Featured News
நாட்டு மக்கள் அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள் இதோ:-● பிரதமர் – 011-2321406● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171● அம்புலன்ஸ் (கொழும்பு) – 110● பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938● அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919● நீர் வடிகாலமைப்புச் சபை – 1939● போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984● குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962● கல்வி அமைச்சு – 1988● விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905● IMEI மீளாய்வு அலகு – 1909● விவசாயிகளுக்கான சேவைகள் – 1918● மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996● வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989● தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984● நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977●
Latest News
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாஹிர் அன்வர் பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்தை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியிருந்தாலும், இறப்பிற்கான காரணம் குறித்து மௌனம் காப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பகவல்பூரில் இவரது இறுதி சடங்குகள் நடைபெற்ற நிலையில், இது திட்டமிடப்பட்ட தாக்குதலா அல்லது உடல்நலக் குறைவா என்ற விவாதம் கிளம்பியுள்ளது.இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், புல்வாமா மற்றும் உரி தாக்குதல்களில் தொடர்புடைய இந்த அமைப்புக்கு தாஹிர் அன்வாரின் மறைவு பெரும் பின்னடைவாகும். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் மண்ணில் ஒவ்வொருவராக கொல்லப்பட்டு வருவது, அந்நாட்டிலுள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் சிதைந்து வருவதையே காட்டுகிறது. அ
லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து கடந்த பல நாட்களாகவே இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் லெபனான் நாட்டுக்குள் நுழைந்தும் இந்த தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.சமீபத்தில் தெற்கு லெபனானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.லெபனனில் குடியிருப்பு பகுதிகள், வணிக கட்டிடங்கள் மற்றும் எரிபொருள் நிலையம் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. மேலும் லெபனான் எல்லையில் உள்ள தைய்பே, லிதானி ஆகிய நகரங்களில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் பல தங்களின் மீது தாக்குதல் நடத்தி சிலரை கொன்றதாக இஸ்ரேல் கூறி இருக்கிறது.இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதலால் தெற்கு லெமன
கனடாவின் சஸ்கட்ச்வான் மாகாணத்தில், 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களை தடை செய்வது குறித்து பொதுமக்களின் கருத்தை கேட்க திட்டமிட்டுள்ளதாக மாகாண முதல்வர் ஸ்கொட் மோ தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா அண்மையில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு முழுமையான சமூக ஊடகத் தடை அமல்படுத்தியதை குறிப்பிட்டு, கனடாவும் இதுபோன்ற நடவடிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என அவர் சமூக ஊடகமொன்றில் பதிவிட்டுள்ளார்.அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 4,000-க்கும் மேற்பட்டவர்களில் சுமார் 75% பேர், ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட்டதுபோன்ற தடை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்த தடை, டிக்டாக், முகநூல், இன்ஸ்டாகிராம், யுடியுப் மற்றும் ஸ்னெப்சாட், போன்ற தளங்களில் 16 வயதிற்குட்பட்டவர்கள் கணக்குகள் உருவாக்குவதை
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பிரெஞ்சு-பலஸ்தீனிய உறுப்பினரான ரிமா ஹஸன் மான்ட்ரியல் மாநாடுகளில் பங்கேற்க இருந்த நிலையில் கனடாவிற்குள் பிரவேசிகக் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தாம் கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார். இதை “கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் முயற்சி” என அவர் விமர்சனம் செய்துள்ளார்.ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்பட்ட மின்அனுமதி (electronic travel authorization) பின்னர் வெள்ளிக்கிழமை திரும்பப் பெறப்பட்டதாக அவரது கட்சியான லா பிரான்ஸ் இன்ஸோமிஸ் தெரிவித்துள்ளது.கனடிய அதிகாரிகள், முன்னதாக விசா மறுப்பு அல்லது நுழைவு மறுப்பு, மேலும் குற்றச்சாட்டு அல்லது கைது தொடர்பான தகவல்களை அவர் வெளியிடவில்லை என குற்றம் ச
கனடாவின் ஹால்டன் பகுதியில், தபால் மூலம் கோக்கெயின் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பெப்ரவரி மாதத்தில் விசாரணை தொடங்கப்பட்டது.தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புர்லிங்டன் பகுதியில் உள்ள அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையின் போது, 42 வயதான ட்ரவர் ஹேர்ட்மேன் கைது செய்யப்பட்டார்.13 கிராம் கோக்கெயின், அஞ்சல் அனுப்புதல் தொடர்பான ஆதாரங்கள், குறுக்கு வில் (crossbow), போலி வாகன எண் பலகைகள், சுமார் 70,000 சட்டவிரோத சிகரெட்டுகள், திருடப்பட்ட பிக்கப் வாகனம் என்பன சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.4 போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், 2 குறுக்கு வில் வைத்திருத்தல் குற்றங்கள், 2 தடை செய்ய
கனடாவின் மிட்லாந்து பகுதியில் சனிக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது. சந்தேகத்திற்கிடமான ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால், அது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற அச்சத்தில் போலீசார் அவசர நடவடிக்கை எடுத்தனர்.இரவு சுமார் 11 மணியளவில் டொனால்டா வீதி – ஜான்சன் வீதி அருகே சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இரு இளைஞர்கள் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பழைய இராணுவ ஆயுதத்தைப் போன்ற ஒரு பொருளை கண்டுபிடித்துள்ளனர். அதை அருகிலுள்ள வீட்டுக்குள் கொண்டு சென்ற பின்னரே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த வீட்டிலிருந்தவர்களையும் அருகிலுள்ள குடியிருப்பாளர்களையும் பாதுகாப்பாக வெளியேறுமாறு அறிவுறுத்தினர
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், எரிபொருள் விலை இந்த வாரம் லிட்டருக்கு 2 டொலர் வரை உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனால் கார் பயணங்களுடன் விமான பயணங்களும் கடுமையாக பாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்முஸ் பகுதியில் நடைபெறும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், உலகளவில் எண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விலைகள் உயர்ந்து வருகின்றன.ட்ரூடோ விமான நிலையம் பகுதியில் பயணிகள் செலவுகளை சமாளிக்க சிரமப்படுகின்றனர்.“விமான டிக்கெட் விலை அதிகமாக உள்ளது, ஆனால் அதை ஏற்க வேண்டியதே” என சிலர் தெரிவித்தனர்.ஜான் கிரடெக் கூறுகையில், “கார் எரிபொருள் லிட்டருக்கு 40–50 சென்ட் வரை உயர்ந்துள்ளது; விமான எரிபொருள் விலை இரட்டிப்பாகியுள்ளது” என்றார்.இதன்
கனடாவில் எமிலி கோசாக் என்ற 95 வயதான மூதாட்டி, தனது அர்ப்பணிப்பு மற்றும் அயராத சேவையால் சமூகத்தின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.ஹோலி ஃபாமிலி நர்சிங் ஹோம் எனும் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் கடந்த 34 ஆண்டுகளாக தன்னார்வ தொண்டராக செயல்பட்டு வருகிறார். 1992ஆம் ஆண்டு தனது தாயார் அங்கு வசித்தபோது தொடங்கிய இந்த சேவை, இன்று வரை இடையறாது தொடர்ந்து செய்து வருகிறார்.நோயாளிகளுக்கு உணவு வழங்குதல், பிங்கோ விளையாட்டுகளை நடத்துதல், தேவையான உதவிகளை வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.95 வயதிலும் தினமும் சுமார் 3 கிலோமீட்டர் நடைபயிற்சி மேற்கொண்டு, அனைவரின் வாழ்விலும் ஒளி சேர்த்துக் கொண்டிருக்கிறார்.“ஒவ்வொரு நாளும் எனக்கு செய்ய ஏதோ ஒன்று இருக்க வேண்டும்” என்ற அவரது வாழ்க்கை நோக்கம் பலருக்கும்
கனடாவின் புதிய ஜனநாயகக் (NDP) கட்சியின் புதிய தலைவராக அவி லிவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கூட்டாட்சித் தரத்தில் தனது செல்வாக்கை இழந்துள்ள கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சித் தலைமைத் தேர்தலில் 56% ஆதரவு பெற்று, 39,734 உறுப்பினர்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற லிவிஸ், “எங்கள் கட்சி மீண்டும் எழுகிறது” என உறுதியளித்தார்.புதிய தலைவர் தனது உரையில், அமெரிக்காவின் பொருளாதார அழுத்தங்களையும், டிரம்ப் தலைமையிலான உலக அரசியல் சூழ்நிலையையும் கடுமையாக விமர்சித்தார்.சாதாரண மக்களுக்கு வாழ்க்கை நடத்துவதும் கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், கனடாவின் முக்கிய அரசியல் கட்சிகள் செல்வந்தர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய
அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் கனடியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்ட நிலையிலும், கனடியர்களை அமெரிக்க எல்லை அதிகாரிகள் மோசமாக நடத்தும் சம்பவங்கள் தொடர்கின்றன.அமெரிக்கா செல்ல முயன்ற கனடியர் ஒருவர், அமெரிக்க எல்லையில் மோசமான அனுபவம் ஒன்றை சந்தித்துள்ளார். கெவின் லார்சன் (68) என்னும் கனடியர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் திகதி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா செல்ல முயன்றுள்ளார். டிரம்ப் நிர்வாகம் கனடியர்களை நடத்தும் விதம் குறித்து தான் நன்கு அறிந்திருப்பதாக தெரிவிக்கும் கெவின், தன்னை அமெரிக்க எல்லை அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிடக்கூடும் என்பதைக் கூட தான் அறிந்துவைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.என்றாலும், இப்படி ஒரு மோசமான அனுபவம் தனக்குக் கிடைக்கும் என தான் கொஞ்சமும்
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி சனிக்கிழமை (மார்ச் 28) அதிகாலை அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.புதிய பிரதமராக பதவியேற்ற பாலன் ஷா (Balen Shah) தலைமையிலான அரசின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நேபாளத்தில் இடம்பெற்ற ‘Gen Z’ இளைஞர் போராட்டங்களை ஒடுக்கியதில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.அந்த போராட்டங்களின் போது சுமார் 77 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களாக முன்னாள் பிரதமர் ஒலி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதே வழக்கில் அப்போதைய உள்துறை அமைச்சராக இ
கனடாவின் வின்னிபெக் நகரத்தில் டிரான்ஸ்கோனா (Transcona) தொகுதி உறுப்பினர் ரஸ் வயாட் (Russ Wyatt) மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.ஒரு நபரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவருக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் போதைப்பொருள் வழங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வயாட் கைது செய்யப்பட்டார்.56 வயதான ரஸ் வயாட் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு, பின்னர் சில நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார்.கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நபர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.2025 டிசம்பர் மாதம் சமூக ஊடக தளம் வாயிலாக அறிமுகமான ஒரு நபரை, வின்னிபெக்கின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்