Sign up
People of Canada are preparing to create a retail blackout on Feb 28 of all U.S retailers doing business here. For one day, show them we have the power when provoked. Absolutely no purchases from Walmart, Home Depot, Best Buy, Amazon, McDonald’s, Staples, Gap, Toys r Us , Costco or any other US retailers. For one day, support only small or large CANADIAN or MEXICAN producers and companies. It’s time to STAND UP for ourselves. BE STRONG AND BE PROUD. Spread the word!
Added a post
ஒரு சிறிய கிராமம். மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணன் கோவில். அர்ச்சகரும், அவரிடம் வேலைபார்த்துவரும் சிறுவன் துளசிராமனும் காலை 4 மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள்.துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களை யெல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தரவேண்டிய பணி.கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசிராமனுக்கு, அந்தப் பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணனின் நினைப்புதான்.." கிருஷ்ணா ர்ப்பணம் ” என்று மனதுள் சொல்லியபடியே பூக்களைப் பறித்து, தொடுப்பான்.பத்து, பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவு டன், ஏதோ அவனே கிருஷ்ணனுக்கு சூட்டி விடுவது போன்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான்.கிருஷ்ணரின் சிலைக்கு மாலை சூட்ட போனால் ஏற்கனவே ஒரு புதுமாலையுடன் கிருஷ்ணன் சிலை பொலிவு பெற்று இருக்கும். அதைப் பார்த்த அர்ச்சகருக்கு, இது துளசிராமனின் குறும்பாக இருக்குமோ என்று சந்தேகம்.அவனை கூப்பிட்டு, "துளசிராமா இதெல்லாம் அதிகப்ரசங்கித்தனம்; நீ மாலை கட்டவேண்டு மே தவிர, சூட்டக்கூடாது ” என்று கண்டித்தார்."சுவாமி…! நான் சூட்டவில்லை ; கட்டிய மாலை கள் மொத்தம் 15. அத்தனையும் உங்களிடம் கொடுத்து விட்டேன் ! ” என்ற அவன் சொற்கள் அவர் காதில் விழவேயில்லை."நாளையிலிருந்து அண்டாக்களில் தண்ணீர் நிரப்பும் பணியைச் செய்.பூ கட்டவேண்டாம் .” கட்டளையாக வந்தது .இதுவும் இறைவன் செயல் என்று, துளசிரா மன் நீரிறைக்கும் போதும், தொட்டிகளில் ஊற்றும்போதும், ” "கிருஷ்ணார்ப்பணம் ” என்று மனம் நிறைய சொல்லிக்கொள்வான். மனமும் நிறைந்தது!இப்போதெல்லாம் சிலைக்கு அபிஷேகம் செய்ய அர்ச்சகர் வரும்முன்பே , அபிஷேகம் நடந்து முடிந்து, கருவறை ஈரமாகி இருக்கும். நனைந்து நீர் சொட்டச் சொட்ட கிருஷ்ணர் சிலை சிரிக்கும்.அர்ச்சகருக்கு கடும் கோபம், "துளசிராமா..நீ அபிஷேகம் செய்யுமளவுக்கு துணிந்து விட்டாயா! உன்னோடு பெரிய தொல்லையா கிவிட்டதே ” வைய்ய ஆரம்பிக்க,துளசிராமன் கண்களில் கண்ணீர்." ஸ்வாமி நான் அண்டாக்களை மட்டும்தான் நிரப்பினே ன்; உண்மையிலேயே கிருஷ்ணனுக்கு எப்படி அபிஷேகம் ஆனது என்று எனக்கு தெரியாது! என்றான்.அவ்வளவுதான் அர்ச்சகர் மறுநாளே மடப்பள் ளிக்கு மாற்றிவிட்டார். பிரஸாதம் தயாரிப்பு பணிகளில் ஒரு சிற்றாளன் ஆனான். இங்கும் காய் நறுக்கும்போதும் அவன், " கிருஷ்ணார்ப் பணம் ” என்றே தன்னுடைய செய்கைகளை கடவுளுக்கே காணிக்கையாக்கினான்.