Quote of the Day

பழமொழி: அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

Google Mobile Apps
Apple Mobile Apps
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.

எந்த விமானமும்

ஓடுபாதை முடிந்துவிட்டது

என்று நின்றுவிடுவதில்லை..

அங்கிருந்து தான்

அது பறக்க ஆரம்பிக்கிறது

எல்லாம் முடிந்து விட்டது

என்று நினைக்கும் இடம் தான்

ஒரு புதிய துவக்கத்தின் ஆரம்பம்..

மனம் தளராது

நம்பிக்கை கொள்வோம்.

காலை வணக்கம்
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

அக்கம், பக்கத்து வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். பணியாட்களின் மாற்றம் தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

ரிஷபம்

தம்பதிகளுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். விதண்டாவாதப் பேச்சுக்களைக் குறைத்துக்கொள்ளவும். வியாபாரம் தொடர்பான பணிகளில் மந்தமான சூழ்நிலை ஏற்படும். எதிர்காலம் நிமித்தமான புதிய தெளிவு உண்டாகும். புதியவர்களின் வருகையால் சுப விரயங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்

 

மிதுனம்

பிற மொழி பேசும் மக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நன்மை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கடகம்

தந்தைவழித் தொழிலில் மேன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். மனதிற்கு விரும்பியவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் சிந்தித்துச் செயல்படவும். புதிய துறை சார்ந்த கலந்தாய்வில் பங்குகொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

சிம்மம்

மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம், பக்கத்தில் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். உத்தியோகத்தில் அனுசரித்துச் செல்லவும். நினைத்த பணிகளை திட்டமிட்டுச் செயல்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

கன்னி

நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். திறமைக்கேற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். அரசு தொடர்பான உதவிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். வரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

துலாம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். கொடுக்கல், வாங்கலில் பொறுமை வேண்டும். நவீன சாதனங்கள் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவு அதிகரிக்கும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

விருச்சிகம்

கணவன், மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். சில வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். பேச்சுவன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். வீடு, மனை விற்பதில் லாபம் உண்டாகும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். சில அனுபவங்களின் மூலம் புதிய பாதைகள் புலப்படும். அமைதி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

 

தனுசு

புதிய வேலை நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். பொறுமையுடன் செயல்பட்டால் காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. விளையாட்டு விஷயங்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மகரம்

வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பாக சிந்தனைகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உயர் அதிகாரிகளால் சில மாற்றமான தருணம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். தாமதம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கும்பம்

சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். சேமிப்பு சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும். உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் சில மாற்றமான தருணங்கள் அமையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். எதிர்ப்புகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

மீனம்

நம்பிக்கையானவர்களின் அறிமுகம் கிடைக்கும். நினைத்த பணிகளை முடிப்பீர்கள். முதலீடு சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

·
Added a post
·

விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 29 ஆம் தேதி வியாழக்கிழமை 12.6.2025.

இன்று பிற்பகல் 02.56 வரை பிரதமை. பிறகு துவிதியை.

இன்று இரவு 10.33 வரை மூலம். பின்னர் பூராடம்.

இன்று பிற்பகல் 02.19 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.

இன்று அதிகாலை 02.37 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 02.56 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று அதிகாலை 05.51வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=11&dpx=1&t=1749700769

நல்ல நேரம்:

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

Good Morning...

·
Added article
·

கலங்கரை விளக்கம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, தன் மகளுக்கு வரன் பார்த்து வரும் விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் இயக்குனர் கே.சங்கர் சொன்னார். ‘‘கல்யாண வயதில் உங்களுக்கு மகள் இருக்கிறாளா? கொஞ்சம் இருங்கள்’’ என்று கூறிய எம்.ஜி.ஆர்., உடனே தனது அண்ணன் சக்ரபாணிக்கு போன் செய்து, ‘‘சங்கரின் பெண்ணை நம்ம ராமுவுக்கு (சக்ரபாணியின் மகன் ராம மூர்த்தி) பார்த்தால் என்ன?’’ என்று கேட்டார். சங்கருக்கோ தயக்கம் ஒருபக்கம், மகிழ்ச்சி மறுபக்கம். ‘‘சார் ஏன் அவசரப் படுறீ்க?’’ என்றார்.

