Posts
Latest Posts
உலகம் இப்படித்தான் ஓடுகிறது
  •  ·  sivam
  •  · 
ஒரு பள்ளிக்கூட அதிபர் அதே பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் பள்ளி காவலாளியின் சகோதரியை திருமணம் செய்து கொண்டார். மச்சான் முறை உறவுக்காரராக மாறிவிட்டதால் அவருக்காக அளவுக்கதிக சலுகைகள் வழங்குவதில் ஆர்வம் காட்டினார்.ஆசிரியர் வராத சந்தர்ப்பத்தில் இவரை அனுப்பி ' மாணவர்களுக்கு பாடம் எடுக்கச் சொல்லி ' பகுதிநேர ஆசிரியராக இவரை நியமித்தார். இப்படி காலம் போகப் போக இவரை முழு நேர ஆசிரியராகவே நியமித்துவிட்டார்.நாட்கள் நகர அந்த அதிபர் கல்வி அமைச்சு தலைமை அதிகாரியாக பதவி உயர்ந்தார். அவரது மச்சான், காவலாளியை அவர் பாடசாலை அதிபராக பதவி உயர்த்தினார்.இன்னும் சில நாட்கள் செல்ல, அந்த அதிபர் கல்வி அமைச்சராக பதவி உயர்ந்தார்.அவர் அவரது மச்சானை கல்வி அமைச்சு தலைமை அதிகாரியாக பதவி உயர்த்தினார்.இப்போது காவலாளியாக இருந்த அவரத
நாயாக பிறவி
  •  ·  sivam
  •  · 
ராமபிரான் ஒரு முறை அரசவையில் அமர்ந்திருந்தார். அப்போது வெளியே நாய் ஒன்று பெருங்குரலில் குரைத்துக் கொண்டிருந்தது. என்னவென்று தெரிந்து வருமாறு ஒரு காவலனை அனுப்பினார். அவன் அந்த நாயைத் துரத்திவிட்டு ஸ்ரீராமரிடம் வந்தான்.''பிரபோ... காரணமின்றிக் குரைத்த அந்த நாயை இந்தப் பகுதியை விட்டே துரத்தி விட்டேன்!'' என்றான். சற்று நேரம் கழித்து மீண்டும் அந்த நாய் குரைக்க, அதே காவலன் விரைந்து சென்று அதைத் துரத்தினான். இந்த நிகழ்வானது தொடர்ந்து நடந்தது.ஒரு சந்தர்ப்பத்தில் கவலை அடைந்த ஸ்ரீராமர், லட்சுமணனிடம் "தம்பி... அந்த நாய் மூன்று நாட்களாகத் தொடர்ந்து குரைக்கிறது. நீ போய் காரணம் என்ன வென்று தெரிந்து வா!" என்று அனுப்பினார். லட்சுமணன் வெளியே வந்து குரைக்கும் நாயைக் கண்டான். பின்பு அதை நெருங்கி, ''உன் துயரத்து
வழி தெரியலை....
  •  ·  sivam
  •  · 
ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது.ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தார்.ஆச்சர்யம்..! அவருக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்..!!கடுப்பானவர் அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினார்மறுபடியும் ஆச்சர்யம்… வீட்டில் நாய்..!!மூன்றாம் நாள்…காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவர், காரை எங்கெங்கோ செலுத்தினார்.வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தார்.ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினார்.இடப் பக்கம் திரும்பினார். வலப் பக்கம் வளைந்தார்.இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு,வேகமாக க
மது அருந்துபவர்களை மீட்கும் கோவில்
  •  ·  sivam
  •  · 
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அமைந்துள்ள விராலிப்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை கருப்பு சுவாமி கோவில்.இந்த கோவிலில் வத்தலகுண்டு சுற்று வட்டார பகுதி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் வருகை தந்து வழிபடுவதுடன் எண்ணற்ற வேண்டுதல்களையும் வைத்து செல்கின்றனர்அந்த வகையில் இந்த கோட்டை கருப்புசாமி கோவிலில் மது அருந்தும் நபர்கள் ஒரு முறை வந்து சாமியிடம் மது அருந்த மாட்டேன் என்று சத்தியம் செய்து கோவில் பூசாரியிடம் கயிறு கட்டி சென்றால் அத்துடன் மது அருந்துவதை விட்டுவிடுவார்கள் என கூறப்படுகிறது.இதனால் குடும்ப பெண்கள் தங்களது வீட்டில் உள்ள ஆண்கள் மது அருந்துவதை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையின்போது இந்த க
27 பேர் மட்டுமே வசிக்கும் நாடு
  •  ·  sivam
  •  · 
   மொத்தமே 27 பேர் மட்டுமே வசிக்கும் ஒரு நாட்டில் அவர்களுக்கென சொந்தமாக கால்பந்தாட்ட அணி மற்றும் ராணுவம் உள்ளதை நம்ப முடிகிறதா?   ஆனால் அப்படி ஒரு நாடு இன்றளவிலும் செயல்பட்டு வருகிறது.   பிரிட்டனுக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு கடல் பகுதியில் அமைந்துள்ள சீலேண்ட் (Sealand) என்ற நாடு தான் அத்தகைய ஆச்சரியத்தை கொடுக்கும் நாடாக உள்ளது.   இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மன் படைகளை எதிர்த்து போராடுவதற்கு இங்கிலாந்து சீலேண்டை போர்படை தளமாக பயன்படுத்தியது.   1967ம் ஆண்டு ராய் பேட்ஸ் என்பவர் இந்த கடல் தளங்களில் ஒன்றை கைப்பற்றி அதை சீலேண்ட் என்ற பெயரில் சொந்த நாடாக அறிவித்தார்.   அன்று முதல் பேட்ஸின் குடும்பம் அங்கு அரச குடும்பமாக உள்ளது. ஒரு சிறிய கட்டிடம் மற்றும் அதன் மேல்பகுதியில் ஹெலிகாப்டர் தரை
