Quote of the Day

பழமொழி: அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
sivam 300
Senthuran 20
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.

image_transcoder.php?o=sys_images_editor&h=212&dpx=1&t=1756738074

  • 82
·
Added a post
·

வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிறு கனமான உணர்வு போன்றவற்றுக்கு மருந்தாகும்.வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கும்வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும்.

கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

  • 88
  • 87
  • 97
·
Added a post
·

அவர் ஒரு கிராமத்து "அப்பா" (வெளிநாடு சென்ற பிறகு பெற்றவர்களை மறந்து சொகுசாக வாழும் ஒரு மகனுக்கு ஒரு தந்தை எழுதும் கடிதம்)

-அன்பு மகனுக்கு உன் அப்பா எழுதுவது..."

படிப்பில்லாமல் நான் பட்ட கஷ்ட்டங்களை யெல்லாம் நீயும் பட்டுவிடக்கூடாது. வெளிநாட்டில் படித்து நீ முன்னே வேண்டுமென்று..." இரவும்,பகலுமாய் என் இரத்தத்தை வியர்வையாக்கி உன்னை அனுப்பி வைத்தேன்..."!!

ஆனால் நீயோ அதில் கிடைத்த சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்...! (என்னையும் மறந்து)

உன்னை வெளிநாட்டிற்கு அனுப்பும் போது உன் நினைவாக "தென்னங்கன்றை" வைத்தேன்..."!

அதுகூட வளர்ந்து மரமாகிவிட்டது. உன்னை நினைத்து மனம் நெறுப்பாய் சுடும் போதெல்லாம் ஆறுதல் சொல்ல உன் பிம்பம் இல்லாவிட்டாலும்..." இந்த மரத்தின் நிழலால் குளிர்ச்சி தரும்..."!

அங்கு கிடைக்கும் பணமும், சுகமும் உனக்கு இன்பமூட்டுகிறது...!

இங்கு இந்த மரம் தரும் கனியும், நீரும் என் பசியைப்போக்குகிறது...!

நீ "ஈ மெயிலில்" மூழ்கிக்கொண்டிருக்கும் நேரம்..."

என் மீது "ஈ" மொய்த்த செய்தி வந்து சேரும்...!

என் இறுதி ஊர்வலத்திற்காகவும் நீ வரமாட்டாய் என்றாலும் பரவாயில்லை மகனே..."!

என்னை சுமந்து செல்ல தென்னை ஓலை இருக்கிறது..."!!

நான் உனக்கு கற்றுத்தந்தேன் வாழ்க்கை இது தானென்று...!

நீ எனக்கு கற்றுத்தந்தாய் உறவுகள் இதுதானென்று..!!

  • 189
  • 187
·
Added a post
·

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களை பார்க்கும் போது இதில் சிக்குவது அதிக சதவீதத்தில் இருப்பது கார்கள்தான். இதன் பின்புலத்தை ஆராய்ந்த போது கண்ட உண்மைகள்.

1. விபத்தில் சிக்கும் வாகனங்களில் 80 சதவீதம் சொந்த பயன் பாட்டிற்க்காக வாங்கியவண்டிகள்.

இதற்கு காரணம்.

1. சொந்த வண்டி ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை. பெரும்பாலும் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ எடுப்பார்கள். ஆதலால் போதுமான கட்டுப்பாடு கிடைப்பது கிடையாது.

2. சொந்த கார்களை பெரும்பாலும் அடிக்கடி ஓட்டாததால் அவர்கள் காரின் டயர் மற்றும் பிரேக் போன்றவற்றை முறையாக பராமரிப்பது கிடையாது.

3.தொலைதூரங்களுக்கு செல்லும்போது மிகவும் வேகமாக செல்வதால் அந்த சாலைகள் அவர்களுக்கு பழக்கம் இல்லாததால் அதில் இருக்கும் குழிகள் இருப்பது தெரியாததால் திடீரென காரைக்கட்டுபடுத்த இயலாமல் எங்காவது மோதி விடுகிறார்கள்.

4. காரை அடிக்கடு ஒட்டாததால் சில நேரங்களில் பிரேக்கிற்க்கு பதில் ஆக்ஸிலேட்டரை பதட்டத்தில் அமுக்கிவிடுவார்கள்.

இதை தவிர்ப்பது எவ்வாறு?

1. பொதுவாக அடிக்கடி காரை ஒட்டாதவர்கள் ஆட்டோகியர் காரை உபயோகப்படுத்துவது நல்லது. அதை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்துவது எளிது..இதில் மைலேஜ் பார்க்க கூடாது. இது நமது உயிர் மற்றும் சாலைகளில் செல்லும் மற்றவர்களில் உயிர் சம்மந்தப்பட்டது.

2. அடிக்கடி சென்று பழக்கமில்லாத சாலைகளில் ஓட்டும் போது மிதமாக வேகத்தில் செல்வது நல்லது

3. வாகனத்தை தொலைதூர பயணத்திற்க்கு பயன்படுத்தும் போது டயர், மற்றும் பின் சைகை விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.

4. லாரிகளின் பின்னாலும் அரசு பேருந்தின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்து.ஏனென்றால் பெரும்பாலும் இவைகளில் பிரேக் விளக்குகள் எரிவது இல்லை. ஆதலால் விபத்து ஏற்படுவது எளிது.

5. நான்கு வழிச்சாலைகளில் ஒரு லயனில் இருந்து மற்றொரு லயனிற்க்கு மாறும் போது பின்னால் எதுவும் வாகனம் வருகிறதா என்று பார்த்து மாறவும்.

6. அடிக்கடி பின்னால் வரும் வாகனங்களை கவனிக்கவும் மறக்காமல்.

7. நமது சாலைகளில் 100கிமீ மேல் பயணம் செய்வதை தவிர்க்கவும். ஏனென்றால் நமது சாலைகள் அதிக வேகத்திற்க்கு மேல் பயணிக்க உகந்தது அல்ல.

8. காரை ஓட்டுபவர் ஒரே மூச்சில் ஓட்டாமல், இடைக்கிடை சற்று ஓய்வெடுத்து ஒட்டுதல் நலம்.

9. ஓட்டுபவர் உணவை ஒரே தடவையில் உண்ணாது, இரண்டு மூன்று தடவையாக உண்பது நலம்.

10. குறிப்பாக புரோட்டா, முட்டை புரோட்டா போன்ற உணவுகளை, ஓட்டுபவர் தவிர்த்தல் நலம்.

இந்த தகவலை அதிகம் பகிர்ந்து ஆதரியுங்கள் விலை மதிப்பற்ற உயிரை காப்போம்

ஆகவே மிகவும் அதிக கவனம் செலுத்துங்கள் நட்புகளே......

  • 191
·
Added a post
·

ஞாளி, எகினம், கடிநாய், அக்கன், அசுழம், குக்கர், கூரன், கொக்கு, செந்நாய், ஞமலி, முலவை, முவ்வை, மடிநாய், குடத்தி , குக்குரன், கடுவாய், மடி,வடி, வங்கு, நயக்கன், பாகி, பாசி, முடுவல் செந்நாய், தோனாய் என பல பெயர்கள் உள்ளன.

இவற்றில் சில , குறிப்பிட்ட வகை நாய்களைக் குறிக்கும்.

சிவிங்கி நாய் என்பது வேகமாய் ஒடக்கூடிய, ஒல்லியாய், உயரமாய், கழுத்து நீண்ட நாய்.

சடை நாய் என்பது உடலில் எங்கும் நிறைய முடி உள்ள நாய்.

தோனாய் - தோல்நாய் என்பது வேட்டை நாய் வகையச் சேர்ந்தது.

வங்கு என்பது புள்ளியுடைய நாய்.

  • 191
  • 187
  • 198
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சேமிப்பு பற்றிய சில ஆலோசனைகள் கிடைக்கும். வியாபார போட்டிகள் படிப்படியாக குறையும். உறவினர்களின் வருகை ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் மதிப்புகள் உயரும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

ரிஷபம்

வியாபாரத்தில் வேலையாட்கள் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் புரிதல்கள் உண்டாகும். சுப காரிய தொடர்பான பயணங்கள் ஈடேறும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

 

மிதுனம்

குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் இருந்த வேறுபாடுகள் விலகும். உடன் இருப்பவர்களின் சுயரூபங்களை புரிந்து கொள்வீர்கள். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பழைய வேலையாட்கள் மாற்றுவது குறித்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

கடகம்

கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் சாதகமான சூழல் அமையும். மனதில் நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். அலுவலகப் பணிகளில் அமைதி உண்டாகும். அரசு காரியத்தில் அனுசரித்து செல்லவும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். சினம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

சிம்மம்

மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். பிற இன மக்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நண்பர்கள் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த வரவுகள் கிடைக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

கன்னி

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பொன் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் தடைப்பட்ட வரவுகள் வசூலாகும். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்புகள் குறையும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

துலாம்

கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறைகளில் மறைமுக விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். இறை காரியத்தில் ஈடுபாடுகள் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில புரிதல்கள் ஏற்படும். எதிர்பாராத சில பொறுப்புகளால் மதிப்புகள் உண்டாகும். எதிர்ப்பு விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

விருச்சிகம்

புதுவித பயணங்கள் மூலம் மனதில் தெளிவுகள் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். இரவு நேர பணிகளில் கவனத்துடன் இருக்கவும். புரியாத சில கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் விலகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

தனுசு

புதுவித பயணங்கள் மூலம் மனதில் தெளிவுகள் ஏற்படும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். அயல்நாட்டு தொடர்பான பொருட்கள் மீது ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இன்மை ஏற்படும். மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். அன்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மகரம்

பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். உயர்கல்வியில் தெளிவான முடிவுகள் பிறக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அலுவல் பணிகளில் பொறுப்புகள் உயரும். சமூக தொடர்பான புதிய கண்ணோட்டங்கள் உருவாகும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். மறதி விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

கும்பம்

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். தடைப்பட்டு போன சில காரியங்கள் முடியும். உறவுகள் மத்தியில் அனுசரித்து செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் சாதகமாகும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

மீனம்

மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறுவதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில் நிமித்தமான அலைச்சல்கள் மேம்படும். மாணவர்களுக்கு புதுவிதமான சூழல்கள் ஏற்படும். சமூக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உடற்பயிற்சி செயல்களில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

  • 212
·
Added a post
·

விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 16 ஆம் தேதி திங்கட்கிழமை 1.09.2025.

இன்று முழுவதும் நவமி.

இன்று இரவு 07.14 வரை கேட்டை. பின்னர் மூலம்.

இன்று பிற்பகல் 12.14 வரை பாலவம். பின்னர் கௌலவம்.

இன்று காலை 06.03 வரை மரண யோகம். பின்னர் இரவு 07.14 வரை சித்தயோகம். பிறகு அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=206&dpx=1&t=1756699362

நல்ல நேரம் :

காலை : 06.15 முதல் 07.15 மணி வரை

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 223
  • 230
·
Added a post
·

வரவேற்பு (greetings)

கொரிய மக்கள் பொதுவாக 90° குனிந்து வணக்கம் தெரிவிப்பார்கள். ஆனால் நான் இங்கு கூற வந்தது கொரியாவில் நான் சந்தித்த ஈரான், துருக்கி மற்றும் ஜோர்டான் நாட்டு நண்பர்கள் பற்றி. கட்டியணைத்து கன்னத்தோடு கன்னம் மற்றும் முத்தம் வைத்து வரவேற்பது அவர்களின் வழக்கம். இதிலும் நாட்டைப் பொறுத்து முத்த எண்ணிக்கையிலும் வேறுபாடு உண்டு(2 அல்லது 3) . பெண் தோழிகளாக இருந்தாலும் முதலில் சற்று சங்கடமாக இருந்தது. இப்பொழுது சரியாகி விட்டது. அந்நாட்டு ஆண்களும் சக ஆண்களை இதே முறையில் தான் வரவேற்கிறார்கள். :D

உணவு உண்ணும் முறை

நாம் உணவைக் கையில் உண்ணும் பழக்கமுடையவர்கள். கொரியர்களோ chop stick எனப்படும் குச்சியால் உணவை உண்பார்கள். இங்கு கவனிக்க வேண்டியது. உணவை வீட்டில் உள்ள பெரியவர்கள் உண்ண ஆரம்பித்த பிறகே மற்றவர்கள் உண்ண வேண்டும். அவர்கள் உண்டு முடிக்கும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டும். மேலும் உணவுப் பாத்திரத்தை கையிலேந்தி சாப்பிடுவது கூடாது. பொது உணவினை உண்ணும் போது தனித் தேக்கரண்டி பயன்படுத்தாமல் அனைவரும் தங்கள் ஸ்பூனிலேயே எடுத்துச் சாப்பிடுவார்கள்(எனக்குப் பிடிக்காத ஒன்று!!).

காதல் வாழ்க்கை

இங்கு காதலர்கள் ஒளிந்து மறைந்து காதலிக்க வேண்டிய அவசியமில்லை. வெளிப்படையாக காதல் செய்யலாம். நம் ஊரில் இரட்டை பிறவியர் போன்று இங்கு காதலர்கள் உடை, காலணி , பை என பலவற்றை மாட்சிங்காக அணிவார்கள்.

மேலும் காதலித்து 22நாள், 100நாள்,200நாள் என பல நாட்களில் இனிப்பு, பரிசு வழங்கி கொண்டாடுவது இவர்களின் வழக்கம். இது மட்டுமல்லாமல் வருடம் முழுவதும் இங்குள்ள காதலர்களுக்குக் கொண்டாட்டம் தான்.

புதிய நண்பர்களை மேற்கொள்ளும் முறை

இது தான் நான் பார்த்தவற்றில் மிகவும் வித்தியாசமானது. நண்பர்களுடன் நெருக்கமாகவேண்டும் என்றால் இங்கு அவர்களுடன் சேர்ந்து விடிய விடிய மது அருந்துவார்கள். கொரிய கலாச்சாரத்தில் மதுவிறகு ஒரு முக்கிய இடம் உண்டு. இங்கு ஆண், பெண் என 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் குடும்பத்துடன் மது அருந்தலாம் . மற்றும் எந்த ஒரு பொது இடத்திலும் மது அருந்தலாம். சட்டமும் இதை அனுமதிக்கிறது.

சில சமயங்களில் மது அருந்தாதவர்களானாலும் இது போன்ற அழைப்புகளைத் தவிர்க்க முடியாது. ஏனெனில் இங்கு நம்மை விட வயதில் மூத்தவர்(பொதுவாக மேலதிகாரி, பேராசிரியர்) அழைத்தால் அவர் வார்த்தைக்கு மரியாதையை கொடுத்து கலந்து கொள்ள வேண்டும். ஆனால் நம்மை மது அருந்தச் சொல்லி கட்டாயம் செய்ய மாட்டார்கள். நானும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் கலந்து கொண்டதுண்டு. அதிகாலை வரை நீரும், கோலாவும் அருந்தி நேரத்தைக் கடத்தினேன்.

மேலும் ஆண்கள் சக ஆண் நண்பர்களுடன், பெண்கள் சக பெண் தோழிகளுடன் சீக்கிரம் நெருங்கிய நட்புக் கொள்ள, பொது குளியல் செய்யும் இடத்துக்கு சென்று ஒன்றாக குளிப்பது வழக்கம்.

  • 336
·
Added article
·

பிஜு மேனன். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதி செய்து உடைத்து எறிந்த இன்னொரு furniture. சொல்லப்போனால் இவர் வந்தது 15 வருஷத்துக்கு முன்பே. மாதவன் நடித்த, சீமாமா இயக்கிய 'தம்பி' படத்தின் மூலம் தான் தமிழுக்கு வந்தார் என்று நினைக்கிறன். அந்த படம் தவிர்த்து மற்றது எல்லாம் மசாலா படம். பணம் கிடைத்தால் போதும் என்று நடித்தாரா, இல்லை தமிழ் சினிமா பற்றி அறியாமல் ஏமாந்தாரா தெரியவில்லை. ஆனால் பாவம்... கொஞ்ச நாளில் மறக்கப்பட்டார்.

ஆனால் மலையாளத்தில் தொடர்ந்து வித்தியாயசமான படங்களை செய்து வந்தார். மோஹன் லால், மம்மூட்டி க்கு கொஞ்சமும் குறையாத நடிப்பு அரக்கன் தான். அங்கேயும் இன்னும் இரண்டாம் நிலை நடிகர் தான். ஆனால் அவரது நடிப்பே யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். சீரியஸ், நகைச்சுவை, யதார்த்தம் என்று அனைத்திலும் ஆல் ரவுண்டர் தான். சந்தேகம் இருப்பவர்கள் இவர் நடித்த 'வெள்ளிமூங்கா' படத்தை பாருங்கள். அதன் தமிழாக்கமான 'முத்தின கத்திரிக்கா'வையும் பாருங்கள். புரியும்! சற்று முன்பு வந்த தலவன், கருடன், தங்கம் போன்ற படங்களை பாருங்கள். ஆச்சரியத்தில் உறைந்து போனாலும் தவறில்லை...

பிஜு மேனன் நடித்த ஒரு ரெட்ரோ படம் தான் 'ஒரு தெக்கன் தள்ளு கேஸ்'. தலைப்பே வித்தியாசமா இருக்குல்ல? ஆமா கதையும் அப்படிதான். பிஜு மேனன் இதில் ஓர் சிறு கிராமத்தின் சண்டியராக வருகிறார். அவருக்கும் ஊரில் வாலிபர் ஒருவருக்கும் ஏற்பட்ட ஈகோ தான் கதை... விருப்பம் உள்ளவர்கள் பாருங்கள். எதிர்பார்ப்பு இல்லாமல், எதார்த்த படம் ஒன்றை காண விரும்புவோர் நிச்சயம் பார்க்கலாம்.

  • 341
·
Added article
·

எம்ஜிஆரின் அந்த காட்சி படமாக்கும் போது நான் இருக்க மாட்டேன்..பல வருடம் கழித்து மனம் திறந்த சரோஜாதேவி

நடிகர் எம்ஜிஆரோடு அதிகமான திரைப்படங்களில் நடித்த சரோஜாதேவி தன்னுடைய திரைப்பட அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

தான் எம்ஜிஆரின் திரைப்படங்களில் சில காட்சிகள் எடுக்கும் போது மட்டும் இருக்க மாட்டேன் அது எனக்கு பிடிக்காது என்று அதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார்.

வெளிப்படையாக பேசக்கூடிய சரோஜாதேவி சொன்ன காரணத்தை கேட்டு ரசிகர்கள் வியந்து போய் இருக்கின்றனர்.

கன்னடத்து பைங்கிளி அபிநய சரஸ்வதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜாதேவி 70ஸ், 80ஸ் ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாநாயகி. தமிழ் சினிமாவில் முதன் முதலில் நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் ஆரம்பத்தில் கன்னட திரைப்படத்தில் தான் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற பழமொழி சினிமாக்களிலும் நடித்த சரோஜாதேவி எந்த மொழிகளிலும் தனக்கு வேறொருவரை டப்பிங் பேசுவதை விரும்ப மாட்டாராம். அவருடைய சொந்த குரலில் எல்லா படங்களிலும் டப்பிங் பேசி இருக்கிறார். அதற்காகவே அவர் பல மொழிகளையும் கற்று இருக்கிறார்.

அந்த நேரத்தில் அவர் ஒரு நேரத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வருடத்திற்கு 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துக் கொண்டிருந்தாலும், அனைத்து திரைப்படங்களுக்கும் அவர்தான் டப்பிங் பேசியிருக்கிறார். மனதில் பட்டதை உள்ளபடி பேசும் சரோஜாதேவி தன் சினிமா அனுபவங்கள் குறித்து தற்போது பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

எம்ஜிஆர் உடன் 26 படங்கள் சிவாஜியுடன் 22 படங்கள் என முன்னணி கதை நாயகர்களோடு அப்போது அதிகமான ஜோடி சேர்ந்த நடிகை என்ற பெயரை சரோஜாதேவி தட்டி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் மற்ற மொழி சினிமாக்களிலும் சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் அனைத்து நடிகர்களுமே நடித்த பெருமை பெற்றவர் இவர்தான்.

இவர் என்னதான் முன்னணி நடிகையாக இருந்தாலும் அவருடைய அம்மா பேச்சை மீறாதவராகத்தான் இருந்தாராம். அதனாலேயே இன்று வரை அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று கூட சரோஜாதேவிக்கு தெரியாதாம். எல்லாவற்றையும் அவருடைய அம்மா தான் பார்த்துக் கொள்வாராம்.

நடிகை சரோஜாதேவிக்கு சண்டை போடுவது பிடிக்காதாம். அதனாலேயே எம்ஜிஆர் படங்களில் சண்டைக்காட்சிகளில் படப்பிடிப்பு நடக்கும் போது அவர் அங்கு இருக்க மாட்டாராம். படபிடிப்பில் இருக்கிறவர்களே சரோஜாதேவியை வெளியே அனுப்பி விடுவார்களாம். இல்லையென்றால் அவருடைய காட்சிகளை மட்டும் முதலில் படமாக்கிவிட்டு அவரை அனுப்பி விடுவார்கள் என தன்னுடைய அனுபவங்கள் குறித்து சரோஜாதேவி பேசியிருக்கிறார்.

  • 348
·
Added a post
·

சிறுவன் ஒருவன் அம்மாவிடம் வந்து ! அம்மா வாழ்க்கையின் ரகசியம் என்ன என்று கேட்க!

அதற்கு அம்மா மகனிடம் சொன்னார்கள்!

வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பது என்று சொன்னார்கள்!

பள்ளிக்கூடம் சென்றான் சிறுவன்!

வகுப்பில் ஆசிரியர் மாணவர்களை பார்த்து நீங்கள் வளர்ந்து என்னவாக போகிறீர்கள் என்று கேட்க !

அதற்கு ஒரு மாணவன் நான் டாக்டர் ஆக போகிறேன் என்று சொல்ல!

மற்றொருவன் நான் இன்ஜினியர் ஆக போகிறேன் என்று சொல்ல!

மற்றொருவன் நான் கலெக்டர் ஆக போகிறேன் என்று சொல்ல!

நம்ம சிறுவனிடம் நீ வளர்ந்து என்னவாக போகிறாய் என்று கேட்க!

அதற்கு சிறுவன் நான் மகிழ்ச்சியாக இருக்க போகிறேன் என்று சொல்ல!

அதற்கு ஆசிரியர்! தம்பி நீ கேள்வியை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று சொல்ல!

அதற்கு சிறுவன் சிரித்து கொண்டே சொன்னான்!

" டீச்சர் ! நீங்கள் தான் வாழ்க்கையை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று "

  • 385
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சேமிப்பு பற்றிய சில ஆலோசனைகள் கிடைக்கும். வியாபார போட்டிகள் படிப்படியாக குறையும். உறவினர்களின் வருகை ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் மதிப்புகள் உயரும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

ரிஷபம்

வியாபாரத்தில் வேலையாட்கள் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் புரிதல்கள் உண்டாகும். சுப காரிய தொடர்பான பயணங்கள் ஈடேறும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

 

மிதுனம்

குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் இருந்த வேறுபாடுகள் விலகும். உடன் இருப்பவர்களின் சுயரூபங்களை புரிந்து கொள்வீர்கள். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பழைய வேலையாட்கள் மாற்றுவது குறித்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

கடகம்

கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் சாதகமான சூழல் அமையும். மனதில் நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். அலுவலகப் பணிகளில் அமைதி உண்டாகும். அரசு காரியத்தில் அனுசரித்து செல்லவும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். சினம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

சிம்மம்

மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். பிற இன மக்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நண்பர்கள் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த வரவுகள் கிடைக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

கன்னி

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பொன் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் தடைப்பட்ட வரவுகள் வசூலாகும். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்புகள் குறையும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

துலாம்

கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறைகளில் மறைமுக விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். இறை காரியத்தில் ஈடுபாடுகள் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில புரிதல்கள் ஏற்படும். எதிர்பாராத சில பொறுப்புகளால் மதிப்புகள் உண்டாகும். எதிர்ப்பு விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

விருச்சிகம்

புதுவித பயணங்கள் மூலம் மனதில் தெளிவுகள் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். இரவு நேர பணிகளில் கவனத்துடன் இருக்கவும். புரியாத சில கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் விலகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

தனுசு

புதுவித பயணங்கள் மூலம் மனதில் தெளிவுகள் ஏற்படும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். அயல்நாட்டு தொடர்பான பொருட்கள் மீது ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இன்மை ஏற்படும். மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். அன்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மகரம்

பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். உயர்கல்வியில் தெளிவான முடிவுகள் பிறக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அலுவல் பணிகளில் பொறுப்புகள் உயரும். சமூக தொடர்பான புதிய கண்ணோட்டங்கள் உருவாகும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். மறதி விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

கும்பம்

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். தடைப்பட்டு போன சில காரியங்கள் முடியும். உறவுகள் மத்தியில் அனுசரித்து செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் சாதகமாகும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

மீனம்

மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறுவதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில் நிமித்தமான அலைச்சல்கள் மேம்படும். மாணவர்களுக்கு புதுவிதமான சூழல்கள் ஏற்படும். சமூக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உடற்பயிற்சி செயல்களில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

  • 393
·
Added a post
·

விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 31.8.2025

இன்று இரவு 11.27 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று மாலை 05.00 வரை அனுஷம். பின்னர் கேட்டை.

இன்று மாலை 03.27 வரை வைதிருதி. பின்பு விஷ் கம்பம்.

இன்று காலை 10.32 வரை பத்தரை. பின்னர் இரவு 11.27 வரை பவம். பின்பு பாலவம்.

இன்று காலை 06.03 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=204&dpx=1&t=1756653872

நல்ல நேரம் :

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.46 மணி வரை

மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 402

image_transcoder.php?o=sys_images_editor&h=203&dpx=1&t=1756653492

  • 399
·
Added article

நடிகை கமலினி முகர்ஜி ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சமீபத்தில், ஒரு பாட்காஸ்டில், தான் சினிமாவில் இருந்து விலகியதற்கான காரணத்தை அவர் கூறி இருக்கிறார். அதன் படி ராம் சரண் மற்றும் காஜல் அகர்வால் நடித்த 'கோவிந்துடு அந்தரிவாடலே' படம் தான் சினிமாவில் இருந்து விலக முக்கிய காரணம் என கூறி இருக்கிறார். படப்பிடிப்பு அனுபவம் "அற்புதமாக" இருந்தபோதிலும், திரையில் தனது கதாபாத்திரம் இறுதியில் எவ்வாறு சித்தரிக்கப்பட்டது என்பதில் தனக்கு "வருத்தம்" ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

"படக்குழுவினரிடம் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. படப்பிடிப்புக் குழுவினர் அற்புதமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் அளித்தனர். ஆனால் என் கதாபாத்திரம் வெளிவந்த விதம் எனக்கு உடன்பாடில்லாததாக இருந்தது. எந்த சர்ச்சையும் இல்லை, சண்டையும் இல்லை. வருத்தமாக உணர்ந்ததால் சிறிது காலம் படங்களில் இருந்து விலகினேன்" என்று அவர் கூறினார்,

படப்பிடிப்பின்போது ஒரு காட்சி சிறப்பாகத் தெரிந்தாலும், சில நேரங்களில் அது இறுதிப் பதிப்பில் அதன் தாக்கத்தை இழக்கும் என்று அவர் விளக்கினார். "சில நேரங்களில் இது உங்கள் காட்சி என்று நீங்கள் நினைக்கிறீர்கள், அது சிறந்த விஷயமாகத் தோன்றும். ஆனால், திரையில் வரும்போது அது அப்படி இருக்காது.

பின்னர், நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது, ​​நீங்கள் செய்த விதத்தில் அது வெளிவரவில்லை அல்லது அது ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை இயக்குநர் உணர்வார். அந்த விஷயங்கள் எங்களுக்குத் தெரியாது. நான் அனுபவித்த விதம் மிகவும் தனிப்பட்டது, அது எனக்கு வருத்தத்தை அளித்தது. அதனால்தான் தெலுங்குப் படங்களில் இருந்து விலகி, வேறு மொழிப் படங்களை முயற்சிக்க வேண்டும் என்று நினைத்தேன்" என்று அவர் கூறினார்.

இருப்பினும், இதுகுறித்து யாரிடமும் தனக்கு வெறுப்பு இல்லை என்று கமலினி முகர்ஜி தெரிவித்தார்.

இவர் தமிழில் கடந்த 2006-ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். படத்தில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரியும் வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது. குறிப்பாக அப்படத்தில் இடம்பெறும் பார்த்த முதல் நாளே பாடலில் அசத்தி இருப்பார்.

  • 626
·
Added a news

கனடாவில் இலங்கைத் தமிழ் தம்பதியரின் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் 17 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்ராறியோவிலுள்ள ஸ்காப்புரோவில் வாழ்ந்துவரும் அமலதாஸ் மரியதாசன், ஜூடின் பாசில் தம்பதியரின் மகன் டானியல் அமலதாஸ். அமலதாஸ் மரியதாசன், ஜூடின் பாசில் தம்பதியர், 1993ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆவர்.

தம்பதியருக்கு கனடாவில் பிறந்த மகன் டானியல் அமலதாஸ். கடந்த வியாழக்கிழமை, அதாவது, ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி, 2.00 மணியளவில், ஸ்காப்புரோ டவுன் சென்டரிலுள்ள ஷாப்பிங் மாலுக்கு எதிரே பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள் அமலதாஸ் ஜூடின் தம்பதியர். அப்போது திடீரென பொலிசாரும் மருத்துவ உதவிக்குழுவினரும் அங்கு விரைய, யாருக்கோ ஏதோ பிரச்சினை என்பதை அறிந்துள்ளார்கள் அமலதாஸ் ஜூடின் தம்பதியர். ஆனால், அவர்களுக்குத் தெரியாது, அங்கு சுட்டுக்கொல்லப்பட்டது தங்கள் மகன் டானியல் என்பது.

பின்னர் அவர்கள் வீடு திரும்பிய நிலையில், மகனைக் காணாமல் அவனை மொபைலில் அழைக்க, மகனை தொடர்புகொள்ள முடியவில்லை. டானியல் வீடு திரும்பவேயில்லை. மாறாக, வீட்டுக்கு பொலிசார்தான் வந்துள்ளார்கள்.

பொலிசார் துப்பாக்கிச்சூடு குறித்து கூறியபோதுதான் ஷாப்பிங் மாலில் தங்கள் மகன் கொல்லப்பட்டது குறித்து அவர்களுக்குத் தெரியவந்துள்ளது. மகனை இழந்து கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டிருக்கும் பெற்றோருக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை.

தங்கள் மகனுக்கு எதனால் இப்படி நடந்தது என்று தங்களுக்குத் தெரியவில்லை என்று கூறும் அமலதாஸ் ஜூடின் தம்பதியர் கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

ஏழு நாட்களாக தூங்கவேயில்லை என்று ஜூடின் கூற, கணவனுக்கும் மனைவிக்கும் கண்களில் கண்ணீர் கொப்புளிக்கிறது.

கனடா பாதுகாப்பான நாடு, எங்கள் பிள்ளைகள் இங்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நினைத்தோம் என்கிறார் ஜூடின். மகனை இழந்து கதறும் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை.

  • 633
·
Added a post

ஒரு சமயம் பிக்கு ஒருவர் புத்தவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.

“பகவரே, தாங்கள் ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடையமுடியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் மனிதர்கள் ஏன் அதை அடைவதில்லை.

இன்றே நீ ஒரு காரியம் செய். இந்த பகுதியிலுள்ள மனிதர்களைச் சந்தித்து அவர்கள் அடைய விரும்புவது என்ன என்று கேட்டுஅவற்றை மனதில் பதிவு செய்து கொண்டு வா”

புத்தபெருமான் இவ்வாறு சொன்னதும் அந்த பிக்கு அன்றே அந்தவேலையைத் தொடங்கினார்.

அந்த ஊரில் இருந்த பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்து புத்தர் கேட்கச் சொன்னது போலவே தாங்கள் அடைய விரும்புவது எதை என்று கேட்டார். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்தைத்தெரிவித்தார்கள்.

அன்று மாலை பிக்கு புத்தரைச் சந்தித்தார்.

“நான் சொன்னவாறு செய்தாயா?” என்று புத்தர் கேட்க அதற்கு பிக்கு “ஆம். அவ்வாறே செய்தேன்” என்றார்..

“கேட்டவற்றைச் சொல்”

பிக்கு தான் சந்தித்த மனிதர்கள் அடைய விரும்பிய விஷயங்களை ஒவ்வொன்றாகக் கூறினார்.

இவற்றை அமைதியாகக் கேட்ட புத்தர்“இவர்களில் ஒருவர் கூட மோட்சத்தை அடைய விரும்புகிறேன் என்று சொல்லவில்லையே” என்று கேட்டார்.

அதற்கு அந்த பிக்குவும் “ஆம்” என்றார்.

“விரும்பாத ஒன்றை எவ்வாறு அடைய முடியும்?”

புத்தர் அந்த பிக்குவிடத்தில் இப்படி ஒரு கேள்வியைக் கேட்க பிக்குவும் அந்த கேள்வியில் இருந்த உண்மையை புரிந்து கொண்டு அமைதி காத்து நின்றார்.

  • 644
·
Added a post

டாட்டாவுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.

அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார்.

பிறகு 6 மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரை சந்தித்தார்.

பேனா மறதியை பற்றி விசாரித்தார். அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொழில், வாழ்க்கை, மற்ற கடமைகள் எல்லாவற்றையும் மதிப்பாக உணரும்போது ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறோம்" என்று வாழ்க்கை தத்துவத்தை நண்பருக்கு மென்மையாக புரிய வைத்தார்.

இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது நண்பர்களே.

1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம்.

2. நண்பனை மதிப்பாக உணர்ந்தால், மரியாதை கொடுப்போம்.

3. பணத்தை மதிப்பாக உணர்ந்தால், அவசிய செலவுகள் செய்வோம்.

4. உறவுகளை மதிப்பாக உணர்ந்தால், முறிக்க மாட்டோம்.

5. வியாபாரத்தை மதிப்பாக உணர்ந்தால், அர்ப்பணிப்புடன் செய்வோம்.

6. வாழ்க்கையை மதிப்பாக உணர்ந்தால், உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம்.

மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை.

  • 650
New People