம்பரியத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
எங்கு அமைந்துள்ளது?
இந்தப் புகழ்பெற்ற திருத்தலம்,
ராஜஸ்தான் மாநிலம்
உதய்பூருக்கு வடக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில்
பனாஸ் ஆற்றங்கரையில் அமைந்துள்ள நாத்த்வாரா (Nathdwara) என்னும் புனித நகரத்தில் உள்ளது.
"நாத்த்வாரா" என்ற சொல்லுக்கு...
"இறைவனின் வாசல்" அல்லது "நாதனை அடையும் நுழைவாயில்" என்ற பொருள் கூறப்படுகிறது.
ஸ்ரீநாத்ஜி யார்?
இங்கு எழுந்தருளியிருப்பவர்...
ஸ்ரீகிருஷ்ணர்.
ஆனால்...
சாதாரண கிருஷ்ணர் வடிவில் அல்ல.
ஏழு வயது பாலக கிருஷ்ணராக...
இடது கையை உயர்த்தி கோவர்த்தன மலையைத் தாங்கிய திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
வலது கை இடுப்பில் சாய்ந்த நிலையில் அமைந்துள்ளது.
இந்தத் திருவுருவமே ஸ்ரீநாத்ஜி என்று பக்தர்களால் போற்றப்படுகிறது.
பிருந்தாவனத்திலிருந்து ராஜஸ்தானுக்கு
இந்தத் திருவுருவம் முதலில்
பிருந்தாவனம் பகுதியில் வழிபாட்டில் இருந்ததாக வைணவ மரபுகள் கூறுகின்றன.
17-ஆம் நூற்றாண்டில், வடஇந்தியாவில் நடைபெற்ற அரசியல் மற்றும் மத கலவரங்களின் போது, பல ஆலயத் திருவுருவங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்தச் சூழலில், ஸ்ரீநாத்ஜி திருவுருவமும் நாத்த்வாரா பகுதிக்கு கொண்டு வரப்பட்டதாக வரலாற்று மரபுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வு பொதுவாக ஔரங்கசீப் ஆட்சிக் காலத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது.
வண்டி நின்ற இடமே திருத்தலம்
உள்ளூர் மரபின்படி...
திருவுருவத்தை மாட்டு வண்டியில் எடுத்துச் சென்றபோது...
நாத்த்வாரா வந்த இடத்தில் வண்டி திடீரென நின்றுவிட்டதாம்.
எவ்வளவு முயன்றும் வண்டி நகரவில்லை.
"இறைவன் இவ்விடத்திலேயே எழுந்தருள விரும்புகிறார்" என்று உணர்ந்த வைணவ ஆசாரியர்கள்...
அங்கேயே ஸ்ரீநாத்ஜியை பிரதிஷ்டை செய்ததாக பக்தி மரபு கூறுகிறது.
நாதமுனிகளுடன் தொடர்பு?
சில உள்ளூர் மரபுகளில், நாதமுனிகள் அவர்களுடன் இந்தத் திருத்தலத்தை இணைத்து கூறப்படும் கதைகள் காணப்படுகின்றன.
ஆனால், வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில், நாத்த்வாரா ஆலயத்தின் பிரதான சமய மரபு வல்லபாச்சாரியார் நிறுவிய புஷ்டிமார்க் மரபுடன் தொடர்புடையதாகும்.
எனவே, நாதமுனிகள் பற்றிய குறிப்புகளை பாரம்பரியக் கதையாகவே அணுக வேண்டும்.
புஷ்டிமார்க் மரபின் மையம்
இந்த ஆலயம்...
வல்லபாச்சாரியார் நிறுவிய புஷ்டிமார்க் (அருளால் ஆன பக்தி மார்க்கம்) மரபின் மிக முக்கியத் திருத்தலமாகக் கருதப்படுகிறது.
பின்னர் அவரது மகனான விட்டல்நாதர் இந்த வழிபாட்டு முறையை விரிவுபடுத்தினார்.
இன்றும் அந்த மரபே இங்கு பின்பற்றப்படுகிறது.
