Quote of the Day

பழமொழிகள்: அடக்கமே பெண்ணுக்கு அழகு.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
sivam 280
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
·
Added a post

சிவபெருமான் ஒருநாள் நரகத்திற்குப் போனார். பெரிய பெரிய பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கலை ஏலக்காயும் சாதிக்காயும் பச்சைக் கற்பூரமும் குங்கும பூவும் மணக்க நெய் ததும்பக் கொண்டுபோய் வைத்தார். “இதை எல்லோரும் வேண்டிய மட்டும் உண்ணலாம். ஒரே ஒரு நிபந்தனை, கையை மடக்காமல் உண்ண வேண்டும். மாலையில் வருவேன். அதற்குள் உண்டு முடியுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதேபோல சொர்க்கத்திலும் கொண்டுபோய் வைத்தார். நரகவாசிகள் எவ்வாறு உண்பது என்று உண்ணாமலே இருந்துவிட்டனர். சர்க்கரைப் பொங்கல் அப்படியே இருந்தது, ஒரு சிறிதும் செலவாகமலே,

ஆனால், சொர்க்கவாசிகளோ முழுவதையும் சாப்பிட்டு முடித்துப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருந்தனர்.

நரகவாசிகளை அழைத்துக்கொண்டு சிவபெருமான் சொர்க்கத்திற்குப் போனார். சொர்க்கவாசிகளிடம் எவ்வாறு கையை மடக்காமல் சாப்பிட்டீர்கள்? என்று கேட்டார்.

அவர்கள் சொன்னார்கள்.

“நான் எடுத்து அவருக்கு ஊட்டினேன். அவர் எடுத்து எனக்கு ஊட்டினார். இவ்வாறு எல்லோரும் மற்றவர்களுக்கு ஊட்டினோம். அனைவரும் உண்டோம். அண்டாவும் காலி, எங்கள் பசியும் போச்சு” என்றனர். நரகவாசிகள் தங்களுக்கு இந்த தந்திரம் தெரியாமல் போயிற்றே என்று நினைத்து வெட்கப்பட்டனர்.

எது சொர்க்கம்?

இந்தக் கதை என்ன சொல்கிறது?

எல்லோரும் மற்றவர்களுக்கு உதவும் நிலை வந்தால் ஒருவரும் துன்பபடமாட்டார். சொர்க்கம் என்பதே எல்லாரும் எல்லார்க்கும் உதவிசெய்து வாழும் இடந்தான். இப்படி வாழ்ந்தால் வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க. தன்னைப் பற்றியே கவலைப்படுகிறவர்கள் நிறைந்த இடமே நரகம்.

  • 3
·
Added article

ஜரீனா மொய்டு என்ற இயற்பெயரைக் கொண்ட நதியா மலையாளி பெற்றோருக்கு மும்பையில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரியில் படிக்கும் போதே சினிமா வாய்ப்பினை பெற்றவர். 80 களில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்.

1984 ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் பத்மினி அவர்களுடன் இணைந்து ‘நோக்கேத தூரத்து கண்ணும் நாட்டு’ என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார். அதே படம் தமிழில் ரீமேக் ஆனது. அதிலும் பத்மினியுடன் இணைந்து நடித்து தமிழில் அறிமுகமானார்.

நதியா பல வெற்றி தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும் அளவிற்கு பிரபலமாக இருந்தார் – நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவை மற்றும் நதியாவின் கொண்டை ஸ்டைலும் கூட பிரபலமானது.

2000 த்திற்கு பிறகு துணை கதாபாத்திரங்கள், நகை கடை விளம்பரங்களில் நடித்தார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘ஜாக்பாட்’ -ஐ தொகுத்து வழங்கினார். கிட்டத்தட்ட 40 வருடங்களாக சினிமாவில் பணியாற்றும் நதியா இன்றும் இளமையாக இருப்பதை கண்டு ஆச்சர்யப்படாதோர் இல்லை.

தனது இளமையான தோற்றத்தின் ரகசியத்தை பகிர்ந்துள்ளார் நதியா. அவர் கூறியது என்னவென்றால், நான் நன்றாக சாப்பிடுவேன், பழங்கள், காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்வேன். மேலும் தினமும் தவறாமல் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வேன். இதுதான் எனது இளமையின் ரகசியம் என்று பகிர்ந்துள்ளார் நதியா.

  • 3
·
Added a post

முன்னொரு காலத்தில் தேவாசுரப் போர் மிக கடுமையாக நடந்தது. இப்போரில் தேவர்கள் தோற்றனர். தோற்ற தேவர்கள் பிரம்மாவிடம் ஓடிச் சென்று தங்கள் பரிதாபமான நிலையைக் கூறி வருந்தினர். அப்பொழுதெல்லாம் பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. நான்கு தலைகள் வடிவுக்கேற்ற தலையாகவும், ஐந்தாவது தலை ஒரு கழுதையின் தலையாகவும் இருந்தது. அவர்கள் குறையைக் கேட்ட பிரம்மன், "நீங்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டால் அவர் ஒருவரால்தான் அசுரர்களை அழிக்க முடியும். ஆகவே செல்லுங்கள்" என்று ஆணையிட்டான். தேவர்கள் சிவனிடம் முறையிட அவர்கள்பால் இரக்கம் கொண்ட சிவன் தான் ஒற்றையாக நின்று அசுரர்களுடன் போர் தொடுத்தார். அசுரர் படை சின்னாபின்னமாகியது. தேவர் உலகத்தைக் கடந்து, பூமிக்கு ஓடி, அங்கும் துரத்தப்பட்ட காரணத்தால் கீழ் உலகம் சென்றனர். சிவபிரான் தான் ஒருவராக நின்று போர் தொடுத்தமையின், அவர் உடம்பிலிருந்து வியர்வைத் துளிகள் வெளிப்பட்டுத் தரையில் சிந்தின. அந்தத் துளிகள் ஒவ்வொன்றிலிருந்தும் மாத்ரிகள் எனப்படும் சிவ கணங்கள் தோன்றின. இப்பொழுது இந்த மாத்ரிகளும் அசுரர்களை விரட்டியடித்தன. ஒருவாறு அசுரர்கள் ஓடி மறைகின்ற நிலையில் போரில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. கங்கைக் கரையில் ஏனைய தேவர்களோடு தங்கியிருந்த பிரம்மாவின் கழுதை வடிவுடைய ஐந்தாவது தலை அசுரர்களைக் கூவி அழைத்தது.

'நீங்கள் ஏன் அஞ்சி ஓடுகிறீர்கள்? மீண்டும் வந்து சண்டையைத் துவக்கினால் உங்களுக்கு உதவியாக நான் இருக்கிறேன்' என்று அவர்களைக் கூவி அழைத்தது. இதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவர்கள் பிரம்மன் தங்களுக்குத் துணையாக இருக்க, அவர் ஐந்தாவது தலை தங்கள் விரோதிகளாகிய அசுரர்களுக்குத் துணை போகிறேன் என்று கூறியது பெரும் கலக்கத்தை விளைவித்தது. செய்வதறியாது தேவர்கள் ஓடிச்சென்று விஷ்ணுவிடம் முறையிட்டனர். அதைக்கேட்ட விஷ்ணு, "பிரம்மனுடைய ஐந்தாவது தலையை நான் கிள்ளிவிட முடியும். அதிலும் ஓர் ஆபத்து இருக்கிறது. கிள்ளப்பட்ட தலை கீழே விழுந்தால் பூமி சுக்கு நூறாகிவிடும். அதனால் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சிவனிடம் சென்று முறையிடுங்கள்" என்று கூறினார். தேவர்கள் சிவ பிரானிடம் சென்று முறையிட்டு அத் தலை கீழே விழுந்தால் பூமிக்கு நேரக்கூடிய விபத்தையும் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட சிவபெருமான் சற்று யோசித்துவிட்டு, "கவலை வேண்டாம். நானே அந்தத் தலையைக் கிள்ளி எடுத்து அந்த மண்டை ஓட்டை என் கையிலேயே வைத்துக் கொள்கிறேன்" என்று கூறினார். தாம் கூறியபடியே பிரம்மனுடைய ஐந்தாவது தலை கழுதைத் தலையைக் கிள்ளி எடுத்து அந்த மண்டை ஓட்டைச் சிவபிரான் கையிலேயே வைத்துக் கொண்டார். அன்றிலிருந்து பிரம்மா 'சதுர்முகன்' (நான்முகன்) என்று அழைக்கப்பட்டார். பிரம்மாவின் தலை கிள்ளப்பட்ட இடம் பிரம்ம தீர்த்தம் என்றழைக்கப்பட்டது. சிவபிரானின் வியர்வையில் கிளம்பிய மாத்ரிகள் அசுரர்களைக் கொன்ற இடம் 'மாத்ரி தீர்த்தம்' என்று வழங்கப்படுகிறது.

  • 3
·
Added a post

முடி உதிரக் காரணங்களாக அமைவது மாசு ,மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், சத்து குறைபாடு போன்றவை. பெண்களுக்கு இதனால் அதிக அளவில் முடி உதிரும். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது கருஞ்சீரகம் .இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் முடி உதிர்வை போக்கி, வளர்ச்சியை அதிகரிக்கிறது. முடி வறட்சி,வெட்டு, அரிப்பு போன்ற பிரச்சினைகளையும் தீர்க்கிறது.

இந்த எண்ணெய்யை இரண்டு முறைகளில் தயாரித்து பயன்படுத்தலாம்.

முதல் முறை:

கருஞ்சீரகம் 100 கிராம் ,வெந்தயம் 100 கிராம், தேங்காய் எண்ணெய் 150 மில்லி லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும். கருஞ்சீரகத்தையும் ,வெந்தயத்தையும் மிக்ஸியில் போட்டு பொடி ஆக்கி , அதனுடன் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி கலக்கவேண்டும்.

அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவேண்டும் .அந்த நீரில் தேங்காய் எண்ணெய் கலவை அடங்கிய சிறிய பாத்திரத்தை வைத்து சூடுபடுத்த வேண்டும். இந்த முறையில் எண்ணெய் தயாரிப்பதற்கு சற்று கூடுதல் நேரம் தேவைப்படும்.

பின்பு காய்ச்சிய எண்ணெய்யை ஆறவைத்து, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை வெயிலில் வைத்து எடுத்து வேண்டும். .இதை தினமும் பயன்படுத்தலாம். இயலாதவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தலையில் நன்றாகத் தேய்த்து ,அரை மணிநேரம் ஊற வைத்து ,பிறகு மிருதுவான ஷாம்பு பயன்படுத்தி தலைக்குக் குளிக்கலாம்.

2- வது முறை:

கருஞ் சீரகம் ஒரு டீஸ்பூன், வெந்தயம் 2 டீஸ்பூன், கற்றாழை ஜெல் ஒரு கப், தேங்காய் எண்ணெய் ஒரு கப் எடுத்துக் கொள்ள வேண்டும். கற்றாழையின் தோலை நீக்கி நடுவில் உள்ள ஜெல்லை எடுத்து நன்றாக கழுவ வேண்டும். அப்போதுதான் அதிலுள்ள அரிப்பு தன்மை நீங்கும்.

