ஜப்பானில், வேலை செய்யும் இடத்தில் சிறிது நேரம் தூங்கிவிட்டால் அதை சோம்பேறித்தனம் என்று பார்க்க மாட்டார்கள். மாறாக, நீங்கள் மிகவும் கடினமாக உழைத்துள்ளீர்கள் என்பதற்கான அடையாளமாக கருதுவார்கள்.
இந்த நடைமுறை "இனெமுரி" (Inemuri) என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள், "தூங்கிக்கொண்டே இருப்பினும் சூழ்நிலையுடன் இணைந்திருப்பது" என்பதாகும்.
ஜப்பானியர்களின் நம்பிக்கைப்படி, எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சிறிது நேரம் தூங்க முடியும் ஒருவர் தனது வேலையில் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பவர் எனக் கருதப்படுகிறார். அதனால் அலுவலகங்கள், கூட்டங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துகளில் கூட மக்கள் சிறிய தூக்கத்தை எடுத்துக்கொள்வது சாதாரண விஷயமாக பார்க்கப்படுகிறது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் பிரிஜிட் ஸ்டீகர் மேற்கொண்ட ஆய்வின்படி, ஒருவர் உடலால் அங்கேயே இருந்து, தேவைப்படும் நேரத்தில் உடனடியாக செயல்படத் தயாராக இருந்தால், இந்த "இனெமுரி" சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
நாசா ஆய்வுகளும் இதை ஆதரிக்கின்றன. சுமார் 25 நிமிடங்கள் தூங்குவது, பணித் திறனை 34% அதிகரிக்கவும், விழிப்புணர்வை 54% மேம்படுத்தவும் உதவுகிறது.
உங்கள் அலுவலக மேலாளர் உங்களை சிறிது நேரம் தூங்கச் சொல்லி பாராட்டினால் எப்படி இருக்கும்?
உலகின் பல பகுதிகளில் ஓய்வு எடுப்பதை பலவீனமாக பார்க்கும்போது, ஜப்பான் அதை உழைப்பின் அடையாளமாக பார்க்கிறது!
மருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.
அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.
இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.
அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.
ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்"....
குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில்.......
முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்துவிட்டாராம்..
கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலீனை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா ,என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்...
கவிஞரே உங்கள் பாதம் பணிகிறோம்.
கனடாவின் எண்ணெய் வளம் மிக்க அல்பர்ட்டா (Alberta) மாகாணம், கனடா கூட்டமைப்பில் இருந்து பிரிந்து அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாறுவது குறித்து ஆலோசித்து வருவதாக வெளியாகும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அல்பர்ட்டா மாகாணத்தில் நீண்டகாலமாகவே நிலவி வரும் பொருளாதாரக் குறைகள் மற்றும் கனடா மத்திய அரசுக்கு எதிரான அதிருப்தி ஆகியவை தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் தற்போதைய பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சியின் கொள்கைகளால் தங்களின் எரிசக்தித் துறை பாதிக்கப்படுவதாக அல்பர்ட்டா மக்கள் கருதுவதே இந்தத் தீவிர பிரிவினைவாதப் போக்குக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அண்மையில் கனடா பொருளாதார மந்தநிலைக்குள் சென்றதைச் சுட்டிக்காட்டி, கனடா அமெரிக்காவின் “51-வது மாநிலமாக” மாற வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அல்பர்ட்டா பிரிவினைவாத நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினார்.
ட்ரம்பின் இந்த கருத்துக்கு கனடாவின் ஒண்டாரியோ பிராந்திய முதல்வர் டக் ஃபோர்டு உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
“கனடா ஒருபோதும் விற்பனைக்கு அல்ல, அது அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாறாது” என்று அவர்கள் திட்டவட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளனர். இந் நிலையில் , அல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித், பிரிவினைவாத அமைப்புகளின் அழுத்தத்தின் காரணமாக வரும் அக்டோபர் 19, 2026 அன்று அல்பர்ட்டாவில் ஒரு முக்கிய வாக்கெடுப்பை நடத்த அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வாக்கெடுப்பில், அல்பர்ட்டா கனடாவின் ஒரு மாகாணமாகத் தொடர வேண்டுமா அல்லது கனடா அரசியலமைப்பின் கீழ் பிரிந்து செல்வதற்கான சட்டப்பூர்வமான பிணைப்புடைய (Binding) இறுதி வாக்கெடுப்பை நடத்துவதற்கான முதற்கட்ட சட்டக் குழுவை அரசு அமைக்க வேண்டுமா என்ற கேள்வி மக்களிடம் முன்வைக்கப்படவுள்ளது.
