நடிகை அனுபாமா பரமேஸ்வரன் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.
தனது நடிப்பால் தென்னிந்தியாவில் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். நடிகை அனுபாமா டைட்டான ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் இருக்கும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு லைக்ஸ் அள்ளிக்கொண்டுப் போகிறது.
சித்தர்கள் கூறிய கற்பகத்தரு மூலிகைகளில் ஒன்று, நன்னாரி.
கிருஷ்ணவல்லி, அங்கார மூலி, அனாதமூலா, நறுக்கி மூலம், பாதாள மூலி, நறுநீண்டி, சுகந்த மூலி, காணாறுசாரி என, வேறு பெயர்களும் இதற்கு உள்ளது. நன்னாரி, கொடியாக தரையில் படரும் தாவரம்.
இதன் வேர் தான் மருத்துவ குணம் கொண்டது. நறுமணமிக்கது, இனிப்பும், சற்று கசப்பும் கலந்த சுவையுள்ளது. இந்தச் செடியின் வேரை உலர்த்தி பதப்படுத்தி தயாராவது தான், நன்னாரி சர்பத்.
பொதுவாக கோடையில் தாகத்தையும், உஷ்ணத்தையும் தணிக்கக் கூடியதாகவும், பித்தத்தை குறைக்கக் கூடியதாகவும் இருக்கும் நன்னாரி, ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது; 'ஆரத்ரைட்டிஸ்' மூட்டு வலிகளையும் குறைக்கிறது.
படர்தாமரை, சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களுக்கு நிவாரணம் தருகிறது. சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வை தருகிறது. உடலில் உள்ள வெப்பத்தை அகற்ற உதவுவதுடன், உள்ளுறுப்புகளில் உண்டாகும் புண்களையும் ஆற்றுகிறது.
ரத்தத்தில் உள்ள கால்சியம் ஆக்சலேட்டு அளவை குறைக்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமின்றி, பாக்டீரியா தொற்றுக்களை அகற்றி, உடல் நச்சுக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.
நன்னாரியை நீரில் ஊற வைத்து அல்லது வேகவைத்து வெயில் காலங்களில் சாப்பிட்டு வர, சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கலாம். 20 கிராம் நன்னாரி வேரை இடித்து, இரண்டு லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து, ஆறியதும் பருகி வந்தால் ரத்தம் சுத்தமாகிறது. நீடித்த முகப்பரு, அரிப்பு, ஒவ்வாமை மற்றும் கரப்பான் போன்றவை நீங்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.
நன்னாரி வேர் பட்டையை நீரில் ஊற வைத்து வடிகட்டி பாலும், சர்க்கரையும் கலந்து கொடுக்க, சளியால் அவதிப்படும் குழந்தைகள் விரைவில் நலம் பெறுவர்.
நன்னாரி வேர் பொடியை, தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. செரிமான பிரச்னைகள் சரியாகிறது. வயிற்றுப்புண், சிறுநீர் கடுப்பு மற்றும் எரிச்சல் சரியாகிறது. மஞ்சள் காமாலை பாதிப்புகள் நீங்குகிறது.
நன்னாரி வேரில் காணப்படும் கிழங்கை உலர்த்தி காய வைத்து, ஊறுகாய் செய்து சாப்பிட்டால், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய், மூலம், ஒவ்வாமை சரியாகிறது. நன்னாரி வேரை பொடி செய்து, கொத்தமல்லி சேர்த்து அரைத்து சாப்பிட்டால், வயிறு, குடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகிறது.
நன்னாரி இலையை நெய்யில் வதக்கி, மிளகும், இந்துப்பு மற்றும் சிறு புளி சேர்த்து துவையல் செய்து சாப்பிட, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னை சரியாகிறது.
நன்னாரியில், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் ஆன்டி டியூமர் தன்மை உள்ளதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, மார்பக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், உடல் சோர்வு இருக்கும்போது நன்னாரி பொடியை, எலுமிச்சை சாறு அல்லது ஆரஞ்சு சாறுடன் கலந்து சாப்பிட, சோர்வு மறைந்து புற்றுநோய் ஆபத்திலிருந்து தப்பலாம் என்கின்றனர்.
