sivam

  •  ·  Premium
  • 1 friends
  • 1 followers
  • 159 views
  • 1 votes
  • More
Friends
·
Added a news
·

இலங்கையின் பிரதமர் ஹரிணி அமரசூரிய கனடாவிற்கு விஜயம் செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் பதவியையும் வகிக்கும் ஹரிணி அமரசூரிய, தெற்காசிய பிராந்திய பிரதிநிதியாக பொதுநலவாய கற்றல் அமைப்பின் Commonwealth of Learning (COL) நிர்வாக சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கனடா பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த மாநாடு ஜூன் 24 முதல் 26 வரை கனடாவின் வன்கூவர் நகரில் நடைபெற உள்ளது.

இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி மற்றும் பயிற்சி, உயர் கல்வி, ஆசிரியர் பயிற்சி, முழுநாள் கல்வி, மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்பாடான கற்றலை ஊக்குவித்தல் போன்ற முக்கிய துறைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

  • 206
·
Added a news
·

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கோல்ட் லேக் பகுதியில் வீட்டில் இருந்து காணாமல் போன 6 வயது சிறுவன், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார் என்று அல்பர்ட்டா பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அந்த சிறுவன் மாலை 5 மணியளவில் தனது வீட்டில் கடைசியாக காணப்பட்டதாகவும், ரொக் வேய் (Rocky Way) பகுதியில் வசித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாலை 8 மணிக்கு முன்பாக அவர் காணாமல் போனதைப்பற்றி அவசர அறிவிப்பை வெளியிட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சிறுவன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சாவுக்கு பின்னே ஏதாவது சந்தேகத்துக்கிடமான சூழ்நிலை இல்லை என்றும், மரண காரணம் குறித்து வெளிப்படையாகக் கூறாமல், குடும்பத்தின் தனியுரிமையை மதிப்பதற்காக அறிவிக்கப்பட மாட்டாது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சிறுவனின் குடும்பத்தினருக்கும் நெருங்கியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • 204
·
Added a news
·

ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கையான ஜென்சிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டையில் பிறந்த திருநங்கையான ஜென்சி, இளநிலை ஆங்கிலப் படிப்பை திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியர் அரசு கலை கல்லூரியில் படித்துள்ளார்.

அதன்பின் எம்ஏ மற்றும் எம்பில் வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் முடித்து, பிஏ மற்றும் எம்ஏ இரண்டிலும் தங்கப்பதக்கத்துடன் முதல் திருநர் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து முனைவர் ஆராய்ச்சிப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியில் முடித்துள்ளார். இதையடுத்து லயோலா கல்லூரியின் ஆங்கிலத் துறையில் உதவி பேராசிரியராக திருநங்கை ஜென்சி பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய அளவில் ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘வாழ்த்துகள் டாக்டர் ஜென்சி. உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக் கரை சேரட்டும். தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும் ’’என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • 212
·
Added a post
·

அவசரக்காரன்- ஒரு நகைச்சுவை கதை ..........

*ஒரு கணவன் மனைவிக்குள் வாக்குவாதம்*....சிறிய சச்சரவு...பெரிதாகி...கடந்த மூன்று நாட்களாக இருவருக்கும் பேச்சு வார்த்தையில்லை..

இது நீடிக்கவே...எ மனைவி அவள் கணவன் எதிரில் வந்து...

நான் இப்போது 10 வரை எண்ணுவேன் ! அதற்குள் நீங்கள் பேசவில்லை என்றால்....

நான் எனது அம்மா வீட்டிற்குப் போய் விடுவேன்.

அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.. அவன் அதைத் தான் எதிர்பார்த்திருந்தான்.

அவள் எண்ணத் துவங்கினாள் .... ....

*மனைவி* - 1 ... 2 ... 3 ...

*கணவன்* - (அமைதி) ... !

*மனைவி* - 4 ... 5 ...

*கணவன்* - (மவுனம்)

*மனைவி* - 6 ... 7...

*கணவன்* - (அவன் மனதில் மகிழ்ச்சி... ஆனாலும் அமைதி)

உச்சகட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது ...

*மனைவி* - 8 ... 9 ...

*கணவன்* - (மனதில் எல்லையற்ற மகிழ்ச்சி ...)

*மனைவி* ...

(அமைதி) ...

(பயங்கர மவுனம்)

...

...

பிறகு கணவனால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை.

உணர்ச்சி வயப்பட்டு கத்தினான் !

எண்ணு ... எண்ணு ...

*ஏன் மேற்கொண்டு எண்ணாமல் நிறுத்திவிட்டாய்*?

*Wife*- ( மிகவும் அமைதியாக)நல்ல வேளை! நீங்க பேசிட்டீங்க... இல்லைனா நான் போயிருப்பேன் ...!!

கணவன் - 😗😗

*பின் குறிப்பு* ... எப்பவுமே கணவன்மார்களுக்கு அவசரம் தான். சிறிது நேரம் பொறுமையை கடைபிடித்து இருக்கலாம்.

  • 268
·
Added a post
·

நடந்து போன செயல்களில் ஏற்பட்ட தோல்விகளை விட்டு விட்டு இனி நடக்கப் போகும் செயல்களை எப்படி வெற்றிகரமாகச் செயல்படுவது என்று முடிவு செய்ய வேண்டியது நாம் தான். அது தான் உண்மை. எத்தனைத் துன்பங்கள் வந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு மீண்டு எழுந்து வரத்தான் வேண்டும்.

மனிதனுக்குத் துன்பம் வரும் பொழுது தான் மூளை அதிலிருந்து விடுபட சுறுசுறுப்பாக இயங்கி வழியைக் காண்கிறது.

ஆகவே துன்பம் வரும் போது துவண்டு விடாமல் சுறுசுறுப்பாய் இயங்க வேண்டும்.

மனோதிடம் இருந்தால் எந்தச் சூழ்நிலையையும் எளிதில் சமாளித்து விடலாம் என்பதை அவ்வப்போது நினைவூட்டுகின்றனர் நம்மைச் சுற்றியிருக்கும் சிலர்.

ஜப்பானைச் சேர்ந்த கோட்டானி மகோட்டோ, என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி டோக்கியோ நகரத்திற்கு வந்தார். குடியிருக்க வீடு இல்லை.கையில் காசு இல்லை.

எத்தனையோ வேலைகளுக்கு விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, தன்னை வாடகைக்கு விட முடிவு செய்தார்.

“நான் வேலையற்றவன். நகைச்சுவை உணர்வு மிக்கவன். உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக

வைத்திருக்க என்னால் முடியும். நீங்கள் கொடுக்கும் வேலைகளையும் செய்வேன்.

உணவும் தங்கும் இடமும்அளித்து, மாதம் 500 ரூபாய் சம்பளம் கொடுத்தால் போதும்” என்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

நிறையப் பேர் கோட்டானியைத் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர். ஓரிரு நாட்களிலிருந்து ஒரு வாரம், ஒரு மாதம் வரை இவரை வாடகைக்கு எடுத்தார்கள்.

500 ரூபாய் மிகவும் குறைவான ஊதியம் என்பதால் உடைகள், செருப்பு, போன் கட்டணம் என்று பலவற்றையும் தாங்களாகவே விரும்பிச் செய்கிறார்கள்.

உலகம் அன்பால் ஆன மக்களால் நிறைந்தது என்பதைக் கண்டு கொண்டேன். இதுவரை எந்த வாடிக்கையாளரும் மோசமாக நடத்தியது இல்லை என்றார்.

மனித வாழ்வில் சோதனைகளும் , துயர்களும் இயல்பானவை. அவற்றைக் கண்டு துவண்டு போகக் கூடாது. நம்பிக்கை இழந்து விரக்தி அடையக் கூடாது.

உலகில் வாய்ப்புகள் நிறைந்து உள்ளது. கொஞ்சம் மூளையை உபயோகப் படுத்தினால் நாமும் வாழ்வில் முன்னேறலாம்.....

  • 290

உங்களுக்கு இந்த பூவின் பெயர் தெரியுமா?

  • 313
·
Added a post
·

மரணப் படுக்கையில் இருந்த மிகப்பெரிய பணக்காரர் ஒருவருக்கு தன்னுடைய சொத்துக்கள் மீது உயில் எழுத வேண்டும் என்கிற எண்ணம் எழுந்தது.

உடனே அவருடைய வழக்கறிஞரை அழைத்தார். வழக்கறிஞரும் அவருடைய இடத்திற்கு விரைந்து வந்தார்.

வழக்கறிஞரிடம் அந்த பணக்காரர் சொன்னார்,

'சார்..! மனித காயம் அநித்யமானதுன்னு உணர்றேன். வாழ்ந்தபோது கெட்டவழிகள்ல நிறைய பணம் சம்பாதிச்சு இருக்கேன். அதுக்கெல்லாம் பிராயச்சித்தம் தேட விரும்புறேன். அதனால நான் சொல்றபடி உயில் எழுதுங்க சார்'

வழக்கறிஞர் எழுத தயாரானார். அந்த பணக்காரர் சொன்னார்,

'என்னுடைய சொத்தில் 25 சதவீதம் பக்கத்து ஊரில் இருக்கும் ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு செல்ல வேண்டும்'

அந்த பணக்காரரின் தயாள குணத்தை பாராட்டிக் கொண்டே வழக்கறிஞர் உயில் எழுதினார்.

'அடுத்த 25 சதவீதத்தை என் மகன்கள் இருவரும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும்'

வழக்கறிஞர் கவனமுடன் எழுதிக் கொண்டிருந்தார். பெரியவர் தொடர்ந்தார்,

'மீதமுள்ள 50 சதவீதம் எனது மனைவிக்கு சேரும். ஆனால் அவள் அதை அனுபவிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக மறுமணம் செய்து கொள்ள வேண்டும்'

வழக்கறிஞருக்கு குழப்பம் வந்தது. இதற்கு எந்த வினோத கண்டிஷன்?

தான் இறந்த பிறகு தனிமையில் மனைவி வாடிவிடக்கூடாது என்பதற்கான அன்பினால் இவ்வாறு சொல்கிறாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?

எந்த முடிவுக்கும் வர முடியாமல் தடுமாறி தவித்து முடிவாக அந்த முடிவு ஏன் என்பதை பணக்காரரிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்கிற முடிவோடு பணக்காரரிடம் கேட்டார் வழக்கறிஞர்,

'உங்கள் மனைவி மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என நீங்கள் நினைப்பதை பார்த்தால் நீங்கள் ஒரு புரட்சிவாதி போல் தெரிகிறது.

உங்கள் மனைவி மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என் நீங்கள் முடிவெடுத்திருப்பது புரட்சியின் வெளிப்பாடா? அல்லது உங்கள் மனைவி மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடா?'

நீண்ட பெருமூச்சு விட்டு அந்த பணக்காரர் பதில் சொன்னார்,

'நான் ரொம்ப கொடுமைக்காரனா வாழ்ந்ததினால் நான் இறந்த பிறகு யாரும் என்னை நினைக்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும்.

ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு நான் கொடுத்த நன்கொடையை பாராட்டி அவர்கள் என்னை நினைப்பார்கள். ஆனாலும் என்னைவிட பெரிய பணக்காரன் இதைவிட அதிக தொகை கொடுத்தால் என்னை மறந்து விட்டு அவனை நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால் என் எண்ணம் நிறைவேற வழியில்லை.

என் மகன்கள் நான் வாழும் பொழுதே என்னை நினைக்கவில்லை. இறந்த பிறகு என் நினைப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு சத்தியமாக கிடையாது.

அதனால் தான் என் மனைவி நான் இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என ஒரு கண்டிஷனை உயிலில் போட்டு வைத்தேன்'

வழக்கறிஞருக்கு புரிந்து போனது. கணவன் இறந்த பிறகும் மனைவி கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டும் என ஒரு வாழ்க்கை துணையை தேட கணவன் அனுமதி கொடுத்திருக்கின்றான் என்றால் அந்த கணவனை அவள் அனுதினமும் நினைத்துப் பார்ப்பாள். இதுதான் அந்த பணக்காரரின் எண்ணமாக இருக்க வேண்டும்.