அமெரிக்காவின் வலதுசாரி ‘மகா’ (MAGA) அரசியல் அலை மற்றும் தீவிர தேசியவாதக் கொள்கைகளின் தாக்கம் இந்த அல்பர்ட்டா பிரிவினைவாத இயக்கத்தின் பின்னணியில் இருப்பதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் சில அல்பர்ட்டா பிரிவினைவாதக் குழுக்களை ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படும் புகார்களும் கனடாவின் தேசியப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.
சமீபத்தில் வெளியான ‘இப்சோஸ்’ (Ipsos) மற்றும் ‘அங்கஸ் ரீட்’ (Angus Reid) ஆகிய நிறுவனங்களின் புதிய கருத்துக்கணிப்புகளின்படி, அல்பர்ட்டா மக்கள் தொகையில் பெரும்பாலானோர் கனடாவுடன் இணைந்திருக்கவே விரும்புகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, சுமார் 35 கோடியே 26 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 'ஹஷிஷ்' (Hashish) போதைப்பொருள் தொகையை நாட்டுக்குள் கடத்த முயன்ற கனடாவாழ் பல்கலைக்கழக மாணவி ஒருவர், சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் (ஜூன் 23) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தாதியர் பயிற்சி பெற்றுவரும் 18 வயதுடைய மாணவி ஆவார்.
தனது கல்விச் செலவிற்காக 12,500 கனேடிய டொலர்களும், வெளிநாட்டுச் சுற்றுலா ஒன்றும் வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில், டொரண்டோ பல்கலைக்கழகத்தின் சாரதி ஒருவரே இந்த போதைப்பொருள் தொகையை அவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.
சந்தேகநபரான மாணவி, கனடாவின் டொரண்டோ நகரிலிருந்து போதைப்பொருளுடன் துபாய் வழியாக, எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-648 எனும் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தில் நடைமுறையில் உள்ள 'மீட் அண்ட் கிரீட்' (Meet and Greet) எனும் விசேட வசதியைப் பயன்படுத்தி, தனது பயணப் பொதிகளை எடுத்துக்கொண்டு, எவ்விதப் பொருட்களையும் பிரகடனப்படுத்தாத 'பச்சை வழி' (Green Channel) ஊடாக வெளியேற முயன்ற போதே மாணவி கைது செய்யப்பட்டார்.
மாணவி கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளை சோதனையிட்டதில், 140 பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 கிலோ 265 கிராம் நிறையுடைய 'ஹஷிஷ்' போதைப்பொருள் மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, குறித்த மாணவியும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும் சந்தேகநபரையும் போதைப்பொருள் தொகையையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஜூன் 24 அன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அழகான பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண்.
ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள்
அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது , என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்."
கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலக தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைத்தார்.
அவர் அந்த பணக்கார பெண்ணிடம், " நான் இப்பொழுது பணி பெண்ணிடம் எப்படி *மகிழ்ச்சியை* வரவழைப்பது என்று சொல்லச் சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் " என்றார்.
பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்..
" என் கணவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்ல.யாரிடமும் சிரிக்க முடியவில்ல். என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.
இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழது ஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது. வெளியே சில்லென்று மழை பெய்துக்கொண்டு இருந்தது , எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன். மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனை பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக் கொடுத்தது.
கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக புன்னகைத்தேன்..!!!
நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷயம் என்னை சந்தோஷிக்கிறது எனில், ஏன் இதை பலருக்கு செய்து நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன்.
அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி செய்து கொடுத்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி உதவி செய்து அவர்கள் மகிழ நானும் பெரு மகிழ்வுற்றேன்.
இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்.
மகிழ்ச்சி என்பது , அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்.
இதை கேட்ட அந்த பணக்கார பெண் ஓலமிட்டு கத்தி அழுதாள்.
அவளால் பச்சை காகிதம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது.
ஆனால் பணத்தால் வாங்க முடியாத ஒரு விஷயம் மகிழ்ச்சி
அது அவளிடம்இல்லை.
வாழ்க்கையின் அழகு என்பது நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீா்கள் என்பதில் இல்லை...
உங்களால் அடுத்தவர் எவ்வளவு மகிழ்ச்சி ஆகிறார்கள் என்பதிலேயே இருக்கிறது...
