Quote of the Day

பழமொழி: அந்தி மழை அழுதாலும் விடாது.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
sivam 240
Senthuran 40
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
  • 10

Good Morning

  • 12
·
Added article

நடிகை சரண்யா பொன்வண்ணனின் இளைய மகள் சாந்தினி அக்டோபர் மாதம் டானி பிலிப் பாபு என்பவருடன் ஊட்டியில் தடபுடலாக நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து 2ந் தேதி கோபிசெட்டிபாளையத்திலுள்ள ஒரு சர்ச்சில் எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. ' இதையடுத்து, நேற்று சென்னை கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது துணைவியாருடன் கலந்து கொண்டார்.

நடிகர் சூர்யா, கார்த்தி, சசிகுமார், தனுஷ், சசிகுமார், அருண்குமார்,ஜீவா, விஜய்சேதுபதி, சத்யராஜ், விஜயகுமார், சினேகா, பிரசன்னா, பிரபு, விக்ரம் பிரபு, எம்.எஸ்.பாஸ்கர், பார்த்திபன், நாசர், சரத்குமார், பாக்யராஜ், இளவரசு, தலைவாசல் விஜய், இயக்குநர்கள் மணிரத்னம், சேரன், கேஎஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

இரண்டு மகள்களுக்குமே திருமணத்தையும் முடித்திருக்கும் மகிழ்ச்சிகள் இருக்கும் சரண்யா பொன்வண்ணனுக்கு இணையத்தில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருமணம் குறித்து சரண்யா, பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், உங்கள் கணவர் என்ன படித்து இருக்கிறார் ? உங்கள் கணவருக்கு என்னென்ன மொழி தெரியும்? எவ்வளவு சொத்து இருக்கு? என பலர் கேட்பார்கள். இவை எல்லாம் தேவையில்லாத ஒன்று, என் கணவர் நல்ல மனிதரா என்று தான் பார்க்க வேண்டும்.

இந்த காலத்தில் ஒரு பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை துணை வேண்டும் என்றால், இதையெல்லாம் பார்க்காமல் ஒரு நல்ல மனிதரா, நல்ல மனுஷனா? நமக்கு மரியாதை கொடுப்பாரா? மற்றவர்களின் முன்பு உன்னை அழகாக நடத்துவாரா? உனக்கு அவமானம் வரும் படி நடந்து கொள்ளமாட்டாரா? அவர் தான் நல்ல மனுஷன்... அவர் தான் நல்ல புருஷன் இப்படி பட்டவர்களை திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயம் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்று சரண்யா பொன்வண்ணன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

  • 18
·
Added a post

ஆவாரம் பூக்களையும், இலையையும் காய வைத்து பொடி செய்து, காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தம் அடையும். ஈரல் சம்மந்தமான நோய்கள் குணமாகும்.

ஆவாரம் பூக்களை காயவைத்து காலையில் ஆவரம் டீ தயாரித்து அருந்தலாம். இதுவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். இதனுடன் நாகப்பழத்தின் கொட்டையையும் சேர்த்து பயன்படுத்தலாம் .அதிக பயன் தரும்.

ஆவாரம் மூலிகையின் அனைத்து பாகங்களும் நீரிழிவு, எலும்புருக்கி, கண், மூலம், நாள்பட்ட புண்கள், சிறுநீரகக் கோளாறுகள், வெள்ளை வேட்டை நோய்களையும் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி, நல்லெண்ணெய் போன்றவைகளை சேர்த்து ஆவாரைத் தைலம் காய்ச்சி, அதை தோலில் தடவி வந்தால் தோல் வெடிப்பு, வறட்சி, எரிச்சல் போன்றவை குணமாகும்.

ஆவாரம் பூக்களை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களில் நிறைந்திருக்கும் நச்சுக்கள் முழுவதும் வெளியேறும். அதோடு வயிறு சம்மந்தமான நோய்களும் குணமாகும்.

ஆவாரம்பூ நீரிழிவு, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகியவை நீரிழிவு, வெள்ளை, உட்கரு, புண், எலும்பைப் பற்றிய சுரம், நீர் வேட்கை போன்றவற்றை நீக்கும்.

  • 23
·
Added a post

கனகதாசர் என்ற பெரியவர் கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் இளமையில் ஒரு குருநாதரை அணுகித் தமக்கு உபதேசம் பண்ண வேண்டுமென்று கேட்டார். அந்தக் குருநாதர் கனக தாசரின் தகுதியை உணர்வதற்காக அவருடைய கையில் ஒரு கனியைக் கொடுத்து, "இதை யாரும் இல்லாத இடத்தில் நீ போய்ச் சாப்பிடு" என்று சொன்னார்.

அதை வாங்கிக் கொண்ட கனகதாசர் இரண்டு நாள் வரையில் அதைத் தம் கையிலே வைத்திருந்தார். பிறகு அதைக் கொண்டு வந்து குருநாதரின் திருவடியிலே வைத்து, "இதை என்னால் சாப்பிட முடியவில்லையே! தேவரீர் நான் இதை யாரும் இல்லாத இடத் தில் உண்ண வேண்டுமென்று கட்டளையிட்டீர்கள். அப்படி ஓர் இடம் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லையே!" என்றார்.

""யாரும் இல்லாத இடமே உனக்குக் கிடைக்கவில்லையா? ஏதேனும் ஓர் அறைக்குள் தனியாகச் சென்று உண்ணக் கூடாதா? என்று கேட்டார் குருநாதர்.

“எங்கும் ஒருவன் இருக்கிறானே; அவன் இல்லாத இடம் எதுவும் இல்லை. யாரும் இல்லாத இடத்தில் அல்லவா நான் இதை உண்ண வேண்டும் என்றீர்கள்? அவன் ஒருவன் இல்லாத இடமே இல்லாத போது உங்கள் கட்டளைப்படி நான் எப்படி நடப்பது?” என்று சொன்னாராம் கனகதாசர்.

அதனைக் கேட்டுப் புன்னகை பூத்து, "அப்பா, உனக்கு இந்தப் பழம் வேண்டாம். ஞானப் பழம் தருகிறேன்” என்று உடனே அவனுக்கு உபதேசம் செய்தாராம் குருநாதர். கனகதாசருக்கு இறைவன் எங்கும் இருக்கிறான் என்ற உணர்வு இருந்தது. நமக்கு அந்த உணர்வு இல்லையே!

