·   ·  10 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 759
  • More

நயாகரா வீழ்ச்சி

Canada Day நயாகரா வீழ்ச்சி

Comments (0)
Login or Join to comment.
  • 3
·
Added a post

உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டீ, காபி அருந்துவது குறைந்து கொண்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக மக்கள் " "கிரீன் டீ" அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்

. . உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள " கிரீன் டீ" உதவுவதாக நம்பப்படுகிறது.தினமும் காலையில் பருகுவதால், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப் பட்டு, புத்துணர்ச்சி தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது அதேபோல், இயற்கை ஆர்வலர்களால் குறிப்பிடப்படும் இன்னொரு வகை

,. " புளு டீ " ஆகும். நீல நிற சங்குப்பூவின் மூலம் தயாரிக்கப்படுவதே " புளு டீ" -ன் சிறப்பு

  • . புளு டீ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது.
  • இதில் ஆன்டி— கிளைகேஷன் இருப்பதால், வயது முதிர்வைத் தடுத்து, இளமையை பாதுகாத்துக்கொள்ள உதவுவதாக நம்பப்படுகிறது.
  • தலையின் மேற்புறத்தில் உள்ள நுண் துளைகளில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை தூண்டக்கூடியது.
  • உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரலை பாதுகாக்கிறது.
  • நீரிழிவு நோயாளிகளின் உடலில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • " புளு டீ" யில் உள்ள " ஃப்ளேவனாய்ட்ஸ் என்ற ரசாயனம் புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.
  • உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
  • நோய்த் தொற்றுக்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
  • தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் அதற்கு உண்டு.
  • அஜீரணத்தை குணமாக்க வல்லது.
  • வயிற்றில் உண்டாகும் புண், எரிச்சல் ஆகியவற்றை தடுக்கிறது.
  • உடலின் வெப்ப நிலையைச் சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
  • மன அழுத்தத்தைக் தவிர்க்க உதவுகிறது.
  • " புளு டீ " தயாரிக்கும் முறை:
  • "கிரீன் டீ" தயாரிப்பது போன்றே இதையும் தயாரிக்க வேண்டும். .

கொதிக்க வைத்த தண்ணீரில் சில நீலநிற சங்குப்பூக்களை போட்டு, ஐந்து நிமிடம் கழித்து, இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சம் பழச்சாறு சில சொட்டுகள் விட்டு, தேவையான அளவு சுத்தமான தேன் கலந்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பருகலாம்.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சிகிச்சை பெறும் நோயாளிகள் ஆகியோர் கட்டாயம் தகுந்த ஆலோசனையின்றி " புளு டீ" அருந்தக்கூடாது.

  • 15
·
Added a post

சீனாவில் பெய்ஜிங் நகரில் உள்ள இராணுவ பொது மருத்துவப் பிரிவில் உள்ள மருத்துவ பேராசிரியர் சென் ஷூய் ரென் அவர்கள்கள் கேன்சருக்கான புதிய இயற்கை மருந்தினை கண்டறிந்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேற்படி விவரத்தினை ஒவ்வொருவரும் குறைந்தது 10 நபருக்கேனும் அனுப்பினால் மிக வேகமாக பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நபர்களுக்கு உதவியாக இருக்கும்.

Bitter gourd in hot water can help you. No matter how busy u r, u need to read this, then spread to friends and others. Spread the love.

பாகற்காயை சுடுதண்ணிரில் போட்டுக் குடிக்க அது நமக்கு உதவி செய்யும். நீங்கள் எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து இதை படிக்கவும்.

Hot bitter gourd can kill cancer cells!

சூடான பாகற்காய் சுடுநீர் .....கேன்சரை உருவாக்கும் செல்களை கொல்லும் சக்தியை கொண்டது.

Cut 2-3 thin slices of bitter gourd n put in a glass, pour hot water, water will become alkaline (alkaline). Drink every day. For anyone, it will be useful.

பாகற்காயினை எடுத்து 2 -3 மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளரில் போட்டு அதில் சூடான நீரை ஊற்ற வேண்டும். அந்த சூடான நீர் ALKALINE எனப்படும் காரத்தன்மை கொண்ட நீராக மாறிவிடும். அந்த தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மிக மிக உதவியுள்ளதாக இருக்கும்.

Hot water bitter gourd will emit an anti-cancer substance. This is a new development in the world of natural medicine, useful in treating cancer.

பாகற்காயில் உள்ள கேன்சர் நோயினை எதிர்க்கும் மருத்துவ பொருளினை சுடு தண்ணீரில் வெளியேற்றி விடும். இயற்கை மருத்துவத்துறையில் இது மிக முக்கியமான முன்னேற்றமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. மேலும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

Hot water bitter gourd extract will affect the cyst and tumor. Already proven, it can help various kinds of cancer.

இந்த பாகற்காய் இரசமானது கட்டிகள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் மீது தீவிரமாக செயல்படுகிறது என்பது ஏற்கனவே நிரூபனமாகியுள்ளது. மேலும் இது பல்வேறு வகையான புற்றுநோய்களையும் தீர்க்க உதவுகிறது.

Using bitter gourd in treating cancer, it will only kill the malignant cells of the tumor. It will not affect healthy cells.

நாம் இந்த பாகற்காய் இரசத்தினை தொடர்ந்து பயன்படுத்தும் அது புற்றுநோய் கட்டியில் தீவிரமாக பரவக்கூடிய செல்கள் மீது அதிதீவிரமாக செயல் பட்டு Malignant எனப்படும் வேகமாக பரவும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. தவிர பாதிக்கப்படாத மற்ற செல்களுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை.

In addition, amino acids and polyphenol oxidase in bitter gourd, can balance high blood pressure, blood circulation, reduce blood clotting and can prevent the occurrence of deep vein thrombosis.

இது மட்டுமல்லாமல் பாகற்காயில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் பாலிஃபினல் ஆக்சைடுகள் நமது உடலில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தினை சமன் செய்கிறது. இரத்த நாளங்களில் சீரான இரத்த ஓட்டத்தினையும், நாளத்தில் உள்ள இரத்த அடைப்புகளையும் சீர்செய்கிறது.