அதற்கு, ‘‘ராமுவை நான் வளர்த்து படிக்க வைத்தேன். அவன் என் பையன். அவனுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். சங்கர் அவரது சம்பந்தியானார். ஐயப்ப பக்தரான சங்கர், ‘‘எம்.ஜி.ஆர். படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது மட்டு மின்றி, அவருக்கே சம்பந்தியாக என்னை ஆக்கியது ஐயப்பனின் கருணை’’ என்று சிலிர்த்துப் போனார்.

‘இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மணிப்பாலில் நடந்தது. அந்த சமயத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்கு முதன்முதலில் எம்.ஜி.ஆரை சங்கர் அழைத்துச் சென்றார். கோயிலுக்கு பின்புறம் சங்கரபீடம் இருக்கிறது. அங்கே தான் ஆதிசங்கரர் தவம் செய்து பின்னர், மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்தார். சிறப்பு அனுமதி பெற்று சங்கரபீடத்தின் உள்ளே எம்.ஜி.ஆர். தனிமையில் தியானம் செய்ய சங்கர் ஏற்பாடு செய்தார். ஒரு மணி நேரத்துக்கு பின் வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ‘‘நிம்மதியாக இருந்த இந்த தருணத்தை வாழ்க்கையில் மறக்கவே முடியாது’’ என்று கூறியிருக்கிறார்.

சங்கர் வீட்டில் மற்றொரு திருமணத் தின்போது, அவருக்கு பண உதவி செய் வதாக கூறியவர்கள் கடைசி நேரத்தில் கைவிட்டனர். திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது. அது முடிந்தவுடன் வேலை செய்தவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். என்ன செய்வ தென்று தெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருந்தார் சங்கர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., மணமக்களை வாழ்த்திவிட்டு சங்கர் கையில் இரண்டு பாக்கெட்களை திணித்தார். அவற்றில் சங்கருக்குத் தேவையான பணம் இருந்தது.

சங்கர் நெகிழ்ந்து கூறினார்: ‘‘மகாபாரதக் கர்ணன்கூட கேட்டவர்களுக்குத்தான் கொடுத்தான். கேட்காமலேயே மற்றவர் களுக்கு கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.!’

·
Added a post
·

வாழ்கையில் அனுபவபூர்வமாக உணர்ந்து, கற்று, பின்பற்றக்கூடிய - கீழ் கண்ட விடயங்கள்.......

எப்போதும் தயாராக இருங்கள்!

மாற்றம் ஒன்றுதான் உலகிலே மாற்றம் இல்லாதது!

அதனால் கல்வியோ ,வீட்டு சமையல் அறையோ, குழந்தை வளர்ப்போ,பொழுது போக்கோ அல்லது அலுவலக சூழ்நிலையோ,

இப்படி எதுவாக இருந்தாலும் எப்போதும் புது விடயங்களை முயற்சிக்க தயாராக இருங்கள்.

விழுவதற்கு பயப்படாதீர்கள்!

சரியாக சொல்லப்போனால் புதிய முயற்சிகளில் தோல்வியை தான் நிறைய சந்திக்க வேண்டி இருக்கும்.

எப்படி மிதி வண்டி ஓட்ட கற்கும் போது கீழே விழாமல் கற்று கொள்ள முடியாதோ, அப்படி தான் புதிய விடயங்களை முயற்சிக்கும் போதும்,

தோல்விகளுக்கு.(விழுவதற்கு). எப்போதும் பயப்படாதீர்கள்!

உடனே எழுந்து விடுங்கள்!

  • விழுந்தவுடன் எக்காரணம் கொண்டும் சிந்திக்காதீர்கள்!

உடனே எழுந்து விடுங்கள்.

  • அய்யோ நான் இப்படி விழுந்து விட்டேனே!
  • நம்மால் முடியுமா?
  • இதெல்லாம் தேவையா?

