Quote of the Day

பழமொழிகள்: அக்கரைக்கு இக்கரை பச்சை.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
sivam 110
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்யார் என்பதை கண்டறிவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். பழைய வழக்குகளை இப்போது பேசித் தீர்ப்பீர். பணவரவால் மனநிம்மதி உண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

மிதுனம்: குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகும். பணவரவு திருப்திகரமாக அமையும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். யாருக்கும் எந்த உறுதிமொழியும் தராதீர். வியாபார நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கடகம்: சகோதர வகையில் செலவு, அலைச்சல் வரும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் ஆகியவற்றை விற்க முயற்சிப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். கடையை மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு மாற்றுவீர். பங்குதாரர் ஆதரிப்பார். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

சிம்மம்: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வயிற்றுவலி, மூக்கடைப்பு நீங்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

கன்னி: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டும் விதமாக நடப்பீர். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். பங்குதாரரை அனுசரித்து நடக்கவும்.

துலாம்: திட்டமிட்ட வேலையை திறம்பட செய்து முடிப்பீர்கள். உங்களால் பயனடைந்த சிலர் இப்போது உங்களுக்கு உதவி செய்வர். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.

விருச்சிகம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். மனைவி, பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.

தனுசு: மகனின் படிப்பு, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல், செலவு வரக்கூடும். உடன் பிறந்தவர்கள் உதவி புரிவர். யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.

மகரம்: சோர்வு நீங்கி முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். வீண் விவாதங்கள் விலகும். ஆடை, ஆபரணம் சேரும். மூத்த சகோதர சகோதரிகள் உங்களை புரிந்து கொண்டு செயல்படுவர். அலுவலகத்தில் மேலதிகாரி மதிப்பார். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம்.

கும்பம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிம்மதி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்பு கூடும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்.

மீனம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். பயணம் செல்வீர்.

  • 6
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 8.9.2026

இன்று பிற்பகல் 02.28 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

இன்று மாலை 05.11 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.

இன்று அதிகாலை 03.08 வரை வரீயான். பின்னர் பரிகம்.

இன்று அதிகாலை 03.33 வரை கௌலவம். பின்னர் பிற்பகல் 02.28 வரை தைத்தூலம். பின்பு கரசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=643&dpx=2&t=1788863763

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 7

Good Morning...

  • 8
·
Added article
·

🌹 பம்பாய்க்கு நாடகம் நடத்த ஒருமுறை நான் போயிருந்தபோது தெருவில் எங்கள் குழுவினரோடு போய்க்கொண்டிருந்தேன்.

🌹அப்போது வழியில் சந்தித்த ஒரு வயதான கிழவி சொன்னார்.

தம்பி.. உன்னை எம்.சி.ஆர். நடிச்ச படங்கள்லே பாத்திருக்கேன்.. நல்லா நடிக்கிறே.. எனக்கு நீ ஒரு உதவி செய்யணுமே..

“என்னம்மா… சொல்லுங்க”.. - என்றேன்.

“🌹எம்.சி.ஆர். கிட்டே நான் விசாரிச்சேன்னு சொல்றீயா?”

அவருடைய பெயர், முகவரி எதையும் அவர் சொல்லவில்லை. அப்படியே போய்விட்டார். இந்த மாதிரியான ஈர்ப்பு சக்தி ஒரு நடிகருக்கு இருப்பதை உணர்ந்தபோது வியப்பாக இருந்தது.

அவரிடம் இயல்பாக இருந்த வள்ளல்

தன்மை அதற்கு ஒரு முக்கியமான காரணம்.

🌹 விளம்பரத்திற்காக அவர் அப்படிப் பண்ணுகிறார் என்று அவரைச் சிலர் விமர்சிப்பதைப் பார்த்திருக்கிறேன். விளம்பரத்திற்காக அவர் சில விஷயங்களைச் செய்திருக்கலாம். ஆனால் விளம்பரம் செய்துகொள்ளாமல், விளம்பர நோக்கம் இல்லாமல் அவர் பிறருக்குச் செய்த உதவிகள் ஏராளம்.

🌹யாராவது அவருக்கு முன்னாடி கஷ்டப்படுவதைப் பார்த்தால், உடனே உதவி பண்ணியிருக்கிறார். சினிமாவுலகில் அவருக்கு எதிராக இயங்கியவர்களுக்குக் கூட அவர் உதவியிருக்கிறார்.

🌹சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் என்கிற நடிகருடைய தாயார் மறைந்தபோது அவர் போய் நின்ற இடம் எம்.ஜி.ஆரின் ராமாவரம் வீடு. அவரை அடையாளம் கண்டு விசாரித்த எம்.ஜி.ஆர். உடனே வீட்டில் இருந்தவர்களை அழைத்தார்.

“இவருக்கு ஒரு வேலைக் கொடுத்திருங்க. தேவைப்படுகிற பணத்தைக் கொடுத்திருங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

🌹அந்த முதிர்ந்த நடிகரான வெங்கட்ராமன் பிறகு சொன்னார். “வீட்டிலே அடுப்பில் உலையை வைச்சுட்டு ராமாவரம் தோட்டத்துக்குப் போனா கண்டிப்பா உலை பொங்கும்”.

🌹இதெல்லாம் நான்கு பேருக்குத் தெரியவேண்டும் என்பதற்காகச் செய்கிற காரியங்கள் இல்லை. எனக்குத் தெரிந்து அவரிடம் உதவி பெற்றவர்கள் பலர். அதெல்லாம் வெளியே தெரிய வந்ததில்லை.

“🌹ஒருமுறை அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக காரில் எம்.ஜி.ஆருடன் போய்க் கொண்டிருந்தோம். நல்ல வெயில் நேரம். யாரோ ஒரு அம்மாள் காலில் செருப்பில்லாமல் போவதைப் பார்த்துவிட்டு, என்ன நினைத்தாரோ, அந்தக் கால்களின் சூட்டைத் தான் உணர்ந்த மாதிரி, சட்டென்று தன்னுடைய காலில் போட்டிருந்த செருப்புகளைக் கழட்டி அந்த அம்மாவிடம் கொடுத்துவிட்டார்.

