- · 1 friends
-
2 followers
நயாகரா வீழ்ச்சி
Canada Day நயாகரா வீழ்ச்சி
- கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும்.
- பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.
- கடுக்காய் வலிமையூட்டி, நீர்பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்.
- காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாழலாம்.
- கடுக்காய் ஓட்டைத்தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.
- மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவர, செரிமானம் கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.
- கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை தேக்கரண்டி வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
- 15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு தம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.
- கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.
- கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும்.
- குறிப்பு: கடுக்காயில் சதைப் பகுதியை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பது நாட்டு மருத்துவர்களின் ஆலோசனை. விதையில் நச்சு (விஷம்) இருப்பதால், அதை பயன்படுத்தக் கூடாது.
சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் ஏறி வந்தான் அவன்…
ஒரே ஒரு காரணத்திற்காக — தனது “அம்மா”வை பார்க்க.
பல வருடங்களுக்கு முன்பு, கேரளாவை சேர்ந்த ஒரு இந்து அக்கா சவுதி அரேபியாவில் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நாட்டில் வேலை பார்த்தாலும், அவர் இதயம் முழுவதும் தாய்மையால் நிரம்பியிருந்தது. பல குழந்தைகள் அவரது கைகளில் வளர்ந்தனர்.
அவர்களில் ஒருவன் — சிறிய கண்களுடன், எப்போதும் அவளது கையை பிடித்துக் கொண்டே இருப்பான். அவனை அவர் தன் வயிற்றில் பிறந்த குழந்தையை விட கூட அதிகமாக நேசித்தார்.
அவனுக்கு காய்ச்சல் வந்தால், இரவெங்கும் தூங்காமல் அவள் அவனருகே உட்கார்ந்து இருப்பாள்.
அவன் அழுதால், அவள் மனசு உடைந்துவிடும்.
காலம் கடந்தது…
சிறுவன் வளர்ந்து இளைஞனானான்.
அக்கா தன் நாட்டிற்குத் திரும்பி கேரளாவுக்கு சென்றுவிட்டார்.
ஆனால் அந்த சிறுவனின் நினைவில், அவள் மறைந்ததே இல்லை.
அவள் செய்த அன்பு, அவள் தந்த அரவணைப்பு — அவன் உள்ளத்தில் உயிரோடு இருந்தது.
பல மாதங்கள் தேடினான். பழைய தொடர்புகளைப் பார்த்தான். யாரிடமோ விசாரித்தான்.
இறுதியில், அவளது முகவரியை கண்டுபிடித்தான்.
ஒரு நிமிடமும் தாமதிக்கவில்லை.
விமான டிக்கெட் பதிவு செய்தான்.
சவுதியிலிருந்து நேராக கேரளாவுக்கு புறப்பட்டான்.
அவள் வீட்டின் கதவின் முன் நின்றபோது, அவன் இதயம் வேகமாக துடித்தது.
“அம்மா என்னை நினைவில் வைத்திருக்கிறாரா?”
“என்னை அடையாளம் காண்பாரா?”
கதவு திறந்தது.
வயது மேலெழுந்தாலும், அந்த அன்பு மாறவில்லை.
அவள் அவனை பார்த்த அந்த கணமே — அவளது கண்களில் கண்ணீர் பெருகியது.
கைகள் விரிந்தது.
“மகனே!” என்று அழைத்தாள்.
அவன் ஓடிவந்து அவளை கட்டிப்பிடித்தான் — சிறு வயதில் செய்ததைப் போல.
அவன் கண்ணீர் வடித்தான்.
அவள் அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
அந்த தருணத்தில், மதம் இல்லை.
நாடு இல்லை.
மொழி இல்லை.
அங்கே இருந்தது — ஒரு தாய் மற்றும் மகன் மட்டும்.
அன்பின் உறவு மட்டும்.
மனிதர்களை பிரிக்க மதம் முயற்சிக்கலாம்.
ஆனால் அன்பு — எல்லைகளைத் தாண்டி செல்லும்.
கனடாவின் பிரான்ட்போர்ட் Brantford நகரைச் சேர்ந்த இறைச்சிக்கடை தொழிலாளர் சாக் பேக்கர் (Zac Baker) தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கி அனைவரினதும் பாராட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளார்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக இறைச்சி தொழிலில் பணியாற்றி வரும் சாக் பேக்கர் (Zac Baker), இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நிறுவனமொன்றில் தனது பணியைத் தொடங்கினார்.
2010 முதல் அவர் கேம்பிரிட்ஜ் விவசாய சந்தையில் வாரந்தோறும் தனது பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் நீண்டகால உறவுகளை உருவாக்கியுள்ளார்.
