Cinema
Latest Cinema
 ‘டாக்சிக்’ திட்டமிட்டப்படி வெளியீடு
  •  · 
  •  ·  sivam
‘டாக்சிக்’ வெளியீட்டில் மாற்றம் என்று வெளியான வதந்திகளுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது.கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. அடுத்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், திட்டமிட்டப்படி படப்பிடிப்பு முடிவடையாத காரணத்தினால் இதில் மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் பரவின. முன்னதாக சில முறை இப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.’டாக்சிக்’ வெளியீட்டில் மாற்றம் என்று பரவிய வதந்திகளுக்கு படக்குழு சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ‘டாக்சிக்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. 2026 ஜனவரியில் படத்தின் முழு அளவிலான விளம்பரப்படுத்தும் பணிகளைத்
’மகுடம்’ படப்பிடிப்பு நிறுத்தம்
  •  · 
  •  ·  sivam
விஷால் – ரவி அரசு மோதல் முற்றுவதால், ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘மகுடம்’. இதன் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதால், இப்படத்தினை விஷாலே இயக்கி வருகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தீபாவளி அன்று விஷால் வெளியிட்டார். கதை மட்டுமே ரவி அரசு எனவும், திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் விஷால் எனவும் படத்தின் போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.தற்போது விஷால் – ரவி அரசு இடையே மோதல் முற்றியுள்ளது. இதனால் ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பினை பெப்சி அமைப்பு மற்றும் இயக்குநர்கள் சங்கம் இணைந்து நிறுத்தியிருக்கிறார்கள். ரவி அரசு இடமிருந்து படத்தினை விஷால் இயக்க ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே தொடங்க முடியும் என
 லோகேஷ் கனகராஜுக்கு நாயகியாக வாமிகா ஒப்பந்தம்
  •  · 
  •  ·  sivam
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து வரும் படத்தின் நாயகியாக வாமிகா நடித்து வருகிறார்.அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதன் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் லோகேஷ் கனகராஜ் உடன் யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது.தற்போது இப்படத்தின் நாயகியாக வாமிகா நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறது படக்குழு. இவர் தமிழில் ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும், ‘இறவாக்காலம்’ மற்றும் ‘ஜீனி’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை.அருண் மாதேஸ்வரன் ப
வயதானதை ஒரு நோய் போல கூறுகிறார்கள் - தமன்னா
  •  · 
  •  ·  sivam
தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. அவர் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் தெற்கில் நடிக்க தொடங்கியபோது, மிகவும் இளமையாக இருந்தேன். நான் நிறைய தென்னிந்திய படங்களில் நடிக்க வேண்டும் என்றால், அந்த மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் பேசி நான் கற்றுக்கொண்டேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடிக்க தொடங்கியதில் இருந்து சினிமா மாறி உள்ளது. அது இன்னும் வளர்ச்சியடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.  ஏனென்றால் என் வாழ்நாள் முழுவதும் ஒரு நடிகையாக இருக்க விரும்புகிறேன். நான் நானாகவே என் நேரத்தைச் செலவிட்டிருக்கிறேன். நான் ஒரு பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்தாலோ அல்லது ஒரு திரையரங்குக்குள் நுழைந்தாலோ, மக்கள் என
நடிகை தேவதர்ஷினி அதிர்ச்சி
  •  · 
  •  ·  sivam
