Featured News

நாட்டு மக்கள் அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள் இதோ:-● பிரதமர் – 011-2321406● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171● அம்புலன்ஸ் (கொழும்பு) – 110● பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938● அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919● நீர் வடிகாலமைப்புச் சபை – 1939● போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984● குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962● கல்வி அமைச்சு – 1988● விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905● IMEI மீளாய்வு அலகு – 1909● விவசாயிகளுக்கான சேவைகள் – 1918● மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996● வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989● தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984● நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977●
Latest News

கனடாவில் ஒரு தம்பதியர் குப்பை கொட்டும் வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அவர்கள் மீது இனரீதியில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.கனடாவில், சாலையோரமாக ஓரிடத்தில் தங்கள் காரை நிறுத்திய தம்பதி, தங்கள் கைகளிலிருந்த பைகளிலிருந்து எதையோ எடுத்து வீசுவதைக் காட்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகமான எக்ஸில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, அந்த தம்பதியர் இந்தியர்கள் என்றும், அவர்கள் குப்பை கொட்டுவதாகவும் கூறி அவர்களை விமர்சித்துவருகிறார்கள் பலர்.அவர்கள் இந்தியாவை கெடுத்துவிட்டார்கள். அவர்களை கனடாவையும் கெடுக்க விடக்கூடாது என்கிறார் ஒருவர்.இவர்களால் எல்லா புலம்பெயர்ந்தோருக்கும் கெட்ட பெயர் என்கிறார் மற்றொருவர்.ஒருவேளை அவர்கள் ஏதாவது பறவைகள் அல்லது விலங்குகளுக்கு உணவள

நிதி நெருக்கடி காரணமாக, கல்வித் துறையில் பணியாற்றும் 10,000 பேரை, பணி நீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், இந்திய மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளமையே, இதற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவின் ஒண்டாரியோவிலுள்ள Quadeville என்னுமிடத்தில், கடந்த மாதம், அதாவது, ஜூன் மாதம் 23ஆம் திகதி எட்டு வயது சிறுமி ஒருத்தி காணாமல் போனாள். மறுநாள், அதாவது, 24ஆம் திகதி, நள்ளிரவு அவள் கண்டுபிடிக்கப்பட்டாள். பொலிசார் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், இன்னமும் அவள் மருத்துவமனையில்தான் இருக்கிறாள்.முதலில், அவளை ஏதோ காட்டு மிருகம் தாக்கியிருக்கலாம் என பொலிசார் நினைத்துள்ளார்கள். இந்நிலையில், அவளது உடலில் இருக்கும் காயங்களிலிருந்து எந்த விலங்கின் DNAவும் கிடைக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளார்கள். தற்போது, இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக பொலிசார் கிழக்கு ஒண்டாரியோவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனைக் கைது செய்துள்ளார்கள். அவன் மீது, அந்த சிறுமியை கொலை செ

டொரண்டோவின் பிக்கரிங் எல்லைப் பகுதியில் அடையாளம் காணப்படாத சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹைவே 401 மற்றும் வைட்ஸ் ரோட் பகுதியில் உள்ள இடத்திற்கு இரவு 12:06 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், அங்கு ஒருவரது உடலை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த மரணத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் இருந்ததால், தற்போது இது கொலை விசாரணையாக மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மரணமடைந்தவரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை

கனடாவின் மனிடோபா மாகாணத்தில் நிலவும் தீவிர காட்டுத்தீ பரவல் காரணமாக மீண்டும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.அங்கு வாழும் மக்கள் உயிர் பாதுகாப்பிற்காக இடம் மாற்றப்பட வேண்டிய சூழ்நிலையால், மாகாணத்தில் இரண்டாவது அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர நிலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதாக முதல்வர் வாப் கின்யூ தெரிவித்தார்.பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் அவர்களுக்கான தற்காலிக தங்குமிடங்களை விரிவுபடுத்த வேண்டியுள்ளது எனவும் கின்யூ கூறியுள்ளார்.கடந்த முறையைப் போலவே, லீலா சாக்கர் மையம் மற்றும் பில்லி மோசியென்கோ அரீனாவும் மறுபடியும் மக்கள் தங்குவதற்காக திறக்கப்படுகின்றன. மேலும், வினிப்பெக் நகர மத்தியிலுள்ள RBC கண்வென்ஷன் மையமும் விரைவில் பயன்படுத்தப்பட உள்ளத

கனடாவில் விமான பயிற்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.மனிடோபா (Manitoba) - ஸ்டெயின்பாக் (Steinbach) பகுதியில், விமானம் ஓட்டும் பயிற்சி மையம் ஒன்றில், குறித்த இருவரும் தனித்தனியாக விமானத்தை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, வின்னிபெக்கில் (Winnipeg) இருந்து 60 கிலோமீற்றர் தூரத்தில், தெற்கு விமான நிலையம் அருகே இருவரும் விமானத்தைத் தரையிறக்க முயன்றவேளை, 400 மீற்றர் உயரத்தில் இருவரின் விமானங்களும் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்துக்குள்ளான விமானங்கள் தீப்பிடித்ததில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில், கனடா போக்குவரத்து பாதுகாப்புச் சபை விசாரணைகளை நடத்தி வருவதாக, கூறப்படுகின்றது.

கனடாவில் குடியுரிமை மற்றும் வேலை அனுமதிக்காக விண்ணப்பிக்க விரும்பிய பலரிடம் பொய்யான குடிவரவு சேவைகளை வழங்கியதாக குற்றம் சும்தி 43 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.2023 மே 31 முதல் 2025 மே 31 வரையான காலப்பகுதியில் யோங் வீதி மற்றும் எக்லிங்டன் அவென்யூ பகுதிகளில் குற்றவாளி குடிவரவு ஆலோசனைகள் வழங்கியதாக கூறப்படுகிறது.மக்கள் குறித்த பெண்ணிடம் பணம் செலுத்திய பின், அரசாங்க ஆவணங்கள் போல உருவாக்கப்பட்ட பொய்யான ஆவணங்கள் வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த ஆவணங்கள் திகதிகள் தவறானவையாக இருப்பதும், வழங்கப்பட்ட சேவைகள் சட்டபூர்வமானவை அல்ல என்பதும் பாதிக்கப்பட்டவர்களால் உணரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மாரியா கொர்புஸ் என்ற 43 பெண் மீது போலி ஆவணத் தயாரிப்பு உள்ளிட்ட பல குற்றச்சாட்

ஆசியாவின் மிக வயதான யானையான 'வத்சலா', மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் நேற்று (08) உயிரிழந்தது. அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.ஆசியாவின் மிகவும் வயதான பெண் யானையான ‘வத்சலா’ பல ஆண்டுகளாக, பன்னா புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அடையாளமாக இருந்தது. மிகவும் வயதான யானையாக இருந்ததால், அது காப்பகத்தில் உள்ள மற்ற யானைகள் குழு அனைத்தையும் வழிநடத்தியது.வத்சலா யானையின் முன் கால்களின் நகங்களில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக, காப்புக்காட்டின் ஹினௌடா பகுதியில் உள்ள கைரையன் வடிகால் அருகே எழுந்து நடக்க இயலாமல் படுத்துக் கொண்டது.வனத்துறை ஊழியர்கள் இந்த யானையை தூக்க நிறைய முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் வத்சலா யானை செவ்வாய்க்கிழமை (08) பிற்பகலில

அமெரிக்காவிற்கான பயணங்களை கனடியர்கள் தொடர்ந்தும் தவிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்குப் பயணிக்க கனடியர்கள் அதிக ஆர்வம் காட்டாமல் உள்ளனர். அதே நேரத்தில் நாடளாவிய உள்நாட்டு சுற்றுலா திடீரென உயர்வடைந்து வருகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.இவ்வேளையில், பரபரப்பான கோடை விடுமுறை காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயணத்துறையில் செயல்படும் நிறுவனங்களின் தகவலின்படி, உள்ளூர் இடங்களுக்கு முன்பதிவுகள் அதிகரித்து, கனடாவில் உள்ள தனித்துவமான சுற்றுலா தலங்களை ஆராய்வதில் மக்கள் அதிகம் ஈடுபடுகிறார்கள்.இந்த ஆண்டில் கனடியர்கள் அதிக அளவில் உள்ளூர் பயணங்களில் ஈடுபடுகிறார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பயண மாற்றங்கள் அம

கனடாவில் தப்பிச் சென்ற கைதி ஒருவருக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1992-ஆம் ஆண்டு கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி ஒருவர் இவ்வாறு தப்பியுள்ளார்.கியூபெக்கிலுள்ள ஆர்செம்பெல்ட் Archambault சிறையிலிருந்து தப்பியதைத் தொடர்ந்து, அவரை பிடிக்க நாடு தழுவிய அளவில் பிடிவிராந்து உத்தரவு (Canada-wide warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது. லோரீ பில் ஜெர்மா (Lory Bill Germa) என்ற 69 வயதான கைதியே இந்த தப்பிச் சென்றுள்ளார். அவர் தற்போது ஒண்டாரியோ மாகாணத்தின் தென் பகுதியில் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 5 அடி 8 அங்குலம் உயரமான நபர் சுமார் 165 பவுண்ட் எடையுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.பொதுமக்கள், இந்த நபரை காணும்போது அருகில் செல்ல வேண்டாம், அல்லது அவ

தென் அல்பர்ட்டாவில் உள்ள க்ளென்வுட் பகுதியில், 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். க்ளென்வுட் நகரின் மேற்கே சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் கைவிடப்பட்டடிருந்த நிலையில் ஒரு வாகனம் இருப்பதாக மவுண்டீஸ் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.அந்த வாகனத்துக்குள் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலம் குறித்த பிரதே பரிசோதனை (autopsy) நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த வழக்கில் தகவல் தெரிந்தவர்கள் உடன், கார்ட்ஸ்டன் RCMP காவல் நிலையத்தை 403-653-4931 என்ற எண்ணிலும், அல்லது இரகசியமாக தகவல் வழங்க விரும்புவோர் 1-800-222-8477 என்ற Crime Stoppers எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஐபிஎல் உரிமையாளர் லலித் மோடி ஏற்பாடு செய்திருந்த விருந்தில், தொழிலதிபர் விஜய் மல்லையா கலந்துகொண்டு பாட்டு பாடி டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.லலித் மோடி மீது சட்டவிரோத ஏல முறைகேடுகள், பணமோசடி, மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல், விஜய் மல்லையா ₹9,000 கோடிக்கும் மேல் வங்கிக் கடன் தவணையை செலுத்தாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இருவரும் 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளனர்.இந்நிலையில் லண்டனில் உள்ள தனது வீட்டில் நடந்த பிரம்மாண்டமான விருந்து குறித்த வீடியோவை லலித் மோடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த விருந்தில் இந்தியப் பாடகர் கார்ல்டன் பிரகன்ச