பச்சை நன்னாரி வேரை, 20 கிராம் தட்டி, 200 மி.லி., நீரில், ஒருநாள் ஊறவைத்து வடி கட்டி, 100 மி.லி.,யை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பித்த நோய், நீரிழிவு, உடல் சூடு அதிகமாவதால் வரும், மேக நோய் தீரும். சொறி சிரங்கு மறையும், ஆண்மைக்குறைவு சரியாகிறது.
நன்னாரி வேரை பொடியாக்கி, சோற்றுக்கற்றாழையுடன் கலந்து சாப்பிட விஷக்கடிகள் குணமாகிறது.
நன்னாரி, தனியா, சோம்பு இவை அனைத்தும் சம அளவு எடுத்து பொடி செய்து தினமும் சாப்பிட்டு வர, உடல் பருமன் குறையும். நெல்லிக்கனி சாற்றில் நன்னாரி வேரை ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து சாப்பிட, இதயம் வலுவடையும்.
×பொண்ணாடி நீ…உன்னை என் பையனுக்கு கட்டிவைச்சதுக்கு…என் புத்தியை செருப்பாலேயேஅடிச்சிக்கணும்×
×கொஞ்சம் பொறுங்கள் அத்தை… செருப்பையும்…செல்போனையும் எடுத்து வரேன்×……
×எதுக்கடிஅதெல்லாம்×….
×செல்போனில் நீங்க செருப்பாலே அடிச்சிக்கிறதை….வீடியோ எடுத்து பேஸ் புக்கிலே போட்டாக்கா லைக்ஸ் அள்ளும்×….
மற்ற வாழைப்பழங்களை விட செவ்வாழை மிகவும் சுவையாக இருப்பதோடு இதில் ஊட்டச்சத்தும் அதிகமாக இருக்கிறது. தினசரி செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
நன்றாக பழுத்த பிறகு சாப்பிடுங்கள் : எப்போதும் செவ்வாழைப் பழத்தை நன்றாக பழுத்த பிறகு சாப்பிடுங்கள். இல்லையென்றால் அதன் சுவை நன்றாக இருக்காது.
உடல் எடையை குறைக்கும் : மற்ற பழங்களை விட செவ்வாழைப்பழத்தில் குறைவான கலோரிகளே உள்ளன. இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் சாப்பிட்டதும் உடனே வயிறு நிரம்பிவிடுகிறது.
சிறுநீரக செயல்பாட்டிற்கு நல்லது : செவ்வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. அடிக்கடி செவ்வாழை சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் புற்றுநோய் வரும் ஆபத்தை தவிர்க்கலாம். இதிலுள்ள கால்சியம் எலும்பை வலுப்படுத்துகிறது.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட உதவுகிறது : சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள், செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் நிகோடின் உட்கொள்வதை குறைக்க முடியும். புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட நபர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை குறைக்க இந்தப் பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உதவுகிறது.
சருமத்தை பாதுகாக்கிறது : அடிக்கடி செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் சருமத்தில் ஏற்படும் வடுக்கள் துளைகள் சரியாகின்றன. மேலும் இந்தப் பழத்தில் 75 சதவிகிதம் நீர் மற்றும் ஆண்டி ஆக்ட்சிடெண்ட் உள்ளதால் நமது சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது.
ரத்தத்தை சுத்திகரிக்கிறது : செவ்வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் பி-6 ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ரத்தசோகை நோய் உள்ளவர்கள் தினமும் 2 அல்லது 3 செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டால் அவர்களின் சிவப்பு ரத்த அனுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தலைமுடிக்கு நல்லது : செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் தலைமுடியில் உள்ள பொடுகு குறைகிறது. குளிர்காலத்தில் தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெய்யோடு கலந்து செவ்வாழைப் பழத்தை தலையில் தேய்த்தால் தலைமுடிக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும்.
மூலத்தை குணப்படுத்தும் : மலச்சிக்கலை போக்குவதில் மிகவும் உதவியாக இருக்கிறது செவ்வாழைப் பழம். மேலும் நாள்பட்ட மலச்சிக்கல், மூலம் ஆகியவற்றை குணப்படுத்தவும் செவ்வாழைப் பழம் உதவுகிறது. தினமும் மதிய வேளையில் செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் செரிமானம் மேம்படுகிறது.
மன அழுத்தத்தை குறைக்கும் : செவ்வாழைப் பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது உங்களின் இதயத்துடிப்பை லேசாக்கி உடலில் உள்ள நீர்த்தன்மையை நிலைப்படுத்துகிறது. தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
ஒரு சிலந்தி வலையில் ஒரு கொசு சிக்கிக்கொண்டது.
