Posts
Popular Hashtags
Latest Posts
தவுன் என்றால் என்ன?
  •  ·  sivam
  •  · 
பனம் பழத்தின் கொட்டையிலிருந்து கிடைக்கும் அபூர்வ உணவுப்பொருள் தவுன். ஆண்டில் ஒருசில மாதங்களில் மட்டுமே உண்ணக் கிடைக்கும் தவுண், மிகுந்த மருத்துவ குணமிக்கது.மரங்களில் கர்ப்பகதருகு என அழைக்கப்படும் பனைமரம், தமிழரின் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. பனை மரத்தின் வேர் முதல் மரத்தின் உச்சி வரை அனைத்து பொருட்களும் மக்களுக்கு பயன் தரும். வறட்சியான பகுதியில் தானாக வளரக்கூடிய பனையின் ஆயுள் 100 ஆண்டுகள். 90 அடி உயரம் வளரக்கூடியது.பனங்காய்களில் இருந்து குறிப்பிட்ட பருவத்தில் நொங்கு கிடைக்கும். காய்கள் கொஞ்சம் முதிர்ந்த பின்னர் சேவாய் என்று சொல்லப்படும், முற்றிய பனங்காயிலிருந்து சதைப் பகுதியை வேகவைத்து உண்ணலாம்.பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும். பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும
வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்க்கை சொல்லுவது என்ன?
  •  ·  sivam
  •  · 
தனது மனைவி மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் அழுக்கான துணி ஒன்றை துவைத்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார்.விலையுயர்ந்த நாப்கின்களை வாங்க முடியாததால், அவள் அதே துணியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வந்தாள்.அவளுக்காக மலிவு விலையில் நாப்கின்களைத் தயாரிக்க அவர் முடிவு செய்தார்.பருத்தியைக் கொண்டு ஒரு நாப்கினைத் தயாரித்து அவளிடம் கொடுத்தார். ஆனால் அதன் தரம் திருப்திகரமாக இல்லை. அவர் மீண்டும் சோதனைகளைத் தொடங்கினார். ஒவ்வொரு முன்மாதிரியையும் (prototype) சோதித்துப் பார்க்க அவருக்குத் தன்னார்வலர்கள் தேவைப்பட்டனர். மருத்துவக் கல்லூரி மாணவிகளோ வெட்கப்பட்டனர். இறுதியில், அவரே அதைச் சோதிக்கத் துணிந்தார்.ஒரு கால்பந்து பிளாடரில் விலங்கு இரத்தத்தை நிரப்பி, அதை ஒரு செயற்கைக் கருப்பையாக மாற்றித் தனது ஆடைகளுக்கு அட
சமாதி நிலத்தில் வீடு கட்டலாமா?
  •  ·  sivam
  •  · 
முன்னோர்களை அடக்கம் செய்த இடத்தை (சமாதி அல்லது சுடுகாடு நிலம்) விலை கொடுத்து வாங்கி விட்டீர்களா?அங்கே வீடு கட்டுவது என்பது ஆன்மீகம், வாஸ்து மற்றும் அறிவியல் ரீதியாகப் பல்வேறு கருத்துக்களைக் கொண்டது.அது என்ன?வாஸ்து சாஸ்திரப்படி, உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட நிலம் 'சூன்ய நிலம்' எனக் கருதப்படுகிறது. அங்கு வீடு கட்டுவது மன அமைதியைக் குறைக்கும் என நம்பப்படுகிறது.இறந்தவர்களின் உடல் மண்ணோடு கலந்த இடத்தில் ஒருவிதமான 'கனத்த' அதிர்வுகள் இருக்கும். இது அந்த வீட்டில் வசிப்பவர்களுக்குத் தேவையற்ற பயம் அல்லது பதற்றத்தை உருவாக்கலாம்.அந்த நிலத்தில் வீடு கட்ட நேரிட்டாலும், அடக்கம் செய்த இடத்தின் மீது அஸ்திவாரம் போடவோ, அறைகள் அமைக்கவோ கூடாது.சமாதி இருக்கும் பகுதியை வீட்டின் அஸ்திவாரத்திற்குள் கொண்டு வராமல், வீட
மதுரையின் விசித்திரக் கோவில்
  •  ·  sivam
  •  · 
மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் தான் நினைவுக்கு வரும். ஆனால், மதுரையின் காவல் தெய்வமாக, கோச்சடையில் வீற்றிருக்கும் வில்லாயுதம் உடைய ஐயனார் கோவிலில் நடக்கும் அதிசயங்களைப் பற்றித் தெரியுமா?இந்த கோவிலின் சில சுவாரஸ்யமான தகவல்கள்: பல்லி சொல்லும் உத்தரவு:இங்கு புரட்டாசி திருவிழா நடத்த வேண்டுமானால், அந்த 2000 ஆண்டுகள் பழமையான புளியமரத்தில் இருக்கும் பல்லி சத்தம் கொடுக்க வேண்டும். அதுவரை ஊரே காத்திருக்கும்! ஒருவேளை பல்லி சத்தம் கொடுக்கவில்லை என்றால், அந்த ஆண்டு திருவிழாவே கிடையாது. இதுதான் ஐயனார் தரும் உத்தரவு.2000 ஆண்டு காலத்து புளியமரம்:இந்தத் தலத்தின் விருட்சமான புளியமரம் மிகவும் பழமையானது. திருமணத் தடை நீங்க தாலிக் கயிறும், குழந்தை வரம் வேண்டி தொட்டிலும் கட்டி பக்தர்கள் இங்கு மனமுருகிப் பிரார்த்த
இன்றைய ராசி பலன்கள் - 12.5.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்மனதிற்கு பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்ரிஷபம்குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். மனை தொடர்பான காரியங்களில் அலைச்சல் ஏற்படும். தாயிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். வெளிவட்டத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். அலுவலக பணிகளில் மதிப்புகள் உயரும்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : ந
இன்றைய நாள் எப்படி? 12.5.2026
  •  ·  sivam
  •  · 
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 12.5.2026இன்று காலை 10.36 வரை தசமி. பின்னர் ஏகாதசி.இன்று இரவு 09.26 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.இன்று இரவு 07.42 வரை வைதிருதி . பின்னர் விஸ்கம்பம்.இன்று காலை 10.36 வரை பத்திரை. பின்னர் இரவு 10.06 வரை பவம். பிறகு பாலவம்.இன்று இரவு 09.26 வரை மரணயோகம். பின்னர் அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
ஒரு ரொட்டி - ஆயிரம் உறவுகள்
  •  ·  sivam
  •  · 
ஒருமுறை, ஒரு நண்பருடன் நான் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்றேன்.அவருக்கு Tatkal முறையில் அவசரமாக பாஸ்போர்ட் தேவைப்பட்டது.நீண்ட வரிசைகள்…படிவங்கள்…மணிநேரக் காத்திருப்பு…சூரியன் சாயத் தொடங்கியபோது தான் எங்கள் முறை வந்தது.கட்டணம் செலுத்தப் போன சமயத்தில், கிளார்க் ஜன்னலை மூடி,“நேரம் முடிந்தது. நாளை வாருங்கள்” என்றார்.நான் பணிவுடன் கேட்டேன்:“நாங்கள் முழு நாளும் காத்திருக்கிறோம். கட்டணம் மட்டும் தான்.”அவர் கோபமாக:“நீங்கள் காத்திருந்தது என் தவறா? அரசாங்கத்திடம் போய் கூடுதல் பணியாளர்களை நியமிக்கச் சொல்லுங்கள். காலை முதல் நான் வேலை செய்கிறேன்.”என் நண்பர் மனம் உடைந்து:“விடு… நாளை வரலாம்” என்றார்.ஆனால் என் உள்ளம் சொன்னது:“இங்கே இன்னொரு கதவு திறக்கப் போகிறது. காத்திரு.”அந்த அதிகாரி தன் பையை எடுத்துக் கொண
உணவை வீணாக்காதீர்கள்
  •  ·  sivam
  •  · 
நம்ம பணத்தில் பாணி பூரி வாங்கி சாப்பிடும் போது இறுதியாக அந்தத் தண்ணீரை ஒரு சொட்டு விடாமல் குடித்து முடிக்கிறோம்.நம்ம காசுல ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடும் போது அந்தக் பேப்பர் கப்பை நக்கி எடுக்கிறோம்.கடலை பாக்கெட் வாங்கி சாப்பிடும் போது. காலி பாக்கெட்டில் ஏதாவது ஒட்டி இருக்கிறதா .என்று தேடுகிறோம் .ஆனால் நம்மில் பலர் எந்த திருமணத்திற்கு சென்றாலும் பாதியை விட்டுவிட்டு கவலைப்படாமல் எழுந்து வருகிறது வழக்கமாகிவிட்டது.ஒருவர் தனது வாழ்நாள் முழுவதுமான உழைப்பை மகள் திருமணத்தில் அறுசுவை உணவாக வைக்கிறார். அந்த உபசரிப்புக்கு மிகுந்த மரியாதை செலுத்த வேண்டும்.நமது தேவைக்கேற்ப உணவை வாங்குங்கள். குறைவாக தின்றால் இன்னும் ஆரோக்கியம்தான். உணவை மதியுங்கள். உணவை வீணாக்காதீர்கள். விவசாயி கஷ்டப்பட்டு வெயில்,மழை பாராமல்
ஆபத்தில் மலர்ந்த நட்பு
  •  ·  sivam
  •  · 
ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் லோமசன் என்ற பூனை வாழ்ந்து வந்தது. அதே மரத்தின் பொந்து ஒன்றில் பலிதன் என்ற எலி வசித்து வந்தது. பூனைக்கு எலி என்றாலே இரை, எலிக்குப் பூனை என்றாலே எமன்.சிக்கிய பூனைஒருநாள் வேடன் ஒருவன் அந்த மரத்தைச் சுற்றி வலை விரித்தான். எதிர்பாராதவிதமாக பூனை அந்த வலையில் சிக்கிக்கொண்டது. இதைக் கண்ட எலி, "அப்பாடா! இனி நமக்குத் தொல்லை இல்லை" என்று மகிழ்ச்சியுடன் வெளியே வந்து உணவைத் தேடியது.இரட்டை ஆபத்துஆனால், எலிக்கு ஒரு புதிய ஆபத்து வந்தது. மரத்தின் மேலே ஒரு ஆந்தையும், தரையில் ஒரு கீரியும் எலியைச் சாப்பிடக் காத்திருந்தன. இப்போது எலிக்குப் பின்னால் பூனை, மேலே ஆந்தை, பக்கத்தில் கீரி என மூன்று பக்கமும் மரண பயம்.சமயோசித தந்திரம்எலி உடனே யோசித்தது. வலையில் சிக்கி உயிருக்குப் போராடும் பூன
இன்றைய ராசி பலன்கள் - 10.5.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்: பழைய நண்பர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு. குடும்பத்தினரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வராது என்று நினைத்திருந்த பழைய கடன் பாக்கிகள் வந்துசேரும்.ரிஷபம்: உங்கள் பேச்சாற்றல், புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப் புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களுடன் நட்பு மலரும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் திரும்பும். வாகனப் பயணத்தின்போது கவனச் சிதறல் கூடாது.மிதுனம்: தொழில் வளர்ச்சிக்காக பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவுகள் வரும். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர
இன்றைய நாள் எப்படி? 11.5.2026
  •  ·  sivam
  •  · 
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 28 ஆம் தேதி திங்கட்கிழமை 11.5.2026.இன்று காலை 11.08 வரை நவமி. பின்னர் தசமி.இன்று இரவு 09.28 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.இன்று இரவு 09.20 வரை ஐந்திரம் . பின்னர் வைதிருதி.இன்று காலை 11.08 வரை கரசை. பின்னர் இரவு 10.52 வரை வணிசை. பிறகு பத்திரை.இன்று இரவு 09.28 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.நல்ல நேரம்:காலை : 09.30 முதல் 10.30 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
டீக்கடை
  •  ·  sivam
  •  · 
"தம்பி... ஒரு இட்லி... பசிக்குது தம்பி..." சென்னை. பாரிமுனை. மதியம் 2 மணி. வெயில் கொளுத்துது.நடைபாதை கடை. இட்லி கடை.ஒரு கிழவர். 80 வயசு. பேரு முருகன் தாத்தா. கிழிஞ்ச பனியன். கூன் விழுந்த முதுகு. கையில ஒரு மஞ்ச பை. கண்ணு மட்டும் பளிச்சுனு. கடைக்கார பையன பார்த்து கெஞ்சுறாரு. கடை பையன் கணேஷ். 25 வயசு. முறைச்சான். "யோவ் காலைல இருந்து இதே பாட்டு தானா. காசு இருந்தா வா. இல்லனா நட."தாத்தா தலை குனிஞ்சாரு. "தம்பி... நேத்துல இருந்து சாப்பிடல... ஒரு இட்லி... அரை இட்லி கொடுத்தா கூட போதும்..." கணேஷ் தட்ட எடுத்து வீசினான். "போயா... பிச்சை எடுக்க வந்துட்டான்."தாத்தா தட்ட எடுக்க குனிஞ்சாரு. முதுகு வலிச்சுது. மெல்ல எழுந்தாரு. நடந்தாரு.பக்கத்து டீக்கடை. ராஜா. 35 வயசு. பார்த்துட்டு இருந்தான். ஓடிப்போய் தாத்தா