இறைவனை நாம் கோவிலில் கும்பிடுகிறோம். எங்கும் இறைவன் எழுந்தருளி இருக்கிறான். அவன் இல்லாத இடம் இல்லை. எள்ளுள் எண்ணெயைப் போலச் சர்வாந்தர்யாமியாக அவன் விளங்குகிறான். பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்றவன். 'அப்படி இருக்க அவனுக்கு என்று தனியே ஒரு கோவில் வைத்து அங்கே போய் நாம் கும்பிட வேண்டுமா?' என்று சிலர் எண்ணுவது உண்டு. உண்மையில் ஆண்டவன் எங்கும் இருக்கிறான் என்ற உணர்வு எல்லோருக்கும் இருப்பதில்லை. மிக பெரியவர்களே உணர்ச்சிபூர்வமாக அதை உணர்கிறார்கள்.

  • 23
·
Added a post

1.பாசிட்டிவாக (நேர்மறை எண்ணங்களோடு) இருப்பவர்களோடு பழகுங்கள்...

நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் (நேர்மறை எண்ணங்கள்) இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.

தெரியாது "நடக்காது" முடியாது "கிடைக்காது "என சொல்பவர்களை விரட்டி விடுங்கள்

2) உற்சாகமாக இருங்கள் :

சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள். இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.

3. பவர்ஃபுல்லாக உணருங்கள்:

உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம். உங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை... உடனே சிரிக்காதீர்கள். இதுதான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை. உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்.

4. லவ் பண்ணுங்க:

உங்களை நீங்களே நேசியுங்கள். இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது. உங்களை உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள். உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்கு புரியவையுங்கள். உங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங்களை போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

5.பயணப்படுங்கள் :

வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது. இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும். அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள். வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும், உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்..

  • 34
·
Added a post

நீங்கள் ஜிகர்தண்டா குடித்திருக்கிறீர்களா…? ஆம் எனில், அதில் உடல் குளிர்ச்சிக்காகப் போடப்படும் சப்ஜா விதைகளை பார்த்திருப்பீர்கள்.அந்த சப்ஜா விதைகள் வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் தன்மை உடையவை.

சப்ஜா விதைகளை உற்பத்தி செய்யக்கூடிய திருநீற்றுப்பச்சிலை, மிகவும் வாசனை மிகுந்தது.துளசி இனத்தைச் சேர்ந்த இது, தெய்வீக மூலிகையாக விளங்குகிறது.

வெண்மை நிறத்தில் அதிகளவு பூக்களை உற்பத்தி செய்யும் இந்தச் செடி இருக்கும் இடங்களை நாடி தேனீக்கள் பறந்து வரும்.

பயன்கள்:

  • இந்த இலையை கசக்கி முகர்ந்தால் தலைவலி, நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகும்.
  • வாந்தியை நிறுத்துவதில் மிகச் சிறந்த மருந்து.
  • ரத்த வாந்தியைக் கூட கட்டுப்படுத்தக் கூடியது.
  • சத்துக்கள்:
  • திருநீற்றுப்பச்சிலையில் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடென்ட், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் நிறைந்துள்ளன.
  • இதில் மிகக் குறைந்த கலோரிகள் உள்ளன.
  • பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புக்கள் உள்ளன.
  • மேலும், சிட்ரால், சிட்ரோனெலால், ஜெரானியால் போன்ற ஏராளமான மூலப்பொருட்களும் உள்ளன.

மூலிகைகளின் அரசன் என்றும் திருநீற்றுப் பச்சிலை அழைக்கப்படுகிறது.

இதன் இலை கற்பூரத்தின் தன்மைஆ கொண்டது.

வியர்வையை பெருக்கச் செய்யும்.

மருத்துவ குணங்கள்:

பருவ வயதில் முகத்தில் தோன்றும் பருக்கள் , மற்றும் கரும்புள்ளிகள் , போன்ற பிரச்சினைகளுக்கு இந்த இலையைக் கசக்கி முகத்தில் தடவினால், பருக்கள் காணாமல் போகும்.

திருநீற்றுப்பச்சிலையின் விதையை கஷாயம் வைத்து குடித்தால் சுறுசுறுப்பு கிடைப்பதோடு சிறுநீரகக் கோளாறுகள் குணமாகும்.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல், உடல் உஷ்ணம் போன்றவற்றிற்கு இந்த இலை மிகச் சிறந்த மருந்தாகும்.

இலைச் சாற்றுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்பு வலி, இருமல், வாயுப் பிரச்சினைகள் சரியாகும்.

காது வலி, காதில் சீழ் வடிதல் ஆகியவற்றுக்கும் இந்த இலைச் சாறு கண் கண்ட மருந்து.

திருநீற்றுப்பச்சிலையின் இலைகள், பூக்கள், விதைகள் ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து ஆரோக்கிய மூலிகை குளியல் எடுக்கலாம். இதனால் படை, தேமல் போன்ற தோல் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

  • தலையில் பேன் பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் இந்த இலையின் சாற்றை தனியாகவே அல்லது எண்ணெய் கலந்தோ தேய்த்துக் குளித்தால் பேன், பொடுகுத் தொல்லைகள் போய்விடும்.
  • 39
·
Added a post

வெட்டி வேர் புல் இனத்தைச் சார்ந்தது. அனைத்து மண்ணிலும் வளரும்.

பெரும்பாலும் மணற் பாங்கான இடங்கள், ஆற்றுப் படுகையில் சிறப்பாக வளரும்.

நாணல் மற்றும் தர்ப்பைப் புற்கள் போல் வளரும். கொத்து கொத்தாக இருக்கும்.

பெயர்க் காரணம்::

இதன் வேரை வெட்டி எடுத்த பின், தாவரத்தின் வேர் மற்றும் புல் இரண்டையும் தனித்தனியாக வெட்டி எடுக்க வேண்டும். பிறகு நடுவில் உள்ள தண்டை மீண்டும் புதிதாக நட்டுப் பயிரிடுவதால் வெட்டி வேர் எனப்படுகிறது.

வேர் கருப்பு நிறத்தில் வாசனையுடன் இருக்கும்.ஒரு வருடத்தில் வெட்டி எடுக்கலாம். குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதன் பூ ஊதா நிறம் உடையது. வேர் 2மீ முதல் 4மீ ஆழம் வரை செல்லும்.4முதல் 5 அடி உயரம் வரை வளரும்.

லெமன் கிராஸ்,பாம்பரோஸா புல் போன்று வளரும்.

மண் அரிப்பைத் தடுக்கும்.

மாடுகளுக்கு இதன் புல் உணவாகிறது.

மருத்துவ பயன்கள்:

அதிக நறுமணம் உடையது வெட்டி வேர்.இதை சுவாசிப்பதால் தலைவலி குணமாகும்.உடல் புத்துணர்ச்சி பெறும்.