🌹எம்.ஜி.ஆர். கூட இருந்த டிரைவருக்கும், எங்களுக்கும் தான் இது தெரியும். அவரிடம் வந்து யாரும் கேட்கவில்லை. இருந்தபோதும் தானாகச் செய்தார்” என்று எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான ஒருவர் என்னிடம் சொல்லியிருக்கிறார்..

🌹அவரிடமிருந்த ஏதோ ஒரு குணம் அவரை அப்படிச் செயல்பட வைத்திருக்கிறது. இது மிகையில்லை. அவருடைய இயல்பு.எம்.ஜி.ஆருக்கு இருந்த இளகிய சுபாவத்துக்கு உதாரணமாக நான் பார்த்தவரையில் எத்தனையோ நிகழ்ச்சிகளைச் சொல்லலாம்.

🌹வெளியூர்களில் ‘ஷூட்டிங்’ நடக்கும்போது டெக்னீஷியன்கள் உட்படப் பலருக்கு போடப்படும் சாப்பாட்டை அந்த இடத்துக்குப் போய் சாப்பிட்டுப் பார்ப்பார். அவர் சம்பந்தப்பட்ட ஷூட்டிங்கில் எப்போது வேண்டுமானாலும் இப்படி அவர் சோதிப்பது நடக்கும் என்பதால் படக்குழுவினர் அனைவருக்கும் வழங்கப்படும் சாப்பாடும் தரமாகவும், சுவையாகவும் இருக்கும்.

-நடிகர் சோ

  • 154
·
Added a post
·

சீனாவில் ஒரு பெரியவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். முதல் இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகியிருந்தது. எப்போதும் வீடு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், மருமகள்கள் தங்கள் தாய்வீட்டுக்குச் சென்றால், விரைவில் திரும்பி வர மாட்டார்கள்.

அன்றும் மருமகள்கள் தாய்வீடு செல்ல அனுமதி கேட்டனர். பெரியவர், “போய் வாருங்கள். வரும்போது நீங்கள் எனக்கு இரண்டு பொருட்களைக் கொண்டுவர வேண்டும். கொண்டு வராவிட்டால், மீண்டும் உங்கள் அம்மா வீடு செல்ல அனுமதிக்க மாட்டேன்” என்றார்.*

சரிங்க மாமா. என்ன வேணும், சொல்லுங்கள்?” என்றனர் இரு மருமகள்களும்.*

ஒரு காகிதத்தில் கொஞ்சம் காற்றை அடைத்துக் கொண்டு வரவேண்டும்” என்று ஒரு மருமகளிடமும், “காகிதத்தில் கொஞ்சம் தீயை கட்டிக் கொண்டுவர வேண்டும்” என்று இன்னொரு மருமகளிடமும் சொன்னார் பெரியவர்.

இதைக் கேட்டு மருமகள்கள் இருவரும் திகைத்தனர்.

சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டனர். தாய் வீட்டில் சந்தோஷமாகச் சில நாட்கள் இருந்தார்கள். வீடு திரும்ப வேண்டிய நாள் வந்ததும்தான் மாமனார் கேட்ட விஷயம் பற்றிய பயம் வந்தது.

இருவரும் கிளம்பினார்கள். வழியெங்கும் கவலையோடு புலம்பிக்கொண்டே நடந்தனர். அப்போது எருமை மீது சவாரி செய்துகொண்டு வந்த ஓர் இளம்பெண், உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டார்.

இவர்களும் தங்கள் மாமனார் கேட்டதைச் சொன்னார்கள். அந்தப் பெண், இவ்வளவுதானா, கவலைப்படாதீர்கள்” என்று சிரித்தார்.*

முதல் மருமகளைப் பார்த்து, “ஒரு காகிதத்தில் விசிறி செய்து கொடு. நீ ஒரு சிம்னி விளக்கை ஏற்றி, ஒரு காகிதத்தில் சுற்றி எடுத்துட்டுப் போ” என்றார்.

மருமகள்கள் இருவருக்கும் பிரச்சினை தீர்ந்ததில் மகிழ்ச்சி. அந்தப் பெண்ணுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.*

மாமனாரிடம் அந்தப் பெண் கூறியபடியே விசிறியையும், சிம்னி விளக்கையும் தந்தார்கள். அவர் ஆச்சரியப்பட்டார். இருவரும் வழியில் சந்தித்த அந்தப் பெண் பற்றிச் சொன்னார்கள்.*

இவ்வளவு புத்திசாலியான பெண்ணை, என் கடைசி மகனுக்கு மணம் முடிக்கப் போகிறேன்” என்றார் பெரியவர்.

அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்க ஆட்களை அனுப்பினார். கண்டுபிடித்துச் சொன்னதும், சம்பந்தம் பேசினார். திருமணம் இனிதே நடந்து முடிந்தது. வீட்டில் அனைத்தையும் பொறுப்பாகச் செய்தார் கடைசி மருமகள்.

பெரியவருக்கு மகிழ்ச்சி. நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார். எனவே தன் வீட்டு வாசலில், ‘இது நிறைவான வீடு’ என்று ஒரு பலகையை மாட்டி வைத்தார்.*

சில காலம் கழித்து அந்த வழியே சென்ற ஒரு துறவி இந்தப் பலகையைப் படித்தார். ‘யார் இது, இவ்வளவு திமிராக எழுதி வைத்தது? இந்த வீட்டினருக்குப் பாடம் புகட்டி, திமிரை அடக்கப் போகிறேன்’ என்று முடிவு செய்தார்.*

வீட்டில் நுழைந்த அவரை, கடைசி மருமகள்தான் வரவேற்றார். துறவி, “இது நிறைவான வீடாமே… அப்படியானால் எனக்கு இந்தச் சாலையின் நீளத்துக்கு ஒரு துணியை நெய்து கொடு. இல்லாவிட்டால் சபித்து விடுவேன்” என்றார்.*

கண்டிப்பாக நெய்கிறேன். சாலையின் இரு முனைகளையும் கண்டுபிடித்து, எவ்வளவு நீளம் என்று அளந்து தாங்கள் சொன்னால், அந்த அளவுக்கு நான் துணியை நெய்து கொடுக்கிறேன்” என்றார் மூன்றாவது மருமகள்.

