Featured News
நாட்டு மக்கள் அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள் இதோ:-● பிரதமர் – 011-2321406● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171● அம்புலன்ஸ் (கொழும்பு) – 110● பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938● அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919● நீர் வடிகாலமைப்புச் சபை – 1939● போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984● குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962● கல்வி அமைச்சு – 1988● விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905● IMEI மீளாய்வு அலகு – 1909● விவசாயிகளுக்கான சேவைகள் – 1918● மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996● வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989● தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984● நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977●
Breaking News
ஒண்டாரியோவைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி தனிநபர் மற்றும் வணிக வங்கி கணக்குகளைத் தொடங்கியுள்ளனர்.இதற்காக அவர்கள் பிறப்புச் சான்றிதழ்கள், கடன் அட்டைகள், ஒண்டாரியோ ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் குடிவரவு ஆவணங்களைப் பயன்படுத்தியதாகப் பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.கணவர், வங்கியின் உண்மையான வாடிக்கையாளர் போல ஆள்மாறாட்டம் செய்து, புதிய கணக்குகளைத் தொடங்கி டெபிட் கார்டுகளைப் பெற்றுள்ளார். மோசடி கண்டுபிடிக்கப்படுவதற்குள் பல்வேறு வங்கி கிளைகளில் இருந்து அவர் பணத்தை எடுத்துள்ளார்.இவ்வாறு திருடப்பட்ட சுமார் 86,000 கனடிய டாலர் தொகையை, அவரது மனைவி தனது சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றியதாகக் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. குறித்த நபர் பிராம்ப்டனில் உள்ள அவ
Latest News
ஒண்டாரியோவைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி தனிநபர் மற்றும் வணிக வங்கி கணக்குகளைத் தொடங்கியுள்ளனர்.இதற்காக அவர்கள் பிறப்புச் சான்றிதழ்கள், கடன் அட்டைகள், ஒண்டாரியோ ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் குடிவரவு ஆவணங்களைப் பயன்படுத்தியதாகப் பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.கணவர், வங்கியின் உண்மையான வாடிக்கையாளர் போல ஆள்மாறாட்டம் செய்து, புதிய கணக்குகளைத் தொடங்கி டெபிட் கார்டுகளைப் பெற்றுள்ளார். மோசடி கண்டுபிடிக்கப்படுவதற்குள் பல்வேறு வங்கி கிளைகளில் இருந்து அவர் பணத்தை எடுத்துள்ளார்.இவ்வாறு திருடப்பட்ட சுமார் 86,000 கனடிய டாலர் தொகையை, அவரது மனைவி தனது சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றியதாகக் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. குறித்த நபர் பிராம்ப்டனில் உள்ள அவ
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, 3-வதாகவே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.இதனையடுத்து தமிழகத்தின் 18-வது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்று விஜய் உறுதிமொழி கூறியபோது அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த தவெக தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.முதல்வர் விஜய்யுடன் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா,
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வந்த இடதுசாரி கட்சிகள், இறுதியில் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தன. இதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதத்தை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சிடிஆர்.நிர்மல்குமாரிடம் அக்கட்சித் தலைவர்கள் வழங்கினர். இதன்மூலம் தவெக பலம் 116 ஆக உயர்ந்தது.அதேவேளையில், விசிக தலைவர் திருமாவளவனுடனும் தவெகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இடதுசாரி தலைவர்கள் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது.இதனிடையே, வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் ஆளுநர் மாளிகை சென்ற விஜய், ஆளுநர் அர்லேகரை 3-வது முறையாக சந்தித்து, எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை வழங்கி
கனடாவின் வேலையின்மை விகிதம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 6.9 சதவீதமாக உயர்ந்து, கடந்த ஆறு மாதங்களில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளதாக கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் வரி விதிப்புகள், வர்த்தக நிச்சயமற்ற தன்மை மற்றும் சர்வதேச அரசியல் சூழல்களுக்கு மத்தியில் கனேடிய வேலைவாய்ப்பு சந்தை கடும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது.ஏப்ரல் மாதத்தில் 15,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என ஆய்வாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மாறாக 17,700 வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முழுநேர வேலைவாய்ப்புத் துறையில் 46,700 பணியிடங்கள் பறிபோயுள்ளன.இது பகுதிநேர வேலைவாய்ப்புகளில் ஏற்பட்ட 29,000 அதிகரிப்பால் ஓரளவுக்கு ஈடுசெய்யப்பட்டாலும், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு சந்தையில் பலவீனம் தொ
விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததும், முதல்வருக்கு உண்டான பாதுகாப்புகள் விஜய்க்கு வழங்கப்பட்டன. நேற்று கான்வாய் வாகனங்கள் உள்பட வீட்டின் முன் நிறுத்தப்பட்ட போலீஸ் பாதுகாப்பும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்லேகர் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரை நேரில் அழைத்து எதன் அடிப்படையில் விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக வென்றது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் முன்பு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர
விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக கனேடியர்கள் பலர் தள்ளுபடி கடைகளை நாடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஒரு காலத்தில், காலாவதி திகதி பார்த்து பொருட்கள் வாங்கும் நாட்டு மக்களில் கனடியர்களை சேர்க்காமல் இருக்கமுடியாது. ஆனால், இன்று, best-before திகதி முடிவடைந்திருந்தாலும், அதையும் வாங்கிப் பார்க்கலாமே என்னும் எண்ணம் கனடியர்கள் பலருக்கு உருவாகியுள்ளது. அதாவது, விலைவாசி உயர்வால், எந்த பொருட்கள், குறிப்பாக மளிகைப்பொருட்கள் விலை குறைவாகக் கிடைக்கும் என பார்த்து வாங்கத் துவங்கியுள்ளார்கள் கனடியர்கள்.கனடாவில், Liquidation Marie போன்ற தள்ளுபடிக் கடைகளில் 50 சதவிகிதம் வரை குறைவான விலையில் மளிகைப்பொருட்கள் கிடைக்கின்றன.ஆகவே, அத்தகைய தள்ளுபடிக் கடைகளை நாடும் கனடியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க, அதற்கேற்ப கனடாவின
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த திமுகவுக்கும், எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவுக்கும் ஷாக் கொடுத்து தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மைக்கு மேலும் 11 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெகவை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.தவெகவை ஆதரிப்பது குறித்து காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘எந்தவொரு வகுப்புவாத சக்தியையும் இந்தக் கூட்டணியில் சேர்க்காமல் தவெக விலக்கி வைப்பதை அடிப்படையாகக் கொண்டே எங்களது ஆதரவு வழங்கப்படும். இந்தக் கூட்டணி, தற்போதைய அரசாங்கத்தை அமைப்பதற்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகள், மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல்களுக்கும் பொருந்தும்’ எனத் தெளிவாகத் தெரிவித்துள
காங்கிரஸ் கட்சி கிட்டத்திட்ட தவெகவுக்கு ஆதரவளிக்கும் மனநிலைக்கு சென்றுவிட்டது. விஜய்க்கு ராகுல் காந்தியிடம் உள்ள தொடர்பு இதற்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதேபோல ஆட்சியில் பங்கு என்ற அடிப்படையில் சில அமைச்சர் பதவிகளை பெறலாம் என்ற கனவோடு காங்கிரஸார், இப்போதே தவெகவுக்கு ஆதரவளிக்க தயாராகிவிட்டதாகவே சொல்லப்படுகிறது. இதன் காரணமாக 5 உறுப்பினர்களின் ஆதரவு விஜய்க்கு உறுதியாகவிட்டதாகவே பேசப்படுகிறது.இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ‘விஜய்யை எங்கள் எதிரியாக நாங்கள் பார்க்கவில்லை; பாஜக - அதிமுகவே எதிரி’ என்றார். எனவே அவரும் ஆட்சியில் பங்கு உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் விஜய்க்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு உண்டு. விசிகவின் வழியில் இடதுசாரிகளும் விஜய்க்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ள
கனடாவின் நயாகரா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில், நோயாளி ஒருவர் துப்பாக்கியுடன் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.செயின்ட் கேத்தரினஸில் உள்ள மரோட்டா ஃபேமிலி மருத்துவமனைக்கு நயாகரா பிராந்திய பொலிஸார் அழைக்கப்பட்டனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் துப்பாக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் விரைந்தனர். முதற்கட்ட சோதனையில், அவர் வைத்திருந்தது ஒரு போலி துப்பாக்கி என்பது தெரியவந்தது.எனினும், அவரது நன்னடத்தை விதிகளின்படி அவர் ஆயுதங்கள் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.இதன் காரணமாக அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் மேலும் பல
அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலாவுக்குவெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் சிறப்பான அரசு விருந்து அளித்தனர்.நேற்று நடைபெற்ற இந்த விருந்தில், வசந்த காலத்தின் புதிய சுவைகளும் ஐரோப்பிய தாக்கமும் கொண்ட மெனுவை மெலனியா டிரம்ப் பிரத்யேகமாக தேர்வு செய்திருந்தார். விருந்தில், கார்டன் வெஜிடபிள் வெலூட்டே' மற்றும் 'ஹார்ட்ஸ் ஆஃப் பாம்' சாலட் பரிமாறப்பட்டது.இதனை தொடர்ந்து, வெள்ளை மாளிகை தோட்டத்தில் இருந்து நேரடியாக பறிக்கப்பட்ட மூலிகைகள் மற்றும் ரிகோட்டா சீஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட 'ஸ்பிரிங் ஹெர்ப்டு ரவியோலி' வழங்கப்பட்டது.முக்கிய உணவாக, பாரம்பரிய ஐரோப்பிய பாணியிலான 'டோவர் சோல் முனியர்' மீன் உணவு, உருளைக
ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் செல்போன் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிப்பது குறித்தும், குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்தும் மாகாண அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகக் கல்வி அமைச்சர் போல் கலந்திரா தெரிவித்துள்ளார்.லண்டன் பகுதியில் புதிய பாடசாலைகளை நிர்மானிப்பது தொடர்பான அறிவிப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதற்கான முக்கிய காரணங்களைப் பகிர்ந்து கொண்டார்.ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செல்போன் பயன்பாடு ஒரு பெரும் சிக்கலாக மாறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். எனவே, பாடசாலை வளாகத்திற்குள் செல்போன்களைப் பயன்படுத்த முழுமையான தடை விதிக்க அரசு ஆலோசித்து வருகிறது. எனினும், உடல்நல காரணங்களுக்காக சில விதிவிலக்குகள் அளி
கனடாவின் ஒண்டாரியோவின் கிளாரிங்டன் (Clarington) அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற நேருக்கு நேர் மோதிய வாகன விபத்தில் 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சாலை 35/115 இன் (Highway 35/115) வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில், கன்செஷன் வீதி 3 இற்கு (Concession Road 3) தெற்கே இரண்டு SUV ரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதாக ஒண்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.விபத்துக்குள்ளான ஒரு SUV வாகனத்தின் ஓட்டுநரான கிளாரிங்டன் குடியிருப்பாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய வாகனத்தின் ஓட்டுநர் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்துக்கான உடனடி காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சமப்வம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்