Quote of the Day

பழமொழிகள்: அடக்கமே பெண்ணுக்கு அழகு.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
sivam 230
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
·
Added article
·

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் "மடிப்பு அம்சா"வாக வலம் வந்தவர் தான் நடிகை விசித்ரா. முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கவர்ச்சிப் புயலாகப் பல படங்களில் முத்திரை பதித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டு விலகி கணவர், குழந்தை என செட்டில் ஆனார்.

நீண்ட இடைவெளிக்குப் பின், விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ளும் நுழைந்து சிறப்பாக விளையாடினார். அப்போது, சினிமா படப்பிடிப்பின் போது தனக்கு நேர்ந்த சில கசப்பான, வலிகள் நிறைந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அது இணையத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாகவும் மாறியது.

தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் விசித்ரா, சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா என்பது மிக வேகமாக, நிறையப் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு களம். அதில் புகழும், பணமும் கிடைக்கும். ஆனால், அங்கே உண்மையான அன்பும், கருணையும் கிடைக்குமா? என்று கேட்டால் கிடைக்காது.

அதுவும் புதுமுகமாக சினிமாவுக்குள் நுழையும்போது, அங்கே அன்பை எதிர்பார்க்கவே முடியாது. ஆரம்பத்தில் அவமானங்களையும், கேலி கிண்டல்களையும், அலட்சியங்களையும் மட்டும்தான் அதிகம் பார்க்க வேண்டி இருக்கும். ஆனால், ஒரேயொரு ஹிட் படம் கொடுத்துவிட்டால் போதும், உங்களுக்கென்று ஒரு 'மார்க்கெட்' வந்துவிட்டதால், உங்களை அவமதித்த அத்தனை பேரும் புகழ்வார்கள் அது தான் சினிமா.

சினிமாத்துறைடிய பொருத்தவரை இங்கு நிரந்தரமான நண்பனும் கிடையாது, நிரந்தரமான எதிரியும் கிடையாது. அதனால்தான் சினிமாவில் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருக்க வேண்டும். நம்மிடம் மிகவும் பாசமாக பழகுகிறார்களே என்று நெருங்கிவிடக் கூடாது. அதேபோல, எதிரியாக்கி ஒதுக்கவும் கொள்ளவும் கூடாது. ஏனென்றால் காலம் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாறும். நான் எப்போதுமே சினிமா நபர்களிடம் ஒரு குறிப்பிட்ட தூரத்தை கடைப்பிடிப்பேன். யாரிடமும் அளவுக்கு அதிகமாக நெருங்கிப் பழக மாட்டேன். அந்த எல்லையை நான் சரியாக வைத்திருந்ததால் தான். இன்று என் வாழ்க்கையை நான் எந்தக் குழப்பமும் இல்லாமல், மிகுந்த சந்தோஷத்தோடு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று நடிகை விசித்ரா பேசி இருக்கிறார்.

  • 68
·
Added article
·

மிஷ்கின் இயக்கி இசை அமைத்​துள்ள படம், ‘டிரெ​யின்’. விஜய் சேதுப​தி, ஸ்ரு​திஹாசன், நாசர், கே.எஸ்​.ரவி​கு​மார், நரேன் உள்பட பலர் நடித்​துள்​ளனர்.

கலைப்​புலி எஸ்.தாணு​வின் வி கிரியேஷன்ஸ் தயாரித்​துள்ள இந்தப் படத்​தின் டீஸர் மற்​றும் இசை வெளி​யீட்டு விழா சென்னையில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் வெற்​றி​மாறன், சசி, பாரத்​திபன், அமீர் உள்பட பலர் கலந்து கொண்​டனர்.

விழா​வில் மிஷ்கின் பேசும்​போது, “என்​னுடைய ‘நந்​தலாலா’ படக் கதையைச் சொல்​வதற்​காகத் தயாரிப்​பாளர் தாணு சாரை சந்தித்தேன். அவருக்கு அந்த கதை ஒன்​றுமே புரிய​வில்​லை. பிறகு எவ்வளவு பட்​ஜெட் என்று கேட்​டார். ரூ.4 கோடி என்​றேன். அவர் ஒரு ரூ.60 கோடி​யில் படம் பண்​ணலாம் என்​றார். ‘இந்​தப் படத்​துக்கு அவ்​வளவு தேவை இருக்​காது; இது சாதாரண கதை’ என்​றேன். அந்தக் கதை விக்​ர​முக்கு பிடித்​திருந்​தது. ஆனால் பண்ண முடியவில்லை.