டிசம்பர் மாதத்தில், பல ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நெருங்கிய நண்பருக்காக தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்க முடிவு செய்தார்.
பரிசோதனைகளுக்காக டொராண்டோ பொது மருத்துவமனையில் விரிவான இரத்த பரிசோதனைகள் மற்றும் ஸ்கான்கள் மேற்கொள்ளப்பட்டன. அவர் பொருந்தக்கூடிய தானதாரராக அடையாளம் காணப்பட்டு, மார்ச் 2ஆம் திகதி அறுவை சிகிச்சை தினமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சைக்கு முன்பே அவரது நண்பர் உயிரிழந்தார்.
“அவர் மறைவதற்கு ஒரு வாரம் முன்பு நாங்கள் நேரம் செலவிட்டு பேசிக்கொள்ள முடிந்தது. பொருந்திய தானதாரர் கிடைத்தது குறித்து அவருடன் பகிர்ந்துகொண்டோம்,” என பேக்கர் நினைவுகூர்ந்தார்.
அனைத்து ஏற்பாடுகளும் முடிந்திருந்ததால், தனது முடிவை மாற்றாமல், பெயர் குறிப்பிடாத (anonymous) நபருக்காக கல்லீரல் தானம் செய்யத் தீர்மானித்தார்.
பெறுநர் பட்டியலில் உள்ளவர்களில் சுமார் 25% பேர் பொருந்தும் உறுப்பு கிடைக்குமுன் உயிரிழக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கனடாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தேவைக்கேற்ற உறுப்புகள் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவுவதாகவும் கனடா கல்லீரல் அமைப்பின் பிரதிநிதி பிரே டெலானி-ஸ்மித் தெரிவித்தார்.
இதேவேளை, அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு வாரம் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும் என்றும், பின்னர் குறைந்தது ஐந்து முதல் ஆறு வாரங்கள் முழுமையான ஓய்வு அவசியம் என்றும் பேக்கர் கூறினார்.
“கல்லீரலின் ஒரு பகுதியுடன் வாழ முடியாது என்று நினைத்தேன். ஆனால் அது மீண்டும் முழுமையாக வளர்கிறது – அதுவும் விரைவாக,” என அவர் விளக்கினார்.
கனடாவில் வாழும் ஒரு தம்பதியர், தங்கள் 70ஆவது காதலர் தினத்தைக் கொண்டாடியுள்ளார்கள்.
கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள ரெஜைனா நகரில் வாழ்கிறார்கள் எர்வின் மில்லர் (Erwin Miller) நேவா மில்லர் (Neva Miller) தம்பதியர்.
1955ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள லேக்லாண்ட் கல்லூரியில் படிக்கும்போது, மாணவர்கள் படைசூழ பியானோ வாசித்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞர், இளம்பெண்ணான நேவாவின் கண்ணில் பட்டுள்ளார்.
இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க, கண்டதும் காதல் பற்றிக்கொள்ள, இருவரும் மனம் விட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஓராண்டு ஆனதும் எர்வினுக்கு ஆசிரியர் வேலை கிடைத்துள்ளது. ஆனால், அப்போதுதான் நேவா செவிலியர் பயிற்சிக்காக படித்துக்கொண்டிருந்திருக்கிறார். பயிற்சி முடிக்கும்வரை அவரால் திருமணம் செய்துகொள்ளமுடியாது என கல்லூரி விதிகள் கூற, உங்களுக்காக என் படிப்பையே இழக்கத் தயார் என்று கூறியுள்ளார் நேவா.
திருமணமாகி கனடாவில் வந்து குடியமர்ந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் பிறந்துள்ளார்கள். எங்கள் அன்பில் இன்றுவரை எந்த மாற்றமும் இல்லை என்று புன்னகையுடன் கூறும் எர்வினின் கன்கள் பாசத்துடன் நேவாவையே பார்த்துக்கொண்டிருக்கின்றன.
எப்படி 70 ஆண்டுகள் இந்த அன்பு நீடித்தது என்று கேட்டால், அதற்கு ஒரு ரகசியம் உள்ளது என்கிறார் எர்வின்.
வாழ்க்கையில் நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி, எதைச் செய்தாலும் நாங்கள் இருவரும் இணைந்தே செய்தோம், அதிர்ஷ்டவசமாக எங்கள் வாழ்வில் கெட்டது அதிகம் நடக்கவில்லை என்கிறார் அவர்.
Image Courtesy : Globalnews.ca
கனடாவின் சஸ்கடூன் நகரைச் சேர்ந்த நபர் ஓருவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அதே நாளில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒளிந்துப் படம் பிடித்தல் உள்ளிட்ட குற்றங்களில் நீண்ட வரலாறு கொண்ட ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைல் ரொனால்ட் ஹேமலக் என அடையாளம் காணப்பட்ட இவர், ஒளிந்துப் பார்வையிடுதல், தகாத செயல்கள் மற்றும் இரவு நேரத்தில் சட்டவிரோத நுழைவு உள்ளிட்ட மொத்தம் 70 குற்றங்களில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பெப்ரவரி 14ஆம் திகதி சஸ்காடூன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடக்கூடும் என்ற அச்சத்தால், விடுதலையற்கு முன்பே பொலிஸார் பொது எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
ஹேமலக் அதே மாலை முதலாம் அவன்யூ இன் 200-ஆம் பகுதி அருகே கைது செய்யப்பட்டார்.
விடுதலை விதிமுறைகளை மீறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹேமலக் 2017 மற்றும் 2020 ஆண்டுகளில் ஒளிந்துப் படம் பிடித்த குற்றத்தில் தண்டிக்கப்பட்டிருந்தார்.
மேலும் கடந்த ஆண்டு இறுதியில் 23 ஒளிந்துப் படம் பிடித்த குற்றங்களுக்கும், இரண்டு பரோல் விதிமுறை மீறல் குற்றங்களுக்கும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவருக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கனவே அனுபவித்த சிறைக்காலத்திற்கு வழங்கப்பட்ட குறைப்பின் காரணமாக, அவருக்கு சுமார் ஏழு மாதங்கள் மட்டுமே மீதமிருந்தது.
ஒளிந்துப் படம் பிடித்த குற்றத்திற்காக வழங்கப்பட்ட தண்டனைகளில் இது நீண்டகால தண்டனைகளில் ஒன்றாகும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஹேமலக் நாளைய தினம் சஷ்காடூன் நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
சேவை பணிகளில் அனுகூலம் ஏற்படும். மறைமுக திறமைகள் வெளிப்படும். தாயிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சிறு தொழில் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். ஆன்மீக தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தூரதேசப் பயணங்களில் இருந்த தாமதங்கள் குறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ரிஷபம்
பயனற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். இணையம் சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். மனதளவில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். எதிர்பாராத உதவியால் தேவைகள் பூர்த்தியாகும். வெளியூர் பயணங்களில் மாற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான கடன் உதவிகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
சிம்மம்
கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துகளை விற்பனை செய்வதில் மூலம் லாபம் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் கிடைக்கும். மனதில் நினைத்த எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். இடமாற்ற தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
மறைமுகமான செயல்களில் சிந்தித்து செயல்படவும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்லவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையும் அதிகரிக்கும். பொழுது போக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விருச்சிகம்
பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். வாதத் திறமைகள் மூலம் இழுபறியான காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மற்றும் உதவிகள் மூலம் லாபங்கள் மேம்படும். சிரமம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
வரவுக்கேற்ற செலவு விரயமும் உண்டாகும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. மற்றவரிடம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். சகோதரர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உங்கள் எண்ணங்களை மற்றவரிடம் திணிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மகரம்
வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தனித்திறமைகளை வளர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் மேம்படும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்ப்பு குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மீனம்
உலகியல் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். பயணம் சார்ந்த செயல்களில் அனுபவம் கிடைக்கும். வெளியூர் வேலைவாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். உறவினர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விசுவாவசு வருடம் மாசி மாதம் 4 ஆம் தேதி திங்கட்கிழமை 16.2.2026
இன்று மாலை 06.26 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.
இன்று இரவு 09.41 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.
இன்று அதிகாலை 04.24 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.
இன்று காலை 06.08 வரை பத்தரை. பின்னர் மாலை 06.26 வரை சகுனி. பிறகு சதுஷ்பாதம் .
இன்று இரவு 09.41அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.30 முதல் 06.30 மணி வரை
காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
அறிவில் சிறந்த ஒரு வயோதிகர் காட்டுவழியில் ஒரு இளைஞனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். ஓரிடத்தில் ஒரு சிறிய செடி அப்போதுதான் விதையிலிருந்து முளைவிட்டுக் கொண்டிருந்தது. பெரியவர் அந்த இளைஞனை பார்த்து அந்தச் சிறிய செடியை பிடுங்கி விடும்படிக் கூறினார்.