இதிலிருந்து எடுக்கப்பட்டத் தைலம் அதிக வாசனை யுடன் இருப்பதால், சிறந்த மணமூட்டியாகத் தைலங்களிலும், குளியல் சோப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இதன் எண்ணெயை கை, கால் பிடிப்புகளுக்குத் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

காய்ச்சல் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நா வறட்சி, தாகம் நீங்குவதுடன் , வாந்தி ,பேதிக்கு நல்ல மருந்தாகும்.

மண் பானைத் தண்ணீரில் வெட்டி வேரை போட்டு ஊற வைக்க, நீருக்குச் சுவையும், மணமும், பலன்களும் பல மடங்கு கிடைக்கும்.

காய்ச்சல்:

வெட்டி வேரை நன்கு உலர்த்தி பொடி செய்து 200மி.லி.முதல் 400மி.லி.அளவு எடுத்து நீரில் ஊற வைக்கவும்.ஊறல் நீரை 30முதல்65மி.லி. அளவு வீதம் அருந்தி வர காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்கள் கட்டுப்படும்.

விசிறி:

வெட்டி வேர் கொண்டு விசிறிகள் செய்யப் படுகிறது. இந்த விசிறி மூலம் வீசி வர உடல் எரிச்சல்,நா வறட்சி மற்றும் தாகம் தீர்க்கும்.

தட்டி::

விசிறி மட்டும் அல்லாமல் வீட்டின் ஜன்னல்களுக்குப் போடப்படும் தட்டிகளும் வெட்டி வேரைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.இவற்றை வீட்டின் ஜன்னல்களுக்குக் கட்டி வர அறையின் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியைத் தருகிறது.

கோடைக் கொடை:

கோடை காலத்தில் ஏற்படும் தேக எரிச்சல், கண் எரிச்சல்,வயிற்றுக் கடுப்பு முதலிய நோய்கள் குணமாக வெட்டி வேர் உதவுகிறது.

வெட்டி வேரை சுத்தம் செய்து, உலர்த்தி பொடி செய்து, அதனுடன் பெருஞ்சீரகம் பொடி சம அளவு எடுத்து, வெந்நீரில் அருந்தி வர குணம் கிடைக்கும்..

நன்றாக காய்ச்சிய சுடுநீரில் திருநீற்றுப்பச்சை விதைகளுடன் வெட்டி வேரை 2பிடி சேர்த்துஒரு மண் பாண்டத்தில் போட்டு, வெய்யில் நேரத்தில் குடித்தால், சூட்டினால் ஏற்படும் தேக எரிச்சல்,கழுத்து வலி, கோடைக் கொப்புளங்கள், சொட்டு சொட்டாக இறங்கும் சிறுநீர் போன்ற உஷ்ண வியாதிகள் யாவும் தணியும்.

பருக்கள், தழும்புகள்::

பருக்கள் அடிக்கடி முகம் முழுவதும் தோன்றி அவதிப்படுபவர்களுக்கு வெட்டி வேர் சிறந்த மருந்தாகும்.

சிறு துண்டுகளாக்கிய வெட்டி வேர் ஒரு டீஸ்பூன் மற்றும் கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்று, இரண்டையும் முன்னாள் இரவு கொதிநீரில் ஊறவைத்து அரைத்த விழுதை பருக்கள் மீது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பூசி வந்தால், பருக்கள் உதிர்ந்து,வடுவும் தெரியாது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.

பருக்களால் ஏற்பட்டத் தழும்புகளால் சிலருக்கு முகம் கரடு முரடாக இருக்கும்.அதற்கு, ஒரு இரவு முழுவதும் வெந்நீரில் ஊற வைத்த வெட்டி வேர் துண்டுகளை, மறுநாள் வெட்டி வேரையும், தண்ணீரையும் தனித் தனியே பிரிக்க வேண்டும்.

மேலும், வெட்டி வேர் போட்டு கொதிக்க வைத்த நீரில் ஆவி பிடிக்க வேண்டும்.பின் முகத்தை தன் துடைத்தால், வெட்டி வேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியால் அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள்.

வாரம் இருமுறை இப்படிச் செய்தால் தழும்புகள் மறைந்து விடும்.

ஸ்பெஷல் பேஸ் பேக்:

வெட்டி வேர்,ரோஜா மொட்டு, மகிழம் பூ, செண்பகப் பூ, சம்பங்கி விதை இவற்றை சம அளவு எடுத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.(எவ்வளவு அரைத்தாலும் திப்பி திப்பியாக இருக்கும்), இதை நன்றாக சலித்து,நைசான பவுடரை மட்டும் நீரில் குழைத்து முகத்தில் பூசி, பிறகு கழுவ வேண்டும். வெட்டி வேர் எண்ணெய் பசையை எடுக்கும்.சம்பங்கி விதை முகத்திற்கு புத்துணர்ச்சி தரும்.ரோஜா மொட்டு சோர்வைப் போக்கி நிறத்தைத் தரும்.மகிழம் பூவும், செண்பகப் பூவும் வியர்வை நாற்றம் போக்கி, வாசனையைத் தருகிறது.

சருமம் மிருதுவாக:

சிலருக்குத் தோள் பட்டையிலும்,முதுகுப் புறத்திலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும்.இதற்குத் தீர்வு வெட்டி வேரிலுள்ளது.

பச்சை பயறு 100கிராம்,சிறு துண்டுகளாக்கிய வெட்டி வேர்-50கிராம் இரண்டையும் மிஷினில் கொடுத்து அரைத்து, அந்த பவுடரை உடலுக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்,சிறு கட்டிகள், வரிகள் ஓடிப் போகும்.சருமம் மிருதுவாகும்.

கூந்தல் மணக்க::

வெட்டி வேர் 100கிராம், வெந்தயம் 100கிராம் இரண்டையும் சீயக்காய் மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால், எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது சீயக்காய்க்கு பதில் இந்தப் பவுடரை பயன்படுத்தி தலைக்குக் குளித்தால், முகத்தில் எண்ணெய் வழியாது.அதோடு கூந்தலும் மணக்கும்.

சர்பத்-சம்மர் கூலர்:

வெட்டி வேரை கழுவி சுத்தம் செய்து 3நாட்கள் குடிநீரில் ஊறவைத்து வடிகட்ட வேண்டும். ஊறவைத்த வேரை வெயிலில் காய வைத்துமீண்டும் அந்த வேரைப் பயன் படுத்தி இதேபோல் மூன்று முறை பானம் தயாரிக்க முடியும்.

இப் பானம் தாகத்தைத் தணிப்பதோடு, நீரேற்றமாக வைக்கவும், ஆரோக்கியமான உணவாகும்.