ஆனாலும் தாணு சார் அப்​போது எனக்கு ஒரு அட்​வான்ஸ் கொடுத்தார். நீண்ட நாளுக்​குப் பிறகு தாணு சாரை சந்​தித்து படம் பண்​ணலாம் என்​றேன். விஜய் சேதுப​தியை வைத்​துப் பண்ணலாம் என்​றார். விஜய் சேதுபதி என்​னுடன் ஒரு படத்​தில் 2 நாட்​கள் நடித்​தார். பிறகு 10 வருடத்​துக்​குப் பிறகு இணைந்துள்ளோம். முன்பு அவர் வாய்ப்பு கேட்ட போது நான் சரியான பதிலளிக்​க​வில்​லை. பிறகு அவர் பெரிய நடிக​ராக வளர்ந்து விட்​டார். என்​னுடைய ‘சைக்​கோ’ படம் பாத்​து​விட்டு என்னைக் கட்​டிப் பிடித்து முத்​தம் கொடுத்​தார். அவரை மிகச் சிறந்த மனித​னாகப் பார்த்​தேன்.

இந்​த கதையை விஜய் சேதுப​திக்​காகப் பார்த்​துப் பார்த்து எழுதினேன். கதை​யில், வாழ்க்கை முடிந்​து​விட்​டது என நினைத்துக் கொண்​டிருக்​கிற கதா​பாத்​திரம் அவருக்​கு. இந்​தப் படத்தை விஜய் சேதுப​தி​யைத் தவிர வேறு யாருமே நடித்திருக்க முடி​யாது. கமல் சார் கூட பண்​ணியிருக்க முடி​யாது. விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி. என் படம் பற்றி நான் பெருமையாகப் பேசவர​வில்​லை. படம் நன்​றாக இருந்​தால்​தான் ஓடும் என்​பது தெரி​யும். விஜய் சேதுப​தி​யின்​ நடிப்​பை என்​னால்​ மறக்​கவே முடி​யாது” என்​றார்​.

  • 68
·
Added a news
·

கனடா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீட்டில் பொலிசார் நடத்திய சோதனையின்போது, நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் முதலான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

மனித்தோபாவில் பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, கடைசியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் இங்கி மார்க் (78). இம்மாதம், (அதாவது, ஜூலை மாதம்) 7ஆம் திகதி, மார்க் வீட்டில் பொலிசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அவர் வீட்டில் நூற்றுக்கணக்கான துப்பாக்கி முதலான ஆயுதங்கள் இருப்பதும், அவை முறைப்படி பாதுகாப்பாக வைக்கப்படாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. அவற்றில் சில, கடத்தப்பட்டவை என பொலிசார் கருதுகிறார்கள். அத்துடன், மார்க் வீட்டிலிருந்து துப்பாக்கி குண்டுகளும், 300,000 டொலர்கள் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மார்க் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது ஆயுதக் கடத்தல் முதலான பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், ஆகத்து மாதம் 11ஆம் திகதி, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

  • 70
·
Added a post
·

இந்த கோயிலை கட்டியவர் இரண்டாம் ராஜராஜ சோழன். இவர் இராஜேந்திர சோழனின் இரண்டாவது மகன் ஆவார்.

கும்பகோணத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பயணித்தாலே இந்த பிரம்மாண்டமான அழகிய கோயில் வந்து விடும் .

ஏழு படிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலை பொக்கிஷத்தில், மேலே உள்ள படியில் சிறிய கல்லை வைத்து விட்டால் அதுவே ஒவ்வொரு படியாக உருண்டு "ச,ரி,க,ம,ப,த,நி " என்ற சப்தஸ்வரங்களை எழுப்பும்.

ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு ஸ்வரங்களை இது இசைக்கும். இதன் அருமைகளை அறியாத சிலர் இதன் மீது பெரிய பெரிய கற்களை போட்டு சோதித்ததால் இது சேதமடையத் தொடங்கியது.

அதனால், இப்போது இந்த படிகளை சுற்றி இரும்பு வேலி அமைத்து பூட்டப்பட்டுள்ளது.

உள்ளே சென்று இதன் அருகில் புகைப்படம் எடுக்க மட்டும் இப்போது அனுமதிக்கப்படுகின்றது. இதன் இசையை கேட்க விரும்புவோர் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றால், அவர்களே இசைத்து காண்பிக்கிறார்கள்.

தவறாமல் காண வேண்டிய கலைநயம் மிக்க கோயில்களில் இதுவும் ஒன்று.

