·   ·  10 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 645
  • More

நயாகரா வீழ்ச்சி

Canada Day நயாகரா வீழ்ச்சி

Comments (0)
Login or Join to comment.
·
Added a news

டிட்வா புயல் பாதிப்பு காரண​மாக இலங்​கை​யில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 334 ஆக அதி​கரித்​துள்​ளது.

இலங்கை கடல் பகு​தி​யில் கடந்த மாதம் 26ம் தேதி உரு​வான டிட்வா புயல் இலங்​கையை தாக்​கிய பின் வங்​கங் கடல் பகு​தி​யில் கடந்த 29-ம் தேதி நுழைந்​தது. இந்த புயல் காரண​மாக இலங்​கை​யில் கன மழை பெய்து வெள்​ளப் பெருக்கு மற்​றும் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. ஆறுகளில் வெள்​ளம் கரைபுரண்டு ஓடியது. லட்​சக்​கணக்​கான வீடு​கள் சேதம் அடைந்​தன.

இதையடுத்து இலங்​கை​யில் அவசர நிலை அறிவிக்​கப்​பட்டு மீட்பு பணி​கள் மேற்​கொள்​ளப்​ பட்​டன. பாதிக்​கப்​பட்ட 59 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட குடும்​பங்​கள் 1,500 முகாம்​களில் தங்க வைக்​கப்​பட்​டனர்.

புய​லால் பாதிக்​கப்​பட்ட இலங்​கைக்கு இந்​தியா சார்​பில் நிவாரண பொருட்​கள் கடற்​படை கப்​பல்​கள் மற்​றும் விமானப்​படை ஜம்போ விமானங்​களில் அனுப்பி வைக்​கப்​பட்​டன. நெருக்​கடி நிலையை சமாளிக்க சர்​வ​தேச அமைப்​பு​களின் உதவியை இலங்கை நாடியது.

இதையடுத்து மேலும் 10 டன் நிவாரண பொருட்​கள் இலங்​கைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​ட​தாக இந்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் தெரி​வித்​தார். இலங்​கை​யில் மழை பாதிப்பு குறைந்​தா​லும், தாழ்​வான பகு​தி​கள் எல்​லாம் வெள்​ளத்​தில் மூழ்​கி​யுள்​ளன.

இங்கு வெள்​ளத்​தால் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 334 ஆக உயர்ந்​துள்​ளது. சுமார் 400 பேரை புயலுக்​குப்​பின் காண​வில்​லை. இவர்​களை தேடும் பணி நடை​பெறுகிறது.

வெள்ள பாதிப்பு காரண​மாக பலர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு வரு​கின்​றனர். இங்கு நாள் ஒன்​றுக்கு 1,500 யூனிட் ரத்​தம் தேவைப்​படு​கிறது. அதனால் மக்​கள் அதி​கள​வில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்​டும் என இலங்கை அரசு வேண்​டு​கோள்​ விடுத்​துள்​ளது.

  • 45
·
Added article

சிம்புவுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, டிசம்பர் 8-ம் திகதி ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குகிறது.

நவம்பர் மாதத்தில் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால், வேல்ஸ் நிறுவனத்துக்கு சிம்புவின் தேதிகள் எப்போது என்பது தெரியாமல் படம் தொடங்க முடியாத சூழல் உருவானது. இதனால் சிம்பு – வேல்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில் வேல்ஸ் நிறுவனத்துக்கு எப்போது தேதிகள் என்பதை சிம்பு தெரிவிக்க வேண்டும் அல்லது அஸ்வத் மாரிமுத்து படத்துக்கு முன்னதாக வேல்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய அட்வான்ஸ் தொகையினை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று சிம்புவிடம் கூறப்பட்டுள்ளது.

இதனால் வேல்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளன. டிசம்பர் 8-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.

வெற்றிமாறன் இயக்கவுள்ள ‘அரசன்’ படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை தாணு தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க வேண்டும் என்று தொடங்கப்படுகிறது.

  • 50

* தேனை மட்டும் சேகரிக்கும் தேனீக்கள் போல எங்கு சென்றாலும் அங்கிருக்கும் நல்லதை மட்டுமே காணுங்கள்.

* வாழ்வில் குறுக்கிடும் ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்குரிய படிக்கட்டு என்பதை மறக்காதீர்கள்.

* கடவுளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் போதும். அவர் நம்மை நோக்கி நூறடி முன் வர காத்திருக்கிறார்.

* உயிர்கள் மீது அன்பு செலுத்துவதே கடவுள் விரும்பும் சிறந்த நைவேத்யமாகும்.

- அமிர்தானந்தமயி

  • 47
·
Added article

‘காந்தாரா’ படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பை நகலெடுத்த ரன்வீர் சிங்கிற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர், ‘காந்தாரா’ படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பைப் பாராட்டிப் பேசினார். அப்போது, ‘காந்தாரா’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பூத கோலா வழிபாட்டு முறையை ரன்வீர் சிங் நடித்துக் காட்டினார். மேலும், அந்தத் தெய்வத்தை ‘பெண் பேய்’ என்று அவர் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த செயல் துளு நாடு மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘காந்தாரா’ படத்தில் வரும் காட்சிகள் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் துளு மக்களின் கலாச்சாரம் மற்றும் தெய்வ வழிபாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.

அப்படிப்பட்ட புனிதமான தெய்வத்தை ரன்வீர் சிங் கேலி செய்யும் விதமாக பாவனை செய்ததாகவும், அதனை ‘பேய்’ என்று தவறாக அழைத்ததாகவும் துளு அமைப்புகள் குற்றம் சாட்டின. மேலும், இந்தச் சம்பவம் நடந்தபோது மேடைக்கு எதிரே அமர்ந்திருந்த ரிஷப் ஷெட்டி அதைத் தடுக்காமல் சிரித்ததற்கும் கண்டனங்கள் எழுந்தன.

துளு சமுதாய தலைவர்கள், ரன்வீர் சிங் மற்றும் ரிஷப் ஷெட்டி இருவரும் கத்ரி மஞ்சுநாதா கோயிலுக்கு வந்து தெய்வ சன்னதியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். சமூக வலைதளங்களிலும் ரன்வீருக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்தன.

இதனையடுத்து, ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். அதில், “ரிஷப் ஷெட்டியின் அபாரமான நடிப்பை முன்னிலைப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது. நான் எப்போதும் ஒவ்வொரு கலாச்சாரத்தையும், சம்பிரதாயத்தையும் மதிப்பவன். எனது செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் உளமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • 53
·
Added a news

கனடாவில், ஸ்காபரோவில் அமைந்துள்ள Church of the Holy Wisdom என்னும் தேவாலயம் சார்பில் ஒரு உணவு வங்கி இயங்கிவந்தது. தேவாலயத்தில் அத்தியாவசிய கட்டுமானப்பணி செய்யவேண்டிவந்ததால் அந்த உணவு வங்கி மூடப்படும் நிலை உருவானது.

