sivam

  •  ·  Premium
  • 1 friends
  • 1 followers
  • 307 views
  • 1 votes
  • More
Friends
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமை காக்கவும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

ரிஷபம்

வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்சனைகள் குறையும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களால் புதிய அனுபவங்கள் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

மிதுனம்

மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். மனதிற்கு பிடித்த விதத்தில் சிலரின் அறிமுகங்கள் அமையும். உறவுகள் இடத்தில் பொறுமை வேண்டும். அதிகாரிகள் இடத்தில் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் லாபகரமான சூழல்கள் அமையும். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

மனதளவில் எதையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். குழந்தைகளிடத்தில் அனுசரித்து செல்லவும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிகள் இருந்த மறைமுக தடைகளை அறிவீர்கள். பெருமை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

 

சிம்மம்

பயணங்களால் ஏற்பட்ட சோர்வுகள் விலகும். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒத்துழைப்புகள் உண்டாகும். விட்டுக் கொடுத்து செயல்படுவதன் மூலம் மதிப்புகள் உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பணி நிமித்தமான சில ஆலோசனைகள் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஒரு வித ஈர்ப்பு ஏற்படும். நம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கன்னி

பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். உடன் பிறத்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெறவும். நண்பர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். அரசு தொடர்பான செயல்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

துலாம்

சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். பயணங்களால் அறிமுகங்கள் ஏற்படும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் ஆதரவுகள் கிடைக்கும். சினம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

விருச்சிகம்

வரவுகளில் இருந்து தாமதங்கள் விலகும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு காரியத்தில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்த தடைகள் விலகும். வித்தியாசமான செயல்களால் பலரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

தனுசு

புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உறவுகள் வழியில் இருந்த வேறுபாடுகள் விலகும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தடைப்பட்ட சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். அலுவல் பணிகளில் கால தாமதம் ஏற்படும். இலக்கிய துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். உணவு விஷயங்களில் திருப்தி இன்மை ஏற்படும். சோதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

மகரம்

தொழில்நுட்ப கருவிகளால் விரயங்கள் ஏற்படும். நீண்ட நாள் முதலீடு விஷயங்களில் ஆலோசனை வேண்டும். மனை விற்பனையில் தாமதம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கிய மகிழ்வீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கும்பம்

மனதளவில் புதிய பொலிவுடன் செயல்படுவீர்கள். பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். அரசு துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பயணங்களால் நன்மை ஏற்படும். தனிப்பட்ட தேவைகள் நிறைவேறும். வியாபார ரீதியான பெரிய மனிதர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

மீனம்

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். விலகி இருந்த உறவினர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். தன வரவுகளில் ஏற்ற இறக்கம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர்

  • 146
·
Added a post
·

விசுவாவசு வருடம் ஆடி மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை 19.7.2025

இன்று பிற்பகல் 01.45 வரை நவமி. பின்னர் தசமி.

இன்று அதிகாலை 01.52 வரை அஸ்வினி. பின்னர் பரணி.

இன்று அதிகாலை 03.58 வரை திருதி. பின்னர் சூலம்.

இன்று அதிகாலை 02.58 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 01.45 வரை கரசை. பின்பு வணிசை .

இன்று அதிகாலை 01.52 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=55&dpx=1&t=1752890048

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.46 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 168
·
Added a post
·

25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது.

நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்து கொண்டார்கள்.

அதில் ஒரு தம்பதியினரில்...

மனைவி ''அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்ற படி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார்.

கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள்

அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும், விட்டு கொடுத்தலும் நிறைந்திருந்தது.

அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100 எல்லோருக்குமே தெரிந்து விட்டது அவர்கள் தான் ஜெயிக்கப் போகிறார்கள் என்று.

எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்த பின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய அந்த சிறந்த தம்பதியையும்

மிகக் குறைவாக பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய ஒரு தம்பதியையும் மேடைக்கு அழைத்தார்கள்.

பூஜ்ஜியம் வாங்கியது வேறு யாரும் இல்லை வரும் போதே சண்டை போட்டுக் கொண்டு வந்தார்களே அவர்கள் தான்.

இரண்டு தம்பதிகளும் மேடைக்கு வந்தார்கள்

ஜீரோ மதிப்பெண் பெற்ற தம்பதியை அழைத்து காதல் திருமணமா என்று கேட்க இல்லை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றார்கள்.

