கனடாவில் வன்கூவரின் டவுன்டவுன் பகுதியில் 15 வயது சிறுவன் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், வன்கூவர் நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள ஹவ் தெருவில், இரவு 11.40 மணியளவில் வழியே சென்ற ஒருவர் 911-ஐ அழைத்ததினால் வெளியாகியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸாரும், பிற அவசர சேவை ஊழியர்களும் சிறுவனுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.
ஆனால், சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வன்கூவர் பொலிஸ் திணைக்களத்தின் பேச்சாளர் சார்ஜென்ட் ஸ்டீவ் அடிசன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், சந்தேகநபர்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்க முடியாது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தையடுத்து, ராப்சன் சதுக்கம் மற்றும் சுற்றியுள்ள தெருக்கள் காவல்துறையினரால் மூடப்பட்டன. இவ்வழக்கைச் சார்ந்த மேலதிக தகவல்களுக்கோ அல்லது உதவிக்கோ, வன்கூவர் காவல்துறையிரை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள், பாலசந்தர், கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் மூன்று பேரும் ஒன்றாக இருந்தபோது, நான் அங்கே போனேன்.
'வா, நாகேஷ்... உனக்கு தான் ஒரு, 'டூயட்' பாட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன்...' என்றார், கவிஞர்.
'துாத்துக்குடி பாஷை பேசுவியே, அதற்கு ஏற்றார்போல் ஒரு பாட்டு கேட்டிருக்கிறேன்...' என்றார், பாலசந்தர்.
'துாத்துக்குடியா...' என்று கேட்டு, பக்கத்தில் இருந்த, பஞ்சு அருணாசலத்திடம், 'பஞ்சு... பாட்டை எழுதிக்கோ...' என்று சொல்ல ஆரம்பித்தார், கண்ணதாசன்.
முத்துக் குளிக்க வாரீகளா, மூச்சை அடக்க வாரீகளா...
'அட... துாத்துக்குடின்னு மனுஷரிடம் சொன்ன மாத்திரத்தில், அதற்கு ஏற்றபடி பாடல் வரிகள் வந்து விழுகின்றனவே...' என்று, நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம்.
அத்துடன் விடவில்லை.
எம்.எஸ்.வி.,யிடம், 'நம்ம நாகேஷுக்கு, பாட்டுல ஸ்பெஷலா ஏதாவது செய்...' என்று, கவிஞர் கூறினார். தான் போட்டிருந்த, 'டியூனை' தாலாட்டு பாணியில் சற்றே நீட்டி, போட்டுக் காட்டினார்.
ஆளான பொண்ணுக பாக்கு வெக்கும் முன்னமே... என்று, தாலாட்டு வரிகளை சேர்த்து, இன்னும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
அனுபவி ராஜா அனுபவி படத்தில் நடித்து கொண்டிருந்த போது, கண்ணதாசனை சந்தித்தேன்.
'மெட்ராஸ் ரோடுல நடந்துகிட்டே பாடுறதா, ஒரு பாட்டு எழுத சொல்லியிருக்காங்க...' என்றார்.
'கவிஞரே... நான் தாராபுரத்துக்காரன்; மெட்ராஸ் வந்ததுலேர்ந்து, எனக்கு ஒரு பெரிய சந்தேகம்... எங்க ஊர்ல எல்லாம் கன்னு குட்டியை அவிழ்த்து, மாடுகிட்ட விடுவாங்க... அது ஓடி போய், பசு மாட்டு மடியில முட்டி முட்டி, பாலை குடிக்கும். அப்புறம் கன்னுகுட்டியை இழுத்து கட்டி விட்டு கறந்தால், மாடு, பால் சுரக்கும்.
'ஆனா, பாருங்கண்ணே... இந்த மெட்ராஸ்ல, கன்னு குட்டியோட தோலுக்குள்ளே வைக்கோலை அடைச்சு வெச்சிடறாங்க... அந்த வைக்கோல் கன்னு குட்டியை, மாடுகிட்ட எடுத்து போய், ரெண்டு நிமிஷம் காட்டறான்; மாடு பால் சுரக்க ஆரம்பிச்சிடுது... இது எப்படின்னு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு...' என்றேன்.