அடுப்பில் வாணலியை வைத்து, அதில் தேங்காய் எண்ணையையும் கற்றாழை ஜெல்லையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். எண்ணெய் கொதிக்கும்போது கருஞ்சீரகம், வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து, மிதமான சூட்டில் அரை மணி நேரம் வரை காய்ச்ச வேண்டும். காய்ச்சிய எண்ணையை ஒரு பாட்டிலில் ஊற்றி 6 மாதம் வரை பயன் படுத்தலாம்.

இதை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தலையில் நன்றாக மசாஜ் செய்து குளிக்கும் போது, உடல் சூடு குறைந்து குளிர்ச்சி ஏற்படும். இந்த எண்ணையை ஆண், பெண் இருவரும் பயன்படுத்தலாம். தொடர்ந்து ஒரு மாதம் வரை பயன்படுத்தும் போது முடியின் வளர்ச்சி நன்றாகத் தூண்டப்பட்டு அடர்த்தியாக முடி வளரும்.

  • 3
·
Added a post

மிகப் பெரிய விஞ்ஞானிகள் கூட ஞாபக மறதியால் மிகவும் அவதிப்பட்டு இருக்கிறார்கள்.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டின் ஒரு மறதிக்காரர். ஒரு முறை அவர் இரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.

டிக்கெட் பரிசோதகர் வந்து பயணிகளின் டிக்கெட்டை வாங்கிப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

இதைக் கண்ட ஐன்ஸ்டின் தன்னுடைய டிக்கெட்டை எடுக்க பைக்குள் கையை விட்டார். அங்கு டிக்கெட் இல்லாமல் போகவே அதிர்ச்சி அடைந்தார்.

தன் கைப்பையை முழுவதுமாகப் புரட்டிப் போட்டுப் பார்த்தார் டிக்கெட் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகரும் ஐன்ஸ்டினிடம் வந்து டிக்கெட்டைக் கேட்டார்.

அவரோ செய்வது அறியாமல் மலங்க மலங்க விழித்தார். டிக்கெட் பரிசோதகருக்கு அவரின் நிலைமை புரிந்து விட்டது.

எனவே அவர் '' நீங்கள் ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி என்பது எனக்கு மட்டுமல்ல, இந்த இரயிலில் பயணிக்கும் அனைவருக்கும் தெரியும்.

எனவே நீங்கள் டிக்கெட் எடுக்காமல் பயணிக்க மாட்டீர்கள் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். எனவே நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. நிம்மதியாகப் பயணத்தைத் தொடருங்கள் என்றார்.''

அப்பொழுது ஐன்ஸ்டின் என்ன சொன்னார் தெரியுமா ?

''அதுவல்ல என் பிரச்சனை. டிக்கெட் வேண்டும் என்றால் என்னால் இன்னொன்று கூட வாங்கிக் கொள்ள முடியும்.ஆனால், நான் எந்த ஊருக்குப் போய்க் கொண்டு இருக்கிறேன் என்பதை அந்த டிக்கெட்டைப் பார்த்தால் தானே எனக்குத் தெரியும் ! இப்பொழுது டிக்கெட் பரிசோதகர் திருதிருவென விழித்தார்.

  • 11

நல்ல நண்பர்கள் என்றும் தீங்கு நினைப்பதில்லை. எதையும், எப்பவும், எங்கும் பயமின்றிக் கொண்டு செல்லக் கூடியது தான் உண்மை நட்பு.

நல்ல நண்பர்கள் கிடைப்பது வாழ்வில் அது ஒரு கொடை. கிடைத்த நட்பை அருமை தெரியாது உதறுவது போல் மடத்தனம் எதுவுமில்லை. அன்பைப் பகிரவும், இன்பம், துன்பம் எதிலும் துணை நிற்கவும் உறுதுணையான நட்பு இருந்தால் எதையும் தைரியமாக எதிர் கொள்ளலாம்.

  • 70

உங்களை தனிமையில் விட்டு

ஒருவர் பிரிந்து செல்கிறார் என்றால்

அவரை விட சிறந்த ஒருவர் உங்களை

நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்

என்பதே அர்த்தம் ஆகிறது......

நீங்கள் பிரிந்தவரை எண்ணி

வருந்த தேவையில்லை.

  • 69
  • 69
  • 69
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். கணிதம் சார்ந்த தொழில்களில் கவனம் வேண்டும். விவாதங்களில் நிதானத்துடன் இருக்கவும். வரவுகள் இருந்தாலும் அதற்கு ஏற்ப செலவுகளும் இருக்கும். ஆரோக்கிய விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். செலவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

ரிஷபம்

புதிய வியாபாரம் சார்ந்த அறிமுகம் உண்டாகும். உத்தியோக பணிகளிலிருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். சுப காரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வருவாயை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

மிதுனம்

பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும். தாய்மாமன் வகையில் ஒத்துழைப்பு மேம்படும். எழுத்து துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உருவாகும். மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

கடகம்

நெருக்கமானவரிடம் இருந்த வேறுபாடுகள் குறையும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பணி நிமித்தமான பயணம் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். செலவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

சிம்மம்

பேச்சுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில வேலைகள் முடிவு பெறும். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். வியாபார அபிவிருத்திக்கான சிந்தனைகள் மேம்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

கன்னி

எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். நண்பர்கள் வழியில் மாற்றமான சூழல்கள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு வித்தியாசமான செயல்பாடுகள் மூலம் தீர்வு காண்பீர்கள். சிறு தூர பயணங்களால் அனுகூலம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சோர்வுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

துலாம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை பற்றிய சிந்தனைகள் மேம்படும். அடமான பொருட்கள் பற்றிய எண்ணங்கள் ஏற்படும். கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உருவாகும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

விருச்சிகம்

மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். எதிலும் பகுத்தறிந்து செயல்படும் எண்ணம் உண்டாகும். மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இன்மை ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

தனுசு

செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் மூலம் மாற்றம் பிறக்கும். உபரி வருமான குறித்த சாதகமான சூழல் உண்டாகும். இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். மாமனார் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகரம்

உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பெரியோர்களின் ஆலோசனை புதிய நம்பிக்கையை தரும். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாகும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கும்பம்

கடன் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். கால்நடை தொடர்பான பணிகளில் ஆர்வம் பிறக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விவசாய பணிகளில் ஆதாயம் உண்டாகும். பொருளாதார தொடர்பான சிக்கல்கள் குறையும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம்

ஆரோக்கிய விஷயங்களில் பொறுமை வேண்டும். வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். கடன் செயல்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். மற்றவர்கள் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிக செயல்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். கால்நடைகள் விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

  • 80
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 10.3.2026.

இன்று முழுவதும் சப்தமி.

இன்று இரவு 07.16 வரை அனுஷம். பின்னர் கேட்டை.

இன்று காலை 08.37 வரை ஹர்ஷனம். பின்னர் வஜ்ரம்.

இன்று பிற்பகல் 01.00 வரை பத்திரை பின்னர் பவம்.

இன்று முழுவதும் சித்தயோகம்.

நல்ல நேரம்:

காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

image_transcoder.php?o=sys_images_editor&h=448&dpx=2&t=1773109014

  • 85

Good Morning...

உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகள்.

  • 77
·
Added article

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை பூனம் பாஜ்வா, தற்போது பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குட்டி டவுசர் மற்றும் முண்டா பனியனுடன் ஓவர் கவர்ச்சியான உடையில் எடுத்துள்ள போட்டோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அவர் நடித்த முக்கியமான படங்களில் Seval, Thenavattu, Romeo Juliet மற்றும் Jayikkira Kudhira ஆகியவை குறிப்பிடத்தக்க படங்களாகும். இந்த படங்கள் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து, கவர்ச்சியான கதாபாத்திரங்களில் அதிகம் தோன்றத் தொடங்கிய அவர், முத்தினகத்திரிக்காய், அரண்மனை 2 மற்றும் குப்பத்து ராஜா போன்ற படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்தார். நடிப்பைத் தவிர சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, தொடர்ந்து கவர்ச்சியில் தூக்கலாக இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் சுமார் 40 லட்சம் ரசிகர்களை வைத்து இருக்கும் இவர், தற்போது கடற்கரை மணலில் குட்டி டவுசர், முண்டா பனியனுடன் ஓவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் "கிளாமர் குயின்" என வர்ணித்து வருகின்றனர். இந்த போட்டோவை அவர் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே லைக்குகள் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

தற்போது பூனம் பாஜ்வாக்கு பட வாய்ப்பு எதுவும் இல்லாததால், தொடர்ந்து இதுபோன்ற போட்டோக்களை பகிர்ந்து படவாய்ப்பை பெற முயற்சி செய்து வருகிறார். அழகான திறமையான நடிகையான இவர், சரியான கதைகளை தேர்வு செய்ய தவறியதால், இவருக்கு படவாய்ப்பு குறைந்துவிட்டது.

  • 148
·
Added article

‘கருப்பு’ படம் எப்போது வெளியாகும் எனத் தெரியவில்லை என ஆர்.ஜே.பாலாஜி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தினை இயக்கியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இப்படம் எப்போது வெளியீடு என்பதே தெரியாமல் உள்ளது. ‘கருப்பு’ படத்தின் ஓடிடி உரிமை விற்கப்படாமல் இருப்பது தான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

டி20 உலகப் கோப்பை போட்டிகளில் தமிழ் வர்ணனையாளராக பணிபுரிந்து வந்தார் ஆர்.ஜே.பாலாஜி. நேற்று நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி வர்ணனையின் போது ஆர்.ஜே.பாலாஜி, “ரச்சின் ரவீந்திராவையே ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி ரிலீஸ் செய்துவிட்டது. ஆனால், நான் எடுத்த படம் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டார்.

இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அனைத்தும் விரைவில் சரியாகும் என ஆர்.ஜே.பாலாஜிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, த்ரிஷா, அனகா மாயா ரவி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ள படம் ‘கருப்பு’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஜி.ஜே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

  • 151
·
Added article

வைகை புயல் வடிவேலு தற்போது தமிழ் திரைத்துறையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கியுள்ளார். முன்பு போல காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல், தற்போது குணசித்திர மற்றும் முக்கியமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த மாற்றம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமீப காலத்தில் வடிவேலு நடித்த படங்கள் அவரது நடிப்பு திறனை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக கடைசியாக வெளியான மாரீசன் திரைப்படத்தில் அவர் நடித்த விதம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அந்த படத்தில் அவர் நடித்த நடிப்பு தனித்துவமான பாராட்டுகளை பெற்றது.

ஒருகாலத்தில் கோலிவுட்டில் வடிவேலு மிகவும் பிஸியான நகைச்சுவை நடிகராக இருந்தார். அந்த நேரத்தில் நடிகர் விஜயகாந்துடன் ஏற்பட்ட மனஸ்தாபம் பெரிய விவாதமாக மாறியது. அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக கூட்டங்களில் கலந்து கொண்டு அரசியல் மேடைகளிலும் பேசினார்.