  • 18
  • 14
·
Added a post

இன்றைய இளைய தலைமுறையினர் முதல் வயதான முதியவர்கள் வரை இன்றைய காலகட்டத்தில் இடுப்பு வலியால் அவதிப் படுபவர்கள் ஏராளம். இந்த இடுப்பு வலிக்கு அவர்கள் செய்யும் வேலை கூட ஒரு காரணமாக இருக்கலாம். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு வலி உண்டாகிறது. அதிலும் கணினி முன் அமர்ந்து நீண்ட நேரம் பணிபுரிபவர்களுக்கு முதுகுத் தண்டுவடம் பாதிக்கப் படுவதால் அவர்கள் தொடர்ச்சியான இடுப்பு வலியால் அவதிப் படுகிறார்கள். முறையான உடற்பயிற்சி இல்லாத காரணத்தாலும் இடுப்பு வலி ஏற்படுகிறது.

👉🏻இதற்கு தீர்வு என்ன?

நீங்கள் கணினி முன் அமர்ந்து நீண்ட நேரம் பணிபுரிபவர்கள் என்றால், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல் அடிக்கடி இருக்கையை விட்டு எழுந்து செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட கணினி மேஜைகளை பயன்படுத்த வேண்டும்.கணினி மேஜையின் உயரத்தை ஏற்றி இறக்கி பயன்படுத்துவது போல் வடிவமைத்துக் கொண்டால் நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியின் உயரத்திற்கு ஏற்ப மேஜையின் உயரத்தை மாற்றிக் கொள்ள எளிதாக இருக்கும். தினமும் வேலை முடிந்ததும் உடற் பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

கணினி முன் அமர்ந்து பணியாற்றும் போது நாற்காலியில் நன்றாக நிமிர்ந்த நிலையில் அமர்ந்து பணியாற்ற வேண்டும்.

தொடர்ந்து ஒரே மாதிரி அமர்ந்து பணியாற்றுவதால் இடுப்பு பகுதியில் சதைகள் அழுத்தப்பட்டு முதுகுத் தண்டின் ஜவ்வில் தேய்மானம் ஏற்படுவதாலும் இடுப்பு வலி ஏற்படுகிறது.

நீங்கள் ஹை ஹீல்ஸ் அணியும் பழக்கம் உள்ளவர்கள் எனில் அதனால் கூட உங்களுக்கு இடுப்பு வலி முதுகு வலி ஏற்படலாம். உயரமான குதிகால் கொண்ட செருப்புகளை அணிந்து நீண்ட நேரம் நடக்கும் பொழுது உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்துவதால் முதுகு வலி, இடுப்பு வலி ஏற்படுகிறது. அதனால் உயரமான குதிகால் கொண்ட செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

👉இதற்கான எளிய தீர்வுகள் என்ன?

✍️கொள்ளு ரசம் வைத்துக் குடித்தால் இடுப்பு வலி குணமாகும். கொள்ளு உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.

✍️மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி மற்றும் வயிற்று வலி நீங்க வெந்தயத்தை பொடி செய்து அதனுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

✍️வெள்ளைப் பூண்டு மற்றும் கருப்பட்டி இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இடுப்பு வலி குறையும்.

✍️மிளகை வறுத்து அதில் எள் எண்ணெய் கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும்.

✍️உணவில் உளுந்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால் இடுப்பு வலி சரியாகும். உளுந்தை களி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குறையும்.

  • 17
·
Added a post

மூட்டு வலி பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். முக்கியமான சில காரணிகள்:

1. **வயது**: வயது அதிகரிக்கையுடன், மூட்டுகளில் க்ருமம் குறைவதால் மூட்டு வலி ஏற்படும்.

2. **அர்திரிடிஸ் (Arthritis)**: இந்நோய் மூட்டுகளில் அழற்சியை ஏற்படுத்துகிறது, இது மூட்டு வலியின் முக்கியமான காரணியாகும். இது ருமாடாய்டு அர்திரிடிஸ் (Rheumatoid Arthritis) அல்லது ஓஸ்டியோஅர்திரிடிஸ் (Osteoarthritis) ஆக இருக்கலாம்.

3. **மூட்டில் காயம்**: மூட்டு பகுதியில் ஏற்பட்ட அடிபடுதல், முறிவு அல்லது காயம் காரணமாக வலி ஏற்படலாம்.

4. **சதைப்பிடிப்பு (Gout)**: இது ஒருவகை அர்திரிடிஸ், உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் ஏற்படும்.

5. **சவாசியல் பிரச்சினைகள்**: முதுகுத்தண்டு அல்லது மூட்டுகளின் சவாசியல் பிரச்சினைகள் மூட்டுகளின் செயல்பாட்டை பாதிக்கின்றன, இது வலிக்கு வழிவகுக்கும்.

6. **உடல் பருமன்**: உடல் பருமன் அதிகமாயிருப்பது மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும், அதனால் வலி அதிகரிக்கும்.

7. **நீரிழிவு**: நீரிழிவு நோயாளிகளில், நரம்புகள் மற்றும் மூட்டுகளில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

8. **அதிக உடற்பயிற்சி அல்லது உடல் சிரமம்**: அதிகமான உடற்பயிற்சி அல்லது உடல் சிரமம் மூட்டுகளை மேலிடுமாறு அவற்றைச் சிரமப்படுத்துகிறது.

மூட்டு வலி நீடித்தால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.

  • 23
·
Added a post

முட்டைகோஸில் கால்சியம், அயோடின், பொட்டாசியம், குளோரின், சல்பர் போன்ற அனைத்துவிதமான தாதுக்களும் உள்ளன. இச்சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கவேண்டுமானால் பெரும்பாலும் பச்சையாகவே சாறெடுத்துச் சாப்பிடுவதுதான் நல்லது.

வேகவைத்த கோஸைவிட வேகவைக்காத கோஸ் எளிதில் செரிமானமாகும். இதில் வைட்டமின் ஏ. பி. சி. மற்றும் யு ஆகியவை உள்ளன.

முட்டைகோஸின் மருத்துவ குணம் என்று எடுத்துக் கொண்டால் சிறுகுடலைத் தூண்டி அதைச் சரியாக செயல்பட வைக்கும் ஆற்றல் கொண்டது.

பச்சை முட்டைகோஸின் சாறு மலச்சிக்கலைப் போக்கும். முட்டைகோஸ் சாறு இரைப்பை, முன் சிறுகுடல் புண்ணை ஆற்றும். செரிமானப் பகுதியில் பெப்சின் என்ற அமிலம் சுரந்து இரைப்பை அரிக்கப்படுவதை கோஸ் தடுத்து விடுகிறது. சமைக்கும்போது அழிந்துவிடும் கோஸின் சத்துக்கள்

பச்சையாக சாப்பிடும்போது முழுமையாகக் கிடைக்கிறது.

  • 24
·
Added a post

உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நாம் பல்வேறு செயல்களை அன்றாடம் மேற்கொண்டு வருகிறோம். அதுவும் இயற்கை வழிகளின் மூலமே நாம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புகிறோம். அப்படி இயற்கையாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஓர் வழி தான் ஜூஸ் குடிப்பது.

அதிலும் வீட்டிலேயே காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்தால், நாம் தினமும் அடிக்கடி அவஸ்தைப்படும் நோய்களில் இருந்து விடுபட முடியும். இங்கு அப்படி உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பானங்களில் ஒன்று கேரட் ஜூஸ் உடன் இஞ்சி சாறு கலந்து குடிப்பது.

இப்போது இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலில் இருக்கும் எந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும் என்று காண்போம்.

பார்வை மேம்படும் கண் பிரச்சனை இருந்தால், கேரட் ஜூஸில் இஞ்சி சாறு கலந்து குடியுங்கள். இதனால் அந்த பானம் கண்களில் உள்ள நரம்புகளுக்கு ஊட்டமளித்து, வலிமைப்படுத்தி, பார்வையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

புற்றுநோய் தடுக்கப்படும் கேரட் இஞ்சி ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, அபாயகரமான புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.

நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் கேரட் மற்றும் இஞ்சியில், ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளது. இவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழித்து, நோய்களிடமிருந்து பாதுகாத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

குமட்டல் குறையும் இந்த இயற்கை பானம், வயிற்றில் உள்ள அமிலத்தை நிலைப்படுத்தி, குமட்டல் மற்றும் வாந்தி உணர்வைக் குறைக்கும்.

தசை புண்கள் கேரட் மற்றும் இஞ்சியில் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் ஏராளமாக உள்ளது. இவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடித்தால், தசைகளில் இருக்கும் உட்காயங்கள் மற்றும் அதனால் ஏற்படும் வலிகள் குறையும்.

இதய நோய்கள் கேரட் மற்றும் இஞ்சி ஜூஸ் இதயத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரித்து, இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

வாய் ஆரோக்கியம் கேரட் இஞ்சி ஜூஸ், ஈறுகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் இது வாயில் எச்சிலின் உற்பத்தியைத் தூண்டி, வாய் வறட்சியடைவதைத் தடுத்து, வாய் துர்நாற்றம் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும்.

ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்:

கேரட் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)

இஞ்சி - சிறிது (துருவியது)

தண்ணீர் - தேவையான அளவு

ஆரஞ்சு ஜூஸ் - சிறிது (விருப்பமிருந்தால்)

செய்முறை: மிக்ஸியில் துண்டுகளாக்கப்பட்ட கேரட், துருவிய இஞ்சி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டினால், ஜூஸ் ரெடி!

  • 24

Good Morning

  • 23
·
Added a post
  • ஜீரண சக்தியை மேம்படுத்தும்.
  • ஜீரண வழித்தட ஆரோக்கியத்தை பேணும்.
  • மலச்சிக்கலைத் தடுக்கும்
  • வாந்தி பேதி, வயிற்றுக் கடுப்பு, கிறுகிறுப்பு, தலைச்சுற்றலை குணப்படுத்தும்.
  • சீத்தாக்காயை உலர்த்தி, பொடியாக்கி தலையில் தேய்த்தால், பேன் தொல்லை நீங்கும்.
  • சீத்தாப்பழ விதைப்பொடியோடு கடலைமாவு கலந்து, எலுமிச்சை சாற்றில் குழைத்து, தலையில் தேய்த்து ஊறிய பின் குளித்தால், முடி உதிர்வது குறையும்.

சத்துக்கள்:

  • இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், தாமிரச் சத்துக்இளை உள்ளடக்கியது.
  • ஆரோக்கியமான தோலுக்குத் தேவைப்படும் , வைட்டமின் ஏ சத்து நிரம்பவே உள்ளது.
  • பார்வைத் திறன் மேம்படவும் சீத்தாப்பழம் உதவுகிறது.
  • இதிலுள்ள மெக்னீசியம் சத்து, இதய அடைப்பு நோய் வராமல் பாதுகாக்கும்.
  • குறைவான கொழுப்புச்சத்தைக் கொண்டது.
  • இதன் சதையை விழித்தெழுந்து, பாலுக்கு பதில் , பானமாக பல நாடுகளில் பயன்படுத்துகின்றனர்.
  • இதன் மரப்பட்டையில் துவர்ப்பு சுவை அதிகம்; இதில் டானின் அமிலம் உள்ளது. எனவே, மருந்துகள் செய்யப் பயன்படுகிறது.
  • 26
·
Added a post

சேனைக்கிழங்கு அல்லது யாம் (Elephant Foot Yam) மருத்துவ குணங்கள் நிறைந்த கிழங்கு வகைகளில் ஒன்றாகும்.

இது ஆயுர்வேதம், சித்தா, மற்றும் யுனானி போன்ற பல மருத்துவ பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

இது அறிவியல் ரீதியாக அமோர்போபாலஸ் பியோனிஃபோலியஸ் (Amorphophallus paeoniifolius) என்று அழைக்கப்படுகிறது.

சேனைக்கிழங்கு வழக்கமான சமையல் உட்பட பல மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் ஒரு கிழங்கு ஆகும்.

ஊட்டச்சத்து உண்மைகள்:

சேனைக்கிழங்கில் புரதம், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் ஆகியவை வளமாக நிறைந்துள்ளன.

100 கிராம் சேனைக்கிழங்கு பின்வரும் ஊட்டச்சத்தை வழங்குகிறது (2).

  • கலோரிகள்: 118 கலோரிகள்
  • நீர்ச்சத்து: 66 கிராம்
  • கார்போஹைட்ரேட்டுகள்: 25 கிராம்
  • கொழுப்பு: 1.5 கிராம்
  • புரதம்: 9.81 கிராம்
  • நார்ச்சத்து: 5.7 கிராம்
  • பொட்டாசியம்: 1208 மிகி
  • கால்சியம்: 20 மிகி
  • இரும்பு: 1.8 மிகி
  • மெக்னீசியம்: 82 மிகி
  • சோடியம்: 14.2 மிகி
  • துத்தநாகம்: 2 மிகி
  • தாமிரம்: 0.3 மிகி

சேனைக்கிழங்கு உண்பதால் கிடைக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள் இதோ.

சேனைக்கிழங்கு உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

1. எடை இழப்பிற்கு உதவுகிறது

சேனைக்கிழங்கானது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை மிக அதிகமாகவும் மற்றும் குறைவான கலோரிகளையும் கொண்டுள்ளது.

மேலும் எலிகளின் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பாசிப்பயறு மற்றும் சேனைக்கிழங்கு ஆகியவை கொலஸ்ட்ரால் அளவைக் கணிசமாகக் குறைக்க உதவுகிறது என தெரியவந்துள்ளது.

எனவே, சேனைக்கிழங்கு சாப்பிடுவது உங்களுக்குஉடல் எடையைகுறைக்கஉதவும்.

2. அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது

சேனைக்கிழங்கு சாறில் அழற்சி எதிர்ப்பு (Anti-Inflammatory) பண்புகள் உள்ளன என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன

எனவே, இது பல அழற்சி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, மூட்டுவலி, பெருங்குடல் அழற்சி போன்ற அழற்சி நோய்களின் போது வலியை தணிக்க உதவும்.

3. கல்லீரல் செயல்பாட்டை பாதுகாக்கிறது

சேனைக்கிழங்கில் குர்செடின் (Quercetin) எனப்படும் வேதிப்பொருள் உள்ளது.

கல்லீரல் செயல்பாடுகளை பாதுகாப்பதில் இந்த சேர்மம் பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன

4. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்தது

சேனைக்கிழங்கில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மிக அதிகளவில் உள்ளன

எனவே, இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை (Oxidative Stress) தடுத்து புற்றுநோய் வராமல் பாதுகாக்க உதவுகிறது.

மேலும், இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நமது முதுமைத் தோற்றத்தைத் தாமதப்படுத்தவும் (Prevents Ageing) உதவுகின்றன.

5. சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது

சேனைக்கிழங்கு குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளதால் உங்கள் ரத்த சர்க்கரை அளவை விரைவில் உயர்த்தாது

மேலும், இதில் மாவுச்சத்து குறைவாகவும் மற்றும் கணிசமான அளவு நார்ச்சத்தும் உள்ளது.

இதுமட்டுமின்றி, சேனைக்கிழங்கில் நீரிழிவு நோயை எதிர்க்கும் பண்புகள் உள்ளதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ன .

எனவே, இதனை உங்கள் வழக்கமான உணவுகளில் சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்.

6. ஹார்மோன் சமநிலை

சேனைக்கிழங்கானது பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை உகந்த அளவில் பராமரிக்கிறது.

சேனைக்கிழங்கின் இந்த குணம் மாதவிடாய் முன் ஏற்படும் வலிகளை தடுக்கவும், அதிலிருந்து விடுபடவும் உதவுகிறது.

இதற்கு அதில் உள்ள வைட்டமின் B6 கூட காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது

7. மன அழுத்தத்தை தணிக்க உதவுகிறது

ஜிங்க், பொட்டாசியம், மெக்னீசியம், செலினியம் போன்ற அத்தியாவசிய கனிமங்கள் சேனைக்கிழங்கில் வளமாக நிறைந்துள்ளன.

இந்த கனிமங்கள் மன அழுத்தத்தை தணிக்கவும், இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகின்றன.

8. மலச்சிக்கலை போக்கும்

சேனைக்கிழங்கு செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் மலச்சிக்கலை தணிக்க உதவுகிறது.

மேலும், இது தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு மற்றும் மூல நோய் போன்ற செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது

  • 26
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மற்றவர்களுக்கு கருத்துசொல்வதை குறைத்துக் கொள்வது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார நிமித்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

ரிஷபம்

பூர்வீக சொத்துக்கள் மூலம் மேன்மையான சூல்நிலைகள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான செயல்களையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்த மந்த தன்மை குறையும். மறைமுக திறமைகளை வெளிப்படும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

மிதுனம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். மனதிற்குப் பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பயணங்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனை விற்பது வாங்குவது தொடர்பான பணிகளில் லாபங்கள் உண்டாகும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் மதிப்புகள் மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கடகம்

குணநலன்களில் சில மாற்றம் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில மாற்றம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வெளியூர் பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். கற்றல் பணிகளில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். வாழ்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

சிம்மம்

அரசால் அனுகூலம் உண்டாகும். கல்வி பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கடன் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணங்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கன்னி

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தொழில் சார்ந்த புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீகத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கி சாதகமான முடிவுகள் ஏற்படும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதன் மூலம் ஆர்வம் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : காவி

துலாம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். மற்றவர்களிடம் வீண் வாதங்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். அரசு பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

விருச்சிகம்

போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர் பாலின மக்கள் மூலமாக பிறக்கும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். குறுந்தொழில் கடன் கொடுப்பதில் சிந்தித்து செயல்படவும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

தனுசு

புதிய நபர்களிடம் விழிப்புடன் செயல்படவும். பழைய நினைவுகள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். தொழில் சார்ந்த சில நெருக்கடிகள் தோன்றி மறையும். பொன் பொருள்களை கையாள்வதில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் பதற்றம் இன்றி செயல்படவும். அரசு பணிகளில் தாமதங்கள் உண்டாகும். பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

மகரம்

உடன் இருப்பவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனை சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். சிரமம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

கும்பம்

அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சிந்தனைகள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை புரிந்துகொள்வீர்கள். கடன்களை அடைப்பதற்கான எண்ணங்கள் மேம்படும். வழக்கு பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மீனம்

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த மந்த தன்மை குறையும். கோபத்தை குறைத்து செயல்படுவதன் மூலம் உறவுகள் மேம்படும். புதுவிதமான கலைகளில் ஆர்வம் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

  • 229
·
Added a post

விசுவாவசு வருடம் தை மாதம் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 6.2.2026.

இன்று அதிகாலை 01.41 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.

இன்று அதிகாலை 02.44 வரை சுகர்மம். பின்னர் திருதி.

இன்று அதிகாலை 03.11 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 02.54 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று அதிகாலை 04.41 வரை மரண யோகம். பின்னர் காலை 06.35 வரை சித்த யோகம். பிறகு அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=412&dpx=2&t=1770349259

நல்ல நேரம்:

காலை : 09.00 முதல் 10.00 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 172

Good Morning...

  • 184
·
Added article

தமிழ் திரையுலகில் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக வழங்கவிருக்கும் திரைப்படம் 'தாய் கிழவி'. அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், மூத்த நடிகை ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ராதிகாவின் 'பவுன் தாய்' என்ற வட்டிக்கு விடும் அதிரடி கதாபாத்திரத்திற்காகப் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இப்படத்தின் முதல் பாடலான 'தாய் கிழவி வாரா' தற்போது வெளியாகியுள்ளது.