'ச்சே..! இந்த கலிகாலத்திலும் எப்பேர்பட்ட மனுஷன்

வியந்து போன வழக்கறிஞரின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டது போல அந்த பணக்காரர் பேசினார்,

'நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது சார். ஆனா அதுக்காக நான் அவளுக்கு கல்யாணம் பண்ணச் சொல்லி கண்டிஷன் வைக்கலை.

பிறகு ஏன் அப்படி ஒரு கண்டிஷன்னு கேட்குறீங்களா?

துட்டுக்கு ஆசைப்பட்டு அவளை கல்யாணம் பண்ணிக்கிறவன்,

கல்யாணம் பண்ணின பிறகு...

'செத்தவன் செவனேன்னு செத்து தொலைக்காமல் இப்படி ஒரு கிரகத்தை தலையில் கட்டி வச்சிட்டு செத்துட்டானேன்னு...

அனுதினமும் என்னை நினைத்துப் பார்க்க ஒரு ஜீவன் வேண்டும் என்பதினால் தான் அப்படி எழுதினேன்'

  • 344
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

குழந்தைகள் ஒத்துழைப்பாகச் செயல்படுவார்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொள்வீர்கள். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

 

ரிஷபம்

விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய விஷயங்களால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். ஜாமீன் விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சற்று கவனத்தோடு செயல்பட வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் ஒருவிதமான குழப்பங்கள் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள்

 

மிதுனம்

வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். தடைப்பட்ட பேச்சுக்கள் கைகூடும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். எதிலும் நிதானத்துடன் செயல்படவும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

மற்றவர்களின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

சிம்மம்

வியாபாரப் பணிகளில் வித்தியாசமான முயற்சிகளின் மூலம் முன்னேற்றத்தை உண்டாக்குவீர்கள். கல்வி பணிகளில் மேன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நிர்வாகத் திறமை மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் மேம்படும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் 

 

கன்னி

உறவுகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். விவசாயப் பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

 

துலாம்

மனதளவில் ஒருவிதமான குழப்பம் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். மற்றவர்கள் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல்கள் ஏற்படும். பணி நிமித்தமான விஷயங்களைப் பகிராமல் இருக்கவும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

விருச்சிகம்

மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சகோதரர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வாகன பழுதுகளைச் சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். வழக்கு விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

தனுசு

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உறவுகளின் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசு விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். உயர்வு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

மகரம்

தற்பெருமையான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். குணநலன்களின் சில மாற்றம் ஏற்படும். வித்தியாசமான எண்ணங்களும், முயற்சிகளும் அதிகரிக்கும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் அமையும். வியாபார பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். அலுவலகத்தில் பொறுமை காப்பது நல்லது. பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை 

 

கும்பம்

குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டினை மனதிற்குப் பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நவீன மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பதற்கான பக்குவம் உண்டாகும். அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

மீனம்

திட்டமிட்ட பணிகளில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். மாறுபட்ட அணுகுமுறைகளால் தடைகளை வெற்றிகொள்வீர்கள். சவாலான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். மனதளவில் தைரியம் கூடும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

  • 388
·
Added a post
·

விசுவாவசு வருடம் ஆனி மாதம் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 24.6.2025.

இன்று மாலை 06.56 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.

இன்று பிற்பகல் 12.52 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.

இன்று காலை 09.56 வரை சூலம். பின்னர் கண்டம்.

இன்று காலை 08.01 வரை பத்தரை . பின்னர் மாலை 06.56 வரை சகுனி. பின்பு சதுஷ் பாதம்.

இன்று பிற்பகல் 12.52 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்

image_transcoder.php?o=sys_images_editor&h=26&dpx=1&t=1750737107

நல்ல நேரம்:

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 366
  • 346
  • 567
  • 567