அந்த தேர்தல் பிரச்சாரத்தில் அவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் விஜயகாந்த் அதற்கு நேரடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. பின்னர் அந்த சம்பவங்களை நினைத்து வடிவேலு வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த காலக்கட்டத்திற்கு பிறகு வடிவேலுவின் திரைப்பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. சில ஆண்டுகள் அவர் திரையுலகில் இருந்து விலகியிருந்தார். பின்னர் மீண்டும் திரும்பி நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்தார், ஆனால் அவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதன்பின் அவர் குணசித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தார். அந்த வகையில் மாமன்னன் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து மாரீசன் படத்திலும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட மனிதராக அவர் நடித்தது பெரும் பாராட்டைப் பெற்றது. இந்த இரண்டு படங்களும் அவரது புதிய பயணத்தில் முக்கியமான மைல்கற்களாக அமைந்துள்ளன.

  • 150
·
Added a news

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஸ்குகோக் (Scugog) நகராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஒண்டாரியோ மாகாண காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மார்ச் 8 ஆம் திகதி காலை சுமார் 5.55 மணியளவில், போர்ட் பேரி (Port Perry) பகுதியில் உள்ள Highway 7/12 மற்றும் 4th Line அருகே இரண்டு வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையாளர்கள் தெரிவித்த தகவலின்படி, எதிர்திசைகளில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதே இந்த விபத்திற்கு காரணமாகியுள்ளது.

இந்த விபத்தில் சண்டர்லேண்ட் (Sunderland) பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இன்னிஸ்ஃபில் (Innisfil) பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் உயிருக்கு ஆபத்தில்லாத அளவிலான கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அதேவேளை நார்த் யோர்க் (North York) பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் கடுமையான காயங்களுடன் ஹெலிகாப்டரின் மூலம் பிராந்திய அவசர சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  • 151
·
Added a news

வடக்கு லண்டனில் உள்ள இஸ்லிங்டன் (Islington) பகுதியில் உள்ள ஒரு துருக்கிய நகைக்கடைக்குள் புகுந்த மர்ம கும்பல், கத்திகளைக் காட்டி மிரட்டி நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றபோது அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் துணிச்சலாக செயல்பட்டு, துடைப்பம் மற்றும் கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு கொள்ளையர்களை எதிர்கொண்டனர்.

இருப்பினும், கொள்ளையர்கள் தங்கம் மற்றும் நகைகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதேபோல் ஹார்ட்போர்ட்ஷையர் (Hertfordshire) பகுதியில் உள்ள ஒரு கடையில், கண்ணாடித் தடுப்புகளை உடைக்க செயின்சா பயன்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகைக்கடைகள் மட்டுமின்றி, வீதிகளில் நடந்து செல்லும் செல்வாக்கு மிக்க நபர்களும் இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிள்களில் வருவதால், அவர்களை அடையாளம் காண்பது காவல்துறையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.

இந்த் தொடர் குற்ற சம்பவங்களைத் தொடர்ந்து, லண்டன் மாநகர காவல்துறை (Met Police) ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இருப்பினும், நகரின் பல முக்கிய வீதிகளில் போதிய பாதுகாப்பு இல்லை என்றும், வணிகர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

  • 152
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. வியாபாரத்தில் நிதானம் தேவை. அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாக தலையிட வேண்டாம்.

ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

மிதுனம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். தாயார் ஆதரவாக இருப்பார். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கடகம்: மனதில் இருந்துவந்த பயம் நீங்கி தைரியம் பிறக்கும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் அதிகமாகும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினருடன் அளவுடன் பழகுங்கள். வெளியூர் பயணம் உண்டு.

சிம்மம்: சாதுர்யமாகச் செயல்பட்டு சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

கன்னி: இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

துலாம்: நீண்டநாட்களாக மனதை சஞ்சலப்படுத்திய பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். புது ஆபரணங்கள், ஆடைகள் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஆதரவு தருவார்கள். வெளியூர் பயணத்தால் நன்மை உண்டு.

விருச்சிகம்: எந்தக் காரியத்தைத் தொட்டாலும் இழுபறிக்குப் பிறகே முடியும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள்.

தனுசு: சாதுர்யமாகப் பேசி தடைபட்ட காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். திருமண காரியங்கள் கைகூடி வரும். வராது என்றிருந்த தொகை கைக்கு வரும்.

மகரம்: பால்ய நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி அன்பு காட்டுவார். கலைப்பொருட்கள் சேரும். வாகனம் செலவு வைக்கும்.

கும்பம்: நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அடிக்கடி செலவுவைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டி குறையும்.

மீனம்: எதிர்மறை எண்ணங்கள் மறையும். முகத்தில் தெளிவு பிறக்கும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

  • 230
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 25 ஆம் தேதி திங்கட்கிழமை 9.3.2026.

இன்று இரவு 11.58 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

இன்று மாலை 4. 44 வரை விசாகம். பின்னர் அனுஷம்.

இன்று காலை 08.09 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷனம்.

இன்று காலை 10.59 வரை கரசை. பின்னர் இரவு 11.58 வரை வனிசை. பின்பு பத்திரை.

இன்று மாலை 04.44 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

நல்ல நேரம்:

காலை : 06.30.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

image_transcoder.php?o=sys_images_editor&h=447&dpx=2&t=1773028666

  • 243

Good Morning...

Have a Nice day!

  • 236
·
Added article

தமிழில் கவின் ஜோடி​யாக ‘ஸ்​டார்’ படத்​தில் நடித்​தவர் ப்ரீத்தி முகுந்​தன். மலை​யாளத்​தில் ‘மைனே பியார் கியா’, ‘சர்​வம் மாயா’ படங்​களில் நடித்​துள்ள அவர், ‘இத​யம் முரளி’, ஹரீஷ் கல்​யாணின் ‘தாஷமக்​கான்’ உள்பட சில படங்​களில் நடித்து வரு​கிறார்.