இப்பாடலின் மிக முக்கியமான ஈர்ப்பு என்னவென்றால், இதனை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியிருப்பதுதான். துள்ளலான இசையில் அவரது குரல் பாடலுக்கு ஒரு தனி ஆற்றலை வழங்கியுள்ளது. இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, கிராமத்து மணமும் நவீன இசையும் கலந்த ஒரு தரமான பாடலை வழங்கியுள்ளார். கருமாத்தூர் மணிமாறன் எழுதியுள்ள வரிகள், 'பவுன் தாய்' கதாபாத்திரத்தின் கம்பீரத்தையும் அந்த ஊரில் அவருக்கு இருக்கும் செல்வாக்கையும் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன.

  • 341
·
Added a news

 கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தந்தவர்கள், அதன் காலம் முடிவடைந்ததுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கடுமையாக்கப்பட்டுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் (Canadian Immigration Minister Lena Diab)தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்காலிக விசாக்களில் கனடாவுக்குள் வருபவர்கள் வெளியேறுவதைக் கண்காணிக்க டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஒரு நபர் நாட்டை விட்டு வெளியேறும் போது அவரது விபரங்களை எல்லைப் பாதுகாப்பு முகவரகம் பதிவு செய்கிறது.

எனினும் விசா காலம் முடிந்ததால் குறிப்பிட்ட நபர் வெளியேறுகிறாரா என்பதைத் தானாகக் கண்டறியும் வசதி இல்லை என கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் (Canadian Immigration Minister Lena Diab) சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை சாதாரண நடைமுறையின் மூலம் சரிபார்க்க அதிக நேரம் எடுப்பதால், அதனை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2026ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.9 மில்லியன் தற்காலிக விசாக்கள் காலாவதியாகவுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

  • 344
·
Added a post

பலா விதையில் நிறைய சத்துக்கள் உள்ளன ! வயோதிகம் காரணமாக , இரும்புச்சத்து உடலை பாதிக்கும் அனீமியா உள்ளிட்ட ரத்த குறைபாடுகளை தடுக்கும் . இதில் , வைட்டமின் - ஏ சத்து அதிகம் . இது பார்வை திறனைக் கூர்மையாக்கும் . மாலைக்கண் நோய் வராமல் தடுக்கும் ; மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் .

தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவாகி , முடி அடர்த்தியாக வளர உதவும் . இதை சமைத்து உண்பதால் சுருக்கத்தை குறைக்கும் ; சருமத்தை பொலிவாக்கும் ! பலா விதைகளை அரைத்து , தேன் மற்றும் பாலுடன் கலந்து , ' பேஸ் பேக் ' போல் பயன்படுத்தலாம் .

பலா விதையை பொடி செய்து , நீருடன் கலந்து குடித்தால் , செரிமானக் கோளாறுகள் தீரும்

  • 347
·
Added a post

கருஞ்சீரகப் பொடியாக்கி வெந்நீர், தேன் கலந்து பருகலாம்.இதனால் சிறுநீரகக் கற்களும், பித்தப்பை கற்களும் கரையும்.

பொடியை 50 மி.லி.தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் 2 சொட்டு மூக்கில் விட்டால் மூக்கடைப்பு விலகும்.

ஒரு தேக்கரண்டி பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதோடு தேன் சேர்த்து சாப்பிட, நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி அகலும்.

குளியல் பொடிகளில் கருஞ்சீரகப் பொடியை கலந்து பயன்படுத்தலாம்.

கரப்பான், சோரியாசிஸ் போன்ற தோல் நோய்க்கு, கருஞ்சீரகப் பொடியை தேய்த்துக் குளிக்கலாம்.இதனால் நோய் தீவிரம் குறையும்.நோயால் ஏற்பட்ட புண்கள், தழும்புகள் மறையும்.

வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து கருக விடாமல் வறுத்து பொடியாக்கி, ஒரு டீஸ்பூன் அளவு வெதுவெதுப்பான நீரில் கலந்து இரவு நேரத்தில் குடிக்க வேண்டும்.இதற்குப் பிறகு வேறு உணவு சாப்பிடக்கூடாது.இப்படி செய்தால், உடலில் தேங்கியுள்ள நச்சுக்கள் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேறும். தேவையற்ற கொழுப்பு குறையும்.இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, இரத்த ஓட்டம் சீராகும்.

பொடியை தண்ணீரில் கலந்து குடிக்க, வயிற்றுப் புண்கள் குணமாகும்.

பொடியை மோரில் கலந்து குடித்தால், தொடர்ந்து நிற்காமல் வரும் விக்கல் கூட நின்று விடும்.

பொடியை வெந்நீரில் அருந்தி வர மலச்சிக்கல் தீரும்.

தேவையற்ற உடல் எடையைக் குறைக்கவும் கருஞ்சீரகம் உதவுகிறது.

கருஞ்சீரக எண்ணெயை தலைக்குத் தேய்த்து குளிக்க, தலைமுடி கொட்டுவது குறைந்து, முடி வளர்ச்சி அடையும்.

பொடியை பாலில் கலந்து முகத்தில் பூசி வர, முகப் பருக்கள், கொப்புளங்கள், புண்கள் மறையும்.

கருஞ்சீரகப் பொடியோடு கொத்துமல்லி பொடி சேர்த்து வெந்நீர் அல்லது பாலில் கலந்து குடித்து வர, செரிமானக் கோளாறுகள் மற்றும் வாயுத்தொல்லை நீங்கும்.

கருஞ்சீரகம் சிலருக்கு வெகு அரிதாக ஒவ்வாமையை ஏற்படுத்தும்.வயிறு வலி, வாந்தி அல்லது மலச்சிக்கலை உண்டாக்கும்.எனவே பயன்படுத்தும் போது இத்தகையத் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்று பரிசோதித்து விட்டு, பயன்படுத்துவது நல்லது.

தகவல் : இணையத்தில் இருந்து எடுத்தது.

  • 347
·
Added a post

இந்திய ஜனாதிபதி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் ஒரு முறை பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலை சந்தித்தார். சாப்பிடுவதற்கு முன்பு, டாக்டர் ராதாகிருஷ்ணன் கைகளை கழுவி, உணவு பரிமாறப்பட்டவுடன், அவர் தனது கைகளை சாப்பிடுவதற்கு பயன்படுத்தினார்.

சர்ச்சில் இந்திய ஜனாதிபதியிடம், “நீங்கள் ஏன் உங்கள் கைகளைப் பயன்படுத்துகிறீர்கள்? ஸ்பூன் மற்றும் முட்கரண்டிகளை பயன்படுத்துங்கள், அவை மிகவும் சுகாதாரமானவை ”.என்றார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் உடனே , "இதற்கு முன் யாரும் சாப்பிட என் கைகளைப் பயன்படுத்தாததால், நீங்கள் பயன்படுத்தக்கூடிய எந்த கரண்டியையும் விட என் கைகள் மிகவும் சுகாதாரமானவை." என்று பதிலளித்தார்.

இந்தியாவில் உணவை கையால் சாப்பிடுவது தான் பாரம்பரிய வழக்கம். ஒருவர் உணவை கையால் சாப்பிடும் போது, உணவு, உடல், மனம், மற்றும் ஆன்மா என அனைத்தையும் ஒன்றிணைக்கிறது. மேலும் இது சாப்பாட்டு இங்கிதத்தை மென்மையாக்குகிறது.

உண்ணுதல் என்பது உணர்வு மற்றும் பேரார்வத்தைத் தூண்டும் ஒரு உணர்வுபூர்வமான அனுபவமாகும். ஆயுர்வேதத்தின் படி, கையில் உள்ள ஒவ்வொரு விரலிலும் ஐந்து கூறுகள் இருக்கிறதாம்.

அதில் பெருவிரல் - ஆகாயம், ஆள்காட்டி விரல் - காற்று, நடுவிரல் - நெருப்பு, மோதிர விரல் - தண்ணீர், சுண்டு விரல் - நிலம் ஆகும். கையால் உணவை சந்தோஷமாக சாப்பிடும் போது, இந்த ஐந்து கூறுகளும் தூண்டப்பட்டு, நீங்கள் சாப்பிட வேண்டிய உணவை உற்சாகத்துடன் சாப்பிட உதவுகிறது.

ஒருவரது உடலில் இந்த ஐந்து கூறுகளும் சமநிலையில் இருந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த ஐந்து கூறுகளும் ஒருவரது சுறுசுறுப்பை அதிகரிக்கும். அதாவது கையால் உணவை உட்கொள்ளும் போது, உணவின் சுவை, தோற்றம் மற்றும் மணம் போன்றவை மேம்பட்டு இருக்கும்.

உணவை உட்கொள்ளும் முன் கையை நீரில் கழுவிய பின் சாப்பிடுவதால், கையில் கிருமிகள் இருக்க வாய்ப்பில்லை. மேலும் நாம் ஒரு நாளைக்கு பலமுறை கைகளை நீரில் கழுவுவோம்.

ஆனால் ஸ்பூன், போர்க் மற்றும் இதர பொருட்கள் அடிக்கடி கழுவப்படுகிறதா என்பது நமக்கு சரியாக தெரியாது. மேலும், அது மிகவும் சுத்தமானவையாக இருக்கும் என்றும் உறுதியாக கூறவும் முடியாது

எனவேதான், பெரும்பாலான இந்தியர்கள் வெறும் கையில் உண்ணுகிறார்கள். ஆனால் , இந்தியாவில் நகர்ப்புறங்களில் வசிக்கும் சில மேல்தட்டு மக்கள் கரண்டிகளைத்தான் தற்போது உணவு உண்ண பயன்படுத்துகிறார்கள்.

  • 355
·
Added a post

2 முந்திரி பருப்பு, 1ஸ்பூன் கசகசாவை அரைத்து பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.

  • 358
·
Added a post

வீடு சென்று வெளியே திரும்பும் போது முகத்தில் அதிகப்படியான அழுக்குகள் ஒட்டிக்கொள்வதோடு பருக்களை உண்டாக்குகிறது.

எவ்வளவு தான் கடைகளில் விற்கும் விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும்போதிய அளவில் தீர்வு கிடைப்பதில்லை .அப்படியே தீர்வு கிடைத்தாலும் நமது முகத்தில் இருக்கும் தசைப்பகுதிகள் மென்மை தன்மையை இழந்துவிடுகிறது இதனால் எப்போதும் முகம் இறுக்கத்துடன் காணப்படுகிறது. அப்பழுக்கற்ற சருமத்தை பெற சில எளிய வழி முறைகள் உங்களுக்காக.....

பருக்களை கண்டவுடன் நாம் அதனை கிள்ளத் தொடங்குகிறோம் நாளடைவில் அது கரும்புள்ளிகளையும், தழும்புகளையும் உண்டாக்கி விடுகிறது. இதனால் முகம் பொலிவிழந்து காணப்படுவதோடு அசிங்கமாகவும் தெரிகிறது. வெளியே செல்லும் பலரும் தங்களது தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றனர் எனவே தன்னம்பிக்கைக்கு அழகு என்பது மிகப்பெரிய தேவையாக அமைகிறது.

ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய்:

ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை மிகச் சிறந்த ஒன்றாகும்.இதனை சருமத்தில் தடவி மசாஜ் செய்யும் போது அதிக பலனை நாம் பெறலாம்.இதனை ஆண் பெண் என இருபாளறும் பயன்படுத்தலாம்.அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது.

பொதுவாகவே நாம் எண்ணெய் தடவி மசாஜ் செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகரித்து சருமம் மென்மயாக காணப்படும். அதிலும் குறிப்பாக ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் ஒன்றாக கலந்து அக் கலவையை இரவில் படுக்கும் முன்பு நன்கு மசாஜ் செய்து காலையில் எழுந்து முகத்தை கழுவ வேண்டும். இதனை வாரம் மூன்று முறை அல்லது தினம் தோறும் கூட பின்பற்றலாம்.

இவ்வாறு செய்வதால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு புதிய செல்கள் உற்பத்தியாகின்றன.மேலும் ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெயில் அதிக அளவு ஆன்டி ஆக்சைடு மற்றும் சருமத்திற்கு தேவையான இரும்புத் சத்து, மக்னீியம் போன்ற சத்துகள் நிறந்துள்ளன.

இந்த செயல் முறையை நாள் தோறும் பின்பற்றுவதால் முகம் ஈரப்பதத்துடனும், வழவழப் பாகவும் ,பொலிவோடும் காணப்படுகிறது. தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் நாளடைவில் மறைகின்றன.பருக்களை கொண்ட சருமத்திற்கு இந்த கலவை ஏற்றதாகும்.

  • 356
·
Added a post

கோவக்காய் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக இருந்து வருகிறது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் வெளியேறி கல்லீரல் வீக்கம் குறைகிறது.

இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவக்காயில் அதிகமாக இருக்கிறது. இவை எலும்பு வளர்ச்சி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கோவக்காய் நல்ல மருந்தாக இருந்து வருகிறது.

கோவக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும் வெளியேற்றுகிறது. புற்று நோய் வராமல் இருக்க உணவில் அடிக்கடி கோவக்காய் சேர்த்து சாப்பிட வேண்டும்.

இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து தேவையாக இருக்கிறது. ரத்த அழுத்தம் சீரான நிலைக்கு செல்லவும், இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வரவும், கோவக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. இதய நோய்களையும் தவிர்க்கிறது.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி கோவக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும். மேலும் சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறுவதை தடுக்கிறது.

உடலில் செரிமான அமிலங்கள் குறைவதால் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே வாரத்திற்கு இரு முறை கோவக்காய் பொரியல் செய்து சாப்பிட்டால் செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனை நீங்கும்.

கொழுப்பை கரைக்கக்கூடிய கோவக்காய் அனைத்து உணவுகளிலும் அதிகம் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறைக்கும் முயற்சிக்கு நல்ல பலன் தரும். மேலும் சிறுநீரகத்தில் உள்ள கற்களை வெளியேற்றுகிறது. தொடர்ந்து கோவக்காய் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக உறுப்புகள் மற்றும் உடல் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும்.

  • 369
·
Added a post

சண்டிகேஸ்வரரை வணங்கும் முன் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ஆன்மிக ரகசியங்கள்!

விரிவான – திருத்தப்பட்ட ஆன்மிகக் கதை வடிவ பதிவு

சிவாலய வழிபாட்டில் பலரும் அதிகம் கவனிக்காமல் செல்லும் தெய்வம் ஒருவர் உண்டு. அவர்தான் சண்டிகேஸ்வரர்!

ஆனால் உண்மையில் சிவாலய வழிபாடு முழுமை பெற வேண்டுமென்றால், சண்டிகேஸ்வரர் தரிசனம் மிக அவசியம்.

சிவ பக்தியின் உச்சத்தை அடைந்து தெய்வப் பதவி பெற்ற பெருமைக்குரியவர் சண்டிகேஸ்வரர்.

பக்தியின் மேன்மையால் எம்பெருமானின் அருளைப் பெற்ற 63 நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப்படும் இவர், அனைத்து சிவாலயங்களிலும் கோயில் சொத்துக்களின் காவலராகவும், தலத்தின் தனத்துக்கு அதிபதியாகவும் விளங்குகிறார்.

சண்டிகேஸ்வரரை எப்படி வணங்க வேண்டும்?

சிவாலயத்தில் சண்டிகேஸ்வரர் எப்போதும் ஆழ்ந்த தியான நிலையில் இருப்பார்.

அவரை தரிசிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறை:

சண்டிகேஸ்வரர் முன்பு மெல்ல மூன்று முறை கைதட்ட வேண்டும்.

“சிவ தரிசன பலன் முழுமையாக கிடைக்க வேண்டும்” என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.

பிறகு கைகளை விரித்து காட்டி, “கோயிலில் இருந்து எதையும் எடுத்துச் செல்லவில்லை” என்பதை அவருக்குத் தெரிவிக்க வேண்டும்.

இதற்கு காரணம் என்ன தெரியுமா?

சண்டிகேஸ்வரர்தான் சிவாலயத்தின் சொத்துக்களுக்கான காவலர்.

அதனால் கோயிலில் இருந்து எந்த பொருளையும் எடுத்துச் செல்லக் கூடாது என்பதை உணர்த்தும் மரபே இந்த வழிபாட்டு முறை.

மேலும் ஒரு முக்கியமான விஷயம்:

சண்டிகேஸ்வரரை வலம் வந்து வணங்கக் கூடாது. சென்ற வழியே திரும்பி வர வேண்டும். அவரை தரிசித்த பிறகே, சிவ தரிசன பலன் முழுமையாகக் கிடைக்கும் என்பது ஆகம விதி.

பல்வேறு கோயில்களில் சண்டிகேஸ்வரரின் பெயர்கள்

ஒவ்வொரு ஆலயத்திலும் சண்டிகேஸ்வரர் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்:

சிவன் கோயிலில் – தோனிச் சண்டிகேஸ்வரர்

முருகன் கோயிலில் – சுமித்ர சண்டிகேஸ்வரர்

விநாயகர் கோயிலில் – கும்ப சண்டிகேஸ்வரர்

சூரியனார் கோயிலில் – தேஜஸ் சண்டிகேஸ்வரர்

அம்பாள் கோயிலில் – யமுனா சண்டிகேஸ்வரர்

சண்டிகேஸ்வரருடன் தொடர்புடைய முக்கிய தலங்கள்

1. கங்கைகொண்ட சோழபுரம்

இங்குள்ள சோழீஸ்வரர் கோயிலில் மகேஸ்வரன் உமா மகேஸ்வரியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

ஈசனின் திருவடியில் கூப்பிய கரங்களுடன் சண்டிகேஸ்வரர் அமர்ந்திருப்பது தனிச்சிறப்பு.

2. திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்)

இங்கு மாணிக்கவாசகருக்கே சிவபெருமான் சண்டிகேஸ்வரர் பதவி வழங்கியதால்,

இந்த ஆலயத்தில் சண்டிகேஸ்வரருக்கு தனிச்சன்னிதி இல்லை என்பது ஆன்மிக விசேஷம்.

3. திருநாரையூர் சௌந்தரேசுவரர் கோயில்

இந்தத் தலத்தில் இரட்டை சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது.

ஒரே இடத்தில் இரு சண்டிகேஸ்வரர்களை தரிசிப்பது அபூர்வமான அனுபவம்.

4. திருச்செந்தூர் முருகன் கோயில்

பொதுவாக முருகன் கோயில்களில் சண்டிகேஸ்வரர் சன்னிதி இருக்காது.

ஆனால் திருச்செந்தூரில் தனிச் சன்னிதி அமைந்துள்ளது.

இங்கு முருகனுக்கு அணிவித்த பூமாலையை சண்டிகேஸ்வரருக்கு அணிவிப்பது தனித்துவமான மரபு.

5. சேங்கனூர் – சண்டிகேஸ்வர நாயனார் அவதார தலம்

காவிரி வடகரையில் அமைந்துள்ள

41வது திருமறைத்தலமான சேங்கனூர் சக்திகிரீஸ்வரர் கோயில்,

சண்டிகேஸ்வர நாயனார் அவதாரம் எடுத்த தலமாக போற்றப்படுகிறது.

குமரி முதல் இமயம் வரை உள்ள அனைத்து சிவத்தலங்களையும் தரிசித்த புண்ணிய பலனை,

👉 சேங்கனூரில் சண்டிகேஸ்வர நாயனாரை தரிசித்தாலே பெறலாம்

என்பது ஐதீகம்!

ஏன் சண்டிகேஸ்வரரை வலம் வரக்கூடாது?

சண்டிகேஸ்வரர் சன்னிதி பெரும்பாலும்

நிர்மால்ய தீர்த்தம் (சிவ அபிஷேக நீர்) வெளியேறும் கோமுகியின் அருகில் அமைந்திருக்கும்.

ஆகம விதிகளின்படி:

கோமுகியைத் தாண்டக் கூடாது

அந்த பகுதியை சுற்றி வரக்கூடாது

என்பதால் சண்டிகேஸ்வரரை வலம் வராமல், சென்ற வழியே திரும்ப வேண்டும்.

யுகங்களுக்கு ஏற்ப சண்டிகேஸ்வரர்

சிவாகம புராணங்களின்படி ஒவ்வொரு யுகத்திற்கும் தனித்தனி சண்டிகேஸ்வரர் உள்ளனர்:

கிருத யுகம் – நான்கு முகங்கள்

திரேதா யுகம் – மூன்று முகங்கள்

துவாபர யுகம் – இரண்டு முகங்கள்

கலி யுகம் – ஒரு முகம்

இப்போது நாம் வழிபடுவது கலியுக சண்டிகேஸ்வரரையே.

சண்டிகேஸ்வரர் காயத்ரி மந்திரம்

சண்டிகேஸ்வரருக்கென தனிப்பட்ட காயத்ரி மந்திரம் உள்ளது:

“ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே

சிவ பக்தாய தீமஹி

தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்”

வழிபாட்டு முறை & பலன்கள்

தினமும் காலை இந்த மந்திரத்தை 27 முறை ஜபிக்கலாம்

பிரதோஷம், மாத சிவராத்திரி நாட்களில்

சண்டிகேஸ்வரருக்கு நெய் தீபம் ஏற்றி

இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்தால்

பலன்கள்:

மன உறுதி அதிகரிக்கும்

தடைகள் விலகும்

இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும்

வாழ்வில் அமைதி ஏற்படும்

முடிவுரை

சிவ வழிபாட்டில் சண்டிகேஸ்வரரை மறந்து செல்லக்கூடாது.

அவரது அருளோடு செய்யப்படும் சிவ தரிசனமே முழுமையான தரிசனம்.

அடுத்த முறை சிவாலயம் செல்லும்போது,

சண்டிகேஸ்வரரை முறையாக வணங்கி அவரது அருளையும் பெறுங்கள்

  • 371
·
Added a post

ஒரு நாள் குருவும் அவரது சீடனும் குளக்கரையில் அமர்திருந்தார்கள். சீடன் பல கேள்விகளை குருவிடம் கேட்டுக் கொண்டிருந்தான்; குருவும் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தார்.

"குருவே! சுயநலமிக்க அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் வித்தியாசம் என்ன?" எனக்கு கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன் என்றான். குரு சீடனுக்கு பதிலை எப்படி விளக்குவது என்று சற்றும் முற்றும் பார்த்தார். ஒரு இளைஞன் குளக்கரையில் தூண்டிலைப் பிடித்துக் கொண்டு அமர்திருந்தான். அவனருகில் கூடையில் அவன் பிடித்துப் போட்ட மீன்கள் துடித்துக் கொண்டிருந்தது.

குரு, அந்த இளைஞனிடம் பேச்சு கொடுத்தார். தம்பி! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ? என்றார். அவனும் ஆமாம் ஐயா மீன் என்றால் எனக்கு உயிர். பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியை சமைக்கச் சொல்லி ஒரு பிடி பிடிக்கப் போகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். குளத்தில் நிறைய மீன் கிடைக்கிறது என்றான்.

குருவோ, எனக்கு வேண்டாம் தம்பி என்று புன்சிரிப்புடன் கூறி மறுத்து விட்டார். நடப்பதையெல்லாம் சீடன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இளைஞனும் சற்று நேரத்தில் மீன் பிடித்து விட்டு கிளம்பி விட்டான்.

ஒரு வயது முதிர்ந்த பெரியவர் குளக்கரையை நோக்கி வருவதை குரு பார்த்து விட்டார். அவர் கையில் ஒரு வெள்ளை நிறப் பை இருந்தது. குரு அதை உற்றுப் பார்த்தார்; அது பையின் நிறமல்ல, அதிலிருக்கும் பொரியின் நிறம் என்பதை தெரிந்து கொண்டார். அந்த பெரியவர் குளக்கரையில் வந்து அமர்ந்தார். பையிலிருந்த பொரியை எடுத்து தண்ணீரில் தூவினார். நூற்றுக்கணக்கான மீன்கள் பொரி இருக்கும் இடத்தை எறும்புகள் போல மொய்த்தன.

குரு, அவரிடமும் பேச்சு கொடுத்தார். என்ன பெரியவரே! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ? என்று சற்று முன் அந்த இளைஞனிடம் கேட்ட அதே கேள்வியை பெரியவரிடம் கேட்டார். பெரியவரும், ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர்; நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து இங்குள்ள மீன்களுக்கு உணவளிப்பேன் என்றார். அவரிடம் பேசி முடித்து விட்டு சீடனின் பக்கம் திரும்பினார்.

பார்த்தாயா! இருவரும் மீனின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் "மீனென்றால் உயிர்" என்று கூறும் போதே தெரிந்திருக்கும். அந்த இளைஞன், மீன்களை "ருசி" என்னும் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டான். அவன் தன்னுடைய சந்தோஷத்தில் மட்டுமே கவனம் செலுத்தினான். ஆனால்., அந்த பெரியவர் மீன்கள் பசியாறுவதற்கு சுயநலமில்லாமல் உணவளித்தார். இருவருக்கும் மீன்கள் பிடித்திருந்தது, ஆனால்., இருவரின் நோக்கம் வேறு. மொத்தத்தில்,

*அன்பில் சுயநலம் இருந்தால் அது அன்பே இல்லை; சுயநலமில்லாத அன்பு தான் உண்மையானது, நிரந்தரமானது* என்று

குரு சீடனுக்கு புரிய வைத்தார்.

  • 373