 அப்படியானால், இவ்வளவு நாட்களாக உணவு வங்கியை மட்டுமே நம்பியிருந்த மக்கள் என்ன செய்வார்கள் என்ற கவலை அந்த தேவாலய பாதிரியாரான கெர்லின் ஹென்றிக்கு (Rev. Gerlyn Henry) உருவானது. கெர்லின் இந்திய வம்சாவளியினர் ஆவார். ஆகவே, தன் கணவரிடமும், தேவாலய நிர்வாகிகளிடமும் பேசிய கெர்லின் ஒரு முடிவு எடுத்தார்.

அவரது வீட்டில் இருந்த சேமிப்பகம் மற்றும் கார் நிறுத்தும் இடத்திலிருந்த (garage) பொருட்களை எல்லாம் அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடத்தையே உணவு வங்கிக்காக பயன்படுத்திக்கொள்ள ஆவன செய்தார் கெர்லின்.

விடயம் என்னவென்றால், ஏற்கனவே அந்த தேவாலய வளாகத்தில் ஒரு உணவு வங்கி இருந்தது. கட்டுமானப் பணிகள் காரணமாக அது மூடப்படும் நிலையில், வேறு எங்காவது கூட உணவு வங்கி திறக்கலாம்.

 ஆனால், இவ்வளவு நாட்களாக இந்த உணவு வங்கியைப் பயன்படுத்தியவர்கள் இந்த பகுதியில் உள்ளவர்கள்.

வேறு எங்காவது உணவு வங்கி திறக்கும்பட்சத்தில், அவர்கள் அந்த உணவு வங்கியைத் தேடிச் செல்லவேண்டியிருக்கும். வாகனங்களை பயன்படுத்தவேண்டிய நிலை வரலாம்.

ஆக, இதே வளாகத்திலிருக்கும் தன் வீட்டிலேயே அந்த உணவு வங்கியைத் திறந்தால், உணவு வங்கியைத் தேடி வந்தவர்கள் ஏமாறவும் மாட்டார்கள், அவர்கள் வழக்கம்போல நடந்தே இங்கு வந்து பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

பாதிரியார் கெர்லினுடய யோசனையால், மக்கள் அவருடைய வீட்டின் கேரேஜிலேயே இயங்கும் உணவு வங்கியை தொடர்ந்து பயன்படுத்திவருகிறார்கள். வாரம் ஒன்றிற்கு 300 பேர் வரை அந்த உணவு வங்கியைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறார் கெர்லின்.

  • 61
·
Added a news

டொராண்டோவில் இன்று இரவு இரண்டு முதல் நான்கு சென்றி மீற்றர் அளவுக்கு பனி பெய்யக்கூடும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த பனிப்பொழிவு, வாரத்தின் குளிர்ச்சியான தொடக்கத்துக்கு பின் வருகிறது. இன்று பகல் அதிகபட்ச வெப்பநிலை –1°C ஆக இருக்கும் என்றும், காற்றின் வேகத்தால் –12°C போல உணரப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இரவு வெப்பநிலை –5°C வரை குறையும். வாரத்தின் மீதிப் பகுதியிலும் மேகமூட்டமும் லேசான பனிப்பொழிவும் காணப்படும் நிலையில், வெப்பநிலை பனி உறையும் நிலையைச் சுற்றியே இருக்கும்.

  • 65
·
Added a post

ஒரு ஹெச்.ஆர். எக்ஸிக்யூடிவ் பொண்ணு இறந்து எமலோகம் போனாங்களாம்.

அங்க எமதர்மன் "வாழ்த்துக்கள் நீங்க சொர்க்கம் போக தகுதியானவங்க ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நாள் சொர்க்கத்திலயும் ஒரு நாள் நரகத்திலயும் தங்கணும் அப்புறம் சொர்க்கமா நரகமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்"னார்.

அவங்க "இல்ல நான் இப்பவே சொர்க்கமே போறேன் எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணனும்?"னாங்க.

அவர் "இது இங்க ரூல்ஸ் நீங்க ஃபாலோ பண்ணித்தான் தீரனும்"ங்க... அவங்களும் முதல்ல நரகம் போயி ஒரு நாள் தங்க முடிவு பண்ணி போனாங்க.

அது நரகம் மாறியே இல்ல அழகான பூங்கா அங்க இவளோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்க நாள் முழுக்க பூமிக்கதை எல்லாம் பேசினாங்க.அப்புறம் சாத்தான் வந்தாரு அவளோட ஃப்ரென்ட்ஸ் அறிமுகப்படுத்தி வைக்க அவரும் நல்லாவே பேசினாரு ஆளு பாக்கவும் ரொம்ப க்யூட். அவளுக்கு நரகத்த விட்டு வரவே மனசில்ல.ஒரு நாள் முடிஞ்சு போக நரகமே இப்படி நல்லா இருக்கே சொர்க்கம் எப்படி இருக்கும்னு போயி பாத்தா யாரும் யாரோடும் பேசவே இல்ல பூ பறிக்கறதும் சாமி கும்பிடறதுமாவே இருந்திருக்காங்க இவளுக்கு பயங்கர போர்.

கடைசியா எமன் " நீங்க எங்க போக முடிவு பண்ணிருக்கிறீங்க "ன்னு கேக்க அவ " நான் நரகத்துக்கே போறேன் சொர்க்கத்த விட அது தான் நல்லா இருக்கு"ன்னா.எமன் " நல்லா யோசிச்சுக்கங்க போனா திரும்பி வரமுடியாது"ங்க அவ பிடிவாதமா இருக்க நரகத்துல விட்டு கதவ சாத்திட்டாங்களாம்.

இப்போ பாத்தா முன்ன இருந்த அழகான பூங்கா மாறி பாலைவனமாகி அவளோட ஃப்ரென்ட்ஸ் எல்லாம் கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு இருந்தாங்களாம்.சாத்தான் கூட மேக்-அப் இல்லாத நடிகை கணக்கா கர்ண கொடூரமா இளிச்சானாம்.அவ ஒண்ணும் புரியாம "என்ன இது நேத்த விட எல்லாமே மாறி இருக்கு"ன்னு கேக்க அதுக்கு சாத்தான் சொன்னானாம் ,

"நேத்து உங்களுக்கு நடந்தது இன்டர்வியூ இன்னைக்கு நீங்க ஒரு எம்ப்ளாயீ!

  • 67
·
Added a post

உயிர்ச்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். 100 கிராம் கீரையில், 9 ஆயிரம் உயிர் சத்தான வைட்டமின்கள் உள்ளது. அகத்திக்கீரையில் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது.

குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரையை சாப்பிடுவதன் மூலம் குணமாகும்.

அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்கும்போது தொண்டைப் புண், தொண்டை வலி ஆகிய நோய்கள் நீங்கும். ரத்த பித்தம், ரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை சாப்பிடுவதால் அகலும்.

அகத்திக்கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.