அன்று அர்ச்சகர் முன்னெச்சரிக்கையாக சன்னிதானத்தை பூட்டிச் சாவியை எடுத்துச் சென்றுவிட்டார் .மறுநாள் அதிகாலையில் சந்நிதிக் கதவைத் திறக்கும்போதே கண்ணன் வாயில் சர்க்கரை பொங்கல் நைவேத்யம்."மடப்பள்ளியில் அப்போதுதான் தயாராகி, நெய்விட்டு இறக்கி வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் எப்படி இங்கு வந்தது ? நானும் கதவைப்பூட்டிதானே சென்றேன். பூனை , எலி கொண்டு வந்திருக்குமோ ?துளசிராமனுக்கு எந்த வேலை தந்தாலும் அந்தப்பொருள் எப்படியோ எனக்கு முன்பே இங்கு வந்துவிடுகிறதே , அவன் என்ன மந்திரவாதியா? "என்று குழம்பினார் அர்ச்சகர்.இன்று எதுவும் கண்ணடிக்கவில்லை, ” துளசி ராமா! நாளை முதல், நீ வாசலில், பக்தர்களின் செருப்பை பாதுக்காக்கும் வேலையைச் செய். நீ அதற்குத்தான் சரியானவன்.." என்று கூறினார்."பூ, நீர்,பிரஸாதம் எல்லாம் நல்ல பொருட்கள் ; சந்நிதிக்கு வந்துவிட்டன ; இனி என்ன ஆகிறதென்று பார்ப்போம் ; ” இதுதான், அர்ச்சகரின் எண்ணம்.இதையும் கடவுள் விருப்பம் என்று ஏற்றுக் கொண்ட துளசிராமன் அன்றுமுதல் வாசலில் நின்றிருந்தான். அதே, " கிருஷ்ணார்ப்பணம் " என்றே அந்த வேலையையும் செய்து கொண்டு இருந்தான். இன்றும் அர்ச்சகர் பூட்டி, சாவி கொண்டு சென்றார்.மறுநாள் காலை ; சந்நிதிக்கதவு திறந்ததும், அர்ச்சகர் கண்ட காட்சி உடலெல்லாம் அவரு க்கு நடுங்கத்தொடங்கியது.இதென்ன கிருஷ்ணா, உன் பாதங்களில் ஒரு ஜோடி செருப்பு பாதகமலங்களின் பாதுகை யின் பீடத்தில் சாதாரண தோல் செருப்பு எப்படி வந்தது ?துளசிராமன் எப்படிப்பட்டவனானாலும், சந்நி திப் பூட்டைத் திறந்து இப்படி செருப்பை வைக்க யாருக்குத்தான் மனம் வரும் ? ஆச்சரி யம், அச்சம் அர்ச்சகருக்கு வேர்த்துக் கொட்டியது.அப்போது எங்கிருந்தோ ஒரு குரல் "அர்ச்சகரே பயப்பட வேண்டாம் அந்த துளசிராமனுக்கு நீ எந்த வேலை தந்தாலும், அவன், " கிருஷ் ணார்ப்பணம்" என்று எனக்குக் காணிக்கையா க்கி விடுகிறான். அப்படி அன்போடு அவன் தரும் காணிக்கையை நான் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன்.நினைவெல்லாம் எங்கோ இருக்க செய்யும் பூஜையை விட, எதை செய்தாலும் எனக்குக் காணிக்கையாக்குபவனின் அன்பை நான் ஏற்றுக்கொண்டேன்.துளசிராமன் ஒரு யோகி அவன் அன்பு எனக்குப் பிரியமானது!என்றார் பகவான்.கிருஷ்ண பகவானின் இந்தக் குரல் கேட்டு வாசல் பக்கம் ஓடிவந்து அந்த யோகி துளசிரா மனின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார், அர்ச்சகர்கண்ணனின் அருமை பெருமைகளை சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
Added a post
ஒரு ஊரில் அரசன் வாழ்ந்து வந்தான். அவனு க்கு ஒரு மந்திரி இருந்தான். அரசவையில் மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தான்..அந்த மந்திரிக்கு இரு மகன்கள். ஒருவன் பெயர் பாலன், மற்றவன் பெயர் வேத நெறி - இருவரும் மந்திரியின் சொல்பேச்சை கேட்கா மல் தன்னுடைய இஷ்டம் போல வாழ்பவர்கள் அதனால் வயது வந்த பின் தனது சொத்தை பிரித்து தரும்படி கேட்டுச்சென்றனர்.அரசனுக்கு மந்திரி மீது மிகவும் பிரியம். அவர் அறிவுத் திறமை குறித்து நன்கு அவரிடம் அன்பு ம் பண்பும் நிறைந்ததாக இருப்பார்.