கொசுவுக்குத் தெரிந்துவிட்டது தன்னுயிர் போக போகிறது என்று.
எதற்கும் கேட்டுப் பார்க்கலாம் என்று பேச ஆரம்பித்தது.
கொசு: ஓ சிலந்தியே, நீ என்ன வலை விரித்து உட்கார்ந்து இருக்கிறாய் என்னைப் போன்ற அப்பாவிகளை சிறை பிடிக்கிறாய்.
சிலந்தி (சிரிப்பு)
கொசு: பொதுவாக வலைவிரித்து ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் தானே தேட வேண்டும்? தேடிப்பிடிக்க வேண்டும்?
அப்படிப் பார்த்தால் நீ இன்னொரு பெண் சிலந்தியைத் தானே பிடித்திருக்க வேண்டும் என்னை ஏன் பிடித்தாய், நான் ஒரு கொசு. நீயோ சிலந்தி.
சிலந்தி: (கோபத்துடன்) நீ என்ன மனிதனைப்போல பேசுகிறாய் ? நான் என்ன மனிதனா, வலைவிரித்து, துணை தேடிப் பிடிக்க?
கொசு : ஆஹா ன்…, .இவன் எதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டான் போல இருக்கே? (மனசுக்குள்)
அப்படி என்றால் இரை தேடுவதற்காக வலை விரித்து இருக்கிறாயா?
நான் எல்லாம் பறந்து திரிந்து அலைந்து தான் இரை தேடுகிறேன், இப்படி உன்னைப்போல் வீட்டில் இருந்துகொண்டே இரை தேடுவதில்லை.
அதோ கீழே உட்கார்ந்து இருக்கிறானே அவனைப் போல நீ ஒர்க் ஃப்ரம் ஹோம் (WFH)செய்கிறாயா?
சிலந்தி :அவன் ஒண்ணும் வொர்க் ஃப்ரம் ஹோம் செய்யவில்லை. காலையிலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
அவன்தான் நீ சொன்ன மாதிரி வலைவிரித்து வலைத்தளத்தில் துணை தேடிக் கொண்டிருக்கிறான்.
கொசு; நானும் இப்போதுதான் அவனைக் கடித்து விட்டு வந்தேன். வெட்டிப்பயல். சரி என்னை நீ தின்னப் போகிறாயா? என்னை விட்டு விடேன்…
சிலந்தி : முடியாது முடியாது.
கொசு : நீ தனியாக தானே இருக்கிறாய் ஒரு துணை தேடிக் கொள்ளேன். ஒரு பெண் சிலந்தி வந்து மாட்டும் வரை காத்திரு. என்னை விட்டுவிடு. நான் உனக்கு நல்ல வார்த்தை சொல்லி இருக்கிறேனே
சிலந்தி; நீ மனிதர்களை கடித்ததால் உனக்கும் அவர்கள் இரத்தம் ஏறி அவர்கள் புத்தி வந்து விட்டது. இப்படி எல்லாம் சிந்திக்கிறாய். நானே ஒரு பெண் சிலந்தியிடம் இருந்து தப்பித்து வந்து இங்கே தனியாக வலை விரித்து உட்கார்ந்து இருக்கிறேன்.
கொசு: நல்லதுக்கே காலம் இல்லை. அதற்கு அந்த மனிதன் கையாலேயே செத்திருக்கலாம். எனக்கு நேரமே சரியில்லை அந்த ஜோதிடரை போய் கடித்து வைக்க வேண்டும். இப்போ என்னை விட்டுவிடு. நாம்தான் நண்பர்கள் ஆகி விட்டோமே?
இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டே கீழே லேப்டாப் பார்த்துக் கொண்டிருந்தவன் மனம் மாறியது. சிலந்தியின் பேச்சு சிந்தனையைத் தூண்டியது.
உடனே மேட்ரிமோனி ஐடி ஓபன் செய்து, தப்புத்தப்பாக தன்னைப் பற்றிய ஆஹா ஓஹோவென்று தகவல் கொடுத்து வைத்திருந்ததை எல்லாம் மாற்றி உண்மைகளாக எழுதி வைத்தான்.
அப்புறம் என்ன?
அடுத்த நாளே நல்ல பெண் கிடைத்து விட்டது.
சுபம்.
இதுபோன்ற நீதிக்கதைகளை எழுதினால் மனிதன் திருந்த வாய்ப்பு உள்ளது..
கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் 29 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து மாலை 6 மணியளவில் குயின் மேற்கு வீதி மற்றும் மெக்லாகின் வீதியில் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் சாலையை கடந்து கொண்டிருந்த போது வாகனம் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் பின்னர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, வாகன ஓட்டுநர் விபத்தில் ஈடுபட்டதை உணர்ந்தாரா என்பது பற்றியும் விசாரிக்கப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் வாகனத்தை நிறுத்திய பின்னர் ஓட்டுநர் அங்கிருந்தே ஒத்துழைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தை் கண்டவர்கள் அல்லது தொடர்புடைய தகவல்கள் உள்ளவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீது வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
கரீபியனில் அமைந்துள்ள தீவு நாடு கியூபா. அந்நாட்டின் அதிபராக மிகுல் டியாஸ் கனெல் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
கியூபாவுக்கு வெனிசுலா, மெக்சிகோ போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வந்தன. சமீபத்தில் வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தது.
இதையடுத்து, வெனிசுலாவில் இருந்து கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீது வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
டிரம்ப் மிரட்டலை தொடர்ந்து கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதை மெக்சிகோ தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார்.
63 வயதான சாரா முல்லாலி, ஒரு புற்றுநோய் சிகிச்சை செவிலியராகப் பணியாற்றிப் பின்னர் மதகுருவாக மாறியவர்.
சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இவரது நியமனம், நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்ற சட்டபூர்வமான தேர்தல் உறுதிப்படுத்தல் நிகழ்வின் மூலம் நேற்று உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
இங்கிலாந்து திருச்சபை 1994 இல் பெண்களை மதகுருமார்களாகவும், 2015 இல் பெண் ஆயர்களை நியமிக்கவும் அனுமதித்தது. கத்தோலிக்க திருச்சபை என்றும் பெண்களை மதகுருமார்களாக அனுமதிக்காத நிலையில், இது ஒரு மிகப்பெரிய சமூக மாற்றமாக விமர்சகர்களால் கருதப்படுகின்றது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்:
குடும்ப வருமானத்தை உயர்த்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களைக் கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சுணக்கம் காணப்படும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
ரிஷபம்:
எதிர்ப்புகளையும், தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவு திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக நீடித்த குழப்பநிலை நீங்கும்.
மிதுனம்:
குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலக பணிகளில் அலட்சியம் வேண்டாம். நிதானமுடன் செயல்படுவது நல்லது.
கடகம்:
மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது முடித்துக் காட்டுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும்.
சிம்மம்:
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழல் காணப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி:
கணவன் - மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். பால்ய நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.
துலாம்:
எடுத்த பணியை மனநிறைவுடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் தெரியும். அரசு அதிகாரிகளுடன் சந்திப்பு நிகழும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். தாயாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்:
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். யாருக்கும் எந்த உத்தரவாதமும் தரவேண்டாம்.
தனுசு:
சவாலான காரியங்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும். சகோதரர் வகையில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
மகரம்:
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்துசேரும்.
கும்பம்:
சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராக இருக்கும். சிலர் அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள்.
மீனம்:
மன குழப்பங்கள் விலகி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் மத்தியில் பேசும்போது நிதானம் அவசியம். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். வெளியூர் பயணம் அலைச்சலை தரும்.
விசுவாவசு வருடம் தை மாதம் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 30.1.2026.
இன்று காலை 10.03 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.
இன்று அதிகாலை 04.28 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை
இன்று மாலை 04.26 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம்.
இன்று காலை 10.03 வரை பாலவம். பின்னர் இரவு 09.02 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.
இன்று காலை 6:35 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
பகல் : 02.00 முதல் 03.00 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- மஸ்கோத் அல்வா என்றாலே இலங்கைதான். எனினும் தமிழகத்தில் மஸ்கோத் என்றால் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூர்தான் ஞாபகத்துக்கு வரும்.
- திருநெல்வேலிதான் `அல்வா’விற்குப் பெயர்பெற்ற ஊர் எனச் சொன்னாலும், தூத்துக்குடியில் அதற்குப் போட்டியாகத் தயார் செய்யப்படும் ‘முதலூர் மஸ்கோத் அல்வா’வும் பிரபலமானது.
- தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள முதலூரைச் சேர்ந்த ஜோசப் என்பவர், தேங்காய்ப்பாலில் தயார் செய்து அறிமுகப்படுத்திய அல்வாதான் `மஸ்கோத் அல்வா.’
- இந்த மஸ்கோத் அல்வா, தற்போது `S J மஸ்கோத் அல்வா’ என்ற பெயரில் விற்பனையாகிறது.
- முதலூர் கிராமத்தில் தயாரிக்கப்படும் 'மஸ்கோத் அல்வா' மிகவும் புகழ்பெற்றது.
- தேங்காய்ப்பால், முந்திரி, மைதா, சர்க்கரை மற்றும் நெய் கொண்டு தயாரிக்கப்படும் இந்த அல்வா, அதன் தனித்துவமான சுவையால் அனைவரையும் ஈர்க்கிறது.
- தேங்காய்ப்பால் கலக்கறதால மஸ்கோத் அல்வாவை ஒரு மாசத்துக்குள்ள சாப்பிட்டுடணும். பிரிட்ஜ்ல வெச்சிருக்கோம்னா நாலு மாசம் வரைக்கும் வெச்சு சாப்பிடலாம்.
- இவ்வூரைச் சேர்ந்தவர்கள் தொலை தூரங்களில் தொழில் புரிந்தாலும் சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம் மஸ்கோத் அல்வாவை வாங்க மறப்பது இல்லை
- இங்கு தயாரிக்கப்படும் அல்வா நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சென்னை, மும்பை, தில்லி மற்றும் மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.
- கோதுமையில் தயாரிக்கப்படும் மஸ்கோத் அல்வாவைப் போன்று தற்போது பேரிச்சை அல்வா, முந்திரி அல்வா, நெல் அல்வா என பலதரங்களில் அல்வா தயாரித்து விற்பனையில் உள்ளது.
- பலரக அல்வா இருந்தாலும் மஸ்கோத்துக்குதான் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
துபாய் சென்றுள்ள நடிகர் பார்த்திபன் மருத்துவமனைக்கு தனது பர்ஸ் ஹோட்டலில் மறந்துவிட்டு சென்றுள்ளார். மருத்துவமனைக்கு பணம் கட்ட துபாயில் பல செல்வந்தர்களை தொடர்புக்கொண்டும் கைவிரித்துவிட்ட நிலையில் ஓட்டுனராக பணிபுரியும் லால்பேட்டை சார்ந்த A.R தாஜூத்தீன் அவர்கள் தனது பணத்தை கொடுக்க முன்வந்து உதவியுள்ளார்.
அதை நடிகர் பார்த்திபன் அவரது முகநூல் பக்கத்தில் நெகழ்ச்சியாக பதிந்த பதிவு:
Hospital செல்லும் வழியில் credit/debit card உள்ள என் purse-ஐ hotel-லில் வைத்து விட்டு மறதியோடு சென்று விட்டேன்.
Bill 7911.25 Dirhams! which is commonly abbreviated as AED
நம்மூர் Gandhi talks-ல் 1,97,781.25 (approxi)
Purse miss-Hotel
long dis
So,
நண்பர்களிடம் கைமாத்தாகக் கையேந்தும்
அவசர நிலை!
ஊதும் சிகிரெட்டை ஒதுக்கிவிட்டு உதடு பிதுக்கினர் சிலர்,signal கிடைக்கவில்லையென
-ஐ cross செய்தபடி stearing-ஐ திருப்பினர் சிலர்,
அந்தப் பணக்கார்ர்களின் மனதில் ….
கேட்பது ஒரு celebrity கொடுத்துவிட்டு திரும்ப கேட்க முடியாமல் போய் விட்டால்?நியாயம் தானே?
குறுகிய காலத்திற்குள் என் மனம் சற்றே கருகியது
அதை இறுகிய என் முகம் வெளியில் காட்டிக் கொடுத்து விட்டது.
பின்புறமிருந்து ஒரு தன்மையான குரல்” சார் நீங்க தப்பா நினைக்கலைன்னா..” என்றபடி கைநிறைய
அந்நாட்டு currency-ஐ நீட்டினார் ஆச்சர்யத்துடன் பார்த்தேன் “5000 தான் இருக்கு கொஞ்சம் time குடுத்தீங்கன்னா மீதியை புரட்டிகிட்டு வர்றேன்.