தெலுங்கு திரைப்​படங்​களி​லும் நடித்து வரும் அவர், இப்​போது இந்திக்​குச் செல்​கிறார். இவர் கார்த்​திக் ஆர்​யன் நடிப்​பில் உருவாகும் ‘நாகஸில்லா’ என்ற படத்​தில் அவருக்கு ஜோடி​யாக நடிக்க இருக்​கிறார். முதலில் இதில் நடிகை லீலா நடிக்க இருப்​ப​தாகக் கூறப்​பட்​டது. இப்​போது ப்ரீத்தி முகுந்​தன் தேர்வு செய்யப்பட்​டுள்​ளார்.

இப்​படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக் ஷன்ஸ் தயாரிக்கிறது. நகைச்​சுவை​யுடன் கூடிய ஃபேன்​டஸி படமாக உருவாகும் இதில் கார்த்​திக் ஆர்​யன் இச்​சா​தாரி நாகமாக நடிக்கிறார்.

  • 308
·
Added article

பிறந்ததிலிருந்தே ஒரு கண் தெரியாது பாகுபலி படத்தால் இரண்டு முக்கிய organ Failure,

Raana Daggubati - நடிகர் ராணா சமீபத்தில் ஒரு இன்டர்வியூவில் மனம் திறந்து பேசி இருந்தார்.. அதில் அவருக்கு சிறுவயதிலிருந்தே ஒரு கண் பார்வை கிடையாதாம் இதற்காக மாற்று அறுவை சிகிச்சை செய்தும் பலன் அளிக்கவில்லையாம்.

மேலும் அவருக்கு சிறுவயதில் இருந்து ரத்த அழுத்தம் இருந்ததாம்... அதனால் ஏற்கனவே அவர் சிறுநீரகம் பாதிப்படைந்து இருந்ததாம்.

பாகுபலி படத்திற்கு அதிக உடல் எடை.. ஏற்ற வேண்டியிருந்ததால் மற்றும் நீண்ட காலம் இதே எடையைப் பராமரிப்பதும், கடுமையான உழைப்பும் அவரது உடல்நிலையை இன்னும் மோசமாக்கியது.

​சிறுநீரக செயலிழப்பு: அவரது தீராத ரத்த அழுத்தம் காரணமாகச் சிறுநீரகங்கள் செயலிழந்தன. இதயத்தைச் சுற்றித் தாதுக்கள் படிதல் (Calcification around the heart) போன்ற சிக்கல்கள் ஏற்பட்டன.

நீங்கள் நன்றாக கவனித்தீர்கள் என்றால் சில வருடத்துக்கு முன் அவர் மிகவும் ஒல்லியாகி காணப்பட்டார் காரணம் அவர் அமெரிக்காவுக்கு சென்று.. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தார்.

பாகுபலி படத்திற்குப் பிறகு அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைத்து இருந்தன.ஆனால் அவர் உடல் மிகவும் மோசமான நிலைக்கு சென்றதால் அனைத்து அட்வான்ஸயும் திருப்பிக் கொடுத்தார்.

அதன் பிறகு தான் அமெரிக்காவுக்கு சென்று.. அறுவை சிகிச்சை செய்தார் அதன் பிறகு பல மாதங்கள் ரெஸ்ட் எடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளானார்.

பல மாதங்கள் உப்பே இல்லாத சாப்பாட்டை தான் சாப்பிட வேண்டும். ஒரு மனிதன் சினிமாவுக்காக பாடுபட்டு பாகுபலி என்ற பெரிய வெற்றிக்கு பிறகு வாழ்க்கையில் ஏற்றம் காண வேண்டிய நேரத்தில் சரிவை சந்தித்து ஹாஸ்பிடல் பெட்டில் படுக்கும் சந்தர்ப்பம் எல்லாம் யாருக்கும் வரக்கூடாது.

ஆனால் Raana never giveup என்றே சொல்லலாம் அவரின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி காரணமாக அந்த நோயிலிருந்து முழுவதுமாக குணமானார். இப்பொழுது ஒரு புது மனிதனாக மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்,

கிட்டத்தட்ட மறுபிறவி தான்.....

  • 309
·
Added article

“ஜனகராஜ்” தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத நடிகன். 70களின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து, ஆரம்பத்தில் இளையராஜா, கங்கை அமரன் நட்பு கிடைக்க இளையராஜாவின் இசைக்குழுவில் சேர வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்டவர் ஜனகராஜ்.

இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுகமும் அங்கே கிடைத்தது. உண்மையில் அவரிடம் உதவி இயக்குநராக ஆகவேண்டும் என்னும் ஆசையில் தான் அவரிடம் சேர்ந்தார். ஆனால் நீ நடிகனாகிடு அதுதான் உனக்கு சரியா வரும் என்று சொல்லி ஜனகராஜை நடிக்க வைத்தவர் பாரதிராஜா தான்.

இவரை அரவணைத்த பாரதிராஜா அதே கால கட்டத்தில் கவுண்டமணியையும் அரவணைத்தார். முதல் சில படங்களில் பெரிய அளவிற்கு இவருக்கு காரக்டர்கள் தராவிட்டாலும் பிற்பாடு முக்கிய காரக்டர் தந்திருப்பார். காதல் ஓவியம் படத்தில் கதாநாயகி ராதாவின் கணவர் வேடம் தந்தார்.

ஒரு கைதியின் டைரியில் கமலின் நண்பர் & வளர்ப்பு அப்பா காரெக்டர், முதல்மரியாதை போன்ற க்ளாசிக் படத்திலும் கதையை கெடுக்காத காமெடியாக "நானும் கருப்பு என் பொஞ்சாதியும் கருப்பு புள்ள மட்டும் எப்படி சிவப்பா பொறந்திச்சு" எனக் கதறும் ஜனகராஜை மறக்க முடியுமா.