வளர்பிறையில் பொங்கி, தேய்பிறையில் குறையும் அதிசய கிணறு! ஆயிரம் ஆண்டுகளாக மக்களை வியக்க வைக்கும் திருமாந்துறை அட்சயநாதர் திருக்கோயில்!
“ஒரு கிணற்றில் இருக்கும் நீர் சந்திரனின் வளர்ச்சிக்கும் தேய்ச்சிக்கும் ஏற்ப மாறுமா?”
இந்தக் கேள்வியை கேட்டால் பலர் சிரித்துவிடலாம்.
ஆனால் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ள திருமாந்துறை அட்சயநாதசுவாமி திருக்கோயிலுக்கு ஒருமுறை சென்று வந்தால், அந்த சிரிப்பு ஆச்சரியமாக மாறிவிடும்.
ஏனெனில் அங்கே இருக்கிறது ஒரு அதிசய கிணறு...
வளர்பிறை நாட்களில் மெதுவாக நீர் உயர்கிறது.
தேய்பிறை நாட்களில் படிப்படியாக நீர் குறைகிறது.
பல நூற்றாண்டுகளாக இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
அதுமட்டுமல்ல...
இந்த தீர்த்தத்தில் நீராடினால் உடல் நோய்கள் மட்டுமல்ல, மனக்கவலைகளும் நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
அந்த அதிசயத் திருத்தலத்தின் வரலாற்றையும் மகிமையையும் இப்போது தெரிந்துகொள்வோம்.
யோகநாயகி சமேத அட்சயநாதர் அருள்பாலிக்கும் திருத்தலம்
தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணத்திற்கு அருகில் அமைந்துள்ள அமைதியான கிராமம் திருமாந்துறை.
இயற்கையின் மடியில் அமைந்துள்ள இந்த புனிதத் தலத்தில், அருள்மிகு அட்சயநாதசுவாமியும், யோகநாயகி அம்பாளும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
சுமார் 1200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த ஆலயம், சோழர் காலத்தின் கட்டிடக்கலைச் சிறப்புகளை இன்றும் தன்னகத்தே தாங்கி நிற்கிறது.
செம்பியன் மாதேவியார் காலத்தில் இந்த ஆலயத்திற்கு திருப்பணிகள் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆலயத்தின் ராஜகோபுரம், அதன் அமைதியான சூழல், உள்ளே அமைந்துள்ள தீர்த்தக்குளம் அனைத்தும் பக்தர்களின் மனதை உடனே கவர்கின்றன.
நோயால் வாடிய முனிவரின் கதை
புராணங்கள் கூறும் ஒரு சம்பவம் இந்தத் தலத்தின் பெருமையை இன்னும் உயர்த்துகிறது.
முன்னொரு காலத்தில் காலமா முனிவரும், நவகிரகங்களும் கடுமையான நோயால் அவதிப்பட்டனர்.
பல வழிகளிலும் முயன்றும் நோய் நீங்கவில்லை.
இறுதியில் அவர்கள் சிவபெருமானை சரணடைந்தனர்.
அப்போது பரமசிவன் அருள்வாக்காக,
“திருமாந்துறைக்கு சென்று என்னை வழிபட்டு, அங்குள்ள சந்திர தீர்த்தத்தில் பதினைந்து நாட்கள் நீராடுங்கள்” என்று கூறினார்.
இறைவனின் கட்டளையை ஏற்று அவர்கள் இந்தத் திருத்தலத்திற்கு வந்தனர்.
ஒவ்வொரு நாளும் பக்தியுடன் நீராடி, அட்சயநாதரை வணங்கினர்.
பதினைந்தாவது நாள் முடிவில் அவர்கள் நோய்களிலிருந்து முழுமையாக விடுபட்டதாக தலபுராணம் கூறுகிறது.
அதன் பின்னரே இந்தத் தீர்த்தம் நோய்நிவாரணத் தீர்த்தமாக பக்தர்களால் போற்றப்படுகிறது.
ரோகிணி நட்சத்திரத்தினரின் பரிகாரத் தலம்
இந்த ஆலயம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், விருச்சிக ராசிக்காரர்களுக்கும் மிகவும் முக்கியமான பரிகாரத் தலமாக கருதப்படுகிறது.
வாழ்க்கையில் நீண்டநாள் நோய்கள், மனக்குழப்பங்கள், தடைகள், தோல்விகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டால் நிம்மதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வளர்பிறையில் பொங்கி, தேய்பிறையில் குறையும் சந்திர கிணறு
இந்த ஆலயத்தின் மிகப்பெரிய அதிசயம் சந்திர தீர்த்தம்.
