- ஆறுமுகன் - கேட்டதை கொடுக்கும்.
- முருகன் - நினைத்ததை அளிக்கும்.
- குகன் - ஞானத்தை நல்கும்.
- குருபரன் - குருவைச் சேர்க்கும்.
- குமரன் - இளமையைக் கொடுக்கும்.
- சண்மகனே - சித்திகள் அளிக்கும்.
- சக்தி வேலன் - பெற்றோரை பேணிடச் செய்யும்.
- சரவணபவன் -தஞ்சம் அளிக்கும்.
- காங்கேயன் - பிறப்பை ஒழிக்கும்.
அவர்கள் வகுப்பிற்கு புதிதாக வந்திருந்தாள் மலர்விழி. அழகு என்றால் அப்படியொரு அழகு. அதனால் அவளுடன் நட்பு கொள்ள வகுப்பு மாணவிகள் அனைவரும் போட்டா போட்டி போட்டனர்.
மலர்விழி அழகிதானே தவிர மற்றபடி அவள் முகத்தில் சிறு புன்னகையும் இருக்காது. யாருடனும் பேச மாட்டாள். யாராவது நட்பு கொள்ள அவள் அருகில் வந்தால் வறட்டுப் புன்னகையுடன் பார்ப்பாள். அவ்வளவுதான். ஒரு சிறு பேச்சும் பேசமாட்டாள்.
படிப்பில் ஓரளவுக்கு சிறந்த மாணவியாகவே இருந்தாள்.
அவள் நிலையை ஆசிரியையும் அறிந்தார்.
"மலர்விழி, நீ எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா? நல்லாப் படிக்கவும் செய்யறே, ஆனா உன் முகத்தில் ஒரு சிறு புன்னகை இருந்தா எப்படி இருக்கும் தெரியுமா? அழகுக்கு அழகு சேர்த்தது போல் இருக்கும்" என்றார்.
அவருக்கும் ஒரு சிறு வறட்டுப் புன்னகையையே பதிலாக தந்தாள் மலர்விழி.
அதோடு விட்டுவிட்டார் ஆசிரியை.
“அவள் இயல்பே அப்படித்தான் போலும். நம்மால் என்ன செய்ய முடியும்?” என்று நினைத்துக் கொண்டார் ஆசிரியை.
மாணவிகளும் அவளிடம் நெருக்கம் காட்ட முயலவில்லை.
இந்த நிலையில்தான் பள்ளியின் சார்பில் ஒரு செய்முறை கண்காட்சிக்கு மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இருபுறமும் மாணவிகள் இரண்டு இரண்டு பேராக பிரிந்து ஜோடி போட்டு வரிசையாக சென்றனர். மலர்விழி ஜோடியாக கோமதி கிடைத்திருந்தாள்.
வழியில் கோமதியும் மலர்விழியுடன் பேச பல வழிகளிலும் முயற்சித்தாள். ஆனால் முடியவில்லை.
அவர்கள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த ராமலிங்கா மில் பஞ்சாலைக்குச் சென்றனர். அந்த ஆலை முழுவதும் சுற்றி வந்தனர்.
பஞ்சு எப்படி நூலாகிறது? பின்னர் எப்படி ஆடையாகிறது? என்பதை எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்தனர்.
இடையில் சாப்பிடச் சென்றனர். அந்த ஆலையின் சார்பில் மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
மாணவிகள் வரிசையாக அமர்ந்து சாப்பிட்டனர். கோமதி முதல் ஆளாக சாப்பிட்டு எழுந்தாள். இலையைக் கொண்டு போய் குப்பைத் தொட்டியில் போட்டாள்.
மலர்விழி மெதுவாகச் சாப்பிட்டாள். எல்லா மாணவிகளும் எழுந்து விட்டனர். மலர்விழி மட்டும் உட்கார்ந்திருந்தாள்.
எழுந்த மாணவிகள் மீண்டும் ஆலையைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினர்.
கோமதி மட்டும் மலர்விழி அருகிலேயே நின்றாள். அவளும் சாப்பிட்டு முடித்தாள்.
'இலையை எங்கே எடுத்துச் செல்வது?' என்று தெரியாமல் கையில் பிடித்தபடி விழித்தாள்.
கோமதி அவள் கையிலிருந்த இலையை வாங்கினாள்.
