Posts
Latest Posts
அவசரக்காரன்
  •  ·  sivam
  •  · 
அவசரக்காரன்- ஒரு நகைச்சுவை கதை ..........*ஒரு கணவன் மனைவிக்குள் வாக்குவாதம்*....சிறிய சச்சரவு...பெரிதாகி...கடந்த மூன்று நாட்களாக இருவருக்கும் பேச்சு வார்த்தையில்லை..இது நீடிக்கவே...எ மனைவி அவள் கணவன் எதிரில் வந்து...நான் இப்போது 10 வரை எண்ணுவேன் ! அதற்குள் நீங்கள் பேசவில்லை என்றால்....நான் எனது அம்மா வீட்டிற்குப் போய் விடுவேன்.அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.. அவன் அதைத் தான் எதிர்பார்த்திருந்தான்.அவள் எண்ணத் துவங்கினாள் .... ....*மனைவி* - 1 ... 2 ... 3 ...*கணவன்* - (அமைதி) ... !*மனைவி* - 4 ... 5 ...*கணவன்* - (மவுனம்)*மனைவி* - 6 ... 7...*கணவன்* - (அவன் மனதில் மகிழ்ச்சி... ஆனாலும் அமைதி)உச்சகட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது ...*மனைவி* - 8 ... 9 ...*கணவன்* - (மனதில் எல்லையற்ற மகிழ்ச்சி ...)*மனை
வெற்றிப்பாதையை கண்டறிவோம்
  •  ·  sivam
  •  · 
நடந்து போன செயல்களில் ஏற்பட்ட தோல்விகளை விட்டு விட்டு இனி நடக்கப் போகும் செயல்களை எப்படி வெற்றிகரமாகச் செயல்படுவது என்று முடிவு செய்ய வேண்டியது நாம் தான். அது தான் உண்மை. எத்தனைத் துன்பங்கள் வந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு மீண்டு எழுந்து வரத்தான் வேண்டும்.மனிதனுக்குத் துன்பம் வரும் பொழுது தான் மூளை அதிலிருந்து விடுபட சுறுசுறுப்பாக இயங்கி வழியைக் காண்கிறது.ஆகவே துன்பம் வரும் போது துவண்டு விடாமல் சுறுசுறுப்பாய் இயங்க வேண்டும்.மனோதிடம் இருந்தால் எந்தச் சூழ்நிலையையும் எளிதில் சமாளித்து விடலாம் என்பதை அவ்வப்போது நினைவூட்டுகின்றனர் நம்மைச் சுற்றியிருக்கும் சிலர்.ஜப்பானைச் சேர்ந்த கோட்டானி மகோட்டோ, என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி டோக்கியோ நகரத்திற்கு வந்தார். குடியிருக்க வீடு
இப்படியும் ஒரு வில்லத்தனம்
  •  ·  sivam
  •  · 
மரணப் படுக்கையில் இருந்த மிகப்பெரிய பணக்காரர் ஒருவருக்கு தன்னுடைய சொத்துக்கள் மீது உயில் எழுத வேண்டும் என்கிற எண்ணம் எழுந்தது.உடனே அவருடைய வழக்கறிஞரை அழைத்தார். வழக்கறிஞரும் அவருடைய இடத்திற்கு விரைந்து வந்தார்.வழக்கறிஞரிடம் அந்த பணக்காரர் சொன்னார்,'சார்..! மனித காயம் அநித்யமானதுன்னு உணர்றேன். வாழ்ந்தபோது கெட்டவழிகள்ல நிறைய பணம் சம்பாதிச்சு இருக்கேன். அதுக்கெல்லாம் பிராயச்சித்தம் தேட விரும்புறேன். அதனால நான் சொல்றபடி உயில் எழுதுங்க சார்'வழக்கறிஞர் எழுத தயாரானார். அந்த பணக்காரர் சொன்னார்,'என்னுடைய சொத்தில் 25 சதவீதம் பக்கத்து ஊரில் இருக்கும் ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு செல்ல வேண்டும்'அந்த பணக்காரரின் தயாள குணத்தை பாராட்டிக் கொண்டே வழக்கறிஞர் உயில் எழுதினார்.'அடுத்த 25 சதவீதத்தை என் மகன்கள் இருவரு
இன்றைய ராசி பலன்கள் - 24.6.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்குழந்தைகள் ஒத்துழைப்பாகச் செயல்படுவார்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொள்வீர்கள். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு ரிஷபம்விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய விஷயங்களால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். ஜாமீன் விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சற்று கவனத்தோடு செயல்பட வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளா
இன்றைய நாள் எப்படி?  - 24.6.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 24.6.2025.இன்று மாலை 06.56 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.இன்று பிற்பகல் 12.52 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.இன்று காலை 09.56 வரை சூலம். பின்னர் கண்டம்.இன்று காலை 08.01 வரை பத்தரை . பின்னர் மாலை 06.56 வரை சகுனி. பின்பு சதுஷ் பாதம்.இன்று பிற்பகல் 12.52 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்நல்ல நேரம்:காலை : 10.30 முதல் 11.30 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
நேர்மை தந்த வேலை
  •  ·  sivam
  •  · 
காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள். நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் விவரத்தை கூறிவிட்டு ஹாலில் அமர்ந்து நேர்காணல் அழைப்புக்கு காத்திருந்தேன். சற்று நேரத்தில் முருகவேல் என்று அழைப்பு வந்தது. உள்ளே சென்றவுடன் சில கேள்விகள் கேட்டு விட்டு " உங்கள் பயோடேட்டாவில் வயது 40 என்று இருக்கே நிஜமா ?""ஆமாம் சார் உண்மை தான்.""அப்படியா ..? எங்கள் நிறுவனத்தில் இளைஞர்களை தான் வேலைக்கு எடுக்கின்றோம். உங்கள் வயது 40 என்று சொல்கிறீர்கள் . கொஞ்சம் யோசனை செய்ய வேண்டி இருக்கும் முருகவேல்" என்றார்கள்."பரவாயில்லை சார் நான் வேலை செய்ய தயாராக இருக்கிறேன்" என்று கூறினேன். மேலும் "இதற்கு முன் வேலை செய்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால் திடீர் என்று மூடிவிட்டார்கள். அதனால் வேற
சிந்திப்போமா?
  •  ·  sivam
  •  · 
எடுக்காத போன்கால்கள் சில வாழ்வுகளை முடித்துவிடும்..சொல்லாத பாராட்டுக்கள் சிலர் துயருக்குள் கொண்டு விடும்.நடக்காத சந்திப்புகள் நட்புகளையே பிரித்துவிடும்..நடிகர் சுஷாந்த் இறக்குமுன் ப்ரியப்பட்ட யாருக்கோ போன் செய்திருக்கிறார். நண்பனோ அல்லது காதலியோ...அந்த போனை எடுத்து பேசி இருந்தால் ஒரு வேளை சுஷாந்த் இன்று உயிருடன் இருந்திருக்கலாம்...சில்க் ஸ்மிதா நடிகையாக வளர்ந்த காலத்தில் அவருக்கு போட்டியாக இறங்கியவர் அனுராதா. அனுராதாவுக்கும், சில்க்குக்கும் ஆகவே கூடாதென கங்கணம் கட்டி பரப்பப்பட்ட வதந்திகளால் சில்க் அனுராதாவோடு பேசுவதேயில்லை.ஒரு காலகட்டத்தில் சில்க்கின் சொந்தப்படத்தில் அனுராதா நடிக்க சென்றபோது இருவரும் நட்பாகி தோழிகளாகினர். வாடி போடி என அழைக்கும் நட்பாகி மனம் விட்டு பேசிக்கொள்ளும் அளவுக்கு வளர
வியக்க வைக்கும் மனிதர்
  •  ·  sivam
  •  · 
வியந்து பார்க்கும் மனிதர்களில் இவர் ஒருவர். பிரதாப் சி ரெட்டி. பெயர் சொன்னாலே போதும். அப்பல்லோ குழுமத்தின் சேர்மன்.92 வயது நம்ப முடிகிறதா? இன்றும் பத்து மணிக்கு அலுவலகம் வருகிறார் 5 மணி வரை பணி செய்கிறார் வாரத்தில் ஆறு நாட்களும் இப்படி வேலை பார்க்கிறார்!அப்பல்லோ மருத்துவமனையை துவக்கியவர் இவரே. நாடெங்கிலும் 71 மருத்துவமனைகள் இவருக்கு சொந்தம். 5000க்கும் அதிகமான ஃபார்மசிகள் இவருக்கு இருக்கின்றன. இவரது பேத்தி உபாசனா காமினேனியை தான் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ராம்சரண் தேஜா மணம்முடித்திருக்கிறார்.சர்வதேச தரத்தை அகில உலக அளவில் மதிப்பிடுகையில் குறைந்த விலையில் நல்ல விதமான சேவையை அப்பல்லோ நிறுவனம் தந்திருக்கிறது. இன்றும் தந்து கொண்டிருக்கிறது.ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து அமெரிக்கா சென்று
