Quote of the Day

பழமொழிகள்:அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
sivam 270
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
  • 37
·
Added a post

அறிவில் சிறந்த ஒரு வயோதிகர் காட்டுவழியில் ஒரு இளைஞனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். ஓரிடத்தில் ஒரு சிறிய செடி அப்போதுதான் விதையிலிருந்து முளைவிட்டுக் கொண்டிருந்தது. பெரியவர் அந்த இளைஞனை பார்த்து அந்தச் சிறிய செடியை பிடுங்கி விடும்படிக் கூறினார்.

இளைஞன் தன்னுடைய இரு கைவிரல்களை மட்டுமே உபயோகித்து, அந்த இளம் செடியை சுலபமாக பூமியிலிருந்து பிடுங்கி எறிந்தான். அந்தப் புதிய செடிக்குப் பக்கத்தில் அடர்த்தியாக வளர்ந்த ஒரு சிறு காட்டுச்செடி ஒன்றை அந்தப் பெரியவர் இளைஞனுக்குச் சுட்டி காட்டி அதையும் பிடுங்கி எறியும்படி கூறினார்.

அந்த இளைஞன் ஒருகையால் அந்தக் காட்டுச்செடியை வளைத்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அதை இழுத்துப் பிடுங்கி எறிந்தான்.

இன்னொரு இடத்தில் பூமியில் அடர்த்தியாக நன்கு வேரைப்பதிய வைத்துக் கொண்டிருந்த இன்னொரு செடியைக் காட்டி அதையும் பிடுங்கும்படி பெரியவர் தன்னுடன் கூட வந்த இளைஞனைக் கேட்டுக் கொண்டார்.

அந்த இளைஞன் இந்த முறை தன் இரு கைகளையும் உபயோகித்து தன் பலம் அனைத்தையும் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு அந்தச் செடியையும் பிடுங்கி எறிந்தான்.

அதற்குப்பின் அந்தப் பெரியவர் ஒரு பெரிய மரத்தைக் காட்டி அதையும் பிடுங்கும்படி கூறினார். அந்த இளைஞனால் அந்தப் பெரிய மத்தை அசைக்கக்கூட முடியவில்லை.

அந்தப் பெரியவர் இளைஞனிடம் பின்வருமாறு உபதேசம் செய்தார்.

கெட்ட பழக்கத்திற்கும், இப்போது தீ செய்ததற்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. கெட்ட பழக்கங்களை கற்றுக்கொண்ட ஆரம்பத்திலேயே புதிதாக முதைத்த இளஞ்செடியைப் போன்று மிகச் சுலபமாக அவைகளை உள்ளத்திலிருந்து கிள்ளி எறிந்து விட முடியும். அந்த கெட்ட பழக்கங்கள் உன்னுடைய உள்ளத்தில் வேர்விட்டு பெரிய மரமாக வளர அனுமதித்துவிட்டால் அதற்குப்பின் அவைகளை உள்ளத்திலிருந்து அசைக்கக் கூடமுடியாது" என்றார்.

கெட்ட பழக்கங்களைக் கற்றுக்கொண்டு, அதை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு அல்லல்படுவதை விட, கெட்ட பழக்கங்களைக் கற்றுக் கொள்ளாமலிருப்பது மிகவும் நல்லது.

கெட்ட பழக்கத்தைக் கற்றுக் கொண்டவுடன், அதை அகற்ற மிகவும் கடினமான போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும். குடிப்பது ஒரு கெட்ட பழக்கம், அதே போன்று புகைபிடிப்பது ஒரு கெட்ட பழக்கம். இப்படிப்பட்ட கெட்ட பழக்கங்களைக் கற்றுக்கொள்வது சுலபமாகயிருக்கும். ஆனால் அதை விட்டொழிப்பது என்பது அத்தனை எளிதல்ல.

குடிக்கவும், புகை பிடிக்கவும் கற்றுக்கொண்ட பின்பு இவைகளுக்கு அடிமையாகி எண்ணற்றவர்கள் தங்கள் ஆரோக்கியததை இழந்து அல்லல்பட்டு வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய பொன்னான நேரத்தையும் தங்களுடைய செல்வத்தையும் வீணடித்து விடுகிறார்கள். இதுபோன்ற செயல்கள் நமக்கு தேவையில்லை.

தீய பழக்கங்களைக் கைக்கொண்டால் தீயவைகள் நம்மை முற்றுகையிட்டு வாழ்க்கையை நரகமாக ஆக்கிவிடும்.