"கொண்டா நான் போய் போட்டுட்டு வர்றேன்" என்றவள் விறுவிறுவென்று குப்பைத் தொட்டியை அடைந்து அதில் போட்டு விட்டு வந்தாள்.
"வா போகலாம்" என்றாள்.
இருவரும் ஆலைக்குள் சென்றனர். அந்த நாளை ஆலையிலேயே கழித்தனர். மாணவிகள் அங்கிருந்தே வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்
ஆசிரியையிடம் விடை பெற்று அவர்களும் கிளம்பிச் சென்றனர்.
மறுநாள்.
பள்ளிக்கு வந்த மலர்விழி கோமதியைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தாள்.
அதைப் பார்த்த வகுப்பு மாணவிகள் அனைவரும் அதிசயப் பட்டனர்.
கோமதி அதைப் பயன்படுத்திக் கொண்டாள். மலர்விழியிடம் பேசத் தொடங்கினாள். அவளிடமிருந்து ஒன்றிரண்டு வார்த்தைகள் பதிலாக கிடைத்தன.
இன்னும் சில மாணவிகளும் மலர்விழியிடம் நெருங்கினர். ஆனால் எல்லாரையும் விட கோமதியிடம்தான் சற்றே அதிகமாக ஒட்டிக் கொண்டாள் மலர்விழி.
சில நாட்களிலேயே மலர்விழியின் நிலையை புரிந்து கொண்டாள் கோமதி.
ஒருநாள் தன் வீட்டிற்கு மலர்விழியை அழைத்துச் சென்றாள் கோமதி.
கோமதி வீட்டில் எல்லாருமே இயல்பிலேயே கலகலப்பாக இருந்தனர். சிரிக்கச் சிரிக்கப் பேசினர். அப்பாவும், அம்மாவும் தங்கள் பிள்ளைகள் மேல் பாசத்தை வாரிவாரி வழங்கினர். மலர்விழியிடமும் அதே பாசத்தைப் பொழிந்தனர்.
அவர்கள் பாசத்தில் நெக்குருகிப் போனாள் மலர்விழி.
அன்றுதான் தன் கஷ்டத்தை முதல் முறையாக உடைத்தாள் மலர்விழி.
"நானும் உங்க வீட்டில் பிறந்திருக்கலாம்” என்றாள்.
அதன் பின்னர் தங்கள் வீட்டு நிலையையும் கூறினாள்.
மலர்விழி அவர்கள் வீட்டில் ஒரே பிள்ளை. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தினமும் சண்டைதான், அடிதடிதான். அவர்கள் சண்டையில் மலர்விழி பற்றியே மறந்து போனார்கள்.
அன்பு, பாசம், அரவணைப்பு என்று ஒரு சிறிதும் மலர்விழிக்கு கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே சோகச் சித்திரமாக அவள் வலம் வந்தாள்.
மலர்விழியின் வீட்டிற்கு ஒருநாள் சென்றாள் கோமதி. அவள் அப்பா, அம்மா இருவரும் இரு துருவங்களாக இருந்தனர்.
அவர்கள் இருவரிடமும் தனித்தனியாகப் பேசினாள் கோமதி.
"உங்கள் சண்டையால் மலர்விழி மேல நீங்க அக்கறை காட்டறது இல்லை. அது அவளோட மன நிலையை மிகவும் பாதிச்சிருக்கு. அதனால அவளோட எதிர்காலம் பாழாயிடும். நீங்க சண்டைக்காரர்களாகவே இருங்கள். ஆனால் மலர்விழி கிட்ட மட்டும் அன்பா இருங்க" என்றாள் கோமதி.
அதன் பின்னர் மலர்விழி மேல் பெற்றோர் அக்கறை காட்டினர். அவளுக்காக ஒன்று சேர்ந்தது போல் நடித்தவர்கள் நிஜமாகவே ராசியாகி விட்டனர்.
வருகிறாள். மற்ற மலர்விழி இப்போதெல்லாம் புன்னகை நிறைந்த முகத்துடன் பள்ளிக்கு மாணவிகளிடமும் நன்றாக கலகலவென்று பழகுகிறாள்.
அவள் புன்னகை முகத்தைப் பார்த்த ஆசிரியை மலர் விழியிடம்,
"ஆஹா இந்தப் புன்னகை அப்படியே உன்னை தேவதை போல காட்டுது” என்றார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் கைகூடும். கடன் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபார பயணங்கள் கைக்கூடி வரும். எதிர்பார்த்த சில பொறுப்புகள் கிடைக்கும். கல்வியில் புரிதல்கள் ஏற்படும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
ரிஷபம்
பொது வாழ்வில் செல்வாக்கு கூடும். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்கள். நினைத்த சில காரியத்தை முடிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளால் லாபம் மேம்படும். பிடிவாத போக்கை தளர்த்திக்கொள்ளவும். பணி நிமித்தமான முயற்சிகள் மேம்படும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம்
புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். பல நாட்கள் தடைப்பட்ட வருமானம் கிடைக்கும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கடகம்
நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பகள் கிடைக்கும். முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் சிறுசிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். புதுவிதமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு காரியங்களில் விழிப்புணர்வு வேண்டும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
சிம்மம்
நினைத்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வாகனத்தில் பொறுமை வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது குறைத்துக் கொள்ளவும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கன்னி
திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் உருவாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாடுகள் வரும். பிற இன மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கமிஷன் வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். மகிழ்ச்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். கல்வியில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரம் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் சில மாற்றம் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விருச்சிகம்
பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்ளவும். குழந்தைகளால் மதிப்புகள் உயரும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
மனதளவில் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை ஏற்படும். செயல்பாடுகளில் ஆர்வம் இன்மை உண்டாகும். நண்பர்களிடத்தில் அதிக உரிமை கொள்வதை தவிர்க்கவும். வரவேண்டிய சில வரவுகள் தாமதமாகும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்
மகரம்
பலம் மற்றும் பலவீனங்களை உணருவீர்கள். துணைவர் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். நண்பர்களின் வருகை உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் மேன்மையை ஏற்படும். உத்தியோகத்தில் சில வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நன்மை கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். அரசால் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். பணி நிமித்தமான முயற்சிகள் சாதகமாகும். நினைத்ததை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மீனம்
குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உயர்கல்வியில் தெளிவுகள் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும் எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள் வியாபாரத்தில் சில மாற்றமான அனுபவம் கிடைக்கும் உத்தியோகத்தில் பொறுமை வேண்டும் புதுவிதமான கனவுகள் பிறக்கும் கலைத்துறைகளில் ஆர்வம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 22 ஆம் தேதி திங்கட்கிழமை 8.12.2025
இன்று இரவு 9.51 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.
இன்று காலை 09.39 வரை புனர்பூசம் . பின்னர் பூசம்.
இன்று அதிகாலை 01.08 வரை சுப்பிரம். பின்னர் இரவு 10.37 வரை பிராமியம். பிறகு ஐந்திரம்.
இன்று காலை 10.37 வரை பவம். பின்னர் இரவு 09.51 வரை பாலவம். பின்பு கௌலவம்.
இன்று காலை 6.17 வரை சித்தயோகம். பின்னர் காலை 9.39 வரை அமிர்தயோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.15 முதல் 07.15 மணி வரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
மழை,
குளிர்,
வெயில் கூடலாம்.
குறையலாம்.
தேவைக்குக்கிடைக்காமல் போகலாம்.
காலநிலைகளில் மாற்றம் வரலாம். ஆனால் , பாதைகள் நீடித்த ஒன்று. பயணங்கள் முடிவதில்லை.
வாழ்க வளமுடன்
பிரபல ஹாலிவுட் நடிகர் கேரி ஹிரோயுகி தகவா (75) காலமானார். ஜப்பானில் பிறந்த கேரி ஹிரோயுகி தகவா, பல ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். தான் நடித்த ஹாலிவுட் படங்களில் பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்திருக்கிறார். ‘த லாஸ்ட் எம்பரர்’, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான ‘லைசன்ஸ் டு கில்’, ‘அமெரிக்கன் மி’, ‘ரைசிங் சன்’, ‘மார்டல் கொம்பட்’, ‘பேர்ல் ஹார்பர்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் வசித்து வந்த அவர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 4-ஆம் தேதி காலமானார். இதை அவருடைய மானேஜர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொண்ட பாடகி சின்மயி, அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குநர் பேரரசு காட்டமாக தெரிவித்தார்.
கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரெட் லேபில்’. இதன் கதையினை பொன்.பார்த்திபன் எழுதியிருக்கிறார். லெனின், அஸ்மின், ஆர்.வி.உதயகுமார், முனிஷ்காந்த், தருண், கெவின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினரும் மற்றும் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசும் போது, “கதாநாயகன் லெனினைப் பார்த்தால் புதியவர் போலத் தெரியவில்லை. அனுபவசாலி போலத் தெரிகிறார். கதாநாயகி அஸ்மினுக்கும் அவருக்கும் உள்ள ஜோடிப் பொருத்தம் நன்றாக உள்ளது. கமல் -ஸ்ரீதேவி , ரஜினி - ஸ்ரீபிரியா போல இந்த லெனின் - அஸ்மின் ஜோடியும் நன்றாக இருக்கிறது. இந்த ஜோடி தொடர்ந்து நடிக்க வேண்டும்.
ஒரு காலத்தில் கதை , கதாசிரியருக்கு முக்கியத்துவம் இருந்தது. கதையை வைத்துக்கொண்டு பிறகுதான் கதாநாயகர்களைத் தேடுவார்கள். ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், டி.ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற இயக்குநர்களுக்குப் பிறகு கதை திரைக்கதை வசனம் என்று முழுமையாக அவர்களே பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
பிறகு கதை என்ன என்பதை விட, யார் கதாநாயகன் என்ற காலம் வந்தது. கதாநாயகர்கள் கதையை முடிவு செய்யும்படி ஆனது. இப்போது கதையை தயாரிப்பாளர் முடிவு செய்வதில்லை. கதாநாயகன் தான் முடிவு செய்வார். ஆனால் இந்தத் தயாரிப்பாளர் கதையைத் தேர்ந்தெடுத்ததற்குப் பாராட்டுகிறேன். அது படத்தின் மீது நம்பிக்கை தரும் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இது முறையாக எடுக்கப்பட்ட படமாகத் தோன்றுகிறது.
தயாரிப்பாளருக்குக் கதை பிடித்துவிட்டால் நம்பி ஒப்புக்கொண்ட பிறகு, இயக்குநரைத் தொந்தரவு செய்யக்கூடாது. அது சித்திரவதையாக மாறிவிடும். இயக்குநர் சுதந்திரமாக இருந்தால் தான் அந்தப் படைப்பு சரியாக வரும்.
இந்த படத்தில் பாடியுள்ள சின்மயி ஏன் இங்கே வரவில்லை? இயக்குநர் யார் என்று தெரிந்துதான் பாட்டு பாடினாரா? இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டி இருக்கிறது. சின்மயி ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் அவர் நடந்து கொண்டிருக்கிறார். தெரியாமல் பாடிவிட்டேன் என்கிறார், வருத்தம் தெரிவிக்கிறார். ஒரு படத்தில் பாடல் பாடும் போது என்ன சூழல்? என்ன வரிகள் என்பதைத் தெரிந்து கொண்டு தான் பாட வேண்டும். எல்லாமும் பாடி முடித்த பிறகு வியாபாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துவது போல் நடந்து கொள்ளக் கூடாது.
ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர் தான். இயக்குநர் யார் என்று தெரியவில்லை என்று சொல்வதெல்லாம் தவறானதாகும். சின்மயி இப்படிச் சொல்வது அந்த இயக்குநருக்கு மட்டும் அவமானம் அல்ல. ஒவ்வொரு இயக்குநருக்கும் அவமானம். அதற்காக சின்மயி மன்னிப்பு கேட்க வேண்டும்.
இன்று ஒரு படம் எடுப்பது என்றால் உயிர் போகிற விஷயமாக இருக்கிறது. எவ்வளவு சிரமப்பட்டு படம் எடுக்கிறார்கள். ஆனால் சுலபமாக இப்படி இடையூறு செய்கிறார்கள். எஸ் . ஜானகி, பி. சுசீலா போன்ற பாடகிகள் எவ்வளவு பெரிய பாடகிகள். இந்தத் திரையுலகில் அவர்கள் எல்லாவிதமான பாடல்களையும் பாடினார்கள். அப்போதெல்லாம் இப்படியா நடந்தது?
குறிப்பாக இயக்குநரை, தயாரிப்பாளரை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது. பாடி முடித்து விமர்சனம் செய்வது, தொந்தரவு தருவது தவறானதாகும்” என தெரிவித்தார்.
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 7.12.2025.
இன்று அதிகாலை 01.14 வரை துவிதியை. பின்னர் இரவு 11.23 வரை திரிதியை. பிறகு சதுர்த்தி.
