உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப் போதும்” என்ற பகவான் ஸ்ரீ குருவாயூரப்பன் - விளக்கும் எளிய கதை
ஒரு முறை தன் பக்தன் நாராயண பட்டதிரியுடன் குழந்தை ஸ்ரீ குருவாயூரப்பன் நிகழ்த்திய உரையாடல் மிகவும் சுவையானது,
ஒரு நாள் தம் முன் தோன்றிய ஸ்ரீகுருவாயூரப்பனிடம், பகவானே… நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனம் என்ன?” என்று பட்டதிரி கேட்கிறார்.
எனக்கு பிடித்தது நெய்ப் பாயசம்” தானே என்றான் குழந்தை ஸ்ரீ குருவாயூரப்பன்.
ஒருவேளை நெய்ப் பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால், நான் என்ன செய்வது?”
எனக்கு நீ தரும் ‘‘அவலும் வெல்லமும் போதுமே!”
‘‘சரி பகவானே… அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்க எனக்கு வசதி இல்லை என்றால்?”
‘‘வெண்ணெய், வாழைப்பழம், பால், தயிர் – இவற்றில் ஏதாவது ஒன்றாவது வைத்து வழிபடு. ஏற்றுக் கொள்கிறேன்.” என்றான்
‘‘மன்னிக்க வேண்டும் பகவானே… தற்போது தாங்கள் சொன்ன நான்கும் என்னிடம் இல்லை என்றால்?”
‘‘துளசி இலைகள் அல்லது ஒரு உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தருமே!”
‘‘அதுவும் என்னிடம் இல்லை என்றால்?” – பட்டதிரியின் குரல் தழைந்து போகிறது.
‘‘எனக்கு நைவேத்தியம் செய்து வைக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ அழுவாய் அல்லவா…
அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப் போதும்” என்று பகவான் சொன்னதும், ‘ஓ’வென்று கதறி அழுதே விட்டார் பட்டதிரி.
பரந்தாமன் , தன் பக்தர்களிடம் எதையும் எதிர் பார்ப்பதில்லை. எதிர்பார்ப்பது எல்லாம் – உண்மையான பக்தி ஒன்றைத்தான்
ராமேஸ்வரத்தில் பிரகாரங்களில் சுற்றி வரும்போது நிறைய லிங்கங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.
இவற்றில் சில லிங்கங்கள் கோவில் நிர்வாகத்தாலும், பக்தர்களாலும் கவனிக்கபடாமல்,பூஜைகள் நடைபெறாமலும் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.
அப்படி ஒரு லிங்கம் பல நூறு வருடங்கள் பராமரிப்பு இல்லாமல் தூசி பிடிக்கப்பட்டு,பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
சிவராத்திரி அன்று மட்டும் பக்தர் ஒருவர் கோவில் நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று அந்த சிவ லிங்கத்தை தனது சொந்த முயற்சியால் சுத்தம் செய்து லிங்கத்தை நன்றாக வில்வ இலைகளால் அலங்காரம் செய்து வருகின்றார். மூன்றாம் பிரகாரத்தில் நளன், நீலன், கவன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளுக்கு அருகில் உள்ள இந்த லிங்கத்தின் பெயர் நீலேஸ்வரர் லிங்கம்.
இந்த நீலேஸ்வரர் லிங்கத்தின் சிறப்பு என்ன வென்றால் பல நூறு வருடங்களுக்கு முன்பு சீதையால் பிரதிஷ்டை செய்யபட்ட தற்போதுள்ள ராமநாதர் லிங்கத்திற்கு பதிலாக இருந்த மூலவர் லிங்கம் இவர்தான் என கூறப்படுகிறது. இந்த லிங்கத்தை இராமநாதபுரத்தில் வசிப்பவர்கள் யாரும் தரிசித்தது இல்லை.
இந்த லிங்கத்தை தரிசிப்பதற்குரிய பிராப்தம் இருந்தால் தரிசிக்க முடியும். மேலும் ராமேஸ்வரம் கோவிலில் ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்புக்கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது.
பல வருடங்களாக அந்த உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்புலிங்கம் கரையாமல் அப்படியே உப்புக்கல்லாகவே இருப்பது மிகவும் அதிசியமாகும். இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது.
ஒரு முறை சிலர்,ராமேஸ்வரம் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.
அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.
அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்யபட்ட லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது’ என்று கூறினார்.
அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம். மேலும் இராமேஸ்வரம் கோவிலில் அநேகம்பேருக்கு தெரியாத சேதுமாதவர் சன்னதி ஒன்று உள்ளது. காலில்சங்கிலியுடன் பெருமாள்-சேதுமாதவர் சன்னிதி சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான்.
அவனது குழந்தை பாக்கியம் இல்லா குறையைத் தீர்க்க மகாலட்சுமியையேஅவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள்.அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார்.
மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப்போட்டான். பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார். அன்றிரவில் மன்னனின் கனவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.
இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.
கடுமையான பிதுர்தோஷம் உள்ளவர்கள் இராமேஸ்வரம் கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தத்திலும் நீராடிவிட்டு இந்த சேதுமாதவர் சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வணங்கினால் மட்டுமே கடுமையான பிதுர்தோஷத்தை நீங்கும் என்பது எவருக்குமே தெரியாத தேவரகசியமாகும்.
ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு “பாதாள பைரவர்’ என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.
இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷமான பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்)வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும்.
இராமேஸ்வரம் கோவிலுக்கு செல்பவர்கள் பல நூறு வருடங்கள் பழமையான நீலேஸ்வரர் லிங்கம்.,உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்பு லிங்கம், சேது மாதவர் சன்னிதி மற்றும் பாதாள பைரவர் ஆகிய சன்னிதிகளுக்கு சென்று தரிசித்து பயன்பெறுவதற்காக இந்த விபரங்கள் பதிவிடப்பட்டுள்ளது
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வீடு, மனை விற்பனையில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். மற்றவர்கள் பொருட்களின் மீது ஈர்ப்பு ஏற்படும். புதிய விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். புதுவிதமான வாகனங்கள் மீது ஆர்வம் ஏற்படும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். ஆரோக்கியப் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நீர்வள மேலாண்மை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
ரிஷபம்
உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சக ஊழியர்களிடத்தில் நிதானம் வேண்டும். புதுவிதமான கனவுகள், இலக்குகள் பிறக்கும். சிலரின் அறிமுகங்களின் மூலம் திருப்பம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மிதுனம்
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். மனை சார்ந்த கடனுதவிகள் சாதகமாகும். சிரமம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கடகம்
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்பீர்கள். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளில் தெளிவு பிறக்கும். இடமாற்றம் குறித்த எண்ணங்கள் உண்டாகும். தனவருவாயில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். அசதி மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சிம்மம்
குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாக்குவன்மையின் மூலம் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் உண்டாகும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். அடமானப் பொருட்களைப் பற்றிய சிந்தனைகள் மேம்படும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் தோன்றி மறையும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் சில பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
துலாம்
குழந்தைகளை அரவணைத்து செல்லவும். செயல்பாடுகளால் ஒருவிதமான அசதிகள் தோன்றி மறையும். சக ஊழியர்களால் வருத்தங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சோர்வு விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விருச்சிகம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டத்தின் மதிப்பு உயரும். பிரியமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் முக்கியத்துவம் அதிகரிக்கும். வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
தனுசு
பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். புனிதப் பயணம் சார்ந்த வாய்ப்புகள் கைகூடும். மருத்துவத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் இடத்தில் பொறுமை வேண்டும். மறைமுகமான சில வருமானங்கள் மேம்படும். எதிர்கால முதலீடு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். கௌரவ பொறுப்புகளால் மதிப்பு உயரும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பு உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் புரிதல் ஏற்படும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிவீர்கள். கடன் நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கும்பம்
பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். செயல்களில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். சகோதரர்களுக்குள் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தையிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆராய்ச்சிப் பணிகளில் விவேகம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். சமூகப் பணிகளில் மதிப்பு உயரும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 21 ஆம் தேதி புதன்கிழமை 4.6.2025.
இன்று அதிகாலை 02.05 வரை அஷ்டமி. பிறகு நவமி.
இன்று அதிகாலை 04.52 வரை பூரம். பின்னர் உத்திரம்.
இன்று காலை 11.26 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.
இன்று அதிகாலை 02.05 வரை பவம். பின்னர் பிற்பகல் 02.41 வரை பாலவம். பின்பு கௌலவம்.
இன்று அதிகாலை 04.52 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.00 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
ஒரு பள்ளிக்கூட அதிபர் அதே பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் பள்ளி காவலாளியின் சகோதரியை திருமணம் செய்து கொண்டார். மச்சான் முறை உறவுக்காரராக மாறிவிட்டதால் அவருக்காக அளவுக்கதிக சலுகைகள் வழங்குவதில் ஆர்வம் காட்டினார்.
