Featured News
நாட்டு மக்கள் அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள் இதோ:-● பிரதமர் – 011-2321406● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171● அம்புலன்ஸ் (கொழும்பு) – 110● பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938● அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919● நீர் வடிகாலமைப்புச் சபை – 1939● போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984● குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962● கல்வி அமைச்சு – 1988● விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905● IMEI மீளாய்வு அலகு – 1909● விவசாயிகளுக்கான சேவைகள் – 1918● மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996● வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989● தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984● நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977●
Breaking News
கனடா, இயற்கை எரிவாயு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் சாதனை படைத்துள்ளது.இந்த மார்ச் மாதத்தில் 775.12 மில்லியன் ஜிகா ஜூல்கள் அளவுக்கு கனடா எரிசக்தி உற்பத்தி செய்துள்ளது.இது, 2025 மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது 5.6 சதவிகிதம் அதிகமாகும். பிரிட்டிஷ் கொலம்பியாவில் 13.8 சதவிகிதமும், ஆல்பர்ட்டாவில் 1.2 சதவிகிதமும் எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இப்போது கனடா, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே அதிக அளவில் எரிவாயு ஏற்றுமதி செய்துவருகிறது.கனடா ஏற்றுமதி செய்யும் இயற்கை எரிவாயுவின் அளவு 7.4 சதவிகிதம் உயர்ந்து 339. 7 மில்லியன் ஜிகா ஜூல்களாக ஆகியுள்ளது.கனடாவிலிருந்து அதிகம் எரிவாயு வாங்கும் நாடாக திகழும் அமெரிக்கா, மார்ச் மாதத்தில் மட்டும் 282.1 மில்லியன் ஜிகா ஜூல்கள் எரிவாயு வாங்கியுள்ளது. எ
Latest News
கனடா, இயற்கை எரிவாயு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் சாதனை படைத்துள்ளது.இந்த மார்ச் மாதத்தில் 775.12 மில்லியன் ஜிகா ஜூல்கள் அளவுக்கு கனடா எரிசக்தி உற்பத்தி செய்துள்ளது.இது, 2025 மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது 5.6 சதவிகிதம் அதிகமாகும். பிரிட்டிஷ் கொலம்பியாவில் 13.8 சதவிகிதமும், ஆல்பர்ட்டாவில் 1.2 சதவிகிதமும் எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இப்போது கனடா, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே அதிக அளவில் எரிவாயு ஏற்றுமதி செய்துவருகிறது.கனடா ஏற்றுமதி செய்யும் இயற்கை எரிவாயுவின் அளவு 7.4 சதவிகிதம் உயர்ந்து 339. 7 மில்லியன் ஜிகா ஜூல்களாக ஆகியுள்ளது.கனடாவிலிருந்து அதிகம் எரிவாயு வாங்கும் நாடாக திகழும் அமெரிக்கா, மார்ச் மாதத்தில் மட்டும் 282.1 மில்லியன் ஜிகா ஜூல்கள் எரிவாயு வாங்கியுள்ளது. எ
டொரண்டோவின் ரெக்ஸ்டேல் (Rexdale) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொரண்டோ காவல்துறை தெரிவித்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில், குவீன்ஸ் பிளேட் டிரைவ் மற்றும் ரெக்ஸ்டேல் பெலவூர்ட் சந்திப்புப் பகுதிக்கு அவசர உதவி கோரி காவல்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அங்கு சோதனையிட்ட அதிகாரிகள், துப்பாக்கி குண்டுக் காயங்களுடன் இருந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இச்சம்பவம் குறித்த கூடுதல் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைக்கு பின் முழு விபரங்கள் வெளியிடப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில், கனடாவின் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளன.ஏனைய நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்குக் கிடைக்கும் கூடுதல் நிதி மற்றும் கடுமையான போட்டி இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.'Center for World University Rankings' (CWUR) வெளியிட்ட 2026-ஆம் ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலில், தரப்படுத்தப்பட்ட கனடாவின் 38 பல்கலைக்கழகங்களில் 37 நிறுவனங்கள் கடந்த ஆண்டை விடக் கீழே இறங்கியுள்ளன.ஒரே ஒரு பல்கலைக்கழகம் மட்டுமே தனது முந்தைய இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.டொரண்டோ பல்கலைக்கழகம் உலகளவில் 23-வது இடத்தைப் பிடித்து, கனடாவின் முதன்மைப் பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. இது மட்டுமே கடந்த ஆண்டு நிலையைத் தக்கவைத்துள்ளது. மெக்கில் ப
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஸ்மித்ஸ் பால்ஸ் அருகே நெடுஞ்சாலை 15 இல் இடம்பெற்ற மூன்று வாகன விபத்தில், 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஒண்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளனர்.காவல்துறையின் அறிக்கையின்படி, லோம்பார்டி பகுதியில் உள்ள கவுண்டி சாலை 1 மற்றும் கவுண்டி சாலை 5 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நெடுஞ்சாலையில் மாலை 5 மணியளவில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் ஆகியவை ஒன்றோடொன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்துக்குள்ளான கார்களில் ஒன்றை ஓட்டிச் சென்ற 34 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது காரில் பயணித்த சிறுவன் ஒருவன் பலத்த காயங்களுக்குள்
குதிரை திருட்டு வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் மீது, குதிரை வளர்ப்பு மற்றும் குதிரைப் பந்தயத் துறையுடன் தொடர்புடைய மற்றொரு விசாரணையின் அடிப்படையில் புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.ஹால்டன் பிராந்திய காவல்துறையின் தகவலின்படி, ஒண்டாரியோ மாநிலத்தின் மில்டன் பகுதியில் ஒரு குதிரையை திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்தப் பெண் ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்திருந்தார்.அதன் பின்னர், மே மாதத்தில் நிபந்தனை பிணையில் இருந்தபோது, அதே சந்தேக நபர் பொய்யான அடையாளத்தை பயன்படுத்தி ஒரு நபரை சந்தித்து, அவரிடமிருந்து ரகசிய தகவல்களைப் பெற முயற்சித்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.காவல்துறையினர் கூறுகையில், சந்தேக நபர் ஹெய்லிவுட் என
கனடாவின் மார்க்கம் பகுதியைச் சேர்ந்த லூயிஸ் ரென்விக் என்ற பெண், தனது 4 ஆண்டுகள் பழமையான சமையல் அடுப்பு பழுதடைந்ததால் சந்தித்த ஏமாற்றத்தை விபரித்துள்ளார்.இந்த மாத தொடக்கத்தில் லூயிஸின் அடுப்பு வேலை செய்வதை நிறுத்தியுள்ளது. இதையடுத்து, அவர் கூகுளில் தேடியபோது, முதலில் வந்த 'தி ஏ டீம் அப்ளையன்ஸ் ரிப்பேர்' என்ற உள்ளூர் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளார்.அங்கிருந்து வந்த தொழில்நுட்ப வல்லுநர், அடுப்பின் 'டெம்பரேச்சர் சென்சார்' பழுதாகிவிட்டதாகக் கூறி, அதை மாற்றுவதற்கு 798 கனேடிய டொலர் கட்டணமாக வாங்கியுள்ளார்.அவர் வீட்டை விட்டு கிளம்பும் முன்பே, அடுப்பில் பழுதைக் காட்டும் 'எரர் சிக்னல்' (Error sign) அப்படியே இருப்பதை கவனித்தேன். 'சற்று நில்லுங்கள், இது வேலை செய்யவில்லை' என்று கூறினேன். ஆன் செய்து பா
பிரான்சின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ரென்னெஸ் (Rennes) நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, 11 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விலெய்ன் (Vilaine) ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட அச்சிறுவனின் கழுத்தில் ஈரமான குளியல் துண்டு (Wet bath towel) மிக இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்ததாக அந்நாட்டு அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர், சிறுவனின் அலறல் சத்தத்தைக் கேட்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார் சிறுவனின் உடலை மீட்டனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய பிரெஞ்சு போலீசார், திங்கட்கிழமை அன்று 16 வயது சிறுவன் ஒர
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள ஒரு பகுதியில், கழிவுநீர்க்குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அறிவிப்பு வரும் வரை மக்கள் டாய்லெட்டை பிளஷ் செய்யவேண்டாம், குளிக்கவேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Comox Valley பகுதியில், கழிவுநீர்க்குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வாழும் மக்கள் டாய்லெட்டை ஃப்ளஷ் செய்யவோ, டிஷ் வாஷர் மற்றும் வாஷின் மெஷின் பயன்படுத்தவோ வேண்டாம் என்றும் குளிக்கவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். Comox Valleyயில் வாழும் ஸ்டீவ் ஜோன்ஸ் என்பவர், தான் அந்த கழிவுநீர்க் குழாய் உடைப்பை நேரில் சென்று பார்த்ததாக தெரிவிக்கிறார்.கழிவுநீர் வழிந்தோடி, ஒரே துர்நாற்றம் வீசுவதாகக் கூறும் ஜோன்ஸ், அந்த கழ
அமெரிக்காவுக்கான தங்களது பயணங்களை கனடிய மக்கள் புறக்கணிக்கும் போக்கு இன்னும் வலுவாக நீடித்து வருவதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த மார்ச் மாதத்தில் கனடா மக்கள் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளளதாககடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.இதன் மூலம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து 15-வது மாதமாகக் கனடா மக்களின் அமெரிக்கப் பயணங்கள் சரிவைச் சந்தித்துள்ளன.கடந்த மார்ச் மாதத்தில் கனடா மக்கள் அமெரிக்காவிற்குச் சென்றுவிட்டு 2.6 மில்லியன் முறை திரும்பியுள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 6.4 சதவீத வீழ்ச்சியாகும்.விமானம் மூலம் அமெரிக்கா சென்று திரும்பியவர்களின் எண்ணிக்கை 10.8 சதவீதம
கனடாவின் ஹமில்டனில் உள்ள 'வைட் சேப்பல் மெமோரியல் கார்டன்' மயானத்தில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை காவல்துறயைினர் கைது செய்துள்ளனர்.கடந்த ஏப்ரல் 17ஆம் திகதிக்கும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மயானத்திற்குச் சென்ற உறவினர்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் கல்லறைகளில் வைக்கப்பட்டிருந்த மலர்ச்சாடிப் பாத்திரங்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சுமார் 40 மலர்ச்சாடிப் பாத்திரங்கள் வரை அங்கு திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.ஹமில்டன் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, கடந்த மே 13ஆம் திகதி ஹமில்டனைச் சேர்ந்த ஜேசன் மெக்கி
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு தனித்தீவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.படகுகள் மூலமாக மட்டுமே செல்லக்கூடிய ஒரு தொலைதூர ஏரியில் அமைந்துள்ள தீவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.ஒண்டாரியோவின் கிரேட்டர் சட்பரி பகுதிக்கு தென்மேற்கே அமைந்துள்ள 'லிட்டில் கபோடின்' ஏரியின் தீவொன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஒண்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் இந்த தீ விபத்து குறித்து நிபிசிங் வெஸ்ட் ஒண்டாரியோ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விபத்து நடந்த பகுதி மிகவும் ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்ததால், அங்கு சாதாரண வாகனங்களில் செல்வது சாத்தியமில்லாமல் இருந்தது.இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களை
கனடிய விமான நிலையங்களில் நிலவும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து, விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.கடந்த ஓராண்டில் மட்டும், கனடாவிலிருந்து விமானம் ஏறிய குறைந்தது 17 அப்பாவி பயணிகள், தங்களது பைகளில் ஒட்டப்பட்டிருந்த 'பயணச்சீட்டு அடையாள அட்டை' (Bag Tags) மாற்றப்பட்டதால், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கி வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.விமான நிலையங்களில் பணிபுரியும் ஊழல்வாதிகளான சில ஊழியர்கள் இந்தச் சதியில் ஈடுபடுகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.விமானத்தில் பயணிக்கும் ஒரு அப்பாவியின் லக்கேஜ் பையில் இருக்கும் அடையாள அட்டையை (Tag) ஊழியர்கள் ரகசியமாகப் பிரித்தெடுக்கின்றனர். பின்னர், போதைப்பொருட்கள் நிரப்பப்பட்ட வேறொரு சூட்கேஸில் அந்த அப்