நலமுடனும், வளமுடனும் வாழவே நாம் பிறந்திருக்கிறோம். வீணான பழக்கங்களில் மூழ்கி, வாழ்வை இழந்து சோக பிம்பங்களாக வாழப்பிறக்கவில்லை.

நல்ல பழக்கத்தை நம் அன்றாட வாழ்வின் வழக்கமாகக் கொண்டு வாழ்வோம்.

  • 39
  • 36
  • 36
  • 36

ஜென்ம ஜென்மமாய் நாம் தேடிய பேரின்பம் மகா சிவராத்திரியின் இந்த புனித நாளில் பூரணமாகட்டும் சிவனின் கருணைக்கடல் நம் பாவங்களைச் சுட்டெரித்து நம்மை பரிசுத்தமாக்கட்டும் ஓம் நமசிவாய மந்திரத்தின் சக்தி நம் ஆன்மாவின் ஆழங்களில் ஒளிர்ந்து அமைதியான புதிய பாதையை காட்டட்டும் அனைவருக்கும் இதயம் கனிந்த மகா சிவராத்திரி நல்வாழ்த்துகள்!

  • 38

மகா சிவராத்திரி திருநாளில் சிவனின் கருணைப் பெருக்கு உங்கள் இதயத்தை நிரப்பட்டும் துன்பங்கள் மறைந்து ஆனந்தப் பெருக்கெடுத்து உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கட்டும் ஓம் நமசிவாய எனும் மந்திர ஒலி உங்கள் ஆன்மாவை புனிதப்படுத்தி அமைதியை கொடுக்கட்டும் இந்த நாள் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக அமையட்டும்!

  • 38
  • 38
  • 38
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பழைய சிக்கல் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான சுறுசுறுப்பின்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நவீன தொழில் நுட்ப கருவிகளால் விரயம் ஏற்படும். நற்செயல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

ரிஷபம்

பணவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இல்லாத மன நிலை காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

மிதுனம்

கேளிக்கை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வேலை மாற்ற விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

கடகம்

பழக்கவழக்கம் தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும். தேவையற்ற வித்தியாசமான புது விதமான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். உடல் உழைப்பிற்கு ஏற்ப முன்னேற்றங்கள் உண்டாகும். மனதில் கற்பனை சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் மாற்றங்களை செய்வீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

சிம்மம்

வியாபாரத்தில் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவினை ஏற்படுத்தும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். மனை மீதான கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் மாற்றமான சூழ்நிலை காணப்படும். சினம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

கன்னி

செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விற்பனை துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். பாசம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

துலாம்

செயல்பாடுகளில் ஒரு விதமான சுறுசுறுமின்மை உண்டாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் காணப்படும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். விலை உயர்ந்த பொருள்கள் மீதான ஈர்ப்பு ஏற்படும். மாணவர்களுக்கு ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

விருச்சிகம்

உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கால்நடை விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். தற்பெருமை பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பழக்க வழக்கத்தில் சில மாற்றம் காணப்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும். சிந்தனைப் போக்கில் சில குழப்பம் தோன்றலாம். விருத்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

தனுசு

புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உணவு தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடம்பரமான செயல்களில் சிந்தித்து செயல்படவும். புதுவிதமான பயணங்கள் மூலம் அனுபவங்கள் அதிகரிக்கும். பணிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மகரம்

வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். பணி நிமித்தமான ரகசியங்களை பகிராமல் இருக்கவும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பொருள் சேர்ப்பதற்கான கலை அறிவு மேம்படும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பாராட்டுகளையும் பெறுவீர்கள். வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கும்பம்

வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும். அரசு தொடர்பான பணிகள் சாதகமாக நிறைவுபெறும். சமூக தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். கௌரவ பொறுப்புகள் மூலம் செல்வாக்கு மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

மீனம்

ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். இளைய உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். சாமர்த்தியமான செயல்களால் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வாகன பயணங்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். சிந்தனை பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

  • 87
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.2.2026

இன்று மாலை 05.50 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

இன்று இரவு 08.36 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.

இன்று அதிகாலை 04.08 வரை சித்தி. பின்னர் வியதீபாதம்.

இன்று அதிகாலை 05.46 வரை கரசை. பின்னர் மாலை 05.50 வரை வணிசை. பிறகு பத்தரை .

இன்று காலை 06.33 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=423&dpx=2&t=1771153865

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 89

Good Morning...

இன்றைய நாள் உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகள்.

  • 182
·
Added article

இந்தி நடிகையான மிருணாள் தாக்​குர், தமிழில் நேரடி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ‘சீதாராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய பான் இந்தியா படங்களின் மூலம் தமிழிலும் அறியப்பட்டார். இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர், கடந்த ஆண்டு மும்பையில் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

அதற்கான விழாவில் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். தனுஷும் கலந்துகொண்டார். இது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளி யாயின. அது வதந்தி என்று தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மிருணாள் தாக்குரும் தனுஷும் பிப்.14-ல் திருமணம் செய்து கொள்வதாகச் செய்தி வெளியானது. இதற்கிடையே, நேர்காணல் ஒன்றில் பேசிய மிருணாள் தாக்குரிடம் இதுபற்றி கேட்கப்பட்டது.

அதற்கு, “எனக்கே தெரியாமல் என் திருமணம் பற்றிய செய்திகள் வருகின்றன. பிப். 14 அன்று எனக்குத் திருமணம் என்று நினைப்பவர்களுக்கு அது ‘ஏப்ரல் ஃபூல்’ ஜோக்காகத்தான் இருக்கும்” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார் மிருணாள். தொடர்ந்து பேசிய அவர், “காதல் அழகான உணர்வு. அது அனைவருக்கும் ஏற்பட வேண்டும். அது உங்களை சிறந்த மனிதராக மாற்றும்” என்றார்.

  • 238

காலம் சிலரின் அன்பை மறக்கச்செய்துவிடும்.

சிலரின் அன்பு காலத்தையே மறக்கச்செய்துவிடும்.

அன்பின் வழியது உயிர்நிலை.

அன்பார்ந்த நல்வாழ்த்துகள்.

  • 233
·
Added a news

கனடாவின் தென்மேற்கு ஒன்டாரியோ பகுதியில் உள்ள கடைகளில் இருந்து நூற்றுக்கணக்கான ஜெலிகெட் மென்மையான பொம்மைகள் திருடப்பட்ட சம்பவத்தில் இருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டில் ஒன்டாரியோ மாநிலத்தின் குயெல்ஃப் நகரத்தைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் 2025 டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.

அப்போது அதிகாரிகள் அவரது இல்லத்தில் இருந்து 140 ஜெலிகெட் பொம்மைகளை மீட்டனர். அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 7,500 கனேடிய டொலர்கள் என மதிப்பிடப்பட்டது.

பெப்ரவரி 13ஆம் திகதி வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், விசாரணையில் புதிய தகவல்கள் வெளிப்பட்டன. ஏப்ரல் முதல் டிசம்பர் 2025 வரை, குறித்த பெண் ஒருவர் ஒரு ஆண் நபருடன் இணைந்து சுமார் 300 ஜெலிகெட் பொம்மைகளை — மொத்த மதிப்பு 15,000 கனேடிய டொலர்களுக்கு மேல் — திருடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த திருட்டுச் சம்பவங்கள் வாட்டர்லூ பிராந்தியம், குயெல்ஃப், பர்லிங்டன், மில்டன், ஜார்ஜ்டவுன், ஓக்‌வில்லே மற்றும் ஓரன்ஜ்வில்லே உள்ளிட்ட 17 வணிக நிறுவனங்களில் இடம்பெற்றதாகவும், மொத்தம் 34 திருட்டுகள் இந்த இருவருடன் தொடர்புடையதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், திருடப்பட்ட Jellycat பொம்மைகள் பெயர் குறிப்பிடப்படாத ஆன்லைன் வாங்கி விற்கும் தளத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்னர்.