இன்று காலை 10.41 வரை திருவாதிரை . பின்னர் புனர்பூசம்.
இன்று அதிகாலை 03.54 வரை சாத்தியம். பின்னர் சுப்பிரம்.
இன்று அதிகாலை 01.14 வரை கரசை. பின்னர் பிற்பகல் 12.19 வரை வணிசை. பிறகு இரவு 11.23 வரை பத்தரை. பின்பு பவம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வாகனங்களால் சில விரயங்கள் நேரிடும். கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். மேலதிகாரிகள் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். மகிழ்ச்சி பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
ரிஷபம்
இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிராக பேசியவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாடிக்கையாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயணத்தால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய முயற்சிகளில் ஆலோசனை வேண்டும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
உறவுகளுக்குள் அனுசரித்து செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். வித்தியாசமான கனவுகளால் குழப்பங்கள் ஏற்படும். வேலையாட்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கடகம்
நெருக்கமானவர்கள் இடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். விலை உயர்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தையும் உழைப்புகள் அதிகரிக்கும். எதிலும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. பயனற்ற வாக்குறுதிகளை குறைத்துக் கொள்ளவும். மறைமுகமான சில எதிர்ப்புகளால் பணிகளில் தாமதம் உண்டாகும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை
சிம்மம்
தந்திரமாக சில பணிகளை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். வேலையாட்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் மதிப்புகளும் மேம்படும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கன்னி
உடன் இருப்பவர்களால் பொறுப்புக்கள் மேம்படும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். வியாபார இடமாற்றங்கள் சாதகமாகும். திறமைகளை வெளிப்படுத்துவதில் பெறுமை வேண்டும். உடல் ஆரோக்கியம் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை
துலாம்
நண்பர்கள் இடத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். முயற்சிக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். புதிய வாகனம் வாங்குவதில் பொறுமை வேண்டும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். பெருமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
விருச்சிகம்
மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். புதிய முடிவுகளில் விவேகம் வேண்டும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். சிறு சிறு வதந்திகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
சுப காரிய செலவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டில் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வருமான வாய்ப்புகள் மேம்படும். நிலுவையில் இருந்த வரவுகள் கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம் அடைவீர்கள். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மகரம்
மனதளவில் புதிய தெளிவுகள் ஏற்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் ஏற்படும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும். நன்மை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளிடத்தில் பொறுமை வேண்டும். வியாபாரம் முயற்சிகளில் தாமதம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உயர்கல்வியில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மீனம்
நினைத்த பணிகள் தாமதமாக நிறைவேறும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபம் அடைவீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் தவறிய சிலர் பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
திப்பிலி குறுகிய நீண்ட வடிவிலான இலைகளைக் கொண்ட சிறு மர இனமாகும். இதன் காய் முள் வடிவத்தில் நீண்டு இருக்கும். இதுவே மருத்துவக் குணம் உடையது. தமிழகமெங்கும் வீடுகளிலும் தோட்டங்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது.
வேறு பெயர்கள்: உண்சரம், உலவை நாசி, சாமன், குடாரி, கோலகம், கோலி, கோழையறுக்கா, சரம்சாடி, துளவி, மாகதி, கணை, செப்ண்டி, சூண்டுகி, கணம், கலினி, பாணம், பிப்பிலி, வைதேகி, அம்பு, ஆதிமருந்து
வகைகள் ஆனைத் திப்பிலி, அரிசித் திப்பிலி
ஆங்கில வார்த்தைகள் - Piperlongum, linn, Piperaceae.
இனி மருத்துவ குணங்களைப் பார்ப்போம்
திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கமறல, வீக்கம், பசியினமை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்.
திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.
திப்பிலியை இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், கபம், வாய்வு நீங்கும்..
செரிமானம் அதிகரிக்கும்.
திப்பிலி 50 கிராம், கரிசலாங்கண்ணி இலை 25 கிராம், 1/2 லிட்டா நீரில் போட்டு நீரைச் சுண்டக் காய்ச்சிய பின் நிற்கும் திப்பிலியையும் தழையையும் இள வறுப்பாய் வறுத்துப் பொடித்த எடைக்குச் சமமாகப் பொரிப்பொடி சேர்த்து அதே அளவு சர்க்கரை கூட்டி 5 கிராம் அளவு 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டுவர இருமல, களைப்பு நீங்கும்.
திப்பிலி 10 கிராம், தேற்றான் விதை 5 கிராம் சேர்த்துப் பொடியாக்கி கழுநீரில் 5 கிராம் எடை அளவைப் போட்டு 7 நாள் காலையில் குடித்துவர வெள்ளை, பெரும்பாடு நீங்கும்.
திப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இருவேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டுவர இளைப்பு நோய் குணமாகும்.
திப்பிலிப் பொடி 50 கிராம், கடுக்காய்ப் பொடி 25 கிராம் எடுத்துத் தேனில் கலந்து 2 தேக்கரண்டி வீதம் 2 வேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டு வர இளைப்பு நோய் குணமாகும்.
திப்பிலிப் பொடி 10 கிராம் அரை மி.லி.பசுவின் பால் விட்டு காய்ச்சி 2 வேளை குடித்துவர இருமல், வாயவு, மூர்ச்சை, முப்பிணி குணமாகும்.
திப்பிலி 200 கிராம், மிளகு, சுக்கு வகைக்கு 100 கிராம், சீரகம் 50 கிராம், பெருஞ்சீரகம் 50 கிராம், அரத்தை 50 கிராம், இலவங்கப்பட்டை 25 கிராம், ஓமம் 50 கிராம், தாளீசபத்திரி, இலவங்கப்பத்திரி, திரிவலை, இலவங்கம், ஏலம், சித்திர மூலம் வகைக்கு 50 கிராம் இவற்றை இளவறுப்பாய் வறுத்துப் பொடித்து 1 கிலோ சாக்கரை கலந்து தேன்விட்டுப் பிசைந்து அரை தேக்கரண்டியளவு 40 நாட்கள் 2 வேளை சாப்பிட்டு வர இளைப்பு, ஈளை, இருமல், வாய்வு குணமாகும்.
திப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கலந்து 2 வேளையாக 1 மாதம் சாப்பிட்டு வர தேமல் குணமாகும்.
தாத்தா,பாட்டி காலங்களில் மழையை எவ்வாறு வகைப்படுத்தி வைத்திருந்தனர் என்பதை சற்று திரும்பி பார்ப்போமா!
தமிழ்மொழி, பிறமொழி போல் அல்ல!
வாழ்வியல் மிக்கது!
1. ஆலி - ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி - உடலோ உடையோ நனையாது.
2. தூறல் - காற்று இல்லாமல் தூவலாக பெய்யும் மழை - புல் பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும் ஆனால் விரைவில் காய்ந்து விடும்..
3. சாரல் - பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் மழை சாரல் எனப்படும்.. மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளை கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை சாரல் என்பர்….
☆ சாரல் என்பது மலையில் பட்டு தெறித்து விழும் மழை என சிலர் கூறுவது முற்றிலும் தவறு.. (சாரலடிக்குது சன்னல சாத்து என்பதை கவனிக்கவும்)
சாரல் - சாரம் என்பன சாய்வை குறிக்கும் சொற்கள், மலைச்சாரல் என்பது மலையின் சரிவான பக்கத்தை குறிக்கும்….
அதை தவறாக மலையில் பட்டு தெறிக்கும் நீர் என பொருள் கொண்டு விட்டனர் என்று கருதுகிறேன்.
சாரல் மழை என்பது சாய்வாய் (காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப) பெய்யும் மழை என்பதே பொருள்
சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும்... மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும்
4. அடைமழை - ஆங்கிலத்தில் Thick என்பார்களே அப்படி இடைவெளியின்றி பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை..
அடை மழையில் நீர் பெரும் ஓடைகளாகவும் குளம் ஏரிகளை நிரப்பும் வகையிலும் மண்ணுக்கு கிடைக்கும்..
5. கனமழை - துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும்
6. ஆலங்கட்டி மழை - திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து , மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ஆலங்கட்டி மழை (இவ்வாறு பனி மழை பெய்ய சூடோமோனஸ் சிரஞ்சி என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும்…. புவி வெப்பமயமாதலினால் இந்த பாக்டீரியா முற்றிலும் அழிந்து விடக்கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்).
7. பனிமழை - பனிதுளிகளே மழை போல பொழிவது. இது பொதுவாக இமயமலை ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்..
8. ஆழி மழை - ஆழி என்றால் கடல் இது கடலில் பொழியும் மழையை குறிக்கும். இதனால் மண்ணுக்கு பயனில்லை ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம் மழை..
மாரி - காற்றின் பாதிப்பு இல்லாமல் வெள்ளசேதங்கள் இன்றி மக்கள் இன்னலடையாமல் பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராக பெய்வது.
(அதனால்தான் இலக்கியங்களில் ‘மாதம் மும்மழை பெய்கிறதா?’ என்று கேட்காமல் மக்கள் அவதிக்குள்ளாகாமல் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று கேட்பதாக சொல்லப்பட்டிருக்கின்றன.)
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படத்துக்கு ‘ஹேப்பி ராஜ்’ எனப் பெயரிடப்பட்டு டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தாலும், நாயகனாகவும் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். சில மாதங்களுக்கு முன்பு பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மரியா இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நாயகனாக நடித்து வந்தார். இப்படத்தினை பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.
இப்படத்துக்கு ‘ஹேப்பி ராஜ்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதன் டைட்டில் லுக்கை மட்டும் தற்போது வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தில் அப்பாஸ், ஜார்ஜ் மரியான், கெளரி ப்ரியா, ப்ரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோஃபா பாய் ரசூல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் மரியா இளஞ்செழியன் தலைப்பின் பின்னணி குறித்து கூறும்போது, “’ஹேப்பி ராஜ்’” என்ற தலைப்பு ஒரு எளிய ஆனால் ஆழமான சிந்தனையில் இருந்து உருவானது. சினிமாவை மகிழ்ச்சியின் கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் என்ற விருப்பம். என் நாயகனுக்கு ‘ஹேப்பி’ என்று பெயர் வைக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கிறது. அந்த பெயர் கதையின் மைய உணர்வை எப்போதும் நினைவூட்டும் ஒரு குறியீடு ஆகும்.
முழுக் கதையிலும் ‘ஹேப்பி’என்ற வார்த்தை நூற்றுக்கும் மேற்பட்ட முறை ஒலிக்கும்; அது வெறும் சொல் அல்ல, நம்பிக்கையூட்டும் ஒரு தாள லயம் சேர்ந்த மந்திரம் போன்றது. இந்தக் கதை அடிப்படையில் தூய மற்றும் உண்மையான மகிழ்ச்சியை மையக் கருவாகக் கொண்டது; அதே சமயம் வாழ்க்கையின் பல்வேறு உணர்வுகளையும் தொடுகிறது. "ஹேப்பி ராஜ்" படம் மகிழ்ச்சியான மற்றும் ஊக்கமளிக்கும் ஒரு அனுபவமாக அமையும்; மனதை நிம்மதியாக்கும். கோபம், புன்னகை, மகிழ்ச்சி அனைத்தும் நம் கையில் தான் உள்ளது என்பதை உணர்த்தும். வாழ்க்கையில் நம்பிக்கையுடன் போராடுபவர்களுக்கான ஒரு படைப்பு” என தெரிவித்தார்.
’ஹேப்பி ராஜ்’ படத்தின் இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் பணிபுரிந்து வருகிறார். இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ‘ஹேப்பி ராஜ்’ படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்கப் பாடகி கேட்டி பெர்ரி இடையேயான காதல் வதந்தி மாதக்கணக்கில் சர்வதேச ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக இருந்து வருகிறது.
அண்மையில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஃபுமியோ கிஷிதா தன் மனைவியுடன் சேர்ந்து ட்ரூடோ மற்றும் பெர்ரியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, இந்த வதந்தி மேலும் தீவிரமடைந்துள்ளது.
கிறிஸ்துமஸ் மரம் முன் நின்று பெர்ரியின் தோளில் கை வைத்தபடி ட்ரூடோ இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பதிவில் கிஷிதா, கேட்டி பெர்ரியை ட்ரூடோவின் “பங்காளர்” என குறிப்பிட்டது கனடியர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரூடோவும் அந்தப் பதிவை மீண்டும் பகிர்ந்து, “கேட்டி மற்றும் நான் உங்களுடனும் யுகோவுடனும் அமர்ந்து பேச வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி” என குறிப்பிட்டுள்ளார்.
இருவரும் இதுவரை தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. மறுபக்கம், கேட்டி பெர்ரியும் கடந்த ஜூனில் நடிகர் ஓர்லாண்டோ ப்ளூமுடன் தனது 10 வருட உறவை முடித்ததாக அறிவித்திருந்தார்.
ட்ரூடோ, சுமார் 12 ஆண்டுகள் லிபரல் கட்சிக்கு தலைமை தாங்கிய பின்னர், 2025 ஜனவரியில் அடுத்த தேர்தலுக்கான வேட்பாளராக தன்னைப் பார்க்க முடியாது என தெரிவித்து கட்சித் தலைமை பொறுப்பிலிருந்து விலக்கிக் கொண்டார்.
கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த விடயத்தை கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால், கனடாவில் ஒரே மாதத்தில் 54,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை முன்னதாக சிறு அளவிலான வேலை இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்த நிலையில் வேலை வாய்ப்புகள் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை இல்லா விகிதமும் ஒக்டோபரில் இருந்த 6.9 வீதத்தில் இலிருந்து நவம்பரில் 6.5 வீதமாக குறைந்துள்ளது. இந்தநிலையில், செப்டம்பர் முதல் நவம்பர் வரை மொத்தம் 181,000 புதிய வேலைகள் உருவாகியுள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
விமர்சன பேச்சுக்களால் செயல்களில் சில மாற்றம் ஏற்படும். தன வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறைகளில் அலைச்சல் உண்டாகும். சிறிய முதலீட்டில் லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
ரிஷபம்
பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் புரிதல் வேண்டும். புதிய அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். வருமான வாய்ப்புகள் கூடும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
மிதுனம்
அரசு காரியத்தில் சிந்தித்து செயல்படவும். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். மறைமுகமான எதிர்ப்புகளால் சஞ்சலம் உண்டாகும். பெரியவர்களிடம் நன்மதிப்புகள் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு வந்து செல்லும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
கடகம்
நண்பர்கள் இடத்தில் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஜாமீன் செயல்களை தவிர்க்கவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். சக ஊழியர்களால் சிறு சிறு வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். ரகசியமான சில முதலீடுகள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். சுகம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சிம்மம்
மனதில் இருந்த கவலைகள் குறையும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெள்ளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் முக்கியத்துவம் ஏற்படும். சமூகப் பணிகளில் மேன்மை உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
சமூக நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். முயற்சிகளில் புதிய அனுபவம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
துலாம்
கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். நீண்ட நாள் தடைப்பட்ட பணிகள் முடியும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புண்ணிய ஸ்தல பயணங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தி ஏற்படும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
விருச்சிகம்
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். அரசு பணிகளில் பொறுமை வேண்டும். விதண்டாவாத பேச்சுகளை குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களால் கால விரயம் உண்டாகும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறு தூர பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சுப காரிய முயற்சிகள் கைகூடிவரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய அறிமுகங்கள் கிடைக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். வருத்தம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகரம்
உறவினர்களுடன் சிறு சிறு விவாதங்கள் வந்து போகும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். முயற்சி ஏற்ப புதிய வேலைகள் சாதகமாகும். விவசாய பணிகளில் பொறுமை வேண்டும். பங்குதாரர்களிடம் அனுசரித்து செல்லவும். அரசு வழியில் ஆதாயம் ஏற்படும். நெருக்கமானவர்கள் மூலம் ஒத்துழைப்பு ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கும்பம்
நண்பர்கள் மூலம் ஆதரவான காரியங்கள் நடைபெறும். இடம் மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வாக்குவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. வித்தியாசமான கற்பனைகள் மனதில் அதிகரிக்கும். கலைத்துறையில் மேன்மை ஏற்படும். உயர் அதிகாரிகள் குறித்த சில புரிதல்கள் உண்டாகும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மீனம்
செயல்பாடுகளில் இருந்த தடைகள் விலகும். சுப காரியம் முயற்சிகள் கைகூடும். தாய் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கடிகளை சமாளிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 20 ஆம் தேதி சனிக்கிழமை 6.12.2025
இன்று அதிகாலை 03.19 வரை பிரதமை. பின்னர் துவிதியை .
இன்று பிற்பகல் 12.03 வரை மிருகசீரிடம் . பின்னர் திருவாதிரை.
இன்று காலை 06.50 வரை சாத்தியம். பின்னர் சுபம்.
இன்று அதிகாலை 03.19 வரை கௌலவம். பின்னர் பிற்பகல் 02.17 வரை தைத்தூலம். பிறகு கரசை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை



