குழந்தை கண்ணனுக்கான வழிபாடு
இங்கு...
பெருமாளை ஒரு சிறு குழந்தையாகவே கருதி வழிபடுகின்றனர்.
அதனால்...
அவரது அன்றாட சேவைகளும் குழந்தையைப் பராமரிப்பது போல அமைந்துள்ளன.
அவருக்கு:
உணவு படைக்கப்படுகிறது.
ஓய்வு அளிக்கப்படுகிறது.
பல முறை ஆடை மாற்றப்படுகிறது.
பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
அடிக்கடி திரை மூடும் தரிசனம்
நாத்த்வாரா ஆலயத்தின் மிகத் தனித்துவமான வழக்கம்...
தொடர்ச்சியான தரிசனம் கிடையாது.
பெருமாளுக்கு பல நேரங்களில்:
அலங்காரம்,
உணவு,
ஓய்வு,
ஆடை மாற்றுதல்
நடைபெறுவதால், தரிசனம் குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் மட்டுமே நடைபெறுகிறது.
ஒவ்வொரு தரிசனமும் "ஜாங்கி" என அழைக்கப்படுகிறது.
அழகிய அலங்கார மரபு
காலை முதல் இரவு வரை...
ஸ்ரீநாத்ஜிக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
காலநிலை,
திருவிழா,
நாளின் நேரம்
ஆகியவற்றுக்கு ஏற்ப உடைகளும் மாறுகின்றன.
இது இந்த ஆலயத்தின் மிகப்பெரிய தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்.
ஆடை தைக்கும் புனித மரபு
ஆலயத்தில்...
பெருமாளுக்கான ஆடைகள் தைக்கும் இடத்தை பக்தர்கள் காண முடியும்.
அங்கு பணிபுரிபவர்கள்...
எச்சில் தெறிக்காமல் இருக்க வாயைத் துணியால் மூடி கொண்டு ஆடைகளைத் தைப்பது ஒரு மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இது பெருமாளுக்குச் செய்யும் சேவையில் கடைப்பிடிக்கப்படும் பக்தி ஒழுக்கத்தின் ஒரு அடையாளமாகும்.
மலர் மாலையின் சிறப்பு
ஸ்ரீநாத்ஜிக்கு அணிவிக்கப்படும் மலர் மாலைகளும் மிகுந்த அன்புடன் தயாரிக்கப்படுகின்றன.
மாலை தயாரிக்கப்பட்ட பிறகு...
அதை வாழை இலையில் சுற்றி பாதுகாப்பாக வைக்கும் பழக்கமும் இன்றளவும் தொடர்கிறது.
பெரிய அளவிலான பிரசாதம்
இந்த ஆலயத்தில் வழங்கப்படும் பிரசாதங்கள்...
பொதுவாக மற்ற ஆலயங்களைவிட பெரிய அளவில் தயாரிக்கப்படுகின்றன.
இது புஷ்டிமார்க் மரபில் இறைவனுக்கு அரச மரியாதையுடன் உணவு சமர்ப்பிக்கும் வழக்கத்தின் ஒரு பகுதியாகும்.
கோபுரத்தில் சுதர்சன சக்கரம்
இந்த ஆலயத்தின் மிகவும் தனித்துவமான சிறப்பு...
கோபுரத்தின் உச்சியில் அமைந்துள்ள சுதர்சன சக்கரம்.
பொதுவாக...
பல கோயில்களில் கலசம் காணப்படும்.
ஆனால்...
இங்கு சுதர்சன சக்கரம் முக்கிய அடையாளமாக விளங்குகிறது.
வாசனைத் திரவியத்தால் பராமரிக்கும் மரபு
உள்ளூர் ஆலய மரபின்படி...
குறிப்பிட்ட நேர இடைவெளிகளில்...
சுதர்சன சக்கரத்தில் வாசனைத் திரவியங்களைப் பூசி பராமரிக்கும் வழக்கம் உள்ளது.
இது சக்கரத்திற்கு அளிக்கப்படும் தெய்வீக மரியாதையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
சிலர், வெப்பம் அதிகரிக்காமல் இருக்க இவ்வாறு செய்வதாகக் கூறினாலும், இது ஆலய மரபின் ஒரு நம்பிக்கையாகும்; இதற்கான அறிவியல் விளக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை.
மீராபாயுடன் தொடர்புடைய மரபு
பக்தி இலக்கிய மரபுகளில், மீராபாய் ஸ்ரீகிருஷ்ண பக்தியுடன் தொடர்புடைய பல தலங்களை தரிசித்ததாகக் கூறப்படுகிறது.
நாத்த்வாராவுடனான அவருடைய தொடர்பு பற்றியும் சில உள்ளூர் மரபுகள் குறிப்பிடுகின்றன.
ஆனால், இதற்கான வரலாற்று ஆதாரங்கள் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளன.
நாத்த்வாரா நமக்குச் சொல்லும் பாடம்
இந்த ஆலயம்...
ஒரு கட்டிடம் மட்டுமல்ல.
ஒரு உயிருள்ள பாரம்பரியம்.
ஒரு குடும்ப உறுப்பினரைப் போல இறைவனை நேசித்து...
அவரை எழுப்பி...
உணவளித்து...
அலங்கரித்து...
ஓய்வெடுக்கச் செய்து...
மீண்டும் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கும்...
இந்த வழிபாட்டு முறை...
பக்தியின் உச்ச வடிவத்தை நமக்குக் கற்றுத் தருகிறது.
முடிவுரை
ராஜஸ்தானின் நாத்த்வாராவில் அமைந்துள்ள ஸ்ரீநாத்ஜி திருக்கோயில், வைணவ மரபின் தனித்துவம், கலை, பக்தி மற்றும் வரலாற்றின் சங்கமமாக விளங்குகிறது.
கோபுரத்தின் உச்சியில் கம்பீரமாகத் திகழும் சுதர்சன சக்கரம்...
குழந்தை கண்ணனுக்காக நடைபெறும் அன்பான சேவைகள்...
தலைமுறைகள் கடந்தும் தொடரும் வழிபாட்டு மரபுகள்...
இவை அனைத்தும் இந்த ஆலயத்தை இந்தியாவின் மிகவும் தனிச்சிறப்பான திருத்தலங்களில் ஒன்றாக மாற்றுகின்றன.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொல்லைகள் அகலும். பயணங்களால் ஆதாயம் உண்டு. பழுதான எலக்ட்ரானிக் பொருட்களை மாற்றுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
ரிஷபம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். உடல்நிலை சீராக அமையும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் டென்ஷன் குறையும்.
மிதுனம்: முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். எதிலும் அவசரம் வேண்டாம். யாரையும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
கடகம்: மனக்குழப்பம் நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். பணவரவால் கடனை பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும். அலுவலகத்தில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர்.
சிம்மம்: தடைபட்ட காரியங்கள் சுமுகமாக முடியும். சொந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளால் நிம்மதியுண்டு. வியாபார ரீதியாக சில பிரபலங்களை சந்திக்க நேரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
கன்னி: குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் புதிய பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் இழுபறியான பணிகளை முடிப்பீர்.
துலாம்: ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உடல்நலம் சீராகும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள்.
விருச்சிகம்: நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிட்டும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்.
தனுசு: வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். அதிக லாபம் அடைய உழைக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
மகரம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முக்கிய முடிவு எடுப்பீர். உடன்பிறந்தவர்களை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள்.
கும்பம்: புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவும். உறவினர், பழைய நண்பர்கள் தேடி வருவர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டும் முயற்சிகளை மேற்கொள்வீர். அலுவலகத்தில் உயரதிகாரியுடனான மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
மீனம்: எதையும் சாதித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 30.6.2026.
இன்று காலை 06.11 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.
இன்று அதிகாலை 05.16 வரை மூலம். பின்னர் பூராடம்.
இன்று மாலை 04.38 வரை பிராமியம். பின்னர் ஐந்திரம்.