(படத்தை பாருங்கள்... மக்கள் இந்த கலை பொக்கிஷத்தின் அருமை புரியாமல் எப்படி சேதமாக்கி இருக்கிறார்கள் )

  • 76
  • 77
  • 79

அருள்மிகு தையல் நாயகி அம்மன்,

வைத்தீஸ்வரன் கோவில்

  • 84
  • 82

ஆயுள் முழுவதும் கொத்தினாலும்..

ஒரு மரத்தையும் சாய்த்ததில்லை மரங்கொத்தி!

சிந்திப்பவர்கள் சிறகடிக்கிறார்கள்,

சிகரத்தை தொடுகிறார்கள்.

  • 87
  • 88
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபார பணிகள் மிதமாக நடைபெறும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். துறைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். அண்டை வீட்டினர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

ரிஷபம்

வியாபார பணிகளில் நெருக்கடிகள் குறையும். உங்கள் கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். மனதில் நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் மாற்றங்கள் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மிதுனம்

உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். மற்றவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றம் உண்டாகும். துணைவருடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தூர தேச பயண சிந்தனைகள் மேம்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

கடகம்

அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்து வந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். சில பணிகளை செய்து முடிப்பதில் வேகத்தைவிட நிதானம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். மாணவர்களுக்கு கற்பித்தல் சிறு சிறு மாற்றங்கள் காணப்படும். உத்தியோக பணிகளில் விழிப்புணர்வு வேண்டும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

சிம்மம்

கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். பயணங்களால் நினைத்தது நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்

கன்னி

மனதில் திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிற்கல்வி சார்ந்த செயல்களில் உள்ள குழப்பங்கள் குறையும். அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

துலாம்

மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய முதலீடுகள் தொடர்பான எண்ணங்களில் தகுந்த ஆலோசனைகளை பெறவும். தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விருச்சிகம்

வியாபாரம் நிமித்தமான சில வியூகங்களை அமைப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தனவரவு ஓரளவு இருக்கும். உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். நிதானமான பேச்சுகள் நன்மதிப்பை உருவாக்கும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் பொறுமை வேண்டும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

தனுசு

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வீடு வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உறவுகள் வழியில் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

மகரம்

அலுவலகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தாய் மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறைகளால் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத திடீர் தன வரவுகள் சிலருக்கு ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கும்பம்

சகோதர வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வருமான வாய்ப்பு மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். அறிவுத்திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தகவல் தொடர்பு துறையில் லாபம் உண்டாகும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். நாவல் விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

மீனம்

அரசு தொடர்பான செயல்களில் ஆதாயம் அடைவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். வாகன மாற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மேல்நிலைக் கல்வியில் தெளிவுகள் பிறக்கும். சக ஊழியர்களால் அனுகூலம் ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 124
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 30 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 14.7.2026

இன்று மாலை 04.33 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.

இன்று அதிகாலை 03.47 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.

இன்று பிற்பகல் 01.47 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம்.

இன்று அதிகாலை 05.42 வரை சதுஷ்பாதம். பின்னர் மாலை 04.33 வரை நாகவம். பின்பு கிமிஸ்துக்கினம்.

இன்று அதிகாலை 03.47 வரை சித்தயோகம். பின்னர் அதிகாலை 05.59 வரை அமிர்த யோகம். பின்பு சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=583&dpx=2&t=1784005444

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 05.00 முதல் 06.00 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 125

Good Morning....

  • 136

புழுங்கல் அரிசி

நெல்லைப் புழுக்கி அரிசி ஆக்குதலே புழுங்கல் அரிசி என்ற பெயர் கொண்டது. இதன் ஆங்கிலப் பெயர் PARBOILED RICE.

புழுக்குதல் என்றால் அவிகை,அவித்ததல்

புழுங்குதல் - என்றால் சிறுக வேகுதல், ஆவியெழவேகுதல்.

நெல்லைப் புழுக்கி யெடுத்து உமி நீக்கப்பட்ட அரிசியே புழுங்கலரிசி.

  • 213
  • 217
·
Added article
·

ஒரு காலத்தில் "கட்டிப்புடி கட்டிப்புடிடா' என கவர்ச்சி டான்ஸ் போட்ட மும்தாஜ், "வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள" என சிம்புவடன் ஆடிய சனா கான் எல்லாம் கிளாமர் ஹீரோயின்களாக இருந்து இப்போ இறை மார்க்கத்தை கடைபிடிக்கும் பெண்களாக மாறியுள்ளனர். அவர்கள் வரிசையில் சஞ்சிதா ஷெட்டியும் பக்தி மயமாக மாறியுள்ளார்.