பிரபல நடிகை தேவதர்ஷினி ஆடிசன் என்ற பெயரில் என்ன நடக்கிறது? என்ற கேள்விக்கு பதில் கொடுத்து இருக்கிறார். பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தேவதர்ஷினியிடம் சமீப காலமாக இளம் நடிகைகளின் அந்தரங்க காட்சிகள் இணையத்தில் வெளியாகிறது.ஆடிஷன் என்ற பெயரில் நடிகைகளிடம் அத்து மீறல்கள் நடப்பதாக தெரிகிறது. இது பற்றி உங்களுடைய பார்வை என்ன? நிஜமாகவே திரைத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.இதற்கு பதில் அளித்த நடிகை தேவதர்ஷினி நிச்சயமாக திரைத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. திரைத்துறை மட்டுமல்ல, எல்லா துறையிலுமே பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.திரைத்துறை சார்பில் அதற்கான கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க
தனது சம்பளம் குறித்து விளக்கமளித்த நடிகை மமிதா பைஜு
  •  · 
  •  ·  sivam
பல்வேறு மொழிப் படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருகிறார் மமிதா பைஜு. தற்போது பிரதீப் ரங்கநாதனுடன் இவர் நடித்துள்ள ‘டியூட்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்ததாக விஜய்யுடன் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ வெளியாகவுள்ளதுஇதனிடையே, படங்கள் தொடர் வெற்றி பெறுவதால் மமிதா பைஜு ரூ.15 கோடி சம்பளம் கேட்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மமிதா பைஜு. இந்த விவகாரம் தொடர்பாக, “சமூக ஊடகங்களில் நான் ரூ.15 கோடி சம்பளம் பெறுவதாக செய்திகள் பரவி வருகின்றன. நான் சமூக ஊடகங்களில் இல்லை. ஆனால், அந்த செய்திகளைப் பார்த்து உண்மையில் ஆச்சரியமடைந்தேன்.சிலர் அதன் உண்மை தன்மையை அறியாமல், நம்புகிறார்கள். ரூ.15 கோடி சம்பளம் பெருமளவுக்கு பெரியவராகிவிட்டாரா என்று சிலர் அதற்கு கருத்து த
எம்.ஜி.ஆர். பற்றி நடிகை ஷாலினி
  •  · 
  •  ·  sivam
நடிகை ஷாலினி பகிர்ந்து கொண்டது....“இந்த படம் கே.ஆர்.விஜயாம்மாவின் தங்கை கல்யாணத்தப்ப எடுத்தது. அரசியல்வாதிகளும் சினிமா ஆட்களும் எம்.ஜி.ஆரிடம் நெருங்கவே தயங்கிய நேரம். நான் நேராகப் போய் அவர் கழுத்தில் ஒரு சந்தன மாலையைப் போட்டேன். என்னை இழுத்து அணைச்சு என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தார் எம்.ஜி.ஆர். ரொம்ப நைஸா அவர்கிட்ட ‘உங்க பேர் என்ன?’னு கேட்டேன். சிரிச்சிக்கிட்டே “எம்.ஜி.ஆர்”னு சொன்னார். “அதுதான் தெரியுமே. அப்படின்னா என்ன அர்த்தம்?”னு மறுபடி கேட்டேன். இன்னும் பலமா சிரிச்சார். பிறகு எம்.ஜி.ராமச்சந்திரன்னு அழுத்தமாச் சொன்னார்.“அப்ப ஏன் எல்லோரும் உங்களை “எம்.ஜி.ஆர்”னு சொல்றாங்கன்னு திரும்பவும் கேட்டேன். மறுபடியும் பலமாகச் சிரிச்சார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நான் அவரைச் சந்திக்கவே இல்லை.
சந்திர பாபுவும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும்
  •  · 
  •  ·  sivam
நடிகர் சந்திர பாபு அவர்களை அனைவரும் அறிவோம்.திரு.சந்திர பாபு அவர்கள் ஒரு தயாரிப்பாளராக, ஒரு நடன கலைஞராக, ஒரு நடிகராக வலம் வந்தவர்.தட்டுங்கள் திறக்கபடும் என்ற திரைப்படத்தை தயாரித்து தோல்வி கண்டவர்.தாம் தயாரித்த திரைப்படத்தினால் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக சந்திர பாபு அவர்கள் மதுவிற்கு அடிமையாகி கடைசி காலங்களில் ஒரு வேளை சோத்துக்கே அவதி பட்டார்கள்.தனது கஷ்டங்களையும் ,துக்கங்களையும் நடிகர் திலகம் அவர்களிடம் சென்று முறை இட்டார்கள்.அண்ணே, சாப்பாட்டிற்கே கஷ்டமா இருக்குண்ணே. ஏதாவது செய்யுங்கண்ணே என்று களைப்புடன் சந்திர பாபு கூறுகின்றார்.சந்திர பாபு அவர்களுக்கு உணவும், செலவிற்கு பணமும் கொடுத்து உதவி செய்கின்றார்கள் நடிகர் திலகம் அவர்கள்.நடிகர் திலகம் மேலும் 3 சினிமாவில் சந்திரபாபு நடிப்பதற்கு சிபாரிச
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கிடைத்த மரியாதை
  •  · 
  •  ·  sivam
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அமெரிக்காவுக்கு யானை குட்டி ஒன்றை அனுப்பிய நிலையில் அது குறித்து கேள்விப்பட்ட அப்போதைய அமெரிக்க அதிபர் கென்னடி போட்ட உத்தரவு தொடர்பான செய்தி தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.தமிழ் திரை உலகின் பிதாமகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவருடைய நடிப்பின் சாயல் கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுக்கும் இருக்கும் என்பதும் தெரிந்ததே. ஒரு நடிகர் வாழும் போதே அவருக்கு மிகப்பெரிய புகழ் கிடைத்தது என்பதும் உலகம் முழுவதும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மட்டுமே.இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக கென்னடி இருந்தபோது கடந்த 1962 ஆம் ஆண்டு அமெரிக்க பூங்கா ஒன்றுக்கு வரும் குழந்தைகள் விளையாடுவதற்காக யானை குட்டி ஒன்றை சிவாஜி கணேசன் பரிசாக வ
சயாஜி ஷிண்டே. வின் நெகிழ வைக்கும் செயல்
  •  · 
  •  ·  sivam
இறந்த பிறகும் நீங்கள் அழியாதவராக மாற விரும்பினால், இந்த திரைப்பட நடிகரைப் பின்பற்றுங்கள். அவர் இந்தியத் திரைப்படங்களில் பிரபலமான நடிகர். அவர் பெயர் சயாஜி ஷிண்டே. அவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மராத்தி நடிகர்.ஒரு நேர்காணலில், என் அம்மா நோய்வாய்ப்பட்டு, அவர் உயிர் பிழைப்பதற்கான நம்பிக்கை இல்லாதபோது, ​​"நான் எவ்வளவு பணக்காரனாக, சக்திவாய்ந்தவனாக அல்லது செல்வாக்கு மிக்கவனாக மாறினாலும், உன்னைக் காப்பாற்ற முடியாது, ஆனால் நான் உன்னுடன் இருக்க விரும்புகிறேன்..." என்று நான் அவரிடம் சொன்னேன் என்று அவர் வெளிப்படுத்தினார்.சஞ்சய் கூறினார், "ஒரு நாள் நான் என் அம்மாவை எடை போடும் தராசின் ஒரு பக்கத்தில் வைத்து, மறுபுறம் பூர்வீக மரங்களின் விதைகளை வைத்தேன். அந்த விதைகளை மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில் நட்டேன் -
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேனா? - ஜான்வி கபூர்
  •  · 
  •  ·  sivam
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் எப்போதும் செய்திகளில் இருப்பவர். ஸ்ரீதேவியின் மகள் என்பதால், அவரைப் பற்றி நெட்டிசன்கள் அதிகம் விவாதிக்கின்றனர். பாலிவுட்டின் கவர்ச்சியான நடிகைகளில் ஜான்வியும் ஒருவர்.கஜோல் மற்றும் ட்விங்கிள் தொகுத்து வழங்கிய 'டூ மச் வித் கஜோல் அண்ட் ட்விங்கிள்' நிகழ்ச்சியில், ஜான்வி தனது பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து வெளிப்படையாகப் பேசினார். தான் சர்ஜரி செய்துகொண்டதாகவும், அது தாய் ஸ்ரீதேவியின் வழிகாட்டுதலின்படி நடந்ததாகவும் கூறினார்.நான் செய்த எல்லாவற்றிலும் புத்திசாலித்தனமான, சரியான முடிவுகளை எடுத்தேன். அம்மா ஸ்ரீதேவி எனக்குத் துணையாக இருந்தார். அவரது ஆலோசனையால் தவறுகள் செய்யாமல் முன்னேறினேன். ஒரு வீடியோவைப் பார்த்துவிட்டு, பஃபேலோ-பிளாஸ்டி செய்துகொள்ள நினைத்து தவறு நடந்தால் அது ஆபத
ஆனந்த கண்ணீர் விட்ட முத்துக்காளை
  •  · 
  •  ·  sivam
“செத்து செத்து விளையாடுவோமா” என்ற ஒரே வசனம் மூலம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் தான் காமெடி நடிகர் முத்துக்காளை. இவர் 1965-ம் ஆண்டு பிறந்தவர், இவருடைய சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சங்கப்பட்டி. சிறுவயதில் இருந்தே தற்காப்பு கலைகளில் ஒன்றான கராத்தேவில் தேர்ச்சி பெற்ற இவர், ­பிளாக் பெல்ட் வாங்கினார்.பின்னர் ஒரு ஸ்டண்ட் கலைஞராக திரையுலகில் தன்னுடைய பயணத்தை துவங்கி, ஒரு சில படங்களில் காமெடி ரோலில் தலைகாட்டினார். இவருடைய தனித்துவமான நடிப்பு மற்றும் உடல்மொழி காரணமாக, வடிவேலுவுடன் பல படங்களில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றார். குடி பழக்கத்தால் தன்னுடைய வாழ்க்கையை சீரழித்து கொண்டிருந்த இவரை, அதில் இருந்து மீட்டு கொண்டுவந்தது கூட வடிவேலுவின் அறிவுரைகள் தான். இதனை பலமு
Latest Cinema (Gallery View)
1-12