இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: வருங்காலத்துக்காக முக்கிய முடிவு எடுப்பீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் கூடும். தொல்லை தந்த வாகனத்தை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.
ரிஷபம்: இங்கிதமாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
மிதுனம்: தள்ளிப் போன சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும். சொந்த ஊர் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர். கருத்துமோதல் நீங்கி தம்பதிக்குள் நெருக்கம் உண்டு. பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கடகம்: உங்களின் ஆளுமைத் திறன் கூடும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குழப்பங்கள் விலகும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர்கள். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம்: பணவரவால் பழைய கடனை அடைப்பீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வாகனச் செலவு குறையும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
கன்னி: பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்தாதீர். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். தாயின் உடல்நலம் சீராகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். வியாபாரம் சிறக்கும். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்.
துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். சின்னச்சின்ன பிரச்சினைகள் தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.
விருச்சிகம்: புது எண்ணங்கள் தோன்றும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். இழுபறியான காரியங்கள் கைகூடும். அலுவலகத்தில் புதிய பதவிக்கான போட்டி குறையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் கருத்துகளை ஏற்று நடப்பது நல்லது. போட்ட முதல் இரட்டிப்பாகும்.
தனுசு: குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் குழப்பம் வந்து போகும். எதிலும் நிதானமாக செயல்படவும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரரை அனுசரித்து நடப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவு தருவார்கள்.
மகரம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். பணவரவு மனநிறைவை தரும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும். பணவரவு திருப்தி தரும். செலவுகளும் தொடரும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.
மீனம்: பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கூட்டுத்தொழிலில் கடையை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 23.8.2026.
இன்று அதிகாலை 03.35 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று இரவு 07.48 வரை மூலம். பின்னர் பூராடம்.
இன்று காலை 09.32 வரை விஸ்கம்பம். பின்னர் பிரீதி.
இன்று அதிகாலை 03.35 வரை கரசை. பின்னர் மாலை 04.34 வரை வனிசை. பிறகு பத்திரை.
இன்று காலை 06.04 வரை சித்த யோகம். பின்னர் இரவு 07.48 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
பகல் : 0145 முதல் 02.45 மணி வரை
மாலை: 03.15 முதல் 04.15 மணிவரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பி தருவர். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளவும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.
ரிஷபம்: பிள்ளைகளால் விரயச் செலவுகள் வரக்கூடும். பேச்சில் கவனம் தேவை. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பணிச்சுமை கூடும்.
மிதுனம்: திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டு. மனதில் இருந்த பயம் விலகும். பழுதான வாகனம் சீராகும். சிலர் புது வாகனம் வாங்குவீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள்.
கடகம்: சகோதர வகையில் உதவி கிட்டும். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை விற்க முயற்சிப்பீர். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
சிம்மம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்.
கன்னி: எதிர்பாராத பணவரவால் மனமகிழ்ச்சியுண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
துலாம்: பழைய நல்ல நினைவுகளில் மூழ்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். ஓரளவு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். பூர்வீக சொத்து வழக்கில் நல்ல தீர்வு கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.
தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
மகரம்: பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் பிரச்சினையில் ஈடுபடுவதை தவிர்ப்பீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும்.
கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்பு கூடும்.
மீனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குழப்பம் நீங்கி குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர், நண்பர்களால் மனநிம்மதி கிட்டும். வியாபாரத்தில் பழைய பாக்கியை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 5 ஆம் தேதி சனிக்கிழமை 22.8.2026.
இன்று அதிகாலை 01.37 வரை நவமி. பின்னர் தசமி.
இன்று மாலை 05.15 வரை கேட்டை. பின்னர் மூலம்.
இன்று காலை 08.27 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம்.
இன்று அதிகாலை 01.37 வரை கௌலவம். பின்னர் பிற்பகல் 02.36 வரை தைத்தூலம். பிறகு கரசை.
இன்று காலை 06.04 வரை மரண யோகம். பின்னர் சித்தர் யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் (திருநள்ளாறிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில்) அமைந்துள்ள அம்பகரத்தூர் ஸ்ரீ அஷ்டபுஜ பத்ரகாளியம்மன் திருக்கோயில் தென்னிந்தியாவின் மிக சக்திவாய்ந்த காளி திருத்தலங்களில் ஒன்றாகும்.