ஆசிரியர் வராத சந்தர்ப்பத்தில் இவரை அனுப்பி ' மாணவர்களுக்கு பாடம் எடுக்கச் சொல்லி ' பகுதிநேர ஆசிரியராக இவரை நியமித்தார். இப்படி காலம் போகப் போக இவரை முழு நேர ஆசிரியராகவே நியமித்துவிட்டார்.
நாட்கள் நகர அந்த அதிபர் கல்வி அமைச்சு தலைமை அதிகாரியாக பதவி உயர்ந்தார். அவரது மச்சான், காவலாளியை அவர் பாடசாலை அதிபராக பதவி உயர்த்தினார்.
இன்னும் சில நாட்கள் செல்ல, அந்த அதிபர் கல்வி அமைச்சராக பதவி உயர்ந்தார்.அவர் அவரது மச்சானை கல்வி அமைச்சு தலைமை அதிகாரியாக பதவி உயர்த்தினார்.
இப்போது காவலாளியாக இருந்த அவரது மச்சானுக்கு பெரிய அலுவலகம், ஆடம்பர கார், வேலைக்காரர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் என காபி, செய்தி தாள்கள் அவரது மேசையில் வருவதும் போவதுமாக இருந்தன.
ஒரு நாள் அவர் ஒய்யாரமாக அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த போது இப்படியொரு தலைப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
(( கல்வியமைச்சின் பணிபுரியும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை மீள் பரிசீலிக்க கல்வி அமைச்சர் புதிய கமிட்டி ஒன்றை நியமிக்க முடிவு செய்துள்ளார். ))
என்று அந்த தலைப்பு இருந்தது.
தன் நிலைமை அறிந்து பீதியடைந்த காவலாளி உடனே போனில் தொடர்பு கொண்டார்.
'என்ன மச்சான் இது! என் நிலை தெரியும்தானே! என்னை அம்பலப்படுத்தப் பார்க்கிறீர்களா? என்னிடம் சான்றிதழ் எதுவும் இல்லை என்பது தெரியும்தானே 'என்றார்.
அதற்கு அவரது மச்சான் கல்வி அமைச்சர் ; நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம். அந்த விசாரணை கமிட்டிக்கு உங்களைத்தான் தலைவராக நியமிக்க போகிறேன் ' என்று சொன்னவுடன்தான் அவர் கதிரையில் அமர்ந்தார்.
தொலைக்காட்சி விளம்பரங்கள்
தற்போது தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பார்த்தால்
"நாங்கள் ஏமாற்றுவோம், நீங்கள் ஏமாந்துதான் ஆக வேண்டும் என்பது போல இருக்கின்றது.
மூன்று நடிகர்கள் பவ்யமாக சலாம் போட்டு பான்பராக் போடச் சொல்கிறார்கள்.
ரம்மி ஆட்டத்தை தேசீய விளையாட்டாக மாற்ற ஒருபுகழ் பெற்ற நடிகர் முயற்சி செய்கிறார்.
ஒரு காஃபி பொடி விளம்பரத்தில் விளம்பரத்துக்கு கீழே இது கற்பனை சித்தரிப்பு என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு நம்மை குடிக்கச் சொல்கிறார்கள்.
இன்னொரு விளம்பரத்தில் ....
உடம்பில் 10% மட்டுமே ஆடை அணிந்த இளம் பெண்கள் பீச்சில் கும்மாளமிட்டு குதித்து ஓடுகிறார்கள். விளம்பர முடிவில் Innerwear சம்பந்தப்பட்ட ஒரு வார்த்தை மின்னல் வேகத்தில் வந்து மறைகிறது. அவர்களுக்கே அது குற்ற உணர்வாக தெரிகிறது போலும்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடும் ஒரு விளம்பரத்தில் தோனி தடிமனான கண்ணாடி போட்டுக் கொண்டு தன்னை லூசு என்று சொல்லிக் கொள்கிறாரா இல்லை நம்மை லூசு என்று சொல்கிறாரா என்று புரியவில்லை.
மியூச்சுவல் ஃபண்ட் சம்பந்தப்பட்ட விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர்கள் அதை தலையில் தூக்கி வைத்துக கொண்டாடுகிறார்கள்.
ஆனால்... அதற்கு அடுத்தபடியாக வருகின்ற ஒரு அறிவிப்பு அவசர அவசரமாக மணிக்கு ஆயிரம் கி.மீ வேகத்தில், மியூச்சுவல் ஃபண்ட் அபாயச் சந்தைக்கு உட்பட்டவை என்று சொல்லி விட்டு எங்கே அந்த வார்த்தைகள் நம் காதுகளில் விழுந்து விடுமோ என்று அவசர அவசரமாக இடியாப்பம் விற்கிற நபர்களைப் போல் காணாமல் போய் விடுகிறது.