'நீ சொல்றது கூட சுவாரசியமா தான் இருக்கு... இதைக் கூட பாட்டுல வெச்சுக்கலாம்...' என்றார்.
'ம்... பஞ்சு, எழுதிக்க...' என்று சொல்லி, மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்... என்று ஆரம்பித்து, மடமடவென்று பாடல் வரிகளை சொல்லியபடியே வந்தவர், எனக்கு இனிய ஆச்சரியத்தை கொடுத்தார்...
வைக்கோலால கன்னுக்குட்டி, மாடு எப்போ போட்டது... கக்கத்துல துாக்கி வெச்சா கத்தலயே என்னது... என்று, அவர் சொன்னபோது, எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.
'என்ன, நாகேஷ் நல்லா இருக்கா...' என்றார், கவிஞர்.
'அண்ணே... எனக்குள்ளே இருக்குற சந்தோஷத்தை எப்படி சொல்றதுன்னே தெரியலை...' என்று சொல்லி, கை குலுக்கும் போது என் கண்ணில்
ஆனந்த கண்ணீர் வழிந்தோடியது. என்னால் மறக்க முடியாத கவிஞர் கண்ணதாசன் அவர்கள் என்று கூறினார் நடிகர் நாகேஷ்.
இந்த தாவரங்கள் அனைத்தும் பெரிய அளவு மற்றும் அதிக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறனுக்காக அறியப்படுகின்றன. அவை அனைத்தையும் பராமரிப்பது ஒப்பீட்டளவில் எளிதானது, அவை வீட்டுத் தோட்டங்களுக்கான சிறந்த தேர்வாக அமைகின்றன. 24 மணி நேரமும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதாகக் கூறப்படும் 5 தாவரங்கள் இங்கே உள்ளன.
1. பாம்பு செடிகள் பாம்பு தாவரங்கள் பிரபலமான உட்புற தாவரங்கள் ஆகும், அவை காற்றை சுத்திகரிக்கும் மற்றும் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் திறனுக்காக அறியப்படுகின்றன.
2. கற்றாழை கற்றாழை ஒரு சதைப்பற்றுள்ள தாவரமாகும், இது இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுகிறது மற்றும் உட்புற காற்றின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
3. வேப்ப மரம் வேப்ப மரங்கள் அவற்றின் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றவை மற்றும் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுவதாக நம்பப்படுகிறது.
4. பீப்பல் மரம் புனித அரச மரங்கள் என்றும் அழைக்கப்படும் பீப்பல் மரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுவதாக நம்பப்படுகிறது மற்றும் சில கலாச்சாரங்களில் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.
5. Pothos Pothos ஒரு பிரபலமான வீட்டு தாவரமாகும், இது இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் திறனுக்காக அறியப்படுகிறது.
மருமகனுக்கு வேட்டையாடுவதில் விருப்பம் அதிகம்.
மனைவியையும், மாமியாரையும் கூட்டிக் கொண்டு வேட்டைக்குப் போனான். ரொம்ப இருட்டி விட்டதால் மூவரும் தூங்குவதற்காகப் படுத்தார்கள். நடு ராத்திரியில் தூக்கம் விழித்த மனைவி,
“என்னங்க, அம்மாவை காணோம்” என்றாள் பதற்றமாக மனைவி
கணவன் எழுந்தான். ஒரு பெக் விஸ்கியை போட்டுக் கொண்டு துப்பாக்கியோடு தேட ஆரம்பித்தான்.
ஒரு புதருக்கு அருகே, சிங்கத்துக்கு எதிரே மாமியார் இருந்ததைப் பார்த்தார்கள்.
