கனடாவில் வம்சாவளி அடிப்படையில் குடியுரிமை பெறும் புதிய சட்டத்தின் கீழ் சான்றிதழ்களைப் பெற்ற நூற்றுக்கணக்கானோரின் குடியுரிமை சான்றிதழ்களை மத்திய அரசு திடீரென திரும்பக் கேட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டு வம்சாவளியினர் தங்களது மூதாததையர்களாக இருக்கிறார்கள் என்பதற்காகவே ஒருவர் தானாகவே குடியுரிமை பெற தகுதியானவர் என்று அர்த்தமாகாது என குடிவரவுத் துறை அமைச்சர் லீனா டயப் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தலைமுறையிலும் உங்களுக்கும் கனடாவுக்குமான தொடர்பை நீங்கள் திட்டவட்டமாக நிரூபிக்க வேண்டும் எனவும் வெறும் மரபியல் இணையதளங்களின் (Genealogy websites) தரவுகள் மட்டுமே இதற்குப் போதாது எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின்படி, டிசம்பர் 15, 2025-க்கு முன் பிறந்தவர்கள், தங்களின் முன்னோர்கள் கனேடியர்கள் என்பதை நிரூபித்தால் குடியுரிமை பெற முடியும் என தெரிவித்துள்ளார்.
ஆனால், கடந்த வார இறுதியில் இந்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை சான்றிதழ் பெற்ற "குறிப்பிட்ட எண்ணிக்கையிலான" நபர்களுக்கு கனடா குடிவரவுத் துறை அதிர்ச்சியூட்டும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், தங்களிடம் உள்ள குடியுரிமை சான்றிதழ்களை உடனடியாக அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அசல் ஆவணங்களையோ அல்லது அவற்றை சமர்ப்பிக்க முடியாததற்கான உரிய விளக்கங்களையோ தராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
அரசின் இந்த திடீர் முடிவால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒரு முதிய முருக பக்தரிடம் ஒரு இளைஞன் கேட்டான்.
“தாத்தா... ஏன் நீங்கள் தினமும் காலை மாலையும் கந்த சஷ்டி கவசம் படிக்கிறீர்கள்? அதனால் என்ன பலன் கிடைக்கிறது?”
அந்த முதியவர் மெதுவாகப் புன்னகைத்தார்.
“மகனே... கந்த சஷ்டி கவசம் என்பது வெறும் பாடல் அல்ல. அது முருகப் பெருமான் நமக்கு அளித்த ஆன்மீகக் கவசம். அதை உணர்ந்து படித்தால் வாழ்க்கையே மாறும்.”
அந்த வார்த்தைகள் அந்த இளைஞனின் மனதில் ஆழமாக பதிந்தன.
உண்மையில், முருக வழிபாடு என்றாலே பெரும்பாலான பக்தர்களின் நினைவிற்கு முதலில் வருவது கந்த சஷ்டி கவசம்தான்.
பலர் அதை ஒரு பக்திப் பாடலாக மட்டுமே கருதுகின்றனர்.
ஆனால், ஆன்மீக அறிஞர்கள் கூறுவதன்படி, கந்த சஷ்டி கவசத்தின் ஒவ்வொரு சொல்லும் தெய்வீக அதிர்வுகளைக் கொண்ட மந்திர சக்தி வாய்ந்த வார்த்தைகளாக அமைந்துள்ளன.
அதனால் தான் நூற்றாண்டுகளாக கோடிக்கணக்கான பக்தர்கள் இந்த கவசத்தை பக்தியுடன் பாடி வருகின்றனர்.
கந்த சஷ்டி கவசத்தை இயற்றியவர் யார்?
கந்த சஷ்டி கவசத்தை இயற்றியவர் ஸ்ரீ பாலதேவராய சுவாமிகள்.
முருகப் பெருமானின் அருளால் அவர் இந்த அற்புதமான கவசத்தை உலகிற்கு அளித்தார்.
இன்று அனைவரும் அறிந்திருக்கும்:
"சஷ்டியை நோக்க சரவணபவனார்..."
என்று தொடங்கும் கந்த சஷ்டி கவசம் திருச்செந்தூர் முருகப் பெருமானுக்காக இயற்றப்பட்டது.
பலருக்குத் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், முருகனின் பிற திருத்தலங்களுக்காகவும் தனித்தனி கவசப் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.
ஆனால் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவசம்தான் உலகம் முழுவதும் அதிகம் பாடப்படும் கவசமாக விளங்குகிறது.
ஏன் இதை "கவசம்" என்று அழைக்கிறார்கள்?
போருக்குச் செல்லும் வீரன் தனது உடலைப் பாதுகாக்க கவசம் அணிவான்.