கடலோரக் கவிதைகளில் ரேகாவின் அப்பா, இப்படி பாரதிராஜா படங்களில் மட்டுமல்ல 80களில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார் ஜனகராஜ். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு, மோகன் இந்த ஏழு பேரையும் அந்த காலகட்டத்தில் செவன் ஸ்டார்ஸ் என்பார்கள்.

இவர்களின் எல்லா படங்களிலும் ஜனகராஜ் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார். பாரதிராஜா, கே.பாலச்சந்தர், பாக்யராஜ், மணிவண்ணன், ஏன் மணிரத்னம் படங்கள் வரை ஜனகராஜிற்கென்றே சிறப்பானதொரு வேடம் அவர்கள் கதையில் இருக்கும்படியே ஸ்கிரிப்ட் அமைந்திருக்கும்.

ரஜினியுடன் படிக்காதவன் முதல் பாட்ஷா வரை ஜனகராஜின் பயணம் இருந்தது “தங்காச்சிய நாய் கச்சிட்ச்சுப்பா என படிக்காதவனிலும் ரிக்‌ஷா காரனாக இருந்து பணக்கார வேடத்தில் சைனா டீயும் மசால்வடையும் வோணும்பா என ராஜாதி ராஜாவிலும், நாசமா நீ போனியா தெரு என..

அண்ணாமலையிலும், மும்பை பாட்ஷாவிற்கு சிறப்பான நண்பனாகவும், மாணிக்கத்திற்கு சிரிப்பான நண்பனாகவும் வந்து நக்மா அவர் ஆட்டோவில் ஏற ரஜினியிடம் நமட்டுச் சிரிப்பில் bye சொல்வது என பாட்ஷாவிலும் இப்படி எத்தனை எத்தனை மறக்க முடியாத கதாபாத்திரங்கள்.

அதேபோல் கமலுடன் விக்ரம் படத்தில் அந்த மொழி பெயர்ப்பாளன், அபூர்வ சகோதரர்களில் அந்த ‘தெய்வமே’ இன்ஸ்பெக்டர் காரெக்டர், நாயகனில் கமலின் உயிர் நண்பரான செல்வம், கேரக்டர் மிக மிக முக்கியமாக குணா படத்தில் வரும் குரூர சித்தப்பா கேரக்டர் என ஜனகராஜ்..

திரையுலக கிரவுண்டில் அடித்ததெல்லாம் தோனி அடித்ததை விட பிரும்மாண்ட சிக்ஸர்கள் சத்ய ராஜுடன் கவுண்டமணிக்கு முன்பே சூப்பர் ஹிட் இணை ஜனகராஜ் தான். பிக்பாக்கெட், பாலைவன ரோஜாக்கள், அதிலும் அண்ணாநகர் முதல் தெருவில் ‘அது என்னமோ போடா மாதவா’ என

அவரையே பாராட்டிக் கொள்வது, கனம் கோர்ட்டார் அவர்களே படத்தில் ‘மை டியர் பிரில்லியண்ட் ஸ்டூடண்ட் ஜெயபாஸ்கர்’ என அலும்பும் அலம்பல். இதெல்லாம் அவரது திறமையின் ஒரு துளி தான். மோகன் படங்களில் நுறாவதுநாள் படத்தில் அவரது செக்ரட்டரி இளமை காலங்கள் படத்தில்..

ஊட்டிக்கு போகாதிங்க என கத்தும் பைத்தியமாக, இயக்குநர் மணிவண்ணன் தந்த மறக்க முடியாத பாத்திரங்களில் நடித்தவர். கார்த்திக் உடன் வருஷம் 16 படத்தில் இவர் ராஜாமணியாக அடித்த லூட்டி, பிரபுவுடன் பாட்டு வாத்தியாராக கன்னிராசி இப்படி பின்னி பெடல் எடுத்து இருப்பார்.

இத்தனைக்கும் அப்போது தமிழ் சினிமாவில் செந்தில் கவுண்டமணியின் கொடி உச்சத்தில் பறந்து கொண்டிருந்தது, அதற்குள் எல்லாம் சிக்காமல் சுனாமியிலும் ஸ்விம்மிங் போட்டவர் ஜனகராஜ் மட்டுமே. இவர் காமெடி நடிகர் மட்டும் இல்லை அற்புதமான குணசித்திர நடிகர்.

ஆரம்ப காலத்தில் பாலைவனச் சோலை படத்தில் வேலை இல்லாத பட்டதாரியாக இவர் வரும் காட்சிகளை பார்த்தாலே தெரியும். ஆனால் இவர் பிரமாதமான குணசித்திரம் கலந்த நகைச்சுவை நடிகர் என்பார் இயக்குநர்/நடிகர் பாண்டியராஜன். அவரது படங்களில் பார்த்தால்..

செந்தில் கவுண்டமணி இருக்க மாட்டார்கள் ஆனால் ஜனகராஜ் இருப்பார். அதிலும் அவரது காரக்டர் மிக அற்புதமாக திரைக் கதையில் எழுதப் பட்டு ஜனகராஜ் நடிப்பில் அது இன்னும் மெருகேறி இருக்கும். கன்னி ராசியில் பாட்டு வாத்தியார், ஆண் பாவத்தில் ஓட்டல் கடை நடத்தும் சித்தப்பா..

நெத்தியடியில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம் வாய்ஸ் இன்ஸ்பிரேஷனில் “வேண்ணு எட்த்த்தத கொட்த்துடு ராஜா”என வித்யாசமான குரல் மாடுலேஷனில் சமையல் கார அப்பா என தூள் கிளப்பியிருப்பார். மணிரத்னம் படங்களில் குறிப்பாக நாயகன், அக்னிநட்சத்திரம், அஞ்சலி..