“ஐயய்யோ, இப்ப என்ன பண்றது?” என்று பதறிய மனைவியை தோளில் தட்டி கணவன் சொன்னான்,
“சிங்கம் காட்டுக்கு ராஜா, அதுக்கா தப்பிக்க வழி தெரியாது? ப்ரீயா விடு, அது எப்பிடியாவது உங்கம்மாகிட்ட இருந்து தப்பிச்சிடும்” என்றான்.
பூண்டு:
5 அல்லது 8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு கணிசமாக குறைந்துவிடும்.
ஆப்பிள்:
பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தை குறிப்பிடலாம்.
கொள்ளு:
ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும். கொள்ளை வேக வைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்து ரசமாக குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.
கறிவேப்பிலை:
கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். கறிவேப்பிலையுடன் கொள்ளு சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம்.
மிளகு:
வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கவும். உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.
சீரகம்:
ஒரு லிட்டர் தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது.
இஞ்சி:
ஏலக்காய்: இஞ்சியின் மேல்தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடிக்கவும். இதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.
சோற்றுக் கற்றாழை:
சோற்றுக் கற்றாழையின் மேல் தோல் சீவி, ஜெல்லை எடுத்து நன்கு கழுவவும். தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன், கொழுப்பும் குறையும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வர்த்தகப் பணிகளில் மேன்மை ஏற்படும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணங்களில் இருந்து தடைகள் விலகும். கணவன் மனைவி இடையே இருக்கும் அதிகரிக்கும். சோர்வு மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
ரிஷபம்
கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். தூக்கமின்மை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மிதுனம்
உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். நினைத்த சில பணிகளை அலைச்சல்கள் ஏற்படும். சில நினைவுகளால் ஒரு விதமான இறுக்கங்கள் உண்டாகும். வியாபாரம் முதலீடுகளில் கவனம் வேண்டும். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். மறைமுகமான சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
கடகம்
பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உருவாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். வியாபார ரீதியான பயணங்கள் மேம்படும். அலுவல் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். பெருமை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
சிம்மம்
முன்னேற்றத்திற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுகூலம் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வேலையாட்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மனதில் இருந்த கவலைகள் படிப்படியாக குறையும். பணி புரியும் இடத்தில் திறமைகள் வெளிப்படும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்
கன்னி
வெளியூர் வர்த்தக பணிகளில் மேன்மை உண்டாகும். உலகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். வழக்கு செயல்களில் இருந்த இழுபறிகள் குறையும். உயர்மட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உழைப்புகள் உண்டான மதிப்புகள் கிடைக்கும். மாமியார் உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். சமூக பணிகளில் ஆதாயம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி
துலாம்
எண்ணங்களில் இருந்த குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கணவன்–மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் புதிய பங்குதாரர்களின் அறிமுகம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விருச்சிகம்
நினைத்த காரியத்தை முடிப்பதில் தாமதம் ஏற்படும். குழந்தைகளிடம் அனுசரித்து செல்லவும். சில உதவிகள் கிடைப்பதில் இழுபறிகள் ஏற்படும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பாராத சில இடமாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சுமுகமற்ற சூழல்கள் அமையும். அலுவல் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழியில் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். வழக்குகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
மனதில் நேர்மறை சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். பெரியவர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். சில பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களால் கையிருப்புகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படு நறுமண பொருட்கள் மூலமாக ஆதாயம் அடைவீர்கள். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
விசுவாவசு வருடம் ஆடி மாதம் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 22.7.2025.
இன்று காலை 06.45 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.
இன்று இரவு 07.52 வரை வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.
இன்று மாலை 04.07 வரை துருவம். பின்னர் வியாகாதம்.
இன்று காலை 06.45 வரை தைத்தூலம். பின்னர் மாலை 05.21வரை கரசை. பிறகு வணிசை.
இன்று காலை 06.00 வரை அமிர்த யோகம். பின்னர் இரவு 07.52 வரை சித்தயோகம். பின்னர் மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை