Quote of the Day

பழமொழி: அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard

s

200
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
·
Added article
·

தமிழ், தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரெஜினா கஸாண்ட்ரா. டோலிவுட் திரையுலகில் இவர் முன்னணி நடிகையாக இருந்தாலும், திரையுலகில் இவர் அறிமுகமானது தமிழ் படங்கள் மூலம் தான். அந்த வகையில் 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் 2005-ஆம் ஆண்டு நடிகையாக தன்னுடைய கேரியரை துவங்கினார்.

பிரசன்னா மற்றும் கார்த்தி குமார் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் லைலா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, அழகிய அரசுரா படத்தில் நடித்தார். இந்த படமும் இவருக்கு கை கொடுக்காத நிலையில், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்த துவங்கினார். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்த போதும்... தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

அவ்வப்போது சில தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த, ரெஜினா தற்போது 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில், வில்லன் கேங்கில் இவரும் ஒருவர். அதுவும் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுக்கு மனைவியாக நடித்துளளார். இந்தப் படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக இந்தப் படத்தில் இன்டர்வெல் பிளாக்கில் அஜித்தின் மனைவியை கடத்த சொன்னது யார் என்பது குறித்த சீக்ரெட்டை ரெஜினா வெளியிட்டிருப்பார். இது யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்டாக அமைந்திருக்கும்.

ரெஜினாவின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பற்றி ரெஜினா பேசியது வைரலாக நிலையில், இப்போது திருமணம் குறித்து பேசி உள்ள தகவல் வைரலாகிக் கொண்டிருக்கிறது. தற்போது 34 வயதாகும் ரெஜினா இன்னமும் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார்.

  • 286
·
Added article
·

மோகன்லாலின் மகள் நாயகியாக அறிமுகமாகிறார். ஆசிர்வாத் சினிமாஸ் பேனரில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் படத்தின் மூலம் விஸ்மயா மலையாள திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைக்கிறார். இது ஆசிர்வாத் சினிமாஸின் 37வது படமாகும். சினிமா வெளிச்சத்தில் இருந்து எப்போதும் விலகியே இருந்த விஸ்மயா, திரைத்துறையில் பின்னணி பணிகளை மேற்கொண்டு உள்ளார். எழுத்தும் ஓவியமும் விஸ்மயாவின் பேவரைட்டாக இருந்து வந்தது.

'கிரெய்ன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட்' என்ற பெயரில் விஸ்மயா எழுதிய புத்தகத்தை பென்குயின் புக்ஸ் 2021 இல் வெளியிட்டது. கவிதைகள் மற்றும் கலைகள் நிறைந்த புத்தகம் இது. அமேசானின் 'பெஸ்ட் செல்லர்' பிரிவிலும் இந்தப் புத்தகம் இடம்பிடித்தது. தற்காப்புக் கலையிலும் ஆர்வமுள்ளவர் விஸ்மயா. மொய் தாய் என்ற தாய் தற்காப்புக் கலையைப் பயின்றிருக்கிறார். இதன் பயிற்சி வீடியோக்களை விஸ்மயா சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இப்படி இத்தனை நாட்களாக சினிமாவுக்காக ஆயத்தமாகி வந்த விஸ்மயா தற்போது ஒருவழியாக கதாநாயகி ஆகி உள்ளார்.

  • 295
·
changed a profile cover
·
·
Added article
·

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் மனைவி கௌரவதம்மாள், அவர் பட்டுக்கோட்டையாரோடு வாழ்ந்தது இரண்டே ஆண்டுகள். எனினும் அந்த நினைவுகளைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார்.

“எனக்கு பட்டுக்கோட்டை பக்கத்துல ஆத்திக்கோட்டைதான் சொந்த ஊர். எங்க அண்ணன் சின்னையனும் ‘அவுக’ளோட அண்ணனும் சிங்கப்பூர்ல வேலை பார்க்கும்போது சிநேகிதமானவங்க. ‘எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்ணணும்னு எங்க அண்ணன்தான் சொல்லிருக்காக. அப்ப அவுக அண்ணன் ஒண்ணும் சொல்லலையாம். சிங்கப்பூர்லேர்ந்து லீவுல ஊருக்கு வரும்போது, தம்பியைக் கூட்டிட்டு என்னைப் பொண்ணு பார்க்க வந்துட்டார்.

அப்ப அவுக, ’அண்ணனுக்குதான் பொண்ணு பார்க்கப் போறோம்’னு நினைச்சுக்கிட்டு வந்தாகளாம். பொண்ணு பார்த்துட்டு ஊருக்குத் திரும்பும்போது, ‘பொண்ணு எப்படிடா இருக்கு’ன்னு அண்ணன் கேட்க, ’அழகாதான் இருக்கு’ன்னு இவுக சொல்லிருக்காக. ‘உனக்குத்தான்டா இந்தப் பொண்ணு’னு அண்ணன் சொன்னதும், இவுகளுக்கு ரொம்ப சந்தோஷமாப் போச்சாம். அப்போ வீட்டுல வந்து எழுதுனதுதான், ஆடை கட்டி வந்த நிலவோ, கண்ணில் மேடைகட்டி ஆடும் எழிலோ பாட்டு. இப்போ தெரிஞ்சுக்கோங்க நாந்தான் ஆடைகட்டி வந்த நிலவு” என்று மலர்ந்து சிரிக்கிறார் கௌரவம்மாள்.

“அவுகளோட இருபத்தேழாவது வயசுல எங்களுக்குக் கல்யாணம் நடந்துச்சு. தலைமை பாவேந்தர் பாரதிதாசன். கல்யாணத்தை முன்னுக்கு நின்னு நடத்துனது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவருடைய மனைவி ஜானகிக்குச் சொந்தமான வீடு, லாயிட்ஸ் ரோட்ல இப்பவும் இருக்கு. அங்கதான் எங்க கல்யாணம். யார் யாரோ பெரிய மனுஷங்கள்லாம் வந்திருந்தாங்க.

“அன்னைக்கு அவுக அண்ணன் பொஞ்சாதிக்கு வளைகாப்பு. அப்போ நான் கிண்டலா, ‘அக்காளுக்கு வளைகாப்பு. அத்தான் மொகத்துல பொன் சிரிப்பு’ன்னு சொன்னேன். இதை, ‘கல்யாணப் பரிசு’ படத்துல, அவுக பல்லவியா போட்டு பாட்டா எழுதிட்டாக. ‘இது நீ எழுதுன பாட்டு. இந்தா பிடி சன்மானம்’னு அந்தப் பாட்டு எழுதுனதுக்குக் கிடைச்ச பணத்தை என் கையில கொடுத்தாக.

அவுகளுக்குக் கோவமே வராது. எப்பவும் சிரிப்போட ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்துக்கிட்டே இருப்பாக. என்னைய அதிகமா வெளியில எங்கேயும் கூட்டிட்டுப் போனது கிடையாது. ஔவையார் பட ப்ரிவியூவுக்கும், அடையார்ல நடந்த ஒரு ஷூட்டிங்குக்கும்தான் நான் அவுககூட வெளியில போனேன். அவுக இன்னும் ரெண்டு வருஷம் என்கூட வாழ்ந்திருக்கக் கூடாதான்னு எனக்கு ஆயாசமா இருக்கு.!

- நன்றி : கல்கி

  • 300
  • 301
  • 305

எதையுமே கற்றுக் கொள்வதற்காக வெட்கப்படாதீர்கள்.

என்றேனும் ஒரு நாள் தெரியவில்லை என்பதற்காக அவமானப்பட நேரிடும்.

  • 305

முதலில் செய்ய வேண்டியது இதுதானே?

"மற்றவர்களின் நியாயத்தை தீர்ப்பதும் நம்மை நியாயப்படுத்துவதும் நாம் எப்போதும் செய்வதுதான், ...

ஆனால் ,

மற்றவர்களைப் புரிந்துகொள்வதும் நம்மைத் திருத்திக் கொள்வதும்தான்

நாம் முதலில்

செய்ய வேண்டியது."

  • 316
  • 316

இது உண்மைதானே?

நம் கவனத்திற்கே வராமல் ஒசையேதுமின்றி

மெளனமாக யாரோ ஒருவர் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நம்மிடமிருந்து

விலகிக் கொள்கிறார்கள்.

  • 317
·
Added a post
·

விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18 ஆம் தேதி புதன்கிழமை 2.7.2025.

இன்று பிற்பகல் 02.59 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.

இன்று பிற்பகல் 02.21 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.

இன்று இரவு 08.08 வரை வரியான். பின்னர் பரிகம்.

இன்று அதிகாலை 02.24 வரை கரசை. . பின்னர் பிற்பகல் 1.18 வரை வனிசை. பின்பு பத்தரை.

இன்று பிற்பகல் 02.21 வரை அமிர்த யோகம். பின்பு மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=35&dpx=1&t=1751465504

நல்ல நேரம்:

காலை : 08.15 முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 353
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிர்பாராத வரவுகள் உண்டாகும். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் அமையும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதுமையான சூழல்கள் அமையும். வெற்றி கிடைக்கும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

ரிஷபம்

தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவுகள் வழியில் புரிதல் ஏற்படும். பண விவகாரங்களில் நாணயத்தோடு செயல்படுவீர்கள். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். புதிய வாய்ப்புகள் மூலம் மாற்றம் உண்டாகும். கற்பனை துறைகளில் மதிப்புகள் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மிதுனம்

உடலில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றம் சாதகமாகும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். அமைதி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கடகம்

பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு திறமைக்கேற்ப உயர்வும், முன்னேற்றமும் உருவாகும். பேச்சுகளில் சில அனுபவம் வெளிப்படும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இருந்து வந்த தாமதங்கள் புரியும். மனை விருத்திக்கான உதவிகள் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

சிம்மம்

குடும்ப உறுப்பினர்கள் மூலம் தனவரவுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நினைத்திருந்த ஆசைகள் நிறைவேறும். சக ஊழியர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அமைதியும், ஒற்றுமையும் நிலவும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

கன்னி

மனதில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணையின் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பாராத தேவையற்ற செலவுகள் உண்டாகும். தாயின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பணியாட்கள் மூலம் ஆதரவான சூழ்நிலை காணப்படும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண் பச்சை

 

துலாம்

எழுத்து பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். காதுகள் தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மூலம் தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். அவ்வப்போது ஏற்படும் பழைய சிந்தனைகள் மூலம் மனதில் அமைதியின்மை உருவாகும். நட்பு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

விருச்சிகம்

வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். மாற்று மருத்துவம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

தனுசு

தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற சாதகமான சூழல் உண்டாகும். மனதில் நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். சமுக பணிகளில் சில அனுபவம் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

மகரம்

தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தந்தை வழியில் அனுசரித்து செல்லவும். கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். ஆராய்ச்சி பணிகளில் வித்தியாசமான அனுபவம் ஏற்படும். கடன் செயல்களில் கவனம் வேண்டும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கும்பம்

உத்தியோக விஷயங்களில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். பொழுது போக்கு செயல்கள் மூலம் கையிருப்புகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். கலை சார்ந்த துறைகளில் இழுபறியான சூழல் ஏற்படும். செலவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : காவி

 

மீனம்

மனதில் புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்த நிலைகள் மாறும். பொருளாதார தொடர்பான நெருக்கடிகள் படிப்படியாக குறையும். சிந்தனைப்போக்கில் மாற்றம் ஏற்படும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தேவையில்லாத சிந்தனைகளை குறைத்துக் கொள்வதன் மூலம் புத்துணர்ச்சிகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

  • 357

Good Morning...

  • 355
  • 664
  • 665
  • 665
·
Added article
·

பிரேமம் படம் மூலமாக அறிமுகமான சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் மாரி 2 நல்ல வரவேற்பு கொடுத்த போதிலும் அமரன் படம் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வரும் சாய் பல்லவிவியின் இயற்கை பேரழகிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

என்னதான நட்சத்திர நடிகையாக இருந்தாலும் சாய் பல்லவி, கல்வியை பாதியில் விடவில்லை. அவர் எம்பிபிஎஸ் படித்துள்ளார். நடிகையாக இருந்தாலும் கல்வியை முடித்திருப்பதைப் பார்த்தால், அவருக்கு கல்வியுடன், ஆர்வத்தைப் பின்பற்றுவதும் பிடிக்கும் என்பது தெரிகிறது.

சாய் பல்லவி பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், அவர் வந்த பாதையை, தனது சிறிய கிராமத்தை எதையும் மறக்கவில்லை. தனது பணி நெறிமுறைகள் மற்றும் வளர்ச்சிக்காக அவர் எப்போதும் தான் வந்த பாதையை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறார்.

சாய் பல்லவி தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் அர்த்தமுள்ளவையே, அது பிரேமம் மலர், கார்கி, ராமாயணத்தின் சீதை என சாய் பல்லவி நடித்த கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

சாய் பல்லவி பிரபலமான பிறகும் நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெறவில்லை, சில படங்களில் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தன்னம்பிக்கை மட்டும் குறையவில்லை. தோல்வியில் அழாமல் திடமான நம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் முன்னேறினார் சாய் பல்லவி, இதே தன்னம்பிக்கை ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்க வேண்டும்.

சாய் பல்லவியிடமிருந்து பின்பற்ற வேண்டிய முக்கியமான பாடங்களில் ஒன்று நேர்மை மற்றும் எளிமை. எப்போதும் எளிமயாக இருக்க கூடியவர். அதுமட்டுமின்றி என்னதான விளம்பரங்களுக்காக பெரிய தொகைகள் சம்பளமாக கொடுக்கப்பட்டாலும் தவறான கருத்துக்களை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் அவர் நடிக்க மறுத்துள்ளார். இதற்கு சிறந்த உதாரணமே முகப்பொலிவு கிரீம்ஸ் (fairness creams)

சாய் பல்லவி மிகச் சாதாரண வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கிறார். என்னதான நடிகையாக இருந்தாலும் அவர் எப்போதும் சமூக வலைதளங்களில் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டது கிடையாது. தான் உண்டு தனது நடிப்பு, டான்ஸ் உண்டு என்று இருக்கிறார். மனநலம் மற்றும் உள் அமைதிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.

  • 689
·
Added article
·

சின்னத்திரையில் பிரபலமான குக் வித் கோமாளி பாலா இப்போது ஹீரோவாக அறிமுகமாகிறார். குக் வித் கோமாளி மற்றும் கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளின் மூலமாக பிரபலமானார். இந்நிகழ்ச்சின் மூலமாக பிரபலமானதைத் தொடர்ந்து சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்தார். கெட்டப் சேஞ்ச் செய்தார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். குறுகிய காலத்திலே சினிமாவில் தன்னை ஒரு அங்கமாக மாற்றிக் கொண்டார். ஒரு சில படங்களிலும் நடிக்கவும் செய்துள்ளார்.

பாலா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி பாலாவின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குநர் ஷெரிப் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் தான் பாலா ஹீரோவக நடிக்கிறார். இந்தப் படத்தில் நமீதா, அர்ச்சனா, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

ஜெய்கிரண் இந்தப் படத்தை தயாரிக்கிறார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படம் வாழ்வில் எதார்த்தம், நேர்மை மற்றும் எளிமையை பிரதிபலிக்கும் ஒரு படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றிலும் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் காந்தி கண்ணாடி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் கதை இரண்டுமே ஒத்துப் போகும் அளவிற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுதான் டைட்டில், இதைவிட படத்திற்கு வேறொரு டைட்டில் வைக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் ஜெய்கிரண் கூறியிருப்பதாவது: இந்தப் படம் வாழ்க்கையில் எதார்த்தத்தை பிரதிபலிக்கும் ஒரு படமாக இருக்கும்.

காந்தி கண்ணாடி எனக்கு பிடித்த படம். படத்திற்கான கதை கேட்ட உடன் எனக்கு கதை பிடித்துவிட்டது. படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் இருப்பது படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது என்றார்.

  • 711
·
Added a news
·

கனடாவின் மில்டனில் ஸ்டீல்ஸ் அவென்யூ 1130-ல் அமைந்துள்ள “Massage Addict” கிளினிக்கில் பதிவு செய்யப்பட்ட மசாஜ் நிபுணர் ஒருவர், ஒரு பெண் மீது மசாஜ் சிகிச்சை செய்யும் போது பாலியல் வன்முறை நிகழ்த்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் ஒரு வயது முதிர்ந்த பெண் எனவும், சிகிச்சை நேரத்தில் இந்த வன்முறை நடந்ததாகவும் புகார் செய்துள்ளார்.

மிசிசாகாவில் வசிக்கும் 52 வயதுடைய அய்மன் அல் காசம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் பொலிசாருக்கு தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • 724
·
Added a news
·

இலங்கையின் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை (30) காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.

