- · 1 friends
-
2 followers
நயாகரா வீழ்ச்சி
Canada Day நயாகரா வீழ்ச்சி
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.
10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.
11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.
12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
தமிழ் சினிமாவில் கும்கி படத்தின் மூலமாக அறிமுகமாகி, தனது கடின உழைப்பால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் விக்ரம் பிரபு. அதன் பிறகு அவரது ஒவ்வொரு படங்களும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் கடைசியாக அவரது நடிப்பில் வெளியான சிறை என்ற படம் தனி ஒரு அடையாளத்தை கொடுத்தது. சிவாஜி கணேசனின் பேரன், பிரபுவின் மகன் என்கிற அடையாளங்கள் இருந்தாலும், திரையுலகப் போராட்டத்தில் தான் சந்தித்த தனிமை குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.
விக்ரம் பிரபு நடிப்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில்,அறிமுக நடிகர் LK அக்ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் சிறை.உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. வெளியாகி 75 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைக் வாரி குவித்து வருகிறது. வணிக ரீதியாக வசூலை வாரி கொடுக்கிறது.
பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற “சிறை” திரைப்பட 75வது நாள் வெற்றிவிழா நடைபெற்றது. விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் சிறந்த கதைக்காக தேடிக் கொண்டிருக்கும் ஒரு சிறந்த நடிகர். அனைத்து படங்களிலும் அவருக்கென ஒரு தனி சிறப்புடன் நடித்திருப்பார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன் மற்றும் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு. என்று இரண்டு நடிகர்களின் வாரிசு தான் விக்ரம் பிரபு. தலைமுறை தலைமுறையாக தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றனர்.
2012-ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த 'கும்கி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இவரது அழகும் உயரமும் சரியான பாடி கட்டும் இவருக்கு பல வாய்ப்புகளை தேடி கொடுத்து வருகிறது. குறிப்பாக இவர் போலிஸ் கதாபாத்திரத்திற்கு மிகவும் அச்சடித்தால் போல் இருப்பார்.இவர் பெரும்பாலும் எதார்த்தமான மற்றும் ஆக்ஷன் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, கபாலி வெள்ளை யானை மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்,இறுகப்பற்று போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார் பல படங்கள் விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பல படங்கள் வெற்றி அடைந்துள்ளது.
டாணாக்காரன் படத்தில் இவரது நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும். ஒரு காவலராக நினைக்க ஆசைப்பட்ட ஒரு இளைஞன்சந்திக்கும் கொடுமைகளை பற்றி பேசி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கத இயக்குனர் தமிழ் தான் இந்த டாணாகரன் திரைப்படத்தை கதை எழுதியுள்ளார். தமிழ் முதலில் ஒரு போலீஸ்காரனாகவே இருந்து அதன் பிறகு கதை எடுக்கும் இயக்குனராக மாறிவிட்டார். அப்பொழுது பட்ட கஷ்டங்களை விலகும் படமாக தான் இந்த படம் உருவானது என்றும் ஒரு பேட்டியில் அவர் சொல்லியிருந்தார். அவரின் கதைக்கேற்ப விக்ரமின் நடிப்பும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்.டாணாக்காரன்‘ படத்திற்கு மாநில விருது கிடைத்துள்ளது.
இந்த வெற்றி விழாவில் படத்தின் நாயகன் விக்ரம் பிரபு கலந்துக் கொண்டு பேசினார். அவர் "ஒவ்வொரு முறையும் நான் கேமரா முன்னால் நிற்கும் போது, என் தாத்தா சிவாஜி கணேசன் மற்றும் என் அப்பா பிரபு ஆகியோர், இந்த திரையுலகில் பெற்றிருந்த நற்பெயரை நான் காப்பாற்ற வேண்டும்.என்ற பெரும் பொறுப்பும் ஒருவித பயமும் என்னை சூழ்ந்து கொள்கிறது". நடிகரின் பேரன் மற்றும் மகன் என்னும் ஒரு சூழல் என்னை தாக்குகிறது. நான் தனிமையை மிகவும் அதிகமாக உணர்ந்து இருக்கிறேன் என்றும் உருக்கமாக கூறியிருந்தார். நான் ஒரு சினிமா துறையின் வாரிசு என்பதாலும் என்ற ஒரு தனி அடையாளம் கிடைக்கவில்லை என்றும் கவலைப்பட்டார் விக்ரம் பிரபு.
வெளிநாட்டிற்கு வந்து திரும்பிய பிறகு நான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டேன் என் ஆசைக்கு என் அப்பா நான் உனக்கு உதவ மாட்டேன் ஏன் உன் முயற்சியால் வெற்றி பெற வேண்டும் என்று சொல்லிவிட்டார் அதன் பிறகு 25 படம் நான் நடித்துள்ளேன் அனைத்து படங்களும் என் சொந்த உழைப்பில் முன்னேறி இருக்கிறேன் என்றும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார் விக்ரம் பிரபு.நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனம் செலுத்துகிறேன் என்று கூறினார். சிறை எனக்கு 25ஆவது படம் என்பதால் எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது என்றும் எனது மகிழ்ச்சியை தன் நண்பர்களுடன் விழாவில் பகிர்ந்துள்ளார் அவருக்கு விருதும் வழங்கப்பட்டது.