இளைஞன் தன்னுடைய இரு கைவிரல்களை மட்டுமே உபயோகித்து, அந்த இளம் செடியை சுலபமாக பூமியிலிருந்து பிடுங்கி எறிந்தான். அந்தப் புதிய செடிக்குப் பக்கத்தில் அடர்த்தியாக வளர்ந்த ஒரு சிறு காட்டுச்செடி ஒன்றை அந்தப் பெரியவர் இளைஞனுக்குச் சுட்டி காட்டி அதையும் பிடுங்கி எறியும்படி கூறினார்.
அந்த இளைஞன் ஒருகையால் அந்தக் காட்டுச்செடியை வளைத்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அதை இழுத்துப் பிடுங்கி எறிந்தான்.
இன்னொரு இடத்தில் பூமியில் அடர்த்தியாக நன்கு வேரைப்பதிய வைத்துக் கொண்டிருந்த இன்னொரு செடியைக் காட்டி அதையும் பிடுங்கும்படி பெரியவர் தன்னுடன் கூட வந்த இளைஞனைக் கேட்டுக் கொண்டார்.
அந்த இளைஞன் இந்த முறை தன் இரு கைகளையும் உபயோகித்து தன் பலம் அனைத்தையும் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு அந்தச் செடியையும் பிடுங்கி எறிந்தான்.
அதற்குப்பின் அந்தப் பெரியவர் ஒரு பெரிய மரத்தைக் காட்டி அதையும் பிடுங்கும்படி கூறினார். அந்த இளைஞனால் அந்தப் பெரிய மத்தை அசைக்கக்கூட முடியவில்லை.
அந்தப் பெரியவர் இளைஞனிடம் பின்வருமாறு உபதேசம் செய்தார்.
கெட்ட பழக்கத்திற்கும், இப்போது தீ செய்ததற்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. கெட்ட பழக்கங்களை கற்றுக்கொண்ட ஆரம்பத்திலேயே புதிதாக முதைத்த இளஞ்செடியைப் போன்று மிகச் சுலபமாக அவைகளை உள்ளத்திலிருந்து கிள்ளி எறிந்து விட முடியும். அந்த கெட்ட பழக்கங்கள் உன்னுடைய உள்ளத்தில் வேர்விட்டு பெரிய மரமாக வளர அனுமதித்துவிட்டால் அதற்குப்பின் அவைகளை உள்ளத்திலிருந்து அசைக்கக் கூடமுடியாது" என்றார்.
கெட்ட பழக்கங்களைக் கற்றுக்கொண்டு, அதை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு அல்லல்படுவதை விட, கெட்ட பழக்கங்களைக் கற்றுக் கொள்ளாமலிருப்பது மிகவும் நல்லது.
கெட்ட பழக்கத்தைக் கற்றுக் கொண்டவுடன், அதை அகற்ற மிகவும் கடினமான போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும். குடிப்பது ஒரு கெட்ட பழக்கம், அதே போன்று புகைபிடிப்பது ஒரு கெட்ட பழக்கம். இப்படிப்பட்ட கெட்ட பழக்கங்களைக் கற்றுக்கொள்வது சுலபமாகயிருக்கும். ஆனால் அதை விட்டொழிப்பது என்பது அத்தனை எளிதல்ல.
குடிக்கவும், புகை பிடிக்கவும் கற்றுக்கொண்ட பின்பு இவைகளுக்கு அடிமையாகி எண்ணற்றவர்கள் தங்கள் ஆரோக்கியததை இழந்து அல்லல்பட்டு வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய பொன்னான நேரத்தையும் தங்களுடைய செல்வத்தையும் வீணடித்து விடுகிறார்கள். இதுபோன்ற செயல்கள் நமக்கு தேவையில்லை.
தீய பழக்கங்களைக் கைக்கொண்டால் தீயவைகள் நம்மை முற்றுகையிட்டு வாழ்க்கையை நரகமாக ஆக்கிவிடும்.
நலமுடனும், வளமுடனும் வாழவே நாம் பிறந்திருக்கிறோம். வீணான பழக்கங்களில் மூழ்கி, வாழ்வை இழந்து சோக பிம்பங்களாக வாழப்பிறக்கவில்லை.
நல்ல பழக்கத்தை நம் அன்றாட வாழ்வின் வழக்கமாகக் கொண்டு வாழ்வோம்.
ஜென்ம ஜென்மமாய் நாம் தேடிய பேரின்பம் மகா சிவராத்திரியின் இந்த புனித நாளில் பூரணமாகட்டும் சிவனின் கருணைக்கடல் நம் பாவங்களைச் சுட்டெரித்து நம்மை பரிசுத்தமாக்கட்டும் ஓம் நமசிவாய மந்திரத்தின் சக்தி நம் ஆன்மாவின் ஆழங்களில் ஒளிர்ந்து அமைதியான புதிய பாதையை காட்டட்டும் அனைவருக்கும் இதயம் கனிந்த மகா சிவராத்திரி நல்வாழ்த்துகள்!
