Featured News

நாட்டு மக்கள் அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள் இதோ:-● பிரதமர் – 011-2321406● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171● அம்புலன்ஸ் (கொழும்பு) – 110● பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938● அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919● நீர் வடிகாலமைப்புச் சபை – 1939● போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984● குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962● கல்வி அமைச்சு – 1988● விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905● IMEI மீளாய்வு அலகு – 1909● விவசாயிகளுக்கான சேவைகள் – 1918● மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996● வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989● தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984● நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977●
Breaking News

அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக கனடாவுக்கு டிரம்ப் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.கனடா பிரதமர் பதவியிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்து பதவி விலகிய போது அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக கனடா ஏன் மாறக்கூடாது என்று டிரம்ப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறையச் சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், வரிகள் இருக்காது, வரிகள் வெகுவாகக் குறையும். மேலும் அவர்களைச் சுற்றித் தொடர்ந்து இருக்கும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலிலிருந்து அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பார்கள். ஒன்றாகச் சேர்ந்தால், அது எவ்வளவு சிறந்த தேசமாக இருக்கும் என டிரம்
Latest News

அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக கனடாவுக்கு டிரம்ப் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.கனடா பிரதமர் பதவியிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்து பதவி விலகிய போது அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக கனடா ஏன் மாறக்கூடாது என்று டிரம்ப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறையச் சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், வரிகள் இருக்காது, வரிகள் வெகுவாகக் குறையும். மேலும் அவர்களைச் சுற்றித் தொடர்ந்து இருக்கும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலிலிருந்து அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பார்கள். ஒன்றாகச் சேர்ந்தால், அது எவ்வளவு சிறந்த தேசமாக இருக்கும் என டிரம்

காய்ச்சல் தடுப்பூசி ஏற்றுகை தொடர்பில் கனடிய அரசாங்கம் விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.ஒன்டாரியோ மாகாணத்தில் மூத்த குடிமக்கள், நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த வாரம் முதல் காய்ச்சல் (Flu) தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.எதிர்வரும் அக்டோபர் 27 முதல், ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒன்டாரியோ மாநில மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மற்ற கனடிய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து காய்ச்சல் தடுப்பூசி திட்டங்கள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சிறிய குழந்தைகள், மூத்தவர்கள், ஆஸ்துமா மற்றும் COPD (chronic obstructive pulmonary disease) உடையோர் அதிக ஆபத்தில் உள்ளனர

73 வயது இந்திய மூதாட்டி ஒருவர் அமெரிக்காவில் புகலிடம் கோரி அந்த கோரிக்கை தோல்வியடைந்த நிலையில் கடந்த 8 ஆம் திகதி அவர் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.அமெரிக்காவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வசித்து வந்த 73 வயதுடைய வயோதிப் பெண் ஒருவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். நாடு கடத்தப்பட்ட பெண் சீக்கிய சமூகத்தைச் சார்ந்தவர் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.கடந்த 1991 ஆம் ஆண்டில் அவருடைய இரு மகன்களுடன் அவர் கலிபோர்னியாவில் குடியேறினார். எனினும் தற்போது அவரது புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு இந்த வார ஆரம்பத்தில் மூதாட்டி நாடு கடத்தப்பட்டார்.அமெரிக்க அதிபராக டிரம் பதவியேற்ற பின்னர் குடியேறிகள் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை மேற

