News
Featured News
Latest News
கனடியர்கள் குடியுரிமை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் தீவுகள்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  564 views
கனடியர்கள் கரீபியன் தீவுகளில் குடியுரிமை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கனேடியர்கள் பயண விசா வசதிக்காக அல்ல, மாறாக வாழ்க்கை முறை, நெகிழ்வுத்தன்மை மற்றும் எதிர்கால பாதுகாப்புக்காக ரியல் எஸ்டேட் முதலீடு மூலம் குடியுரிமை பெறுவதை அதிகளவில் ஆராய்ந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.கிழக்கு கரீபியனில் உள்ள ஐந்து நாடுகள் தங்கள் அழகிய கடற்கரைகளை மட்டுமே விற்பனை புள்ளியாக முன்னிறுத்துவதை நிறுத்திவிட்டு, வெளிநாட்டினரை வீடு வாங்க அல்லது நன்கொடை வழங்குவதற்கு ஈடாக குடியுரிமை வழங்கும் முறையை பிரபலமாக்கியுள்ளன.குடியுரிமை மூலம் முதலீடு (CBI) திட்டங்களை வழங்கும் தீவு நாடுகள் அன்டிகுவா மற்றும் பார்புடா, டொமினிகா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயின்ட் லூசியா மற்றும் கிரெனடா
கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார்
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  569 views
இலஞ்ச ஊழல் வழக்கில் கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி இவாரோ உரிபேவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை தண்டனை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.சாட்சியங்களைக் கலைக்க முயன்றது உள்ளிட்ட அவா் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திய நீதிமன்றம், இந்தத் தீா்ப்பை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசியல் நோக்கங்களுக்காக தனக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய உரிபே, தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.002 முதல் 2010-ஆம் ஆண்டுவரை அமெரிக்க ஆதரவுடன் கொலம்பியாவை ஆண்டு வந்த இவாரோ உரிபே, மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டதாகவும், 1990-களில் ஆயுதக் குழுக்கள் வளா்வதற்குக் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.இது தொடா்பான வழக்கில் தனக்கு எதிர
ஹோட்டல், விமான நிலையங்களில் துரியன் பழத்திற்கு தடை
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  580 views
பாங்காக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒட்டப்பட்ட சிறப்புப் பலகை இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், ஹோட்டல் அறையில் துரியன் பழம் சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்றும், 5,000 தாய் பாட் (தோராயமாக ரூ.11,800) அபராதம் விதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.துரியன் என்றால் என்ன?: துரியன் பழம் சாப்பிடுவது ஏன் தடை செய்யப்பட்டுள்ளது? துரியன் ஆசிய நாடுகளில் பிரபலமான ஒரு தனித்துவமான பழமாகும். இது நீளமான வடிவம், கடினமான, நீண்ட சுருக்கம் கொண்ட தோல் மற்றும் உள்ளே கிரீமி மஞ்சள் கூழ் போன்று இருக்கும். இது பலாப்பழம் போல் தோற்றமளிக்கும்.இந்த பழத்தின் வாசனை அதை சாப்பிட்ட பிறகும் மணிக்கணக்கில் அறையில் இருக்குமாம். உண்மையில், பலர் அதன் வாசனையை அருவருப்பாக உணர்கிறார்கள் என்று கூறப்
பசி கொடுமையில் காசா மக்கள்
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  588 views
காசா பகுதி முழுவதும் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. விமானம் மூலம் வீசப்படும் உணவுப்பொருட்களை சேகரிக்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஓடும் காட்சி காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.இஸ்ரேல் - பாலஸ்தீன போர் எதிரொலியால் காசா எல்லை பகுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. மேலும் உணவுப்பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதை உணர்ந்த சில நாடுகள் விமானம் மூலம் உணவுப்பொருள் அடங்கிய மூட்டைகளை பாராசூட் உதவியுடன் மேலிருந்து வீசிகின்றன. இதற்காகவே நீண்ட நாட்கள் காத்திருக்கும் மக்கள் உணவை சேகரிக்க உயிர் போராட்டமே நடத்துகின்றனர்.