மகா சிவராத்திரி திருநாளில் சிவனின் கருணைப் பெருக்கு உங்கள் இதயத்தை நிரப்பட்டும் துன்பங்கள் மறைந்து ஆனந்தப் பெருக்கெடுத்து உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கட்டும் ஓம் நமசிவாய எனும் மந்திர ஒலி உங்கள் ஆன்மாவை புனிதப்படுத்தி அமைதியை கொடுக்கட்டும் இந்த நாள் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக அமையட்டும்!
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பழைய சிக்கல் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான சுறுசுறுப்பின்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நவீன தொழில் நுட்ப கருவிகளால் விரயம் ஏற்படும். நற்செயல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
ரிஷபம்
பணவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இல்லாத மன நிலை காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மிதுனம்
கேளிக்கை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வேலை மாற்ற விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கடகம்
பழக்கவழக்கம் தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும். தேவையற்ற வித்தியாசமான புது விதமான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். உடல் உழைப்பிற்கு ஏற்ப முன்னேற்றங்கள் உண்டாகும். மனதில் கற்பனை சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் மாற்றங்களை செய்வீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
சிம்மம்
வியாபாரத்தில் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவினை ஏற்படுத்தும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். மனை மீதான கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் மாற்றமான சூழ்நிலை காணப்படும். சினம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கன்னி
செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விற்பனை துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
துலாம்
செயல்பாடுகளில் ஒரு விதமான சுறுசுறுமின்மை உண்டாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் காணப்படும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். விலை உயர்ந்த பொருள்கள் மீதான ஈர்ப்பு ஏற்படும். மாணவர்களுக்கு ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கால்நடை விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். தற்பெருமை பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பழக்க வழக்கத்தில் சில மாற்றம் காணப்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும். சிந்தனைப் போக்கில் சில குழப்பம் தோன்றலாம். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உணவு தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடம்பரமான செயல்களில் சிந்தித்து செயல்படவும். புதுவிதமான பயணங்கள் மூலம் அனுபவங்கள் அதிகரிக்கும். பணிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். பணி நிமித்தமான ரகசியங்களை பகிராமல் இருக்கவும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பொருள் சேர்ப்பதற்கான கலை அறிவு மேம்படும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பாராட்டுகளையும் பெறுவீர்கள். வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கும்பம்
வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும். அரசு தொடர்பான பணிகள் சாதகமாக நிறைவுபெறும். சமூக தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். கௌரவ பொறுப்புகள் மூலம் செல்வாக்கு மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மீனம்
ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். இளைய உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். சாமர்த்தியமான செயல்களால் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வாகன பயணங்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். சிந்தனை பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விசுவாவசு வருடம் மாசி மாதம் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.2.2026
இன்று மாலை 05.50 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.
இன்று இரவு 08.36 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.
இன்று அதிகாலை 04.08 வரை சித்தி. பின்னர் வியதீபாதம்.
இன்று அதிகாலை 05.46 வரை கரசை. பின்னர் மாலை 05.50 வரை வணிசை. பிறகு பத்தரை .
இன்று காலை 06.33 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
இந்தி நடிகையான மிருணாள் தாக்குர், தமிழில் நேரடி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ‘சீதாராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய பான் இந்தியா படங்களின் மூலம் தமிழிலும் அறியப்பட்டார். இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர், கடந்த ஆண்டு மும்பையில் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
அதற்கான விழாவில் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். தனுஷும் கலந்துகொண்டார். இது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளி யாயின. அது வதந்தி என்று தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மிருணாள் தாக்குரும் தனுஷும் பிப்.14-ல் திருமணம் செய்து கொள்வதாகச் செய்தி வெளியானது. இதற்கிடையே, நேர்காணல் ஒன்றில் பேசிய மிருணாள் தாக்குரிடம் இதுபற்றி கேட்கப்பட்டது.
அதற்கு, “எனக்கே தெரியாமல் என் திருமணம் பற்றிய செய்திகள் வருகின்றன. பிப். 14 அன்று எனக்குத் திருமணம் என்று நினைப்பவர்களுக்கு அது ‘ஏப்ரல் ஃபூல்’ ஜோக்காகத்தான் இருக்கும்” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார் மிருணாள். தொடர்ந்து பேசிய அவர், “காதல் அழகான உணர்வு. அது அனைவருக்கும் ஏற்பட வேண்டும். அது உங்களை சிறந்த மனிதராக மாற்றும்” என்றார்.











