Quote of the Day

பழமொழி: அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
sivam 200
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை பிறக்கும். பேச்சுகளில் பொறுமை வேண்டும். இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். அலுவலகத்தில் உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

ரிஷபம்

எதிலும் திட்டமிட்டு செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். விளையாட்டான பேச்சுகளை தவிர்க்கவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். பல பணிகளை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மிதுனம்

சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். உறவுகள் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிக்கான பாராட்டுகள் கிடைக்கும். நலம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கடகம்

சக ஊழியர்களிடம் ஒற்றுமை உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் உருவாகும். வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். வாகனப் பழுதை சீர் செய்வீர்கள். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் காணப்படும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

சிம்மம்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நிர்வாகத்துறையில் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தை விரிவு செய்வது சார்ந்த எண்ணம் உண்டாகும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். பிற மொழி மக்களின் உதவிகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கன்னி

நண்பர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கூட்டாளிகள் வழியில் அனுசரித்து செல்லவும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

துலாம்

எதிர்பாராத சில காரியங்கள் நிறைவேறும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வியாபார பயணங்களில் அனுகூலம் ஏற்படும். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழல் நிலவும். கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

விருச்சிகம்

ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்வாதங்களில் சிந்தித்து செயல்படவும். நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். கடன் செயல்களில் தெளிவுகள் உண்டாகும். தூக்கமின்மை பிரச்சனைகள் குறையும். புதிய உணவுகளில் கவனம் வேண்டும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை

தனுசு

சுப காரிய எண்ணங்கள் ஈடேறும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் காணப்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். எதிர்கால முதலீடுகளில் கவனம் வேண்டும். எதிர்ப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

மகரம்

உணவு தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் சார்ந்த வருமான சிந்தனைகள் மேம்படும். அறிமுகம் இல்லாத புதிய சூழலில் இருப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

கும்பம்

வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். மருத்துவ துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். அரசு செயல்களில் இருந்த தாமதம் விலகும். காப்பீடு துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். எதிலும் விழிப்புணர்வுடன் இருக்கவும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம்

அணுகுமுறையில் சில மாற்றம் காணப்படும். சொந்த ஊர் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். பணி நிமித்தமான பயணங்கள் உண்டாகும். அரசு சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். மாணவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

  • 108
·
Added a post
·

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 26 ஆம் தேதி வியாழக்கிழமை 9.4.2026.

இன்று இரவு 07.32 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.

இன்று காலை 07.17 வரை மூலம். பின்னர் பூராடம்.

இன்று மாலை 04.18 வரை பரிகம். பின்னர் சிவம்.

இன்று காலை 06.40 வரை பத்திரை. பின்னர் இரவு 07.32 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று காலை 06.05 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=477&dpx=2&t=1775705315

நல்ல நேரம்:

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 112

Good Morning....

  • 106
·
Added a post
·

01.வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு.

02.இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல்இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.

03.செரிமானம் தீவிரமாகும், பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேச ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.

04மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.

05.நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல. காய்கறிகளுள்ளே குறைவான சக்தி / கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும் கலோரி 18 தான்.

06.விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்; பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர்.

07.வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத்தனிச்சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப்பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.

08.இக்காய் பித்த நீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது. அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை, வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமை மிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.

09.சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், வெள்ளரிக் காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம். இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச்சாறு திகழ்கிறது.

10.வெள்ளரியைச் சமைத்துச் சாப்பிடும்போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்துவிடுகின்றன. எனவே, வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

11.வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச்சாறு அருந்தினால் குணம் தெரியும்.

12.பேதி நோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒரு மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்தவேண்டும்.

13.வறண்ட தோல், காய்ந்துவிட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் கிடைக்கும் காலத்தில் தினமும் வெள்ளரிக்காய்ச்சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.

14.தினமும் மிகச் சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக்காய்த் துண்டுகளை நறுக்கிப் போடவும். அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும் போட்டு வைத்து மரக்கறி சாலட் போல் பரிமாறவேண்டும். அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச்செய்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்புச்சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கச் செய்யும்.

15.இக்காயில் உள்ள சுண்ணாம்புச்சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.

16.மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக் காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.

17.முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூச வேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்க வேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.

18.நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக்காய் என்றாலும் பெரிய வகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன்தான் அரைத்துச் சாறு அருந்த வேண்டும். இதனால் ஆண்மை பெருகும்.

19.முடி வளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள உயர்தரமான சிலிகானும், கந்தகமும் முடிவளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட்சாறு, இரு தேக்கரண்டி பசலைக்கீரைச்சாறு, பச்சடிக்கீரைச்சாறு போன்றவற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.

20.காரட் கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில் தோல் பகுதி அருகில்தான் தாது உப்புகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துங்கள்.

  • 216
·
Added a post
·

எம்ஜிஆரிடம் உதவி கேட்டுச் சென்ற கலைவாணரின் மகன் நல்லதம்பி (படத்தில் இருப்பவர்)..

கலைவாணரின் மகன் நல்லதம்பி கூறுகிறார் “என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன்.. ஆனா பணவசதி இல்ல.. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன்.. ‘எவ்வளவு தேவை?’ ன்னு கேட்டார்..

‘3 ஆயிரம் தேவைப்படுது’ ன்னு சொன்னேன்..

கேட்ட தொகைக்கு உடனே ஏற்பாடு செஞ்சுட்டு, ‘காலேஜுல சேர்றதற்கு முன்னால என்னைய வந்து பார்த்துட்டுப் போ’ன்னு சொன்னார்..

காலேஜ் அட்மிஷன் கிடைச்ச பிறகு எம்.ஜி.ஆர் கிட்ட விசயத்தைச் சொல்லலாமுன்னு போனதுமே வீட்டுல இருந்தவங்க டிபன் சாப்பிடச் சொல்லிட்டாங்க.. சாப்பிட்டு காத்திருந்தேன்..

அரசியல் காரணமா 1967 ல எம்.ஜி.ஆர் ரொம்ப பிஸியா இருந்தார்..

குளிச்சு முடிச்சுட்டு ஏழு மணிக்கு அவர் ரூமுக்கு வந்தார்..

வந்ததும் யார் வெளியே உட்கார்ந்திருக்கிறா’ன்னு கேட்டார்..

‘கலைவாணர் பையன் வந்திருக்கிறார்’ன்னு வீட்டுல இருந்தவங்க சொன்னதும், உடனே வரச்சொன்னார்..

நான் அவர் ரூமுக்குப் போனதும் முதல்ல ‘டிபன் சாப்பிட்டியா?’ ன்னு கேட்டார்.. அடுத்து ‘காலேஜ்ல இடம் கிடைச்சாச்சா?’ ன்னு கேட்டார்..

‘இடம் கிடைச்சிடுச்சு. சேரப் போறேன். அதான் அதுக்கு முன்னால உங்கள பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்’ன்னு சொன்னேன்..

‘முன்ன உங்கப்பா எவ்வளவு இன்கம் டாக்ஸ் கட்டுனாருன்னு தெரியுமா?’ ன்னு கேட்டார்..

‘எனக்குத் தெரியாது’ன்னு சொன்னேன்..

‘ஒன்றரைக்கோடி ரூபாய் வரி கட்டினாரு.. அப்படின்னா அவர் எவ்வளவு சம்பாதிச்சிருப் பாரு?’

ன்னு கேட்டார்..

‘பல கோடி ரூபா இருக்கும்’னு சொன்னேன்..

‘இப்ப உங்ககிட்ட எவ்வளவு இருக்கு?’ன்னு கேட்டார்..

‘ஒன்னும் இல்லையே’ன்னு சொன்னேன்..

‘செல்வம் அழியும். ஆனா கல்வி அழியாது. அதனாலதான் கல்விக்கு உதவி செஞ்சிருக்குறேன்.. அது உன்னைய கடைசிவரைக்கும் காப்பாத்தும். கைவிடாதுன்னு சொன்னார்..

அவர் சொன்ன மாதிரியே நான் படிச்சு முடிச்சு வேலைக்குப் போய் நல்லா சம்பாதிச்சேன்.. இப்பவும்

எனக்கு மாசாமாசம் பென்ஷன் வருது... என்றார் கலைவாணரின் மகன் நல்லதம்பி.

  • 220
·
Added a post
·

தர்மலிங்கம் அந்த ஊரிலே பெரிய பணக்காரர் அவர்தான். அவருக்கு நான்கு பிள்ளைகள் மூன்று ஆண் பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை உண்டு.

விவசாயம் வட்டி கொடவாங்கல், கமிஷன் கடை, பழ மண்டி, இப்படி பல தொழில் செய்து சம்பாதித்து வந்தார். ஏறக்குறைய ஒரு ீன்தார் போல் வாழ்ந்து வந்தார்.

சாரட்டு குதிரை வண்டி , அந்த சாரட்டு குதிரை வண்டியில் வரும்போது எல்லோரும் வணக்கம் சொல்வார்கள் அவருக்கு. முதன் முதலில் ஜீப் வாங்கியது அவர்தான்.

மூத்த பையனுக்கு திருமணம் வயது வந்து விட்டது பக்கத்தூரில் அவருக்கு சமமான வசதி படைத்த ஒருவர் வீட்டில் பெண் கேட்டு சென்றார்கள் அவர்களும் இவருடைய அந்தஸ்து வசதி எல்லாம் பார்த்து பொண்ணு கொடுக்க தயாரானார்கள்.

திருமணத்திற்கு இரண்டு விட்டார்களும் தயாரானார்கள் பட்டுச்ரிகையில் பளபளக்க சாரட்டு வண்டியில் வலம் வந்தார் மாப்பிள்ளை. பணக்காரர் வீட்டு திருமணம் சொல்லவா வேண்டும்..

காலை முர்த்தம் ஏழு மணிக்கெல்லாம் தாலி கட்டியாச்சு.

தாலி கட்டி முடிந்ததும் சாப்பாட்டுக்கு தயாரானார்கள்.. எல்லோருக்கும் வயிறார பந்தி பரிமாறி கொண்டிருந்தார்கள் சாப்பிட்ட எச்சிலை எடுப்பதற்கு ஆட்கள் இருப்பார்கள் கிராமத்தில்..

இலை எடுக்கும் முனியம்மா மகன் பள்ளிக்கூடம் போகும்போது .... அம்மா இன்னைக்கு இலை எடுக்க போயிருக்காங்க சாப்பாடு வாங்கிட்டு போய் பள்ளிக்கூடத்துல போய் சாப்பிடலாம் என்று ஒரு தூக்குவாளி கையில் கொண்டு வந்தான்.

அம்மா இந்த தூக்கு வாளியில் சோறு வைத்து கொடு நான் பள்ளிக்கூடத்தில் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொன்னான்.. அங்கே இருக்கும் ஒரு அம்மாவிடம் தூக்கம் வாளியை கொடுத்து ... என் மகனுக்கு கொஞ்சம் சோறு வைத்துக் கொடுங்கள் என்று முனியம்மாள் சொன்னாள்.

அந்த அம்மாவும் சோறு சாம்பார் கொஞ்சம் பொரியலும் வைத்து கையில் கொடுக்கும் போது தர்மலிங்கம் பார்த்து விட்டார்.. என்னமா நடக்குது?? இங்கே இலைஎடுக்க வந்த இலை மட்டும் தான் எடுக்கணும் இப்படி சோறு எல்லாம் கொண்டு போக கூடாது. நாங்க மிச்ச மீதி இருந்தா தான் கொடுப்போம் என்று கரராகச் சொன்னார். இல்லையா அய்யா என் மகன் பள்ளிக்கூடத்துக்கு போறான்

அம்மா வேலைக்கு போன இடத்துல சோறு வாங்கிட்டு போயிடலாம்னு வந்திருக்கிறான் என்று சொன்னாள்

அதெல்லாம் முடியாது போய் வேலையை பாரு என்று சொல்லி தூக்குவாளி பிடுங்கி தூக்கு வாளியில் இருக்கும் சோறை ஒரு பாத்திரத்தில் தட்டி விட்டார் தர்மலிங்கம்.. முனியம்மா கண்ணீருடன் இரு மகனே கொஞ்ச நேரம் இரு என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்..

அங்கே ஒரு பந்திய முடிந்து விட்டது எச்சிலையை எடுத்துக் கொண்டு வந்தாள்

எச்சிலையில் மிச்சம் இருக்கும் சோறை எடுத்து தூக்குவாளியில் வைத்துக் கொடுக்க மகனும் வாங்கிக் கொண்டு சென்று விட்டான்....