  • 242
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கால தாமதமாகவே கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

ரிஷபம்

பழக்க வழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் உருவாகும். இழந்து போன பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சமூக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். கால்நடை தொடர்பான பணிகளில் இன்னல்கள் குறையும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மிதுனம்

கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். மற்றவர்கள் மீதான கருத்துக்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் உடல் உழைப்பு மேம்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

உடனிருப்பவர்கள் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சாதுர்த்தியமான பேச்சுக்கள் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மேன்மை உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

சிம்மம்

வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கல்வியில் இருந்த மந்த நிலை விலகும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். மனதளவில் புதிய சிந்தனைகள் ஏற்படும். வாசனை திரவியங்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். தனிப்பட்ட செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கன்னி

மனதில் புது விதமாக தன்னம்பிக்கை உருவாகும். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஏற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் அனுகூலமும் செல்வாக்கும் அதிகரிக்கும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

துலாம்

தானிய வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அடிப்படை கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். முயற்சிகளில் இருந்து வந்த தாமதமும் படிப்படியாக குறையும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

விருச்சிகம்

மூத்த உடன்பிறப்புகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கலை துறையில் தனிப்பட்ட ஈர்ப்புகள் ஏற்படும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். இணைய பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

தனுசு

வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். பயனற்ற செலவுகளை குறைப்பது நல்லது. செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் தூக்கமின்மை சிலருக்கு ஏற்படலாம். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். குழந்தைகளால் சிறு சஞ்சலங்கள் வந்து நீங்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மகரம்

பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்விப் பணிகளில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். வெளியூர் பயண தொடர்பான முயற்சிகள் கைகூடும். சோர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கும்பம்

கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். வெளிநாட்டு பயண வாய்ப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் விலகும். வாக்கு சாதுரியம் மூலம் தடைப்பட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஊதா

 

மீனம்

சொந்த ஊர் பயண வாய்ப்புகள் கைகூடும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மைகள் ஏற்படும். மருத்துவ பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் பெருகும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

  • 415
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 2 ஆம் தேதி சனிக்கிழமை 14.2.2026

இன்று மாலை 04.43 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

இன்று இரவு 07.00 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.

இன்று அதிகாலை 04.12 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.

இன்று அதிகாலை 03.57 வரை கௌலவம். பின்னர் மாலை 04.43 வரை தைத்தூலம். பிறகு கரசை .

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=420&dpx=2&t=1771042539

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 360

Good Morning....

  • 357
·
Added a news

கனடாவின் ஹமில்டன் நகரில் திருடப்பட்ட வாகனம் ஒன்றை அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் ஓட்டிய சம்பவத்தில் 12 வயது சிறுவன் உட்பட மூன்று சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நகரின் கிழக்குப் பகுதியில் முகமூடி அணிந்த மூவர் இருந்த சந்தேகத்திற்கிடமான வாகனம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாக ஹாமில்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள், அந்த வாகனம் முன்பே திருடப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது என உறுதிப்படுத்தினர். பின்னர் அந்த வாகனம் ஆபத்தான முறையில் ஓட்டப்பட்டு வருவதை பொலிஸார் கண்காணித்தனர்.

அதிக வேகத்தில் பயணம் செய்ததுடன், பாதுகாப்பற்ற வழித்தட மாற்றங்கள், போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் கடத்தல், மேலும் “எதிர்-கண்காணிப்பு” (counter-surveillance) முறையில் ஓட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, குறுகிய நேரத்திலேயே பொலிஸார் வாகனத்தை பின்தொடர்வதை நிறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில், அந்த வாகனம் ஓட்டுனர் யாரும் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்கள் ஒரு கடையில் இருப்பது கண்டறியப்பட்டது. பொலிஸார் கடைக்குள் நுழைந்து எந்தவித சிக்கலும் இல்லாமல் மூவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நேரத்தில், மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடத் தயாராக இருந்ததாகக் கருதப்படும் செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒருவரிடம் திருடப்பட்ட வாகனத்துக்குச் சொந்தமான கீ-ஃபாப் (key fob) கைப்பற்றப்பட்டது. மேலும், மற்றொரு இளைஞர் மீது வாகனப் பயன்படுத்துதல் மற்றும் குறிப்பிட்ட நபர்களுடன் தொடர்பு கொள்ளுதல் தொடர்பான நீதிமன்ற விதிமுறைகள் அமலில் இருந்ததாகவும், அவருக்கு எதிராக நிலுவையில் இருந்த கைது வாரண்டுகளும் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் 15, 13 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ் இவர்களின் அடையாளம் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் நகரில் இளைஞர் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை பிரதிபலிப்பதுடன், திருடப்பட்ட வாகனங்களுடன் தொடர்புடைய பொது பாதுகாப்பு ஆபத்துகளையும் வெளிப்படுத்துகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.

  • 528
·
Added a post

அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன். அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கொண்டான்.

அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான்.

நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.

திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம் ராஜ உடையில் விருந்து உண்பது மாதிரி எண்ணுகிற அளவுக்கு.

தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது.

இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அரண்மனை வாசலை அடைந்தான்.

வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான்.

அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான்.

உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், 'என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?'' என்றார் அரசர்.

ஆமாம்... நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை.

என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால் உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால் அதனை அணிந்து கொண்டு விருந்துக்கு வருவேன் என்றான் மிகவும் பவ்வியமாக.

அதே நேரம் மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் மன்னர் அவனுக்கு ராஜ உடை ஒன்றைய வழங்கினார். அந்த உடையை உடுத்திக் கொண்டவன் கண்ணாடி முன் நின்று கவனித்தான்;

தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்.

அப்போது மன்னர் அவனிடம், ''விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய் அதைவிட, முக்கியமான ஒன்று.

இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது.

உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும் துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது'' என்றார்

கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்

மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது.

'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து இந்த உடைகள் கிழிந்து விட்டால், அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக் கொண்டான்.

வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை.

எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான்.

மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை.

அடிக்கடி கீழே விழுந்து விடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில் பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர அவனால் ருசிக்க முடியவில்லை.

அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.

அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை.

ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது.

மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர்.

இதனால் அவனைக் 'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர்.

இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார்.....

அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.

ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது..... ,

பழைய துணி மூட்டை அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது..

அந்த யாசகனிடம் மட்டுமல்ல,

நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை இருக்கிறது.

அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன.

நாம் அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால்..., நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமலே இருக்கிறோம்.

நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் அக் கோபம் செய்து விடுகிறது.

அரண்மனைகளில் கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர்.

அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.

மனதில் இருக்கிறது மகிழ்ச்சி...

வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது.

நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை

நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன

அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை.......,

வீடையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர்.

இல்லத்தை மட்டுமல்ல.....,

உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால்

அவற்றின் அழுகல் நாற்றம்

உதடுகளின் வழியே சொற்களாகவும்..,

கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்.

அது ஒருபோதும் வெளிச்சத்தை வழங்காது.

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை...

  • 526
·
Added a post

அஜீரணத்தை போக்கும் புதினா நீர் தயாரிக்கும் வழிகள்

1. முதலில் நீங்கள் அடுப்பில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, தண்ணீரைக் கொதித்த பிறகு புதினா இலைகளை அதில் போடவும். இப்போது 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து, தண்ணீரை வடிகட்டி, எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.

2. மற்றொரு வழி, 6 முதல் 7 இலைகளைக் கொடுத்து, அவற்றைக் கழுவி நன்கு நசுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இப்போது இலைகளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இப்படி செய்வதன் மூலமும் அஜீரண பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

3. மூன்றாவது வழி, புதினா இலைகளை நன்கு கழுவி உலர்த்தி, அதில் பொடி செய்து கொள்ளவும். இப்போது அந்த பொடியை தொடர்ந்து பயன்படுத்துங்கள். அதனை அப்படியே சாப்பிடலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம் இவ்வாறு செய்வதன் மூலம் அஜீரண பிரச்சனையில் இருந்து விடுபடலாம். விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்*

வயிற்றில் வலி ஏற்படுவதற்கான காரணம், வாயு, மலச்சிக்கல் தான் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் அஜீரணத்தின் காரணமாகவும் வயிற்று வலி இருக்கலாம். சொல்ல போனால் ஆஜீரணம் பல வயிற்று பிரச்சனைகளையும், உடல் நல பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

அத்தகைய சூழ்நிலையில், இந்த சிக்கலை நீக்க புதினா உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அஜீரண பிரச்சனையை நீக்க புதினா இலைகள் சிறந்த மருந்தாக செயல்படும். இது தவிர, புதினா இலைகள் வயிற்றில் உள்ள வலியை நீக்கவும், அஜீரண பிரச்சனையை சமாளிக்கவும் புதினா உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதினாவில் உள்ள சத்துக்கள் வயிற்றை பல பிரச்சனைகளில் இருந்து காக்கும்.

அஜீரணத்தை போக்க புதினாவை எப்படி பயன்படுத்துவது என்பது தான் இப்போதைய கேள்வி. எனவே இன்று அஜீரணத்திற்கு புதினாவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இன்று இந்த கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அஜீரணத்தை போக்கும் புதினா நீர் தயாரிக்கும் வழிகள்

1. முதலில் நீங்கள் அடுப்பில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, தண்ணீரைக் கொதித்த பிறகு புதினா இலைகளை அதில் போடவும். இப்போது 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து, தண்ணீரை வடிகட்டி, எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.

2. மற்றொரு வழி, 6 முதல் 7 இலைகளைக் கொடுத்து, அவற்றைக் கழுவி நன்கு நசுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இப்போது இலைகளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இப்படி செய்வதன் மூலமும் அஜீரண பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

3. மூன்றாவது வழி, புதினா இலைகளை நன்கு கழுவி உலர்த்தி, அதில் பொடி செய்து கொள்ளவும். இப்போது அந்த பொடியை தொடர்ந்து பயன்படுத்துங்கள். அதனை அப்படியே சாப்பிடலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம் இவ்வாறு செய்வதன் மூலம் அஜீரண பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

  • 476
·
Added a post

வால்மிளகின் மருத்துவ குணங்களை இன்னும் பலரும் அறியாமல் இருக்கிறோம். மிளகு, வால்மிளகு இரண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை. மிளகை போன்றே இருக்கும். ஆனால் இந்த மிளகில் காம்புடன் இணைந்து இருக்கும். பார்பதற்கு வால் போன்று இருக்கும். அதனால் இதனை வால்மிளகு என்று அழைப்பார்கள்.

சிறிதளவு வால்மிளகுத்தூள் இதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குறையும். இலவங்கப்பட்டை, வால்மிளகு இரண்டையும் பொடியாக்கி நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

சந்தனப்பொடி, வால்மிளகு, அதிமதுரம் ஆகிய மூன்றையும் காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் கல் அடைப்பு மற்றும் சிறுநீர் பிரச்சனை குணமாகும்.

பல் பிரச்சனைகள் குணமாக கறிவேப்பிலையை துளாக்கி அதில் லவங்கம், கடுக்காய், நெல்லி, சேர்த்து அனைத்தும் பொடியாக்கி பல் தேய்த்தால் பல் பிரச்சனை குணமாகும்.

வால்மிளகை பொடியாக்கி சீரகம் சேர்த்து மோருடன் குடித்து வந்தால் வாய் நாற்றம் பற்களில் ரத்தம் கசிதல் போன்றவை குணாகும்.

வால்மிளகை பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால் கப நோய் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

தொண்டை பிரச்சனை, தும்மல், குரல் அடைப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அதிமதுரத்தூளுடன் வால்மிளகைச் சேர்த்தலேகியமாகக் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

உடல் சூடு, சிறுநீர் எரிச்சல் இருந்தால் பசும்பாலில் வால்மிளகை ஊற வைத்து அதில் பீர்க்காங்காய் அல்லது நீர் உள்ள காய்களை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும். மேலும் வாதம், பித்தம், வயிற்றுவலி போன்ற பிரச்சனைகளும் குணமாகும்.

கீரைகள் சமைக்கும் போது அதில் வால்மிளகு பொடியை சேர்த்தால் உடலுக்கு அதிக சத்துகளை அதிகரிக்கும். வால் மிளகில் அதிக வேதிப்பொருட்கள் இருப்பதால், அதிக மருத்துவ குணங்களையும் கொண்டதாக இருந்து வருகிறது.

  • 476
·
Added a post

2004 ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் நடந்த சம்பவம் இது.

ஒரு இளம்பெண் தனியாக கடற்கரையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் திடீரென கடல் அலைகள் மிகவும் வேகமாக உயரத் தொடங்கியது.

அது ஒரு சுனாமி போன்ற அபாய நிலை என்பதைக் யாரும் அப்போது சரியாக உணரவில்லை.

அந்த பெண்ணுக்கு அருகில் சுற்றுலா பயணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த

ஒரு யானை இருந்தது.

அபாயத்தை உணர்ந்த அந்த யானை,

பெண்ணை தன்னுடைய முதுகில் தூக்கி ஏற்றி,

வேகமாக உயரமான இடத்துக்கு ஓடத் தொடங்கியது.

சில நிமிடங்களுக்குள் கடல் நீர் அந்த இடத்தை முழுமையாக மூழ்கடித்தது.

ஆனால் யானை அழைத்துச் சென்ற இடம் பாதுகாப்பான உயரமான பகுதி.