செல் பிரிவு:

வெட்டி வேரில் 300க்கு மேற்பட்ட என்சைம் செயல் பாட்டிற்குக் காரணமான துத்தநாகச் சத்து உள்ளது.இது இயற்கை பாதுகாப்பு அமைப்பை ஆதரிக்கிறது.செல் பிரிவு, செல் வளர்ச்சி மற்றும் காயங்கள் குணப்படுத்த உதவுகிறது.

ஆன்டி ஆக்சிடென்ட் கள் நிறைந்துள்ளன.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

இரும்பு, மாங்கனீசு மற்றும் பி 6 வைட்டமின்கள் இருப்பதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.

குடிக்கும் நீரில் வெட்டி வேர் போட்டுக் குடிப்பதால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

இந்த கொரானாக் காலத்திலும் ஒரு சிறந்த பாதுகாப்பை அளிக்கும்.

இத்தகைய சிறப்புகள் பெற்றிருப்பதாலே தான் இது "வெற்றி வேர்"என்றும் அழைக்கப்படுகிறது.

  • 37
·
Added a post

ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான்.

கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம்,

அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான்.

ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும்.

அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள். அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும்.

ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான்.

ரயில் வருகிற நேரம்.....

ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான்.

பின், பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி... எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா? இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்.அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான். அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது... உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?...’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான்.

தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன்.

காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள்.

அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா. "அம்மா... நான் இருக்கிறேன் அம்மா..." என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான்.

ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான்.

முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் "இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக் கிறான்... நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..." என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்.

செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான், "அம்மா...! அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்.நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்...!" என கதறி அழுகிறான்.

ஆகவே நாம், நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கையின் அர்த்தம்!

எதை கற்றுக் கொண்டோம்..

எதை கற்றுக் கொடுத்தோம் .

--- ஜெயகாந்தன்.

  • 42
·
Added a post

”வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்ததும் சா*க வேண்டியதுதான்” என்று கிராமங்களில் விரக்தியாகச் சொல்வதை கேள்விப் பட்டிருக்கிறோம்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சில இடங்களில் அதை நடைமுறையிலும் பார்க்க முடிகிறது.

ஆனால் நம் முன்னோர்கள் உணவை மருந்தைப் போல அளவாகவும், பத்தியமாகவும் உண்டார்கள்.

மருந்தே உணவாக இருந்தது என்று கூடச் சொல்லலாம்.

அவர்களது சமையலறையில் மருத்துவ குணமுள்ள பொருட்களே அதிகம் இருந்தன.

மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி(தனியா) என்று பல மூலிகைப் பொருட்களை உணவில் பயன்படுத்தினர்.

இவைகளைப் பயன்படுத்தி குழம்பு, ரசம் எல்லாம் சமையல் செய்தனர்.

மஞ்சள் பொடி முக்கிய இடம் வகித்தது.

அது உணவுப் பொருள் வேகும்போது சத்துக்களை இழந்துவிடாமல் இருக்கவும், குடல் புண்ணை ஆற்றவும், கிருமி நாசினியாகவும் பயன்பட்டது.

துவரம் பருப்பை அவர்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளவில்லை.

பாசிப்பயிரையே அவர்கள் அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.

காரம் தேவைப்படும் போதெல்லாம் மிளகையே பயன்படுத்தியுள்ளனர்.

கறிவேப்பிலை கரைத்த நீர் மோர், சுக்கு பொடியிட்ட பானகம், கொத்துமல்லிக் காபி போன்றவற்றையே விருந்தினர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

உளுந்தை அவர்கள் குறைவாகவே உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்.

காலையில் நீராகாரத்தை உண்டனர்.

தயிரைவிட மோர் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இரவு செப்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசியைப் போட்டு வைத்து, அதிகாலையே எழுந்து அந்த நீரைப் பருகிவிட்டு தியானத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

மேலும் வாழையிலை, வாழை மரப்பட்டைகள் இணைந்த ஏடுகள், மந்தார இலை இவற்றையே உணவு உண்ண பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மற்ற உலோகங்களில் சூடான உணவை போடும் போது ஏற்படும் இரசாயன மாற்றம் இந்த இலைகளில் ஏற்படுவதில்லை.

மாறாக நன்மையே செய்கிறது என்று அறிந்து வைத்திருந்தார்கள்.

மதிய உணவுக்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே அவர்கள் வேறு எதையும் உட்கொள்ளமாட்டார்கள்.

உணவுக்கு முன் நீர் அருந்தினால் அது ஜடாராக்கினியை அவித்துவிடும் என்று உணவுக்கு முன் நீர் அருந்தமாட்டார்கள்.

எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுப் பண்டங்கள், கடின முயற்சியால் ஜீரணமாகும் உணவுப் பண்டங்கள் என்று அவர்கள் உணவு பிரிக்கப்பட்டிருந்தது.

பசியினால் சுருங்கியிருக்கும் உணவுக் குழாயில் சேதம் ஏற்பட்டு விடும் என்பதால் பரிமாறி முடிக்கும் வரை உணவை தொடமாட்டார்கள்.

உண்ணும்போது அந்தக் குழாயை சிறிதுசிறிதாக அகலப்படுத்தும் முறையாகவே அவர்கள் உணவுப் பழக்கம் இருந்தது.

இலையில் பதார்த்தங்கள் பரிமாறியதும் சாதம் வரும். அதற்கருகிலேயே பருப்பு வைக்கப்படும்.

நெய்யை சாதத்தின் மீது ஊற்றிய பின்னர் உண்ணத் துவங்குவார்கள்.

அதுவும் முதலில் சிறிதளவு நீரைக் கையில் எடுத்து இலையைச் சுற்றி ஊற்றிவிட்டு, மீதம் உள்ள துளிகளைப் பருகுவார்கள்.

இலையைச் சுற்றி ஊற்றுவதால் இலைக்கு சிறு பூச்சிகள் எறுப்புகள் வராது.

மீதமுள்ள துளிகளைப் பருகுவதால் அது சுருங்கிய உணவுக் குழாயில் ஈரப்பசையை உண்டாக்கி முன் செல்லும்.

இப்படி நீரால் சிறிது உணவுக் குழாய் விரிவடையும் போது, பருப்பு நெய் கலந்த சாதத்தை உண்ணுவார்கள்.

அது நெய்யினால் வழுக்கிக் கொண்டு போவதுடன் உணவுக் குழாயை மேலும் விரித்து விடும்.

பருப்பு ஜீரணமாக அதிக சக்தி தேவை என்பதால் உணவு உஷ்ணமாக இருக்கும் போதே பருப்பு மற்றும் சாம்பார் சாதத்தை சாப்பிட்டு விடுவார்கள்.

இந்த இரண்டு உணவுகளுக்குமே ஜீரண சக்தி அதிகம் தேவைப்படும் என்பதால் அடுத்ததாக எளிதில் ஜீரணமாகக் கூடிய மற்றும் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் மருத்துவ குணமுள்ள ரசம் சாதத்தை உண்பார்கள். அடுத்து மோர் சாதம்.

இது உணவைப் புளிக்க வைத்து எளிதில் ஜீரணமாக உதவும்.

அதற்க்குத் துணையான ஊறுகாய்களும், அதிலுள்ள அமிலத் தன்மை (எலுமிச்சை, நார்த்தை) உப்பு, மிளகு போன்றவைகளும் மேலும் ஜீரணத்திற்கு உதவும்.

பண்டைய காலங்களில் ஊறுகாய்க்கு கடுகு எண்ணெயும், மிளகுமே பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

இன்றோ நாகரீகம் என்ற பெயரில் மசாலா நாற்றத்துக்கு மயங்கி, கண்ட கண்ட வேளைகளில் கண்ட கண்ட உணவுகளை உள்ளே தள்ளி குடலையும், உடலையும் கெடுத்துக் கொள்கிறோம்.

இப்படி எல்லாம் நடக்காமல் இருக்க, திட்ட மிட்ட உணவுப் பழக்கங்களைக் கையாண்ட நம் முன்னோர்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

நாமும் இயன்றவரை முன்னோர் உணவுப் பழக்கங்களை கையாள முயற்ச்சிப்போம்.

  • 46

நிரந்தரம் என்று நாம் எதை நம்பினாலும் அது நம்மை ஏமாற்றிவிட்டு மற்றொருவர் கையைப் பற்றிக்கொள்ளும்.

உலகை விட்டுப் போகும் போது எதையும் கொண்டு செல்ல முடியாது.

ஆனால்,

உங்கள் அன்பை இங்கே விட்டுச் செல்ல முடியும் .

  • 95
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.   

மேஷம்

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் தூக்கமின்மை உண்டாகும். பழைய பிரச்சனைகள் குறித்த சிந்தனைகள் மேம்படும். மதி நுட்பத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சாஸ்திரம் சார்ந்த பணிகளில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். நண்பர்களுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். அரசு பணியில் இருந்து வந்த தாமதங்கள் குறையும். சக ஊழியர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். போட்டிகளில் ஈடுபட்டு மனமகிழ்வீர்கள். கால்நடை வியாபாரத்தில் லாபம் மேம்படும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மிதுனம்

புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். எதிலும் விடாப்பிடியாக செயல்படுவீர்கள். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கடகம்

தன வருவாய் மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஆதரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளரின் ஒத்துழைப்புகள் மேம்படும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். விருத்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

சிம்மம்

நண்பர்களின் ஆதரவால் நன்மைகள் கிடைக்கும். புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல்கள் அமையும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

கன்னி

இனம் புரியாத சில சிந்தனைகளால் மனக்குழப்பங்கள் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் உடல் சோர்வை ஏற்படுத்தும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் பிறக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புதிய புரிதல்கள் ஏற்படும். தொழில் நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் நிதானம் வேண்டும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

துலாம்

மனதளவில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். சமூகப் பணிகளில் மதிப்புகள் ஏற்படும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். மனதில் எண்ணிய ஆசைகள் நிறைவேறும். பிற மொழி பேசும் மக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். திருத்தல தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். நிர்வாக பணிகளில் பொறுப்பும் திறமையும் வெளிப்படும். உழைப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

விருச்சிகம்

உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். செயல்பாடுகளில் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள். கல்விப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பயணம் தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

தனுசு

சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். புதுவிதமான அனுபவங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். மற்றவர்களின் செயல்பாடுகள் மூலம் ஆதாயம் மேம்படும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

மகரம்

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். சிந்தனைகளின் போக்கில் மாற்றம் உண்டாகும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். வாகன பயணத்தில் மிதவேகம் நன்று. பத்திரம் தொடர்பான துறைகளில் விழிப்புணர்வு வேண்டும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கும்பம்

மனதில் ஆன்மிக நாட்டம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். சுபகாரிய எண்ணம் பலிதமாகும். நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : காவி

மீனம்

விலகி சென்றவர்களை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். இடப்பெயர்ச்சி சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். குறுகிய பயணத்தால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வாரிசுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் உருவாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 140
·
Added a post
  • 140

Good Morning...

  • 139
·
Added article

தென்னிந்தியா மற்றும் பாலிவுட் படங்களில் தனது நடிப்பால் கவர்ந்த பிரகாஷ் ராஜ், சமீபத்தில் கேரள இலக்கிய விழாவில் உரையாற்றினார். 'எதிர்ப்பை குற்றமாக்குதல்! பேசினால் யார் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள்?' என்ற தலைப்பில் பேசும்போது, இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சமீபத்திய சர்ச்சையை உதாரணமாகக் குறிப்பிட்டார். மேலும், கங்கனா ரனாவத் ரஹ்மானை விமர்சித்ததையும், மக்கள் 'முட்டாள்தனமாக நடந்துகொள்கிறார்கள்' என்று கூறியதையும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பிரகாஷ் ராஜ், ரஹ்மான் தொடர்பான சர்ச்சை குறித்து பேசுகையில், “ஏ.ஆர். ரஹ்மானுக்கு என்ன நடக்கிறது? பொதுவெளியில் என்ன விவாதம் நடக்கிறது? மா துஜே சலாம். ஜெய் ஹோ. இரண்டு ஆஸ்கர்கள். நீங்கள் மகிழ்ச்சியடைந்தீர்கள். உங்கள் தகவலுக்காக, அவர் வேலைக்காக கெஞ்சவில்லை, அவர் அதற்கும் மேலானவர், இதுதான் உண்மை.”

ரஹ்மான் ஒரு நேர்காணலில் 'சாவா' படத்தை 'பிளவுபடுத்தும்' படம் என்று கூறியதற்காக விமர்சிக்கப்பட்டார். பாலிவுட்டில் தனக்கு வேலை கிடைக்காததற்கு 'மதவாத' காரணங்கள் இருப்பதாகக் கூறிய பிறகு கங்கனா பதிலளித்தார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "அன்புள்ள @arrahman ஜி, திரைப்படத் துறையில் காவி கட்சிக்கு ஆதரவளிப்பதால் நான் நிறைய பாகுபாடு மற்றும் பாரபட்சத்தை எதிர்கொள்கிறேன், ஆனால் உங்களை விட பாரபட்சமான மற்றும் வெறுப்பை பரப்பும் நபரை நான் பார்த்ததில்லை என்று சொல்ல விரும்புகிறேன்."

இந்திரா காந்தி அடிப்படையிலான தனது 'எமர்ஜென்சி' படத்திற்கு இசை அமைக்க மறுத்ததாகக் கூறி, அவர் மேலும் கூறினார், “நான் இயக்கிய 'எமர்ஜென்சி' படத்தின் கதையை உங்களுக்குச் சொல்ல விரும்பினேன். ஆனால் கதை சொல்வதை விடுங்கள், நீங்கள் என்னை சந்திக்கவே மறுத்துவிட்டீர்கள். நீங்கள் எந்த பிரச்சாரப் படத்திலும் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்று எனக்குச் சொல்லப்பட்டது. முரண்பாடாக, 'எமர்ஜென்சி' அனைத்து விமர்சகர்களாலும் ஒரு சிறந்த படைப்பு என்று பாராட்டப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட படத்தை ஒருதலைப்பட்சமானது என்று கூறவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் வெறுப்பால் குருடாகிவிட்டீர்கள். உங்களைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.

இந்த முழு சர்ச்சைக்குப் பிறகு, ரஹ்மான் ஒரு வீடியோ அறிக்கையில் இந்தியா மற்றும் இசை மீதான தனது அன்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். யாரையும் புண்படுத்தும் எண்ணம் தனக்கு ஒருபோதும் இல்லை என்றும் அவர் கூறினார். சமீபத்தில் ஒரு நேர்காணலின் போது, ஆஸ்கர் வென்ற இசை அமைப்பாளர் இப்போது இதிலிருந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

  • 234
·
Added a news

டொராண்டோவின் ஸ்கார்பரோ பகுதியில் உள்ள டிம் ஹார்டன்ஸ் காபி கடைக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மாலை, லாரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் மற்றும் பெல்லமி ரோட் நார்த் சந்திப்புக்கு அருகிலுள்ள டிம் ஹார்டன்ஸ் கடையில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் சிறுவனை மீட்டதாக டொராண்டோ பொலிஸ் பரிசோதகர் எர்ரோல் வாட்சன் தெரிவித்தார்.

டொராண்டோ அவசர மருத்துவ சேவையினரின் தகவலின்படி, அந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. அவரின் சரியான வயதையும் பொலிஸார் தெரிவிக்க மறுத்துள்ளனர்.

சம்பவத்தின் போது கடையில் இருந்த ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்றும் வாட்சன் கூறினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கொலை விசாரணைப் பிரிவு விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், தற்போது அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டிற்கு வழிவகுத்த காரணங்கள் இதுவரை தெரியவரவில்லை.

  • 242
·
Added a post

1. குழந்தைகளின் பல்வேறு நோய்களுக்கு புங்க எண்ணெய் சிறந்த வீட்டு மருந்தாகப் பயன்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறுகள், இருமல், சளி, பேதி, பசியின்மை போன்றவற்றைப் போக்கும்.

2. புங்க எண்ணெய் சரும நோய்களையும் தீர்க்கக் கூடியது. இந்த எண்ணெய் மூல உபத்திரத்திற்கு சிறந்த மருந்தாகும். மார்புச் சளி, தீர இருமலுக்கு புங்க எண்ணெய் பயன்படுகிறது. சரும நோய்களுக்கும், ஆறாத புண்களுக்கும், கீழ்வாதத்திற்கும் புங்க எண்ணெய் பயன்படுகிறது. புங்க எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதுடன், பளபளக்கச் செய்யும்.

3. தினமும் உடலில் புங்க எண்ணெயைத் தடவி வந்தால் சரும நோய்கள் ஏற்படாது. புங்க எண்ணெய்யை பயன்படுத்தி சோரியாஸிஸ்சுக்கான மருந்து தயாரிக்கப்படுகிறது.

4. புங்க எண்ணெய் ஆஸ்துமா, நெஞ்சுக் கோளாறுகளுக்கு மருந்தாகிறது. புங்க எண்ணெய்யை நெஞ்சின் மீது பூசுவதால் நெஞ்சு சளி, இருமல் குறைகிறது. தலையில் பொடுகு இருந்தால் இதை தடவி பத்து நிமிடம் கழித்து குளித்தால், அரிப்பு சரியாகும்.

5. புன்னை எண்ணெய் அனைத்து முடிப் பராமரிப்பு எண்ணெய்களிலும் பெரும்பாலும் சேர்கபடுகிறது. புன்னை எண்ணெய் முடிஇழப்பைச் சரிசெய்யவும், புதிய முடிவளர்ச்சிக்கும் உதவி புரிகிறது. முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர இந்த எண்ணெய் உதவுகிறது.

6. இயற்கையாகவே புன்னை எண்ணெய் பூஞ்சை எதிர்ப்பானாகச் செயல்படுவதால் விளையாட்டு வீரர்களுக்கு காலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாக உபயோகபடுத்தப்படுகிறது.

7. நகச்சுற்று ஏற்படுத்தும் பூஞ்சைகளுக்கு எதிராக புன்னை எண்ணெய் சிறப்பான பலனை தருகிறது.

8. சொரியாஸிஸை குணப்படுத்துவதில் புன்னை எண்ணெய் சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

9. புன்னை மரத்து இலைகளை அரைத்து, நெற்றியில் பற்று போல தடவி வர, ஒற்றைத் தலைவலி மற்றும் தலைச் சுற்றல் போன்ற பாதிப்புகள் விலகும்.

10. புன்னை பூவை நிழலில் உலர்த்தித் தூள் செய்து ஒரு சிட்டிகை காலை, மாலை கொடுத்து வர டைபாய்டு தீரும்.

11. புன்னை எண்ணெய் தீக்காயங்களை ஆற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது.

12. முகச்சுருக்கங்களை நீக்குவதிலும் வரவிடாமல் தடுப்பதிலும் புன்னை எண்ணெய் சிறந்த பலன் தரும்.

13. செல்ல பிராணிகளுக்கு ஏற்படும் அரிப்பு மற்றும் புண்களுக்கு புன்னை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. மேலும் விலங்குகளுக்குப் பளபளப்பையும், ரோமத்தை அழகாக்கவும் இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

14. படர்தாமரையைக் குணப்படுத்த இந்த எண்ணெய் உதவுகிறது.

15. உடல் அரிப்பை, வறண்ட சருமத்தை மாற்றவும், நீக்கவும், சொறி, சிரங்கு வியாதிகளைக் குணப்படுத்தவும் புன்னை எண்ணெய் பயன்படுகிறது.

16. புன்னை எண்ணெய் உதட்டு வெடிப்புகளைத் தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.

பாதிப்புக்கு ஏற்ப வைத்தியர்களின் அறிவுரைப்படி இந்த எண்ணெய் பயன்படுத்தலாம்

  • 297
  • 242
·
Added a post

உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டீ, காபி அருந்துவது குறைந்து கொண்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக மக்கள் " "கிரீன் டீ" அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்

. . உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள " கிரீன் டீ" உதவுவதாக நம்பப்படுகிறது.தினமும் காலையில் பருகுவதால், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப் பட்டு, புத்துணர்ச்சி தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது அதேபோல், இயற்கை ஆர்வலர்களால் குறிப்பிடப்படும் இன்னொரு வகை

,. " புளு டீ " ஆகும். நீல நிற சங்குப்பூவின் மூலம் தயாரிக்கப்படுவதே " புளு டீ" -ன் சிறப்பு

  • . புளு டீ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது.
  • இதில் ஆன்டி— கிளைகேஷன் இருப்பதால், வயது முதிர்வைத் தடுத்து, இளமையை பாதுகாத்துக்கொள்ள உதவுவதாக நம்பப்படுகிறது.
  • தலையின் மேற்புறத்தில் உள்ள நுண் துளைகளில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை தூண்டக்கூடியது.
  • உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரலை பாதுகாக்கிறது.
  • நீரிழிவு நோயாளிகளின் உடலில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • " புளு டீ" யில் உள்ள " ஃப்ளேவனாய்ட்ஸ் என்ற ரசாயனம் புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.
  • உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
  • நோய்த் தொற்றுக்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
  • தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் அதற்கு உண்டு.
  • அஜீரணத்தை குணமாக்க வல்லது.
  • வயிற்றில் உண்டாகும் புண், எரிச்சல் ஆகியவற்றை தடுக்கிறது.
  • உடலின் வெப்ப நிலையைச் சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
  • மன அழுத்தத்தைக் தவிர்க்க உதவுகிறது.
  • " புளு டீ " தயாரிக்கும் முறை:
  • "கிரீன் டீ" தயாரிப்பது போன்றே இதையும் தயாரிக்க வேண்டும். .

கொதிக்க வைத்த தண்ணீரில் சில நீலநிற சங்குப்பூக்களை போட்டு, ஐந்து நிமிடம் கழித்து, இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சம் பழச்சாறு சில சொட்டுகள் விட்டு, தேவையான அளவு சுத்தமான தேன் கலந்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பருகலாம்.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சிகிச்சை பெறும் நோயாளிகள் ஆகியோர் கட்டாயம் தகுந்த ஆலோசனையின்றி " புளு டீ" அருந்தக்கூடாது.

  • 331
·
Added a post

சீனாவில் பெய்ஜிங் நகரில் உள்ள இராணுவ பொது மருத்துவப் பிரிவில் உள்ள மருத்துவ பேராசிரியர் சென் ஷூய் ரென் அவர்கள்கள் கேன்சருக்கான புதிய இயற்கை மருந்தினை கண்டறிந்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேற்படி விவரத்தினை ஒவ்வொருவரும் குறைந்தது 10 நபருக்கேனும் அனுப்பினால் மிக வேகமாக பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நபர்களுக்கு உதவியாக இருக்கும்.

Bitter gourd in hot water can help you. No matter how busy u r, u need to read this, then spread to friends and others. Spread the love.

பாகற்காயை சுடுதண்ணிரில் போட்டுக் குடிக்க அது நமக்கு உதவி செய்யும். நீங்கள் எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து இதை படிக்கவும்.

Hot bitter gourd can kill cancer cells!

சூடான பாகற்காய் சுடுநீர் .....கேன்சரை உருவாக்கும் செல்களை கொல்லும் சக்தியை கொண்டது.

Cut 2-3 thin slices of bitter gourd n put in a glass, pour hot water, water will become alkaline (alkaline). Drink every day. For anyone, it will be useful.

பாகற்காயினை எடுத்து 2 -3 மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளரில் போட்டு அதில் சூடான நீரை ஊற்ற வேண்டும். அந்த சூடான நீர் ALKALINE எனப்படும் காரத்தன்மை கொண்ட நீராக மாறிவிடும். அந்த தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மிக மிக உதவியுள்ளதாக இருக்கும்.

Hot water bitter gourd will emit an anti-cancer substance. This is a new development in the world of natural medicine, useful in treating cancer.

பாகற்காயில் உள்ள கேன்சர் நோயினை எதிர்க்கும் மருத்துவ பொருளினை சுடு தண்ணீரில் வெளியேற்றி விடும். இயற்கை மருத்துவத்துறையில் இது மிக முக்கியமான முன்னேற்றமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. மேலும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

Hot water bitter gourd extract will affect the cyst and tumor. Already proven, it can help various kinds of cancer.

இந்த பாகற்காய் இரசமானது கட்டிகள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் மீது தீவிரமாக செயல்படுகிறது என்பது ஏற்கனவே நிரூபனமாகியுள்ளது. மேலும் இது பல்வேறு வகையான புற்றுநோய்களையும் தீர்க்க உதவுகிறது.

Using bitter gourd in treating cancer, it will only kill the malignant cells of the tumor. It will not affect healthy cells.

நாம் இந்த பாகற்காய் இரசத்தினை தொடர்ந்து பயன்படுத்தும் அது புற்றுநோய் கட்டியில் தீவிரமாக பரவக்கூடிய செல்கள் மீது அதிதீவிரமாக செயல் பட்டு Malignant எனப்படும் வேகமாக பரவும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. தவிர பாதிக்கப்படாத மற்ற செல்களுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை.

In addition, amino acids and polyphenol oxidase in bitter gourd, can balance high blood pressure, blood circulation, reduce blood clotting and can prevent the occurrence of deep vein thrombosis.

இது மட்டுமல்லாமல் பாகற்காயில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் பாலிஃபினல் ஆக்சைடுகள் நமது உடலில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தினை சமன் செய்கிறது. இரத்த நாளங்களில் சீரான இரத்த ஓட்டத்தினையும், நாளத்தில் உள்ள இரத்த அடைப்புகளையும் சீர்செய்கிறது.

  • 313
  • 253
·
Added a post

இன்றைய இளைய தலைமுறையினர் முதல் வயதான முதியவர்கள் வரை இன்றைய காலகட்டத்தில் இடுப்பு வலியால் அவதிப் படுபவர்கள் ஏராளம். இந்த இடுப்பு வலிக்கு அவர்கள் செய்யும் வேலை கூட ஒரு காரணமாக இருக்கலாம். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு வலி உண்டாகிறது. அதிலும் கணினி முன் அமர்ந்து நீண்ட நேரம் பணிபுரிபவர்களுக்கு முதுகுத் தண்டுவடம் பாதிக்கப் படுவதால் அவர்கள் தொடர்ச்சியான இடுப்பு வலியால் அவதிப் படுகிறார்கள். முறையான உடற்பயிற்சி இல்லாத காரணத்தாலும் இடுப்பு வலி ஏற்படுகிறது.

👉🏻இதற்கு தீர்வு என்ன?

நீங்கள் கணினி முன் அமர்ந்து நீண்ட நேரம் பணிபுரிபவர்கள் என்றால், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல் அடிக்கடி இருக்கையை விட்டு எழுந்து செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட கணினி மேஜைகளை பயன்படுத்த வேண்டும்.கணினி மேஜையின் உயரத்தை ஏற்றி இறக்கி பயன்படுத்துவது போல் வடிவமைத்துக் கொண்டால் நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியின் உயரத்திற்கு ஏற்ப மேஜையின் உயரத்தை மாற்றிக் கொள்ள எளிதாக இருக்கும். தினமும் வேலை முடிந்ததும் உடற் பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

கணினி முன் அமர்ந்து பணியாற்றும் போது நாற்காலியில் நன்றாக நிமிர்ந்த நிலையில் அமர்ந்து பணியாற்ற வேண்டும்.

தொடர்ந்து ஒரே மாதிரி அமர்ந்து பணியாற்றுவதால் இடுப்பு பகுதியில் சதைகள் அழுத்தப்பட்டு முதுகுத் தண்டின் ஜவ்வில் தேய்மானம் ஏற்படுவதாலும் இடுப்பு வலி ஏற்படுகிறது.

நீங்கள் ஹை ஹீல்ஸ் அணியும் பழக்கம் உள்ளவர்கள் எனில் அதனால் கூட உங்களுக்கு இடுப்பு வலி முதுகு வலி ஏற்படலாம். உயரமான குதிகால் கொண்ட செருப்புகளை அணிந்து நீண்ட நேரம் நடக்கும் பொழுது உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்துவதால் முதுகு வலி, இடுப்பு வலி ஏற்படுகிறது. அதனால் உயரமான குதிகால் கொண்ட செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

👉இதற்கான எளிய தீர்வுகள் என்ன?

✍️கொள்ளு ரசம் வைத்துக் குடித்தால் இடுப்பு வலி குணமாகும். கொள்ளு உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.

✍️மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி மற்றும் வயிற்று வலி நீங்க வெந்தயத்தை பொடி செய்து அதனுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

✍️வெள்ளைப் பூண்டு மற்றும் கருப்பட்டி இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இடுப்பு வலி குறையும்.

✍️மிளகை வறுத்து அதில் எள் எண்ணெய் கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும்.

✍️உணவில் உளுந்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால் இடுப்பு வலி சரியாகும். உளுந்தை களி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குறையும்.

  • 334
·
Added a post

மூட்டு வலி பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். முக்கியமான சில காரணிகள்:

1. **வயது**: வயது அதிகரிக்கையுடன், மூட்டுகளில் க்ருமம் குறைவதால் மூட்டு வலி ஏற்படும்.

2. **அர்திரிடிஸ் (Arthritis)**: இந்நோய் மூட்டுகளில் அழற்சியை ஏற்படுத்துகிறது, இது மூட்டு வலியின் முக்கியமான காரணியாகும். இது ருமாடாய்டு அர்திரிடிஸ் (Rheumatoid Arthritis) அல்லது ஓஸ்டியோஅர்திரிடிஸ் (Osteoarthritis) ஆக இருக்கலாம்.

3. **மூட்டில் காயம்**: மூட்டு பகுதியில் ஏற்பட்ட அடிபடுதல், முறிவு அல்லது காயம் காரணமாக வலி ஏற்படலாம்.

4. **சதைப்பிடிப்பு (Gout)**: இது ஒருவகை அர்திரிடிஸ், உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் ஏற்படும்.

5. **சவாசியல் பிரச்சினைகள்**: முதுகுத்தண்டு அல்லது மூட்டுகளின் சவாசியல் பிரச்சினைகள் மூட்டுகளின் செயல்பாட்டை பாதிக்கின்றன, இது வலிக்கு வழிவகுக்கும்.

6. **உடல் பருமன்**: உடல் பருமன் அதிகமாயிருப்பது மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும், அதனால் வலி அதிகரிக்கும்.

7. **நீரிழிவு**: நீரிழிவு நோயாளிகளில், நரம்புகள் மற்றும் மூட்டுகளில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

8. **அதிக உடற்பயிற்சி அல்லது உடல் சிரமம்**: அதிகமான உடற்பயிற்சி அல்லது உடல் சிரமம் மூட்டுகளை மேலிடுமாறு அவற்றைச் சிரமப்படுத்துகிறது.

மூட்டு வலி நீடித்தால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.

  • 336
·
Added a post

முட்டைகோஸில் கால்சியம், அயோடின், பொட்டாசியம், குளோரின், சல்பர் போன்ற அனைத்துவிதமான தாதுக்களும் உள்ளன. இச்சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கவேண்டுமானால் பெரும்பாலும் பச்சையாகவே சாறெடுத்துச் சாப்பிடுவதுதான் நல்லது.

வேகவைத்த கோஸைவிட வேகவைக்காத கோஸ் எளிதில் செரிமானமாகும். இதில் வைட்டமின் ஏ. பி. சி. மற்றும் யு ஆகியவை உள்ளன.

முட்டைகோஸின் மருத்துவ குணம் என்று எடுத்துக் கொண்டால் சிறுகுடலைத் தூண்டி அதைச் சரியாக செயல்பட வைக்கும் ஆற்றல் கொண்டது.

பச்சை முட்டைகோஸின் சாறு மலச்சிக்கலைப் போக்கும். முட்டைகோஸ் சாறு இரைப்பை, முன் சிறுகுடல் புண்ணை ஆற்றும். செரிமானப் பகுதியில் பெப்சின் என்ற அமிலம் சுரந்து இரைப்பை அரிக்கப்படுவதை கோஸ் தடுத்து விடுகிறது. சமைக்கும்போது அழிந்துவிடும் கோஸின் சத்துக்கள்

பச்சையாக சாப்பிடும்போது முழுமையாகக் கிடைக்கிறது.

  • 339
New People