அவர்கள் வீடு இருந்த சாலை எங்கோ வெகு தொலைவில் இருந்த தலைநகரத்திலிருந்து நாட்டின் எல்லைவரை சென்றது. அதன் ஆரம்பமும் முடிவும் யாருக்கும் தெரியாது என்பதால் துறவிக்குப் பதில் சொல்ல முடியவில்லை.*

சரி, வேண்டாம். கிணற்று நீர் அளவு எண்ணெய் ஆட்டிக் கொண்டுவா” என்றார் துறவி.*

தாங்கள் தயவு செய்து கிணற்றில் எத்தனை ஆழாக்கு நீர் உள்ளது என்று சொன்னால், உடனே அத்தனை ஆழாக்கு எண்ணெயை ஆட்டித் தந்துவிடுகிறேன்” என்றார் மூன்றாவது மருமகள் பணிவோடு.*

துறவிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சில நொடிகள் யோசித்தார். இந்தப் புத்திசாலிப் பெண்ணை மடக்குவது எளிதல்ல என்பதை உணர்ந்தார். யோசித்தபடியே, பறந்து வந்த ஒரு புறாவைச் சட்டென்று பிடித்தார்.*

நீ மிகவும் புத்திசாலியாக இருக்கிறாய். இந்தப் புறாவை நான் பறக்க விடப் போகிறேனா, இல்லை கூண்டுக்குள் அடைக்கப் போகிறேனா என்று சொல் பார்ப்போம்” என்றார் துறவி.*

புத்திசாலி மருமகள் துறவியை வணங்கி, நீங்கள் முக்காலமும் அறிந்த ஞானி. வாசலில் நிற்கும் நான் இப்போது உள்ளே செல்லப் போகிறேனா, இல்லை தெருவில் இறங்கப் போகிறேனா என்று சொல்லுங்கள். நானும் உங்கள் கேள்விக்கு விடை தருகிறேன்” என்றார்.*

துறவி அமைதியாக இருந்தார். “துறவியான தங்களுக்கே என் கேள்விக்கு விடை தெரியாதபோது, அனைத்தும் அறிந்த ஞானியான தங்களது கேள்விக்கு எனக்கு எப்படி விடை தெரியும்?” என்று கேட்டு மீண்டும் அவரை வணங்கினார் மூன்றாவது மருமகள்.*

நீ சொல்வதும் சரிதான். இந்த வீடு நிறைவான வீடுதான்” என்று சொல்லிவிட்டு, துறவி தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

  • 152
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு, இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

ரிஷபம்: புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்வீர்கள்.

மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி பழைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பீர்கள். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

கடகம்: எடுத்த காரியங்கள் தடைபட்டு முடியும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சிம்மம்: குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். வியாபார வளர்ச்சிக்காக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். காரியத்தில் நிதானம் தேவை.

கன்னி: தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடி வரும். பண வரவு, பொருள் வரவு உண்டு. வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

துலாம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பெரிய நிறுவனத்தில் வேலை அமையும். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரம் லாபம் தரும். பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: ஒதுங்கிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் ஓடி வந்து பேசுவார்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வாகனத்தை மாற்றுவீர்கள். எதிலும் பொறுமை தேவை.

தனுசு: சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எடுத்த வேலையை முடிக்கப் போராடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. ஜாமீன் கையெழுத்திடுவது, வேலைக்கு சிபாரிசு செய்வது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

மகரம்: குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். பண வரவு உண்டு.

கும்பம்: அரசுக் காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளி வட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூர் பயணம் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் பணிகளை முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

மீனம்: இழுபறியாக இருந்த பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். தந்தை வழியில் அனுகூலம் உண்டு. குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

  • 231
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 21 ஆம் தேதி திங்கட்கிழமை 7.9.2026.

இன்று மாலை 04.38 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.

இன்று மாலை 06.33 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.

இன்று காலை 07.36 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.

இன்று அதிகாலை 05.57 வரை பவம். பின்னர் மாலை 04.38 வரை பாலவம். பின்பு கௌலவம்.

இன்று காலை 06.03 வரை சித்த யோகம். பின்னர் மாலை 06.33 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=642&dpx=2&t=1788751107

நல்ல நேரம்:

காலை : 06.00 முதல் 07.00 மணி வரை

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 236

Good Morning...

  • 231
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம் : பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் வாராக்கடன் வந்து சேரும். பங்குதாரரின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

ரிஷபம் : வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மிதுனம் : திடீர் பயணம் அலைச்சல் தரும். திட்டமிட்ட வேலையை முடிக்க போராடுவீர். உடன் பிறந்தவர்களின் ஆதரவுடன் பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும்.

கடகம் : சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

சிம்மம் : திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற கையிருப்பை கரைக்கக் கூடும். வாகனத்தில் கவனமாக செல்லவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய அதிகம் உழைக்க வேண்டும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கன்னி : இங்கிதமாக பேசி அனைவரையும் கவருவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். கடன் பிரச்சினைகளில் ஒன்று தீரும். மனைவி, தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

துலாம் : முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.

விருச்சிகம் : எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

தனுசு : பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

மகரம் : சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர்கள். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம் : பழைய நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். பணவரவு திருப்தி தரும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்.

மீனம் : பணவரவு உண்டு. அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

  • 408
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 4.9.2026.

இன்று அதிகாலை 02.08 வரை சப்தமி. பின்னர் இரவு 11.46 வரை அஷ்டமி. பின்பு நவமி.

இன்று அதிகாலை 12.56 வரை கிருத்திகை. பின்னர் இரவு 11.12 வரை ரோகிணி. பின்பு மிருகசீரிஷம்.

இன்று மாலை 04.44 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம்.