கனடாவில் 19 வயது இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் ஐந்து பேர் மீது குற்றச்சாட்டு
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1143 views
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய வம்சாவளியினர் ஐந்து பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Abbotsfordஇல் ஜனவரி மாதம் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டார். அவரைக் கடத்திச் சென்ற சிலர் படுகாயமடைந்த நிலையில் அவரை சர்ரேயிலுள்ள கிரெசண்ட் கடற்கரையில் வீசிச் சென்றுள்ளனர். தகவலறிந்த பொலிசார் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்று அவர் உயிரிழந்துவிட்டார். தற்போது, அந்த சம்பவம் தொடர்பில் ரவ்தீப் சிங் (21), ஹர்மன்தீப் கில் (26), ஜஸ்கரன் சிங் (20) மற்றும் பிபன்பிரீத் சிங் (22) ஆகியோர் மீது விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி அடைத்துவைத்தல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்துக்கு சுனாமி எச்சரிக்கை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  650 views
 கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்துக்கு சுனாமி தொடர்பில் ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது.ரஷ்யாவின் Petropavlovsk நகரை ரிக்டர் அளவுகோலில் 8.8ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, ஜப்பான், அமெரிக்கா முதலான பல நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வடக்கு மற்றும் மத்திய கரைப்பகுதிகள், வான்கூவர் தீவின் மேற்கு மற்றும் வடகிழக்கு கரைப்பகுதிகளுக்கும் சுனாமி தொடர்பில் ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது.ஜோர்டன் நதி முதல் கிரேட்டர் விக்டோரியா வரையிலான ஜுவான் டி ஃபூகா ஜலசந்தி, Saanich தீபகற்பம் உட்பட பல இடங்களுக்கும் சுனாமி ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது.பிரிட்டிஷ் கொலம்பியாவைப் பொருத்தவரை, மக்கள் கடலுக்குள் இறங்கவேண்டாம் என்றும், அலைகளை வ
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1284 views
கனடாவில் வன்கூவரின் டவுன்டவுன் பகுதியில் 15 வயது சிறுவன் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம், வன்கூவர் நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள ஹவ் தெருவில், இரவு 11.40 மணியளவில் வழியே சென்ற ஒருவர் 911-ஐ அழைத்ததினால் வெளியாகியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸாரும், பிற அவசர சேவை ஊழியர்களும் சிறுவனுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.ஆனால், சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வன்கூவர் பொலிஸ் திணைக்களத்தின் பேச்சாளர் சார்ஜென்ட் ஸ்டீவ் அடிசன் தெரிவித்தார்.இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், சந்தேகநபர்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்க முடியாது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தையடுத்து, ர
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி
  •  ·  sivam
  •  · 
  •  ·  India
  •  ·  1706 views
லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்ப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைச்சுற்றல் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிவதற்குத் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன விபத்தில் மிஸிசாகாவைச் சேர்ந்த முதியவர் உயிரிழப்பு
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1262 views
கனடாவின் மிஸிசாகா நகரை சேர்ந்த 77 வயதான ஒரு முதியவர், சனிக்கிழமை (ஜூலை 19, 2025) அதிகாலை, பியர்சன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹைவே 401 கிழக்கு வழித்தடத்தில் நடந்து சென்ற போது வாகனமொன்றால் மோதி உயிரிழந்தார் என ஒண்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த துயரமான சம்பவம் அதிகாலை 5 மணிக்கு டிக்சன் சாலை அருகே ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.முதலில் ஏற்பட்ட வாகன விபத்துக்குப் பிறகு, உயிரிழந்தவர் தன்னுடைய SUV வாகனத்திலிருந்து வெளியேறிய பின்னரே அவர் மோதி வீழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.முதியவருடன் இரண்டு பேர் மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை தற்போது தெரியவில்லை.ஹைவே 401 மற்றும் 427 இல் பெரும் போக்குவரத்து பாதிப்பு விபத்து ஏற்பட்ட பிறகு, காலை 7 மணியளவில் ஹைவே 401
கோமாவிலிருந்த சவூதி இளவரசர் காலமானார்
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  1228 views
சுமார் இருபது ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் அல்வலீத் பின் கலித் பின் தலால் அல் சவூத் (வயது 36) காலமானார்.இளவரசர் கலித் பின் தலால் “தூங்கும் இளவரசர்” என அழைக்கப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.1990 ஏப்ரலில் பிறந்த அவர், சவூதி பேரரசர் கலித் பின் தலால் அல் சவூத் என்பவரின் மகனும், புகழ்பெற்ற பணக்கார இளவரசர் அல்வலீத் பின் தலாலின் உறவினருமாவார். 2005 ஆம் ஆண்டு, லண்டனில் இராணுவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த 15 வயதில், அவர் கடுமையான சாலை விபத்தில் சிக்கினார்.இதில் தலையில் கனமான காயங்கள் மற்றும் உட்புற இரத்தக்கசிவு ஏற்பட்டது. அமெரிக்க மற்றும் ஸ்பெயின் மருத்துவ நிபுணர்களின் தீவிர சிகிச்சையையும் எதிர்கொண்டும், அவர் முழுமையாக உணர்வில் திரும்பவில்லை. ஆ
 கனடாவில் விமானம் மோதியதில் உயிரிழந்த சிறுவன்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1293 views
கனடாவில் விமானம் மோதியதில் 16 வயதான சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.சிறிய விமானமொன்று விபத்துக்குள்ளாகி கீழே வீழ்ந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சேகொக் படகுத்துறையில் இருந்த சிறுவன் மீது விமானம் வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த விபத்தில் விமானிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. படகுத்துறையில் தரித்து நின்ற படகு ஒன்றின் மீது விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கியூபா அமைச்சர் ராஜினாமா
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  1297 views
கியூபாவில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றில் அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு துறை அமைச்சர் மார்த்தா எலினா பீடோ கப்ரேரா ஏழைகள் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறினார்.பிச்சையெடுப்பவர்கள் ஏழைகள் அல்ல. அவர்கள் ஏழைகள் போல நடிக்கிறார்கள் என விமர்சித்தார். அவரது கருத்து சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவரை பதவி விலகக்கோரி நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து மார்த்தா எலினா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.