சுவாரஸ்யமான மறுபிறவி வழக்கு  (உண்மைச்சம்பவம்)
  •  ·  sivam
  •  · 
இந்தியாவை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் சேர்ந்த அறிஞர்களையும் விமர்சகர்களையும் சிந்திக்க வைத்த பெண்மணி சாந்தி தேவி. சாந்தி தேவி டிசம்பர் 11, 1926 அன்று டெல்லியில் பிறந்தார். மூன்று வருடங்களாக அவரால் பேச முடியவில்லை என்றாலும், நான்கு வயதாகியவுடன், தான் வசித்து வந்த வீடு தனது உண்மையான வீடு அல்ல என்று கூறத் தொடங்கினார். மாறாக, அவரது உண்மையான வீடு டெல்லியில் இருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள மதுராவில் உள்ளது. விஷயம் இத்துடன் முடிவடையவில்லை. சாந்தி தேவி தனது கணவர் மற்றும் தனது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி தனது பெற்றோரிடம் கூறினார். அவர்களின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி யாராவது இவ்வளவு ஆழமாகப் பேச முடியுமா? மதுராவில் வசிக்கும் தனது கணவர் ஒரு துணிக்கடை வைத்திருப்பதாக சாந்தி தேவி கூறியிருந்தார்.அவள் த
விளாடிமிர் புடின்   (உண்மைச்சம்பவம்)
  •  ·  sivam
  •  · 
இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்து, சில வாரங்களுக்குப் ஒரு பிறகு, ஒரு ரஷ்ய வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது.தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் வந்தடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதைப் பார்த்ததும், எதிரிகள் தனது நகரத்தில் குண்டு வீசியுள்ளனர் என்பதைப் புரிந்துக் கொண்டார்.பல நூறுக் கணக்கில் சடலங்கள் கூட்டுக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன. அடுக்கப்பட்ட சடலங்களின் முன்னால் அந்த சிப்பாய் சற்றுநேரம் நின்றார்.ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த பாதணிகளை அவர் திடீரெனக் கவனித்தார். முன்பொரு நாள் தனது மனைவிக்காக வாங்கி வந்த சப்பாத்து போல் இருந்தது.உடனே வீட்டுக்கு ஓடினார். வீட்டில் யாரும் இல்லை. வேகமாகத் திரும்பி வந்து
பொய்
  •  ·  sivam
  •  · 
ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து  இயங்கிவரும்  ஒரே ஒரு மாநகரம்
  •  ·  sivam
  •  · 
உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கிவரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது.ஆனால் சுமார்6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் “மதுரை “தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள்.நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை *”The World’s only living civilization”* என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் “The Sto
இன்றைய ராசி பலன்கள் - 3.6.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
இன்றைய நாள் எப்படி?  - 3.6.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 3.6.2025.இன்று அதிகாலை 01.22 வரை சப்தமி. பிறகு அஷ்டமி.இன்று அதிகாலை 03.27 வரை மகம். பின்னர் பூரம்.இன்று காலை 11.45 வரை ஹர்ஜனம். பின்னர் வஜ்ரம்.இன்று அதிகாலை 01.22 வரை வணிசை. பின்னர் பிற்பகல் 01.44 வரை பத்தரை. பின்பு பவம்.இன்று அதிகாலை 03.27 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.00 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
யார் அவர்?
  •  ·  sivam
  •  · 
சுற்றுலா பயணிகளை அவரவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு டூர் அனுப்பி வைக்கும் டிராவல் ஏஜென்சியின் உரிமையாளர் ரமேஷ் மிகுந்த சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தான்.அந்த மாதத்திற்கான அனைத்து டூர் பேக்கேஜ்களும் நிரம்பி இருந்தன. அடுத்த மாதத்தில் எந்தெந்த இடங்களுக்கு டூர் பேக்கேஜ் போடலாம் என யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அலுவலகத்திற்கு வெளியே தயக்கத்துடன் நின்றிருந்த ஒரு முதிய தம்பதியினர் கண்களில் பட்டனர்.உற்றுக் கவனித்தான்.இருவரும் ஒட்டி நிற்காமல் தள்ளி தள்ளி நின்று அலுவலக முகப்பு கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த டூர் பேக்கேஜ் லிஸ்ட்டுகளை வாசித்து கொண்டிருந்தார்கள்.வாசித்து முடித்து டூர் பேக்கேஜுக்கான விலையை பார்த்ததும் இருவரும் பெருமூச்சு விட்டார்கள்.ரமேஷுக்கு புரிந்து போனத