இப்படி ஏதாவது சிந்திக்க ஆரம்பித்தால் தொலைந்தோம். அதனால் விழுந்தவுடன் -எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை.

உடனே எழுந்துவிடுங்கள்!

எழுந்து கொள்ளும் போது கிடைத்ததை எடுத்துக்கொண்டு எழுந்து கொள்ளுங்கள்!

இப்பொழுது தான் மிக முக்கியமான கட்டம்.

  • விழுவது தப்பில்லை!
  • அதில் பாடம் கற்கவில்லை என்றால் -பெரிய தவறு!
  • கிடைத்த பாடத்தை எடுத்து கொண்டு உறுதியோடு எழுந்திரியுங்கள்!
  • ஒரு தவறை இரு முறைக்கு மேல் செய்தால் நாம் பின்தங்கி விடுவோம்.
  • அதனால் விழும் போது கற்ற பாடங்களை எப்பொதும் நினைவில் கொள்ளுங்கள்!
  • அனுபவம் தானே சிறந்த ஆசான்.

ஓட துவங்குங்கள்!

இனி ஓட துவங்குங்கள்!

அது கல்வியாக இருக்கட்டும், குடும்பமாக இருக்கட்டும் அல்லது வேலையாக இருக்கட்டும்.

இது தான் வாழ்க்கை......

·
Added a post
·

எட்டு வகையான வெஜிடேரியன் உண்பவர்களை இந்தியாவில் மட்டும் பார்க்கலாம்

1. Pure Vegetarian - சுத்த சைவம் , மாமிசம் வாசனையே ! நோ!!!

2. Eggitarian - முட்டை மட்டும் சாப்பிட்டு கொள்ளளாம். ஆனால் அது இட்ட கோழி!!!! நோ!

3. Cakeytarian - முட்டை கலந்துள்ள கேக் மட்டும் ஓகே! ஆனால் ஆம்லெட் ஆஃப் பாயில்!!! நோ!

4. Gravytarian - சிக்கன் குழம்பு மட்டும் சரி!!! ஆனா லெக் பீஸ் சாரி!!!

5. Restrictarian - வெளியில் சென்றா சாப்பிட்டு கொள்ளளாம் !! வீட்டில் முடியவே !! முடியாது!!!

6. Boozytarian - ஒன்லி சரக்கு அடிக்கும் போது மட்டும் KFC அல்லது கிரில் சிக்கன். மற்றபடி தீவிர சைவம்!

7. Forcitarian - நான் சாப்பிட மாட்டேன் பா! யாராவது அன்பா ! சாப்பிட சொன்னா அவங்க மனசு நோக கூடாது என்று ! ஒரு ரெண்டு மூணு ஃபீஸ்! அம்புட்டுதான்!!

8. Calentarian - செவ்வாய் , வியாழன் , சனி கண்டிப்பா அசைவ வாசனை வர கூடாது. ஹி! ஹி !! வியாழன், வெள்ளி, அப்புறம் sunday சாப்பிட்டு கொள்ளலாம்!!

அப்ப சொல்லுங்க நீங்க எந்த வகை வெஜிடேரியன்!!

·
Added a post
·

திருப்பதி அருகிலுள்ள மங்காபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டி இருந்தாள். அவளது பெயர் கங்கம்மா. சுண்டல் விற்பது அவளுக்குத் தொழில். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தினாள். கணவர் போய்விட்டார். பிள்ளைகளும் இல்லை.

"ஏண்டா பிறந்தோம்" என்று அடிக்கடி புலம்புவாள். அந்தக் காலத்தில், காட்டுப்பாதையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்துதான் திருமலைக்குச் செல்வார்கள். அப்படி ஒருநாள் பக்தர்கள் கூட்டம் அதிகாலைப் பொழுதில் மலையேறிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தை மலை அடிவாரத்தில் கண்ட பாட்டி, மலையேறுபவர்களிடம் சென்று, "ஐயா! நீங்க எல்லாரும் மலைக்கு எதற்காகச் செல்கிறீர்கள்?'' என்று ஒன்றும் அறியாதவளாய்க் கேட்டாள்.