தன் மகனை நல்லா படிக்க வேண்டும் என்று எண்ணினாள் முனியம்மா.

முனியம்மா நினைத்தது போலவே அந்த பையனும் நல்லபடியாக படித்தான்.

பெயர் தான் தர்மலிங்கம் ஆனால் அவருக்கு நல்ல எண்ணம் கிடையாது ஆனால் அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவம் பார்ப்பதற்கு சொத்தை எல்லாம் இழந்து விட்டார். ஒருவருக்கு சொத்து இருக்கும் வரை தான் மதிப்பு சொத்து இல்லை என்றால் யாரும் மதிக்க மாட்டார்கள் தன் பிள்ளைகளும் மதிக்கவில்லை.

சாப்பாட்டுக்கு கூட ரேஷன் கடையில் தான் அரிசி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்...

முனியம்மா பையன் நல்லா படித்து அரசுத் துறையான நியாயவிலை கடையில் பணிக்கு அமர்த்தபட்டான்.

நியாய விலை கடையில் முதன் முதலில் அரிசி போடும் வாய்ப்பு கிடைத்தது

அரிசி வாங்குவதற்காக எல்லாரும் வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள் அந்த வரிசையில் தர்மலிங்கமும் நின்று கொண்டிருந்தார். தர்மலிங்கத்துக்கு ஞாபகம் இல்லை இந்த பையன் யார் என்று. ஆனால் இந்த பையனுக்கு ஞாபகம் இருந்தது அன்று அம்மா சோறு வைத்து கொடுத்த தூக்க வாளியை பிடுங்கி வைத்துக் கொண்டவர் என்று....

அவரைப் பார்த்ததும் ஐயா வணக்கம் என்று சொன்னான் அவரும் வணக்கம்பா என்று மெதுவான குரலில் சொன்னார்....

ஐயா நான் யார் என்று தெரிகிறதா? என்று கேட்டான் முனியம்மா மகன்.... இல்லப்பா எனக்கு தெரியவில்லை என்று சொன்னார் தர்மலிங்கம்.

25 வருடத்திற்கு முன்னாடியே உங்க மகன் கல்யாணத்துக்கு எங்க அம்மா இலை நடக்க வந்தாங்க. அப்போது நான் பள்ளிக்கூடம் போகும்போது தூக்வாளியை கொடுத்து சோறு கேட்டேன் எங்க அம்மா சோறு போட்டு கொடுத்த போது நீங்கள் பிடுங்கி அதை கொட்டி விட்டீர்கள் என்று சொன்னான்

தர்மலிங்கத்துக்கு தான் செய்தது மறந்து போகுமா? என்ன அவர் ஒண்ணுமே பேசவில்லை.. அமைதியாக நின்று விட்டார்.

ஐயா உங்களுடைய ரேஷன் கார்டுக்கு அஞ்சு கிலோ அரிசி இது..... இந்த அஞ்சு கிலோ அரிசி நான் உங்களுக்கு கொடுக்கிறேன் நீங்க நல்லா சாப்பிடுங்க என்று சொன்னான்......

தர்மலிங்கத்துக்கு கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது

  • 221
·
Added a post
·

ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர். இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர். மறுநாள் பொழுது விடிந்தது குருவும் சீடனும் ஆற்றில் நீராடினர் இருவரும் சூரியனை வணங்கினார்கள். அப்பொழுது சூரிய பகவான் அசரீரியாக தோன்றி "வேத குருவே.. உமக்கு வணக்கம் உங்கள் வணக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன். இன்று சூரியனான நான் மறைவதற்குள் உங்கள் சீடனின் உயிர் ஒரு ராஜநாகத்தால் தீண்ட பட்டு இறக்க நேரிடும். முடிந்தால் உங்கள் குரு வலிமையால் அவனை காப்பாற்றுங்கள் என்று கூறி மறைந்தான்.

குருவும் சூரியனை வாங்கிவிட்டு சீடனை கவலையோடு பார்த்தார். இருவரும் சிறிது பழங்களை பறித்து பசியாறிய பின் அருகே உள்ள கோவிலின் இறைவனை வணங்கினர். பின் ஊரை தாண்டி காடு வழியே நடந்து சென்றனர். சற்று களைப்பு ஏற்படவே இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து கண் அயர சீடன் தூங்கினானே தவிர குரு தூங்கவில்லை. சீடனின் உயிரை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று நினைத்து விழித்து இருந்தார். அப்பொழுது ஒரு ராஜநாகம் படம் எடுத்தபடி சீடனின் அருகே அவனை கொல்ல வந்தது. இதை பார்த்து பதைபதைத்த குரு ராஜநாகமே நில் என்று ஆணையிட்டார். ராஜநாகமும் குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்றது.

குரு ராஜநாகத்தைப் பார்த்து, "நீ என் சீடனின் உயிரை எடுக்கவே வந்துள்ளதை நான் அறிவேன். குரு பக்தி மிகுந்த சீடனை காப்பாற்றுவது ஒரு குருவின் கடமை. அதனால் என் சீடனின் உயிரை எடுக்க நான் அனுமதிக்க மாட்டேன்", என்று தடுத்தார்.

இப்பொழுது ராஜநாகம் பேசியது. "வேத குருவே உங்கள் சீடனின் கழுத்தில் என் நாவை வைத்து ரத்தத்தை உறிஞ்சு எடுக்க வேண்டும் என்பது எனக்கு காலன் இட்ட கட்டளை. அனைத்தும் உணர்ந்த தாங்களே என் கடமையை செய்ய விடாமல் இப்படி தடுத்து என்னை நிறுத்தலாமா?" என்று முறை இட்டது. உடனே குரு "அப்படி என்றால் என் சீடனின் ரத்தத்தை உறிஞ்ச வேண்டும் என்பது தானே உனக்கு காலன் இட்ட கட்டளை. சரி, சற்று பொறு.. நானே அவனது ரத்தத்தை உனக்கு ஊட்டுகிறேன். அதை உறிஞ்சியதும் நீ உன் கடமையை செய்து விட்ட பலனை பெறுவாய்." என்று கூறி ஒரு சிறு கத்தியை எடுத்த குரு அதை சீடனின் கழுத்தில் வைத்து ரத்தம் வரும் அளவு ஆழம் வைத்து கத்தியை கீறினர். தன் கழுத்தில் கூர்மையாய் எதோ கீறுவதை உணர்ந்த சீடன் கண் விழித்து பார்த்தான். குரு தன் கழுத்தில் கத்தியை வைத்து கீறுவதை உணர்ந்து பின் கண்மூடி சிறிதும் அசையாமல் படுத்த படியே இருந்தான்.