இன்று அதிகாலை 04.21 வரை . பின்னர் மாலை 05.16 வரை பத்திரை. பிறகு தவம் .
இன்று அதிகாலை 02.43 வரை மரணயோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 02.00 முதல் 03.00 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
How a small injury is treated in a....
1. Govt dispensary (top Left) ;
2. Pharmacy (top Right) ;
3. Private hospital (bottom Left) ;
4. And in a Hospital, if they know you have Health Insurance...
பாலிவுட் நடிகையும் மாடலுமான நேகா மாலிக், சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களால் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தனது ஃபேஷன் சென்ஸ் மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்திற்காக அறியப்படும் அவர், தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்களில் நேகா மாலிக் வெள்ளை நிற சட்டை மற்றும் அரை டவுசர் அணிந்து, படு போல்டான தோற்றத்தில் பல்வேறு போஸ்களை வழங்கியுள்ளார். இயற்கையான மேக்கப், திறந்த தலைமுடி மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் புன்னகை ஆகியவை அவரது தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்த்துள்ளன.
புகைப்படங்கள் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும், ஏராளமான கருத்துகளையும் பெற்றுள்ளன. "ஸ்டன்னிங்", "கார்ஜியஸ்", "சூப்பர் லுக்" போன்ற கருத்துகளை ரசிகர்கள் பதிவிட்டு அவரது புதிய லுக்கை பாராட்டி வருகின்றனர்.சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நேகா மாலிக், அவ்வப்போது புதிய ஃபோட்டோஷூட்கள் மற்றும் ஃபேஷன் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்த புதிய போட்டோஷூட்டும் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாக்களிலும் கலக்கிய நேகா மாலிக்கை இன்ஸ்டாகிராமில் சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். வெள்ளை சட்டையை பட்டனை கொஞ்சம் கழட்டிவிட்டு கன்னா பின்னாவென கவர்ச்சியில் நேகா மாலிக் போஸ் கொடுத்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
திரைக்கதை மன்னன் என்று கொண்டாடப்பட்ட பாக்யராஜ் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்துவிட்டார். அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்தபோது பல யூடியூப் சேனல்கள் எல்லாம் அங்கே மொய்த்துவிட்டன. இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. ராதிகாதான் அங்கே அநாகரீகமாக கூடியிருந்தவர்களை நோக்கி, இப்படி செய்யாதீர்கள் என கோரிக்கை வைத்தார்.
இதற்கிடையே பிரபலங்கள் மறைந்த வீட்டில் கேமராக்களை தூக்கிக்கொண்டு படையெடுப்பவர்களின் எண்ணிக்கை வர வர அதிகரித்திருக்கிறது. சோகத்துடன் வருபவர்களிடம் சென்று மைக்கை நீட்டுவது, யாரையும் உள்ளே செல்ல விடாமல் வழியை மறித்துக்கொண்டு நிற்பது என இஷ்டத்துக்கு செய்தார்கள்.
நடிகை ராதிகா இதையெல்லாம் பார்த்து டென்ஷன் ஆகி, 'உங்களுக்கு டிஆர்பி வேண்டுமென்றால் தனியாக நடித்து தருகிறோம். இந்த இடத்தை சர்க்கஸ் ஆக்காதீர்கள்' என கூறினார். பிறகு அவரே கூட்ட நெரிசலிலும் சிக்கினார். இந்நிலையில் பாக்யராஜ் குறித்தும், நடந்த சம்பவங்கள் குறித்தும் அவர் இப்போது பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "50 ஆண்டுகளாக சிறப்பான நட்புக்கு என் இறுதி வழியனுப்புதல். சிறந்த படைப்பாளி, எழுத்தாளர். சினிமாவில் பல எல்லைகளை கடந்தவர்.