எத்தனை குழந்தைகள் என்றதற்கு நான்கு என்றார்கள் திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது என்றதற்கு

35 வருடங்கள் என்று சொல்ல எல்லோரும் சிரித்து விட்டார்கள்.

35 வருடங்களாகியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவில்லை என்று ஏளனமாய் கேலி பேசினார்கள் அவமானம் தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்கள்.

ஆனால் போட்டியின் நடுவர் இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில் மிகச்சிறந்த தம்பதி இவர்கள் தான் என்று அறிவித்து ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிக்கு காரை பரிசளித்தார்!

காரணம்...

எல்லாவித மனப்பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரிய விஷயம் கிடையாது எந்த ஒரு மன ஒற்றுமையும், புரிதலும் இல்லா விட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே இது தான் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்று பாராட்டினார்.

இருவரும் ஆனந்தக் கண்ணீரோடு கார் சாவியை வாங்கிக் கொண்டு செல்ல எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

எந்நிலையும் தன் கணவனை/மனைவியை விட்டும் பிரியாத இதுவும் ஒரு வகையான அன்பு தான்

  • 232
  • 236
·
Added a news
·

கனடாவின் மார்க்கம் மற்றும் டொரண்டோ பகுதிகளில் கார் திருட்டு சந்தேகத்தில் ஒருவரை யார்க் பிராந்தியப் பொலிஸார் (York Regional Police) துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.

மார்க்கம் பகுதியில் உள்ள கென்னடி சாலை மற்றும் கிளேட்டன் டிரைவ் சந்திப்பில் ஒரு சந்தேகத்துக்குரிய வாகனத்தை பொலிஸார் பின் தொடர்ந்துள்ளனர்.

மாலை 7 மணியளவில், டொரண்டோவின் கென்னடி சாலை மற்றும் போனிஸ் அவென்யூ அருகே (ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கு பகுதியில்) அந்த வாகனத்தை நிறுத்த முயன்ற பொலிஸாருக்கும், காரில் இருந்த ஒரே ஆணுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதன் போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், டொரண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபருக்கு உயிராபத்து இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் எந்தவொரு பொலிஸாரும் காயமடையவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • 490
  • 490
·
Added a poem
·
பேருந்தில் நிற்க முடியாமல்
சிரமப்படும் நமக்கு எழுந்து,
தன் இடம் கொடுக்கும்
அந்த யாரோ ஒரு
*இருக்கை மனிதர்!*
ரயிலில் மேலேற முடியாத
நமக்கு தன் கீழ் இருக்கையை
கொடுக்கும் அந்த யாரோ ஒரு
*உயர்ந்த மனிதர்!*
சாலை விபத்தில் நமக்கு
முதல் ஆளாய் ஓடோடி வந்து
உதவும் அந்த யாரோ ஒரு
*சகாய மனிதர்!*
தூக்கிவிட மறந்த நம்
வண்டி சைட்ஸ்டாண்டை
தன் சைகையிலேயே
தூக்கிவிடச் சொல்லும்
அந்த யாரோ ஒரு
*சைகை மனிதர்!*
வண்டிச் சக்கரத்தில்
மாட்ட இருக்கும் துப்பட்டாவை சொருவிக்கொள்ளச் சொல்லி
எச்சரிக்கும் அந்த யாரோ ஒரு
*எச்சரிக்கை மனிதர்!*
செல்லும் வழி தெரியாமல்
முழிக்கும் நமக்கு சரியான
வழி சொல்லி உதவும்
அந்த யாரோ ஒரு
*முகவரி மனிதர்!*
திடீரென்று நின்று விட்ட
நம் வண்டியை உதைத்து
ஓட வைத்துக் கொடுக்கும்
அந்த யாரோ ஒரு
*உதை மனிதர்!*
சில்லறை இல்லாமல் நாம்
தவிக்கும்போது, சரியான
சில்லறை கொடுத்து உதவும்
அந்த யாரோ ஒரு
*நாணய மனிதர்!*
தவறவிட்ட நம் பணப்பையை
நம்மைத் தேடிவந்து
கொடுத்துச் செல்லும்
அந்த யாரோ ஒரு
*நேர்மை மனிதர்!*
ATM இயந்திரத்தில்
பணம் எடுக்கத் தெரியாமல்
தவிக்கும் போது, எடுத்துதவும்
அந்த யாரோ ஒரு
*நல்ல மனிதர்!*
உயிருக்கு போராடும்
ஆபத்தான நிலையில்,
யாருக்கென்றே தெரியாமல்
இரத்தம் கொடுக்க முன்வரும்
அந்த யாரோ ஒரு
*குருதி மனிதர்!*
இன்னும் இன்னும் இப்படி,
நம்மைச் சுற்றியே,
எத்தனையோ அந்த
*"யாரோ மனிதர்கள்!"*
எப்போதும் இருக்கிறார்கள்.
தேவையானச் சூழலில்
தங்களுக்குள் இருக்கும்
மனிதர்களை அவர்கள்
வெளிப்படுத்தி விடுகிறார்கள்.
நாமும் இருப்போம் முடிந்தவரை
யாரோ அந்த சில மனிதர்களாய்!
  • 501
·
Added a post
·

தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாறிய மகளிடம் கேட்டார் அப்பா .

"என்னம்மா, ஸ்கூல் எப்படி இருக்கு?"

"பிடிச்சு இருக்கு"...

என்று சொன்னவள் மெதுவாக

சில விஷயங்களை சொன்னாள்.

அரசு பள்ளிகள் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் குறைவான சுகாதாரமற்ற கழிப்பறை வசதியைப்பற்றி சொன்னாள்.

அது பெரும்பாலான அரசுப்பள்ளிகளிலும் உள்ள குறைதானே என சொல்லிவிட்டு வேற எப்படி இருந்தது என கேட்டார்.

கொஞ்சம் தயங்கியபடி, "இல்லப்பா , யாராவது எந்த ஸ்கூலில் படிக்கிற" எனக்கேட்கும் பொழுது சொல்லுவதற்கு ஒரு மாதிரி இருக்குப்பா.. பெரிய ஃபேமஷான ஸ்கூலில் படித்துவிட்டு இப்ப கவர்மெண்ட் ஸ்கூலில் படிக்கிறேன் என சொல்ல கூச்சமா இருக்குப்பா" எனச் சொன்னாள்.

அவர் சிரித்து கொண்டே "கவர்மெண்ட் வேலை கிடைச்சால் சொல்ல கூச்சப்படுவியா.??"

"கவர்மெண்ட் காலேஜில் டாக்டர் சீட், இன்ஜினியரிங் சீட் கிடைச்சால் கூச்சப்படுவியா?"

எனக் கேட்டார். "அது எப்படி அப்படி சொல்லுவேன்ப்பா? சந்தோஷமா சொல்லுவேன்' எனச்சொன்னாள். "அதே மாதிரி யார் கேட்டாலும் தைரியமா சொல்லு.. கவர்மெண்ட் ஸ்கூலா என யாராவது இழுத்தால், ஏன் கவர்மெண்ட் வேலை கிடைச்சால் இப்படி கேட்பீங்களாண்ணு நக்கலா கேளு" என்றார்.

"கேட்டவுடன் சிரித்து விட்டு இது தெரியாமல் போச்சே.. இனி யாராவது கேட்கட்டும்" என உற்சாகமாக சொன்னாள்.

"நீ படிக்கிற பள்ளியை என்றுமே குறைவா நினைக்காதே. வேலைக்கு போக இண்டர்வியூவில் எந்த ஸ்கூல் என கேட்பாங்க.. அப்பொழுது கவர்மெண்ட் ஸ்கூல் என சொன்னால் ஏதும் நினைப்பாங்களோன்னு தயங்கினால், அடுத்த கேள்விக்கு பதில் தெரிந்தாலும் தயங்கி சொல்லுவ.. ஆரம்பத்துலயே தைரியமா சொல்லு. நம்ம படிக்கிற ஸ்கூல் நல்ல ஸ்கூல் என உன் மனசுல பதியணும்.

அங்க பீஸ் கட்டலைன்னா புக் தராமல் நிக்க வைக்க கூட செய்வாங்க. ஆனால் இங்க உனக்கு புத்தகம் கொடுத்து படிக்க சொல்லுவாங்க. அங்க என்ன எக்ஸ்ட்ரா சொல்லி தருவாங்க.. இங்க நீ கேட்டு கத்துகிடணும். அதிக வேலையும் கொடுக்க மாட்டாங்க. உனக்கு என்ன கத்துகிடணும் தோணுதோ அதை கத்துக்கோ. என்ன வேணும்னு எங்கிட்ட சொல்லு. நான் வாங்கித்தர்றேன்" எனச்சொன்னார். உற்சாகத்துடன் கேட்டு கொண்டாள்.

"அங்க எல்லா பிள்ளைகளும் வசதியான, வசதியா காண்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பிள்ளைங்களோடு படிச்சு இருப்ப.. இங்க எல்லோரும் நடுத்தரமா, இயல்பா பழகுற பிள்ளைகளா இருக்கும்.. அதனால எல்லோரிடமும் நல்லா பழகு. டீச்சரை பார்த்து பயப்படாமல் நல்லா பேசு.. மரியாதையா பேசு. இங்க வேலை பாக்குறவங்க எல்லோரும் நல்லா படிச்சு வேலைக்கு வந்தவங்க.. அதிக விஷயம் தெரியும். அவங்ககிட்ட கத்துக்கோ" என சொல்லி முடித்தார்....

  • 507
  • 506
·
Added a post
·
  • 524
·
Added a post
·

மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன்.. சூரியனிடம்....

“தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் போர் புரிந்தேன்.

ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.

அப்போது சூரிய பகவான்,

“இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.

“க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால் தான் சொல்கிறோம். அந்தக் கண்ணன் என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும் முரண்பாடு வருகையில் விசேஷ தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டும். நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தைக் கைக்கொண்டு விசேஷ தர்மத்தைக் கைவிட்டாய். அதனால் தான் அழிந்தாய்."

கர்ணன் தந்தையின் வார்த்தைகளில் இருக்கும் சத்தியத்தை உணர்தான்.

"தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பது உயர்ந்த தர்மம் தான். அதற்காக இரணியனின் பேச்சைக் கேட்டுப் பிரகலாதன் நடந்தானா? நரசிம்மர் என்ற விசேஷ தர்மத்தை அல்லவோ கைக்கொண்டான்!

விபீஷணனும் தன் அண்ணன் ராவணனுக்கு நன்றி பாராட்டுதலாகிய சாமானிய தர்மத்தை விட்டு,

விசேஷ தர்மமான ராமனை வந்து பற்றவில்லையா?

தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்பதற்காகக் கைகேயியின்

ஆசைக்குப் பரதன் உடன்பட்டானா?

மகனே! சாமானிய தர்மங்களை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் விசேஷ தர்மத்தோடு அதற்கு முரண்பாடு ஏற்படும் சூழ்நிலையில் விசேஷ தர்மத்தையே முக்கியமாகக் கைக்கொள்ள வேண்டும்.

அவ்வகையில் கண்ணனே அனைத்து தர்மங்களுக்கு சாரமான விசேஷ தர்மம் என உணர்வாயாக!” என்றார்.

வடமொழியில் ‘வ்ருஷம்’ என்றால் தர்மம் என்று பொருள். ‘வ்ருஷாகபி:’ என்றால் தர்மமே வடிவானவர் என்று பொருள்.

கர்ணனுக்கு சூரியன் உபதேசித்தபடி தர்மமே வடிவானவராகத் திருமால் விளங்குவதால் ‘வ்ருஷாகபி:’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 102-வது திருநாமம்.

“வ்ருஷாகபயே நமஹ” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால்,

முரண்பாடான சூழ்நிலைகளில் நாம்

சிக்கிக் கொள்ளும் போது சரியான முடிவெடுக்கும் ஆற்றலைத் திருமால் நமக்குத் தந்தருள்வார்..!!

  • 531

தோல்வியடைந்து

வீழ்வதும்

உடைந்து போவதும்

கூனி குறுகுவதும்

எவ்வளவுக்கெவ்வளவு உண்மையோ

அவ்வளவுக்கவ்வளவு உண்மை

அதன் பின்

உயர்வதும்

எழுவதும்

கடந்து வருவதும்....

உடைந்து சில்லு சில்லாய் ஆனாலும் அதெல்லாம் ஒன்றாகி நிமிர்ந்து எழுந்து வரமுடியும் நம்மால்...

  • 531