Quote of the Day

பழமொழிகள்: அடாது செய்தவன் படாது படுவான்.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard

s

220
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.

அன்பில்லாமல் பொருள்களைக் கையாள முடியும், ஆனால்

அன்பில்லாமல் மனிதர்களைக் கையாள முடியாது.

ஏனெனில்,

இயல்பான அன்புதான் மனித வாழ்க்கையின் அடிப்படை விதி.

-லியோ டால்ஸ்டாய்

  • 228
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். விவசாய பணிகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பணி சார்ந்த சில முயற்சிகள் கைகூடும். கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுவது அவசியமாகும். வியாபாரத்தில் மத்தியான லாபங்கள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

ரிஷபம்

தடைபட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான சூழல் உருவாகும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கால்நடை பணிகளில் ஆதாயம் மேம்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் அனுபவமும் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

மிதுனம்

உத்தியோகப் பொறுப்புகளால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். உதாசினமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களிடத்தில் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் பொறுமை காக்கவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

கடகம்

மற்றவர்களிடத்தில் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் கோபம் இன்றி மற்றவர்களின் கருத்தை கேட்கவும். வழக்குகளில் சில திருப்புங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் பொறுமை காக்கவும். நெருக்கமானவர்கள் பற்றிய சில புரிதல் ஏற்படும். சிரமம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

சிம்மம்

நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த சில வரவுகளால் திருப்தி உண்டாகும். புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஆதரவுகள் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

 

கன்னி

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். வழக்கு தொடர்பான தெளிவுகள் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பக்தி வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை

 

துலாம்

உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கடன் சார்த்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழ்நிலைகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். தன வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். தெளிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

விருச்சிகம்

அதிரடியான சில வியூகம் மூலம் மேன்மை உண்டாகும். பணி சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். மனதளவில் தைரியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். அதிகாரிகள் இடத்தில் நெருக்கம் ஏற்படும். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

தனுசு

கனிவான பேச்சுக்களால் காரிய அனுபவம் ஏற்படும். பயணங்கள் சாதகமாக இருக்கும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். தடைபட்ட தன வரவுகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் மதிப்புகள் ஏற்படும். மனதளவில் புதிய மாற்றங்கள் கிடைக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மகரம்

சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் எதிர்பாராத சில மாற்றம் உண்டாகும். வரவுகளில் சிறுசிறு போராட்டங்கள் ஏற்படும். மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். கருத்துக்களை சூழ்நிலை அறிந்து வெளிப்படுத்தவும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

கும்பம்

எதிர்பாராத செலவுகள் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வாகன மாற்றம் சார்ந்தசிந்தனைகள் அதிகரிக்கும். கடன்களை குறைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வெளி வட்டார பயணங்களில் கவனம் வேண்டும். விருத்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மீனம்

மனதளவில் எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அரசு விஷயங்களில் இருந்து தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

  • 305
·
Added a post
·

விசுவாவசு வருடம் ஆடி மாதம் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 8.8.2025.

இன்று பிற்பகல் 02.51 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.

இன்று மாலை 03.47 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.

இன்று காலை 06.49 வரை ப்ரீதி. பின்னர் ஆயுஷ்மான்.

இன்று அதிகாலை 02.48 வரை கரசை. பின்னர் பிற்பகல் 02.51 வரை வனிசை. பிறகு பத்தரை .

இன்று மாலை 03.47 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=83&dpx=1&t=1754616981

நல்ல நேரம் :

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 295
  • 294
·
Added a news
·

2021 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் பதவிக்கு வந்த மியன்மாரின் ஜனாதிபதியான மைன்ட் ஸ்வே காலமானார் என அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.

உடல்நல குறைவால் மருத்துவ ஓய்வில் ஒரு வருடம் காலம் இருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என மியான்மார் இராணுவம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி யு மியிண்ட் ஸ்வே இன்று காலை 8.28 மணிக்கு காலமானார்.

74 வயதான மியின்ட் ஸ்வே தலைநகர் நேபிடாவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் உயிரிழந்தார். ஜனாதிபதி மைன்ட் ஸ்வேவின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என இராணுவம் தெரிவித்துள்ளது.

  • 578
·
Added a news
·

டொராண்டோவில் இந்த வார இறுதி நாட்களில் வெப்பநிலை மாற்றம் ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் பகல்நேர வெப்பநிலை 30 பாகை செல்சியஸுக்கு மேல் இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இன்றைய தினம் டொராண்டோவில் வெப்பநிலை 27 பாகை செல்சியஸாக இருக்கும் எனவும் ஈரப்பதனை கருத்திற் கொண்டால் 32 பாகை செல்சியஸாக உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை பகல்நேர உயர்ந்த வெப்பநிலை 31 பாகை செல்சியஸாக இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

  • 584
·
Added a post
·

தலைவலி ஒருவருக்கு வந்தால், எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. அந்த அளவில் தலைவலி இருக்கும். தலைவலியை அனுபவிக்காதவர்களே இருக்கமாட்டார்கள்... தலைவலிக்கு மாத்திரையை அடிக்கடி சாப்பிட்டால், அதனால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க, கண்ட கண்ட மாத்திரையைப் போடுவதைத் தவிர்த்து, நம் பாட்டிமார்கள் பின்பற்றிய வைத்தியங்களை மேற்கொள்ளுங்கள்.