அதேபோல், மனிதன் எதிர்கொள்ளும் பயம், கவலை, எதிர்மறை எண்ணங்கள், மனச்சோர்வு, துன்பங்கள் ஆகியவற்றிலிருந்து மனதைப் பாதுகாக்கும் ஆன்மீகக் கவசமாக இது கருதப்படுகிறது.
அதனால் தான் இதற்கு "கந்த சஷ்டி கவசம்" என்று பெயர் வந்தது.
கந்த சஷ்டி கவசம் படிக்கும் சரியான முறை
கந்த சஷ்டி கவசத்தின் முழு பலனையும் பெற சில ஆன்மீக ஒழுக்கங்களை கடைப்பிடிப்பது சிறப்பாக கருதப்படுகிறது.
குளித்து உடல் மற்றும் மனத் தூய்மையுடன் அமர வேண்டும்.
சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.
முருகப் பெருமானுக்கு முன் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
நெற்றியில் திருநீறு அல்லது குங்குமம் அணிந்திருக்க வேண்டும்.
மனதை அமைதிப்படுத்தி முருகனை தியானிக்க வேண்டும்.
ஒவ்வொரு சொல்லையும் நிதானமாகவும் தெளிவாகவும் உச்சரிக்க வேண்டும்.
முடிந்தவரை அதன் அர்த்தத்தை உணர்ந்து படிக்க வேண்டும்.
ஒரு முக்கியமான ஆன்மீக ரகசியம்
பலர் கந்த சஷ்டி கவசத்தை படிக்கும் போது:
"எனக்கு வேலை கிடைக்க வேண்டும்..."
"என் கடன் தீர வேண்டும்..."
"என் பிரச்சனை நீங்க வேண்டும்..."
என்று எண்ணிக்கொண்டே படிப்பார்கள்.
ஆனால் பல ஆன்மீக குருமார்கள் கூறுவது என்னவென்றால், முதலில் முழுமையான சரணாகதியுடன் முருகனை நினைத்து படிக்க வேண்டும் என்பதே.
ஏனெனில் கந்த சஷ்டி கவசத்திலேயே பக்தனுக்குத் தேவையான அனைத்து நன்மைகளையும் முருகப் பெருமான் அருள்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த நாட்களில் படிப்பது சிறப்பு?
முருக பக்தர்கள் பலர் தினமும் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் படிக்கிறார்கள்.
அவ்வாறு முடியாதவர்கள்:
செவ்வாய்க்கிழமை
சஷ்டி திதி
கிருத்திகை நட்சத்திர நாள்
தைப்பூசம்
வைகாசி விசாகம்
பங்குனி உத்திரம்
போன்ற முருகனுக்குரிய புனித நாட்களில் படிக்கலாம்.
பக்தர்கள் நம்பும் பலன்கள்
கந்த சஷ்டி கவசத்தை பக்தியுடன் படித்து வருபவர்கள் பல ஆன்மீக அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
அவர்களின் நம்பிக்கையின்படி:
மன அமைதி அதிகரிக்கும்.
தன்னம்பிக்கை வளரும்.
பயம் குறையும்.
எதிர்மறை எண்ணங்கள் விலகும்.
இறைநம்பிக்கை வலுப்படும்.
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
வாழ்க்கையை எதிர்கொள்ளும் மன உறுதி கிடைக்கும்.
முருகப் பெருமானின் அருள் கிடைத்த உணர்வு உருவாகும்.
செவ்வாய்க்கிழமை வழிபாட்டின் சிறப்பு
பல முருக பக்தர்கள் செவ்வாய்க்கிழமை அன்று மூன்று முறை கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பானது என்று கருதுகின்றனர்.
அதேபோல் சஷ்டி தினத்தில் விரதம் இருந்து முருகனை தியானித்து கவசம் படிப்பதும் மிகவும் புனிதமான வழிபாடாக பார்க்கப்படுகிறது.
உண்மையான பலன் என்ன?
கந்த சஷ்டி கவசம் படிப்பதன் மிகப்பெரிய பலன் வெளிப்புற உலகில் நடக்கும் மாற்றங்கள் மட்டுமல்ல.
மனதிற்குள் நிகழும் மாற்றங்கள்தான்.
கவலையால் நிரம்பிய மனம் அமைதியாக மாறும்.
பயத்தால் நிரம்பிய மனம் தைரியமாக மாறும்.
சந்தேகத்தால் நிரம்பிய மனம் நம்பிக்கையால் நிரம்பும்.
அந்த மாற்றமே முருகனின் அருளின் முதல் அடையாளம்.
இறுதியாக...
கந்த சஷ்டி கவசம் என்பது வெறும் பாடல் அல்ல.