ஒரு காலத்தில் "கட்டிப்புடி கட்டிப்புடிடா' என கவர்ச்சி டான்ஸ் போட்ட மும்தாஜ், "வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள" என சிம்புவடன் ஆடிய சனா கான் எல்லாம் கிளாமர் ஹீரோயின்களாக இருந்து இப்போ இறை மார்க்கத்தை கடைபிடிக்கும் பெண்களாக மாறியுள்ளனர். அவர்கள் வரிசையில் சஞ்சிதா ஷெட்டியும் பக்தி மயமாக மாறியுள்ளார்.

சூது கவ்வும், பல்லு படாம பாத்துக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி ஏற்கனவே கிரிவலம் எல்லாம் சென்று தனது பக்தியை வெளிப்படுத்திய நிலையில், சமீப காலமாக தொடர்ந்து சாமியார்களை சந்தித்து வருகிறார்.

தில்லாலங்கடி படத்தில் தமன்னாவின் தங்கையாக நடித்து ரசிகர்களை அப்போதே கவர்ந்தவர் தான் நடிகை சஞ்சிதா ஷெட்டி. விஜய் சேதுபதி ஜோடியாக சூது கவ்வும் படத்தில் நடித்து வேறலெவலில் பிரபலமானார். பிட்சா 2, என்னோடு விளையாடு, ரம், எங்கிட்ட மோதாதே, வினோதய சித்தம், பஹீரா, பல்லு படாம பாத்துக்கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கவர்ச்சியாக படங்களில் நடித்து வந்த நடிகை சஞ்சிதா ஷெட்டி சமீப காலமாக பயபக்தியாக மாறியுள்ளார். திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது, சாமியார்களை சந்திப்பதாக போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் எப்போதுமே ஹோம்லி லுக்கில் சுடிதார் மற்றும் சேலை அணிந்தே போட்டோக்களை போட்டு வருகிறார்.

  • 221
·
Added article
·

நடிப்பில் சாவித்திரியும், பாட்டில் ஜானகியும் தங்கள் துறைகளில் சிகரம் தொட்டவர்கள். இவர்களுக்குள் ஒரு தொழில்முறை மோதல் இருந்தது பலருக்கும் தெரியாது. ஆரம்ப காலத்தில் நடந்த அந்த சம்பவம், ஜானகியின் மனதை ஆழமாகப் பாதித்தது.

அன்றைய காலகட்டத்தில் சாவித்திரி ஒரு சூப்பர்ஸ்டார். பெரும்பாலும் பி. லீலா, பி. சுசீலா ஆகியோர்தான் அவருக்குப் பாடுவார்கள். குறிப்பாக, தன் நடிப்புக்கு சுசீலாவின் குரல்தான் கச்சிதமாகப் பொருந்தும் என சாவித்திரி உறுதியாக நம்பினார். இந்த விஷயம் தெரியாமல், ஜானகி ஒரு தமிழ் படத்தில் சாவித்திரிக்காக ஒரு அருமையான பாடலைப் பாடினார்.

ரெக்கார்டிங் முடிந்ததும் பாடல் சிறப்பாக வந்திருந்தது. ஆனாலும், தன் நடிப்புக்கு ஜானகியின் குரலை விட சுசீலாவின் குரலே பொருத்தமாக இருக்கும் என சாவித்திரி கருதினார். அதனால், ஜானகி பாடிய பாடலை நீக்கிவிட்டு, பி. சுசீலாவை வைத்தே மீண்டும் ரெக்கார்டிங் செய்தனர். இது எஸ். ஜானகியின் தன்மானத்தைப் பாதித்தது.

இந்த அவமானத்தால், "இனிமேல் சாவித்திரி நடிக்கும் படங்களுக்கு நான் பாடவே மாட்டேன்" என்று ஜானகி சபதம் எடுத்தார். சொன்னது போலவே, தெலுங்கு பாடலை சாவித்திரிக்காகப் பாட மறுத்தார். இதனால், அந்தப் பாடலின் ரெக்கார்டிங் சுமார் மூன்று மாதங்கள் தாமதமானது. பின்னர் வேறு வழியின்றி அந்தப் பாடலை அவர் பாட வேண்டியிருந்தது.

ஒரு பேட்டியில் ஜானகி, "சாவித்திரிக்கு சுசீலாவின் குரல்தான் பிடிக்கும். அதனால நான் பாடுறதுக்கு அவங்க சம்மதிக்கல. சாவித்திரி நடித்த தெலுங்கு படத்தின் ஒரு பாட்டை நான் பாடமாட்டேன்னு சொல்லிட்டேன். 3 மாசம் பெண்டிங்ல வெச்சேன். கடைசியில, அந்தப் பாட்டுல சாவித்திரி நடிக்கலைன்னு சொன்னாங்க, அதனால பாடினேன். ஆனா, கடைசியில அந்தப் பாட்டுல சாவித்திரிதான் நடிச்சாங்க" என்றார்.

  • 222
·
Added article
·

விஷ்ணு விஷால், ஐஸ்​வர்யா லட்​சுமி, கருணாஸ், முனீஸ்​காந்த், காளி வெங்​கட், கருணாகரன், மோக் ஷா உள்பட பலர் நடித்​துள்ள படம் ‘கட்டா குஸ்தி 2’.

செல்லா அய்​யாவு இயக்​கிய இப்​படத்தை ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்​டர்​நேஷனல் மற்​றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்​துள்ளது. கடந்த 3ம் தேதி வெளி​யான இப்படம் வெற்​றிகர​மாக ஓடிக்​கொண்​டிருக்​கிறது. இதையடுத்து இதன் வெற்றி விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​ குழுவினர் கலந்து கொண்​டனர்.

நடிகர் விஷ்ணு விஷால் பேசும்​போது, “இந்​தப் படத்​தின் வெற்றி எனக்கு மிக​வும் சிறப்​பானது. முதலில் ஐசரி கே.கணேஷுக்கு நன்றி. ஒரு தயாரிப்​பாள​ராக அவர் என்​மீது முழு நம்​பிக்கை வைத்து சுதந்​திரம் தந்​தார்.

அந்த நம்​பிக்​கையே இந்த வெற்றிக்கான காரணங்​களில் ஒன்​று. சினிமா என்​பது ஒரு குழு முயற்​சி. இதில் பணி​யாற்​றிய ஒவ்​வொரு நடிகரும், தொழில்நுட்பக் கலைஞரும் தங்​களது பங்​களிப்பை முழு​மை​யாக வழங்​கிய​தால்தான் இன்று குடும்​பங்​கள் கொண்​டாடும் வெற்றிப்படமாக இது மாறி​யுள்​ளது.

இயக்​குநர் செல்லா அய்​யா​வுடன் எனக்கு 11 ஆண்​டு​களாக நட்பு உள்​ளது. அவர் மீது எப்​போதும் எனக்கு முழு நம்​பிக்கை இருந்​தது. நல்ல குடும்​பப் படங்​களைத் தொடர்ந்து வழங்​கும் திறமை அவருக்கு இருக்​கிறது.

எதிர்​காலத்​தில் தமிழ் சினி​மா​வின் முன்னணி வணிக இயக்​குநர்​களில் ஒரு​வ​ராக அவர் உயர்​வார். இன்​றைய ரசிகர்​கள் விழிப்​புணர்​வுடன் ​படங்​களை ரசிக்கிறார்கள். அதனால் ஒவ்​வொரு படத்​தை​யும் மிகுந்த பொறுப்புடன் உரு​வாக்க வேண்டிய அவசியம் உள்​ளது” என்​றார்​.

  • 223
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்

மேஷம்: தடைகளைப் பொருட்படுத்​தாமல், உங்​கள் இலக்கை நோக்கி முன்​னேறு​வீர்​கள். பல வகை​யிலும் சேமிப்பு அதி​கரிக்​கும். சகோ​தர, சகோ​தரி​களின் ஆதரவு உண்​டு. வியா​பாரத்​தில் பழைய பாக்​கி​கள் வசூலாகும். வீடு, வாக​னப் பழுதை சரிசெய்​வீர்​கள்.

ரிஷபம்: வெளி வட்​டாரத் தொடர்​பு​கள் அதி​கரிக்​கும். வியா​பாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். மனைவி வழி உறவினர்​களால் ஆதா​யம் கிடைக்​கும். தொண்​டைப் புகைச்​சல், வயிற்று வலி வில​கும். பண வரவு உண்​டாகும். ஆன்​மிகத்​தில் நாட்​டம் ஏற்​படும்.

மிதுனம்: வீண் அலைச்​சல், டென்​ஷன் வரக்​கூடும். குடும்​பத்​தில் விட்டுக்​கொடுத்​துச் செல்​வது அவசி​யம். வியா​பாரத்​தில் போட்​டிகள் இருந்​தா​லும் தைரிய​மாக சமாளிப்​பீர்​கள். வாக​னப் பயணத்​தில் கவனம் தேவை. யாரை​யும் எடுத்​தெறிந்து பேசக் கூடாது.

கடகம்: உறவினர்​கள், நண்​பர்​கள் வரு​கை​யால் வீடு களை​கட்​டும். பிள்​ளை​களின் விருப்​பங்​களை அறிந்து நிறைவேற்​று​வீர்கள். உடல்​நலம் சீராகும். மருத்​து​வச் செல​வு​கள் குறை​யும். குடும்​பத்​தினர் ஆதர​வாக இருப்​பார்​கள். கலைப் பொருட்​கள் சேரும்.

சிம்​மம்: புதிய நபர்​களால் ஆதா​யம் உண்​டாகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்​வீர்​கள். தேவையற்ற மனக் குழப்​பங்​கள் நீங்​கி, தெளிவு பிறக்​கும். உடல்​நலத்​தில் அக்​கறை காட்​டு​வீர்​கள். தொழில், வியா​பாரத்தை விரிவுபடுத்​து​வீர்​கள்.

கன்னி: வில​கிச் சென்ற உறவினர்​கள், நண்​பர்​கள் விரும்பி வந்து உறவாடு​வார்​கள். குடும்​பத்​தில் கலகலப்​பான சூழல் உரு​வாகும். அரசு, வங்கி வகை​யில் அனுகூலம் உண்​டு. வியா​பாரத்தை விரிவுபடுத்​து​வீர்​கள். அலு​வலக ரீதி​யாக முக்​கிய முடிவு​கள் எடுப்​பீர்​கள்.

துலாம்: தொழில், வியா​பாரத்​தில் போட்​டிகள் மறை​யும். கணவன் - மனை​விக்​குள் மனஸ்​தாபம் நீங்கி அன்​யோன்​யம் அதி​கரிக்​கும். எதிர்​பார்த்த இடத்​தில் இருந்து நல்ல செய்தி வரும். புதி​ய​வர்​களு​டன் நட்பு மலரும். தலை​வலி, காய்ச்​சல் நீங்​கும்.

விருச்​சிகம்: முன்​கோபம் அதி​கரிக்​கும். பிள்​ளை​களால் அலைச்​சல் உண்​டு. வியா​பாரத்​தில் பழைய பாக்​கி​கள் வசூலாகும். வாயுக் கோளாறு, சளித் தொந்​தரவு வந்து நீங்​கும். அலு​வல​கப் பணி​களில் அதிக கவனம் தேவை. நாடி வந்​தவர்​களுக்கு உதவுவீர்​கள்.

தனுசு: குடும்​பத்​தில் நீண்ட நாட்​களுக்​குப் பிறகு அமை​தி​யும், மகிழ்ச்​சி​யும் திரும்​பும். எல்​லா​வற்​றுக்​கும் அடுத்​தவர்​களைக் குறை​கூறாதீர்​கள். அக்​கம் பக்​கம் இருப்​பவர்​களை அனுசரித்​துச் செல்​வது அவசி​யம். பயணத்​தின்​போது அதிக கவனம் தேவை.

மகரம்: வீண் குழப்​பங்​கள் நீங்கி தெளிவு பிறக்​கும். பிள்​ளை​களின் பிடி​வாதம் குறை​யும். உடல்​நலம் நிம்​மதி தரும். வருங்​காலத்​துக்​காக சேமிப்​பீர்​கள். மனதுக்​குப் பிடித்​தவர்​களை சந்​தித்து மகிழ்​வீர்​கள். ஆன்​மிகம், தியானத்​தில் ஈடு​பாடு ஏற்​படும்.

கும்​பம்: மனக் குழப்​பங்​கள் வில​கும். வெளியூர் பயணங்​கள் திருப்தி தரும். கணவன் - மனை​விக்​குள் அன்​யோன்​யம் அதி​கரிக்​கும். பணவரவு கூடும். உத்​தி​யோகத்​தில் உயர் அதி​காரி​யின் ஆதரவு கிடைக்​கும். எக்​காரி​யத்​தி​லும் நிதானம் அவசி​யம்.

மீனம்: கணவன் - மனைவிக்​குள் மனம்​விட்​டுப் பேசுவீர்​கள். நீண்ட​நாள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்​பீர்​கள். குழப்​பங்​கள் வில​கும். திடீர் பணவரவு உண்​டு. விலை உயர்ந்​த பொருட்​கள்​ வாங்​கு​வீர்​கள்​. ஆடை, ஆபரணங்​கள்​ சேரும்​.

  • 316
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 29 ஆம் தேதி திங்கட்கிழமை 13.7.2026.

இன்று மாலை 06.52 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.

இன்று அதிகாலை 04.20 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.

இன்று மாலை 04.43 வரை துருவம். பின்னர் வியாகாதம்.

இன்று காலை 08.05 வரை பத்திரை. பின்னர் மாலை 06.52 வரை சகுனி. பின்பு சதுஷ்பாதம்.