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர், மத்திய கிழக்கு பதற்றம், உக்ரைன் - ரஷ்யா போர் என உலகம் அசாதாரண சூழலில் இருந்து வரும் சூழலில் வட கொரியா வழக்கம்போல ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
ஆனால் இந்த முறை ஜப்பான் கடற்கரைப் பகுதியை நோக்கி ஒரே நேரத்தில் சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வட கொரியா பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்கொரியாவின் தகவலின்படி, வட கொரியாவின் சுனான் (Sunan) பகுதியிலிருந்து மதியம் 1:20 மணியளவில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. சுமார் 10 ஏவுகணைகள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டுள்ளன.
இது வடகொரியாவின் வழக்கமான சோதனைகளை விடப் பெரிய அளவிலான நடவடிக்கையாக கருதப்படுகிறது. இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடற்பகுதியை நோக்கிச் சென்றன. அவை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார கடல் மண்டலத்திற்கு வெளியே விழுந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த ஏவுகணை வீச்சு குறித்து ஆய்வு செய்யவும், ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியவும், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் அவசரக்கால குழு அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து நடத்தி வரும் வருடாந்திர ராணுவப் பயிற்சிக்கு தனது எதிர்ப்பை காட்டவே வடகொரியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.
இந்தப் பயிற்சிகள் தொடர்ந்தால் பயங்கரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று வடகொரியா ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலை வட கொரியா கடுமையாக கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈராக்கில் நிலவும் அதீத பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டு, அங்குள்ள அனைத்து அமெரிக்கப் பிரஜைகளும் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
மார்ச் 14ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை, பாக்தாத்தின் பாதுகாக்கப்பட்ட வலயத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மறைமுக திறமைகள் வெளிப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். பயணங்களில் புதிய அறிமுகங்கள் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
ரிஷபம்
கல்வி சம்பந்தமான வெளியூர் பயணங்கள் கைகூடும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூல பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் மூலம் மனதில் மாற்றமும் புத்துணர்ச்சியும் உருவாகும். நீண்ட கால கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
குழந்தைகள் இடத்தில் பொறுமை வேண்டும். சந்தேக உணர்வுகளால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கடகம்
செய்யும் செயல்களில் இருந்து வந்த தடைகள் குறையும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவுகள் மேம்படும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வரவுகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் ஆதாயமடைவீர்கள். வங்கி பணிகளில் இருந்த இழுபறிகள் குறையும். வெளியூரிலிருந்து புதிய வேலைகள் தொடர்பான செய்திகள் கிடைக்கும். வியாபார சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
கன்னி
பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் குறையும். மனதில் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து புதிய வழிமுறைக்கு கொண்டு வருவீர்கள். உயர் கல்வி சார்ந்த துறைகளில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம்
கல்வி சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். தந்தைவழி உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயணம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். இயற்கை மருத்துவம் சார்ந்த தேடல்கள் உண்டாகும். புரட்சிகரமான சிந்தனைகள் மனதில் உருவாகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்து சில தெளிவுகள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குறுகிய தூர பயணத்தால் மேன்மை ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வருமானம் பெருக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்ப்புகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு
தனுசு
திடீர் பயணங்களால் மேன்மை ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். வியாபார பணிகளில் இருந்த மந்த தன்மைகள் விலகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற வாக்குறுதிகளை குறைப்பது நல்லது. சமூகப் பணிகளில் கொள்கை பிடிப்பு தன்மை மேம்படும். கணிதம் சார்ந்த துறையில் ஆர்வம் ஏற்படும். ஆசைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
எதிர்மறையான சிந்தனைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் மத்தியில் ஒத்துழைப்பும் அதிகரிக்கும். பழுதான வாகனங்களை சீர் செய்தீர்கள். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். கடினமான செயல்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெளியூர் வேலை வாய்ப்புகள் ஈடேறும். நலம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். எதையும் பகுத்தறிந்து முடிவெடுப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கால்நடை பணிகளில் பொறுமை காக்கவும். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கும் மேம்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம்
நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் உடல் சோர்வுகள் நேரிடலாம். உயர் அதிகாரிகள் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கைகள் மாற்றங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட்டால் நன்மைகள் அதிகரிக்கும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.3.2026
இன்று காலை 08.23 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.
இன்று அதிகாலை 03.59 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்
இன்று காலை 09.36 வரை பரிகம். பின்னர் சிவம்.
இன்று காலை 08.23 வரை பாலவம். பின்னர் இரவு 08.39 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.
இன்று காலை 6.21 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.00 முதல் 07.00 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
பச்சை கற்பூரம் மற்றும் லவங்க பட்டை ஒரே அறிவியல் குடும்பத்தை சார்ந்தது. இதனை ஆங்கிலத்தில் Cinnamon Camphor என்று கூறுவார்கள். நம் முன்னோர்கள் இந்த கற்பூரத்தை உணவில், ஆன்மிகத்தில், அழகு குறிப்புகளில் மற்றும் மருத்துவத்திலும் பயன்படுத்தி உள்ளனர். சரி வாங்க இந்த பச்சை கற்பூரத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்….
- பச்சை கற்பூரத்தை உணவில் பயன்படுத்துவதால் சாப்பாடு சீக்கிரம் கெடுவதற்கு காரணமான Fungus ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. இப்பொழுது நாம் உணவு கெடாமல் இருப்பதற்காக Refrigerator பயன்படுத்துகிறோம். ஆனால் முன்பு இந்த கற்பூரத்தை பயன்படுத்தி உள்ளனர்.
- உணவில் இருக்கும் நோய் தொற்று ஏற்படாமலும் மற்றும் சாப்பாட்டில் சுவையை அதிகரிக்கவும், கிருமிகள் எதுவும் அண்டாமல் இருப்பதற்கும் இந்த பச்சை கற்பூரம் பயன்பட்டு வருகிறது.
பச்சை கற்பூரத்தின் மருத்துவ பயன்கள்:
- கோயில்களில் கொடுக்கும் பிரசாதம் மற்றும் தீர்த்தத்தில் பச்சை கற்பூரம் மற்றும் கிராம்பு சேர்த்து தருவார்கள். எதற்காக என்றால் மருந்தாகவும் மற்றும் சுவை அதிகரிக்கவும் மற்றும் கடவுளின் ஆசி மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த முறையாகும்.
- பச்சை கற்பூரத்தை தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் சளித்தொல்லை, சுவாச கோளாறு, சைனஸ், அலர்ஜி மற்றும் நோய் தோற்று ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது….
- இரவு ஒரு செம்பு (copper) அல்லது மண் பாத்திரத்தில் இரவு படுக்கைக்கு முன்பு தண்ணீர் ஊற்றி அதில் துளசி, கிராம்பு, பச்சை கற்பூரம் மற்றும் தேன் கலந்து மறு நாள் காலை குடித்து வந்தால் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். மேலும் இந்த தண்ணீரை பேச்சு வராத குழந்தைகள் குடித்து வந்தால் பேச ஆரம்பிப்பார்கள்.
- இந்த கற்பூரத்தை Cream-ஆக பாதத்தில் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
பச்சை கற்பூரம் பயன்கள் – செல்வம் செழிக்க உதவும் பச்சை கற்பூரம்:
- பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் குணம் உள்ளது. பச்சை கற்பூரத்துடன் சோம்பு, கிராம்பு, மஞ்சள், கருமஞ்சள், சிறிய தேங்காய், புணுகு, கோரோசனை, ஜவ்வாது, குன்றின் மணி, கோமதி சக்கரம், சோலி மற்றும் சிறிய தர்பை துண்டு அனைத்தையும் ஒரு பாத்திரம் அல்லது துணியில் கட்டி பூஜை அறை மற்றும் காசோலை ஆகிய இடத்தில் வைத்து வந்தால் பண புழக்கம் அதிகரிக்கும் மற்றும் வீண் செலவு ஏற்படாது.
- இதை ஏன் செய்ய வேண்டும் என்றால் இதில் தன ஆகர்சனம் கிடைப்பதற்காகவும், மனதில் நேர்மறை எண்ணங்கள் தோன்றுவதற்காகவும் மற்றும் பண வரவு அதிகரிக்கவும் வைக்க வேண்டும்.
- பச்சை கற்பூரம் இயற்கையாகவே நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் என்பதற்காக திருப்பதியில் உள்ள பெருமாள் கோவிலில் சாமியின் தாடையில் இந்த கற்பூரத்தை வைத்திருப்பார்கள்.
- வீட்டில் உள்ள கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் போன்றவை விலகுவதற்கும் இந்த பச்சை கற்பூரம் பயன்பட்டு வருகிறது. பச்சை கற்பூரம் நல்ல வாசனை உள்ளது வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடியேறுவாள். அதனால் தான் இந்த கற்பூரத்தை பயன்படுத்துவதால் செல்வம் செழிக்கும் என்று கூறப்படுகிறது.
மகா பாரத போர் நடந்து கொண்டிருந்தநேரமது….பாண்டவர்களிடம்செல்வங்கள் குறைந்து கொண்டே வந்தன.. ஒருபோர் என்றாலே பொருட் செலவுகள் அதிகம் ஆகுமே…. என்ன செய்வது என்று தர்மன்கையைபிசைந்துகொண்டிருந்த நேரம்பார்த்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அங்கு வந்தார்…
என்ன தர்மரே….என்ன ஆலோசனை…என்று சிரித்து கொண்டே கூறவே, அதற்கு தர்மரோ,…..செல்வங்கள் குறைந்து விட்டது கிருஷ்ணா…..