“நீங்க என்ன சார் பண்றீங்க”ன்னு கேட்க,
“டிரைவர்”-என்றார் டக்கென உட்புகுந்து மனதில் நின்றார்.பணக்கார்ர்கள் வரூம் ஆனா வராதூ என என்னத்தே கண்ணையாவாக சிந்திக்கும் வேளையில் மொத்த சேமிப்பையே வராவிட்டாலும் பரவாயில்லையென தரத் தயாரானவரின் தரமான இதயத்தை சற்றே உற்று நோக்கியப் பின் பணத்தை அவர் பாக்கெட்டில் வைத்துவிட்டு கரங்களை கண்களில் ஒற்றிக் கொண்டேன். இப்பதிவு அம்மாமனிதரின் மனிதாபிமானத்தை பறைசாற்றவேத் தவிர, மற்றோரை கோடியில் dirham பெற்றோரை குறை சொல்ல அல்ல. கோடிகளில் உள்ளோர் உள்ள நாடுகளில் , மனம் படைத்தோர் மட்டும் பல கோடியில் ஒருவர் இருவரே உளர். உணர்!
அதற்குள் என் மகள் கீர்த்தனாவிடம் கேட்டிருந்த online transaction done successfully !
இடையில் என் மீது சந்தேகப்பட்ட Philippines receptionist-யிடம் அவசரப்பட்டு அடகு வைத்திருந்த என் passport-ஐ மீட்டுக் கொண்டு வந்தேன்.
பணம் போயின் பிணமே அதுவும் மானம் போன பிணமே!
புகைப்படத்தில் அந்த Mr. A R Thajuddeen
Driver by profession but really a great human!
'சீதா ராமம்' படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மிருணாள் தாகூர். அந்த படத்திற்குப் பிறகு சில தென்னிந்திய மொழி படங்களில் மட்டுமே நடித்தார்.
தற்போது பாலிவுட்டில் படு பிஸியாக நடித்து வருகிறார். மிருணாள் தாகூருக்கும் நடிகர் தனுசுக்கும் திருமணம் நடக்க போவதாக தகவல் பரவி வருகிறது.
நடிகை மிருணாள் தாகூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டு வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பார்வை பறிபோகும் அபாயத்தில் இம்ரான் கான் உடல்நிலை உள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
சிகிச்சை அளிக்கப்படாத கண் நோய் அவரது கண்பார்வைக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும் என்று அவரின் ஆதரவளார்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரித்தானிய நாட்டவர்கள் இனி 30 நாட்கள் வரையிலான குறுகிய காலச் சுற்றுலா மற்றும் வணிகப் பயணங்களுக்கு சீனா செல்லும்போது அவற்றுக்கு விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சீனாவினால் வழங்கப்பட்ட அதே சலுகையை இப்போது பிரித்தானியாவும் பெற்றுள்ளது.
இதற்கிடையில் பிரித்தானியாவைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி மருந்து நிறுவனமான எஸ்ட்ராசெனொகா சீனாவில் 15 பில்லியன் டொலர் முதலீடு செய்யப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஸ்கொட்லாந்து லெர்விக் பகுதியில் 140 ஆண்டுகளாக நடைபெறும் வைக்கிங் நெருப்பு திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் தீப்பந்த ஊர்வலத்துடன் கலந்துகொண்டனர்.
ஸ்கொட்லாந்து நாட்டில் நடைபெற்ற பிரமாண்ட நெருப்பு திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஐரோப்பாவில் வாழ்ந்த வைக்கிங்ஸ் மக்களின் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமைகளில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.
லெர்விக் பகுதியில் நடைபெற்ற வைக்கிங் திருவிழாவில் அந்த பகுதியை சேர்ந்த பூர்வகுடிகள் கையில் தீப்பந்தங்களை ஏந்திக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். வைக்கிங் மக்கள் பயன்படுத்திய நீளமான கப்பல் போன்று கட்டைகளை வைத்து உருவாக்கப்பட்டு, அதனை தீப்பந்தம் ஏந்தியவர்கள் வட்டமிட்டு பின்னர் அந்த கப்பல் மீது தீப்பந்தங்கள் வீசப்பட்டன.