இன்று அதிகாலை 05.52 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=582&dpx=2&t=1783911272

நல்ல நேரம்:

காலை : 06.15 முதல் 07.7.15 மணி வரை

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 318

Good Morning...

  • 310
·
Added a post

1. தண்ணீர் குடிக்கும்போது முடிந்தால் ஸ்ட்ரா பயன்படுத்தவும், விழுங்கும்போது தலையை கீழே குனிந்து கொள்ளவும்.

2. தெளிந்த சூப்பிற்கு பதிலாக கெட்டியான சூப் குடிக்கவும். தெளிந்த சூப் வேகமாக ஓடும், மூச்சு சீராக இல்லாதபோது எளிதில் புரையேறிவிடும்.

3. வாயில் திட உணவு இருக்கும்போது அல்லது மெல்லும் போது திரவம் குடிக்க வேண்டாம். தண்ணீர் வாயில் அதிக நேரம் இருந்தால், கவனக்குறைவாக இருக்கும்போது மூச்சுக்குழாய்க்குள் சென்று புரையேறும்.

4. வாயில் உணவு அல்லது தண்ணீர் இருக்கும்போது பேசவோ அல்லது தலையைத் திருப்பவோ வேண்டாம்.

5. வயதானவர்களுக்கு இளைஞர்களைப் போல உடல் வலிமையும் சகிப்புத்தன்மையும் இருக்காது..

திரவம் அல்லது உணவு மூச்சுக்குழாய்க்குள் சென்று இருமி வெளியேற்றப்பட்டால்,

முகம் சிவந்து இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

சில நேரங்களில் புரையேறுதல் மரணத்தை விளைவிக்கும்.

வயதாகும்போது, தண்ணீரை மெதுவாகவும், கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் குடிக்க வேண்டும்!!

  • 442
·
Added article

🌹பல காதலுக்கு உயிர் கொடுத்த ஜானகி பாட்டு.. ஆனால் சொல்லாத அவர் காதல்.

🌹ஜானகி என்று அவரை சொல்வதை விடவும் இப்போது உள்ள ரசிகர்கள் அவரை ஜானகி அம்மா என்றுதான் அழைத்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பலருடைய மனதில் வாழ்ந்து வருகிறார்.

🌹பல பேர் காதலுக்கு மருந்தாக இவருடைய பாடல்கள் இருந்தாலும் அவருடைய சொந்த வாழ்க்கையில் அவர் காதலித்த நபரிடம் அவருடைய காதலை சொல்லவே இல்லையாம்.

🌹பாடகி எஸ் ஜானகிக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. 80ஸ் காலத்தில் இருந்து 2k கிட்ஸ்கள் காலம் வரைக்கும் அவர் தொடர்ச்சியாக பல பாடல்களை பாடி இருக்கிறார்.

🌹அதிலும் இளையராஜா முதல் முதலில் இசையமைத்த "அன்னக்கிளி" என்ற திரைப்படத்தில், "அன்னக்கிளியே உன்னைத் தேடுதே" என்ற பாடலை பாடி பலருடைய மனதில் கவர்ந்து, யார் இந்த குரலுக்கு சொந்தக்காரர் என்று தேட வைத்தவர் தான் இவர்.

🌹இந்தப் பாடல் தான் ஜானகியை பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் ஆக்கியது என்று சொல்லலாம். அதைத் தொடர்ந்து இளையராஜாவின் இசையில் மனதை மயக்கும் பல பாடல்களை பாடி இருக்கிறார். அதோடு ஜானகி முதல் முதலாக 1957ஆம் ஆண்டு வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் தான் இவருடைய முதல் பாடல்.

🌹இந்த பாடல் வெளி வந்த அடுத்த நாளே இவருக்கு தெலுங்கு படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து பல பாடல்களில் பாடிக்கொண்டிருந்தாலும்

🌹பல ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் கொங்கணி, துளு, சௌராஷ்டிரா, ஹிந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.

🌹அதுபோல 1992 ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்றிருந்த எஸ் ஜானகிக்கு ஞானகான சரஸ்வதி என்ற பட்டமும் வழங்கப்பட்டிருந்தது. அதோடு தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்தி பாடல்களை தாமே எழுதி இசை அமைத்து பாடியும் இருக்கிறார். இப்போதுள்ள சூழ்நிலையிலேயே பெண்கள் சாதிப்பதற்கு பெரும் பாடாக இருக்கிறது.

🌹ஆனால் பல வருடங்களுக்கு முன்பு எஸ் ஜானகி பலரும் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு இசை துறையில் பல வெற்றிகளை வாங்கி குவித்து இருக்கிறார். அதோடு ஜானகி ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர், டீனேஜ் முதலே இசை கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல வருடங்களாக இசைக்கச்சேரிகளில் தான் பாடிக் கொண்டிருந்தார்.