கண் பார்வை பிரச்சனைகளுக்கு சில எளிய தீர்வுகள்
  •  ·  sivam
  •  · 
இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், பலருக்கும் கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளது. இதற்கு நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சியின் முன் இருப்பது தான் முக்கிய காரணம் என்பது அனைவருக்குமே தெரியும்.ஒருவரது கண்பார்வை பலவீனமாவதற்கு மரபணுக்கள், முதுமை, கண்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அல்லது போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை போன்றவற்றால் கூட இருக்கலாம்.அதிலும் மங்கலான பார்வை, கண்களில் இருந்து நீர் வடிதல் அல்லது நாள்பட்ட தலைவலி போன்றவை பலவீனமான கண்பார்வையின் அறிகுறிகள். இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், அதனால் பல்வேறு தீவிர பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.ஆயுர்வேதத்தின் படி, ஒருவரின் உடலில் பித்தமானது சமநிலையற்று இருந்தால், கண்பார்வை பலவீனமாகக்கூடும். எனவே இந்த பித்தத்தை சமநிலையா
பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்
  •  ·  sivam
  •  · 
வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.பயன்கள்.:ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சு
கோயில் குளத்தில் காசு போடலாமா?
  •  ·  sivam
  •  · 
பழமையான கோயில்களில் கோயில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதையும், நம் கண் முன்னே பலரும் காசு போடுவதையும், நாம் கண்டிருப்போம்.இது போன்று கோயில் கிணற்றில் காசு போடப் பட்டதின் காரணத்தைப் பற்றி தெரிந்து கொள்வோமா?பழமையான காலங்களில் புழக்கத்தில் இருந்த காசுகள் பெரும்பாலும் செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்டது.மண், நீர், காற்று ஆகியவற்றில் இயற்கையாகவே செம்பு உலோகம் உருவாகிறது. இவ்வளவு ஏன், நம் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு சில உலோகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. செம்புபாத்திரத்தில் தண்ணீர் அருந்தும் பழக்கம் அந்த காலத்தில் இருந்தது. பழங்காலத்தில் குளம், குட்டைகளில் இருந்தும், கிணறுகளிலிருந்தும் தான் தண்ணீர் எடுத்து வந்துள்ளனர்.அப்படி எடுத்து வரும் தண்ணீரை அருந்துவதற்கு செம்பு கலந்த பின
மனம் என்னும் அற்புதம்
  •  ·  sivam
  •  · 
மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் ஒரே மண்னைத் தின்று ஒரே தண்ணீரைக் குடித்து வளர்கின்றன.ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும், வேப்ப மரம் கொடுக்கும் பழத்திற்கும் ருசியில் வேறுபட்டது இருப்பது போல.நாம் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் தான்.ஒரே நீரைத் தான் அருந்துகிறோம், ஒரே காற்றைத் தான் சுவாசிக்கிறோம். ஆனால் வழியில் எதை சேகரித்து நம்மில் உள்ளடக்கமாக அமைத்துக் கொள்கிறோமோஅதைப் பொறுத்துத்தான் நம்முடைய தன்மை வெளிப்படும்.நாம் எதை சேர்க்கிறோம் அற்பமானதையா? இல்லை அற்புதத்தையா ?அற்பமானது என்னும் ஆறு குணங்கள்1. பேராசை2. சினம்3. கடும்பற்று4. முறையற்ற பால்கவர்ச்சி5. உயர்வு தாழ்வு மனப்பான்மை6.வஞ்சம்அற்புதம் என்னும் ஆறு குணங்கள்1. நிறை மனம்2. பொறுமை3. ஈகை4. கற்பு நெறி5. சம நோக்கு6. மன்னிப்புஇவை அன