🎈வெற்றிலையை அரைத்து சாறு எடுத்துகொள்ளவும். கிராம்பை தூள் செய்து அதனை வெற்றிலை சாறுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, நெற்றியில் தடவினால், தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

🎈பசலைக்கீரையில் தலைவலியைப் போக்கத் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளது. ஆகவே தலைவலி இருக்கும் போது பசலைக்கீரையை அரைத்து நெற்றியில் தடவினால், தலைவலி நீங்கும்.

🎈துளசி இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து குடித்தால், தலைவலி குணமாகும்.

  • 590
·
Added a post
·

கண்ணப்புரி என்ற நாட்டை, சுந்தர வரதன் எனும் அரசன், ஆட்சி செய்து வந்தான்.

ஒருநாள் இரவு அரசனும், அமைச்சரும் மாறுவேடத்தில் நகரத்தைச் சுற்றி வந்தபோது, பிச்சைக்காரர் இருவரை பார்த்தனர்.

அவர்களில், 'இறைவன் அருள்... இறைவன் அருள்...' என, பிச்சையைக் கேட்டான், ஒருவன்; 'அரசர் அருள்... அரசர் அருள்...' என, கூவி பிச்சைக் கேட்டான், மற்றொருவன்.

அவர்கள் இருவரும், மறுநாள் அரசவைக்கு அழைத்து வரப்பட்டனர்.

'உங்களில் ஒருவன் ஆண்டவன் பெயரையும், மற்றொருவன் அரசர் பெயரையும் உச்சரித்து பிச்சை எடுத்தீர்கள். எதனால்?' எனக் கேட்டார், அரசர்.

இறைவனை நினைத்து யாசித்தவன், 'உலகமனைத்தும் ஆண்டவன் அருளால் காக்கப்படுகிறது. செல்வத்தை, உடல் நலத்தை நமக்களிக்கும் வல்லமை அவருடையது. அதனால் தான் அவர் நாமத்தைக் கூறினேன்...' என்றான்.

'கடவுள் கண்களுக்குப் புலப்படாதவர். அரசர் தான் கண்கண்ட தெய்வம். அவர் எவரையும் செல்வந்தராக்கும் ஆற்றல் உள்ளவர். அதனால், அவர் பெயரால் நான் பிச்சை எடுத்தேன்...' என்றான், இரண்டாமவன்.

அதன் பின் அவர்களை அனுப்பி வைத்து, அமைச்சரிடம், 'அரசர் அருள் சிறந்ததா, ஆண்டவன் அருள் சிறந்ததா என்பதை ஆராய்ந்து அறியலாம்...' என்றார்.

அரசர் பிறந்தநாளன்று, அரண்மனைக்கு வரும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படுவதாக, நாடு முழுவதும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அரசர் பிறந்தநாளன்று பலர், பரிசுகளைப் பெற்றுச் சென்றனர். வந்தவர்களில், மேற்கூறிய இரு யாசகர்களும் இருந்தனர்.

அரசர் அருளைப் பாராட்டிய யாசகனுக்கு, ஒரு பெரிய பூசணிக்காயைக் கொடுத்து, அது அவனுக்கு மாபெரும் செல்வத்தைத் தரும் எனக் கூறினர்.

சில நாட்களுக்கு பின், அரசரும், அமைச்சரும் நகர்வலம் வரும் போது, பூசணிக்காய் பெற்ற யாசகன், முன் போலவே பிச்சை எடுப்பதைக் கண்டனர்.

'என்னிடம் பரிசு பெற்ற பின்பும் பிச்சை எடுத்து வாழ்கிறாயா?' எனக் கேட்டார், அரசர்.

'அரசே, நான் அந்த பூசணிக்காயை ஒருவனுக்கு, இரண்டு வெள்ளி நாணயங்களுக்கு விற்றேன். எத்தனை நாட்கள் அந்த பணத்தில் வாழ முடியும்? அதனால், மீண்டும் பிச்சை எடுக்கிறேன்...' என்றான்.

'மடையனே! பூசணிக்காயில் தங்கத்தையும், முத்துக்களையும் வைத்திருந்தேன். அதை நீ அறுத்துப் பார்த்திருந்தால், செல்வந்தனாகி இருப்பாய்...' என, கடிந்து கொண்டார், அரசர்.

அரசரும், அமைச்சரும் அரண்மனைக்கு திரும்பி வரும் வழியில், ஒரு பல்லக்கைப் பார்த்தனர். அதில் கடவுள் பெயரால் யாசித்தவன் அமர்ந்திருந்தான்.

அவனிடம், 'நீ எப்படி செல்வந்தன் ஆனாய்?' எனக் கேட்டார், அரசர்.

'அரசே! இது ஆண்டவன் அருளால் கிட்டியது. ஒரு யாசகனிடமிருந்து பூசணிக்காயை வாங்கினேன். அதை அறுத்த போது பொற்காசுகள், முத்துக்களைப் பார்த்து வியப்படைந்தேன். அவற்றை நான் தக்க விலைக்கு விற்றேன்; செல்வந்தனாகி விட்டேன்...' என்றான்.