…. இன்னும் போர் எத்தனை நாள் நீடிக்குமோ தெரியவில்லை நீதான்ஏதாவது யோசனை கூற வேண்டும்…. என்றார்…
தர்மரே….!…கவலை பட வேண்டாம்…. குபேரனிடம்….கடன் கேட்டு இருக்கிறேன்…. பீமசேனனைஅனுப்பி வாங்கி வர சொல் என்றார்…தருமனும் பீமனை அனுப்பி வாங்கி வர சொன்னார்…பீமனும்குபேரன் மாளிகையை தேடி புறப்பட்டான்…வாயில் காப்போனிடம் குபேரனை காண வேண்டும் என கூற…அவனும் வழிவிட, வீர நடை போட்டு கொண்டு மாளிகை உள்ளே நுழைந்து போய் அம்மாளிகையை நோட்டமிட்டான்பீமன்…..
அங்கே ஒருவரையும் காணோம்…ஒரு வயதான பெரியவர்அரிசியை கீழே கொட்டி கொண்டு யாரையும் கவனிக்காமல். .அரிசியில் உள்ள குருணிகளையும் கற்களையும் தீவிரமாய் ஆய்ந்துபொறுக்கி கொண்டிருந்தார்…. பீமசேனன்,அவரிடம் சென்று தான் குபேரன்ஐயாவை பார்க்க வேண்டும் என கூற…அந்த பெரியவர்அங்கிருக்கும் ஒரு நாற்காலியில் அவனை அமர சொல்லி விட்டுஉள்ளே சென்றார்.
அமர்ந்திருந்தபீமசேனனுக்கு…குபேரனிடம் செல்வம் பெறும் நம்பிக்கை போய்விட்டது.. குபேரன் மாளிகைஎன்றால் தங்கத்தாலும்வைரங்களாலும்…..இழைத்திருக்க வேண்டும்… இங்கே என்னடா ..என்றால் அரிசியைபொறுக்கி கொண்டு இருக்கிறார்கள்…. ஒரு பணியாளும் இல்லை…ஒன்றும்இல்லை…. இங்கிருந்து செல்வங்களை வாங்கி செல்வது கடினம்தான் என நினைத்து, கொண்டு நெடுநேரம் அமர்ந்திருந்தான்…. நேரம் செல்ல செல்ல பசிவேறு வயிற்றை கிள்ளியது….
ஒருவேளையாக,.பட்டுபீத்தாம்பரம் உடுத்தி கொண்டு, ஜவ்வாது மணம் வீச…… முக வதனம் தேஜேஸ்சுடன்அரிசியை பொறுக்கி கொண்டிருந்த அதே பெரியவர்பீமன்இருக்குமிடம்…. வந்து அவனருகில்அமர்ந்தார்…. பீமன் அப்போது தான் அவரை உற்று நோக்கினான்…. அரண்டுபோனான். அவர் குபேரர் தான்…. பீமன் எழுந்து நின்று அவரை வணங்க, அவர் அவனை விருந்து ண்ணும் அறைக்கு அழைத்து சென்றார்
அந்த அறை வைரங்களாலும்.. வைடூரியங்காளாலும்………அலங்கரிக்கபட்டு பீமனின்கண்களைபறித்தது……...அவன் பசியை கண்ணுற்ற குபேரன்,பணி பெண்களை அழைத்து விருந்தை எடுத்து வரும்படி கட்டளை இட்டார்…
கிட்டத்தட்ட இருபது பணிப்பெண்கள் அணி வகுத்துதங்கதாம்பூலத்தில் வாழைஇலையால்மூடி பீமன் முன் விருந்தை வைத்தனர்…. குபேரன் பீமனிடம்முதலில் விருந்தை சாப்பிட சொன்னார் …. நல்ல பசியில் இருந்தஅவன் அவசர அவசரமாக மூடியிருந்த வாழை இலையை எடுத்து தூர போட்டு விட்டு உணவைஆசை ஆசையாக தேடி பார்க்க, அங்கு தட்டுகளில் இருந்ததோ….பவளம்…. மாணிக்கம்…. வைரம்….. வைடூரியங்கள்…ரத்தினங்கள் தங்கபாளங்கள்மட்டுமே ….. சாப்பிட ஒன்றும் இல்லை..
பீமன் தன்வயிற்றை பிசைந்து கொண்டான்…நல்ல பசி அவனுக்கு…அவன் கண்கள் உணவை தேடியதை புரிந்து கொண்ட குபேரன்…. அவனை பார்த்து…. பீமா…முதலில் நமது செல்வம் நவ தானியங்கள் தான்…. அவற்றைஏளனம் செய்யாதே…. பின்பு தான்எல்லா செல்வங்கள்… .நவரத்தினங்ளைசாப்பிட முடியுமா…. ஆயிரம் செல்வங்கள், இருந்தாலும் அவைகள் பசி தீர்க்க பயன் படாது.. புரிந்து கொள்…. என கூறிய குபேரன்….மீண்டும் பணி பெண்களை உணவு பரிமாற கூற சொன்னார்….பீமன் தான் முன்பு எண்ணிய எண்ணங்களை எண்ணி குபேரனிடம் மனம் வருந்தினான்…..
அறு சுவை உணவுஉண்ட பின் பீமசேனனுக்குஅந்த செல்வங்களை மூட்டைகட்டி தூக்க முடியாத அளவிற்குஅளவில்லாத செல்வங்களை கொடுத்து அனுப்பினார் குபேரன்.
உலக சந்தையில் மசகு எண்ணெய் (Crude Oil) விலை அதிகரித்து வருவதால், அதன் தாக்கம் கனடிய விவசாய துறையிலும், அதனைத் தொடர்ந்து மளிகைப் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதாக உணவுப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குயெல்ஃப் பல்கலைக்கழகத்தின் (University of Guelph) பேராசிரியர் மைக் வான் மாசோ (Mike von Massow) இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது விவசாயிகள் விதைப்புப் பணிகளில் ஈடுபடும் காலம் என்பதால், நிலங்களை உழுவதற்கும் விதைகளை இடுவதற்கும் அதிகப்படியான எரிபொருள் தேவைப்படுகிறது.
உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகளுக்கான எரிபொருள் செலவு கணிசமாக உயரும். இது அறுவடை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக, உலகிலேயே மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், குறிப்பாக மத்திய கிழக்கில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நைட்ரஜன் உரங்களின் விலை அதிகரித்துள்ளது. மேற்கு கனடாவை விட, இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் கிழக்கு கனடா (Eastern Canada) இந்த உர விலை உயர்வால் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) தெரிவித்துள்ளார். இத்தாலி பாராமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது, மத்திய கிழக்கிலிருந்து தனது நாட்டுப் படைகளை மீளப்பெறவுள்ளதாக அவர் (Giorgia Meloni) அறிவித்துள்ளார். அதோடு மத்திய கிழக்கிற்கு எதிரான போரில் இத்தாலி ஒருபோதும் பங்காளியாக இருக்காது எனவும், ஈரானுக்கு எதிரான போரில் இத்தாலி பங்கேற்காது எனவும் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் பிறக்கும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் வேண்டும். அரசு பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். கல்விப் பணிகளில் ஆர்வம் இன்மை குறையும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தங்கள் நீங்கும். சுப காரியம் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
பழைய நினைவுகளால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை குறைத்துக்கொள்ளவும். உயர் அதிகாரிகளின் தன்மையை அறிந்து செயல்படவும். சவாலான பணிகளில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கடகம்
தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தவறிப்போன வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் நன்மை உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
எந்த காரியத்தையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். குறுகிய தூர பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணி ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த தடைகள் மறையும். கொடுத்த கடன்கள் வசூலாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
புத்திரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கேளிக்கை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் பிறக்கும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். அறிவியல் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். மறைமுகமாக இருந்து வந்த இன்னல்கள் விலகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
துலாம்
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். புதிய கூட்டாளிகளை இணைப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்கு செயல்பாடுகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த இடைவெளிகள் குறையும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகளை அறிவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விருச்சிகம்
முயற்சிக்கு உண்டான முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உருவாகும். பாகப்பிரிவினை விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதுமை ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
வாக்கு சாதுர்யம் மூலம் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். அனுபவப் பூர்வமான பேச்சுக்கள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மகரம்
குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உணர்ச்சிபூர்வமாக செயல்படுவதை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கனிவான பேச்சுக்களை கடைபிடிக்கவும். ஆதரவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கும்பம்
மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகள் தாமதமாக நிறைவேறும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். மற்றவர்களைப் பற்றிய கண்ணோட்டங்களில் மாற்றம் பிறக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சில அனுபவங்கள் மூலம் புதிய கண்ணோட்டம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
மீனம்
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விவசாய தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். புனித யாத்திரை தொடர்பான பயணங்கள் கைகூடும். உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விசுவாவசு வருடம் மாசி மாதம் 30 ஆம் தேதி சனிக்கிழமை 14.3.2026.
இன்று காலை 07.22 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று அதிகாலை 02.17 வரை பூராடம். பின்னர் உத்திராடம்
இன்று காலை 09.55 வரை வரீயான். பின்னர் பரிகம்.
இன்று காலை 07.22 வரை பத்திரை. பின்னர் இரவு 07.52 வரை பவம். பின்பு பாலவம்.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை
பகல் : 12.45 முதல் 01.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), எதிர்வரும் மார்ச் 16-ஆம் திகதி பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸைச் சந்தித்துப் பேசவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
நோர்வே மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கான தனது உத்தியோகபூர்வ ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் இந்தச் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.
2025-இல் பதவியேற்றது முதல் ஐரோப்பிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதில் பிரதமர் கார்னி அதிக ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆர்க்டிக் பிராந்தியம் மற்றும் நேட்டோ (NATO) அமைப்பில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
பிரதமர் தனது பயணத்தை நோர்வேயில் தொடங்குகிறார். அங்கு ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே நடைபெறும் "கோல்ட் ரெஸ்பான்ஸ்" (Cold Response) என்ற நேட்டோவின் இராணுவப் பயிற்சியைப் பார்வையிடவுள்ளார்.
அத்துடன் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரைச் சந்தித்து வர்த்தகம், தூய்மையான எரிசக்தி மற்றும் விண்வெளி ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளார்.
நோர்வேயைத் தொடர்ந்து லண்டன் செல்லும் பிரதமர், அங்கு பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மரைச் (Keir Starmer) சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்புத் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளார்.
1. ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.
2. முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.
3. தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.
4. பப்பாளிப் பழத்தை மசித்து பூசி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.
5. துளசி இலை சாற்றை முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும்.
6. வாழைப்பழத்தோலை லேசாக சூடுபடுத்தி கண்களின் மேல் வைக்க கருவளையம் குறையும்.
7. உதட்டில் வெண்ணெய் தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும்.
8. நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண்ணெயை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்
9. பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.
10. முட்டையின் வெள்ளைகரு, தேன், மாதுளை ஜூஸ் மூன்றையும் கலந்து அரை மணி நேரம் முகத்தில் பூசிவிட்டு முகம் கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.
காலையில் எழுந்ததும் முதல் முதலில் நம் வயிற்றுக்கு செல்லும் இந்த டீ ஆனது நல்ல ஆரோக்கியமான ஒன்றாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதற்குத்தான் இந்த மஞ்சள் டீ. இதை தினமும் காலையில் குடித்து வந்தால் உடலுக்கு அத்தனை நன்மைகளும் ஆரோக்கியமும் கிடைக்கும். பொதுவாகவே மஞ்சள் ஒரு கிருமி நாசினி. உடலுக்கு நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம். அது மட்டும் இல்லாமல் இதில் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, விட்டமின் ஈ, விட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, சிங்க் போன்று அத்தனை சத்துக்கள் அடங்கியுள்ளது.
இது மட்டுமில்லாமல் கேன்சரை உருவாக்கும் செல்களின் அளவை கூட இந்த மஞ்சள் குறைத்து விடும். இன்று வரைக்கும் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட நோய்க்கு கூட வருவதற்கு முன் காக்கும் மருந்தாகவும், வந்த பின் அதன் தாக்கத்தை குறைக்கவும் இந்த மஞ்சள் பயன்படுகிறது என்றால் நீங்களே நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருள்கள்: மஞ்சள் -1/2 டீஸ்பூன், மிளகு – 1/4 டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, சீரகம் – 1/4 டீஸ்பூன், நெய் அல்லது வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.
அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து விடுங்கள். அதில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு டீ கப்பில் மஞ்சள், மிளகு, சீரகம், உப்பு, நெய் அல்லது வெண்ணெய் இவை அனைத்தும் எடுத்து வைத்து கொள்ளுங்கள். பிறகு அதில் நன்றாக கொதித்து கொண்டிருக்கும் தண்ணீர் ஒரு கப் எடுத்து ஊற்றியவுடன், ஒரு சிறிய தட்டு வைத்து அந்த டீ கப்பை மூடி விடுங்கள். ஒரு நிமிடம் கழித்து திறந்ததும் அதில் நாம் சேர்த்திருக்கும் அனைத்தும் பொருட்களும் கரைந்து உருகி இருக்கும். இப்போது ஒரு ஸ்பூன் கொண்டு அடியில் தங்கியிருக்கும் மிளகு, சீரகம் இது எல்லாம் நன்றாக கலக்கும் படி கலந்து விட்டு மிதமான சூட்டிலே இதைக் குடித்து விடுங்கள். ஆறிய பிறகு இதை குடிக்கக்கூடாது.
இதை தினமும் ஒரு முறையாவது குடித்து வந்தால் தொண்டை சார்ந்த எந்த பிரச்சினையும் உங்களை நெருங்காது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த மஞ்சள் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் அவர்கள் இதை தவிர்த்து விடலாம்.
பழமையான இந்திய இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். இந்த மகாகாவியம் மனித வாழ்க்கையின் பல நுணுக்கமான உண்மைகளை கதைகளின் மூலம் எடுத்துரைக்கிறது. அத்தகைய ஒரு ஆழமான வாழ்க்கைப் பாடத்தை உணர்த்தும் சம்பவம் சல்லியன் சம்பந்தப்பட்டதாகும்.
“அவசியமில்லாமல் பிறர் வீட்டில் சாப்பிடக்கூடாது” என்ற பழமொழி போன்ற வாழ்க்கை நெறி எவ்வாறு உருவானது என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.
சல்லியன் யார்?
மகாபாரதத்தில் வரும் வீரர்களில் ஒருவர் சல்லியன். இவர் மாத்ரா நாட்டின் மன்னன்.
அவருக்கு நகுலன் மற்றும் சகாதேவன் இருவரும் மருமகன்கள். ஏனெனில் பாண்டவர்களின் தந்தையான பாண்டு மன்னனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர்:
குந்தி
மாத்ரி
குந்திக்கு பிறந்தவர்கள்:
தர்மர்
பீமன்
அர்ஜுனன்
மாத்ரிக்கு பிறந்தவர்கள்:
நகுலன்
சகாதேவன்
மாத்ரியின் சகோதரனாக இருந்ததால் சல்லியன் இவர்களின் தாய் மாமனாக விளங்கினார்.
சல்லியன் மிகுந்த வீரமும் திறமையும் கொண்டவன்.
வில்ல்வித்தையில் வல்லவன்
வாள் சண்டையில் வல்லவன்
தேரோட்டுவதிலும் அசாதாரண திறமை பெற்றவன்
ஆனால் அவனுக்கு ஒரு பெரிய பலவீனம் இருந்தது — பசி.
பசி வந்துவிட்டால் அவனால் எதையும் சிந்திக்க முடியாது. பசியை அடக்குவது அவனுக்குப் பெரிய சவாலாக இருந்தது.
துரியோதனன் செய்த திட்டம்
துரியோதனன் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் போர் நடக்கவிருக்கிறது என்பதை அறிந்திருந்தான்.
சல்லியன் தனது மருமகன்களான பாண்டவர்களுக்கு உதவப் பெரும் படைகளுடன் வருகிறார் என்ற செய்தி அவனுக்குக் கிடைத்தது.
அதை கேட்டதும் துரியோதனன் ஒரு சூழ்ச்சி செய்தான்.
சல்லியன் வரும் பாதையில்:
பெரிய கூடாரங்கள் அமைக்கப்பட்டன
அறுசுவை உணவுகள் தயாரிக்கப்பட்டன
படைகளுக்கும் சல்லியனுக்கும் விருந்து அளிக்கப்பட்டது.
அந்த விருந்து மிகவும் சிறப்பாக இருந்தது.
பசியால் தவித்திருந்த சல்லியன் அந்த உணவை வயிறு நிறைய உண்டான்.
உணவு முடிந்ததும் சற்றுநேரம் இளைப்பாறியபடி அவன் சிந்தித்தான்:
“இவ்வளவு பெரிய விருந்தை அளித்தவர் யார்?
அவருக்கு நான் என்ன கைமாறு செய்வேன்?”
என்று அறியாமலே உரக்கச் சொன்னான்.
அந்த நேரத்தில் மறைந்து நின்றிருந்த துரியோதனன் முன் வந்து,
“மாமா! சௌக்கியமா?”
என்று கேட்டான்.
அப்போது தான் சல்லியனுக்கு உண்மை புரிந்தது.
“அடடா! இது துரியோதனன் ஏற்பாடு செய்த விருந்தா? தெரியாமல் சாப்பிட்டுவிட்டேனே!” என்று அவன் வருந்தினான்.
ஆனால் துரியோதனன் சிரித்தபடி கூறினான்:
“வரப்போகும் போரில் எனக்கு துணையாக நின்றால் போதும்.
அதுவே எனக்கு நீங்கள் செய்யும் கைமாறு.”
ஒருமுறை விருந்தை ஏற்றுக்கொண்ட பிறகு மறுப்பது தர்மத்திற்கு எதிராக இருக்கும் என்று நினைத்த சல்லியன் வேறு வழியின்றி கௌரவர்களின் தரப்பில் போரிட ஒப்புக்கொண்டான்.
இது தான் “செஞ்சோற்றுக் கடன்” என்று சொல்லப்படும் நிலை.
கிருஷ்ணன் செய்த இன்னொரு சூழ்ச்சி
போர் தொடங்கியபோது பல நாட்கள் கடுமையாக நடைபெற்றது.
ஒருநாள் போர்க்களத்தில் மீண்டும் சல்லியனுக்கு கடும் பசி ஏற்பட்டது.
அப்போது அருகில் இருந்து நெய் மணம் வீசும் சுவையான உணவின் வாசனை வந்தது.
அவன் அந்த வாசனையைப் பின்தொடர்ந்து ஒரு சமையல் கூடத்துக்குச் சென்றான்.
அங்கு பலவிதமான உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தன.
பசி காரணமாக அவன் மீண்டும் வயிறு நிறைய சாப்பிட்டான்.
பிறகு அவன் எண்ணினான்:
“இவ்வளவு அற்புதமான உணவை செய்தவர் யார்? அவரை பாராட்ட வேண்டும்.”
என்று சமையல் கூடத்திற்குள் சென்றான்.
அங்கே என்ன ஆச்சரியம்!
முண்டாசு கட்டிக் கொண்டு கரண்டியுடன் சமையல் செய்து கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல —
கிருஷ்ணன்!
சல்லியன் மகிழ்ச்சியுடன் கூறினான்:
“இவ்வளவு சுவையான உணவை நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை.
உனக்கு நான் ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும்.
என்ன வேண்டும் கேள்!”
அப்போது கிருஷ்ணன் சிரித்தபடி கூறினான்:
“நீ தேரை ஓட்டும்போது ஒரு சக்கரம் பள்ளத்தில் இறங்கினாலும், அதை ஒரு நொடியில் மீண்டும் மேலே ஏற்றி தேரை ஓட்டுவாயாம்.
அந்த வித்தையை எனக்கு சொல்லிக் கொடு.”
சல்லியன் எந்த சந்தேகமும் இல்லாமல் அந்த ரகசியத்தை கிருஷ்ணனுக்கு கற்றுக் கொடுத்தான்.
கர்ணன் – அர்ஜுனன் யுத்தம்
மகாபாரதப் போரின் 17-வது நாள் மிக முக்கியமானது.
அன்று கர்ணன் மற்றும் அர்ஜுனன் நேருக்கு நேர் மோதினர்.
கர்ணனின் தேரை ஓட்டியது சல்லியன்
அர்ஜுனனின் தேரை ஓட்டியது கிருஷ்ணன்
போர் கடுமையாக நடந்தது.
அர்ஜுனனின் அம்புகள் மழைபோல் பொழிந்தன.
அந்த நேரத்தில் கர்ணன் தனது சக்திவாய்ந்த நாகாஸ்திரத்தை அர்ஜுனனின் தலையை நோக்கி செலுத்தினான்.
அப்போது கிருஷ்ணன் சல்லியனிடமிருந்து கற்ற வித்தையை பயன்படுத்தினான்.
ஒரு நொடியில் தேரின் சக்கரத்தை பள்ளத்தில் இறக்கி அர்ஜுனனின் தலையை கீழே குனியச் செய்தான்.
அந்த அம்பு அர்ஜுனனின் தலையைத் தாக்காமல் தப்பித்து விட்டது.
இதனால் அர்ஜுனன் உயிர் பிழைத்தான்.
இந்தக் கதையின் வாழ்க்கைப் பாடம்
இந்த சம்பவம் நமக்கு ஒரு பெரிய உண்மையை உணர்த்துகிறது.
அதாவது:
தேவையில்லாமல் பிறர் வீட்டில் சாப்பிடக்கூடாது
சாப்பிட்டால் அது ஒரு கடனாக மாறிவிடும்
அந்தக் கடன் சில நேரங்களில் நம்மை விரும்பாத பாதைக்கு இழுத்துச் செல்லலாம்.
இதனால் தான் பழங்காலத்தில் ஒரு நல்ல பழக்கம் இருந்தது.
ஒருவர்:
மருமகன் வீட்டிற்கு
உறவினர் வீட்டிற்கு
சென்றாலும் வெறும் கையுடன் செல்ல மாட்டார்கள்.
அரிசி, காய்கறி, பழங்கள் போன்றவற்றை எடுத்துச் சென்று கொடுத்து விட்டு தான் அங்கு உணவு உண்ணுவார்கள்.
“வெறும் கையை வீசிக் கொண்டு போய் சாப்பிடக்கூடாது” என்ற நெறி இந்தப் பழமையான வாழ்க்கை அறிவிலிருந்து வந்தது என்று கூறப்படுகிறது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். உங்கள் மீதானே நம்பிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். இறை சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். திடம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
ரிஷபம்
உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பொறுமையை கடைபிடிக்கவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் அதிகரிக்கும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
அரசு சார்ந்த பணிகளில் இருந்த இழுபறிகள் குறையும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு புத்துணர்ச்சியும் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் வழியில் ஆதாயம் ஏற்படும். வாகனம் தொடர்பான பழுதுகளை சீர் செய்வீர்கள். எதிர்ப்புகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தடைபட்ட பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் சேர்க்கைக்கான சிந்தனைகள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம்
வியாபார பணிகளில் போட்டிகள் மேம்படும். தடைகள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வேள்வி பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். நெருக்கமானவர்கள் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
கன்னி
கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாய்வழி உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருக்கவும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடலில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
துலாம்
திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். இசை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குறுகிய தூர பயணங்கள் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். ஆசைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
விருச்சிகம்
சுபகாரிய தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். பற்கள் சார்ந்த பிரச்சினைகள் குறையும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். தனிப்பட்ட செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். பொருளாதார தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொன் பொருள் சேர்க்கை சேரும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
தனுசு
முன்கோபத்தால் தர்மசங்கடமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். பொது இடங்களில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மகரம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். தொழில் நிமித்தமான முதலீடுகள் அதிகரிக்கும். புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான சிந்தனைகள் மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். உடன் இருப்பவர்களால் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். வியாபார பணிகளில் எதிர்பாராத ஆதரவுகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
கும்பம்
உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். மனதிற்குப் பிடித்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபார செயல்களில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான சூழல் அமையும். பழக்கவழக்கங்களில் புதுமையும் உருவாகும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
கல்வியில் இருந்த மந்த தன்மை குறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் ஏற்படும். பயணங்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். மருத்துவ சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். மனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பரிசுகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விசுவாவசு வருடம் மாசி மாதம் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 13.3.2026.
இன்று அதிகாலை 05.56 வரை நவமி. பின்னர் தசமி.
இன்று அதிகாலை 12.12 வரை மூலம். பின்னர் பூராடம்.
இன்று காலை 09.54 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.
இன்று அதிகாலை 05.56 வரை கரசை. பின்னர் மாலை 06.39 வரை வணிசை. பின்பு பத்திரை.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.00 முதல் 10.00 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணம், நார்த் சிட்னி பகுதியில் பாடசாலை பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.
ஆர்ச்சிபால்ட் அவென்யூ மற்றும் பிளசன்ட் ஸ்ட்ரீட் சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் காரை ஓட்டிச் சென்றவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்தில் மெமோரியல் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 29 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். விபத்தைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
சில மாணவர்களுக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