இன்று அதிகாலை 02.08 வரை பவம். பின்னர் பிற்பகல் 12.57 வரை பாலவம். பின்பு இரவு 11.46 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று இரவு 11.22 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=641&dpx=2&t=1788667458

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

பகல் : 02.00 முதல் 03.00 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 405

Good Morning....

  • 399
  • 499
  • 498
·
Added a news

மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

எனினும், இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்குப் பதிலளிக்குமாறு கனடா அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டொராண்டோவைச் சேர்ந்த முன்னாள் நடிகையும் நகைச்சுவை கலைஞருமான கிளாரி புரோஸோ , சிறுவயது முதலே கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.

பல கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகும் தனக்குக் தீராத மன உளைச்சல் நீடிப்பதால், சட்டம் வழங்கும் கருணைக்கொலைக்குத் தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மே 2026-இல் அவசர மனுத் தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதி கரிசிமா மாதன், புரோஸோவின் வேதனைகள் உண்மையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றபோதிலும், சட்ட விலக்கு அளிப்பது சமூகத்திலும் அரசின் கொள்கை முடிவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி மனுவை நிராகரித்தார்.

அதேசமயம், 2024-ஆம் ஆண்டு புரோஸோ தாக்கல் செய்த அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்கு பதிலளிக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை 14 நாட்களுக்குள் தொடங்குமாறு கனடா தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

கனடாவில் 2021-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி, தீர்க்க முடியாத நோய் மற்றும் உடல் ஊனம் உள்ளவர்கள் கருணைக்கொலை கோர முடியும்.

ஆனால், மனநலப் பிரச்சினையை மட்டுமே காரணமாகக் கொண்டு கருணைக்கொலை கோருவதற்கு அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

இத்தடையை நீட்டிக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு குறித்துப் பேசிய புரோஸோ, "மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களைப் போன்ற சம உரிமையோ, உடல் சார்ந்த சுய உரிமையோ இல்லை என்பதை அரசாங்கம் மீண்டும் நிரூபித்துள்ளது.

நான் தொடர்ந்து வேதனையை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்" என வேதனையுடன் தெரிவித்தார்.

அரசியலமைப்புச் உரிமைகளின்படி மனநலப் பாதிப்பு உள்ளவர்களுக்கும் கருணைக்கொலை உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்கான முதன்மை வழக்கைத் தொடர்ந்து நடத்தப்போவதாக புரோஸோவின் சட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

  • 515
·
Added a post

கத்தார்..

இயற்கை அளித்த கொடை மூலம் வெறும் வளர்ச்சி மட்டுமல்ல; அதன் சிந்தனை முறை. அவர்கள் உணர்ந்து பட்டது

"சிறிய நாடாக இருப்பது எங்கள் பலவீனம் அல்ல; உலகிற்கு எங்களைத் தவிர்க்க முடியாத நாடாக மாற்றுவதே எங்கள் பாதுகாப்பு."

""கத்தாருள் கத்தார் எனப்படுவர்; உலகார்முன் கத்தி நிற்கச் செய்த செல்வம் உடையார்! ""

மணலினுள் மாணிக்கம் போலிருந்த நாடொன்று, எரிவாயுவால் உலக வரைபடம் ஏறியது!

கிணற்றிலே எரிவாயு கண்டார்; கணத்திலே உலக கவனம் கொண்டார்!

நாடு சிறிதென்று நாணவில்லை; லட்சியம் பெரிதென்று உலகம் நாண வைத்தது!

எண்ணெய் கிடைத்தது அதிர்ஷ்டம்; எரிவாயுவை அதிகாரமாக மாற்றியது புத்திசாலித்தனம்!

பாலைவன மணல் இருந்த இடத்தில் இன்று உலக அரசியல் தடம் பதிக்கிறது!

அதற்காக அவர்கள் ஐந்து ஆயுதங்களைப் பயன்படுத்தினர்:

LNG (எரிவாயு)

Al Jazeera (ஊடகம்)

Sports (FIFA, PSG)

Education (Education City)

Diplomacy (இடைத்தரகர் அரசியல்)

இதையே சர்வதேச உறவியல் மொழியில் Soft Power + Economic Statecraft என்று அழைக்கிறார்கள்.

இதே மாதிரி அணுகுமுறையை சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், ஓரளவு தென் கொரியாவும் பின்பற்றியுள்ளன. .

ஆனால் கத்தாரின் தனிச்சிறப்பு என்னவென்றால், மக்கள் தொகை மிகவும் குறைவாக இருந்தும் உலக அரங்கில் தன்னை அவசியமான நாடாக மாற்றிக்கொண்டது..

கத்தார் – பாலைவனத்திலிருந்து உலக மேடைக்கு

சிறிய நாடு, மிகப் பெரிய லட்சியம்

வெறும் 3 லட்சம் குடிமக்களைக் கொண்ட சிறிய அமீரகமான கத்தார், இயற்கை எரிவாயு (LNG) வளத்தை அடிப்படையாகக் கொண்டு உலகின் செல்வாக்கு மிக்க நாடுகளில் ஒன்றாக மாறியது.

"Small country, big ambition" என்பதே அதன் கொள்கை..

.அல் தானி (Al Thani) அரச குடும்பத்தின் பங்கு

கலீஃபா – சுதந்திரத்தை அறிவித்தார்.

ஹமத் – எரிவாயு வளத்தைப் பயன்படுத்தி நாட்டை உலகின் பணக்கார நாடாக மாற்றினார்.

தமீம் – கத்தாரை உலக அரசியல், விளையாட்டு, கலாச்சாரம் ஆகியவற்றின் மையமாக மாற்ற முயன்றார்..

LNG புரட்சி

North Field எனும் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வளத்தை மிகப்பெரிய முதலீட்டில் பயன்படுத்தியது.

இதன் மூலம் கத்தார் உலகின் மிகப்பெரிய LNG ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக உருவானது..

Soft Power (மென் அதிகாரம்)

கத்தார் தனது செல்வத்தைப் பயன்படுத்தி:

Al Jazeera ஊடகம்

FIFA World Cup 2022

PSG கால்பந்து கிளப்

உலகப் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள்

வெளிநாட்டு பல்கலைக்கழக வளாகங்கள்

கலை மற்றும் விளையாட்டு

ஆகியவற்றில் முதலீடு செய்து உலக செல்வாக்கைப் பெற்றது..