ஒருவனுக்கு அரசன் அருள் இருந்தாலும், ஆண்டவன் அருள் இல்லையெனில், எந்த உதவியும் அவனை சென்றடையாது.

  • 645
·
Added article
·

நடிகர் சூர்யா, மற்றும் கார்த்தி குடும்பத்தினரின் அகரம் பவுண்டேஷன் விழா சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில், அகரம் பவுண்டேஷன் மூலமாகப் படித்து, தற்போது ஒரு நல்ல நிலையில் இருக்கும் ஒரு பெண் பேசிய பேச்சு, அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. குறிப்பாக, அப்பெண் பேசியதைக் கேட்டு நடிகர் சிவகுமார் தலைகுனிந்து சிரித்தது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

விழாவில் பேசிய அப்பெண், தன்னுடைய சொந்த கிராமம் மற்றும் அங்கு நிலவிய மோசமான சூழ்நிலை குறித்துப் பேசினார். "எங்கள் ஊருக்குச் சரியான சாலை வசதி கிடையாது, மருத்துவ வசதி கிடையாது. நாங்கள் ஒரு காட்டுக்குள்தான் வசித்தோம். ஆனால் நன்றாகப் படித்துக்கொண்டிருந்தேன். தொடர்ந்து படிப்பதற்கு என் குடும்பத்தில் சரியான சூழ்நிலை இல்லை.

அப்போதுதான் என் ஆசிரியர், 'நீ அகரம் பவுண்டேஷன் மூலமாக முயற்சி பண்ணு' என்று ஒரு நம்பர் கொடுத்தாங்க," என்று கூறினார்.

"அந்த நம்பருக்குப் போன் பண்ணுவதற்குக்கூட எங்கள் ஊரில் டவர் கிடையாது. இந்த பக்கம் அந்த பக்கம் என்று அலைந்து ஒரு இடத்தில் எனக்கு டவர் கிடைத்தது. அங்கிருந்து போன் பண்ணி தகவலைச் சொன்னேன். அதன்பிறகு எனக்கு அகரம் மூலம் ஒரு போன் வந்தது. அதுதான் என் வாழ்க்கையை மாற்றியது.

அதுவரைக்கும் நான் தமிழ் மீடியத்தில் படித்திருந்தேன். நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும், சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் எனக்கு இன்ஜினியரிங் படிப்பதற்காக சீட் கிடைத்தது," என்று கூறினார்.

கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, அப்பெண்ணுக்கு குஜராத்தில் வேலை கிடைத்திருக்கிறது. இது குறித்து அவர் பேசுகையில், "குஜராத்துக்குப் போவதற்காக முதல்முறை நான் பிளைட்டில் போனேன். எனக்கு அதற்கு முன்பு பிளைட்டில் எப்படி ஏற வேண்டும், சீட் பெல்ட் எப்படிப் போட வேண்டும் என்று எந்த விஷயமும் தெரியாது.

ஏர்போர்ட்டில் நான் நின்று கொண்டிருக்கும்போதுதான் அங்கு சிவகுமார் சாரும், அவருடைய மனைவி லட்சுமி அம்மாவும் வந்தாங்க. அவங்கதான் எனக்கு ஏர்போர்ட்டில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், சீட் பெல்ட் எப்படிப் போட வேண்டும் என்று எல்லாமே சொல்லி தந்தாங்க," என்று கூறினார்.

மாணவி இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, சிவகுமார், "ஐயோ, இதையெல்லாம் சொல்லுகிறாளே," என்று சிரித்தபடியே தலையில் கை வைத்து முகத்தை மூடிக்கொண்டார். அவருடைய இந்த எதார்த்தமான செயல், பலரையும் கவர்ந்துள்ளது.

அந்தப் பெண் இப்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், அதற்கு அகரம் பவுண்டேஷனும், சிவகுமார் குடும்பத்தினரின் ஆதரவுமே காரணம் என்றும் கூறினார்.

இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா, "அகரம் மூலம் மாணவர்கள் நல்ல நிலைமைக்கு வந்து, மற்றவர்களுக்கும் உதவ வேண்டும்," என்று தனது பெருமையைப் பகிர்ந்துகொண்டார். கார்த்தி, தனது அண்ணி ஜோதிகா மற்றும் அப்பா சிவகுமார் ஆகியோர் அகரம் பவுண்டேஷனுக்கு அளித்த ஆதரவு குறித்துப் பேசியிருந்தார்.

பொதுவாக, நடிகர் சிவகுமார் கோபக்காரர் என்றும், புகைப்படம் எடுக்கக்கூட அனுமதிப்பதில்லை என்றும் பேசப்பட்ட நிலையில், ஒரு மாணவிக்காக அவர் ஏர்போர்ட்டில் செய்த இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். அகரம் பவுண்டேஷன், வெறும் நிதியுதவி மட்டும் அல்லாமல், மாணவர்களுக்கு ஒரு குடும்பமாகவும் செயல்பட்டு வருகிறது என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

  • 624
·
Added a post
·

நான் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தப் போது..அமெரிக்காவில் இருந்து,நான் பிறந்த லண்டன் மாநகருக்கு சென்றேன்..நான் இளமையில் பசியுடன்,கிழிந்த சட்டையுடன்.. நடந்து சென்ற அந்த இலண்டன் வீதி தெருக்களில் தான் இப்போது.. என்னை காண இலட்சக் கணக்கில்மக்கள் திரண்டனர்..