அவளுடையஅப்பாவித்தனமான கேள்வியைக் கேட்டதும் அவர்கள் சிரித்து விட்டனர். "என்ன பாட்டி இது கேள்வி? திருமலையின் அடிவாரத்தில் இப்படியும் ஒருத்தி இருக்கியே! மேலே பெருமாள் கோயில் இருப்பது திருப்பதிகாரியான உனக்கே தெரியாதா?'' என்று கோபித்துக் கொண்டனர்.

உண்மையில், மலையில் கோயில் இருப்பதைக் கூட அறியாமல் இருந்தாள் அவள். ஒரு பக்தர் மட்டும் அவள் மீது இரக்கம் கொண்டு, "அம்மா! மலை மேல் ஒரு சுவாமி இருக்கிறார். அவனைப் போய் தரிசித்தால் இனிமேல் இப்படி பிறந்து சுண்டல் விற்கும் நிலை இருக்காது. அவனை "கோவிந்தா" எனச் சொல்லி கும்பிட வேண்டும். அப்படி செய்தால் நீ செய்த பாவங்களெல்லாம் தீர்ந்து விடும்,'' என்று அவளுக்குப் புரியும் வகையில் எளிமையாக எடுத்துச் சொன்னார்.

இதைக் கேட்டாளோ இல்லையோ! சுண்டல் கூடையோடு திருமலைக்கு ஏறினாள். ஏழுமலையப்பனைக் கண்குளிரக் கண்டாள். "அப்பனே! கோவிந்தா, உன்னை வணங்கினால் இனி பிறக்கவே மாட்டேனாமே! அந்த பக்தர் சொன்னாரே! எனக்கும் இனி பிறவி வேண்டாமையா'' என்று மனம் உருகிச் சொன்னாள். தரிசிக்க வந்த பக்தர்கள் மலையை விட்டுக் கிளம்பினார்கள்.

அவள் மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள். அப்போது, ஒரு வயோதிகர் அங்கு வந்தார். "அம்மா! சுண்டல் கொடு'' என்று கேட்டார். அவளும் கொடுக்க, சாப்பிட்டு விட்டு நடையைக் கட்டினார்."ஐயா! சுண்டலுக்கு காசு கொடுத்துட்டு போங்க,'' என்றாள் பாட்டி."அம்மா! நான் ஒரு கடன்காரன், கல்யாணத்துக்குக் கடன் வாங்கிவிட்டு, வருமானத்தையெல்லாம் வட்டியாகக் கட்டிவிட்டு கஷ்டப்படுகிறேன். சுண்டலுக்கு கூட பணமில்லை. நாளை இங்கே வருவேன். அப்போது காசு தருகிறேனே!'' என்றார் கெஞ்சலாக.

"சரி, நாளை கொண்டு வாங்க,'' என விட்டுவிட்டாள் மூதாட்டி. தன் முன்னால் வந்து நின்றது உலகிற்கே படியளக்கும் ஏழுமலையான் என்பதைப் பாமரப் பெண்ணான கங்கம்மா எப்படி அறிவாள்!

மறுநாள், சொன்னபடி அந்த வயோதிகர் வரவில்லை. "இப்படி ஏமாற்றி விட்டாரே கிழவர்" என அவள் பொருமிக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் இறந்தும் போய்விட்டாள்.

பாட்டிக்கு பணத்துக்கு பதிலாக, மேலான வைகுண்டத்தையே கொடுத்து விட்டார் பரந்தாமன். ஆனாலும், அவர் மானிடப்பிறப்பெடுத்து சீனிவாசனாக பூமிக்கு வந்தவர் இல்லையா!

பாட்டிக்கு மறுநாள் காசு கொடுப்பதாக வாக்களித்து விட்டு, கொடுக்கவில்லையே!

இதனால் தெற்குமாடவீதியிலுள்ள அசுவ சாலையில், இப்போதும் விழாக்காலங்களில் அவர் பவனியாக வரும் போது, பாட்டிக்கு பயந்து கொண்டு மேளதாளம் இல்லாமல் ஒளிந்து கொண்டு செல்கிறார்.