பிறை வடிவில் அமைந்துள்ள இந்த கிணறு சாதாரண கிணறு அல்ல.
வளர்பிறை தொடங்கியவுடன் கிணற்றின் நீர்மட்டம் மெதுவாக உயரத் தொடங்கும்.
பௌர்ணமி நாளில் அதிகமாக இருக்கும்.
அதன்பிறகு தேய்பிறை தொடங்கியவுடன் நீர் மெதுவாக குறைந்து அமாவாசை நாளில் மிகவும் குறைந்த அளவில் இருக்கும்.
இதை பல தலைமுறைகளாக உள்ளூர் மக்கள் பார்த்து வருவதாக கூறுகின்றனர்.
2018-ல் நடந்த அதிசயம்
ஆனால் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு ஆச்சரியமான நிகழ்வு நடந்தது.
அமாவாசை நாள்.
அன்றைய தினம் கிணற்றில் நீர் குறைவாக இருக்க வேண்டும்.
ஆனால் அதற்கு நேர்மாறாக சந்திர தீர்த்தம் திடீரென பொங்கி வழிந்தது.
கோயில் வளாகமே நீரால் சூழப்பட்டது.
இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது.
சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும், தொலைதூர பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நீராடினர்.
எவ்வளவு பேர் நீராடினாலும் நீர் குறையவில்லை.
அந்த காட்சியை கண்டவர்கள்,
“இது ஈசனின் அருள் விளையாட்டு” என்று பக்திப் பரவசத்தில் கூறினர்.
சூரியனார் கோயிலுடன் உள்ள தொடர்பு
திருமாந்துறை ஆலயத்திற்கு அருகிலேயே புகழ்பெற்ற சூரியனார் கோயில் அமைந்துள்ளது.
புராணங்களின்படி, காலமா முனிவரும் நவகிரகங்களும் சூரியனார் கோயில் பகுதியில் தங்கி, தினமும் திருமாந்துறைக்கு வந்து அட்சயநாதரை வழிபட்டதாக கூறப்படுகிறது.
அதனால் இன்றும் பல பக்தர்கள் முதலில் அட்சயநாதரை தரிசித்துவிட்டு, அதன் பிறகே சூரியனார் கோயிலுக்கு செல்கின்றனர்.
வாழ்க்கைக்கான ஒரு அழகான பாடம்
சந்திரன் வளர்வதும் தேய்வதும் இயற்கையின் விதி.
மனித வாழ்க்கையும் அப்படித்தான்.
சில நாட்கள் மகிழ்ச்சி.
சில நாட்கள் சோதனை.
சில நேரங்களில் வெற்றி.
சில நேரங்களில் தோல்வி.
ஆனால் வளர்பிறைக்கு பிறகு தேய்பிறை வந்தாலும், மீண்டும் வளர்பிறை வருவது போல, வாழ்க்கையின் இருள் நிரந்தரமல்ல.
நம்பிக்கையும், இறைநம்பிக்கையும் இருந்தால் மீண்டும் ஒளி பிறக்கும்.
திருமாந்துறை அட்சயநாதர் நமக்கு சொல்லும் மிகப் பெரிய பாடம் இதுதான்.
“இறைவனை நம்பி முயற்சி செய்பவரின் வாழ்க்கையில் நம்பிக்கையின் நீரோட்டம் ஒருபோதும் வற்றாது.”
ஊழியர் ; பாஸ் எனக்கு ரெண்டு நாள் லீவு வேண்டும்.
பாஸ்: கண்டிப்பா கொடுக்குறேன்.
ஆனா நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும்.
ஊழியர் : ஓ.கே சார் கேளுங்க.
பாஸ் : கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்னான்?
ஊழியர் : நல்ல நேரத்தில் சரியான கேள்வி கேட்டீஙக சார்.
பாகுபலி கொல்லப்படுவதற்கு முதல் நாள் கட்டப்பா லீவு கேட்டாதாகவும் பாகுபலி மறுத்தாகவும் எனக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கிறது சார்....
அதுனாலதான்...
பாஸ் : நாலு நாள் லீவு எடுத்துக்கோப்பா...
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தடைகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பேச்சு வன்மையால் காரிய சித்தி ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கமும் புரிதலும் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ரிஷபம்
தேவைக்கேற்ப வரவுகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பணிகளில் சாதகமான சூழல் அமையும். போட்டிகளில் ஈடுபட்டு மனமகிழ்வீர்கள். வியாபார பணிகளில் எதிப்புகள் குறையும். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவது நல்லது. உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம்
வருமான முன்னேற்றத்தை பற்றி சிந்திப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபார பணிகளில் புதிய தொடர்பும் அறிமுகமும் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கடகம்
உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில பொறுப்புகள் மூலம் உயர்வுகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து செல்லவும். பயணங்களின்போது உடமைகளில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான விசயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் இருந்த குழப்பங்களுக்கு தெளிவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
சிம்மம்
உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். சமூகப் பணிகளில் அனுசரித்து செல்லவும். வாழ்க்கைத் துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் உதவியாக இருப்பார்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
கன்னி
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்கால தொடர்பான சேமிப்புகள் மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
துலாம்
வியாபாரம் பணிகளில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். மனதில் எதிர்காலம் நிமித்தமான புது விதமான சிந்தனைகள் பிறக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக செயல்பட வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விருச்சிகம்
எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். நெருக்கமானவர்கள் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். குழந்தைகளை அரவணைத்து செல்வது நல்லது. பணிவான பேச்சுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
தனுசு
அணுகு முறையில் மாற்றங்கள் ஏற்படும். வித்தியாசமான ஆசைகள் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சுப காரியங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் கைகூடிவரும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
மகரம்
வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்து வந்த மந்த தன்மை குறையும். கல்வி சார்ந்த செயல்களில் மாற்றம் உண்டாகும். அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த உதவிகள் சாதகமாககும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மீனம்
கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவுகள் ஏற்படும். பலவிதமான சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். பயனற்ற விவாதங்களையும் தவிர்க்கவும். வெளி உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 10 ஆம் தேதி புதன்கிழமை 24.6.2026.
இன்று இரவு 09.46 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று மாலை 05.45 வரை சித்திரை. பின்னர் சுவாதி.
இன்று பிற்பகல் 02.17 வரை பரிகம். பின்னர் சிவம்.
இன்று காலை 09.24 வரை தைத்தூலம். பின்னர் இரவு 09.46 வரை கரசை. பிறகு வணிசை.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
கல்சட்டியில் பழயது,
ஈயச்சொம்பில் ரசம்,
உருளியில் கீரை,
குமிட்டி அடுப்பில் சுட்ட அப்பளாம்,
வெங்கலப்பானையில் அரிசி உப்புமா,
அகன்ற வாணலியில் புளி உப்புமா,
டபரா டம்பளரில் குவிந்த நுரையுடன் திக் காஃபி,
இலுப்பச்சட்டியில் ரவை உப்புமா,
அந்த பொறுக்கு அடை அடையாக,
தொன்னையில் பாயசம்,
மூங்கில் கூடையில் பொறித்த அப்பளாம்,
பருப்பு தெறிக்க புஷ்டியான ‘ஆமை’ வடை,
அதை விண்டு ஒரு விள்ளலை பக்கத்திலுள்ள தயிர்ப்பச்சடியில் ஒரு செல்லப் புரட்டு,
ஒரு அழகிய பலாச்சுளை,
அதை மெல்ல கீறி நடுவில் தேனை கொஞ்சமாக விட்டு.......
மோருஞ்சாதத்துக்கு இலையின் எங்கோ ஓர் ஓரமாக மறைந்து இருக்கும் பச்சைமிளகாய் சட்னியில் ஆட்காட்டி விரலை பட்டும் படாமலும் தொட்டு, நாக்கின் நடுவில் ஒரு சின்ன இழுப்பு .........
*ஆஹா......... ஆஹா*......... * அந்த சுகம் கிட்டுமா!
பழைமையில்தான் எத்துணை நிறைவு!!
இவையெல்லாம்...........
பிளாஸ்டிக் டம்ளர்களாலும்,
மினரல் வாட்டர் பாட்டில்களாலும், பிரெஸ்டிஜ் குக்கர்களினாலும்,
டைனிங் செட்டுகளினாலும்
மறக்கடிக்கப்பட்டனவே!!
திருப்பதி ஏழுமலையான் கோவில் என்பது வெறும் கல்லும் மண்ணும் கலந்த ஆன்மீகத் தலம் மட்டுமல்ல
அது காலவெளியைக் கடந்த ஒரு மாபெரும் புதிராகவும், அறிவியலுக்குச் சவால் விடும் தொழில்நுட்ப அதிசயமாகவும் திகழ்கிறது.