ராமபிரான் ஒரு முறை அரசவையில் அமர்ந்திருந்தார். அப்போது வெளியே நாய் ஒன்று பெருங்குரலில் குரைத்துக் கொண்டிருந்தது. என்னவென்று தெரிந்து வருமாறு ஒரு காவலனை அனுப்பினார். அவன் அந்த நாயைத் துரத்திவிட்டு ஸ்ரீராமரிடம் வந்தான்.
''பிரபோ... காரணமின்றிக் குரைத்த அந்த நாயை இந்தப் பகுதியை விட்டே துரத்தி விட்டேன்!'' என்றான். சற்று நேரம் கழித்து மீண்டும் அந்த நாய் குரைக்க, அதே காவலன் விரைந்து சென்று அதைத் துரத்தினான். இந்த நிகழ்வானது தொடர்ந்து நடந்தது.
ஒரு சந்தர்ப்பத்தில் கவலை அடைந்த ஸ்ரீராமர், லட்சுமணனிடம் "தம்பி... அந்த நாய் மூன்று நாட்களாகத் தொடர்ந்து குரைக்கிறது. நீ போய் காரணம் என்ன வென்று தெரிந்து வா!" என்று அனுப்பினார். லட்சுமணன் வெளியே வந்து குரைக்கும் நாயைக் கண்டான். பின்பு அதை நெருங்கி, ''உன் துயரத்துக்குக் காரணம் என்ன... சொல்!'' என்றான்.
உடனே அந்த நாய், ஈனஸ்வரக் குரலில் பேசத் தொடங்கியது: ''பிரபுவே! கோயில்கள், யாகம் செய்யும் இடம், பிருந்தாவனம், சபை, மடம் மற்றும் புண்ய தீர்த்தம், சமையல்கட்டு ஆகிய இடங்களுக்கு நாங்கள் போகக் கூடாது! அதன் அடிப்படையில் அரசவைக்குள் நான் வரக்கூடாது. எம்பெருமான் ஸ்ரீராமபிரானை வரச் சொல்லுங்கள்!'' என்றது.
இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த லட்சுமணன், நாய் சொன்னதை அப்படியே ஸ்ரீராமரிடம் கூறினான். உடனே ஸ்ரீராமர் வந்தார்.
''எனது ராஜ்யத்தில் காரணமின்றி எவரும் துயரப்படக் கூடாது. ஆகவே, நீ எவ்விதத் தயக்கமும் இன்றி உன் துயரத்தை என்னிடம் சொல்!'' என்றார்.
அந்த நாய் பணிவுடன் அவரை வணங்கி, ''மிக்க நன்றி பிரபு! ஒரு குற்றமும் செய்யாத என்னை, சன்யாசி ஒருவர் கல்லால் அடித்துக் காலை உடைத்து விட்டார். அதை முறையிடவே இங்கு வந்தேன் பிரபு!'' என்றது வேதனையுடன்.
உடனே ஸ்ரீராமர் கனிவான குரலில், ''வருந்தாதே. நான் இப்போதே அந்த சன்யாசியிடம் விசாரிக்கிறேன்!'' என்றார். சற்று நேரத்துக்குள் அந்த சன்யாசி அங்கு வரவழைக்கப்பட்டார். ஸ்ரீராமர் அவரை நோக்கி, ''ஸ்வாமி... நீர் எதற்காக இந்த நாயைக் கல்லால் அடித்தீர்?'' என்று விசாரித்தார்.
அதற்கு சன்யாசி, ''பிரபு! நான் பிட்சை வாங்கி வரும்போது, இந்த நாய் எனது பிட்சான்னத்தைத் தொட்டது. அப்போது நான் மிகவும் பசியுடன் இருந்ததால் இந்த நாய் மீது எனக்குக் கோபம் ஏற்பட்டது. எனவே, அதன் மீது கல் எறிந்தேன்!'' என்றார்.