அகத்தி மரப்பட்டை, வேர்ப்பட்டை வகைகளை கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு சுண்டக்காய்ச்சி அதனை வடிகட்டி 100 மி.லி. அளவு என 2 வேளை குடித்து வர காய்ச்சல், கை கால், மார்பு, உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைக் காய்ச்சல் குணமாகும்.

இக்கீரையைப் பிழிந்து அதன் சாறை 2 துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி, சளி, ஜலதோஷம் போன்றவை நீங்கும்.

அகத்தி கீரையை வேக வைத்து அரைத்துக் காயங்களுக்கு கட்ட விரைவில் ஆறும். அகத்திப் பூச்சாறை கண்களில் பிழிய கண்நோய் குணமாகும்.

அகத்தி கீரை வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும். இதற்கு அகத்திக்கீரையை நன்றாக கழுவி இதில் 4 பங்கு சின்ன வெங்காயத்தை சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினமும் 1 வேளை குடிக்கலாம்.

அகத்தி கீரையையும், மருதாணி இலையையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப் போட்டால் வெடிப்புகள் மறையும்.

  • 86
·
Added a post

வேப்பம்பழம் இயற்கையே நமக்கு அளித்த ஒரு அபூர்வ மருந்து.

  1. சிறந்த இயற்கை 'ஆன்டி-பயாடிக்' (Natural Antibiotic): நவீன மருத்துவத்தின் ஆன்டி-பயாடிக் மாத்திரைகளுக்கு சவால் விடும் சக்தி இந்த சிறிய பழத்திற்கு உண்டு. உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
  2. வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரி: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் குடல் புழுக்கள் மற்றும் வயிற்றுப் பூச்சிகளை அழித்து, குடலை முழுமையாகச் சுத்தம் செய்வதில் வேப்பம்பழத்திற்கு நிகர் இதுவேதான்.
  3. இரத்த சுத்திகரிப்பு (Blood Purification): இது ஒரு சிறந்த 'டிடாக்ஸ்' (Detox) உணவு. ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகும்.
  4. சரும நோய்களுக்கான கவசம்: சுத்தமான ரத்தம் ஓடினாலே சருமம் பொலிவடையும். வேப்பம்பழம் சாப்பிடுவதால் சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற எந்தத் தோல் நோய்களும் நம்மை அண்டாமல் பாதுகாக்கும் ஒரு இயற்கை கவசமாக இது செயல்படுகிறது.

ஒரு சிறு வேண்டுகோள்:

​நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் பல இயற்கை மருத்துவ முறைகளை நாம் மறந்து வருகிறோம். "கசக்குதே" என்று முகத்தைத் திருப்பாமல், வேப்பம்பழம் சீசனில் கிடைக்கும்போது, வருடத்திற்கு ஒரு முறையாவது இரண்டு பழங்களையாவது சப்பிச் சாப்பிடுங்கள்.

​மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியத்தைக் குறைத்து, நோயற்ற வாழ்வுக்கு இது வழிவகுக்கும்.

  • 88
·
Added a post

காட்டுவழி சென்ற ஆசிரியர் ஒருவரை பிடித்துக் கொண்டனர் கொள்ளைக் கூட்டத்தினர்.அவர் கணித ஆசிரியர் என்று தெரிந்து கொண்டஅக்கூட்டத்தின் தலைவன் ஆசிரியருக்கு ஒரு சோதனை வைத்தான்.

தன கையில் இருக்கும் பூசணிக்காயின் எடையை அவர் சரியாகக் கூறினால் விடுதலை என்றும், சரி பார்க்கையில் தவறாக இருந்தால் தலையை எடுத்து விடுவதாகவும் கூறினான்.

ஆசிரியர் சொன்னார்,''பூசணிக்காய் உன் தலையின் எடையளவு இருக்கும்'' என்று கூறினார்.

எப்படி சரி பார்ப்பது?'நீங்கள் சொன்ன விடை சரிதான்,'என்று கூறி விடுதலை செய்தான்..

  • 89
·
Added a post

“உங்கள் ஏசு சொன்னதைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.

பசித்தவருக்கு ரொட்டி கொடுக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் பசியால் வாடுகிறவர்கள் இல்லை.

அறியாமையில் உழல்வோருக்கு அறிவுப் பாதையைத் திறக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் எல்லோருக்கும் ஒரே தரமான கல்வியை அரசாங்கமே தன் பொறுப்பில் அளிக்கிறது.

நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் யாராக இருந்தாலும் பாகுபாடில்லாமல் உயர்ந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.

குளிரில் வாடுகிறவர்களுக்குக் கூரை கொடுக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் வீடின்றி வீதியில் நிற்போர் ஒருவரையும் காட்ட முடியாது.

அடிமைத் தளையிலிருந்து மீட்டு விடுதலைளிக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் சுயமரியாதையோடு உழைத்து வாழ்வதற்கென எல்லோருக்கும் வேலை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் கர்த்தரின் பெயரால் செய்யச்சொன்னார் ஏசு. நாங்கள் புரட்சியின் வெற்றியால் செய்துகொண்டிருக்கிறோம்.

இறை நம்பிக்கை என்பதில் நாம் விலகி நிற்கலாம். ஆனால் மனிதர்களின் விடுதலை, சமத்துவம், பிணியற்ற வாழ்வு, அறிவொளி வெளிச்சம், சமூக மதிப்பு... இவை நாம் சந்திக்க வேண்டிய புள்ளிகள் அல்லவா?”

-அமெரிக்காவில் செய்யப்பட்டுவரும் மோசமான பிரச்சாரத்தின் உண்மையை அறியும் நோக்கத்துடன் தன்னை சந்தித்த கிறிஸ்துவ பேராயர்கள் குழுவிடம் இப்படிச் சொன்னவர் கியூபா புரட்சி நாயகர் ஃபிடல் காஸ்ட்ரோ.

  • 91
·
Added a post

உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனை.... விரைவில் சரியாகிவிடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு வேலையை பாருங்கள். ஆழ் மனதில் (sub consciousness mind) ல் பதிந்து விடும்.

உங்கள் வினைப் பதிவுகளுக்கேற்ப விரைவில் அதிசயம் நடக்கும். (சிலருக்கு உடனே, சிலருக்கு கொஞ்சம் தாமதமாக) ஏற்படபோகும் அதிசயங்களுக்கு நன்றி, என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருந்தால் போதும்.

Auto suggestion.

அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்.

எண்ணும் எண்ணங்கள் நேர்மையாகவும் தூய்மையாகவும் இருத்தல் அவசியம்.

நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும், ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும்.

உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப் பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்துவிடும்...

உங்களை சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை படவேண்டாம்.

உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்த வேண்டாம்.

பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்க கற்று கொள்ளுங்கள். தியானம் உதவும்.

நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன்,

என் நல்ல எண்ணம் செயலாக மலரும். பிரபஞ்சத்திற்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருங்கள். நிறுத்தாமல் சொல்லி கொண்டே இருங்கள். [சக்திவாய்ந்த செயல்முறை]

Positive Thinking and Auto suggestion.

திரும்ப திரும்ப எண்ணும் நல்ல எண்ணங்கள் செயலாக மாறும். இயற்கை நியதி.

Wave Theory தெரிந்தவர்களுக்கு இது எளிதாக புரியும்.

உங்கள் வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள்

மற்றும் நல்ல எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்துவிடும்.

உங்கள் நேர்மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்.

விதைத்தவன் தூங்கி விடுவான்.

விதை தூங்காது.

எண்ணியவன் தூங்கி விடுவான்.

எண்ணம் தூங்காது.

எண்ணம்போல் வாழ்க்கை

எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளல்

  • 92
·
Added a post

கல சௌபாக்கியங்களையும் தந்தருளும் தாயாராக விளங்குகிறாள் மகாலக்ஷ்மி தேவி. மகாலக்ஷ்மியை அஷ்ட லக்ஷ்மிகளாக பாவித்து வழிபடுவது பக்தர்களின் நம்பிக்கை. இந்த அஷ்ட லக்ஷ்மிகளும் நம் உடலிலேயே வாசம் செய்வதாகக் கூறப்படுகிறது. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

ஆதிலக்ஷ்மி: நம் பாதங்களில் ஆதிலக்ஷ்மி வசிக்கிறாள். கிருஷ்ண பரமாத்மா குழந்தையாக இருந்தபோது தனது கால் கட்டை விரலை சூப்பினார். அப்படிச் செய்வதன் மூலமாக ஆதிலக்ஷ்மிக்கு முத்தம் தருகிறான். அதனால் பிறர் மீது நம் கால் பட்டாலோ, மது, மங்கை, சூதாட்டம் போன்ற தீய செயல்களில் ஈடுபட்டாலோ இவள் விலகி விடுவாள் என்பது ஐதீகம்.

கஜலக்ஷ்மி: மனிதனுடைய முழங்காலில் கஜலக்ஷ்மி வசிக்கிறாள். காலை நீட்டிக் கொண்டு புத்தகம் படிப்பதாலும், அரிசி போன்ற தானியங்களை மிதிப்பதாலும், பசுவின் கால்களைக் கட்டி பால் கறப்பதாலோ இவள் நம்மை விட்டு விலகுவாள். இதற்குப் பரிகாரமாக பெரியவர்களின் முழங்கால்களை வலி தீர பிடித்து விடுவதால் திரும்பி இந்த லக்ஷ்மி நம்மிடம் குடியேறுவாள்.

வீர்யலக்ஷ்மி: இடுப்புக்குக் கீழ் பகுதியில் வீர்யலக்ஷ்மி உள்ளாள். குடுமி வைத்தவர்களை கேலி செய்தால் அச்சாபத்தினால் கேலி செய்தவர்களுக்கு படிப்பு ஏறாது. சாதுக்களை கேலி செய்தால் வீர்யலக்ஷ்மி அவர்களிடம் இருந்து விலகி விடுவாள்.

விஜயலக்ஷ்மி: இவள் நமது இடது தொடையில் வசிக்கிறாள். தனது மனைவியை விடுத்து பிறர் மனைவியை நாடும்போது இவள் அகன்று விடுவாள். பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் எல்லாம் இழந்து திரௌபதியை பணயம் வைக்க, துரியோதனன் அவளை தனது இடது மடியில் அமரச் சொன்னான். அதனால் விஜயலக்ஷ்மி அவனை விட்டு விலகிச் சென்றாள். அவன் போரில் தோற்றான்.

சந்தானலக்ஷ்மி: மனிதனின் வலது தொடையில் இத்தேவி வசிக்கிறாள். திருமணம் செய்யும்போது பெண்ணை தானம் கொடுக்கும் சமயம் அவளை வலது தொடையில் அமர்த்திக்கொள்ள வேண்டும். மாற்றி தானம் செய்தால் சந்தானலக்ஷ்மி நம்மை விட்டு விலகி விடுவாள்.

தான்யலக்ஷ்மி: இவள் மனிதனின் வயிற்றுப் பகுதியில் வசிக்கிறாள்.ஊசிப்போன மற்றும் எச்சில் உணவுகளை ஏழைகளுக்கு பெண்கள் அளித்தால்தான்யலக்ஷ்மி நம்மை விட்டு விலகுவாள். பொதுவாக, மற்றவர்கள் வயிற்றில் நாம் அடிக்கும்போது தான்யலக்ஷ்மி நம்மை விட்டு விலகுவாள்.

தைரியலக்ஷ்மி: நமது நெஞ்சுப் பகுதியில் இவள் வசிக்கிறாள். நெஞ்சில் நஞ்சை வைத்து பொய்யும் புறமும் பேசித் திரிபவரை விட்டு தைரியலக்ஷ்மி விலகுகிறாள். பெண்களுக்கு நெஞ்சில் மாங்கல்யம் தவழ்வது கணவனுடைய தைரியத்தை வளர்க்கும்.

வித்யாலக்ஷ்மி: இத்தேவி நம் கழுத்துப் பகுதியில் வசிக்கிறாள். பொதுவாக, ருத்ராக்ஷை அணிய வேண்டும். அப்படி அணியவில்லை என்றாள் வித்யாலக்ஷ்மி நம்மை விட்டு விலகி விடுவதாக ஐதீகம்.

  • 105
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். தொலைதூர உறவினர்களின் சந்திப்புகள் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளால் சிறு சிறு அலைச்சல்கள் உண்டாகும். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்

 

ரிஷபம்

நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். மறைமுகமான தடைகள் ஏற்பட்டு நீங்கும் வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மிதுனம்

மனதளவில் இருந்த கவலைகள் குறையும். தம்பதிகளுக்கு அன்யோன்யம் அதிகரிக்கும். கருத்துக்களுக்கு மதிப்புகள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை உருவாக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளால் லாபங்கள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆதரவுகள் ஏற்படும். பணியில் இருந்த பொறுப்புகள் குறையும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கடகம்

பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் ரீதியான பொருளாதார மேம்படும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். புதுவிதவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். நன்மை கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

சிம்மம்

தம்பதிகளுக்குள் புரிதல் அதிகரிக்கும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் சுப செயல்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் சிறுசிறு தாமதம் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் முக்கியத்துவம் ஏற்படும். வழக்கு விஷயங்களில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். மருத்துவத் துறையில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கன்னி

சிந்தனைகளில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். மனதளவில் ஒரு விதமான பதற்றங்கள் ஏற்பட்டு நீங்கும். கணித தொடர்பான துறைகளில் அலட்சியம் இன்றி செயல்படவும். பூர்விக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

துலாம்

திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் ஆதரவு ஏற்படும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். உழைப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

விருச்சிகம்

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தடைப்பட்ட சில காரியங்களை முடிப்பீர்கள். திடீர் வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். உடன் இருப்பவர்கள் மூலம் ஆதாயத்தை உருவாக்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

 

தனுசு

எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். தெய்வீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். வருவாயை மேம்படுத்துவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்

 

மகரம்

மனதளவில் தெளிவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஆதரவு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சரிவை சரி செய்வதற்கான சூழல்கள் உண்டாக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

 

கும்பம்

பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் ஏற்படும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மீனம்

குடும்பத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வியாபார விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் தடைப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். பொன் பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். தடைகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

  • 172
·
Added a post

விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 2.12.2025

இன்று பிற்பகல் 12.29 வரை துவாதசி. பின்னர் திரியோதசி .

இன்று மாலை 06.23 வரை அஸ்வினி . பின்னர் பரணி.

இன்று இரவு 07.18 வரை வரீயான். பின்னர் பரிகம்.

இன்று அதிகாலை 01.33 வரை பவம். பின்னர் பிற்பகல் 12.29 வரை பாலவம். பிறகு இரவு 11.21 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=344&dpx=2&t=1764647707

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 437

Good Morning...

  • 477
·
Added article

சில தினங்களாகவே மிருணாள் தாகூர் குறித்த காதல் வதந்திகள் சமூக வலைதளத்தில் உலவி வருகின்றன. கடந்த வாரம் தனுஷ் – மிருணாள் தாகூர் இருவரும் காதலிக்கிறார்கள் என்று தகவல்கள் பரவின. அதற்கு “இலவச விளம்பரம்” என்று கிண்டலாக பதிலளித்திருந்தார் மிருணாள் தாகூர்.

அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை காதலித்து வருகிறார் மிருணாள் தாகூர் என்று செய்திகள் வெளியாகின. இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “அவர்கள் பேசுவது எனக்கு சிரிப்புதான் வருகிறது. வதந்திகள் எப்போதுமே இலவச விளம்பரம்தான். அது எனக்கு பிடித்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் மிருணாள் தாகூர்.

தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் மிருணாள் தாகூர். முக்கியமாக, அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியில் உருவாகும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மிருணாள் தாகூர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • 641
·
Added a news

இலங்கையில் தித்வா ( ditwah ) சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இன்று திங்கட்கிழமை (01) காலை 9:00 மணி வரை 355 பேர் உயிரிழந்துள்ளதோடு, 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 59,266 குடும்பங்களைச் சேர்ந்த 209,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி (88) , நுவரெலியா (75) , பதுளை (71), குருநாகலை (37) , மாத்தளை (23) மற்றும் கேகாலை (12) ஆகிய பகுதிகளில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • 642
·
Added a post

உண்மை சரித்திர சம்பவம்.

அலாவுதீன் கில்ஜி எனும் அயோக்கியனின் காமப்பசிக்கு இரையாவதைவிட, தீயில் குளிப்பது “மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே” என்று தீயில் குளித்தாள் பேரழகி பத்மினி; அவள் நூறு கிளியோபாட்ராவின் அழகுக்குச் சமமானவள்! இதோ அந்த சரித்திர சம்பவம்.....

ஏறத்தாழ 700 வருடங்களுக்கு முன், அலாவுதீன் கில்ஜி, டில்லியிலிருந்து அரசோச்சிய காலத்தில் ரஜபுதனத்திலுள்ள சித்தூரை பீமசிங்கன் என்பவன் ஆண்டு வந்தான். அவளுடைய மனைவியின் பெயர் பத்மினி. தாமரை போன்ற அழகிய முகம் வாய்ந்தவள். தைரியசாலி, நல்ல புத்தி சாதுர்யமிக்கவள். அவளுடைய அழகு பற்றிய செய்தி வட இந்தியா முழுதும் பரவியிருந்தது.

அலாவுதீன் கில்ஜிக்கு, எல்லா முஸ்லீம் மன்னர்களுக்கும் இருந்தது போல பல மனைவியர் இருந்தனர். அவன், சித்தூர் ராணி பத்மினியையும் அபகரிக்க விரும்பினான். ஆகவே பெரும்படையுடன் புறப்பட்டு ராஜஸ்தானுக்கு வந்து சித்தூரை முற்றுகையிட்டான். சித்தூரை வெல்ல முடியாதென்று தெரிந்தது. ‘கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையாக, “நான் சித்தூரை வெல்ல வரவில்லை என்றும், பத்மினியின் அழகை ஒரே ஒரு முறை பார்த்துச் செல்லவே வந்ததாகவும்” பீம சிங்கனுக்குச் செய்தி அனுப்பினான்.

பீம்சிங்கன், அவன் வார்த்தையை நம்பி, ஓரிரு வீரர் துணையுடன் கோட்டைக்குள் வரலாமென்றும், ரஜபுத்ரப் பத்தினிப் பெண்கள் வேறு ஆடவரைப் பார்க்கக் கூடாதாகையால் நிலைக் கண்ணாடியில் மட்டும் அவள் உருவத்தைப் பார்க்கலாம் என்றும் நிபந்தனை போட்டான். உடனே அலாவுதீனும் இரண்டொரு வீரருடன் வந்து கண்ணாடியில், பேரழகி பத்மினியைப் பார்த்தான். ஏதேனும் சதி செய்து அவளைக் கவரவேண்டும் என்று எண்ணி, மனதில் சதித்திட்டம் தீட்டினான்.

“நான் உன்னை நம்பி, உன் கோட்டைக்குள், தனியே வந்தேனே. நீயும் என்னை நம்பி என் கூட வந்து வழியனுப்பக்

கூடாதா?” என்று பீம சிங்கனிடம் அலாவுதீன் சொன்னான். ரஜபுத்ர இந்துக்கள், சத்ய சந்தர்கள்; உண்மை விளம்பிகள்; டில்லித் துலுக்கர்கள் போல உடல் முழுதும் விஷ ரத்தம் ஓடுபவரல்ல. ஆகவே அலாவுதீனை நம்பி அவன் கூட குதிரையில் செல்லுகையில், அலாவுதீன் உத்தரவிட்டவுடன் ஆப்கானியப் படைகள், பீமசிங்கனைச் சூழ்ந்து கொண்டன. அவனைக் கைது செய்து டில்லிக்குக் கொண்டு சென்றான் அலாவுதீன்.

“உன் மனைவியை என்னிடம் ஒப்புவித்தால் நான், உன்னை விடுவித்து, மீண்டும் சித்தூரின் மன்னனாக்குவேன்” என்று அலாவுதீன் சொன்னான். ஆனால்

பீமசிங்கன் இணங்கவில்லை. இந்தச் செய்தி சித்தூர் வரை சென்றது.

பீமசிங்கனின் மனிவியான பத்மினி மஹா புத்திசாலி; வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்; வஞ்சனையை வஞ்சனையால்தான் வெல்ல வேண்டும் என்று கருதி, அலாவுதீன் கில்ஜிக்குச் செய்தி அனுப்பினாள். என் கணவனை நீ விடுவிப்பாயானால், நான் உன்னிடம் வரத்தயார். ஆயினும் ரஜபுதனப் பெண்கள், எல்லோரும் காணும்படி வெளியே உலவ மாட்டார்கள். ஆகவே என் பரிவாரம் புடை சூழ மூடிய பல்லக்குகளில் வருவோம்” என்றாள். அலாவுதீனும் ஆவலுடன் காத்திருந்தான்.

சித்தூர் கோட்டையிலிருந்து 70 மூடு பல்லக்குகள் புறப்பட்டன. ஒன்றில் கூட பெண்கள் கிடையாது. அத்தனையிலும், தேர்ச்சிபெற்ற 70 வீரர்கள் மறைந்திருந்தனர். ஆறு பல்லக்குத் தூக்கிகள், ஒவ்வொரு பல்லக்கையும் சுமந்தனர். அவர்கள் அனைவரும் வீரர்கள். பல்லக்குகளில் ஆயுதங்களை மறைத்து வைத்தனர். பாந்தால் என்பவன் அவர்களை டில்லியை நோக்கி அழைத்துச் சென்றான். அவன், “பத்மினி, கடைசியாக ஒரு முறை கணவனைப் பார்த்து

விட்டு உன்னிடம் வருவாள்” என்று அலாவுதீனிடம் சொன்னவுடன் “பத்மினியின் பல்லக்கை” கூடாரத்துக்குள் அனுப்பினான். அதிலிருந்த வீரன் வெளியே குதித்து பீமசிங்கனை குதிரையின் மேல் வைத்து தப்பிக்கச் செய்தான். உடனே பெரும் சண்டை நிகழ்ந்தது. இரு தரப்பும் வீரர்களை இழந்தன.

ஓரிரு ஆண்டுகள் உருண்டோடின. அலாவுதீனின் வெறி அடங்கவில்லை. எப்படியும் பத்மினியை அடைந்தே தீருவதென்று முடிவு செய்து, மீண்டும் படையெடுத்து சித்தூரை முற்றுகையிட்டான். இப்பொழுது பீமசிங்கன் பலவீனமான நிலையில் இருந்தான்; ஏனெனில் முந்தைய போர்களில் முக்கியப் படைத் தலைவர்களை இழந்து விட்டான். ஒரு கட்டத்தில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தது. தன் மகனை அருகாமையிலுள்ள ரஜபுதன ராஜ்யத்துக்கு அனுப்பி பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லி விட்டு வீரதீரப் போரில் ஈடுபட்டு உயிர் துறந்தான்

பீமசிங்கன்.

ரஜபுதனப் பெண்கள் வீராங்கனைகள்; அரண்மனையின் அந்தப் புரத்தில் மாபெரும் தீ வளர்த்தனர். அதில் நூற்றுக் கணக்கானோர், பேரழகி பத்மினியுடன் குதித்து சாம்பலாயினர். வெற்றிக் களிப்புடன் கோட்டைக்குள் நுழைந்த அலாவுதீனுக்கு, வீரர்களின் பிணங்களும், வீரத்தாய்மார்களின் சாம்பலுமே கிடைத்தது!

பாரத நாடு உள்ள வரை, பத்மினியின் புகழும் நீடிக்கும்! ரஜபுதனக் கோட்டை கொத்தளங்களும், பாலைவன மணல் துகள்களும் இன்றும் கூட பத்மினியின் புகழைப் பாடிக் கொண்டிருக்கின்றன.

  • 660
·
Added a post

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்கு மஹா தீபம் ஏற்றப் படவுள்ள கொப்பரை, கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபக்கொப்பரை திருவண்ணாமலை மலை உச்சிக்கு இன்று எடுத்துச் செல்லப்படும்.

திருக்கார்த்திகை அன்று அதிகாலை, நான்கு மணிக்கு, கோவில் கருவறை எதிரில், பஞ்ச பூதங்கள், "ஏகன், அனேகன்" என்பதை விளக்கும் பரணி தீபமும், மாலை, ஆறு மணிக்கு, 2668.அடி உயர மலை உச்சியில், "அனேகன், ஏகன்" என்பதை விளக்கும், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதற்காக, ஆறு அடி உயர இராட்சதக் கொப்பரை புதுப்பிக்கப்பட்டு,மலை உச்சிக்கு அரோகரா முழக்கத்துடன் கொண்டு செல்லப்படும்.

இதில், ஏற்றப்படும் மஹா தீபத்தை, பல கி.மீ வரை பார்க்க முடியும். கொப்பரை, வெப்பத்தால் சேதமாகாமல் இருக்க, மேல்பாகம் மூன்றே முக்கால் அடி, கீழ்பாகம் இரண்டே முக்கால் அடி சுற்றளவும், 300 கிலோ எடையில், கால் அங்குலம் தடிமன் கொண்டதாகவும், 20 வளையங்களுடன் கூடிய செப்புத் தகட்டில் செய்யப்பட்டுள்ளது.

கொப்பரைக்குக், காவி வர்ணம் பூசப்பட்டு, ‘"சிவ சிவ’" என்ற வாசகம் எழுதப்பட்டு, விபூதிப் பட்டையுடன் கூடிய லிங்கம், அர்த்தநாரீஸ்வரர் உருவத்தின் மேல், தீப விளக்கு எரிவது போலும், அதில், அர்த்தநாரீஸ்வரர் உருவாய் எழுவது போலவும் படம் வரையப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த கொப்பரை கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை 2668 அடி உயரம் கொண்டது. தற்போது தமிழக அரசு இதன் உயரம் 2787 அடிகள் என அறிவித்துள்ளது. இதன் உச்சியில் பிரம்மாண்டமான கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும்.

பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த தீப உற்சவம். மலைமேல் மகாதீபம் என்ற பெருமை இங்கு மட்டுமே உள்ளது. பின்னாட்களில் திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றும் வழக்கம் உண்டானது.

மகாதீபம் ஏற்றும் உரிமை செம்படவர் எனப்படும் மீனவர் இனத்தவருக்கு உரியது. மீனவர் தலைவரான பர்வதராஜன் என்பவனின் மகளாகப் பார்வதி தேவி பிறந்தார். மீன் போன்ற அழகிய விழிகளை உடையவள் என்ற பொருளில் ''கயல் கண்ணி'' என்று பெயரிட்டனர். பலரும் ''கயல் கன்னி'' என்று குறிப்பிடுகின்றனர்; இது தவறு. ''கயல் கண்ணி '' என்பதே சரி. மீனாட்சி அம்மனுக்கு அங்கயற்கண்ணி, அதாவது அம் + கயல் + கண்ணி என்று ஒரு பெயர் உண்டு. இந்த கயல் கண்ணியினைச் சிவபெருமான், மீனவ இளைஞனாக வந்து, மணந்து, தேவியின் சாபம் நீக்கி, இருவரும் சிவ பார்வதியாக பருவதராஜனுக்குத் தரிசனம் தந்தனர். இதனால் மீனவர்களுக்குப் பருவதராஜகுலத்தார் என்று பெயர் ஏற்பட்டது. செம்படவர் என்ற பெயரும் இதே பொருளில்தான். படகுகளில் செல்வதால் படவர்; சிவன் + படவர் என்பதே செம்படவர் என்று ஆனது. இந்த பருவதராஜகுலத்தார் தான் தலைமுறை தலைமுறையாக மகாதீபம் ஏற்றும் உரிமைகளை உடையவர்கள். தீபத் திருவிழாவின் பத்தாம் நாள் மாலையில் மலைமேல் ஏற்றுவதற்காக தீபக் கொப்பரை, மலைமீது முன்னதாகவே கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டிருக்கும்.

தீபத் திருவிழாவில் தீபம் ஏற்றும் கொப்பரை பற்றியும் வரலாறு உண்டு. ஆதி காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் செய்து கொடுத்துள்ளனர். அது பற்றி தகவல் திரட்ட படவில்லை. புதுயுகம் [1668] ஆம் ஆண்டு, பல ஆண்டுகள் முன்பு வேங்கடபதி என்பவர் நாலரைபாகம் எடைகொண்ட இது எந்தவகை எடை என்று தெரியவில்லை வெண்கலத்தால் செய்யப்பட்ட கொப்பரை செய்து அளித்துள்ளார். கோயிலில் இது பற்றிய குறிப்பு பதிவாகி உள்ளது. இது, தொடர்ந்து நெடுங்காலம் பயன்படுத்தப்பட்டதால் சேதமடைந்தது.

இதையடுத்து, இப்போது உள்ள கொப்பரையின் வடிவமைப்பு உருவானது. இது 1990ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 92 கிலோ செம்பு 110 கிலோ இரும்புச் சட்டங்களால் வடிவமைக்கப்பட்டது. கொப்பரையில் அடிப்பாகம் 27 அங்குல விட்டமும் மேற்புறம் 37 அங்குல விட்டமும் உடையது. மொத்த உயரம்57 அங்குலம். இந்தக் கொப்பரையைத் தயார் செய்து தரும் பணியைப் பக்திபூர்வமாக செய்து வருபவர் சுமார் 70 வயதான மண்ணு நாட்டார் என்ற பருவதராஜகுலப் பெரியவர்.

அவருடைய மகன் பாஸ்கர், இவ்வாறு கூறுகிறார்......

கார்த்திகை தீபத் திருவிழாவின் சிறப்பே "மகா தீபம்" தான். இந்த "மகா தீபம்" 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் டிசம்பர் 3ஆம் தேதி மாலை ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்றும் உன்னதமான இந்தப் பணியை, "நாட்டார்கள்" என்று அழைக்கப்படும் பர்வதராஜ குலத்தைச் சேர்ந்தவர்களான நாங்கள், தலைமுறை தலைமுறையாகச் செய்து வருகிறோம். மகா தீபத்துக்கான பிரம்மாண்டமான கொப்பரை தயாரிப்பதில் இருந்து, மலை மீது ஜோதியை ஏற்றுவது வரையிலான இறைப்பணியைச் செய்வது குல வம்சத்தினர்தான்.

திருவண்ணாமலை பாத்திர வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக 1991ம் ஆண்டு அச் சங்கத்தின் சார்பாக தீபம் ஏற்றும் மகாதீப கொப்பரையை நன்கொடையாக வழங்கினார்கள்‌. மேற்படி தீபம் ஏற்றும் கொப்பரையினை செய்திடும் பணியினை திருவண்ணாமலை பாத்திர தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த திரு.வ.மண்ணு நாட்டார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் நாங்கள், கடந்த 1991ம் ஆண்டில் இருந்து கொப்பரையைச் செய்வது மற்றும் வருடம்தோறும் பராமரிப்பது போன்ற பணிகளைச் செய்யும் வாய்ப்பை அண்ணாமலையார் அருளால் பெற்றிருக்கிறோம்.

மலை மீது ஏற்றப்படும் ஜோதி பிரகாசமாக சுடர்விட முக்கிய காரணம் அதன் கொப்பரையே. கடந்தமுறை கொப்பரை தாமிரத்துடன் இரும்பு கலந்து தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை முழுக்க முழுக்க தூய தாமிரத்தகட்டினால் (செம்புத்தகடு) தயாரிக்கப்பட்ட கொப்பரையையே "மகா தீபம்" ஏற்ற பயன்படுத்துகிறோம். ஆகம விதிகளின்படி மகா தீபக் கொப்பரை, மொத்த உயரம் 57 அங்குலம். அதன் வாய் 37 அங்குல விட்டமும் கொண்டதாக வடிவமைக்கப்படும்.

மகா தீபத்துக்குப் பயன்படுத்தப்பட்ட கொப்பரை பழுதானதால் 2016ம் ஆண்டு ஆண்டு புதிய கொப்பரை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை என் தந்தை மண்ணு நாட்டார் தயாரித்துத் தந்துள்ளார். அவர் தயாரித்துத் தரும் மூன்றாவது கொப்பரை இது.

சுமார் இரண்டு இலட்சம் மதிப்பில், மொத்த உயரம் 57 அங்குல உயரத்தில், கீழ்வட்ட சுற்றளவு 27 அங்குலம், மேல்வட்ட சுற்றளவு 37 அங்குலம், 200 கிலோ எடையில் கொப்பரை செய்யப்பட்டுள்ளது. ''இவ்வாறு அவர் மகன் பாஸ்கர் கூறினார்.

இன்றுவரை எம் சித்தர்களின் குரல் அமைப்புக்கு கிடைத்த மாபெரும் பாக்கியம் கடந்த 7 வருடங்களாக திருக்கார்த்திகை மஹா தீபமேற்ற 1,008 லிட்டர் நெய் கொடுத்து வருகிறோம். இந்த மாபெரும் பாக்கியத்தை அண்ணாமலையான் அளித்துள்ளான். தொடர்ந்தும் இந்த பணி எத்தனை வருடமானாலும் அவனருளால் தொடரும்

  • 666
·
Added a post

1987-ஆம் ஆண்டு, அமெரிக்கர் ஸ்டீவ் ரோத்‌ஸ்டீன், அமெரிக்கன் ஏர்லைன்ஸிடமிருந்து 2,50,000 அமெரிக்க டாலர் கொடுத்து “கோல்டன் டிக்கெட்” ஒன்றை வாங்கினார். இந்த டிக்கெட், அவருக்கு வாழ்நாளெல்லாம் வரம்பின்றி அந்த விமான சேவையில் பயணம் செய்யும் உரிமையையும், மேலும் 1,50,000 டாலருக்கு ஒரு துணை பயணிக்கான டிக்கெட்டையும் வழங்கியது.

ஸ்டீவ் ரோத்‌ஸ்டீன் 10,000-க்கு மேற்பட்ட விமானப் பயணங்களை முன்பதிவு செய்தார். சில சமயங்களில், ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் சாப்பிடத்தான் அல்லது ஒரு போட்டியைப் பார்ப்பதற்காகத்தான் அவர் பயணம் செய்து, சில மணி நேரத்திலேயே திரும்பிவந்துவிடுவார். சில சமயங்களில் இல்லத்தரசர்களை (homeless) அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல அவர்களுடன் பயணம் செய்தார். சில சமயங்களில் “ட்ரீமர்” ஒருவருக்காக ஒரு காலியிடத்தை முன்பதிவு செய்தார். சில நேரங்களில் விமான டிக்கெட் பதிவு செய்து, விமானத்தில் ஏறவே இல்லை.

ஸ்டீவ் ரோத்‌ஸ்டீன் விமான கம்பனிக்கு மொத்தம் 21 மில்லியன் டாலர் செலவாகியதால், 2008-ல் நிறுவனம் அவரது இலவச வாழ்நாள் பயண டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் சட்டமே மேலானது என்பதால், டிக்கெட் ரத்து செய்யப்பட்ட பிறகு, ஸ்டீவ் ரோத்‌ஸ்டீன் விமான கம்பனிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அவர் இழப்பீடு கோரினார், வழக்கில் வென்றார், மேலும் 3 மில்லியன் டாலர் வழங்கப்பட்டன. அவரது இலவச வாழ்நாள் டிக்கெட் தொடர்ந்து செல்லுபடியாகவே இருந்தது.

  • 668
·
Added a post

* குளிர்காலத்தில் இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவை மற்றும் பசைத்தன்மை உள்ள உணவுகள் நல்லது.

* கோதுமை கஞ்சி மற்றும் ஆட்டுக்கால் சூப்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இது உடலுக்கு சூட்டைத் தரும். சுரைக்காய், பறங்கிக்காய் போன்ற நீர்க்காய்கள் பனிக்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை.

* பப்பாளி, அன்னாசி பழங்கள் சாப்பிடலாம். நாட்டுக்கோழி மற்றும் வெள்ளாட்டுக் கறி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

* கதகதப்பான உடைகளுடன் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வது, குளிர்கால தசை இறுக்கத்தை சீராக்கும். வெயில் படும்படியாக இருப்பது நல்லது.

* குளிர்காலங்களில் பச்சைத் தண்ணீரை தவிர்த்து, சுடு தண்ணீரில் குளிக்கலாம். உங்களின் உடைகள், விரிப்புகள் கதகதப்பாக இருக்கட்டும்

* குளிரால், சளி உறைந்து போகும். தொண்டையைச் செருமி துப்பினால் கூட சளி வராது. நல்லெண்ணெயில் மிளகு, சீரகம் பொரித்து வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

* வெதுவெதுப்பாய் இருக்கும் எண்ணெயை, ஐந்தாறு சொட்டு மூக்கு வழியாக விட்டால், தொண்டை வழியாக இறங்கி சளியை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து வெளியேற்றும்

* ஒரு லிட்டர் தண்ணீரில், கோரைக் கிழங்கு (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) - 10 கிராம், சுக்கு - 5 கிராம் சேர்த்து, அரை லிட்டராக கொதிக்க வைத்து குடிக்க, மார்பில் சளி கட்டாது. துளசி தீர்த்தமும் பலன் தரும்

* சுற்றிலும் பனியாய், வானம், மப்பும் மந்தாரமுமாய் இருந்தால், சாம்பிராணி புகை போட்டு, அந்தப் புகையில், போர்வையை காட்டுங்கள். அந்த துணியால் உடம்பைப் போர்த்த கதகதப்பு கூடும். இதுவும் பழங்காலத்தில் இருந்த ஒரு பழக்கம்.

  • 670
·
Added a post

மேஷம்

மறைமுகமான சில விமர்சனங்கள் தோன்றி மறையும். நெருக்கமானவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கடின உழைப்பிற்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய பயணங்கள் உண்டாகும். சக ஊழியர்களால் சிறு சிறு வருத்தங்கள் நேரிடும். பிறமொழி மக்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

ரிஷபம்

மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். மூத்த சகோதரர்களால் பயனடைவீர்கள். சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள். வாகன வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பொறுப்பும், அதிகாரமும் மேம்படும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்விகள் நல்ல மாற்றம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

மிதுனம்

சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்ற எண்ணங்கள் மேம்படும். திட்டமிட்ட பணிகளில் சில மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சக ஊழியர்களால் சில பணிகளை முடிப்பீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கடகம்

உடன் பிறந்தவர்கள் இடத்தில் ஒத்துழைப்புகள் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். அலுவலகத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். ஆராய்ச்சி விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் ஆதாயம் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். வருத்தம் அகலும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

சிம்மம்

மனதில் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டும் நிங்கும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நண்பர்களிடத்தில் அதிக உரிமைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். சில இழுபறிகளுக்கு பின்பு எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடத்தில் பொறுமை வேண்டும். உத்தியோகப் பணிகளில் திருப்பங்கள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

கன்னி

சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். அரசு காரியங்களில் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

துலாம்

சுப காரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மையான சூழல் உருவாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் மாற்றம் உருவாகும். கடன் சார்ந்த சில உதவிகள் சிலருக்கு சாதகமாகும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

விருச்சிகம்

பேச்சுக்களின் அனுபவம் வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பாகப்பிரிவினை பிரச்சனைகள் குறையும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில திருப்புங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சோர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

தனுசு

நினைத்த பணிகளில் இருந்த தடைகள் குறையும். தாயாரின் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். பங்குதாரர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பழைய சிந்தனைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மகரம்

சுபகாரிய நிகழ்ச்சிகள் கலந்து கொள்வீர்கள். சிறு துர பயண வாய்ப்புகள் சாதகமாகும். புதிய முயற்சிகளில் இருந்து தடைகள் விலகும். வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். தொழில்நுட்பக் கருவிகளால் ஆதாயமடைவீர்கள். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு

 

கும்பம்

கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் மேம்படும். தோற்றப்பொலிவு மேம்படும். நண்பர்கள் வழியில் அலைச்சல் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் சில உதவிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் துரிதம் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பேச்சுக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மீனம்

அலுவலகத்தில் பொறுமையுடன் செயல்படவும். அலைபாயும் சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். நெருக்கமானவர்கள் இடத்தில் மனம் விட்டு பேசுவது புரிதலை உருவாக்கும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் நேரிடும். உடல் நலனில் கவனம் வேண்டும். எதிர்ப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

  • 767
·
Added a post

விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 15 ஆம் தேதி திங்கட்கிழமை 1.12.2025

இன்று பிற்பகல் 02.36 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி

இன்று இரவு 07.52 வரை ரேவதி . பின்னர் அஸ்வினி. நாமயோகம் : இன்று அதிகாலை 01.04 வரை சித்தி. பின்னர் இரவு 10.16 வரை வியதீபாதம். பிறகு வரீயான்.

இன்று அதிகாலை 03.32 வரை வணிசை. பின்னர் பிற்பகல் 02.36 வரை பத்திரை. பிறகு பவம்.

இன்று காலை 06.14 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.

நல்ல நேரம்:

காலை : 06.15முதல் 07.15 மணி வரை

பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 774