அது பக்தனின் மனதையும், ஆன்மாவையும் முருகனின் திருவடிகளுடன் இணைக்கும் ஒரு புனிதப் பாலம்.
அதை அர்த்தம் புரிந்து, பக்தியுடன், நம்பிக்கையுடன் படிக்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முருகப் பெருமான் நிச்சயமாக தனது அருளொளியைப் பொழிவார்.
ஓம் சரவணபவ!
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த பணியில் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
ரிஷபம்
புதிய யுக்திகளால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். நவீன தொழில்நுட்ப கருவிகளை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களில் இருந்த தடைகள் மறையும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகப் பணிகளில் திருப்தியான சூழல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். சூழ்நிலைக்கு ஏற்ப விட்டு கொடுத்து செல்லவும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
கடகம்
குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தன வரவுகள் மூலம் சேமிப்பு மேம்படும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் குழப்பமான சூழல் ஏற்படும். வர்த்தக செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பொன் பொருள்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத் தன்மை ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது விவேகம் வேண்டும். இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும். கால்நடை சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். முதலீடு விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கன்னி
உத்தியோக பணியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். உறவினர்கள் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைகளில் தெளிவான முடிவுகள் பிறக்கும். தொழில் சார்ந்த பயணம் மூலம் மனதில் நினைத்த காரியம் ஈடேறும். சமூகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
துலாம்
அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வர்த்தக பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபார நிமித்தமான புதிய நபர்களின் ஒத்துழைப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு தெளிவும் புத்துணர்ச்சியும் ஏற்படும். வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி
விருச்சிகம்
ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தந்தை வழி சொத்துக்களில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
தனுசு
மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் விவேகம் வேண்டும். வாகன பழுதுகளை சீர் செய்தீர்கள். உணர்ச்சி வேகம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருப்பது நல்லது. செயல்களின் தன்மை அறிந்து செயல்படவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மகரம்
பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். முகத்தில் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புதுவிதமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி
கும்பம்
விருந்தினர்களின் வருகைகள் ஏற்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் அலைச்சலும் மகிழ்ச்சியும் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பட்டுகள் வரும். பழைய நினைவுகள் மூலம் இன்பமான சூழல் ஏற்படும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் மூலம் மேன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 3 ஆம் தேதி புதன்கிழமை 17.6.2026
இன்று அதிகாலை 03.30 வரை துவிதியை. பின்னர் திரிதியை.
இன்று மாலை 06.06 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.
இன்று அதிகாலை 02.57 வரை விருத்தி. பின்னர் துருவம்.
இன்று அதிகாலை 03.30 வரை கௌலவம். பின்னர் மாலை 03.01 வரை தைத்தூலம். பிறகு கரசை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர். புதியவர்களின் அறிமுகம் கிட்டும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரரீதியாக சில முடிவுகளை எடுப்பீர்.
ரிஷபம்: செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிப்பீர். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பர். சொந்த ஊர் விசேஷங்களுக்கு தலைமை தாங்குவீர். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.
மிதுனம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பீர். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பயணங்கள் அலைச்சல் தரும். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
கடகம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாகனப் பழுது நீங்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும்.
சிம்மம்: கடந்தகால சுகமான அனுபவங்களை நினைத்து மனதில் சந்தோஷம் பொங்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலக பணிகளை முடிப்பீர்கள். வியாபாரரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.
கன்னி: குடும்பத்தில் நிலவிய காரசாரமான விவாதங்கள் மறையும். பிள்ளைகளின் சாதனைகளால் மதிப்புயரும். நல்லவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர்.
துலாம்: உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பர். பழைய சொத்து சிக்கலில் ஒன்று தீரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலக மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்.
விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். பிள்ளைகளால் செலவு உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். எதிலும் கவனம் தேவை. அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் அதிகம் உழைக்க வேண்டி வரும். அலைச்சல் இருக்கும். லாபம் கூடும்.
மகரம்: பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். மூத்த சகோதரிகள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கும்பம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தாய்வழி உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். வியாபா ரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவர்.
மீனம்: தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் உண்டு. பிள்ளைகளுடன் சென்ற பயணங்கள் திருப்தி தரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரம் லாபம் தரும்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 16.6.2026
இன்று காலை 06.58 வரை பிரதமை. பின்னர் துவிதியை.
இன்று இரவு 07.31 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.
இன்று காலை 07.17 வரை கண்டம். பின்னர் விருத்தி.
இன்று காலை 06.58 வரை பவம். பின்னர் மாலை 05.14 வரை பாலவம். பிறகு கௌலவம்.
இன்று அதிகாலை 05.53 வரை சித்தயோகம். பின்னர் இரவு 07.31 வரை மரண யோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை


