Posts
Popular Hashtags
Latest Posts
பெரியவர் கொடுத்த விளக்கம்
  •  ·  sivam
  •  · 
ஒரு பெரியவர் எப்போதுபார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி...,"சிவபுராணம் படித்துக்கொண்டே இருப்பார்".....!!இளைஞன் ஒருவன்பல நாட்களாக....," இதனை கவனித்துக்கொண்டே இருந்தான்"....!!ஒரு நாள் அவரிடம்வந்து கேட்டான்....!!" தாத்தா...!"எப்பப் பாத்தாலும்இந்த புத்தகத்தையே படிச்சிட்டுஇருக்கீங்களே".....,"இதை எத்தனைநாளா படிக்கிறீங்க"...? என்றான்.பெரியவர் சொன்னார்," ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம் இருக்கும் "....!!அப்படின்னா....," இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே"....!!"அப்புறம் ஏன்இன்னும் படிக்கிறிங்க"..... ? என்றான்.தாத்தா சிரித்தபடி கூறினார்," எனக்கு ஒரு உதவி செய்"....!!"அதை நீ செஞ்சு முடிச்சப்புறம் நான்பதில் சொல்றேன்".....!!இளைஞன் கேட்டான்," என்ன உதவி தாத்தா.....? "பெரியவர் ஒன்றும்
திருவள்ளுவரின் உருவம்
  •  ·  sivam
  •  · 
திருவள்ளுவர் அவர்களின் உண்மையான ஓவியம் அல்லது புகைப்படம் எதுவும் இல்லை. அவரின் வாழ்க்கை வரலாறே முழுமையாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், இன்று நாம் பார்க்கும் வள்ளுவர் உருவத்தை முதன்முதலில் வரைந்தவர் ஓவியர் K. R. வேணுகோபால் ஷர்மா.அந்த ஓவியம் பின்னர் பல்வேறு அரசியல், சமூக, ஆன்மிக மற்றும் இலக்கிய அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெரியார் ஈ.வே.இராமாசாமி, C. N. அண்ணாதுரை, M. கருணாநிதி, எம்.ஜி. இராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் அந்த உருவத்தை பாராட்டியுள்ளனர்.1964ஆம் ஆண்டு, அன்றைய தமிழக முதலமைச்சர் M. பக்தவத்சலம் காலத்தில், அந்நாள் துணை ஜனாதிபதி ஜாஹீர் ஹுசைன் (Zakir Husain) அவர்களால் சென்னை சட்டசபையில் அந்த ஓவியம் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் அதையே தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு நாட்டுடை
இன்றைய நாள் எப்படி? 1.6.2026
  •  ·  sivam
  •  · 
ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 18 ஆம் தேதி திங்கட்கிழமை 1.6.2026. நாள் - சம நோக்கு நாள்பிறை - தேய்பிறைதிதிகிருஷ்ண பக்ஷ பிரதமை  - May 31 02:14 PM – Jun 01 04:37 PMகிருஷ்ண பக்ஷ துவிதியை  - Jun 01 04:37 PM – Jun 02 07:01 PMநட்சத்திரம்கேட்டை - May 31 04:11 PM – Jun 01 07:08 PMமூலம் - Jun 01 07:08 PM – Jun 02 10:06 PM
இன்றைய ராசி பலன்கள் - 1.6.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்: குடும்பத்தில் இருந்த காரசாரமான விவாதங்கள் மறையும். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி நேசக்கரம் நீட்டுவார். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.ரிஷபம்: வீண் குழப்பங்கள், அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். தொழில், வியாபாரத்தில் நிதானம் தேவை. வாகனம் செலவு வைக்கும். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்வீர்கள்.மிதுனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தள்ளிப்போன காரியங்கள் விறுவிறுப்பாக நடந்து முடியும். தொழிலில் போட்டிகள் குறையும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்
கைத்தடி கவலை
  •  ·  sivam
  •  · 
கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான். தப்பிக்க கடும் முயற்சி செய்தான். ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே? என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.துறவி சொன்னார், அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது. அப்படி இருக
திருநெல்வேலி' பெயர் உருவான கதை
  •  ·  sivam
  •  · 
முன்னொரு காலத்தில் வேத பட்டர் என்ற சிவபக்தர், இறைவனின் நைவேத்தியத்திற்காக நெல்லைக் காய வைப்பார். ஒருநாள் பெருமழை கொட்ட, "இறைவனின் நெல் வீணாகிறதே!" என்று பதறி ஓடிவந்தார். ஆனால் அங்கே ஒரு மகா அற்புதம்! சுற்றிலும் வெள்ளம் ஓட, அந்த நெல் மீது மட்டும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட படவில்லை!ஆம், எம்பெருமான் சிவபெருமான் அந்த நெல்லைச் சுற்றி ஒரு "வேலி" போல நின்று காத்தருளினார்.நெல்லை வேலியாகக் காத்ததால் "நெல்லையப்பர்"!அந்தப் புண்ணிய பூமி "திருநெல்வேலி" (திரு + நெல் + வேலி) ஆனது! தூண்களில் ஏழிசை! (The Musical Pillarsகோயிலின் மணிமண்டபத்திற்குச் சென்றால், அங்கே ஒரு உலக அதிசயத்தைக் காணலாம். அங்கிருக்கும் கல் தூண்களைக் கைகளால் மெதுவாகத் தட்டினால், அதிலிருந்து சரிகமபதநி என்ற ஏழு சுரங்களின் ஓசை (இசை) துல்லியமா
அப்பா என்னும் கற்பக விருட்சம்
  •  ·  sivam
  •  · 
(முழுமையாக படித்தால் மனத்திற்கு இதமாக இருக்கும்)அப்பா...!!!சக்திவேல் எழுபது வயதைக் கடந்த தாத்தா. ஒருநாள் அவர் ஒரு பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிருந்தார்.பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம்.மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம்.இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் சக்திவேல்.வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது.அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை.அந்த சமயத்தில் ஒருவர் சக்திவேலின் பக்கத்தில் வந்து அமர்ந்தார்."மிஸ்டர் சக்திவேல்!நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன" என்றார் அவர் (கடவுள்).ஆச்சரியப்பட்டார் சக்திவேல்.யோசித்தார்.பிறகு பேசினார்.""கடவுளே! என் அப்பாவை
மனிதநேயம் மட்டுமே உலகம்  (சற்று பெரிய பதிவுதான். அவசியம் படியுங்கள்)
  •  ·  sivam
  •  · 
வாரணாசி நகரின் கங்கைக் கரையில் அதிகாலைப் பொழுது புலரத் தொடங்கியிருந்தது. பனிமூட்டமும், தூபப் புகையும் கலந்த அந்த அமைதியான காலை வேளையில், கையில் ஒரு பழைய கருப்புப் குடையைப் பிடித்துக்கொண்டு, ஒரு முதியவர் சாதாரணமாக நடந்து வந்து கொண்டிருந்தார். கிழிந்த தையல் போடப்பட்ட எளிய காட்டன் உடையும், காலில் தேய்ந்துபோன சாதாரண செருப்பும் அணிந்திருந்த அவரைப் பார்த்தால், ஏதோ ஒரு ஏழைக் குடும்பத்தின் பெரியவர் என்றுதான் தோன்றும். ஆனால், அந்த வாரணாசி மண்ணிற்கு அவர் வெறும் மனிதர் அல்ல, மனித வடிவில் நடமாடும் ஒரு தெய்வம். அவர்தான் பத்மஸ்ரீ டாக்டர் தபன்குமார் லாஹிரி.அவருடைய இந்த உன்னதமான தியாகக் கதையை ஒரு அழகான காவியம் போல இங்கே பார்ப்போம்.கதை தொடங்குவது கொல்கத்தாவின் ஒரு மிகப்பெரிய, வசதி படைத்த பாரம்பரியமிக்க குடும
இன்றைய ராசி பலன்கள் - 31.5.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். பணி சுமையினால் கோபங்கள் அதிகரிக்கும். இயந்திர துறைகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத அலைச்சல்கள் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்ரிஷபம்மனம் விரும்பியபடி சில பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருள்கள் மீது ஆர்வம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளிவட்டார தொடர்புகள் மேம்பட
இன்றைய நாள் எப்படி? 31.5.2026
  •  ·  sivam
  •  · 
ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 31.5.2026. இன்று பிற்பகல் 02.45 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.இன்று மாலை 04.46 வரை அனுஷம். பின்னர் கேட்டை.இன்று காலை 06.12 வரை சிவம். பின்னர் சித்தம்.இன்று அதிகாலை 01.49 வரை பத்திரை. பின்னர் பிற்பகல் 02.45 வரை பவம். பிறகு பாலவம்.இன்று அதிகாலை 05.51 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை: 03.30 முதல் 04.30 மணிவரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
நெகிழ வைத்த நிஜங்கள்
  •  ·  sivam
  •  · 
சௌதி அரேபியாவில் ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர். அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிசமாக வந்தது அந்த குழந்தை.இந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலை செய்து வருகிறார். இந்த அம்மணிக்கு 3 குழந்தைகள். கணவர் இலங்கையில் சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் கவனித்து வருகிறார் .இந்த வீட்டுவேலை செய்யும் அம்மணி தான் இந்த குழந்தைக்கு எல்லாமே. தாய்பாலை தவிர அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது இவள் தான். தூங்கக் கூட இந்த குழந்தை பெற்றோரிடம் செல்லாது. தூங்கிய பின்பு, தூக்கிக்கொண்டு அவர்களின் ரூமுக்கு கொண்டு செல்லுவார்களாம் பெற்றோர்கள்.குழந்தைக்கு 2 வருட
இதுவும் நாகரீகம் தான்; நிச்சயம் கடைப்பிடியுங்கள்
  •  ·  sivam
  •  · 
1. ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் .. இது சொந்த வீடா ..வாடகை வீடா … வாடகை எவ்வளவு…. என்று கேட்க ஆரம்பிக்காதீர்கள் .. (அவர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)2 . நீங்க முதலியாரா .. கவுண்டரா .கிரிஸ்டியனா என்று கேட்டு சங்கடப்படுத்தாதீர்கள் . (அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)3.வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர்களின் பொருளாதார நிலையை அறிய கண்களாலே துழவாதீர்கள்.4.வீட்டிற்கு வந்தவர்களிடம் .. காபியா டீயா என்றால் .. கொடுங்கள் என்று அன்போடு கேட்டு அருந்துங்கள். அல்லது மோரோ ,குளிர்பானமோ ..கொடுப்பதை மனம் குளிர்ந்து அருந்துங்கள். இப்பதான காபி சாப்பிட்டு வந்தேன் .. என்று அலட்சியப் படுத்தாதீர்கள்.5.வீட்டிற்கு அழைப்பிதழ் கொடு