யானையின் இயற்கையான ஆபத்து உணரும் திறன்

ஒரு மனித உயிரைக் காப்பாற்றிய விலங்கின் உணர்வு

இந்த சம்பவம் உலகம் முழுவதும் செய்தியாக பரவி,

“விலங்குகளுக்கும் மனிதர்களைப் போலவே உயிர் மதிப்பு உண்டு”

என்பதை மீண்டும் நினைவூட்டியது.

  • 477
·
Added a post

மாப்பிள்ளை உனக்கு பிடிச்சிருக்காம்மா?!

அப்பா கேட்கும் போது இந்த மாப்பிள்ளை வேண்டாம்பா என்றேன்!..

நீ கவலைப்படாதே!

இந்த வரனை ஒப்புக்கோ! உன் வாழ்க்கை நல்லாருக்கும்னு சொல்லிட்டு எழுந்து போயிட்டார் அப்பா!..

நான் அப்பா பேச்சை என்றுமே மறுத்து பேசியதில்லை என்பதால் மனசுக்கு பிடிக்காவிட்டாலும் மௌனமாக சம்மதித்தேன்...

கல்யாணம் முடிந்து புகுந்த வீட்டில் நுழைந்ததுமே திகைத்துப்போய்விட்டேன்..

சக்கரை நோயால் பாதிக்கப்பட்ட மாமனார், நரம்பு தளர்ச்சியால் கை கால் பாதித்த மாமியார்,மூளை வளர்ச்சி குறைந்த 25 வயது நாத்தனார்!..

கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போலாயிற்று!.

பாழுங்கிணற்றில் வந்து விழுந்து விட்டேனே என்று மனசுக்குள் கதறினேன்!..

ஏனோதானோனு வீட்டு வேலைகள் செய்யறது, யார் எதை கேட்டாலும் எரிந்து விழறதுனு என்னை நானே ஒரு பழி வாங்குபவளாக மாற்றிக்கொண்டேன்!..

என் இவ்வளவு நடவடிக்கைகளுக்கு பிறகும் அந்த குடும்பம் என்னை தாங்கத்தான் செய்தது.

என் கணவர் என்மேல் வைத்த அன்பில் ஒரு குறையுமில்லை!..

நான் எவ்வளவுதான் எரிந்து விழுந்தாலும் என்னை அன்போடு அரவணைத்து சென்றார் மாமியார்!..

புகுந்த வீட்டில் ஆறு மாசம், பொறந்த வீட்டில் ஆறுமாசம்னு என் வாழ்க்கை போயிட்டிருந்தது!...

ஒருநாள் என் வீட்டுக்கு பெட்டி படுக்கையோடு கிளம்பும் போது

என் மாமியார் "நீ உன் அம்மா வீட்டில எவ்வளவு நாள் சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிறியோ அவ்வளவு நாள் சந்தோஷமா இருந்திட்டு வா!

ஆனா! உன் வருகைக்காக இங்கே ஒரு குடும்பம் காத்திட்டிருக்கும் என்கிறதை எப்போதும் மறந்து விடாதே!"

அப்படின்னு சொன்னதுதான் தாமதம்

முன்னோக்கி நகர்ந்த என் கால்கள் சடாரென்று பின்னோக்கி நகர்ந்தது!

கைகள் பெட்டி படுக்கையை பட்டென்று கீழே உதறின!..

ஏதென்று புரியாமல் பார்த்த என் மாமியாரை ஓடிச்சென்று கட்டிப்பிடித்து கதறினேன்!..

என் தலையை வருடி முன் நெற்றியில்

ஆதரவாய் முத்தமிட்டார் என் மாமியார்!..

எப்பேர்பட்ட குடும்பத்தை என் நடவடிக்கைகளால் கொத்தி குதறிபுட்டேன்!.

இதற்கு பரிகாரமாக நான் என்ன செய்வேன்! ஆண்டவனே என்னை மன்னித்து விடு!..

இப்போது என் பார்வையில் மாமியார் அம்மாவாக தெரிந்தார்

மாமனார் அப்பாவாக தெரிந்தார்

நாத்தனார் உடன்பிறப்பாக தெரிந்தாள்..

ஒரு நிமிடம்கூட என்னிடம் கடிந்திடாத என் கணவர் தெய்வமாக தெரிந்தார்!

இப்போது என் புகுந்த வீடு ஒரு கோயிலாக தெரிந்தது!...

காட்டுவா ராபி.மு

  • 486
New People