பாரம்பரியமும் நவீனமும்

பெடோயின் (Bedouin) பாரம்பரியம், ஃபால்கன் வேட்டை போன்றவை பாதுகாக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் உலகத் தர நகரங்கள், மெட்ரோ, ஆடம்பர வாழ்க்கை ஆகியவை வளர்க்கப்பட்டுள்ளன..

செல்வம் – ஆனால் சமத்துவமின்மை

கத்தார் குடிமக்களுக்கு:

இலவச மருத்துவம்

இலவச கல்வி

அரசு வேலை

மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட பல நலன்கள்.

ஆனால் மக்கள்தொகையில் 90% வெளிநாட்டு தொழிலாளர்கள்.

அவர்களுக்கு குடியுரிமை கிடைப்பது அரிது..

தொழிலாளர் சர்ச்சைகள்

FIFA உலகக் கோப்பைக்கான கட்டுமானங்களில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டின.

Kafala முறை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

பின்னர் சில தொழிலாளர் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டாலும், அமலாக்கம் முழுமையில்லை என விமர்சனங்கள் தொடர்கின்றன..

பெண்களின் முன்னேற்றம்

ஷேக்கா மோஸா கல்வி மற்றும் சமூக மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

அவரது மகள் ஷேகா மயாசா உலகின் முக்கிய கலை நிர்வாகிகளில் ஒருவராக உருவானார்.

அதே நேரத்தில் ஷரியா சட்டத்தின் தாக்கம் இன்னும் சமூகத்தில் உள்ளது..

வெளிநாட்டு அரசியல்

Arab Spring காலத்தில் Muslim Brotherhood-ஐ கத்தார் ஆதரித்தது.

இதனால் சவுதி அரேபியா, UAE போன்ற அண்டை நாடுகளுடன் உறவு மோசமடைந்தது.

இருப்பினும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் உறவைத் தொடர்ந்து பேணியது..

கத்தாரின் அடிப்படை உத்தி

"கத்தார் தனது பணத்தை மட்டும் பயன்படுத்தவில்லை; தனது செல்வத்தை உலகளாவிய அரசியல், ஊடகம், விளையாட்டு, கலை, கல்வி மற்றும் இராஜதந்திர செல்வாக்காக மாற்றியது."

"எரிவாயு வளத்தை வெறும் பொருளாதாரமாக அல்ல; உலகளாவிய அதிகாரமாக மாற்றிய நாடே கத்தார்."

ஒரு புறம்: அதிவேக வளர்ச்சி, செல்வம், கல்வி, கலை, உலக செல்வாக்கு..

மறுபுறம்: முடியாட்சி, குடியுரிமை ஏற்றத்தாழ்வு, புலம்பெயர் தொழிலாளர் சுரண்டல், மனித உரிமை விமர்சனங்கள்..

அதாவது, கத்தார் என்பது "மிகப் பெரிய வெற்றிக் கதை" மட்டுமல்ல; "முரண்பாடுகள் நிறைந்த வெற்றிக் கதை"

  • 510
·
Added a post

உங்க பிள்ளை கிட்டே,நான் எதை சொன்னாலும் அவபேச்சைகேட்காதேடான்னு தினமும்,மந்திரம் போல ஓதி சொல்லி அனுப்புறீங்களே…உங்களுக்கு வெக்கமாஇல்லை….

அவன் என் பிள்ளை…. என் பேச்சை தான் கேப்பான்….இதிலே என்ன வெக்கம்

சரியான அம்மா…நீங்க. வெட்கம்…மானம் ..சூடு…. சொரணை எதுவும் இல்லை உங்களுக்கு…. நான் எதை சொல்ல வாயை தொறந்தாலும் ரெண்டு காதையும் பொத்திக்கிறாரு….. எதையும் பேச முடியலே…

அடியே ரொம்ப ஓவாரா பேசறே….. ஒரு மாமியாரை பேசும் பேச்சா இது….

மாமியார்…….பெரியமாமியார்கொஞ்சம் கூட இங்கிதம்இல்லை…. படிப்பறிவு இருந்தா தானே……

அப்ப……என்னை அறிவுகெட்டவள் ன்னுசொல்றியா…. எல்லாம் நீ வேலைக்கு போற திமிரு…. இப்படி எல்லாம் பேச சொல்லுது உன்னை…..

பொண்டாட்டி சொல்லறதை கொஞ்சமாவது ஒரு ஆம்பிளை கேக்கணும்…. அது தான் குடும்பத்துக்கு அழகு…..

ஒரு நாளைக்கு கொஞ்சம் பேசுவே….. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா… பேசி தலையணை மந்திரம் ஓதி….அவனை எங்களிடமிருந்து பிரிப்பே…. இந்த காலாத்துபொட்ட புள்ளைங்க பத்தி தெரியாதா எனக்கு….

பாவி….. பாதகி மாமியார்…நீ…..இந்த குடும்பம் உருபடவே படாது….. ஒரு பொம்பளைக்கு இவ்வளவுஆணவம் இருக்க கூடாது…

நீ தாண்டி ஆணவகாரி…. அகந்தை எல்லாம் கலந்து வளர்த்தாங்க உங்க வீட்டுலே….

நீங்கமட்டும் உங்க பிள்ளை யை எப்படி வளர்த்தீங்கலாம்…. பொண்டாடடிஎன்ன சொல்ல வறா….. நல்லதா…. கெட்டதா…ன்னு காதை கொடுத்து கேக்கணும்…

என்னடி பெருசா நல்லது சொல்ல போறே……அந்த எண்ணம் கூட இருக்கா உனக்கு……

இந்தபாழடைந்தவீட்டுலேஇருபதாயிரம் வாடகை கொடுத்துக்கினேஇருங்க காலத்துக்கும்…. அதுவும் நீங்க படுக்குற கூடத்திலே இன்னைக்கோ நாளைக்கோ சுவர் இடிஞ்சி உங்க தலையிலே விழுற மாதிரி இருக்கு….

ஆமா.. நீ ஆபத்பாண்டாவ….நீ தான் காப்பாத்தபோறீயா…. அதான் நல்லவீடா பாக்கறேனே…. கிடைக்கலயே…

ஏன் வாடகை வீட்டுக்கு இனி போகணும்….. குடும்பத்தோடநாம எல்லாம் சொந்த வீட்டுக்கு போலாம் ன்னு பார்த்தா….. அவர் கிட்ட பேச விடாமே செஞ்சிட்டியே…

என்னடி சொல்றே….. சொந்த வீடா…..

ஆமா…நான் வேலை செய்யுற பாங்க்குலேஹௌசிங் மேளாநடந்தது.,. எழுபதுலட்சம்ரூபாய் வட்டியி ல்லாகடன் கொடுப்பாங்க…அதை வாங்கி சொந்தமாஒரு வீடுவாங்கலாமுன்னுஅவர் கிட்ட…..டிஸ்கசன்பண்ணலாமுன்னு., பத்து நாளா ட்ரை பண்றேன்….. அவர் என்னடான்னா.. காதை மூடிக்கிறாரு…

அய்யோ ராமா…இதை என் கிட்ட மொதலில் சொல்லியிருக்ககூடாதா செல்லம்…அவனை ஏன் கேக்குறே…. நீ வாங்கு…மருமகளே…..

இப்ப முடியாது…. டைம் பார் ஆயிடிச்சி…. இனி அடுத்த வருஷ ஹௌசிங் மேளா தான்….

நான்.. பாவிடி,தங்கமே….. உன் நல்ல எண்ணத்தை புரிஞ்சிக்காமே….. என்னென்னமோ செய்துட்டேன்…. பேசிட்டேன்…..

அட விடுங்க அத்தை…. அடுத்த வருஷம் லோன் வாங்கி வீடு வாங்கினா போகுது…..

  • 508
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: இங்கிதமானப் பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். கூட்டுத்தொழிலில் போட்டிகள் குறையும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்கவும்.

ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்காதீர். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். தடைகள் உடைபடும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரம் ஓரளவு லாபம் தரும்.

மிதுனம்: பிள்ளைகளின் படிப்பு, வேலை தொடர்பாக அலைச்சல், டென்ஷன் வரலாம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வியா பாரத்தில் புது முடிவு எடுக்க வேண்டாம். பயணங்கள் அலைச்சல் தரும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டி வரும்.

கடகம்: மனப்போராட்டம் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

சிம்மம்: மின்சார சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர். பழைய கடனை நினைத்து வருந்த வேண்டாம். புதுவழி பிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரர் ஆதரவு தருவார். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

கன்னி: தொட்டது துலங்கும். தடைகள் யாவும் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் உடனடியாக நிறைவேறும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களின் உதவியை நாடுவீர்கள்.

துலாம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். வியா பாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் நிதானமாக பழகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். தம்பதிக்குள் மனக்கசப்புகள் வரக் கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படுவது நல்லது. வியாபார போட்டிகள் அதிகரிக்கும். பாக்கி வசூலாகும்.

தனுசு: பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தருவதை தவிர்க்கவும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயல்வீர். அலுவலகத்தில் உங்களின் ஆளுமைத் திறன் கூடும்.

மகரம்: திட்டமிட்ட வேலையை முடிக்க, வேகத்தை கூட்டுவீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கும்பம்: பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்த வேண்டாம். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆர்வம் படிப்பில் திரும்பும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்.

மீனம்: முன்பு செய்த உதவிக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்வு கிட்டும். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்துக்காக புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்.

  • 557
·
Added a post

தொலைந்த வாழ்வை மீட்டெடுக்கும் ‘திருத்தொலைவில்லிமங்கலம்’! இரட்டைத் திருப்பதியின் ஆன்மீக அதிசயம்

வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்துவிட்டு, மீண்டும் ஒரு புது விடியலைத் தேடி அலைபவரா நீங்கள்? உங்களுக்கான அருமையான ஆன்மீகத் திருத்தலம் தான் தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள ஸ்ரீ அரவிந்த லோசனர் திருக்கோயில்!

‘திருத்தொலைவில்லிமங்கலம்’ - பெயர் வந்த சுவாரஸ்யப் பின்னணி!

முன்னொரு காலத்தில் சுப்ரபர் என்ற மகரிஷி யாகம் செய்வதற்காக நிலத்தைச் சீரமைத்த போது, அங்கே ஒரு வில்லும் (Dhanus) தராசும் (Tula) கிடைத்தன. அவர் அதைத் தொட்ட கணத்தில், குபேரனின் சாபத்தால் பொருளாக மாறியிருந்த ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் சாபம் நீங்கி, மீண்டும் தேவ உருவம் பெற்றனர்!

தொலைந்துபோன வாழ்வும், நன்மைகளும் மீண்டும் மீட்டெடுக்கப்பட்ட இடம் என்பதால் தான் இத்தலத்திற்கு ‘திருத்தொலைவில்லிமங்கலம்’ என்று பெயர் வந்தது.

செந்தாமரைக் கண்ணனின் அற்புதத் தரிசனம்!

சுப்ரபர் மகரிஷி தினமும் ஆயிரம் செந்தாமரை மலர்களால் பெருமாளை அர்ச்சித்து வழிபட்டார். அவரின் தூய பக்தியில் மகிழ்ந்த பெருமாள், தாமரை மலர்களின் நடுவே பேரழகோடு, செந்தாமரை மலர் போன்ற கண்களோடு காட்சி தந்தார். அதனால் தான் அவருக்கு ‘அரவிந்த லோசனர்’ (செந்தாமரைக் கண்ணன்) என்று திருநாமம் ஏற்பட்டது!

அவருக்கு அருகில் அருள்மிகு கருந்தடங்கண்ணி நாச்சியார் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இக்கோவிலின் தனித்துவமான சிறப்புகள்:

இரட்டைத் திருப்பதி: ஒரே கிராமத்தில், வெறும் 100 மீட்டர் இடைவெளியில் இரண்டு திவ்ய தேசங்கள் (தேவபிரான் மற்றும் அரவிந்த லோசனர்) அமைந்திருக்கும் அரிய அதிசயம்!