தல வரலாறு
புராணங்களின்படி, அம்பன் மற்றும் அம்பரன் (அம்பராசுரன்) என்ற இரு கொடுங்கோல் அசுர சகோதரர்கள் முனிவர்களையும் மக்களையும் கடுமையாகத் துன்புறுத்தி வந்தனர். அவர்களின் கொடுமைகளைப் பொறுக்க முடியாமல் சிவபெருமானிடம் மக்கள் முறையிட்டபோது, பத்ரகாளியாக அவதரித்த அன்னை அசுரர்களை அழிக்க முற்பட்டாள்.
காளிதேவி முதலில் 'அம்பன்' என்பவனைத் தனது ஆங்காரக் கூச்சலாலேயே வதம் செய்தாள். தப்பியோட முயன்ற 'அம்பரன்' எருமை வடிவமெடுத்து மாயங்கள் செய்ய, காளிதேவி அவனைத் துரத்திச் சென்று தன் திருவடியால் மிதித்து, திரிசூலத்தால் மார்பைப் பிளந்து வதம் செய்தாள். அசுரனான அம்பரனைச் சம்ஹாரம் செய்த இடம் என்பதால் இவ்வூர் 'அம்பரகரம்' என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் 'அம்பகரத்தூர்' என உருப்பெற்றது.
கோவிலின் தனித்துவமான சிறப்புகள்
வடதிசை நோக்கிய அஷ்டபுஜ திருக்கோலம்: அன்னை எட்டுத் திருக்கரங்களுடன் (அஷ்டபுஜம்) வடதிசை நோக்கி, உக்ர ரூபிணியாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.
அசுர சம்கார தோற்றம்: அன்னையின் வலது பாதம் மடிக்கப்பட்டு, இடது பாதம் அசுரன் அம்பரன் மீது ஊன்றப்பட்ட நிலையில், அவனது மார்பில் திரிசூலம் பாய்வது போன்ற பிரம்மாண்டமான கோலத்தில் காட்சி தருகிறாள்.
18 மீட்டர் வெள்ளை ஆடை அணிவிப்பு: இத்தலத்தில் காளியம்மனுக்கு எப்போதும் 18 மீட்டர் நீளமுள்ள வெள்ளைப் புடவை (வெள்ளைத் துணி) சாற்றப்படுவது மிகவும் அபூர்வமான சிறப்பம்சமாகும். பக்தர்கள் நேர்த்திக்கடனாக இந்த வெள்ளை ஆடைகளை வழங்கி வழிபாடு செய்கின்றனர்.
மகிஷாசுர வதப் பெருவிழா: வைகாசி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை அன்று இங்கு நடைபெறும் 'மகிஷாசுர வதம்' பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
உபசன்னதிகள்: இக்கோவிலில் காளீஸ்வரர், பெத்தண்ணர் மற்றும் பேச்சியம்மன் சந்நிதிகளும் அமைந்துள்ளன.
தரிசன பலன்கள் & வழிபாட்டு பயன்கள்
செய்வினை, பில்லி-சூனியம் அகலுதல்: காளிதேவியின் உக்ர அம்சம் காரணமாக, பக்தர்களைப் பிடித்துள்ள செய்வினை கோளாறுகள், ஏவல், பில்லி-சூனியம் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகும்.
ராகு-கேது மற்றும் செவ்வாய் தோஷ நிவர்த்தி: வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடு செய்வதும், எலுமிச்சை தீபம் ஏற்றுவதும் ஜாதக ரீதியிலான ராகு-கேது மற்றும் செவ்வாய் தோஷங்களைக் குணப்படுத்தும்.
பய உணர்வு நீங்கி தைரியம் பெறுதல்: மன பயம், மன அழுத்தம், எதிரிகள் தொல்லை ஆகியவற்றால் அவதிப்படுபவர்கள் இத்தல காளியை தரிசித்தால் மனதிடமும் எதிரிகளை வெல்லும் தைரியமும் கூடும்.
திருமணத் தடை மற்றும் தொழில் வளர்ச்சி: ஆடி மற்றும் தை மாதங்களின் கடைசி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் விளக்கு பூஜையிலும், செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகளிலும் பங்கேற்றால் திருமணத் தடைகள் நீங்கி, தொழிலில் பெரும் விருத்தி உண்டாகும்.