நான் பல சிரிப்புகளையும், மறக்க முடியாத அனுபவங்களையும் பகிர்ந்துகொண்ட மனிதர். என் குடும்பத்துக்கு எப்போதும் துணையாக நின்றவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் இது அதிர்ச்சியான பிரிவு. அமைதியாக துக்கம் அனுசரிக்க வேண்டிய இடம் ஒரு சர்க்கஸ் போல் ஆகிவிட்டது. நாம் எப்போது இவ்வளவு இரக்கமற்றவர்களாக மாறினோம். இனி இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாத வகையில் அரசும், திரையுலகமும் சேர்ந்து உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும். மறைந்தவருக்கு மரியாதையும், கண்ணியமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஓவன் சவுண்ட் நகரில், அடுத்தடுத்த இரண்டு இரவுகளில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை அன்று, ஓவன் சவுண்ட் நகரைச் சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் காவல்துறையைத் தொடர்புகொண்டு, போதையிலிருந்த தனது குடும்ப உறுப்பினர் ஒருவர் தங்களது காரைத் திருடிச் சென்றுவிட்டதாகப் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அந்த நபரையும் காரையும் காவல்துறையினர் நகருக்குள் அடையாளம் கண்டு, நிறுத்த முயன்றனர். ஆனால், அவர் போக்குவரத்து சமிக்ஞைகளை மதிக்காமல், மிக அதிவேகமாக காரைச் செலுத்தி தப்பியோடினார்.
அவர் ஓட்டிய வேகம் அவருக்கும் சாலையில் செல்பவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், காவல்துறையினர் அவரை காரில் துரத்துவதைக் கைவிட்டனர். எனினும், அன்றைய தினமே உள்ளூர் மதுபானக் கடை ஒன்றில் அவர் மதுவைத் திருடும் காட்சி கண்காணிப்புக் கேமராவில் பதிவானது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், துரத்திச் சென்று அவரை இறுதியாகக் கைது செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட அந்த நபர், திங்கட்கிழமையன்று மீண்டும் அதே மதுபானக் கடைக்குச் சென்று இரண்டாவது முறையாகத் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
கடையின் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் உடனடியாக விரைந்த காவல்துறையினர், கடையின் அருகே சில அடி தூரத்தில் வைத்து அவரை மீண்டும் கைது செய்தனர். தற்போது அந்த நபர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் பின்வரும் 9 முக்கிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வாகனத் திருட்டு, போதையில் வாகனம் ஓட்டுதல், 5,000 டாலருக்கும் குறைவான மதிப்புள்ள பொருட்களைத் திருடுதல், காவல் அதிகாரியைத் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
கனடாவின் ஒட்டாவா நகருக்கு தெற்கே உள்ள ஆஸ்கூட் (Osgoode) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட கார் விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று ஒட்டாவா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 11:50 மணியளவில் டால்மெனி சாலை மற்றும் நிக்சன் டிரைவ் சந்திப்பில் ஒரு பிக்கப் டிரக் மற்றும் எஸ்யூவி ரக கார் ஆகிய இரண்டும் மோதி விபத்துக்குள்ளானது குறித்து அவசரகால மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
படுகாயமடைந்த ஒரு சிறுமி மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒட்டாவா துணை மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
மாலையில், எஸ்யூவி காரில் பயணம் செய்த அந்த 8 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியது. மேலும், அதே காரில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிக்கப் டிரக்கில் இருந்த மற்றொரு 6 வயது சிறுமி லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஒட்டாவா மற்றும் லீட்ஸ் & கிரென்வில் பகுதிகளைச் சேர்ந்த அவசரகால மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதே சந்திப்பில் இந்த மாதத்தில் நடக்கும் இரண்டாவது பெரிய விபத்து இதுவாகும். கடந்த ஜூன் 19ம் திகதி, இதே சந்திப்பில் ஒரு செடான் கார் மற்றும் பிக்கப் டிரக் மோதிய விபத்தில் ஒரு சிறுவன் விமானம் மூலம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான், மேலும் மூவர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது தங்களின் காரில் உள்ள டேஷ்கேம் காட்சிகளை வைத்திருப்பவர்கள் ஒட்டாவா காவல்துறையின் விபத்து புலனாய்வுப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.