பல கோடி மக்களின் நம்பிக்கையையும், பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றையும் தன்னுள் அடக்கி வைத்துள்ள இந்த திருமலை திருப்பதி மலைகள் சுமார் 210 கோடி ஆண்டுகள் பழமையான 'பிரி-கேம்பிரியன்' காலத்தைச் சேர்ந்தவை. இது உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பே உருவான உலகின் மிகப்பழமையான மலைத்தொடர்களில் ஒன்று.
சங்க இலக்கியங்களில் 'வேங்கடம்' என்று போற்றப்பட்ட இந்தத் தலம், கி.பி. 830-ம் ஆண்டு பல்லவ மன்னன் விஜயதந்திவர்மன் காலத்திலேயே மிகப்பெரிய வழிபாட்டு மையமாக இருந்ததை அங்கிருக்கும் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.
பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள் எனப் பல பேரரசுகள் இந்தக் கோவிலைச் செதுக்கினாலும், 16-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கிருஷ்ணதேவராயர் தான் இதை ஒரு பொற்கோவிலாக மாற்றினார்.
ஆற்காடு நவாப்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் கூட இந்தக் கோவிலின் நிர்வாகத் திறமையைக் கண்டு வியந்து, அதன் புனிதத்தைச் சிதைக்காமல் ஆவணப்படுத்தினார்கள்.
மூலவர் சிலையைச் சுற்றிப் பல மர்மங்கள் இன்றும் நிலவுகின்றன. சிலைக்குப் பின்னால் காதை வைத்துப் பார்த்தால் ஒரு பெரும் கடலோட இரைச்சல் சத்தம் கேட்பதாகவும், சிலையில் இருக்கும் முடி நிஜமான மனிதக் கூந்தல் போல மென்மையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவை ஒருபுறமிருக்க, எந்தக் கருங்கல்லையும் சிதைக்கக்கூடிய பச்சைக்கற்பூரத்தை பல நூற்றாண்டுகளாகத் தடவியும், சிலையில் ஒரு சிறு கீறல் கூட விழாமல் இருப்பது ஒரு பெரிய வேதியியல் மர்மம். மேலும், கருவறையில் எப்போதும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் நிலவுவதும், சிலையிலிருந்து வேர்வைத் துளிகள் அரும்புவதும் இன்றும் அர்ச்சகர்களால் சொல்லப்படும் ஒரு பெரும் வியப்பு.
இந்த அதிசயங்களை 'மூடநம்பிக்கை' என்று ஒதுக்காமல் அறிவியல் ரீதியாகப் பார்த்தால், இது ஒரு மாபெரும் Ancient Engineering மார்வெல்
திருப்பதி பாறைகளில் உள்ள குவார்ட்ஸ் தாதுக்கள் அழுத்தத்தின் மூலம் மின்னாற்றலை உருவாக்கும் தன்மை கொண்டவை. இதனால் அந்த இடமே ஒரு சக்தி வாய்ந்த காந்தப்புலமாக (Magnetic Field) மாறுகிறது.
கருவறையின் குறுகிய அமைப்பும், அங்கிருக்கும் விளக்குகளின் வெப்பமும் 'தெர்மல் இனர்ஷியா' (Thermal Inertia) விதியின்படி பாறையினால் உறிஞ்சப்பட்டு, மெதுவாக வெளியேற்றப்படுகிறது. இதனால்தான் சிலை எப்போதும் வெப்பமாக இருக்கிறது.
சிலையில் கேட்கும் அந்தச் சத்தம் 'அகௌஸ்டிக் ரெசோனன்ஸ்' (Acoustic Resonance) எனப்படும். பாறையின் இடுக்குகளில் காற்று புகுந்து சுழலும்போது ஏற்படும் அந்த எதிரொலிதான் கடல் ஓசை போலக் கேட்கிறது.
இன்று திருப்பதி என்பது உலகின் மிக அதிக வருமானம் கொண்ட ஒரு பிரம்மாண்டமான நிர்வாக மையம் (TTD). ஆண்டுக்குச் சுமார் 3000 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டும் இந்தக் கோவில், ஆசியாவிலேயே மிகப்பெரிய இலவச அன்னதானக் கூடத்தையும், மருத்துவமனைகளையும் நடத்துகிறது. சாதி, மதம் கடந்து அனைவரும் ஒரு புள்ளியில் சந்திக்கும் இடமாக இது இருப்பதால், இது ஒரு பெரிய 'சமூக சமத்துவ மையமாகவும்' திகழ்கிறது.
திருப்பதி ஏழுமலையான் சிலை என்பது கல்லால் செய்யப்பட்ட ஒன்றல்ல அது நம் முன்னோர்களின் கட்டடக்கலை, புவியியல் அறிவு மற்றும் வேதியியல் மேலாண்மை ஆகியவற்றின் சங்கமம். அறிவியலால் சிலவற்றை விளக்க முடிந்துவிட்டாலும், அந்தச் சூழலில் நாம் உணரும் அந்தப் 'பாசிட்டிவ் எனர்ஜி' தான் இன்றும் கோடிக்கணக்கான மக்களை அந்த மலையை நோக்கி இழுத்துக்கொண்டிருக்கிறது. இது நம்பிக்கையும் அறிவியலும் கைகோர்க்கும் ஒரு அற்புதப் பயணம்
ஒரு நாட்டில் கண் பார்வை இல்லாத ஒரு மன்னன் ஆண்டு வந்தான்!
அவனுக்கு ஒரு பட்டத்து இளவரசன் இருந்தான்! ஒரு நாள் அவனை அழைத்து மகனே! இந்த தேசத்திற்கு நீ மன்னன் ஆகும் நேரம் வந்து விட்டது! நீ அரியணை ஏற்க வேண்டும் அதற்கு முன் உனக்கு திருமணம் செய்ய வேண்டும் உனக்கு எப்படி பட்ட துணை வேண்டும் என்று சொல்ல!
அதற்கு இளவரசன் அப்பா நம் நான்கு சிற்றரசன் மகள்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவரை நான் தேர்ந்து எடுக்க ஆசை படுகிறேன்! ஆனால் யாரை தேர்ந்து எடுப்பது என்று தெரியவில்லை!
நீங்கள் தான் அதற்கு உதவ வேண்டும் என்று சொன்னான். அதற்கு மன்னன் கவலை படாதே அந்த நால்வருக்கும் நான் ஒரு சோதனை வைக்கிறேன் அதில் யார் வெற்றி கொள்கிறார்களோ அவர்களை நீ திருமணம் செய்து கொள்ளலாம். அதுவரை நீ அரண்மனையில் இரு! உனக்கு உடம்பு சரியில்லை வயிறு வலியில் துடிப்பதாக சொல்ல போகிறேன் என்றார்.
நான்கு இளவரசிகள் அழைக்கப்பட்டார்கள். மன்னன் அவர்களிடம் சொன்னான் பட்டத்து இளவரசன் உடம்பு சரியில்லை அவனுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டு இருக்கு அதனால் நீங்கள் ஒரு சிறந்த சூப்பை தயார் செய்யுங்கள் முதலில் நாம் அதை சுவைத்து பார்ப்பேன்! எந்த உணவு நன்றாக இருக்கிறதோ அந்த உணவை சமைத்தவர் அடுத்த பட்டத்து இளவரசி ஆவார் என்று சொல்ல!
நான்கு இளவரசிகள் போட்டி போட்டு கொண்டு உணவை தயார் செய்ய ஆரம்பித்தனர். ஒரு மணி நேரம் கழித்து மன்னரிடம் சுவைக்க எடுத்து வரப்பட்டது!
முதல் இளவரசி சிக்கனை கொண்டு நல்ல சூப் ஒன்றை தயார் செய்து இருந்தால்! மன்னர் சுவைத்து பார்த்தார் சுவை அலாதியாக இருந்தது.
இரண்டாம் இளவரசி காய்கறிகள் மற்றும் நிறைய மசாலாக்கள் சேர்த்து அருமையான சூப் தயாரித்து இருந்தார்! அதுவும் அமிர்தமாக இருந்தது.
மூன்றாவது இளவரசி வெண்ணெய் சேர்த்து மணக்கும் சூப் ஒன்றை தயார் செய்து இருந்தார்! அதுவும் சுவைக்க அமிர்தம் போல் இருந்தது!
ஆனால் நான்காம் இளவரசி செய்த சூப் உப்பு காரம் மசாலா இல்லாமல் சூடு அதிகம் இல்லாமல் இருந்தது சுவை ஒன்றும் சொல்லி கொள்ளும் படி இல்லை!
முதல் மூன்று இளவரசியும் நான்காவது இளவரசியை பார்த்து நகைத்தனர்!
கண்டிப்பாக முதல் மூன்றில் ஒருவர் தான் மன்னன் தேர்ந்து எடுப்பார் என்று முடிவு செய்து இருந்தனர்!
ஆனால் மன்னன் நான்காவது இளவரசியை தேர்ந்து எடுத்தார்!
அவையில் இருந்த அனைவரும் மன்னனிடம் ஏன் என்று கேட்க அதற்கு மன்னன் சொன்னார், முதல் மூன்று பேரும் எப்படி ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்கள் ஆனால் நான்காவது இளவரசி மட்டும் தான் இளவரசனுக்கு உடம்பு சரியில்லை வயிறு சரியில்லை அதனால் உப்பு, காரம், எண்ணெய் மற்றும் சூடு குறைவாக இருக்கும் சூப்பை தயார் செய்தார்!
அவர் தான் உண்மையில் குடும்பத்திற்கும் ஏன் நாட்டிற்கும் சிறந்தவராக இருப்பார் என்று தீர்ப்பை சொல்லி முடித்தார்.
சிறந்ததை கொடுக்க வேண்டும். ஆனால் அதுவும் அந்த சூழ்நிலைக்கு ஏற்றதாக இருந்தால் தான் சிறப்பென கருதப்படும்.
கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் ஏற்படும் நோய்களை போக்கும் மருத்துவம் என்ன சாப்பிட்டு நோய்களை போக்கலாம். அந்தவகையில், சிறுநீர் எரிச்சலை தணிக்க கூடியதும்,உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டதும், சோர்வை போக்கவல்லதும், தோல் நோய்களில் இருந்து பாதுகாக்க கூடியதுமான மோரின் மருத்துவ குணங்கள், மோரை பயன்படுத்தி நீராகாரம் தயாரிக்கலாம்.
இரவு முழுவதும் சாதத்தை ஊற வைக்கவும். காலையில் இதை நன்றாக கரைக்கவும். இதோடு சிறுவெங்காய துண்டுகள், தேவையான அளவு உப்பு, மோர் சேர்த்து சாப்பிடலாம்.காலையில் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல்உஷ்ணம் குறையும். சிறுநீர் எரிச்சல் தணியும். கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
சோற்று கற்றாழையின் தோல் நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் சதையை 7 முறை நீர்விட்டு நன்றாக கழுவ வேண்டும். அப்போதுதான் கசப்பு சுவை போகும். கற்றாழையின் சதையை நன்றாக அரைத்து கொள்ளவும். இதனுடன் மோர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை காலையில் சாப்பிட்டுவர உடல் புத்துணர்வு ஏற்படுவதுடன், உடல் குளிர்ச்சி அடையும். சோற்று கற்றாழையில் மிகுந்த சத்துக்கள் உள்ளன. இது, தீக்காயங்களை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரும். மலட்டுத்தன்மையை போக்கும்.
மூட்டு வலி உள்ளவர்கள் குளுமையான உணவை உட்கொள்வதால் வலி அதிகமாகும் என அஞ்சுவார்கள். இவர்கள் கூட மோர் சாப்பிடலாம். மோருடன் சுக்கு, மிளகு பொடி சேர்த்து குடிக்கலாம். புளிப்பில்லாத மோரில் சிறிது உப்பு, சுக்குப் பொடி, மிளகுப் பொடி சேர்த்து சாப்பிட்டால் வாதம், கபத்தை சமன்படுத்தும்.
கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தால் நீர் இழப்பு ஏற்பட்டு தோலில் வறட்சியை ஏற்படும். இதை சரிசெய்யும் முறையை காண்போம்.தேவையான அளவு மோர் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாற்றை கலக்கவும். பின்னர், மெல்லிய துணியை மோரில் நனைத்து 15 நிமிடம் ஒத்தடம் கொடுத்து வந்தால், தோலில் ஏற்படும் சிவப்பு தன்மை மாறும். எரிச்சல் குறையும்.
பல்வேறு நன்மைகளை கொண்ட மோர் உடல் உஷ்ணத்தை தடுக்கவும், களைப்பை போக்கவும் பயன்படுகிறது. சிறுநீர் எரிச்சலை தணிக்கும். தோலுக்கு குளிர்ச்சி தருகிறது. மோரை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் எலும்புக்கு பலம் கிடைக்கும். மோரில் வைட்டமின் சி, இரும்பு சத்து உள்ளது. மோர் சரிவிகித உணவாக உள்ளது. எளிதாக கிடைக்க கூடியதும், சிறந்த பானமான மோரை கோடைகாலத்தில் பயன்படுத்தி உடல் நலத்தை பாதுகாக்கலாம்.