இதில் நாயகன் படத்தில் கிட்டத்தட்ட 2வது நாயகன் ஜனகராஜ் தான். அந்தப் படம் முழுவதும் ஜனகராஜை கவனியுங்கள் ஒரு காட்பாதரின் நண்பன் பிறகு அவன் செகரட்டரி, வயதான பின்பு அக்குடும்பத்தில் ஒருவன் என ஜனகராஜின் நடிப்பு ஆழ்கடலின் அமைதி போல அற்புதமாக இருக்கும்.

கே.பாலச்சந்தர் படங்களிலும் தன் முத்திரையை பதிக்காமல் இல்லை.சிந்துபைரவி, புதுப்புது அர்த்தங்கள் என சில படங்களை சொல்லலாம் அதிலும் புதுப்புது அர்த்தங்களில் அந்த திக்குவாய் காரக்டர், அதுவும் அவரது கனவான இளையராஜா குழுவில் வயலின் வாசிப்பவராக நடித்திருப்பார்.

இன்னொரு விஷயம் கவனித்தால் தெரியும் ஜனகராஜிற்கு இளையராஜா பாடும் எல்லா பாடல்களும் அவ்வளவு பொருத்தமாக இருக்கும். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதாலும் இருக்கலாம். காமெடி நடிகர்களில் அன்று அதிக தனிப் பாடல்கள் வந்தது ஜனகராஜிற்கு தான்.

ஒரு தொட்டில் சபதம் என்ற படத்தில் வரும் ‘பூஞ்சிட்டு குருவிகளா’ன்னு ஒரு பாட்டு அதைப் பாடியது இசையமைப்பாளர் சந்திரபோஸ். அந்தப் படம் வந்த காலங்களில் இந்தப் பாடலை பாடியது ஜனகராஜே தான் என்பார்கள். அப்படி சிறப்பாக பாடியிருப்பார் சந்திரபோஸ். அதன் பின்பு..

ஜனகராஜிற்கு இளையராஜா அளவிற்கு எவரும் பாடவில்லை. இன்றைய கார்ப்பரேட் சாமியார்களைப் பற்றிய காரெக்டரில் வெற்றிவிழா படத்தில் நடித்ததை தனிப்பதிவாகவே போடலாம். இன்றைக்கும் அது பொருந்தும் அந்த அளவிற்கு கார்ப்பரேட் சாமியார்களை பகடி செய்திருப்பார்.

இதயத்தாமரையில் வரும் அந்த ஞாபமறதி கேரக்டர் ஒரு பிளாக் ஹ்யூமர் வகை நகைச்சுவை என்றால், கிழக்குவாசல் படத்தில் வரும் தேவர் கேரக்டரும், நான் புடிச்ச மாப்பிள்ளை படத்தில் வரும் மாமனார் கேரக்டரும் அவரது குணச்சித்திர நடிப்பிற்கு ஒரு சோறு பதமாகும்.

கவுண்டமணி & செந்தில் ஜோடி கோலோச்சிய அதே காலத்தில் எல்லா முன்னணி ஹீரோக்கள் உடனும் நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகனாக இருந்தது, ஜனகராஜின் அசாத்திய நடிப்புத் திறமையால் தான். சில காலம் நடிப்பிற்கு ஒரு இடைவெளி தந்துவிட்டார்.

தன் மகனுடன் அமெரிக்காவில் வசித்தார், நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய்சேதுபதி நடித்த 96 படத்தில் ஸ்கூல் வாட்ச்மேனாக் நடித்திருந்தார். சிங்கம் சிங்கிளாத் தான் வரும் என்பது ஜனக ராஜிற்கு மட்டுமே பொருந்தும். தமிழ் சினிமாவின் தனியொருவன் என்பது ஜனகராஜே தான்!

இவரை இன்றைய பல டிஜிட்டல் ஊடகங்கள் பெரிதாக அங்கீகரிக்கவில்லை என்பது மிகப் பெரிய வருத்தம். இன்று சோஷியல் மீடியாக்களில் வடிவேலு கவுண்டமணி மீம்சுகள் கலக்கி எடுத்துக் கொண்டிருந்தாலும் "என் பொண்டாட்டி ஊருக்கு போயிடுச்சே" என்னும் ஒற்றை மீம்ஸே போதும்.

அதை அடித்துக் கொள்ள எவரும் இல்லை! ஆம் இந்த டிஜிட்டல் யுகத்திலும் தனியொருவன் நமது ஜனகராஜ் ஒருவர் மட்டுமே

  • 313
·
Added a post
  • கம்பு
  • வெள்ளை பூசணிக்காய்.
  • எண்ணெய் தேய்த்து குளித்தல்.
  • விளக்கெண்ணெயை உள்ளங்கால்களிலும் உள்ளங்கைகளிலும் தேய்த்துக் கொண்டால் உடல் சூட்டை தணிக்கும்.
  • தினம் இருவேளை குளிர்ந்த நீரில் குளித்தல்.
  • மாதுளம் பழம்.
  • வெள்ளரிக்காய்.
  • நெல்லிக்காய்.
  • இளநீர்.
  • பதநீர்.
  • நுங்கு.
  • கசகசா
  • வெந்தயம். [ ஒரு மேசைகரண்டி அளவு வெந்தயத்தை ஒரு குடுவை ( தம்ளர் ) அளவு தண்ணீரில் முந்தின நாள் இரவு ஊற வைத்து அடுத்த நாள் காலையில் சாப்பிட வேண்டும்.]
  • 310
New People