ஒருநாள் அரசவையில் மந்திரியின் பெருமை கண்டு மாதிரிக்கு அரசன் ஒரு நவரத்தினங்க ளால் செய்யப்பட்ட அழகிய மோதிரத்தை பரிசாக கொடுத்தான். அன்று மந்திரி அந்த மோதிரத்தை வீட்டிற்கு எடுத்து சென்று பத்திர மாக வைத்து கொள் என்று மனைவியிடம் ஆணையிட்டார்.ஒருநாள் இதை அறிந்து தனது வீட்டிற்கு வந்த வேதநெறி என்ற இரண்டாமவன் வீட்டில் யாருக் கும் தெரியாமல் அந்த மோதிரத்தை எடுத்து திருடி அழகான நாட்டிய பெண்ணுக் கு பரிசளித்தான்,மறு நாள் அந்த பெண் அரசவையில் அரசன் முன் நடனம் ஆடிகொண்டிருக்கும் வேளையி ல் அவள து கையில் இருந்த மோதிரத்தை பார்த்து அரசனு க்கு மிகவும் அதிர்ச்சி. நாம் மந்திரிக்கு கொடுத்த மோதிரமாச்சே!! இது எப்படி இந்த பெண்ணின் கையில் என்று யோசித்தவாறு மந்திரியை அழைத்து உங்க ளிடம் தந்த அந்த நவரத்தினம் பதித்த மோதி ரத்தை எடுத்து வாருங்கள் என்று ஆணை இட்டான்.மந்திரியும் வீட்டிற்கு சென்று பார்க்கிறார். மோதி ரம் காணவில்லை என்றவுடனே மந்திரி இல்லை என்ற விபரத்தை கூறியவுடன் அரசன் அந்த பெண்ணிடம் யார் உனக்கு மோதிரத்தை கொடுத் தார்கள் என்று கேட்டவுடன், அவளும் வேதநெறி என்று மந்திரி மகனை சொல்ல அங்கிருந்த மந்திரி தான் மகன் செய்த காரியத்தை நினைத் து மிகவும் வேதனை அடைந்து சில காவலாளிக ளை கூட்டிட்டு மகனை கொல்ல போகிறேன் என்று செல்கிறார். மகன் வேதநெறியும் விஷயம் அறிந்து வேகமாக ஓடுகிறான்.அன்றுகாலை ஆரம்பித்த ஓட்டம். முடியவில் லை. அன்று சிவராத்திரி தினம். அவன் காலையில் இருந்து பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் காவலாளிகளுக்கு பயந்து விட்டு ஓடி கிட்டே இருக்கின்றான். இறுதியில் ஒரு சிவாலயம் வருகிறது.அங்கு எம்பெருமானார் சிவனுக்கு சில நைவேத் தியங்கள் பக்தர்கள் படைத்தது இருந்தனர். அவன் ஓட்டம் தாங்காமல் ஈசன் கருவறைக்குள் செல்கிறான். ஒரு சிறிய விளக்கு மட்டும் அணை ந்து போகின்ற நிலைமையில் உள்ளது.அவன் தான் வயிற்று பசி தாங்காமல் அந்த இறைவனின் அறைக்குள் ஏதேனும் நைவேத் தி யம் உண்பதற்காக அந்தவிளக்கை தூண்டி னா ன். தூண்டிய உடன் கோவிலில் இருந்து சிலர் அவனை அடிக்கலானர்.அவன் சப்தம் கேட்டவுடன் எந்த பிரசாதத்தை யும் சாப்பிடாமல் ஓடத்துவங்கினான். இறுதி யில் பசி தாங்கமுடியாமல் இறந்து போனான். உடனே அவன் இறந்த உடன் எம தூதர்கள் அவனை கூட்டிச்செல்ல ஒருபுறம் வருகின்ற னர். மறுபுறம் கைலாயத்தில் இருந்து எம்பெ ருமானாரால் தேவர்கள் அழைத்துச்செல்ல வருகின்றனர்.எமதூதர்கள் சரியாக அவனை தொடும் வேளை யில்,தேவர்கள் அந்த வேத நெறியை விட்டு விடு ங்கள். அவன் கைலாயத்தில் சிவபெருமனரால் அழைக்கப் பட்டிருக்கின்றான் என்றவுடன் எமதூ தர்கள் ஏன் எதற்கு என்று வினவினார்கள்.அதற்கு தேவர்கள் கூறிய பதில்.... அவன் இறந்த நாள் முதலில் சிவராத்திரி. அவன் அன்று பச்சை தண்ணீர் கூட குடிக்க வில்லை..அவன் ஈசனின் கருவறைக்குள் அணையும் நிலையில் இருந்த விளக்கை தூண்டினான், என்று கூறியவுடன் எமதூதர்கள் தேவர்களிட மே அவனை விட்டுவிட்டனர். அவனும் கைலா யம லையில் ஈசனின் முக்தி பேற்றிற்கு ஆளானான்.தெரியாமல் நடந்தது வேதநெறியின் செயல் கள் அதற்கே அவனுக்கு முக்தி கிடைத்தது என்றால், நாம் தினமும் கடவுளை மனதை ஒருமுக படுத்தி இறைவனை வழிபட்டால் எந்த அளவு இறைவனி டம் பேரருள் பெற்று முக்திநிலையை அடையலாம்.
Added a post
திருதிராஷ்டிரன் மனைவி காந்தாரி.காந்தாரியின் உற்ற தோழிபணிப்பெண் சுகதா ஆவாள்.காந்தாரி கர்ப்பம் தரித்து கர்ப்ப காலம் இரண்டு வருடம் நீடித்தது.குழந்தை பேறு பெறுவதற்கு இரண்டு வருடங்களாயினஅந்த நேரத்தில் திருதிராஷ்டிரனுக்குபணிவிடை செய்ய தாதியாககாந்தாரியின் தோழி சுகதா நியமிக்கப்பட்டாள்.திருதிராஷ்டிரன் சுகதாவை தனது சுயலாபத்திற்காக அவளை பயன்படுத்தி கர்ப்பவதியாக ஆக்கினான்.காந்தாரி நூறு புதல்வர்களையும்துஷலா எனும் பெண் குழந்தையும்பெற்றெடுத்தாள்.பின்னர் சுகதா ஓர் ஆண் வாரிசை பெற்றெடுத்தாள்.தாதி சுகதாவுக்கு பிறந்த மகனுக்குயுயுத்சு என பெயரிட்டனர்.யுயுத்சுவின் குண நலன்கள் விதுரரை ஒத்திருந்தது.இருவருமே தாசி புத்திரர்கள்.அறிவு மிகுந்த இவ்விருவரும் யுதிர்ஷ்டரிடத்தில் அன்பும்,ஸ்ரீ கிருஷ்ணரிடம் பக்தியும் உடையவர்கள்.பாண்டவரிடத்தில் அபிமானம்உள்ளவர்கள். கெளரவர்கள் மனசாட்சிப்படி நடக்காவிட்டாலும், யுயுத்சு எப்போதும் மனசாட்சிப்படி நடந்தான்.துரியோதனின் சதித்திட்டங்களை தக்க சமயத்தில் பாண்டவர்க்கு பலமுறை எடுத்துரைத்து அவர்களைக் காப்பாற்றினான்.குருசேத்ர யுத்தத்திற்காக,தேர்ப் படை,யானைப் படை,குதிரைப் படை,காலாட் படைஎனப் பாண்டவர்களின் நால்வகைப் படைகள் ஒருபுறம் நிற்க எதிர்புறம் கௌரவர்களின் நால்வகைப் படைகளும் அணிவகுத்து ஒன்றுக்கொன்று எதிரெதிராக நின்றிருந்தன.இருபுறமும் மாபெரும் வீரர்கள் கூட்டம், கையில் வாளோடும் வேலோடும் வில், அம்பு கதை முதலிய ஆயுதங்களோடும் போரிடத் தயாராய்த் துடிதுடிப்புடன் காத்திருந்தனர்.அந்த நேரத்தில் அர்ச்சுனன் கிருஷ்ணரை பார்த்துகௌரவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள்தானே என்றார்.கிருஷ்ணர் சிரித்தபடி அந்த நூறுகௌரவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என சிரித்தார்.அந்த நேரத்தில் தர்மர்,யுத்த களத்தின் மையப் பகுதிக்கு வந்து,“வீரர்களே விரைவில் தர்மயுத்தம் தொடங்கவிருக்கிறது இப்போது நம் இரு தரப்பு வீரர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. எங்கள் அணியிலிருந்து யாரேனும் கௌரவர்களான துரியோதனன் அணிக்குச் செல்வதானால் செல்லலாம்.துரியோதனன் அணியிலிருந்து யாரேனும் பாண்டவர்களான எங்கள் அணிக்கு வருவதானாலும் வரலாம்”"வீர்ர்களே எந்த அணியில் தர்ம நெறி மிகுந்து இருக்கிறது என்று கண்டுணர்ந்து அதன் பொருட்டுத் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள விரும்பினால் இது கடைசி சந்தர்ப்பம். என்றார் மேலும் அப்படி அணி மாறுகிறவர்கள் மேல் இரு தரப்பினரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது.அப்படி் அணி மாறியவர்கள் அவரவர்கள் சார்ந்த புதிய அணியின் தரப்பில் போரிடுவார்கள்.’’ எனக் கம்பீரமாக அறிவித்து விட்டு தர்மர் சற்று நேரம் அமைதியாய் காத்திருந்தார்.தர்மனின் அறிவிப்பைக் கேட்டு அனைவரும் வியந்தார்கள். தர்மபுத்திரரின் அறிவிப்பு அவரது உயர்ந்த பண்பாட்டை இரு அணியினருக்கும் புலப்படுத்தியது.கெளரவர் தரப்பிலிருந்து ஒரு தேர் பாண்டவர் பக்கம் மெல்ல நகரத் தொடங்கியது.அதில் இருந்தவன் யுயுத்சு.துரியோதனன் அவனை கொல்ல வில்லை உயர்த்திய போதுபீஷ்மர் துரியோதனா அவனை கொல்லாதேஅவன் ஒருவன் நம் அணியைவிட்டு செல்வதால் நமக்கு இழப்பில்லை.போரினில் அவனை கொல்வோம் என கூறதுரியோதனன் சரி என்று சொல்லி வில்லை கீழ் இறக்கினார்.யுயுத்சு கெளரவர் படையில் ஓர் அதிரதி ஆக நியமிக்கப்பட்டான்.அதிரதியானவன் ஒரே சமயத்தில் 60,000 போர் வீரர்களை அழிக்கும் ஆற்றல் பெற்றவன்.கிருஷ்ணர் அர்ச்சுனா, யுயுத்சு சாதாரணப் படைவீரன் அல்ல. கௌரவர்களில் ஒருவன்!’’உங்கள் அனைவரையும் நிறைய முறை துரியோதனின் சூழ்ச்சியில் இருந்து காப்பாற்றியவன் இவன்தர்மநெறியிலிருந்து ஒரு சிறிதும் மாறாமல் இருப்பவன். அவனைப்போல் தர்மத்தை விடாமல் அனுசரிப்பவர்களுக்கு என்றும் என் துணை உண்டு.இவனது உயிரை இறுதிவரை நான் காப்பேன். இவன் உயிரை நான் காப்பதற்கு வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அதையும் இன்றைய போர் முடிந்த பிறகு சாவகாசமாகச் சொல்கிறேன் என்றார் கிருஷ்ணர்.முதல் நாள் போர் முடிந்து மாலை யுயுத்சுவை அணைத்து பேசியபடியே பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார் கிருஷ்ணர்."யுயுத்சு தங்கள் தந்தைக்குப் பிறந்தவன் என்றாலும் பணிப்பெண்ணின் மகன் என்பதால் இவன் பிற கௌரவர்களால் அலட்சியமாக நடத்தப்பட்டான். அதோடு விதுரனைப்போல் தர்ம நெறியிலேயே இவன் சிந்தனை சென்றதும்கூட, மற்ற கௌரவர்கள் இவனை வெறுக்கக் காரணமாயிற்று.தர்மநெறியைப் போற்றும் இவன் அதர்ம அணியில் தொடர்ந்து இருக்க விரும்பாததால் நம் அணிக்கு வந்துவிட்டான்.’’ என்றார்அதுசரி கண்ணா! எங்களைக் காப்பதுபோல இவன் உயிரையும் இறுதிவரை காப்பேன் என்றாயே? நீ அப்படிச் சொன்னதன் பின்னணி என்ன?’’ அர்ச்சுனன் கேட்டான் .‘‘அர்ச்சுனா! போரில் யுயுத்சுவைத் தவிர எஞ்சியுள்ள அத்தனை கௌரவ சகோதரர்களும் அழிக்கப்படுவார்கள். போர் முடிந்து சிறிது காலத்திற்குப் பிறகு திருதராஷ்டிரனும் காலமாவான்.மாமன்னன் திருதராஷ்டிரன் காலமாகும்போது, அவனுக்குக் கொள்ளி வைக்க ஒரே ஒரு பிள்ளையாவது மிஞ்ச வேண்டாமா? இதோ இந்த யுயுத்சு தான் திருதராஷ்டிரனுக்கு இறுதிக் கடன் செய்யப் போகிற அந்த ஒரே பிள்ளை!’’ எனக் கூறினார்கிருஷ்ணரின் தயவால் தர்மம் வென்றது.இந்திரப்பிரஸ்த அரசானாக யுயுத்சுவிற்கு முடி சூட்டினார் தர்மர் .திருதிராஷ்டிரன் மறைந்த பின் யுயுத்சு தன் தகப்பனாருக்கு அந்திம கடனை செய்தான்.அர்ச்சுனனின் பேரன் பரீஷத்திற்கு தகுந்த வயது வரும் வரை, அரசனாக நல்லாட்சி புரிந்து, அரசை பரீஷத்திடம் ஒப்படைத்தார் யுயுத்சு.
Added a post
மஹாபாரத யுத்தத்தில் தன்னுடைய தந்தை துரோணாச்சாரியரை ஏமாற்றிக் கொன்றதில் அஸ்வத்தாமன் மிகவும் கோபமடைந்தார். அவர் பாண்டவ சேனை மீது மிக பயங்கரமான ஒரு ஆயுதம் "நாராயண அஸ்த்ரம்" விட்டு விட்டார். இதற்கு மாற்றுபாயம் எதுவுமே கிடையாது. யாருடைய கைகளில் எல்லாம் ஆயுதம் உள்ளது அல்லது யுத்தம் செய்வதற்கு முயற்சி செய்கின்றார்களோ அவர்களைப் பார்த்து அவர்கள் மீது அக்னி மழை பொழியும். அவர்கள் அழிந்து விடுவார்கள். ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர் சேனைக்கு அவரவர் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு அமைதியாக கைகளைக் கட்டிக் கொண்டு நிற்குமாறு கட்டளையிடுகிறார். மேலும் மனதில் யுத்தம் செய்வதற்கான எண்ணம் கூட வரக் கூடாது இந்த அம்பு அதையும் கண்டறிந்து அவர்களை அழித்து விடும் என்று கூறினார்.நாராயண அஸ்த்ரம் மெதுமெதுவாக தனது நேரம் முடிந்தவுடன் அமைதி ஆகிவிட்டது. இந்த விதமாக பாண்டவ சேனை காப்பாற்றப் பட்டனர். இதன் உள்கருத்தைப் புரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். எல்லா இடங்களிலும் யுத்தம் வெற்றி அடைவதில்லை. நம்முன் இருக்கும் கிருமியிடமிருந்து தப்பிக்க கொஞ்ச காலம் அனைத்து வேலையையும் விட்டு விட்டு அமைதியாக கைகளைக் கட்டிக் கொண்டு மனதில் நல்ல எண்ணம் வைத்து ஓரிடத்தில் அமர்ந்து இருப்பவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். கிருமியை பற்றிய எண்ணம் கூட வரக் கூடாது. அது அதனுடைய நேரம் வரும் போது தானாக மறைந்து விடும் அல்லது அழிந்து விடும். இறைவனால் சொல்லப்பட்ட இந்த உபாயம் வீணாகி விடாது. ஆத்ம தந்தை சிவனை நினைப்போம். இறைவன் நம்முடன் இருக்கும் போது நம் வாழ்வு நன்றாக இருக்கும்.
Added a post
ஸ்ரீ கிருஷ்ணரின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது அவர் தலையில் அணிந்திக்கும் மயிலிறகுதான். ஆனால், கிருஷ்ணரிடம் அந்த மயில் இறகு வந்த கதையை நீங்கள் அறிவீர்களா? பகவான் கிருஷ்ணரை தரிசிக்கும்போது நிச்சயமாக அவரது கையில் இருக்கும் புல்லாங்குழலையும், சிரசை அலங்கரிக்கும் மயிலிறகையும் கவனிக்கத் தவற மாட்டோம். தனது அழகாலும், புல்லாங்குழல் இசையாலும் மக்கள் மனதை மயக்கும் கிருஷ்ணர் தமது சிரசை அலங்கரிக்க ஏன் குறிப்பாக மயிலிறகை தேர்வு செய்தார் என்பது தெரியுமா?திரேதா யுகத்தில் ஒரு சமயம் ஸ்ரீராமரும், சீதா தேவியும் காட்டில் இருந்தபொழுது அவர்களுக்கு மிகவும் தண்ணீர் தாகம் ஏற்பட்டது. அப்போது சீதை ராமரிடம், “எனக்குத் தண்ணீர் வேண்டும். எப்படியாவது தண்ணீர் எங்கே உள்ளது என்று கண்டுப்பிடியுங்கள்?” என்று கேட்டாள்.இதைக் கேட்ட ராமர் இயற்கை கடவுளான பூமித்தாயிடம் தண்ணீர் வேண்டி பிரார்த்தனை செய்தார். அப்போது அங்கே வந்த மயில் ஒன்று, “தண்ணீர் எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியும். என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்” என்று ராமரிடமும், சீதையிடமும் கூறியது.ஸ்ரீராமரும், சீதா தேவியும் வழித்தவறி சென்றுவிடாமல் இருக்க, மயில் தனது இறகை ஒவ்வொன்றாகப் பிய்த்து அது செல்லும் பாதையில் போட்டுக்கொண்டே சென்றது. எனவே, அதை சரியாக பின்தொடர்ந்து ராமரும், சீதா தேவியும் வந்துக்கொண்டிருந்தனர். ஒருவழியாக தண்ணீர் குளத்தைக் கண்ட ராமனும், சீதையும் ஆனந்தமாகத் தண்ணீரை அருந்திவிட்டு அங்கிருந்து திரும்ப வரும்பொழுது, வழிகாட்டிய மயில் தனது இறகுகளைப் பிய்த்துப் போட்டதால் இறந்து கிடந்தது.இதைக் கண்டு மனம் வருந்திய ராமபிரான், “என்னுடைய அடுத்தப் பிறவியிலும் உன்னை நான் மறக்க மாட்டேன்” என்று கூறினார். இதனால்தான் பகவான் கிருஷ்ணராக அவதரித்தபோது முன் அவதாரத்தில் வழிகாட்டிய மயிலின் தியாகத்தின் நினைவாக தனது சிரசில் மயிலிறகை சூடிக்கொண்டதாக ஐதீகம்.ஸ்ரீகிருஷ்ணரின் அன்பிற்கினிய ராதாவே தனது அன்பின் அடையாளமாக கிருஷ்ணருக்கு மயிலிறகை வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது. எப்படியிருந்தாலும், ஸ்ரீகிருஷ்ணர் மயிலிறகு சூடியிருப்பது அவருக்கு மேலும் அழகைக் கூட்டுகிறது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
Added a news
இன்றையதினம் யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை, இலந்தைக்குளம் பகுதியில் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் அவர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.00
Added a news
பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி என அழைக்கப்படும் செல்லையா பொன்னுச்சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார்.அன்னாரது உடலம் நாளையதினம் வெள்ளிக்கிழமை மாலை 04 மணிக்கு யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித்தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை இறுதி கிரியைகள் இடம்பெற்று, காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையில் அஞ்சலி உரைகள் நிகழ்வுகள் இடம்பெற்று, தகன கிரியைக்காக வேலணை சாட்டி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்
Added a news
பயனுள்ள பொது சேவைகளை உறுதி செய்வதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ளக அலுவல்கள் பிரிவு ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊழலைத் தடுப்பது, அரசாங்க நிறுவனங்களுக்குள் ஒருமைப்பாடு கலாச்சாரத்தை வளர்ப்பது, வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்தல், நெறிமுறை நிர்வாகத்தை மேம்படுத்துதல், சட்ட அமலாக்கத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்துடன் (CIABOC) ஒத்துழைப்பது இந்த பிரிவை நிறுவுவதன் முதன்மை நோக்கமாகும்.அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ளக அலுவல்கள் பிரிவை விசேட பிரிவாக அமைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.முதற்கட்டமாக, அனைத்து அமைச்சரவை அமைச்சுக்கள், மாகாண பிரதம செயலாளர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் இது நிறுவப்படும்.மேலும், இந்த உள்ளக அலுவல்கள் பிரிவுகளை ஸ்தாபிப்பது தொடர்பாக அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் எழுத்துமூலம் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
Added a news
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (19) உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ஒரு “சர்வாதிகாரி” என்று கண்டனம் செய்தார்.மேலும் அவர் அமைதியைப் பாதுகாக்க விரைவாக செயற்பட வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாவிடின் ஜெலென்ஸ்கி தனது நாட்டை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளக் கூடும் என்றும் எச்சரித்தார்.ட்ரம்பின் இந்த கருத்தானது இரு தலைவர்களுக்கிடையிலான பகையை ஆழப்படுத்தியதுடன் ஐரோப்பிய அதிகாரிகளையும் எச்சரித்தது.ரஷ்யாவின் 2022 படையெடுப்பிற்கு உக்ரேன் தான் காரணம் என்று ட்ரம்ப் கூறிய ஒரு நாளுக்குப் பின்னர் – ரஷ்யா - உக்ரேன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் அணுகுமுறை மொஸ்கோவிற்கு பயனளிக்கும் என்று ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க நட்பு நடுகளிடையே கவலைகளை அதிகரித்தது.அவர் ஜனாதிபதியாக ஒரு மாதத்திற்குள், போரில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் பிரச்சாரத்தை புட்டினுடனான தொலைபேசி அழைப்பு, சவுதி அரேபியாவில் உக்ரேனை ஓரங்கட்டிய மூத்த அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுக்கள் மூலம் முடிவுக்கு கொண்டுவந்தார்.இந்த நிலையில், புதன்கிழமை சமூக ஊடகங்களில் பதிவிட்ட ட்ரம்ப் ஜெலென்ஸ்கியை தேர்தல்கள் இல்லாத ஒரு சர்வாதிகாரி என்றும் சாடினார்.இதற்குப் பதிலளித்த உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha, தனது நாட்டை விட்டுக்கொடுக்க யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்றார்.ஜெலென்ஸ்கியின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2024 இல் முடிவடைய வேண்டும், ஆனால் ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பதிலளிக்கும் வகையில் உக்ரேன் 2022 பெப்ரவரியில் விதித்த இராணுவச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த முடியாது.சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்க - ரஷ்யா பேச்சுவார்த்தையில் கெய்வ் விலக்கப்பட்டதற்கு பதிலளித்த ஜெலென்ஸ்கி செவ்வாயன்று, அமெரிக்க ஜனாதிபதி மொஸ்கோவால் நிர்வகிக்கப்படுவதாக சாடிப் பேசினார். இதற்கு பதிலளிக்கும் விதமாகவே ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.இதனிடையே, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் புதன்கிழமை ட்ரம்பை தாக்குவதற்கு எதிராக ஜெலென்ஸ்கிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
Added a news
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சுகாதாரத் துறை ஊழியர்களின் கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் ஒன்றியம் (JCPSM) குற்றஞ்சாட்டியுள்ளது.இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சுகாதார அமைச்சருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என அதன் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.குறித்த கலந்துரையாடலை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, கல்வி வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் வண. பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிர்பார்த்த சம்பள அதிகரிப்பு இந்த வருட வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிர்பார்த்த சம்பள அதிகரிப்பு இந்த வருட வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என கல்வி வல்லுநர்கள் சங்கத்தினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
Added a news
இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான மகீஷ் தீக்ஷன ஒருநாள் தொடருக்கான பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஒருநாள் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான மகீஷ் தீக்ஷன முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.அத்துடன் குறித்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் இரண்டாவது இடத்திலும், நமீபியா அணியின் பெர்னார்ட் ஷோல்ட்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.இதேவேளை ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் சுப்மன் கில் முதலாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.மேலும் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் இரண்டாம் இடத்திலும், இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா மூன்றாமிடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.000
Added a news
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.00
Added a news
பாதாள உலககுழுவை சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கி சூடு மற்றும் கொலை, வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தக் கொலையை, தற்போது வெளிநாட்டில் வசிக்கும் குற்ற கும்பலை சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே, பட்டுவத்தே சாமர மற்றும் ஜூட் பிரியந்த ஆகியோர் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது டுபாய் மற்றும் பிரான்ஸில் மறைந்து வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கிடையில், பூசா சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவை பாதுகாக்க 12 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறப்பு படை அதிகாரிகள் கடமையில் இருந்துள்ளனர்.தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், பாதுகாப்பு குறைபாடு காரணமாக நீதிமன்ற வளாகத்திற்குள் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு நடந்ததா என ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவிடம் பல தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.நீதிமன்றத்திற்குள் நுழையும் அனைத்து நபர்களும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் ஆனால் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் கூறப்பட்டது.இந்தக் குறைபாட்டைப் பயன்படுத்திக் கொண்டு கொலையாளிகள் துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Added a news
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, ஒவ்வொரு மகாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025 ஜூன் 02 ஆம் திகதிமுதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாநகர சபை கட்டளைச் சட்டம் 252 இன் பிரிவு 10 இன் துணைப்பிரிவு (1) இன் பந்தி (அ) ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ. எச். எம். எச். அபயரத்னவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதன்படி 27 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும 274 பிரதேச சபைகள் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளன.மேலும், உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல்களை, ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையகம் பரிசீலித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது000
Added a post
மேஷம் ஆரோக்கியத்தில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். தேவையில்லாத அலைச்சல் மூலம் சோர்வு உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுபவம் மேம்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் ரிஷபம்திறமைக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தி உண்டாகும். நண்பர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாகும். வர்த்தகப் பணிகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றம் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சில்வர் மிதுனம்வெளிவட்டாரங்களில் மதிப்புகள் உயரும். உடன் இருப்பவர்கள் ஆதரவால் சில காரியங்கள் நடைபெறும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான சில வியூகங்களை அமைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். இடம் பூமியால் நினைத்த லாபங்கள் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பழுப்புகடகம்குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். மனதளவில் இருந்துவந்த தயக்கத்தை தவிர்க்கவும். உணவு செயல்களில் கட்டுப்பாடு வேண்டும். கணவன் மனைவிக்குள் புரிதல் உண்டாகும். வணிக நடவடிக்கைகளில் லாபம் மேம்படும். யதார்த்தம் தாண்டிய கற்பனைகளை குறைத்து கொள்ளவும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் சிம்மம்அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சுற்றுலா துறைகளில் புதிய மாற்றம் ஏற்படும். அனுபவம் மிக்கவர்களின் அறிமுகங்கள் உண்டாகும். சுதந்திர மனப்பான்மை அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளம்சாம்பல் கன்னிவியாபார பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் கைகூடும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வாகன பராமரிப்புச் செலவுகள் நேரிடும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவுகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். நம்பிக்கை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்துலாம்சிந்தனை திறனில் மாற்றம் உண்டாகும். பணிகளில் மந்தமான போக்கு காணப்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். திட்டமிட்டு செயலாற்றுவது முன்னேற்றத்தை தரும். தியானம் மேற்கொள்வது மன பதட்டத்தை குறைக்கும். துணையுடன் அனுசரித்துச் செல்லவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். முயற்சி ஈடேறும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் விருச்சிகம்உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரத்தில் இழுபறியான சூழல் உண்டாகும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஊடக துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் ஒரு விதமான சோர்வு உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு தனுசுகுடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் அலைச்சல் மேம்படும். ஆக்கப்பூர்வமான நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மகரம்உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பிரச்சனைகளின் காரணத்தை கண்டறிவீர்கள். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அயல்நாட்டு பயண வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு கும்பம்வியாபார ரீதியாக இருந்துவந்த தடைகள் விலகும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். பாகப் பிரிவினைகளில் பொறுமையுடன் செயல்படவும். மனை சார்ந்த செயல்களால் ஆதாயம் உண்டாகும். எதிலும் சகிப்பு தன்மையுடன் செயல்படவும். புதிய முயற்சிகளில் எண்ணிய முடிவுகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு மீனம்நண்பர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வாழ்க்கை துணைவரின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். காப்பீடு சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் காணப்படும். தாமதம் மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
Added a post
குரோதி வருடம் மாசி மாதம் 8 ஆம் தேதி வியாழக்கிழமை 20.2.2025.சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.இன்று காலை 08.03 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.இன்று காலை 11.46 வரை விசாகம். பின்னர் அனுஷம்.ரேவதி, அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
Added a post
ஒரு முதியவர், நியூயார்க் நகரின் சாலை சந்து ஒன்றில் நடந்து போய்க் கொண்டிருந்தார்.திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.அவருக்கு நினைவு தப்பி இருந்தது. சிகிச்சை செய்த நர்ஸ் சிறிது விசாரணைக்குப்பின், அந்த முதியவருக்கு ஒரு மகன் இருப்பதையும், அவன் வடகரோலினாவில் தங்கியிருந்த ஒரு கப்பல் குழுவினருடன் இருப்பதையும் அறிந்து கொண்டார்.உடனே அந்தக் குழுவின் தலைவரைத் தொடர்பு கொண்டு, அந்த மாலுமியை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கக் கேட்டுக் கொண்டார். அதன்படி அந்த மாலுமியும் விரைந்து வந்தார்.அவனை முதியவரின் படுக்கை அருகில் அழைத்து சென்றனர். நினைவு புரண்டபடி இருந்த முதியவரிடம், "உங்கள் மகன் வந்திருக்கிறார்,'' என்றனர்.அதற்குள் அவருக்கு மீண்டும் நினைவு தப்பிவிட்டது. ஆனால், அவரது கை மட்டும் மெதுவாக நீண்டு மகனது கைகளை இறுகப் பற்றிக்கொண்டது.மாலுமி அந்த கையை மென்மையாய் ஏந்தியபடி அடுத்த சிலமணி நேரம் அவர் அருகிலேயே இருந்தார்.நர்ஸ்கள் மாறி, மாறி வந்தனர்."நீங்கள் வேண்டுமானால் வெளியே போய் சற்றே ஓய்வெடுக்கலாமே!'' என்றனர்.ஆனால், அந்த மாலுமி அசைய வில்லை.பின்னர் அந்த முதியவரின் மூச்சு அடங்கியது. பின்னர் அந்த மாலுமி நர்ஸிடம்,"யார் அந்த முதியவர்?'' என்று விசாரித்தார்."அவர் உங்கள் அப்பா இல்லையா?'' என்று வியப்புடன் கேட்டார் நர்ஸ்."இல்லை! ஆனால், அவர் மகனின் அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்கியதாகத் தெரிந்தது. அதனால் தான் சில மணி நேரம் அவரது மகனாக இருந்தேன்,'' என்றார் மாலுமி.அன்புக்கு ஈடு இந்த உலகில் எதுவுமே இல்லை