கேது தோஷ நிவர்த்தி: 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம், நவத்திருப்பதிகளில் ‘கேது’ பகவானுக்குரிய சிறப்புத் தலமாக வழிபடப்படுகிறது.

நம்மாழ்வாரின் பாசுரம்: நம்மாழ்வாரால் மனமுருகி மங்களாசாசனம் செய்யப்பட்ட புனிதத் தலம்.

வழிபாட்டுப் பலன்கள்:

வாழ்க்கையில் முன்னேற்றமின்றித் தவிப்பவர்கள், கேது தோஷம், திருமணத் தடை அல்லது தீவிர மனக்குழப்பத்தில் இருப்பவர்கள் இத்தலத்திற்கு வந்து அரவிந்த லோசனரைத் தரிசித்துச் சென்றால், தொலைந்த நிம்மதியும் நல்வாழ்வும் நிச்சயமாக மீண்டும் கிடைக்கும் என்பது ஐதீகம்!

இந்த வார இறுதியில் தாமிரபரணி கரையில் அமைந்திருக்கும் இந்த அற்புதத் திருத்தலத்திற்குச் சென்று அந்தச் செந்தாமரைக் கண்ணனின் அருளைப் பெற்று வாருங்கள்!

  • 557
·
Added a post

220 ஆண்டுகளாக பூட்டப்படாத கதவுடன் கூடிய வீட்டில் எட்டு தலைமுறையாக வாழ்ந்து வரும் குடும்பத்தினர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் 7 கிலோமீட்டர் தொலைவில் காவிரி கிளை ஆறான குடமுருட்டி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள நடுக்காவேரி கிராம மக்கள் பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் சுண்ணாம்பு மற்றும் செங்கலால் கட்டப்பட்டுள்ளன. தற்போது இங்குள்ள பல வீடுகள் சேதமடைந்ததால் அதனை இடித்துவிட்டு புதிதாக வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் ஒருசில வீடுகள் மட்டுமே பழமையோடு நிமிர்ந்து நிற்கின்றன. இதில் 1798 ஆம் ஆண்டு புண்ணாக்கு என்ற பெண்மணியால் கட்டப்பட்ட வீடுதான் யோகபுலி நாட்டார் பரம்பரை வீடு. சுண்ணாம்பு காரைகொண்டு இரண்டு அடி அகலத்தில் சுட்ட கல்லால் கட்டப்பட்ட இந்த வீடு முன்புறம் பின்புறம் என இரண்டு முக்கிய நிலைகளை கொண்டுள்ளது.

இந்த வீட்டில் கடந்த 220 ஆண்டுகள், எட்டு தலைமுறையாக ஒன்றாக வாழ்ந்து வரும் மக்கள், தங்கள் முன்னோர்கள் எப்படி இந்த வீட்டை வைத்திருந்தார்களோ அப்படியே இன்னும் பராமரித்து வருகின்றனர். காவிரிக் கரையில் அமைந்துள்ள இந்த வீட்டினுள் எப்போது வேண்டுமானாலும் வெள்ளம் வரலாம் என்ற எச்சரிக்கையோடு எட்டடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்த வீட்டின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் வீட்டில் உள்ள யாரும் வீட்டை காலி செய்துவிட்டு ஒட்டுமொத்தமாக வெளியே சென்றுவிடக் கூடாது என்ற நோக்கத்திலும், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு வரலாம் என்ற எதிர்பார்ப்போடு முன்புறம் மற்றும் பின்புறமுள்ள கதவுக்கு தாழ்ப்பாள் போடுவதே இல்லை.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், தங்கள் முன்னோர்கள் வசித்த வீட்டில் எதற்காக கதவுகளுக்கு தாழ்ப்பாள் இல்லாமல் கட்டினார்களோ அதேபோல இதுவரை தாழ்ப்பாள் இல்லாமல் அந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். அந்த வீட்டில் வசித்த பல தலைமுறையினர் சென்னை, பெங்களூர் வெளிநாடு என வேலைக்கு சென்று விட்ட போதிலும் அந்த வாரிசுகளில் எவரேனும் ஒருவர் அங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இந்த பழமையான வீட்டினுள் நெல் கொட்டும் குதிர், உரல் உலக்கை, பெரிய அளவிலான கருங்கல்லால் ஆன ஆட்டுக்கல் அம்மிக்கல் போன்ற பழமையாக பொருட்கள் இன்றும் உள்ளன. மேலும் இந்த வீட்டை யாரும் பாகப்பிரிவினை செய்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டின் ஒருபுறத்தில் படுக்கைஅறையும் மறுபுறத்தில் சமையலறையும் அமைத்துள்ளதாக கூறுகின்றனர். பெண்மணிகள் ஒரே குடும்பமாக ஒற்றுமையோடு வாழும் இந்தவீடு பழமையை பறைசாற்றும் வரலாற்று நிஜமாகவே பார்க்கப்படுகிறது.

  • 552
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை 5.9.2026.

இன்று இரவு 09.21வரை நவமி. பின்னர் தசமி.

இன்று இரவு 09.44 வரை மிருகசீரிடம் பின்னர் திருவாதிரை.

இன்று பிற்பகல் 01.42 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.

இன்று காலை 10.34 வரை தைத்துூலம். பின்னர் இரவு 09.21வரை கரசை. பின்பு வணிசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=640&dpx=2&t=1788582442

நல்ல நேரம்:

காலை : 08.00 முதல் 09.00 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 552
  • 550
·
Added a post

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பழமையான வைணவத் திருத்தலம் அத்தாளநல்லூர் கஜேந்திர வரதர் கோயில்.

கஜேந்திர யானையை மகாவிஷ்ணு காப்பாற்றிய கஜேந்திர மோட்ச நிகழ்வுடன் தொடர்புடைய தலம் என்று இத்தலம் சிறப்பிக்கப்படுகிறது.

மூலவர்:

இத்தலத்தின் மூலவர் ஸ்ரீ ஆதிமூலப் பெருமாள் / கஜேந்திர வரதர். ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மேலும் பிருகு மகரிஷி, மார்க்கண்டேய மகரிஷி ஆகியோருக்கும் இத்தலத்தில் பெருமாள் தரிசனம் அளித்ததாக தலவரலாறு கூறுகிறது.

கஜேந்திர மோட்ச வரலாறு:

இந்திரத்துய்மன் என்ற மன்னன் அகத்திய முனிவரின் சாபத்தால் யானையாகப் பிறந்ததாகக் கூறப்படுகிறது. கஜேந்திரன் என்ற பெயரில் யானைகளின் தலைவனாக வாழ்ந்த அவன், பெருமாளின் தீவிர பக்தனாக இருந்தான்.

ஒருநாள் தாமரைக் குளத்தில் இறங்கி, பெருமாளுக்குச் சமர்ப்பிக்க தாமரை மலரைப் பறித்தபோது, ஊர்த்துவன் என்ற கந்தர்வன் முதலை வடிவில் அவனது காலை பற்றிக் கொண்டதாக தலபுராணம் கூறுகிறது.

நீண்ட நேரம் போராடியும் விடுபட முடியாத கஜேந்திரன், துதிக்கையில் தாமரை மலரை ஏந்தி “ஆதிமூலமே!” என்று பெருமாளை அழைத்தான். பக்தனின் அழைப்பைக் கேட்ட மகாவிஷ்ணு கருட வாகனத்தில் விரைந்து வந்து சக்கராயுதத்தால் முதலையை அழித்து கஜேந்திரனுக்கு அருள் செய்தார்.

இதனால் இத்தலம் “ஆனை காத்த நயினார் கோவில்” என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது.

அத்தாளநல்லூர் என்ற பெயர்:

“அத்தி” என்பது யானையைக் குறிக்கும். யானையை ஆட்கொண்டு காத்ததால் அத்தியாளநல்லூர் → அத்தாளநல்லூர் என பெயர் மருவியதாகக் கூறப்படுகிறது. கல்வெட்டுகளில் இவ்வூர் அத்தாணி நல்லூர், கரிகாத்தபுரம், பொய்மாம் பூம்பொழில் போன்ற பெயர்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் உள்ளன.

கோயிலின் சிறப்புகள்:

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள திருத்தலம்.

பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

கோயிலின் பின்புறம் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஒரு தூண் நரசிம்மராக வழிபடப்படுகிறது.

அந்தத் தூணுக்கு பக்தர்கள் சந்தனம் மற்றும் மல்லிகைப் பூக்களால் “சட்டை சாற்றுதல்” என்ற நேர்த்திக்கடனைச் செய்கின்றனர்.

கோயிலில் பல காலகட்டங்களின் கட்டிடக்கலைத் தடங்களும் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. சோழர், பாண்டியர் உள்ளிட்ட அரசர்களின் காலத்தில் நிலதானங்கள் மற்றும் வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதற்கான கல்வெட்டு செய்திகள் உள்ளன.

தாமிரபரணி தீர்த்தம்:

தாமிரபரணி நதி இத்தலத்தின் மிக முக்கியமான புனிதச் சிறப்பாகும். நதிக்கரையில் அமைந்திருப்பதால் இத்தலம் தீர்த்தப் பெருமை பெற்ற பரிகாரத் தலமாகவும் பக்தர்களால் போற்றப்படுகிறது.

வழிபாட்டின் நம்பிக்கை:

கஜேந்திரனின் அழைப்பைக் கேட்டவுடன் பெருமாள் விரைந்து வந்து காப்பாற்றிய தலம் என்பதால், ஆபத்து, தடைகள், மனக்கவலை போன்றவற்றிலிருந்து விடுபடவும், பெருமாளின் அருள் கிடைக்கவும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகள் மிகவும் சிறப்பான நாட்களாகக் கருதப்படுகின்றன; கருட சேவையும் நடைபெறுவதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

முக்கிய விழாக்கள்:

புரட்டாசி சனிக்கிழமைகள்

புரட்டாசி கடைசி சனிக்கிழமை

ஆவணி கிருஷ்ண ஜெயந்தி

மார்கழி வைகுண்ட ஏகாதசி

தைப்பூசத் திருவிழா

கருட சேவை

தரிசன நேரம்:

தற்போதைய உள்ளூர் பட்டியலில் கோயில் நேரம் பொதுவாக:

காலை: 5:30 – 11:00

மாலை: 5:00 – 9:00

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. Sri Bhoomi Neela Samedha Aadhimoola Perumal (Gajendra Varadhar) Temple

விழா நாட்களில் நேரம் மாறக்கூடும் என்பதால், தொலைதூரத்திலிருந்து செல்லும் பக்தர்கள் முன்கூட்டியே உறுதி செய்வது நல்லது.

முகவரி:

அருள்மிகு ஸ்ரீ பூமி நீளா சமேத ஆதிமூலப் பெருமாள் (கஜேந்திர வரதர்) திருக்கோயில்,

அத்தாளநல்லூர்,

திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு – 627416. இந்தியா

அருகிலுள்ள இடம்: வீரவநல்லூர்.

வீரவநல்லூரிலிருந்து முக்கூடல் செல்லும் வழியில் அத்தாளநல்லூர் அமைந்துள்ளது. வீரவநல்லூர் ரயில் நிலையம் அருகிலுள்ள ரயில் வசதியாக குறிப்பிடப்படுகிறது.

ஏன் இந்தத் தலத்தை தரிசிக்க வேண்டும்?

“ஆதிமூலமே!” என்று அழைத்த பக்த யானையின் குரலுக்கு உடனடியாகச் செவிசாய்த்து காப்பாற்றிய பெருமாள் இங்கு அருள்பாலிப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு. பக்தனின் அழைப்புக்கு இறைவன் நிச்சயம் செவிசாய்ப்பார் என்ற நம்பிக்கையை எடுத்துரைக்கும் அற்புதமான தலமாக அத்தாளநல்லூர் விளங்குகிறது.

  • 568
  • 561
  • 562
New People