கனடா, சில்வர் சுனாமி என்னும் வெள்ளி சுனாமி, அல்லது சாம்பல் சுனாமி என்னும் ஒரு விடயத்தை எதிர்கொள்ள இருக்கிறது.1946க்கும் 1964க்கும் இடையில் பிறந்த Baby boomers என அழைக்கப்படும் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், முதிர் வயதை அடையும் ஒரு நிலையே மக்கள்தொகை தொடர்பில் வெள்ளி சுனாமி என அழைக்கப்படுகிறது. அதாவது, இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகில் பிறந்த மக்கள் வேலைக்குச் செல்லத் துவங்கிய நிலையில், தற்போது, அவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் பணி ஓய்வுபெறும் வயதை எட்டியுள்ளார்கள்.கனடாவும் இதற்கு விதிவிலக்கல்ல. 2030ஆம் ஆண்டுவாக்கில், அவர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுவிடுவார்கள்.விடயம் என்னவென்றால், பணியாளர்கள் ஓய்வுபெறும்போது, அந்த இடத்தை நிரப்பும் அளவுக்கு இளைஞர்கள் இல்லை. அதைவிட கவலைக்குரிய விடயம் என்னவென்றா

கனடிய மத்திய அரசாங்கம் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பெரும்பாலான வீடுகளில் வீடு தோறும் தபால் விநியோகத்தை நிறுத்தும் திட்டத்தை அறிவித்த சில மணி நேரங்களிலேயே, கனடா தபால் தொழிற்சங்கம் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.எங்கள் தபால் சேவையும் தொழிலாளர்களையும் பாதிக்கும் அரசின் முடிவுக்கு எதிராக, உடனடியாக கனடா தபால் திணைக்களத்தில் பணிபுரியும் எங்கள் அனைத்து உறுப்பினர்களும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர் என தெரிவித்துள்ளது.வேலைநிறுத்தம் நீடிக்கும் வரை புதிய கடிதங்கள் மற்றும் பொதிகள் ஏற்கப்படமாட்டாது எனவும், சில தபால் அலுவலகங்கள் மூடப்படும் எனவும் கனடா தபால் பேச்சாளர் லிசா லியூ கூறியுள்ளார்.அரச நலத் தொகை காசோலைகள் மற்றும் ஏற்கனவே உள்ள உயிருடன் கொண்டுசெல்லப்படும் விலங்குகள் மட்டும

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் உலகின் உயரமான காளை குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிட்டுள்ளது.வல்கன் பகுதியில் வளர்க்கப்படும் ஹோல்ஸ்டீன் இன காளையான ‘பீஃப்’ (Beef) என்ற காளை தற்போது கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் உலகின் உயரமான காளையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இறைச்சிக்காக வளர்க்கப்படும் காளைகளில் ஒன்றான ‘பீஃப்’, அதற்கு மாறாக தனது உரிமையாளரான ஜாஸ்மின் என்ட்ஸ் அவர்களால் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டு வருகிறது.கின்னஸ் பதிவின்படி, ‘பீஃப்’ இப்போது 1.95 மீட்டர் (6 அடி 5 அங்குலம்) உயரம், 1,090 கிலோ எடை, மேலும் மாதந்தோறும் 1,130 கிலோ அல்ஃபால்ஃபா பச்சிலை (ஒரு மினிவேனின் அளவுக்கு சமமான பசுமை தீனி) உண்ணுகிறது. தனது புகைப்படம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுகிறது என்பதே ஒரு கனவு நனவாகிய

இலங்கையில் தேசிய அளவில் முதன்முறையாக, கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தாயொருவர் 6 குழந்தைகளை பிரசவித்த அரிய நிகழ்வு பதிவாகியுள்ளது.சிசேரியன் மூலம் 31 வயது இலங்கைத் தாய் ஒருவர் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள்.பேராசிரியர் டிரான் டயஸின் பராமரிப்பில், அதிகாலை 12:16 முதல் 12:18 வரை இரண்டு நிமிடங்களுக்குள் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டன. இந்நிலையில் தாய் மற்றும் பிறந்த ஆறு குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்ததால் பெரும்பாலானோர் உணவகங்களில் சாப்பிடுவதைக் குறைத்து, வீட்டிலேயே உணவருந்தும் நிலை அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.ரெஸ்டுரன்ட் கனடா நிறுவனம் வெளியிட்ட அண்மைய அறிக்கையின்படி, கனேடியர்களில் 75% பேர் உணவகங்களுக்கு செல்வதை குறைத்துள்ளனர்.குறிப்பாக 18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 81% பேர் உணவகச் செலவை குறைத்து வீட்டில் உணவுண்பதையே விரும்புகின்றனர்.“கடந்த ஆண்டை விட சில முன்னேற்றங்கள் இருந்தாலும், வாழ்க்கைச் செலவு நெருக்கடி தொடர்ந்து நிலவுகிறது. அதேவேளை, உணவகங்களின் செயல்பாட்டு செலவுகள் உயர்வதால், அவர்களின் லாப விகிதமும் பாதிக்கப்படுகிறது,” என ரெஸ்டுரன்ட் கனடா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கெல்லி ஹிகின்சன் கூறியுள்ளார