ஆனால் நான் பிச்சைகாரனாய் இருந்த போது என்னை நேசித்த என் காதலியை தேடினேன்..

அவள் இல்லை..அன்று வறுமை எங்களை பிரித்தது..இன்று திரையில் என்னை இலட்சக்கணக்கில் கண்கள் காண்கின்றன..

நான் தேடுவதெல்லாம் வீதிகளில் ஏழையாய் நடந்து சென்ற போது என்னை ஐன்னல் வழியாக பார்த்து சிரித்த அந்த கண்களை தான்...பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம், ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்தசிலவற்றை பணத்தால் திருப்பி தரமுடியாது... இப்போதும் வறுமை தான் வென்றது...!!

  • 626
·
Added a post
·

ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க மட்டுமே படகு ஒன்று இருக்கிறது. மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச் செல்கிறார்.

கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக. இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார் என்று மாணவர்களை நோக்கி இந்த கதையைக் கூறிய ஆசிரியை கேட்டார். எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான். ஏம்பா நீ சைலண்டா இருக்க, நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்'. எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, உனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?

இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையே தான் சொன்னாங்க.. பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார். தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது. தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது. கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார். உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது. கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:

*'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாதுக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல நம்மால் புரிஞ்சிக்க இயலாம போகலாம். அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது. முதலில் மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, திமிறை விட உறவை மதிக்கிறாங்க' னு அர்த்தம். என்று ஆசிரியைகூறி முடித்தார்.

  • 649
·
Added a post
·
  • சாதம் வடித்த கஞ்சியை அரை டம்ளர் எடுத்து, மோர் விட்டு சாப்பிட்டு வந்தால் அதிகமான ரத்தப்போக்கு நின்றுவிடும்.
  • இரவில் சிறிதளவு வெந்தயத்தை எடுத்து மோரில் போட்டு ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, நாளடைவில் வாயுத் தொல்லைகள் நீங்கும்.
  • மூலநோய் குணமடைய முள்ளங்கியுடன் மிளகுத் தூள், எலுமிச்சைச்சாறு கலந்து உண்ண வேண்டும்.
  • சுக்கு, மிளகு, திப்பிலி போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம் சளி மற்றும் இருமலை குணப்படுத்த உதவும்
  • நீரிழிவு நோயாளிகள் வாழைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
  • தூதுவளைக் கீரையின் சாறானது சளி, இருமல், வாயுக் கோளாறுகள் போன்றவற்றை நீக்குகிறது.
  • மகிழம்பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை முகர்ந்து வந்தால் தலைவலி குணமடையும்.
  • 655

வித்தியாசமான விளம்பரம்!

image_transcoder.php?o=sys_images_editor&h=81&dpx=1&t=1754557724

  • 700

Good Morning

  • 798
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். முத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். தன வரவுகள் தேவைக்கு கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். அலுவலகத்தில் மதிப்புகள் கூடும். மனதளவில் புதிய தெளிவுகள் உண்டாகும். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

ரிஷபம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். தர்ம காரியங்களில் ஒரு வித ஈர்ப்பு ஏற்படும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். இறை சார்ந்த பிரார்த்தனைகள் கைகூடும். உழைப்பு அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மிதுனம்

தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவுகள் உண்டாகும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். தன வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

கடகம்

வழக்குகளில் நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சாதனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

சிம்மம்

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சவாலான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதளவில் சில மாற்றம் உண்டாகும். பேச்சு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உணவு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

கன்னி

எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பொழுது போக்கு செயல்களில் ஆர்வம் ஏற்படும். வழக்கு செயல்களில் பொறுமை வேண்டும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

துலாம்

கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் விலகும். நேர்மை வெளிப்படும் நாள். 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

விருச்சிகம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். சில பணிகளை சூழ்நிலை அறிந்து மேற்கொள்ளவும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சிந்தனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

தனுசு

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். பண விஷயங்களில் ஏற்ற இறக்கம் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. இயந்திரப் பணிகளில் சற்று கவனம் வேண்டும். தெய்வீக காரியங்களில் மனம் ஈடுபடும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மகரம்

பயனற்ற செலவுகளை குறைக்கவும். திடீர் பயணங்கள் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். சகோதரர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் இழுபறியான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் மேம்படும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

கும்பம்

தனம் தொடர்பான நெருக்கடிகள் ஓரளவு குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிறு மற்றும் குறுந்தொழிலில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். பணி சார்ந்த செயல்களில் புரிதல்கள் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மீனம்

மனதில் இருந்த ஆசைகள் நிறைவேறும். வாகன பழுதைகளை சீர் செய்வீர்கள். நெருக்கமானவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். நினைத்து பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். சாந்தம் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 848
·
Added a post
·

விசுவாவசு வருடம் ஆடி மாதம் 22 ஆம் தேதி வியாழக்கிழமை 7.8.2025.

திதி

சுக்ல பக்ஷ திரயோதசி  - Aug 06 02:08 PM – Aug 07 02:28 PM

சுக்ல பக்ஷ சதுர்தசி  - Aug 07 02:28 PM – Aug 08 02:12 PM

நட்சத்திரம்

பூராடம் - Aug 06 12:59 PM – Aug 07 02:01 PM

உத்திராடம் - Aug 07 02:01 PM – Aug 08 02:28 PM

image_transcoder.php?o=sys_images_editor&h=80&dpx=1&t=1754538557

நல்ல நேரம் :

அபிஜித் காலம் - 12:00 PM – 12:50 PM

அமிர்த காலம் - 09:04 AM – 10:45 AM

பிரம்மா முகூர்த்தம் - 04:40 AM – 05:28 AM

  • 838

கனேடிய தமிழர் பேரவையின், தமிழர் தெருவிழா 2025 இரத்துச் செய்யப்பட்டுள்ளது!

  • 1003

image_transcoder.php?o=sys_images_editor&h=78&dpx=1&t=1754498821

  • 1104

image_transcoder.php?o=sys_images_editor&h=77&dpx=1&t=1754498731

  • 1107
·
Added a news
·

கனடாவில் பல்வேறு பண்டக்குறிகளைக் கொண்ட பிஸ்தாக்கள் மற்றும் பிஸ்தா கலந்த பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த உணவுப் பண்டங்களை உட்கொண்டதால், சால்மோனெல்லா தொற்றால் பாதிக்கப்பட்டு 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கனடிய சுகாதார திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. நோய்த் தாக்கத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

நாடு முழுவதும் இந்த பாதிக்கப்பட்ட பொருட்களால் 52 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிடோபாவில் ஒருவரும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2 பேரும் ஒன்டாரியோவில் 9 பேரும் கியூபெக்கில் 39 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் நான்கு பங்கு பெண்கள்எனவும் நோயாளிகளின் வயது 2 முதல் 89 வரையிலானர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட பொருட்கள் ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் ஹபீபி, அல் மொக்தார் உணவு மையம் மற்றும் துபாய் ஆகிய பண்டக்குறிகளின் கீழ் விநியோகிக்கப்பட்டுள்ளன.

சால்மோனெல்லா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால் உடன் மருத்துவர்களின் உதவியை நாடுமாறு கனடிய பொதுச் சுகாதார திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

  • 1140
·
Added article
·

”எம்.ஜி.ஆர் எதைச் செய்தாலும், அதில் வேகமும் விடாமுயற்சியும் இருக்கும்!”

சிகிச்சை முடிந்து எம்.ஜி.ஆர். தமிழகம் திரும்புகிறார் என்று செய்தி வருகிறது.

ஆம்புலன்சில் படுத்த படுக்கையாக வரப்போகிறாரா இல்லை சக்கர நாற்காலியில் வரப்போகிறாரா என்று சொந்தக் கட்சிக்காரர்கள் மத்தியிலேயே குழப்பம்.

யாருக்கும் எந்த விவரமும் தெரியவில்லை. அவரை விமானத்தில் இருந்து அப்படியே தூக்கி கீழே வைக்கும் ஒரு ஸ்பெஷல் லிப்ட் கூட தயார் நிலையில் இருந்தது.

புரட்சித் தலைவரை சுமந்து வந்த அமெரிக்க விமானம் சென்னையில் தரை தொட்டது. மந்திரிகள் முதல் கடைக்கோடி தொண்டன் வரை தங்கள் மன்னவனைக் காண தவம் கிடந்தனர்.

ஓடுபாதையில் மெல்ல ஊர்ந்து வந்து நின்றது அந்த விமானம். பயணிகள் எல்லோரும் வெளியேறிய பிறகு சில நிமிடங்கள் உருண்டோடின. முதலில் டாக்டர்கள் வெளியே வர, பின்னால் தெரிந்தது அந்த ரோஜா முகம். காத்திருந்த அத்தனை கண்களிலும் கண்ணீர்.

விமானத்தில் இருந்து வெளிப்பட்டதும், அங்கு கூடியிருந்தவர்களைக் கண்டு உற்சாகமானார். கையை உயர்த்திக் காட்டிவிட்டு, விறுவிறுவென படிக்கட்டுகளில் அவர் இறங்கி வந்த வேகத்தைக் கண்டு தமிழகமே ஆர்பரித்தது. அவரது எதிரிகள் அரண்டு போனார்கள்.

அப்போது எம்.ஜி.ஆருக்கு வலது கை செயலிழந்து இருந்தது. அவ்வப்போது சின்ன பேப்பர் ரோலை கையில் வைத்து அழுத்தியபடி அந்தக் கைக்கு வேலை கொடுக்க கொடுக்க மீண்டும் கைகள் செயல்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறியிருந்தனர் மருத்துவர்கள்.

சின்ன பேப்பர் ரோல் எதுக்கு? நான் பெரிய பேப்பர் பந்தா உருட்டி அதிலேயே பயிற்சி எடுக்கிறேன் என்று சொல்லி, தினமும் பயிற்சி செய்வார். தொடர்ச்சியான பயிற்சியால் விரைவிலேயே அவரது கை செயல்படத் தொடங்கியது.

அந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு வைத்தியம் பார்த்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா ஒன்று நடத்தப்பட்டது. அந்த விழாவில் கானு என்ற டாக்டருக்கு தங்க யானை பொம்மை ஒன்றை பரிசளித்தார் எம்.ஜி.ஆர்.

விழாவின்போது, “இப்போது டாக்டர் கானு அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்” என்றதும், பின் வரிசையில் அமர்ந்திருந்த டாக்டர் எழுந்து நடந்து சென்று மேடை ஏறி எம்.ஜி.ஆரை நெருங்கும் வரை நல்ல எடை கொண்ட அந்த யானை சிலையை தன் வலது கையால் தூக்கிப் பிடித்தபடியே நின்றிருந்தார் தலைவர்.

அருகில் நின்றிருந்தவர்கள் பதறிப்போய் பிடிக்க முயல, யாரையும் நெருங்க அவர் அனுமதிக்கவில்லை. டாக்டர் கானு அருகே வந்ததும், “எப்படி…” என்பதைப் போல ஒரு சிரிப்பு சிரித்தபடி அந்தப் பரிசை அவர் கையில் கொடுத்தார்.

அதைப் பார்த்து வெளிநாட்டு டாக்டர்களே வியந்து போனார்கள். இது தான் புரட்சித் தலைவரின் மன திடம். அவர் எதை செய்தாலும் அதில் இந்த வேகமும் விடாமுயற்சியும் இருக்கும்.

அமெரிக்காவில் அவர் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில், இங்கே இந்திராகாந்தி சுடப்பட்டு உயிரிழந்தார். இந்தச் செய்தியை சொன்னால் அது அவரது உடல் நலத்தை பாதிக்கும் என்பதால் அப்போது அதை எம்.ஜி.ஆரிடம் சொல்லவில்லை.

நான்கைந்து நாட்கள் கழித்து மெதுவாக அந்தச் செய்தியை சொன்னபோது, “ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லவில்லை” என்று கடுமையாகக் கோபித்துக் கொண்டாராம்.

சரியான நேரத்தில் அமெரிக்க சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து தன் உயிரைக் காப்பாற்றிய இந்திராவின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுதிருக்கிறார். அன்று முழுவதும் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் பட்டினி கிடந்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு இந்திராவின் இழப்பு அவரைக் கடுமையாக பாதித்தது.

1987-ம் ஆண்டு ஜூன் மாதம் நடிகர் சத்யராஜின் ரெண்டு தங்கச்சிகளுக்கு கோயமுத்தூர்ல கல்யாணம். ஒரு மரியாதைக்காக ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை சந்திச்சு பத்திரிகை கொடுத்தார்.

‘‘அண்ணே… காலையில 4.30 – 5.30 ஒரு மூகூர்த்தம், 5.30 – 6.30 ஒரு முகூர்த்தம். நீங்க ரெண்டாவது முகூர்த்தத்துக்கு வந்தா போதும்னு சொல்லி இருக்கார். ‘‘ஏன் முதல் முகூர்த்தத்துக்கு வரக்கூடாதா? நான் 4 மணிக்கே வந்திடறேன்’’னு சொல்லிட்டார்.

சத்யராஜூக்கு ஒன்ணும் புரியல. ‘‘எண்ணன்ணே, மரியாதைக்காக கூப்பிட்டேன், தலைவர் கண்டிப்பா வர்றேன்னு சொல்லிட்டார். எப்படி அவரை ரிசீவ் பண்றது’’னு பதட்டமாகிட்டார்.

‘‘நீ விடுய்யா… அவர் தமிழ்நாட்டு சி.எம். அவர் வந்து போற வரைக்கும் அதிகாரிங்க பார்த்துப்பாங்க’’னு சொன்னேன்.

கல்யாணத்துக்கு எம்.ஜி.ஆர். போன அதே பயணிகள் விமானத்துல தான் நானும் போனேன். அவருக்கு ரெண்டு சீட் பின்னால நான் உட்கார்ந்துகிட்டு இருந்தேன். தலைவருக்கு இந்தப் பக்கம் வின்டோ சீட்ல ஜானகி அம்மாவும், வலது பக்கம் அமைச்சர் முத்துசாமியும் உட்கார்ந்துட்டு இருந்தாங்க.

என்னைப் பார்த்த முத்துசாமி, முன்னாடி வாங்கனு சொல்லி எழுந்து இடம் கொடுத்தார். புரட்சித் தலைவரை வணங்கிவிட்டு அவர் அருகில் அமர்ந்தேன். அப்போது அவருக்கு பேச்சு சரியாக வராத நேரம். என்னைப் பார்த்து சிரித்தார்.

“நீங்க எங்க ஆளு. நீங்க ஏன் அரசியலுக்கு போனீங்க?” என்று கேட்டேன்.

“ம்… ஏன்?” என்றார்.

“முன்னாடியெல்லாம் உங்கள பார்க்கணும்னா நேரா தோட்டத்துக்கு வந்து உரிமையோட உங்க அறைக்கே வந்து சந்திப்போம். இப்பல்லாம், 4 பி.ஏ.வை தாண்டி உங்களைச் சந்திக்கிறது அவ்வளவு சுலபமா இல்லியே.

நான் ‘இனி ஒரு சுதந்திரம்’னு ஒரு படம் எடுத்திருக்கேன். அதைப் பார்க்க உங்களை அழைக்கலாம்னு முயற்சி பண்ணிட்டு இருக்கேன், முடியல” என்றேன். சிரித்தபடி ஏதோ சொன்னார். புரியவில்லை. ஜானகி அம்மாவை பார்த்தார்.

“ 9 ஆம் தேதி டெல்லி போறேன். திரும்பி வந்ததும், ஒரு நாள் வந்து படத்தைப் பார்க்கிறேன்னு சொல்றார்” என்றார் ஜானகி அம்மையார்.

கல்யாணத்து அன்று காலை 2.30 மணிக்கே எழுந்து தயாராகி 4.30 மணிக்கு மண்டபத்துக்கு வந்துவிட்டார். அன்றைக்கு அவருக்கு இருந்த உடல்நிலைக்கு இப்படியெல்லாம் தன்னை வருத்திக் கொண்டு வரவேண்டும் என்று அவசியமே இல்லை. ஆனால் மனதில் ஒன்றை நினைத்துவிட்டால் அதை செய்தே தீருவார் எம்.ஜி.ஆர்.

கல்யாணத்துக்கு வந்தவர் இரண்டு முகூர்த்தத்துக்கும் இருந்தார். கோயமுத்தூர்காரங்க சாப்பாட்டு விஷயத்துல பின்னிடுவாங்க. காலை டிபனில் நெய் மிதக்க மிதக்க சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், 4 வடை என்று அவர் இலையை நிரப்பி விட்டனர்.

தலைவர் அமர்ந்து சாப்பிட்ட டேபிளுக்கு எதிரிலேயே நின்று கொண்டிருந்த அவரது டாக்டர், சர்க்கரை பொங்கலையும் வெண் பொங்கலையும் காட்டி வேண்டாம் என்பது போல சைகை செய்தார்.

லேசாக நிமிர்ந்து டாக்டரைப் பார்த்தார், “இத்தனை பேர் முன்னாடி என்னை வியாதிக்காரன்னு சொல்லிக் காட்றியா…” என்ற எக்ஸ்பிரஷனோட, “இன்னும் கொஞ்சம் சர்க்கரைப் பொங்கல் வைப்பா… இன்னும் ரெண்டு வடை வைப்பா” என்று ஆசையாக கேட்டு வாங்கி சாப்பிட்டார் தலைவர்.

எந்த இடத்திலுமே தன்னை அவர் பலகீனமாக வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டார். உடலில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் பொதுமக்கள் மத்தியில் எப்போதுமே ஒரு ஹீரோவாக இருந்தவர். இந்தத் திருமணத்துக்கு பிறகு டெல்லிக்குச் சென்று வந்தார். அதன் பிறகு ஒரு சில மாதங்களிலேயே நம்மையெல்லாம் விட்டு பிரிந்து விட்டார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு எம்.ஜி.ஆர். ஒன்றரை வருடங்கள் வரை வாழ்வார் என்று டாக்டர்கள் சொன்னபோதும், நான்கரை வருடங்கள் வாழ்ந்து மறைந்தார் அந்த உத்தமத் தலைவன்.

  • 1136
·
Added article
·

நடிகர் ஆனந்தராஜ் வில்லனாக நடித்தாலும், அவரது நடிப்பை பலரும் ரசிப்பார்கள். காரணம், அவரது நடிப்பு பிரமாதமாக இருக்கும்.

ஆனந்தராஜ் போன்ற நடிகர்களின் வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் மிகவும் உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த் தான். அவர்தான் தனது படங்களில், ஆனந்தராஜ் நடிக்க வாய்ப்பளித்திருந்தார்.

ஒரு படத்தின் ஷூட்டிங் அசோக் நகர்ல நடக்குது. அப்போ அந்த ஏரியா டெவலப் ஆகல. நான் சொல்றது 80களுக்கு முன்னால கூட இருக்கலாம்.

ஷூட்டிங் பார்க்க கூட்டம் வரும் இல்லையா, அந்த மாதிரி நிறைய பேர் கூட்டமாக இருக்கறாங்க

அப்போ வந்து எல்லோரும் பார்த்தாங்க. பார்த்துட்டு எல்லாம் ஒரே ஆரவாரம் பண்ணினாங்க. அப்போ ஷூட் முடிச்சிட்டு நானும், விஜயகாந்த் எல்லாம் பிளாட்பார்ம்ல உட்கார்ந்து இருக்கோம். கேரவன் எல்லாம் கிடையாது. அப்போ பக்கத்துல அவரோட ரசிகர்கள் எல்லாம் நிக்கறாங்க.

அப்போ அந்த வழியா ஒருத்தர் பைக்குல வந்தாரு. வந்தவரு எல்லாத்தையும் தள்ளுங்க, தள்ளுங்க அப்படீன்னுட்டு சொல்லிட்டு போயிட்டே இருக்கார்.

ரோட்டை மறிச்சு இப்படி ஷூட்டிங் பண்ணினா எப்படிய்யா போறது? ன்னு சொல்லிட்டு அந்த இடத்தை கிராஸ் பண்ணி போயிட்டார். நான் அவரை மட்டும் அப்படியே பார்த்துக்கிட்டே இருக்கேன்.

சினிமா பார்க்காதவர்களுக்கு நாம சாதாரணமாக ஆட்கள். சினிமா பிடிக்காவர்களுக்கு நாம் மிக சாதாரணமானவர்கள்.

நாம ஒண்ணும் ஆகாயத்துல இருந்து குதிச்சு வரவில்லை. ரொம்ப நார்மலாக ஆளுங்கதான். ஆண்டவன் கொடுத்த பிச்சை இது. இந்த துறையில் இருப்பதால் நாம் செய்கிறோம் அப்படீன்னு விஜயகாந்த் சொன்னார்.

உண்மையில் என்னோட கண்ணை திறந்தவர் அவர்தான் என்கிறார் நடிகர் ஆனந்தராஜ்,

  • 1143
·
Added a post
·

பொதுவாக வீடுகளில் பிள்ளை பெற்ற பெண்களுக்கு ஒவ்வொரு உணவிற்குப் பின்னும் வெற்றிலையைக் களிப்பாக்கு மற்றும் சுண்ணாம்புடன் சேர்த்துக் கட்டாயம் மெல்ல வைப்பார்கள் .

இதனால் அப்பெண்களுக்குச் செரிமானம் நன்கு ஆவதோடு பிரசவ காலத்தில் ஏற்பட்ட இரத்த இழப்பு ஈடு செய்யப்படுகிறது என்பது கண்கூடாகக் கண்ட உண்மை!

வெற்றிலையில் சிறிது விளக்கெண்ணெய் தடவி.. நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றப்பட்ட அகல் விளக்கில் காட்டினால் அந்த வெற்றிலையில் தீபச் சுடர் பட்டுக் கருமையாகப் படியும். அதை விரலால் வழித்தெடுத்து ஒரு கொட்டாங்கச்சியில் சேகரிப்போம். அதைத் தான் பச்சிளங் குழந்தைக்குப் பொட்டு வைக்கவும் கண்களில் மையமாக இடவும் பயன்படுத்துவோம்.

ஏதாவது காணாக்கடி ஏற்பட்டால் (அதாவது இன்ன பூச்சி தான் கடித்தது என்று தெரியாத ஒரு நிலை) மூன்று நான்கு வெற்றிலையுடன் சிறிது கல்லுப்பு மற்றும் நாலைந்து மிளகு சேர்த்து நன்கு மென்று விழுங்கினால் அந்தக் கடி விஷம் விரைவாகப் பரவாது என்பார்கள் எங்கள் கிராமத்தில். அதோடு பூச்சிக் கடியினால் ஏற்பட்ட கடுகடுப்பும் சில நிமிடங்களில் குறையத் தொடங்கும்.

வெற்றிலையை விளக்கெண்ணெய் விட்டு நன்கு வதக்கிப் பழுத்து நிற்கும் கட்டியின் மேல் வைத்து வைத்து எடுத்தால் கட்டி உடைந்து விடும்.

இரண்டு வெற்றிலை.. கொஞ்சம் துளசி.. மற்றும் ஓமவல்லித் தழை.. அல்லது அரை டீஸ்பூன் ஓமம்.. ஓரிரு பூண்டுப் பற்கள்.. ஓரிரு சின்ன வெங்காயம்.. ஒரு சிறிய துண்டு சுக்கு வைத்து நன்கு அம்மியில் அரைத்து ஒரு சுண்டைக்காய் அளவு சாப்பிட நெஞ்சுச் சளி கரையும்.

சின்னச் குழந்தைகளுக்குக் கூடச் சிறிது தேன் சேர்த்துப் போட்டி விடலாம்.

வாந்தி மூலமோ.. மூன்று நான்கு முறை ஏற்படும் வயிற்றோட்டம் மூலமாகவோ சளி கரைந்து வெளியேறிவிடும் விடும்.

நமது பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவ முறைகளைப் பின்பற்றி

  • 1148
·
Added article
·

சாவித்திரி சொந்தப்படம் எடுத்து தன் சொத்தை எல்லாம் இழந்தார். சென்னை ஹபிபுல்லா ரோட்டில் இருந்த பெரிய மாளிகையும் ஏலத்தில் போய்விட்டது. இந்நிலையில் ஒரு நாள் அவர் எம்.ஜி.ஆரின் மாம்பலம் ஆஃபிஸுக்கு வந்து அவரைச் சந்தித்தார்.

எம்.ஜி.ஆர் அவரிடம் ஒரு பையில் ஒரு லட்சம் ரூபாயைப் போட்டுக் கொடுத்தார். அத்துடன் அவர் வசிப்பதற்கு ஒரு வீடும் ஏற்பாடு செய்து கொடுத்தார். உடம்பை கவனித்துக் கொள்ளம்மா என்று கூறி அனுப்பிவைத்தார். இந்த ஒரு லட்சம் ரூபாயை வைத்து சாவித்திரி முன்னேறிவிடப் போவதில்லை. அவர் எப்படிச் செலவழிப்பார் என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருக்கும் எனினும் ஒரு மாபெரும் நடிகை உதவி என்று கேட்கும்போது அவருக்கு உதவுவதே மனுஷத்தனம் என்பது எம்.ஜி.ஆரின் கொள்கை.

  • 1058
New People