News
Featured News
Latest News
ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  815 views
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் ஈரானை தொடர்ந்து தாக்கிவரும் நிலையில் வடக்கு ஈரானில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இருப்பினும், உயிரிழப்புக்கள் ஏதுவும் ஏற்படவில்லை என ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்தில் காணாமல் போன 3 வயது குழந்தை பற்றி சமீபத்திய தகவல்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  803 views
கியூபெக் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை 3 வயதுச் சிறுமி ஒருத்தி காணாமல்போன சம்பவத்தில் அவளது தாய் சிறை செல்லும் நிலை உருவாகியுள்ளது.ஞாயிற்றுக்கிழமை, கியூபெக் மாகாணத்தில் வாழும் மூன்று வயதுச் சிறுமி ஒருத்தி மாயமான நிலையில், பொலிசார் அவளை தீவிரமாகத் தேடிவந்தார்கள். புதன்கிழமை மதியம் 2.00 மணியளவில், ட்ரோன் ஒன்று நெடுஞ்சாலை 417இன் ஓரமாக குழந்தை கிடப்பதைக் கண்டறிய உதவியது.உடனடியாக பொலிசார் அங்கு விரைய, அந்தக் குழந்தை நீரிழப்பினால் அவதியுற்றிருந்தது தெரியவந்தது. மற்றபடி அவள் பாதுகாப்பாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது.காணாமல் போன அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறார்கள். அதே நேரத்தில், குழந்தையை கவனிக்காமல் விட்டதற்காக அதன் தாய் மீது குற்றச்சாட்டு பதிவு
இஸ்ரேலில் சிக்கிக் கொண்ட கனடிய ஹாக்கி வீரர்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  569 views
கனடிய ஹாக்கி வீரர் ஒருவர் இஸ்ரேலில் சிக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.“நான் ஹாக்கி விளையாட வந்தேன் – ஆனால் இப்போது குண்டு சத்தங்களுக்கு நடுவில் உயிர் பாதுகாப்பிற்காக ஓடிக்கொண்டு இருக்கிறேன்” என 29 வயதான கனடா ஹாக்கி வீரர் டிமொத்தி பேய்ன் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் எலீட் ஹாக்கி லீக் (IEHL)-ல் ஜெருசலேம் கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடும் அவர், கடந்த வாரம் தான் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். ஆனால் அதைத் தொடர்ந்து ஈரானுடன் தொடங்கிய போரால், தோற்றுப்போனவனாக உணர்கிறார் என அவர் தெரிவித்துள்ளார். “இரவு 11, 12 மணிக்கு எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்குகிறது.எங்கள் வீடு அருகே குண்டு விழுந்தது. சாளரங்கள் உடைந்தன, சுவர்கள் இடிந்தன,” என அவர் குறிப்பிட்டுள்ளார். “நாங்கள் தங்கிய வீட்டில் குண்டுபுகலிடமும் இல்
கனமழை எச்சரிக்கை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  754 views
 கனடாவின் சில பகுதிகளில் கன மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனடிய சுற்றாடல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒன்ராறியோ மற்றும் க்யூபெக் மாகாணங்களில் வியாழக்கிழமை முழுவதும் கனமழை எச்சரிக்கை தொடருகிறது. சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.டொரண்டோவின் வடபகுதி மற்றும் ஓட்டாவா புறநகர் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் மழை எச்சரிக்கை அமலிலுள்ளது. பேரி சவுண்ட் (Parry Sound), ரோஸோ (Rosseau), கில்பியர் மாகாண பூங்கா (Killbear Provincial Park) ஆகிய பகுதிகளில் 40 முதல் 60 மில்லிமீட்டர் வரையான மழை பெய்யக்கூடும் என்றும், இது மதியம் வரை தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மழை நேரத்தில் வாகனங்களை
டொரண்டோவில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கும்பல் கைது
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  757 views
டொரண்டோவில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மாஃபியா போன்ற கும்பலான ‘த யூனியன்’ (The Union) தொடர்பாக விசாரணை ஒன்றின் போது, டொரண்டோ போலீசார் 20 பேரை கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 111 குற்றச்சாட்டுகளை பொலிஸார் பதிவு செய்துள்ளனர். ‘ப்ராஜெக்ட் யாங்கீ’ (Project Yankee) எனப் பெயரிடப்பட்ட இந்த விசாரணை கடந்த 2024 அக்டோபரில் தொடங்கப்பட்டது.டொரண்டோ பெரும்பாக பகுதியில் வாகனங்களை பழுதுபார்த்தல் மற்றும் பொருத்துதல் நிறுவனங்களுக்கு உதவுவதாக கூறி இந்தக் கும்பல் பல்வேறு வன்முறைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.தற்போது இந்த விசாரணை நிறைவடைந்து, கடந்த வாரம் பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இக்கும்பல் வன்முறையும்
கனடா பிரதமர் - இந்திய பிரதமர் சந்திப்பு
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  879 views
கனடா பிரதமர் மார்க் கார்னியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.பயணத்தின் முதல் நாடாக அவர் கடந்த 15ம் திகதி சைப்ரஸ் நாட்டுக்குச் சென்றார். அங்கு அந்நாடு ஜனாதிபதி கிறிஸ்டோடவுலிட்சை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.இதனை தொடர்ந்து இந்திய பிரதமர் மோடி கனடா சென்றார். கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் செவ்வாய்க்கிழமை (17) நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்தித்துள்ளார். அத்துடன், இத்தாலி, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி சந்தித்துள்ளார். கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து குரோஷியா
ஹாமில்டனில் வாகன திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் கைது
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  848 views
கனடாவின் ஹாமில்டனில் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 11 மற்றும் 15 வயதான சிறுவர்களை ஹாமில்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.நயாகரா பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பொன்றின் வாகனத் தரிப்பிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து வாகனம் கொள்ளையிடப்பட்டுள்ளது. ஒரு 2015 வெள்ளை நிறமுடைய செல்வர்டொ சில்வெர்டோ (Chevrolet Silverado) மற்றும் ஒரு 2015 வெள்ளை ஜீப் (Jeep Cherokee) வாகனங்களின் சாவிகளை திருடி வாகனங்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.ஆபத்தான முறையில் வேகமாக வாகனங்கள் செலுத்தப்படுவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்திய போது இரண்டு வாகனங்களும் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து போதைப் பொருட்கள் சிறிதளவு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஒண்டேரியோ மாகாண முதல்வரின் காரை திருட முயற்சி
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  822 views
ஒண்டேரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டின் எட்டோபிக்கோ வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த காரை திருட முயற்சித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு காரை திருட முயற்சித்தவர்கள் குறித்து அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.“நால்வர், முகமூடிகள் அணிந்து, தெருவில் வேகமாக வந்து என் டிரைவ்வேயில் இருந்த காரை எடுத்து செல்ல வந்தார்கள்,” என ஃபோர்ட் குறிப்பிட்டுள்ளார்.கனடாவின் குற்றவியல் நீதித்துறையை முதல்வர் கடுமையாக விமர்சித்தார். குறித்த நபர்களை ‘முட்டாள் குற்றவாளிகள்’ என அவர் விவரித்துள்ளார்.ந்தேக நபர்களை கைது செய்ததாக டொராண்டோ பொலிஸார், தெரிவித்திருந்தனர்.கைதான நான்கு பேரில் இரண்டு பேர் 17 மற்றும் 16 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் செயலியை நீக்க பொதுமக்களுக்கு ஈரான் அதிரடி உத்தரவு
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  824 views
ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மக்கள் அனைவரும் வாட்ஸ் அப் செயலிலை நீக்க வேண்டும் என்று ஈரான் உத்தரவிட்டுள்ளது.ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையேயான போர் கடந்த 13 ஆம் திகதி தொடங்கியது. ஈரான் அணுசக்தி நிலையங்கள், இராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இருநாடுகளின் இடையேயான போர் உலக நாடுகளை கவலை கொள்ள செய்துள்ளது.ஈரான் மீது இஸ்ரேல் முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்தி வருவதாக அரபு, இஸ்லாமிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இஸ்ரேலுடன் மோதல் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதால், ஈரான் தமது குடிமக்களை தங்கள் செல்போன்கள் மற்றும் இன்னபிற எலக
 அல்பர்ட்டாவில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1038 views
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை 932 தட்டம்மை (Measles) நோய்களுக்கான உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.கடந்த வார இறுதியில் மட்டும் 53 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அல்பெர்டா மாகாண அரசின் தரவுத்தள விவரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த 40 ஆண்டுகளில் அல்பர்ட்டா மாநிலம் சந்தித்த மிக உயர்ந்த தட்டம்மை பாதிப்பு இதுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது. தட்டம்மை நோய்தடுப்பை கட்டுப்படுத்துவது சவாலான நிலை” என அல்பெர்ட்டா மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஷெல்லி டுகன் கூறியுள்ளார்.கனடா 1998 ஆம் ஆண்டு தட்டம்மை நோயாளர்கள் இல்லாத நாடுகளின் வரிசையில் இடம்பிடித்திருந்தது. எனினும், தற்போது நோய் வேகமாக பரவும் நிலை உருவாகியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்ற
டிரம்புக்கு எதிராக அமெரிக்கா முழுதும் ஆர்ப்பாட்டம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  1080 views
ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் மில்லியன் கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன என்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.‘நோ கிங்ஸ்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டம் டிரம்பின் பிறந்த நாளான நேற்றுமுன்தினம் (14) மாலை இராணுவ அணிவகுப்பு வொஷிங்டன் டி.சியில் இடம்பெற்ற போது நடத்தப்பட்டுள்ளது.அமெரிக்க இராணுவத்தின் 250 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.டிரம்பை விமர்சிக்கும் பதாகைகளை அசைத்த வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் சட்டமியற்றுபவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் உரையாற்றினர்.இத்தகைய கூட்டங்கள் நியூயோர்க், பிலடெல்பியா மற்றும் ஹூஸ்டன் உள்ளிட்ட நகரங்களில் இட
76 வயதிலும் கல்வியில் ஆர்வம் காட்டும் கனேடியர்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  799 views
டேவிட் ஜாக்சன் என்னும் கனேடியர், தனது 76ஆவது வயதில் Mount Royal பல்கலையில் வரலாற்றில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். 1975ஆம் ஆண்டு, ஏற்கனவே கணிதத்தில் பட்டம் பெற்றவர் டேவிட். பிறகு பல இடங்களில் வேலை செய்த டேவிடுக்கு கல்வியின் மீதான ஆர்வம் மட்டும் குறையவேயில்லை.Dr. Scott Murray என்னும் வரலாற்றுத்துறை பேராசிரியரின் பயிற்றுவிப்பு முறையால் ஈர்க்கப்பட்ட டேவிட், 2007ஆம் ஆண்டு பகுதி நேரக் கல்லூரிப்படிப்பில் இணைந்தார்.இளைஞர்களுக்கு இணையாக வகுப்பில் ஆர்வம் காட்டுபவர் என ஆசிரியர்களாலும் சக மாணவர்களாலும் பாராட்டப்படும் டேவிட், சமீபத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார். அடுத்தபடியாக, 2033இல் ஒரு பட்டம் பெறும் வகையில், மீண்டும் பகுதி நேர கல்லூரிப்படிப்பை டேவிட் துவங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்த