அழகு என்பது முகத்தில் இல்லை…
மனதில் மலரும் மனிதநேயத்தில் இருக்கிறது,
இனிமையாகப் பேசுவது எளிது;
உண்மையாக அன்பு காட்டுவது அரிது,
பிறர் கண்ணீரின் காரணத்தை கேட்கும் இதயமே அழகானது,
துன்பத்தில் தவிக்கும் ஒருவருக்கு துணையாக நிற்பதே உயர்ந்தது,
எதையும் எதிர்பாராமல் உதவும் கரங்கள் தான் அழகின் அடையாளம்,
பிறர் வலியைத் தன் வலியாக உணர்பவர்களே உலகின் அழகான மனிதர்கள்!
கன்னடத் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கி, தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் சைத்ரா ஜே ஆச்சர். இணையத்தில் எப்போதும் ஆக்வாக இருக்கும் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கவர்ச்சிகரமான லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீ போலப் பரவி வருகின்றன.
2019-ஆம் ஆண்டு வெளியான 'மஹிரா' என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானார் சைத்ரா ஜே ஆச்சர். அதைத் தொடர்ந்து, அகில இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்ற '777 சார்லி' திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அவரின் சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் இவர் முதன்மை வேடத்தில் நடித்து வெளியான 'டோபி' திரைப்படம், இவருக்கு விமர்சன ரீதியாக நல்ல பெயரையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது.
கன்னட திரைப்படங்களில் அடுத்து அடுத்து நடித்து வந்த இவர், தமிழில் தேவயானி நடித்த '3 BHK' படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வசூலை அள்ளியது. அந்த படத்திற்கு பின், நடிகர் சசிகுமார் நடிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான 'மை லார்ட்' திரைப்படத்தில் கதாநாயகியாக சசிக்குமாருக்கு மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தில் எதுவுமே தெரியாத ஒரு கிராமத்து பெண் ரோலில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சைத்ரா ஜே ஆச்சர். இந்த படம் இவருக்கு ஒரு அடையாளத்தை பெற்றுத்தந்தது.
மூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாகவும் துடிப்புடனும் இயங்கி வரும் சைத்ரா ஜே ஆச்சர், அவ்வப்போது தனது விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட்டில், அடர் சிவப்பு நிறப் பாவாடை மற்றும் அதற்குப் பொருத்தமான மேலாடையில் போஸ் கொடுத்துள்ளார். தலையில் துப்பட்டாவை முக்காடிட்டும், குத்தவைத்து அமர்ந்தபடியும் மாடர்ன் மற்றும் பாரம்பரியம் கலந்த பாணியில் போஸ் கொடுத்துள்ளார். அவரது இந்த வசீகரமான தோற்றமும், கம்பீரமான பார்வையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. இந்தப் புகைப்படங்களுக்கு அவரது ரசிகர்கள் லைக்குகளையும், இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.
பிரபல நடிகை விஜயலட்சுமி சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். தற்போது இவர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள மாடர்ன் கிளாசிக் ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் தடம் பதித்த விஜயலட்சுமி, வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான 'சென்னை 28' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக 'சுல்தான் தி வாரியர்' என்ற அனிமேஷன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதற்காக சில நாட்கள் ரஜினியுடன் இணைந்து நடித்த நிலையில், சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது.
தொடர்ந்து மிஷ்கினின் அஞ்சாதே, வெண்ணிலா வீடு, அதே நேரம் அதே இடம் மற்றும் சமீபத்தில் வெளியான மிடில் கிளாஸ் போன்ற படங்களில் நடித்துத் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். இவர் தமிழ் பிக்பாஸ் சீசன் 2ல் வைல்டு கார்டு போட்டியாளராகக் கலந்து கொண்டு, ரசிகர்களின் ஆதரவை பெற்று இறுதிப் போட்டி வரை முன்னேறி, இரண்டாம் இடத்தை பிடித்தார்.
43 வயதாகும் விஜயலட்சுமி, இயக்குநர் பெரோஸ் முகமதுவை நீண்ட காலம் காதலித்து, பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நிலன் என்ற 9 வயது மகன் உள்ளான். திருமணம் மற்றும் குடும்ப சூழல் காரணமாக சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்தபோதிலும், சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்து வருகிறார்.