ஸ்ரீராமர் புன்னகை மாறாத முகத்துடன் அவரை நோக்கி, ''ஸ்வாமி, இது வேடிக்கையாக இருக்கிறது. இந்த நாய், ஐந்தறிவு படைத்த பிராணி. இதை உணராமல், அதை அடித்த உமது செயல் கண்டிப்பாகக் குற்றமே. எனவே நீர், அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்!'' என்று கூறியவர் நாயின் பக்கம் திரும்பி, ''இந்த சன்யாசி உன் விஷயத்தில் குற்றவாளி என்பதால், இவரை தண்டிக்கும் பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கிறேன். நீ என்ன சொன்னாலும், அதை நிறைவேற்றச் சித்தமாக இருக்கிறேன்!'' என்றார்.
அப்போது அந்த நாய் ஸ்ரீராமரிடம், ''நன்றி பிரபு! இவரை ஒரு சிவாலயத்தில் அதிகார வேலையில் அமர்த்துங்கள். இதுவே நான் அவருக்கு அளிக்கும் தண்டனை!'' என்றது. ஸ்ரீராமரும் அதற்குச் சம்மதித்தார்.
தனக்குப் பெரிய பதவி கிடைத்த மகிழ்ச்சியில் சன்யாசியும் திருப்தியுடன் அங்கிருந்து வெளியேறினார். நாயும் மன நிறைவுடன் அகன்றது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மக்கள், ஸ்ரீராமரை வியப்புடன் நோக்கினர். ''பிரபுவே... அன்னத்துக்கு அலையும் அந்த சன்யாசிக்கு இது அதிர்ஷ்டமே அன்றி, தண்டனையல்ல. இதனால் அவர் மேலும் சுகம் அடையப் போகிறார். அது சரி... நாய் ஏன் இவ்வாறு கேட்டுக் கொண்டது?'' என்று ஏகோபித்த குரலில் கேட்டனர் அவர்கள்.
அதைச் செவிமடுத்த ஸ்ரீராமர், அந்த நாயை அழைத்து வருமாறு தன் காவலரிடம் கூறினார். நாயும் வந்தது. இப்போது நாயிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அந்த நாய், ''ஜனங்களே, சிவாலயத்தில் அதிகாரி வேலை என்று அந்த சன்யாசிக்கு நான் அளித்தது முள்ளின் மேல் நிற்கிற ஒரு பணி. என்ன, புரியவில்லையா? இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள்’’ என்று ஆரம்பித்துச் சொன்னது:
‘‘சிவாலயம், மடம், கிராமம் போன்றவற்றில் தவறு செய்யும் அதிகாரிகள், பசு, அந்தணர், அநாதை ஆகியோரின் செல்வத்தை அபகரிப்பவர்கள், அரசனது வீட்டில் இருந்து கொண்டு அங்கு வரும் யாசகர்களைத் தடுப்பவர்கள், அந்தணரின் போஜனப் பொருட்களை அபகரிப்பவர்கள் ஆகியோர் மறு ஜென்மத்தில் கண்டிப்பாக நாயாகப் பிறப்பார்கள். சென்ற பிறவியில், நான் தவறு இழைத்த ஒரு மடாதிபதியாக இருந்ததால், இப்போது நாயாகப் பிறவி எடுத்துள்ளேன். எனவேதான், சன்யாசிக்கு இப்படி ஒரு தீர்ப்பு சொன்னேன்! இந்த ஜென்மத்தில் என்னிடம் பாவம் கட்டிக் கொண்ட சன்யாசி, சிவாலயப் பணியில் இருந்தாலும், வினை காரணமாக மீண்டும் பாவம் செய்து நாயாகப் பிறப்பார்!''
அங்கு கூடியிருந்த அனைவரது சந்தேகமும் தீர்ந்தது. சிவாலயத்தில் பொறுப்பேற்ற சன்யாசி, தனது நேர்மையற்ற செயல்களால் மறுபிறவியில் நாயாகப் பிறந்தார். அவருக்கு தண்டனை அளித்த நாய், தனது பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்துவிட்டு அடுத்த பிறவியில் உயர் நிலையை அடைந்தது.
ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது.ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தார்.
ஆச்சர்யம்..! அவருக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்..!!
கடுப்பானவர் அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினார்
மறுபடியும் ஆச்சர்யம்… வீட்டில் நாய்..!!
மூன்றாம் நாள்…
காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவர், காரை எங்கெங்கோ செலுத்தினார்.வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தார்.ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினார்.
இடப் பக்கம் திரும்பினார். வலப் பக்கம் வளைந்தார்.
இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு,வேகமாக காரைக் கிளப்பிக் கொண்டு புறப்பட்டார்.
வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, உன் நாய் வீட்டில் இருக்கிறதா..? என்று கேட்டார்.
இருக்கிறதே..! ஏன் கேட்கிறீர்கள்..? என்றார் மனைவி
*அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*