🌹ஜானகி ஆரம்ப காலகட்டத்தில் மேடை பாடகியாக இருந்தபோது ராம் பிரசாத் என்பவர் அவருக்கு அறிமுகம் ஆகி இருக்கிறார்.

🌹அவர் யார் என்றால் ஜானகி கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவரின் மகன். ஆனால் அவர் தன்னுடைய தந்தையிடம் ஜானகியின் திறமை வெறும் இசை கச்சேரியோடு முடிந்து விடக்கூடாது. சினிமா பாடல்களில் பாட வைக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.

🌹 அவரோட அட்வைஸ்சால் தான் சென்னைக்கு வந்து ஜானகி ஏவிஎம் நிறுவனத்தில் பாடகியாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார்

🌹இப்படி தன்னுடைய இசைப்பயணம் துவங்க காரணமாக இருந்த ராம் பிரசாத் மீது ஜானகிக்கு ஆரம்பத்தில் நட்பு இருந்த நிலையில் பிறகு காதலாக மாறி இருக்கிறது. எத்தனையோ கதாநாயகிகளின் காதலை அழகாக வெளிப்படுத்திய ஜானகி தன்னுடைய காதலை ராம்பிரசாத்திடம் சொல்லவே இல்லை.

🌹ஆனால் இவர்களுடைய வீட்டில் இவர்களுக்கு 1959 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.

🌹அதற்குப் பிறகும் ஜானகிக்காக ரெக்கார்டிங் போது கூடவே இருப்பாராம். அந்த அளவிற்கு மனைவியின் வெற்றியை பார்த்து ரசித்த வந்த ராம் பிரசாத் 1997 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக காலமாகி விட்டார்.

  • 462
·
Added article

இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாக அவர் மறைந்த தகவலை, சமூக வலைதளத்தில் அவரது குடும்பத்தினர் பகிர்ந்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரில் (1938) பிறந்தவர். மூன்று வயதில் தொடங்கி 10 வயது வரை இசை கற்றார். முதல் மேடை நிகழ்ச்சியில் பாடியபோது இவருக்கு 9 வயது.

‘விதியின் விளையாட்டு’ (1957) என்ற படத்தில் ‘பெண் என் ஆசை பாழானது’ என்பதுதான் இவர் பாடிய முதல் பாட்டு. அடுத்த நாளே ஒரு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்து. கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.

17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற பெருமை பெற்றவர். அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும், அனைத்து பின்னணிப் பாடகர்களுடனும் இணைந்தும் பாடியுள்ளார். ‘இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் - எஸ்.ஜானகி’ கூட்டணி தென்னிந்திய இசைத் துறையில் தனி முத்திரை பதித்தது.

பாடலில் பொதிந்துள்ள உணர்ச்சி மற்றும் நடிகைகளுக்கு ஏற்ற வகையில் குரலை மாற்றிப் பாடக்கூடியவர். குழந்தைக் குரலில் பாடுவதிலும் வல்லவர். இவர் பாடிய ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’, ‘செந்தூரப் பூவே’, ‘காற்றில் எந்தன் கீதம்’, ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’, ‘ராதைக்கேற்ற கண்ணனோ’, ‘அம்மா.. அம்மா..’ போன்றவை காலத்தால் அழியாதவை.

திரைப்படப் பின்னணிப் பாடல்கள், தனிப் பாடல்கள் என பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களை தானே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். ஒரு தெலுங்குப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

கலைமாமணி, கேரள மாநில சிறப்பு விருது பெற்றவர். சிறந்த பாடகிக்கான தேசிய விருது 4 முறை, கேரள அரசு விருது 14 முறை, ஆந்திர அரசு விருது 10 முறை, தமிழக அரசு விருது 7 முறை பெற்றவர். இலங்கையில் 1992-ல் இவருக்கு ‘ஞான கான சரஸ்வதி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

2013-ல் மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. மிகவும் தாமதமாக கிடைக்கும் கவுரவம் என்று கூறி அதை ஏற்க மறுத்து விட்டார்.

‘காற்றில் ஜானகியின் கீதம்...’ எப்போதும் உலகோடு இரண்டறக் கலந்திருக்கும். தனது மெல்லிய அற்புதமான வசீகர குரலால் பல ரசிகர்களை தன்வசம் வைத்துக் கொண்டவர். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. எங்கோ, எவர் செவியிலோ கேட்டுக்கொண்டே இருக்கும்.

  • 469
New People