  • 727
·
Added a news
·

ஜூலை 1, 1867 அன்று, கனடா என்று அழைக்கப்படும் ஒரு டொமினியனில் 3 காலனிகளை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான சட்டத்தில் கையெழுத்திட்டதன் மூலம் நாடு சுதந்திரத்திற்கான முதல் படியை எடுத்தது.

கனடா முழுமையாக சுதந்திரமாகி இன்றைய நாட்டிற்கு வளர 1867 ஆம் ஆண்டில் அந்த அதிர்ஷ்டமான நாளுக்குப் பிறகு இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும், கனடா தினம் நாட்டின் தேசிய விடுமுறையாக கொண்டாடப்படுகிறது.

 கனடா தினம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படுகிறது. ஜூலை 1, 1867 இல், நோவா ஸ்கோடியா, நியூ பிரன்சுவிக் மற்றும் கனடா மாகாணம் - இப்போது ஒன்ராறியோ மற்றும் கியூபெக் - பிரிட்டிஷ் வட அமெரிக்கா சட்டத்தில் கையெழுத்திட்டன, பின்னர் அரசியலமைப்புச் சட்டத்தின் பெயர் மாற்றப்பட்டன.

ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து, ஜூன் 20, 1868 அன்று, கவர்னர் ஜெனரல் லார்ட் மாங்க், கனடாவில் உள்ள அனைத்து ஹெர் மெஜஸ்டியின் அனைத்து பாடங்களையும் ஜூலை 1 அன்று கனடா தினத்தைக் கொண்டாடுமாறு ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்.

  • 728

விருப்பத்தோடு பழகுவோரிடம்

விரும்பி நட்பு கொள்ளுங்கள்...

அது உங்களை இன்னும் இன்னும் அழகாக்கும்.

நல்வாழ்த்துகள்

வாழ்க வளமுடன்.

  • 727

எப்பேர்ப்பட்ட முதலாளி.... அட இவரைப்போல் முதலாளி கிடைப்பாரா?

  • 727
·
Added a post
·

ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான்.

ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.

குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான்.

நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன்,அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்கமுடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான்.

மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.

இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன்.

எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன்.

“பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இது வரை என் வாழ்க்கையில் அருந்தி யதேயில்லை. உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார்.

இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில் விடைபெற்று சென்றான்.

அவன் சென்ற பிறகு,

ராணி“இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? என்றாள்

“இல்லை ராணி … நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்”

அரசன் சொல்ல,ஆர்வமுடன் எடுத்து குடிப்பவள், ஒரு வாய் குடித்ததும்…. “சே… சே… என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது?” என்று கூறி அந்த நீரை உடனடியாக துப்பி விடுகிறாள்.

“தேவி… நீ நீரை தான் சுவைத்தாய். ஆனால் நான் அவன் என் மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன்.

பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு கொடுக்கவேண்டும் என்று கருதி தனது தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான்.

எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறிவிட்டது.

அவன் இருக்கும்போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப் போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம்வேதனைப் பட்டிருக்கும். அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை

நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது போன்று.

நீங்கள் வாழ்க்கையில் அது போன்று எத்தனை முத்துக்களை தவறவிட்டிருக்கிறீர்கள் தெரியுமா? இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!

மனித உணர்வுகளை

நாம் மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும் .

நம் குழந்தைகளுக்கும் அவற்றை கற்றுத் தரவேண்டும்.

இதயப்பூர்வமாக தருப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை.

அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது அவை வெறும் வார்த்தையாக நின்றுவிடாமல் செயலிலும் நன்றியை காட்டவேண்டும்.

அதுவே உண்மையான நன்றி.

அடுத்த முறை உங்களுக்கு யாராவது ஏதேனும் பரிசு கொடுத்தால் அதன் விலை மதிப்பையோ அது எத்தனை பெரிது என்பதையோ பார்க்காதீர்கள்.

அதன் பின்னணியில் உள்ள அன்பை, அந்த எண்ணத்தை பாருங்கள்.

யார் மூலம் என்ன கிடைத்தாலும் எந்த வடிவில் கிடைத்தாலும் அவர்களுக்கு மனப்பூர்வமான ஒரு ‘நன்றி’ சொல்வோம்.

  • 731
New People