Latest Posts
- · sivam
- ·
ரத்தினகிரியை ஆண்ட ரத்தினசேனன் ஒரு பெரிய விருந்து அளித்தான். அப்போது பொழுதைக் கழிக்கத் தன் பக்கத்திலேயே தன் விதூஷகனையும் (அவை விகடகவி) சாப்பிட உட்கார வைத்துக்கொண்டான்.விருந்தில் லட்டு பரிமாறப்பட்டது. பரிமாறுபவர் தவறுதலாக விதூஷகன் இலையில் மட்டும் லட்டு வைக்க மறந்துவிட்டார். தனக்கு லட்டு இல்லை என்பதைக் கண்ட விதூஷகன், அரசனிடம் தந்திரமாக ஒரு கேள்வி கேட்டான்."அரசே, திடீரென இடி இடித்து உங்கள் எல்லோர் தலை மீதும் விழுந்தால் என்ன செய்வீர்களாம்?" என்று கேட்டான்.அரசன் சிரித்துக்கொண்டே, "எல்லோர் தலையிலும் விழும் இடி உன் மீது மட்டும் விழாதா?" என்று கேட்டான்.அதற்கு விதூஷகன், "விழாது. நானே ஒரு தனிப்பிறவி. பாருங்களேன்... உங்கள் எல்லோர் இலையிலும் லட்டு விழுந்தது, ஆனால் என் இலையில் மட்டும் விழவில்லையே!" என்றான
- · sivam
- ·
திருமணமான பெண் ஒருத்தி தன் தாயாரைத் தேடி வந்தாள். அவளுடைய முகம் வருத்தமுற்றிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன.தாயார் தன் மகளைப் பார்த்து, 'என்ன விஷயம்?' என்று விசாரித்தார். மகள் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக தயாரிடம் சொன்னாள். இவற்றிலிருந்து எப்படி விடுபடப் போகிறேன் என்று தெரியவில்லை என்று கூறி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் மகள்.இவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட தாயார், தன் மகளை சமையலறைக்கு அழைத்துச் சென்றார். மூன்று பாத்திரங்களில் தண்ணீரை ஊற்றி, எரியும் அடுப்பிலே அதையெல்லாம் எடுத்து வைத்தார்.சிறிது நேரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. ஒரு பாத்திரத்திலே கேரட்டை எடுத்துப் போட்டார். மற்றொரு பாத்திரத்தில் முட்டையை போட்டார். இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் காப்பித்தூளை போட்டார்.அ
- · sivam
- ·
ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது.‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்', என்றது.‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சிப்பதில் தவறில்லை. ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு', என்றார் சாது.தலையசைத்து விட்டு பறந்தது பறவை. பக்கத்தில் இருந்த சீடனிடம் பேசினார் சாது.‘சீடனே! முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்', என்றார் சாது.ஒரு வாரத்தி
- · sivam
- ·
காட்டில், ஒரு சிங்கமும், மானும் நண்பர்களாக இருந்தன. இரண்டும் தங்கள் நட்பிற்காக, ஓர் ஒப்பந்தம் போட்டிருந்தன.'நீ தான், என் உணவு என்றாலும், ஒரு போதும் உன்னை சாப்பிட மாட்டேன்...' என்றது, சிங்கம்.'உனக்கு என்ன ஆபத்து வந்தாலும் காப்பாற்றுவேன்...' என சத்தியம் செய்தது, மான். அந்த மானை குருவாக கொண்டிருந்தது, ஒரு சிறிய மான் குட்டி.இந்நிலையில், நான்கு நாட்களாக சிங்கத்தை காணாமல், பல இடங்களில் தேடி வந்தது, மான்.சிஷ்யனான குட்டி மான் ஓடிவந்து, 'உங்கள் நண்பர், ஒரு வலையில் மாட்டிக் கொண்டிருக்கிறார். என்னால், அந்த வலையை அறுக்க முடியவில்லை. உடனே வாருங்கள்...' என அழைக்க, ஒப்பந்தப்படி சிங்க நண்பனைக் காப்பாற்றச் சென்றது, மான்.பலவீனமான குரலில், 'ஒரு வேடன் விரித்த வலைக்குள் மாட்டிக் கொண்டு, நான்கு நாட்களாக தவிக்கிற
- · sivam
- ·
நாகப்பட்டினம் பொருள்வைத்தசேரி கிராமத்தில் வசித்த சிற்பி சிறந்த முருக பக்தர். அழகன் முருகனின் சிலையை வடிக்க வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையாய், சோழ அரசர் (அவ்வூரை அப்போது ஆண்டவர் - பெயர் குறிப்பு இல்லை) சிற்பியை அழைத்து முருகன் சிலை வடிக்க ஆணையிட்டார்.சிற்பியும் ஆனந்தமாய் பக்தியுடன் முருகன் சிலையை வடிக்கலானார். சிலநாட்கள் சென்றன, அரசன் நகர்வலம் செல்லும் சமயத்தில் சிற்பியின் முருக சிலைக்கு உயிர் ஓட்டம் உள்ளதை கண்டு அதிசயித்தார்.சோழர்கள் ஆட்சி அதுவும் தன் ஆட்சியில் உருவாக்கப் பட்ட இந்த சிலை போல் வேறெங்கும் இருக்கக் கூடாது என எண்ணிய அரசர், சிற்பியின் கட்டை விரலை வெட்டிவிட்டார்.சோழமன்னரால் சிற்பியின் கைகட்டைவிரலை வெட்டி ஊனமாக்க முடிந்ததே தவிர, சிற்பியின் தெய்வீக திறமையை மனதுண
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும்.ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.மிதுனம்: இங்கிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அக்கம்பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவ
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மாசி மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 27.2.2026இன்று அதிகாலை 12.54 வரை தசமி. பின்னர் இரவு 10.50 வரை ஏகாதசி. பின்பு துவாதசி.இன்று காலை 11.05 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.இன்று இரவு 07.59 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.இன்று அதிகாலை 12.54 வரை கரசை. பின்னர் காலை 11.22 வரை வணிசை. பின்பு இரவு 10.50 வரை பத்தரை. பிறகு பவம்.இன்று காலை 06.28 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 09.30 முதல் 10.30 மணி வரைபகல் : 12.30.30 முதல் 01.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்: வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.ரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மனநிம்மதி கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். போட்டிகளை தகர்த்தெறிந்து வியாபாரத்தில் வெற்றி பெறுவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.மிதுனம்: குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் விவாதங்கள் வேண்டாம். வீடு, வாகனத்தை மாற்றும் முயற்சியில் இறங்குவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபார போட்டிகளை சமாளித்த
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மாசி மாதம் 14 ஆம் தேதி வியாழக்கிழமை 26.2.2026இன்று அதிகாலை 03.06 வரை நவமி. பின்னர் தசமி.இன்று பிற்பகல் 12.34 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.இன்று அதிகாலை 01.53 வரை விஸ்கம்பம். பின்னர் இரவு 10.52 வரை ப்ரீதி. பிறகு ஆயுஷ்மான்.இன்று அதிகாலை 03.06 வரை கௌலவம். பின்னர் பிற்பகல் 02.00 வரை தைத்தூலம். பிறகு கரசை.இன்று காலை 06.28 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.நல்ல நேரம்:காலை : 10.30 முதல் 11.30 மணி வரைபகல் : 12.30 முதல் 01.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்துடோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம் .அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது.3. அன்னத்தால் பிராணனையும் பிராணனால் பலத்தையும் பலத்தால் தவத்தையும் தவத்தால் சிரத்தையையும் சிரத்தையால் புத்தியையும் மனத்தால் சாந்தியால் சித்தத்தையும் சித்தத்தால் நினைவால் ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னத்தைக் கொடுப்பது இவை எல்லாவற்றையும் கொடுத்தாகிறது. என தைத்ரீயோபநிஷ்த் கூறுகிறது. எனவே முடிந்த போது முடிந்த அளவிற்க
- · sivam
- ·
சோமு' என்பவர் ஒரு மாட்டு வண்டி ஓட்டுபவர். அவர் மிகவும் நேர்மையானவர். ஒரு நாள் இரவு, பக்கத்து ஊர் சந்தைக்குப் பொருட்களை ஏற்றிக்கொண்டு தன் வண்டியில் சென்று கொண்டிருந்தார். அன்று மழை பெய்து ஓய்ந்திருந்ததால் சாலை மிகவும் வழுக்கலாக இருந்தது.திடீரென்று, ஒரு வளைவில் செல்லும்போது வண்டியின் அச்சு முறிந்துவிட்டது. வண்டி அங்கேயே நின்றது. சோமுவிற்கு மிகவும் கோபம் வந்தது. "ஈசா! உனக்குக் கண்ணே இல்லையா? இந்த நேரத்தில் பார்த்து இப்படி வண்டி உடைய வேண்டுமா? இப்போது நான் எப்படி சந்தைக்குப் போவேன்? என் பிழைப்பு என்னாகும்?" என்று புலம்பினார்.வண்டியைச் சரி செய்ய வழியில்லாததால், வேறு வழியின்றி சாலையோரம் அமர்ந்துவிட்டார். தான் செய்த ஏதோ ஒரு பிழைதான் வண்டி உடையக் காரணம் என்று அவர் வருந்தினார்.அறியாமல் செய்த செயலின்
- · sivam
- ·
நான் Uber ஓட்டுகிறேன். பெரும்பாலும் இரவு டியூட்டி. கடந்த வாரம் இரவு 11 மணிக்கு ஒரு முதியவர் அழைப்பை ஏற்றேன். அவர் காரில் ஏறி,“இன்றிரவு என்னை ஐந்து இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நான் உங்களுக்கு $500 தருகிறேன். காசாக. ஆனால் முடியும் வரை ஏன் என்று கேட்கக்கூடாது,” என்றார்.ஐந்து முகவரிகள் கொடுத்தார்.முதல் இடம்: புறநகர் பகுதியில் ஒரு வீடு.அவர் காரிலேயே இருந்தார். அந்த வீட்டைப் பார்த்துக்கொண்டே பத்து நிமிடம். அமைதியாக அழுதார்.“சரி. அடுத்தது.” நான் ஓட்டினேன்.இரண்டாம் இடம்: ஒரு ஆரம்பப் பள்ளி.வெறிச்சோடியது. இருள். அவர் இறங்கி விளையாட்டு மைதானத்துக்கு சென்றார். ஒரு ஊஞ்சலில் அமர்ந்தார். இருபது நிமிடம் இருந்தார். திரும்பி வந்தார்.“நான் இங்கே 43 ஆண்டுகள் கற்பித்தேன். என் வாழ்க்கையின் சிறந்த வேலை.”