இதைத் தொடர்ந்து வைக்கிங் பாரம்பரிய பாடலை அவர்கள் பாடினர். 140 ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒண்டாரியோ மாகாணத்தில், டொராண்டோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் சுமார் 50 வாகனங்கள் தொடர்புடைய தொடர் விபத்துகள் ஏற்பட்டதாக ஒண்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்துகளில் யாருக்கும் உயிருக்கு ஆபத்தான அல்லது கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக எந்த அறிகுறியும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய சிலர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்துகள் காரணமாக சாலையில் சிக்கி தவித்த ஓட்டுநர்கள் அவசர மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ஒண்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
சகோதர்கள் வழியில் அலைச்சல் உண்டாகும். வேகத்தை விட விவேகம் நன்மை தரும். வாகன மாற்ற எண்ணங்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் மேம்படும். சமூக நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சிறுசிறு ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் உடல் அசதிகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
ரிஷபம்
வருங்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாட்கள் தடைப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். துணைவர் பற்றிய சிந்தனைகள் மேம்படும். தம்பதிகளுக்குள் சிறு சிறு வேறுபாடுகள் உண்டாகலாம். முன் கோபத்தினை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார பணிகளில் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மிதுனம்
பணிகளில் முயற்சிக்குண்டான பாராட்டுகள் கிடைக்கும். உங்களைப் பற்றிய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்துகொள்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் குறித்த சிந்தனைகள் மேம்படும். விளையாட்டு செயல்களில் கவனம் வேண்டும். சகோதர உறவுகளுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கடகம்
வெளியூர் சார்ந்த பணிகள் சாதகமாகும். தர்க்க வாதங்களில் கவனம் வேண்டும். ரகசியமான செயல்களில் ஆர்வம் உண்டாகும். சில தடைகள் மூலம் எதிர்பார்ப்புகள் தாமதமாகி நிறைவேறும். எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உண்டாகும். கால்நடை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் அனுசரித்து செல்லவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
சிம்மம்
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மறைமுகமான விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் மீதான ஈர்ப்பு மேம்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய பிரச்சனைகளை மாறுபட்ட விதத்தில் முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்
கன்னி
எதிர்பாராத சில அதிர்ஷ்டகாரமான வாய்ப்புகள் மூலம் மாற்றம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். உயர்கல்வியில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த விரயம் ஏற்படும். தொழில் முயற்சிகளில் அலைச்சலுக்கு பின்பு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிநாடு குடியுரிமை கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
எதிர்பாராத சிலருடைய சந்திப்புகள் மனதளவில் மாற்றத்தை உருவாக்கும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். அரசு காரியங்களில் இருந்து வந்த இழுபறி குறையும். பெரியோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான தேடல்கள் அதிகரிக்கும். பணி சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
விருச்சிகம்
செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல் உண்டாகும். வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் வர்த்தக பணிகளில் கவனம் வேண்டும். சமூக பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி
தனுசு
மற்றவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். பயம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். வேகத்தை விட விவேகமான செயல்பாடுகள் நன்மையை ஏற்படுத்தும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கும். கூட்டாளிகளிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மகரம்
நீண்ட நாள் உறவினர்களின் சந்திப்பு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகளை குறைக்க முயல்வீர்கள். தாய் மாமனிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். செயல்பாடுகளில் இருந்த குழப்பங்கள் விலகும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பயணங்கள் மூலம் அனுகூலங்கள் பிறக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
கும்பம்
வாசனை திரவியங்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் நேர்மறை சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம்
வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். சமூக பணிகளில் ஆதரவுகள் கிடைக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். சிலரின் சந்திப்புகளால் சந்தோஷம் கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் சாதகமான சூழல் அமையும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விசுவாவசு வருடம் தை மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை 29.1.2026.
இன்று பிற்பகல் 12.17 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.
இன்று அதிகாலை 04.57 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.
இன்று இரவு 07.26 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி.
இன்று அதிகாலை 01.26 வரை வணிசை. பின்னர் பிற்பகல் 12.17 வரை பத்தரை. பின்பு இரவு 10:32 வரை பவம் பின்னர் பாலவம்.
இன்று காலை 6:00 வரை அமிர்த யோகம். பின்னர் காலை 6. 35 வரை சித்தயோகம். பிறகு மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை





