சீடனின் பல துளி ரத்தத்தை எடுத்த குரு அதை ராஜநாகத்துக்கு ஊட்டிவிட்டார். ராஜநாகமும் குருவின் சாபத்துக்கு நாம் ஆளாகாமல் நம் கடமை நிறைவேறியதே என்ற மகிழ்வோடு ரத்தத்தை உறிஞ்சி விட்டு வந்த வழியே சென்றது.

குருவும் சீடனின் உயிரை காப்பாற்றிய நிம்மதியோடு அவனது கழுத்தில் முன்னமே தான் எடுத்து வைத்திருந்த பச்சிலை சாற்றை பிழிந்து சீடனின் கழுத்து பகுதியில் பற்று போட்டு விட்டு நிம்மதியோடு உறங்க சென்றார். சிறிது நேரம் இருவரும் நன்றாக களைப்பு தீர உறங்கிய பின் எழுந்து அமர்ந்தனர்.

அப்பொழுது சீடன் தன் கழுத்தில் பற்று இருப்பதை தொட்டு பார்த்து விட்டு எதுவும் குருவிடம் கேட்காமல் "குருவே நாம் நடை பயணத்தை தொடரலாமா?" என்று கேட்டான்.

குரு புன்னகையுடன், "சீடனே.. நீ சற்று முன் உறங்கும்போது நான் உன் கழுத்தில் கத்தி வைத்த போது நீ என்ன நினைத்தாய்? உனக்கு பயம் எதுவும் உண்டாகவில்லையா?" என்று புன்னகையுடன் கேட்டார்.

சீடன், "குருவே என் கழுத்தில் ஏதோ ஊறுவதை உணர்ந்தேன். விழித்தும் பார்த்தேன். கையில் கத்தியுடன் நீங்கள் என் கழுத்தை அறுப்பதை உணர்ந்தேன். ஆனால் என் குருநாதராகிய தாங்கள் எனக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். அதனால் நான் நிம்மதியாக உறங்கினேன். இப்பொழுது எழுந்ததும் என் கழுத்தில் உள்ள மூலிகை பற்றை பார்த்தேன் என் குருநாதராகிய உங்களுக்கு என் ஊன், உயிர், உள்ளம் அனைத்தும் அர்ப்பணம். அதனால், எனக்கு அதிலும் எந்த வித கவலையும் இல்லை" என்று கூறி பணிந்து நின்றான். குருவும் சீடனை ஆற தழுவி எழுந்து அவனோடு நடக்கலானார்.

நண்பர்களே.. நமக்கு விதித்த படி நடக்கும் நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் இறைவனே பொறுப்பு என்று அவனை சரணடைந்து விட்டால், நமக்கு நடக்க இருக்கும் தீமையும் இறைவன் அருளால் நன்மையாக நடக்கும். இதில் சீடன் தான் நாம். குரு தான் நம் கடவுள். ராஜநாகம் தான் நம் விதி.

  • 223
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

தொழில் நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் இருந்த வேறுபாடுகள் மறையும். மனதில் புதிய தேடல்கள் பிறக்கும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வரவுகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

ரிஷபம்

மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உள்ள உண்மையை அறிந்து முடிவுகளை எடுக்கவும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் புதுவிதமான அறிமுகங்களும் அனுபவங்களும் ஏற்படும். வியாபார முதலீடுகள் அதிகரிக்கும். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். எதிர்பாலின மக்கள் தொடர்பான விஷயங்களை சிந்தித்து செயல்படுதல் அவசியம் ஆகும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிதுனம்

உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். புதியவர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். ஓய்வு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கடகம்

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். கால்நடைகள் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். வியாபார செயல்பாடுகளில் லாபங்கள் மேம்படும். மனை சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் எதிர்பார்த்த முடிவினை அளிக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

சிம்மம்

குழந்தைகளின் வருங்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். அக்கம் பக்கம் வீட்டாருடன் இருந்த இன்னல்கள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். கலை சார்ந்த பணிகளில் நுட்பங்களை அறிவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

கன்னி

குடும்பத்தில் புதிய நபர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அரசு காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

துலாம்

எந்த ஒரு செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். சுபமுயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுபவம் அதிகரிக்கலாம். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

விருச்சிகம்

பயணம் மற்றும் செயல்பாடுகளில் நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். அமைதியான பேச்சுகள் நல்ல மதிப்பை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

தனுசு

சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். சாப்பாடு விஷயத்தில் கவனமுடன் இருக்கவும். திடீர் செய்திகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். மேலதிகாரிகளுடன் இருந்து வந்த வேறுபாடுகள் தீரும். வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். தேவையில்லாத அலைச்சல் மூலம் சோர்வுகள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

மகரம்

எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். சிந்தனையில் தெளிவுகள் பிறக்கும். நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். உயரதிகாரிகள் இடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஆடம்பரமான செலவுகள் மூலம் விரயங்கள் உண்டாகும். சிரமம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

கும்பம்

மனதில் சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். விவசாய பணிகளில் மாற்றமான சூழல் அமையும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

மீனம்

சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். தன வருவாயில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் லாபங்கள் மேம்படும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். வாக்குகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். கல்வி கற்கும் திறனில் மாற்றங்கள் ஏற்படும். காது தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

  • 324
·
Added a post
·

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 25 ஆம் தேதி புதன்கிழமை 8.4.2026

இன்று மாலை 05.48 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

இன்று அதிகாலை 04.54 வரை கேட்டை. பின்னர் மூலம்.

இன்று மாலை 03.56 வரை வரீயான். பின்னர் பரிகம்.

இன்று அதிகாலை 04.26 வரை கரசை. பின்னர் மாலை 05.48 வரை வனிசை. பிறகு பத்திரை.

இன்று அதிகாலை 04.54 வரை சித்தயோகம். பின்னர் காலை 06.06 வரை அமிர்த யோகம். பின்பு மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=476&dpx=2&t=1775617190

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 326
·
Added a post
·

1. சீராக வளர்ந்துள்ள தர்ப்பூசணியை தேர்ந்தெடுங்கள். ஏனெனில், அந்த பழம் முழுவதும் கதிரவனின் ஒளி மற்றும் ஊட்டச்சத்து சீராக இருக்கும்.

2. கிட்டத்தட்ட ஒரே அளவுள்ள இரு பழங்களை கையில் தூக்கிப்பாருங்கள். எடை அதிகமுள்ள பழம் நீர்ச்சத்து மற்றும் சுவை மிகுந்தது (பழங்கள் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே அளவாக இருக்க வேண்டும்).

3. பழத்தின் ஒரு பகுதியில் மஞ்சள் நிற திட்டு இருக்கிறதா என்று பாருங்கள். இந்த இடம் அந்த பழம் மண்ணில் நீண்ட நேரம் இருந்ததற்கான அடையாளம். நல்ல மஞ்சள் நிறத்தில் திட்டு இருந்தால் அது சரியான காலம் வரை செடியில் இருந்துள்ளது. கதிரவனின் ஒளியும் ஊட்டச்சத்தும் அதற்கு சுவையை அளித்திருக்கும். மாறாக, வெள்ளை நிற திட்டு இருந்தாலோ, அல்லது திட்டுகளே இல்லையென்றாலோ, அந்த பழம் தகுந்த காலத்திற்கு முன்னமேயே பறிக்கப்பட்டு விட்டது என்று பொருள். எனவே, சுவை குறைந்ததாக இருக்கும்.

4. அந்த பழத்தின் நிறம்: நன்றாக பழுத்த பழத்தில் கரும்பச்சை கோடுகள் இருக்கும். மேலும் அவற்றின் வெளித்தோல் மின்னாது.

5. தட்டிப் பார்ப்பது: இது பழக்கத்தில் தான் வரும் என்று இந்த வலைத்தளம் கூறுகிறது. எனவே, இதை அவரவர் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

நான் வாங்கும் பொழுது முதல் நான்கு விஷயங்களை நன்றாக கவனித்து வாங்குவது வழக்கம்.

  • 327

Good Morning...

  • 324
·
Added article
·

நடிகர் பிரசாந்த் நடிக்கும் அடுத்த படத்துக்கு ‘ரஞ்ஜன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா, தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரி உள்பட பலர் அறிமுகமாகின்றனர்.

இப்படத்தைத் தியாகராஜன் இயக்குகிறார். பிரீத்தி தியாகராஜன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இப்படத்துக்கு ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் பிரசாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இது தெலுங்கில் வெற்றிபெற்ற ‘கோர்ட்’ படத்தின் ரீமேக். இதில் வழக்கறிஞராக பிரசாந்த் நடிக்கிறார்.

தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, கதிரேசன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, பைவ்ஸ்டார் செந்தில், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், வெற்றிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “இந்தப் படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக இருக்கும். பிரசாந்துக்கும் எனக்கும் 35 வருட பழக்கம். 91-ம் ஆண்டு அவரை எப்படி பார்த்தேனோ, அப்படித்தான் இப்போதும் இருக்கிறார்.

பிரசாந்த் நடிப்பில் ஏற்கெனவே 3 படங்கள் இயக்கி இருக்கிறேன். அவர் நடிப்பில் மீண்டும் ஒரு படம் இயக்க நினைக்கிறேன். ஆக்ஷன் காட்சிகளில் விஜயகாந்த் சாருக்கு நிகரான திறமைகளைக் கொண்டவர் பிரசாந்த். அவர் அஸ்டாவதானி. அவருக்கு டைரக் ஷன், மியூசிக், எடிட்டிங் என அனைத்தும் தெரியும். அவர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நல்ல மனிதராக இருக்கிறார்” என்றார்.

  • 418
·
Added a post

பில் மோர்கன் (Bill Morgan) என்பவரின் கதை உலகின் மிகவும் பிரபலமான மற்றும் வியக்கத்தக்க தற்செயல் நிகழ்வுகளில் ஒன்றாகும்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டு வந்து, குறுகிய காலத்தில் இரண்டு முறை லாட்டரி வென்றவர்.

அவருக்குக் கிடைத்த அசாத்தியமான அதிர்ஷ்டங்கள் இதோ:

1. மரணத்திலிருந்து மீண்டது (1998)

ஒரு லாரி ஓட்டுநராக இருந்த பில் மோர்கன், ஒரு விபத்தில் சிக்கினார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது ஏற்பட்ட மருந்து ஒவ்வாமையால் (Allergic reaction) இதயத் துடிப்பு நின்றுவிட்டது. மருத்துவ ரீதியாக 14 நிமிடங்கள் அவர் இறந்ததாகக் கருதப்பட்டார். அதன் பிறகு கோமா நிலைக்குச் சென்ற அவரை, மருத்துவர்கள் பிழைக்க வாய்ப்பில்லை என்று கூறினர். ஆனால், 12 நாட்களுக்குப் பிறகு அவர் அதிசயத்தக்க வகையில் கண் விழித்தார்.

2. முதல் லாட்டரி வெற்றி

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ள விரும்பிய அவர், ஒரு 'ஸ்க்ராட்ச் கார்டு' (Scratch card) லாட்டரி சீட்டை வாங்கினார். அதில் அவருக்கு சுமார் 17,000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்பிலான கார் பரிசாகக் கிடைத்தது.

3. நேரலையில் அடித்த ஜாக்பாட்

அவரது இந்த 'மறுபிறவி' மற்றும் லாட்டரி வெற்றியைப் பற்றி கேள்விப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிறுவனம், அதை ஒரு செய்தியாகப் பதிவு செய்ய அவரை அணுகியது. கேமராவிற்கு முன்னால் அவர் எப்படி லாட்டரி வென்றார் என்பதை மீண்டும் செய்து காட்டுவதற்காக (Re-enactment), ஒரு கடையிலிருந்து மீண்டும் ஒரு லாட்டரி சீட்டை வாங்கினார்.

அனைவரையும் திகைக்க வைக்கும் வகையில், அந்த நேரலையிலேயே அவர் சுரண்டிய அந்த இரண்டாவது சீட்டில் அவருக்கு 2,50,000 ஆஸ்திரேலிய டாலர் (சுமார் 1.4 கோடி ரூபாய் மதிப்பிற்கு மேல்) பரிசு விழுந்தது.

முக்கியமான தருணம்:

அந்த வீடியோவில் அவர் சீட்டைச் சுரண்டிவிட்டு, கேமராவைப் பார்த்து மிகவும் உணர்ச்சிகரமாக, "நான் இப்போதுதான் 2,50,000 டாலர்களை வென்றுள்ளேன், நான் விளையாடவில்லை!" என்று கூறுவது இன்றும் இணையத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒரு காட்சியாக உள்ளது.

ஒரே ஆண்டில் மரணத்தை வென்றது மற்றும் அடுத்தடுத்து இரண்டு முறை லாட்டரி வென்றது என பில் மோர்கன் உலகின் "மிகவும் அதிர்ஷ்டசாலி மனிதர்களில்" ஒருவராகக் கருதப்படுகிறார்.

  • 495
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். நண்பர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நிதானம் வேண்டும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலையறிந்து செயல்படவும். எதிர்பாராத சில செய்திகள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

ரிஷபம்

புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமும் மகிழ்ச்சியான தருணங்களும் உருவாகும். வரவுகளில் இருந்து வந்த தாமதங்கள் குறையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். திறமையான பேச்சுக்கள் மூலம் காரிய சித்திகள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மிதுனம்

பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்கள் பற்றி புரிந்து கொள்வீர்கள். வரவுகளில் இருந்து வந்த இழுபறியான சூழல் குறையும். தனிப்பட்ட செயல்களில் கவனம் வேண்டும். கால்நடைகள் மூலம் ஆதாயம் ஏற்படும். பேச்சுக்கள் மூலம் ஆதாயமடைவீர்கள். கலை சார்ந்த பணிகளில் ஈர்ப்புகள் ஏற்படும். சிரமம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கடகம்

எதிர்கால சேமிப்பு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் கல்வியில் இருந்த குழப்பம் நீங்கும். வித்தியாசமான அனுபவங்கள் மூலம் சில புரிதல்கள் உண்டாகும். பணியில் மாற்றமான சூழல்கள் அமையும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வர்த்தக வியாபாரத்தில் சிந்தித்து செயல்படவும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : காவி

சிம்மம்

நினைத்த பணிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு பணிகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கன்னி

பாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். எண்ணங்கள் போக்கில் மாற்றம் உண்டாகும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். விளையாட்டு செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

துலாம்

உத்தியோக ரீதியான வெளிவட்டார நட்புகள் அதிகரிக்கும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். துரிதமான செயல்பாடுகள் மூலம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பேச்சுக்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

விருச்சிகம்

பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் அனுகூலம் உண்டாகும். தனித்து செயல்படுவதில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியம் பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும். சில பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. எதிர்மறை சிந்தனைகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

தனுசு

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். வெளியூர் பயணங்களில் இருந்த இடையூறுகள் விலகும். ஆடம்பரமான பேச்சுக்களை நம்பி புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மகரம்

அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் உருவாகும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். தந்தை வழியில் இருந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கடினமான விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள். முதலாளி வகையில் ஒத்துழைப்புகள் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் மதிப்புகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கும்பம்

உடன் இருப்பவர்கள் பற்றியும் உலக வாழ்க்கை பற்றிய புரிதலும் மேம்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். சமூக தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். பயம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

மீனம்

பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். சமூக தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்க இயலும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். அலுவலகத்தில் மரியாதைகள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வருத்தம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

  • 545
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 7.4.2026

இன்று மாலை 03.05 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

இன்று அதிகாலை 02.21 வரை அனுஷம். பின்னர் கேட்டை.

இன்று மாலை 03.27 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.

இன்று அதிகாலை 02.26 வரை கௌலவம். பின்னர் மாலை 03.05 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=475&dpx=2&t=1775534653

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 543

Good Morning...

  • 537
·
Added article

சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜய்குமார், கயல் ஆனந்தி நடிக்கும் படம், ‘அறிவு’. மோட்டிவ்ட்ரோன் புரொடக் ஷன் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு, மூணாறு பகுதிகளில் நடைபெற்றது. அங்குள்ள ஒத்தப்பாறை பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் படப்பிடிப்பு நடந்தபோது, அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு போதிய வசதிகள் இல்லாதது தெரியவந்தது.

தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் உடனடியாக அந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுத்தார். அதன்படி, பள்ளி முழுவதும் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாணவர்களுக்கான குடிநீர் வசதி மற்றும் அவர்கள் தினசரி கல்வி பெற தேவையான அடிப்படை வசதிகளும் முழுமையாக வழங்கப்பட்டன. இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். தில் ராஜு ஒளிப்பதிவு செய்கிறார்.

  • 713
·
Added a post

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் சென்னையிலோ, டில்லியிலோ, கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை. விருத்தாசலத்தில் தான் இருக்கிறது.

கிடைத்தற்கரிய பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் இந்த தமிழ் நூல் காப்பகமே.. ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் இது.

தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார்.

இந்த நூலகத்தில் மிகப்பழமையான பல நூல்கள் உள்ளன. இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரை பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பியம் முதல் பதிப்பு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள் எனப் பல முதல் பதிப்பு நூல்கள் அமைந்திருப்பது தமிழ் நூல் காப்பகத்தின் தனிச்சிறப்பு. திருக்குறளின் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான 1500 க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன.

கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் உள்ளன.

நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், சமைய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப் பல பரிமாணங்களில் நூல்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மறைமலை அடிகள், தெ.பொ.மீ., வையாபுரி, மு.வ.,பாவாணர், ந.சி.கந்தையா, முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான ஆய்வு நூல்கள், காந்தியடிகள், காரல்மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், அண்ணா முதலிய சமுதாய சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிறந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் எனப் பல அரிய குறுந்தகடுகளும் அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பு.

தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்த கலை நயம் மிக்க கட்டடமாகத் திகழ்கிறது இது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கட்டடத்தின் பெரிய தூண்களும், நேப்பாள மன்னர் அரண்மனையை நினைவூட்டும் மேல் முகப்பும் என, தன்னைக் கவர்ந்த வடிவமைப்புகளை பழனிவேல் என்ற பொறியாளரின் உதவியோடு வடிவமைத்துள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்கள்.

நூலகத்திற்கான தனி கட்டிடத்தை 50 இலட்ச ரூபாய் செலவில் 2000ஆம் ஆண்டில் கட்டி முடித்ததோடு நூலகத்தின் முன்புறம் கண்ணைக் கவரும் அழகிய பூங்காவையும் கலை நுணுக்கத்தோடு உருவாகி வைத்துள்ளார். இவரது முயற்சியைப் பாராட்டி பொள்ளாச்சி மகாலிங்கம், பதிப்புச்செம்மல் மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அறவாணன், கவிஞர் புரட்சிதாசன், த.பழமலை, க்ரியா ராமகிருஷ்ணன், விடியல் சிவா, ஆகியோர் தங்கள் சேகரிப்பிலிருந்து பல நூல்களை கொடையளித்துள்ளனர்.

பல்லடம் மாணிக்கம் அவர்கள், நிறங்கள் என்ற கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல நூல்களை வெளியிட்டுள்ளார். வள்ளுவம் என்ற இதழை நடத்தியுள்ளார். 24 இதழ்களோடு அது நின்று போனாலும் இலக்கிய இதழ்களில் குறிப்பிடத்தகுந்ததாகும்.

தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என்கிறார்.

பிரபஞ்சன், சிவகாமி, திலகவதி ஆகிய எழுத்தாளர்களுடனான இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளும், பெண்கள் இலக்கியச் சந்திப்பு-2007 ஆகிய இலக்கிய நிகழ்வுகளும் தமிழ்நூல் காப்பகத்தில் தான் நடைபெற்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ஆசியாவிலேயே பெரிய தனிநபர் நூலகமும் இந்தத் தமிழ்நூல் காப்பகம் தான்.

  • 742
·
Added a post

அணையாத தீபம் - ஜுவாலாமுகி கோயில்!

இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஜுவாலாமுகி அம்மன் கோயில், மற்ற கோயில்களைப் போல சில வழிபாட்டுத் தலம் அல்ல.

இங்கு சிலைகளுக்குப் பதிலாக "புனிதச் சுடர்களே" தெய்வமாக வணங்கப்படுகின்றன.

பல நூற்றாண்டுகளாகத் தொடரும் இந்த மர்மம் இன்றும் பக்தர்களையும் விஞ்ஞானிகளையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

எரிபொருள் இல்லாத சுடர்!

இந்தக் கோயிலின் கருவறையில் பாறைகளின் பிளவிலிருந்து ஒன்பது தீபச் சுடர்கள் (ஜுவாலாக்கள்) நீல நிறத்தில் எரிந்து கொண்டிருக்கின்றன. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தத் தீபங்கள் எரிவதற்கு எந்தவிதமான எண்ணெய், நெய் அல்லது திரிகளோ பயன்படுத்தப்படுவதில்லை. பூமியின் ஆழத்திலிருந்து வரும் இந்தச் சுடர்கள் பல நூற்றாண்டுகளாக அணையாமல் எரிந்து கொண்டிருக்கின்றன.

தோற்றுப்போன பேரரசர் அக்பர்!

இக்கோயிலின் மகிமையைக் கேள்விப்பட்ட முகலாயப் பேரரசர் அக்பர், இது வெறும் ஏமாற்று வேலை என்று கருதி அதை அணைக்க முயன்றார். கோயிலைச் சுற்றி கால்வாய் அமைத்து அதன் மேல் நீரை ஊற்றினார். ஆனால், அத்தனை நீராலும் அந்தச் சுடர்களை அணைக்க முடியவில்லை. இறுதியில், அந்த அற்புதத்தைக் கண்டு வியந்த அக்பர், அம்மனுக்குத் தங்கக் குடை ஒன்றை காணிக்கையாக வழங்கினார் என்பது வரலாறு.

எட்டாத ரகசியம் - அறிவியல் தோல்வி!

பிரிட்டிஷ் காலத்திலிருந்தே பல நிலத்தடி ஆய்வாளர்கள் இதற்குக் காரணம் நிலத்தடியில் இருக்கும் இயற்கை எரிவாயுவாக இருக்கலாம் என்று கூறி வந்தனர். ஆனால் பலமுறை தோண்டியும், ஆய்வு செய்தும் அத்தகைய எரிவாயு சேமிப்பு எங்குள்ளது என்பதைக் கண்டறிய முடியவில்லை.

இவ்வளவு சிறிய பிளவிலிருந்து பல நூறு ஆண்டுகள் அணையாமல் எரியும் அளவுக்கு எரிவாயு வர வாய்ப்பே இல்லை என்பதே உண்மை.

ஒன்பது சுடர்களின் தத்துவம்!

இங்கு எரியும் ஒன்பது சுடர்களும் மஹாசக்தி, மஹாவிஷ்ணு, கணபதி உள்ளிட்ட ஒன்பது தெய்வங்களின் அம்சமாக கருதப்படுகின்றன. இதில் பிரதான சுடர் 'மஹாசக்தி' என்று அழைக்கப்படுகிறது.

பூமிக்குக் கீழே இருந்து வெளிப்படும் இந்த தெய்வீக நெருப்பு, இயற்கையின் மர்மமா அல்லது இறையருளா? விடை தெரியாத இந்த அற்புதத்தை ஞானத்தால் மட்டுமே உணர முடியும்.

  • 717
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்கள் மூலம் மனதளவில் புதிய மாற்றங்கள் உருவாகும். தற்பெருமை இன்றி அனைவரையும் அனுசரித்து செல்லவும். செல்லப்பிராணிகள் வழியில் விரயங்கள் ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

ரிஷபம்

சுபகாரிய பேச்சுக்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். அதிகாரிகள் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எதிர்ப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மிதுனம்

வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். உற்பத்தி துறைகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். பயணம் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கடகம்

புதிய வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்விகம் சம்பந்தமான சுபவிரயங்கள் செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு மேலான பொறுப்புகள் கிடைக்கும். தொலைபேசி தொடர்பான செய்திகளின் மூலம் பயணங்களை மேற்கொள்வீர்கள். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். தடைகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

சிம்மம்

வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். வியாபாரப் பணிகளில் வெளியூர் தொடர்புகள் மூலம் நன்மைகள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : கருசிவப்பு

கன்னி

பேச்சு வன்மையினால் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பாகப்பிரிவினை குறித்த சிந்தனைகள் மேம்படும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

துலாம்

விவாதங்கள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் முன்னேற்றம் காணப்படும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். வியாபார பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

விருச்சிகம்

சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். உடல் நிலையில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் பக்குவமாக நடந்து கொள்ளவும். தேவைக்கேற்ப வரவுகள் கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

தனுசு

நினைத்த சில பணிகளை முடிப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். திடீர் பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மகரம்

வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகளை மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். வித்தியாசமான மின்னணு பொருட்களை வாங்குவீர்கள். தம்பதியர்களுக்குள் நெருக்கம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமான விஷயங்களுக்கு முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கும்பம்

உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சுபகாரியங்களை பேசி முடிப்பதற்கான தருணங்கள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம்

கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான மந்தம் தோன்றி மறையும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். இழுபறியான சில விஷயங்கள் முடியும். ஆராய்ச்சி பிரிவில் முன்னேற்றம் ஏற்படும். ஆக்கபூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

  • 785
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 23 ஆம் தேதி திங்கட்கிழமை 6.4.2026.

இன்று பிற்பகல் 01.48 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று முழுவதும் அனுஷம்.

இன்று பிற்பகல் 02.55 வரை வஜ்ரம். பின்னர் வியதீபாதம்.

இன்று அதிகாலை 12.50 வரை பவம். பின்னர் பிற்பகல் 01.48 வரை பாலவம். பிறகு கௌலவம். இன்று காலை 06.08 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=474&dpx=2&t=1775453495

நல்ல நேரம்:

காலை : 06.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 786
·
Added a post

விபத்தில் அப்பா, அம்மா இருவரையும் இழந்த எனக்கு, அக்கா தாயாகவும், மாமா நிழலாகவும் மாறினார்கள் . ஆனால் நான் வளர வளர மாமாவின் நிழல் எனக்குச் சுட்டெரிக்கத் தொடங்கியது. "சும்மா ஊர் சுத்துறதுக்கு பதிலா ஏதாவது வேலைக்கு போடா, அக்கா கஷ்டப்படுறது கண்ணுக்குத் தெரியலையா?" என்று மாமா ஊர் முன்னிலையில் என்னைக் கேலி செய்வா.

ஒருநாள் சோறு தொண்டையில் இறங்காமல் அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறினேன். "நிச்சயம் ஒருநாள் பெரிய ஆளாகி, இந்த மனுஷன் முன்னாடி கார்ல வந்து நிப்பேன்" என்று சபதம் எடுத்தேன். என் உழைப்பு வீண் போகவில்லை. நான்கு ஆண்டுகளில் ஒரு பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் கைநிறையச் சம்பளத்தில் வேலை கிடைத்தது .

புது கார் வாங்கினேன். கெத்தாக வீட்டு வாசலில் வந்து நின்றேன். மாமா அங்கே திண்ணையில் அமர்ந்திருந்தார். அவரைத் திரும்பி கூட பார்க்காமல் அக்காவிடம் சென்றேன். "அக்கா, இதோ என் சம்பளம். இனி நம்ம வேற வீட்டுக்கு போயிடலாம். யாரோட வசையும் இனி நமக்குத் தேவையில்லை" என்று மாமாவைப் பார்த்துக் கத்திக் கூறினேன் .

மாமா மெலிதாக புன்னகைத்துவிட்டு, ஒரு பழைய காகிதத்தை என்னிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். "இத்தனை நாள் அசிங்கப்படுத்தினது பத்தாதுன்னு இப்போ என்ன கொடுக்கிறாரு?" என்ற கோபத்துடன் அதைத் திறந்தேன் .

அது ஒரு வங்கிக் கணக்குப் புத்தகம் (Bank Passbook). அதில் கடந்த 15 ஆண்டுகளாக மாமா உழைத்த ஒவ்வொரு ரூபாயும் என் பெயரில் சேமிக்கப்பட்டிருந்தது. கடைசிப் பக்கத்தில் ஒரு கடிதம் இருந்தது: "தம்பி, நீ அப்பா இல்லாதவன் என்ற உணர்வு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே உன்னைச் செல்லமாக வளர்த்தேன். ஆனால் நீ ஊதாரித்தனமாகச் சுற்றியபோது எனக்குப் பயம் வந்தது. நான் ஒரு டிரைவர், நாளைக்கே ஏதாவது விபத்தில் நான் செத்துப்போனால் உன்னை யார் காப்பாற்றுவார்? அதனால்தான் உனக்கு வைராக்கியம் வர வேண்டும் என்று உன்னைக் காயப்படுத்தினேன். என் மேலிருந்த கோபம்தான் உன்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. நீ பெரிய ஆளாகிவிட்டாய், இனி நான் நிம்மதியாகச் சாவேன்."

படித்து முடித்ததும் என் கால்கள் நடுங்கின. ஓடிப்போய் மாமாவின் கால்களைக் கட்டிக்கொண்டு கதறினேன். "மாமா, என்னை மன்னிச்சிடுங்க மாமா. உங்களை நான் 'அந்த ஆளு'ன்னு தப்பா பேசிட்டேன்" என்று அழுதேன்.

அவர் என் தலையை வருடி, "பரவாயில்லைடா தம்பி, ஒரு அப்பாவா தோற்று, ஒரு மாமாவா ஜெயிச்சுட்டேன்" என்றார். ரத்த பந்தத்தையும் தாண்டி, ஒரு மாமாவின் கண்டிப்புக்குள் ஒளிந்திருந்த அந்தப் பேரன்பு புரிந்தபோது, அன்றுதான் நான் உண்மையான மனிதனாக மாறினேன் .

அன்பு என்பது எப்போதும் கொஞ்சுவதில் மட்டும் இல்லை, சில நேரங்களில் கண்டிப்பு எனும் போர்வையில் நம்மை செதுக்குவதிலும் இருக்கிறது என்பதை அன்று எனக்கு சொல்லிக் கொடுத்தது,

  • 789

இந்தியாவில் - ராகவ் சத்தா “ரைட் டு ரிகால்” என்ற மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதன் பொருள், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ., அல்லது கவுன்சிலர்கள் தங்கள் வேலை சரியாக செய்யவில்லை என்றால், மக்களுக்கு அவர்களை பதவிக்காலம் முடிவதற்கு முன்பே நீக்கும் உரிமை கிடைக்கும்.

இந்த யோசனை, மக்கள் பிரதிநிதிகள் எப்போதும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது.

  • 782

Good Morning...

  • 781
New People