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Queen Elizabeth Way நெடுஞ்சாலையில் நேற்று காலை 11.45 மணியளவில்,சென்றுகொண்டிருந்த ட்ரக் ஒன்றின் சக்கரம் ஒன்று திடீரென கழன்று ஓடியது. வேகமாக உருண்டோடிய அந்த சக்கரம் இரண்டு வாகனங்கள் மீது மோதி பிறகு கிழே சாய்ந்துள்ளது. அந்த சக்கரம் மோதியதில், ஒரு கார் பலத்த சேதமடைய, அந்த காரை ஓட்டிய 53 வயதான சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். அவர் ஒரு அமெரிக்கர் ஆவார். அவருடன் அதே காரில் பயணித்த 52 வயதுடைய பயணி ஒருவர் காயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். சக்கரம் கழன்று ஓடிய ட்ரக்கின் சாரதியும் ஒரு அமெரிக்கர்தான். பாதுகாப்பற்ற ஒரு வாகனத்தை ஓட்டிய அந்த 33 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரத

கனடாவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கனடாவின் க்யூபெக் மாகாணம், லோங்குவெயில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 15 வயது நூரான் ரெசாய் உயிரிழந்த சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிறுவனின் தந்தை ஷரிப் ரெசாய், மகன் எந்த தவறும் செய்யவில்லை எனக் கூறி, “எங்களுக்கு நீதி வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். “என் மகன் எப்போதும் சிரித்துப் பிறரைக் கவர்ந்த பையன். அவர் குழந்தை மட்டுமே. இந்தக் கொலை நியாயமல்ல” என தந்தை தெரிவித்துள்ளார்.புத்தக பையை வைத்திருந்த மாணவன் மீது ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 5 விசாரணை அதிகாரி

கனடாவின் தண்டர் பே பகுதியில் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுமார் 116,000 டொலர் மதிப்புள்ள சந்தேகிக்கப்படும் போதைப்பொருள்களும், 15,000 டொலர்களுக்கும் மேற்பட்ட பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இந்த விசாரணையின் விளைவாக ஒன்டாரியோவைச் சேர்ந்த மூன்று பேரும் ஆல்பெர்டாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 18ம் திகதி பொலிஸார் பல இடங்களில் விசேட சோதனை நடத்தினர்.முதலில், மேமோரியல் அவென்யூ பகுதியில் உள்ள ஒரு பார்க்கிங் லாட்டில் சந்தேக நபர்களில் இருவரை பொலிஸார் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர்களில் ஒருவர் தப்பிக்க முயற்சி செய்ததுடன், கையிலிருந்த செல்போனை அழிக்க முயன்றார் என பொலிஸார் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து, கம்பர்லேண்ட்

கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 16 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை இரவு கியூபெக்கில் உள்ள சனெ் பேர்னார்ட் டி லாகோல் அருகே கனடா எல்லை பாதுகாப்பு பொலிஸார் குறித்த நபர்களை கைது செய்துள்ளனர். மொத்தம் 18 பேர் கொண்ட குழுவில் 2 பேரை இன்னும் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் எல்லையை கடக்க முயன்றதாக குறித்த நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.