இந்தக் கதையைப் படித்தவர்களெல்லாம், தீர்க்காயுளுடன் வாழ்ந்து, பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்

·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பலம் பலவீனங்களைப் புரிந்துகொள்வீர்கள். சமூகப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். விதண்டாவாதப் பேச்சுகளைக் குறைத்துக் கொள்ளவும். வாடிக்கையாளர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். ஆடம்பரமான செலவுகளால் கையிருப்புகள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 

 

ரிஷபம்

இழுபறியான சில விஷயங்களைத் தீர்ப்பதற்கான சூழல் அமையும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாகச் செயல்படுவார்கள். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். நலம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு

 

மிதுனம்

உறவுகள் மத்தியில் மதிப்பு உயரும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். பணவரவுகள் சாதகமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

கடகம்

விமர்சனப் பேச்சுக்களால் செயல்களில் சில மாற்றம் ஏற்படும். தனவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். தள்ளிப்போன சில காரியங்கள் முடியும். சவாலான செயலைச் செய்வீர்கள். அக்கம், பக்கத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்

 

சிம்மம்

உறவுகள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரம் சார்ந்த சிக்கல்களைச் சமாளிப்பீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சக ஊழியர்களால் திருப்தி ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

கன்னி

சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பழைய சிக்கல்கள் விலகும். அலுவலகப் பணிகளில் துரிதம் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். முயற்சி ஈடேறும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர்

 

துலாம்

பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான இடமாற்றச் சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

விருச்சிகம்

மூத்த உடன்பிறப்புகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படுவது நல்லது. கலைத்துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மருமகன் வழியில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். அமைதி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

தனுசு

விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமை காக்கவும். வெளியூர் தொடர்பான கல்வி வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத வரவுகளால் பொருளாதாரம் மேம்படும். வியாபாரத்தில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். எதிர்மறையான விஷயங்களில் தெளிவு ஏற்படும். தடைகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

மகரம்

புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மனதில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். இழுபறியான விஷயங்களுக்கு திடீர் முடிவு எடுப்பீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கும்பம்

சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மருத்துவப் பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் காணப்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்குச் செல்வாக்கு அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

 

மீனம்

ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் இடமாற்றம் சார்ந்த முயற்சிகளில் மேம்படும். மாறுபட்ட அணுகுமுறையால் சில பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். அனுபவம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

·
Added a post
·

விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 28 ஆம் தேதி புதன்கிழமை 11.6.2025.

இன்று பிற்பகல் 01.53 வரை பௌர்ணமி. பிறகு பிரதமை.

இன்று இரவு 08.59 வரை கேட்டை. பின்னர் மூலம்.

இன்று பிற்பகல் 02.23 வரை சாத்தியம். பின்னர் சுபம்.

இன்று அதிகாலை 01.10 வரை பத்தரை. பின்னர் பிற்பகல் 01.53 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று இரவு 08.59 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=10&dpx=1&t=1749623563

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

காலை வணக்கம்

·
Added a news
·

கனடாவின் மார்க்ஹாம் பகுதியில் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஒருவர் தகாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த பயிற்றுவிப்பாளர் ஒன்பது ஆண்டுகளாக பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யார்க் பிராந்திய காவல் துறையினர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

2024 மே மாதம் ஒரு பாதிக்கப்பட்டவர் முன்வந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை தொடங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் 2015ம் ஆண்டில் ஆரம்பித்து 2024ம் ஆண்டு வரை தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குற்றச்சாட்டுகள் ஆரம்பமான போது பாதிக்கப்பட்டவர் 16 வயதுக்கு கீழ் இருந்ததாக காவல்துறை கூறியுள்ளது.

58 வயதான மார்க்ஹாம் நகரத்தைச் சேர்ந்த கார்த் மோரிஸ் என்பவர், கடந்த 5ம் திகதி கைது செய்யப்பட்டார்.

மோரிஸ், மார்க்ஹாமில் கூடைப்பந்து, டென்னிஸ் மற்றும் கரப்பந்தாட்டப் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

மேலும், இதே போன்று பாதிக்கப்பட்ட பிறரும் இருக்கக்கூடும் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

New People