·   ·  10 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 684
  • More

நயாகரா வீழ்ச்சி

Canada Day நயாகரா வீழ்ச்சி

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். உறவினர்களால் ஆதரவான சூழல் அமையும். பயணம் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார சிந்தனைகள் மேம்படும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

ரிஷபம்

நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். முயற்சியில் லாபம் காண்பீர்கள். மனதளவில் இருந்த வருத்தம் நீங்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடலில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மிதுனம்

எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் இருக்கும். கவனக்குறைவால் சில விரயம் உண்டாகும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் அறிந்து செயல்படவும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களால் அலைச்சல் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

கடகம்

புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணி நிமித்தமாக புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் விவேகம் வேண்டும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். தேர்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

சிம்மம்

தன வரவுகள் அதிகரிக்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அணுகுலம் ஏற்படும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் தேவைகளை நிறைவேறும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கன்னி

புத்திசாலிதனமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். அரசு வழி செயல்களில் பொறுமை வேண்டும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோர் ஆலோசனை நன்மை தரும். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் அகலும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

துலாம்

முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். பழைய சிந்தனைகளால் மனதில் மகிழ்ச்சியற்ற சூழல் ஏற்படும். அரசு காரியங்களில் இருந்த இழுபறிகள் மறையும். உடனிருப்பவரை அனுசரித்து செல்லவும். உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

 

விருச்சிகம்

மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த சில ஒப்பந்தம் சாதகமாகும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னுரிமை ஏற்படும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை உருவாகும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான தேடல்கள் அதிகரிக்கும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

 

தனுசு

பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். தன வரவுகள் தாராளமாக இருக்கும். பொன் பொருள்கள் மீது ஆர்வம் உண்டாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை.

 

மகரம்

பழைய சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். மற்றவர்களின் குறைகளை கனிவாக சுட்டிக்கட்டவும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்லவும். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் ஆதரவின்மை உண்டாகும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். புதிய முயற்சிகளில் அலைச்சல் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை.

 

கும்பம்

வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பூர்விக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். பணி நிமித்தமான வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் தெளிவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். விருத்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மீனம்

உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரச்சனைகளின் காரணத்தை கண்டறிவீர். அதிகார பதவியில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அயல்நாட்டு பயண வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

  • 28
·
Added a post

விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 7 ஆம் தேதி திங்கட்கிழமை 22.12.2025

இன்று காலை 10.46 வரை துவிதியை. பின்னர் திரிதியை.

இன்று அதிகாலை 04.07 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.

இன்று மாலை 04.38 வரை துருவம். பிறகு வியாகாதம்.

இன்று காலை 10.46 வரை கௌலவம். பின்னர் இரவு 11.08 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று அதிகாலை 04.07 வரை சித்த யோகம். பின்னர் காலை 06.24 வரை அமிர்த யோகம். பிறகு மரணம் யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=365&dpx=2&t=1766407851நல்ல நேரம்:

காலை : 06.15 முதல் 07.15 மணி வரை

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.46 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 27

Good Morning....

  • 25
·
Added article

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதா, இல்லையா என்பதை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை. இதனிடையே இப்படம் ஜனவரி 23-ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்படத்தின் ஓடிடி உரிமை இன்னும் கையெழுத்தாகவில்லை. இதனால் வெளியீட்டு தேதியினை முடிவு செய்ய முடியாமல் இருக்கிறது படக்குழு.

ஜனவரி 23-ம் தேதி வெளியீடு என்றால் இப்போதே விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் இப்படத்தின் வெளியீடு ஜனவரியில் இருக்காது என்பது தெளிவாகிறது. மார்ச் 19-ம் தேதி வெளியிடலாம் என்ற முடிவுக்கு படக்குழு வந்திருக்கிறது. மார்ச் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிந்து படமும் தயாராகி விடும்.

‘கருப்பு’ விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்க இருப்பதால், வெங்கி அட்லுரி படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்காமல் இருக்கிறது. ஆனால், ‘கருப்பு’ மார்ச் மாத வெளியீடு என்பதால், அதற்கு முன்னதாகவே வெங்கி அட்லுரி படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கிவிடும் என தெரிகிறது. ஏனென்றால் இப்படம் மே மாதத்தில் வெளியிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை, ஓடிடி, தொலைக்காட்சி என அனைத்து உரிமைகளும் விற்பனையாகிவிட்டது.

  • 294
·
Added a post

ஒரு வயசான ஆளு நிலத்திலே உழுது கொண்டிருந்தார்.

கிழிந்து போன ஒரு சின்ன துண்டைதான் இடுப்பில் கட்டியிருந்தார்.

தலையில் ஒரு கந்தலை சுற்றி இருந்தார்.

உடம்பு பூராவும் சேறு.

ஏர் ஓட்டிக்கிட்டு இருக்கிறவர் வேறுஎப்படி இருப்பார்?

இருந்தாலும் அந்த ஆளு ரொம்ப ஜாலியா பாட்டு பாடிக்கிட்டே உழுது கொண்டிருந்தார்.

உடம்பிலேதான் அவர் ஏழையே தவிர மனசுல அவர் ஏழையா தெரியல.

அந்த சமயத்தில் அந்த நாட்டு ராஜா அந்தப்பக்கமாக வேட்டைக்கு போயிட்டு பரிவாரங்களோடு திரும்பி குதிரைமேலே வந்து கொண்டிருந்தார்.

ராஜா இந்த வயசான விவசாயியைப் பார்த்தார்.

அந்த ஆளு ரொம்பவும் ஏழைங்கிறது அவரைப் பார்த்தாலே பளிச்சுன்னு தெரியுது.

கட்டிக்கிறதுக்கு நல்ல துணி இல்லை.

உடம்பு இளைச்சுப் போய் இருக்கு. வயிறு முதுகோடு ஒட்டி போய் இருக்கு.

கண்ணு குழி விழுந்து போய் இருக்கு.

ஆனாலும் முகத்தை பார்த்தா சந்தோஷமா இருக்கிற மாதிரி இருக்கு.

இவ்வளவு உற்சாகமாக பாடிக்கொண்டிருக்காரேனு ஆச்சரியமாக பார்த்தார் ராஜா.

கொஞ்சம் பேச்சு குடுத்து பாக்கலாம்னு முடிவு பண்ணினார்.

ஐயா பெரியவரே கொஞ்சம் இப்படி வர முடியுமான்னார்.

பொழுது போறதுக்குள்ள இந்த வயல் பூராவும் உழுதாகணும். அதனாலே பேசுவதற்கு நேரமில்லைனார் பெரியவர்.

என்ன அவ்வளவு அவசரமா?

மீதி இருந்தா நாளைக்கு உழுதுக்க கூடாதா?

அது சரி உனக்கு எத்தனை ஏக்கர் நிலம் இருக்கு?

விசாரிச்சார் ராஜா.

எனக்கு சொந்தமா உள்ளங்கை அளவு கூட நிலம் இல்லை.

இது எனது எஜமானன் நிலம்.

இதை பூராவும் உழுது முடிச்சாதான் அவர் கூலி கொடுப்பார்.

கூலிக்கு உழுகிறேன் உங்க கிட்ட பேசிகிட்டு இருந்தா அவருக்கு துரோகம் பண்ண மாதிரி ஆகும்னார்.

ராஜா குதிரையை விட்டு இறங்கி வரப்பிலே நடந்து அந்த பெரியவர் கிட்ட பேச ஆரம்பிச்சார்.

ஒரு நாள் பூரா உழுதா உனக்கு எவ்வளவு கூலி கிடைக்கும்.

எட்டணா கிடைக்கும்னார்.

இவ்வளவுதானா இதை வைத்துக்கொண்டு நீ எப்படி காலம் தள்ளுறே.

ஒன்னும் கவலை இல்லைனார்.

ராஜாவுக்கு ரொம்ப ஆச்சரியமா போச்சு.

எட்டணா கூலி வாங்குறவர் கவலை இல்லாமல் இருக்கார்.

ஏராளமான வசதியுடைய என்னால் கவலை இல்லாமல் வாழ முடியவில்லை என்று நினைத்தார்.

அது சரி எட்டணாவில் எப்படி குடும்பம் நடத்துற? என கேட்டார்.

எனக்கு கிடைத்த எட்டணாவில் இரண்டு அணா குடும்பத்துக்கு செலவழிக்கிறேன்.

இரண்டு அணா பழைய கடனுக்கு தருகிறேன்.

இரண்டு அணா தர்மம் செய்கிறேன். இரண்டு் அணா வட்டிக்கு கொடுக்கிறேன்.

ஒரு குறையும் இல்லைனார்.

ஒன்னும் புரியல ராஜாவுக்கு .

ஐயா எனக்கும் என் மனைவிக்கும் இரண்டு அணா செலவாகுது.

வயதான அம்மா அப்பா சின்ன வயசிலேயே என்னை காப்பாத்தினாங்க அவங்களுக்கு இரண்டு அணா செலவாகிறது.

அது பழைய கடன்.

என் தங்கச்சி ஒருத்தி ஆதரவில்லாத நிலையில் தன் மகனுடன் வீட்டிலேயே இருக்கு.

அவளுக்கும் அவள் மகனுக்கும் இரண்டு அணா செலவு பண்றேன். அது தர்மம்.

எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்காங்க அவங்களுக்கு இரண்டு அணா.

அது வட்டிக்கு கொடுக்கிறது மாதிரி பிற்காலத்தில் அவங்க என்னைக் காப்பாத்துவாங்க.

அந்த வகையிலே நான் திருப்தியா வாழ்ந்துகிட்டு இருக்கேன்னார்.

ராஜாவுக்கு அர்த்தம் புரிய ஆரம்பித்தது அந்த நிலத்தை விலை கொடுத்து வாங்கி அந்த பெரியவருக்கு தானமாக கொடுத்துவிட்டார்.

உழுதவருக்கே நிலம் சொந்தம் ஆயிட்டது.

அரசனுக்கும் ஆறுதல் கிடைச்சதாம்.

இந்தக் கதையோட படிப்பினை என்னன்னா எட்டணா வருமானத்தை வச்சிக்கிட்டு இப்படி காலம் தள்ளுவது அப்படிங்கறது இல்லை.

நாம் எவ்வளவு தான் அதிகமாக சம்பாதித்தாலும் அந்தப் பணத்தை திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்.

அப்போதுதான் திருப்தியாக கடனில்லாமல் வாழ முடியும் . அதோடு நிம்மதியும் மகிழ்ச்சியும் எம்மிடம் எப்போதும் குடியிருக்கும்.

  • 306
  • 303
  • 304

மற்றவர்கள் உங்களை எவ்வளவு மோசமாக நடத்தினாலும், அவர்களின் நிலைக்கு ஒருபோதும் கீழே இறங்க வேண்டாம்.

நீங்கள் சிறந்தவர் என்பதை அறிந்து விலகிச் செல்லுங்கள்.

  • 305
·
Added a news

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கடுமையாக குறைந்திருந்த ‘பிறப்பு சுற்றுலா’ (Birth Tourism) விகிதங்கள், தற்போது கனடாவில் மீண்டும் உயர்ந்து வருவதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, கனடிய மருத்துவமனைகளில் குடியுரிமை இல்லாதவர்களால் (non-residents) நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களும் அடங்குவர். இந்த வகை பிறப்புகள் 2024-இல், தொற்று முன் இருந்த நிலைக்கு மீண்டும் வந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

தற்காலிக குடியிருப்பாளர்கள் அல்லது சுற்றுலா விசாவில் வரும் நபர்கள் தாங்களே மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொண்டு பெறும் பிரசவங்களை“non-resident self-pay” என்ற சொல் குறிக்கிறது.

குடியுரிமை இல்லாத அல்லது நிரந்தர குடியிருப்பு இல்லாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள், கனடாவின் மொத்த பிறப்புகளில் மிகவும் குறைந்த பங்கையே வகிக்கின்றன.

2010 முதல் இவ்வகை பிறப்புகள் மொத்தத்தின் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

குறைந்தது ஒரு பெற்றோர் கனடிய குடிமகனாகவோ அல்லது நிரந்தர குடியிருப்பாளராகவோ இருந்தாலே பிறப்புரிமை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் சட்டத்தை திருத்த முயற்சிக்கப்பட்டது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் குடிவரவு விமர்சகரான மிச்சல் ராம்பெல் கார்னர் இந்த முயற்சியை மேற்கொண்டார். ஆனால் அந்த திருத்தம் லிபரல் மற்றும் பிளாக் கியூபெக்குவா எம்.பி.க்களால் நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் பிறப்புரிமை குடியுரிமை தொடர்ந்து அமலில் உள்ளது. 

  • 310
·
Added a news

பண்டிகை காலத்தில் கனடியர்களுக்கு மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கனடியர்கள் மோசடிகளால் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை இழந்து வருகின்றனர்.

ஆனால், விடுமுறை காலங்களில் மக்கள் அவசரம், கவனச்சிதறல் மற்றும் பாதிப்பு நிலை காரணமாக இருப்பதால், இந்த குற்றங்கள் மேலும் அதிகரிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கொள்வனவர்கள் கவனம் தளர்ந்த நேரத்தை மோசடியாளர்கள் குறிவைப்பதாக சைபர் பாதுகாப்பு நிபுணரான டெரி கட்லர் தெரிவிக்கின்றார்.

மக்கள் வேகமாக வேலைகளை முடிக்க விரும்புகிறார்கள். அதனால், கிளிக் செய்யக்கூடாத இணைப்புகளை கிளிக் செய்து மோசடியில் சிக்குகிறார்கள்,” என அவர் தெரிவித்தார்.

சலுகைகளை நாடும் வாடிக்கையாளர்களை ஈர்க்க போலி இணையதளங்களை உருவாக்குவதுடன், கிப்ட் கார்டுகளையும் மோசடியாளர்கள் கையாள்வதாக கட்லர் கூறினார்.

“அசல் பார்கோடு மீது ஸ்டிக்கர் அல்லது வேறு பார்கோடை ஒட்டிவிடுவார்கள். அது மோசடியாளர்கள் முன்கூட்டியே வாங்கிய ‘மாஸ்டர்’ கிப்ட் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். நீங்கள் காசாளரிடம் 50 டொலர்கள் ஏற்றும்போது, அந்த தொகை உடனடியாக மோசடியாளர்களின் கார்டுக்கு மாற்றப்பட்டு காலியாக்கப்படும்,” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • 308
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். துணைவர் வழி உறவினர்களால் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு ஏற்ற படி இருக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

ரிஷபம்

உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். மனதில் குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் கெடுபிடிகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். தேவையற்ற விரயங்களால் நெருக்கடிகள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மிதுனம்

கணவன், மனைவிடைய ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் உதவியால் சில பிரச்சனைகள் நீங்கும். செயல்களில் ஆதாய நிலை மேம்படும். அந்நிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மனதில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த செய்திகள் வரும். பணிகளில் இருந்த சோர்வுகள் விலகும். வருவாய் செயல்களில் கவனம் வேண்டும். தேவைகள் நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். பொழுது போக்கு விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். ஆதாயம் தரும் செயல்களில் அக்கறை காட்டுவீர்கள். பணி மாற்ற சிந்தனைகள் மேம்படும். தொழில் வளர்ச்சிக்கு உதவிகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

சிம்மம்

குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். மனதளவில் இருந்த தயக்கத்தை தவிர்க்கவும். உணவு செயல்களில் கட்டுப்பாடு வேண்டும். கணவன் மனைவிக்குள் புரிதல் உண்டாகும். வணிக நடவடிக்கைகளில் லாபம் மேம்படும். யதார்த்தம் தாண்டிய கற்பனைகளை குறைத்து கொள்ளவும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

கன்னி

முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். வரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

துலாம்

பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு காரியங்கள் கைகூடிவரும். வாகனப் பகுதிகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உழைப்புக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வதற்கான வியூகங்கள் கைகூடும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

விருச்சிகம்

குடும்ப நபர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வேலையாட்களிடம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எதிர்காலம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

தனுசு

முடிவுகள் எடுப்பதில் கவனம் வேண்டும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். பொருளாதாரத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். அதிகாரிகளிடத்தில் நிதானத்துடன் செயல்படவும். வியாபார நிமித்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

 

மகரம்

ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். சிலரின் சந்திப்புக்களால் மாற்றம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்யும் எண்ணம் தோன்றும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. விருப்பம் நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கும்பம்

ரசனை தன்மையில் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளால் மனம் மகிழ்ச்சியடையும். புதிய தொழில் தொடங்குவது சார்ந்து எண்ணங்கள் மேம்படும். செல்வ சேர்க்கைக்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியம் கைக்கூடி வரும். மறதி குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

மீனம்

எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். உழைப்பிற்கான மதிப்புகள் கிடைக்கும். கலை சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியம் இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

  • 534
·
Added a post

விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 21.12.2025.

இன்று காலை 09.33 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று அதிகாலை 02.16 வரை மூலம். பின்னர் பூராடம்.

இன்று மாலை 04.53 வரை விருத்தி. பிறகு துருவம்.

இன்று காலை 09.33 வரை பவம். பின்னர் இரவு 10.10 வரை பாலவம். பிறகு கௌலவம்.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=364&dpx=2&t=1766291010

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 548

Good Morning...

  • 559
·
Added article

இப்போ கூட கவர்ச்சி நடிகைகளில் பார்த்தால் பாவம் தோணுற நடிகைன்னா அது நம்ம குயிலி தான்.

குல்நார் என்கிற இயற்பெயர் கொண்ட குயிலி ஆரம்ப காலத்தில் ஸ்டார் ஹோட்டல்களில் இசைக்கு நடனமாடித்தான் வாழ்க்கை நடத்தி இருந்தார். அதைப் படித்ததினால் எனக்கு அப்படி தோணுச்சோன்னு தெரியல. குயிலி பூவிலங்கு படத்தில் நடிச்ச சில காலங்களில் அவரோட சட்டையில்லாத முதுகுப்பக்கப் படத்தை திரைச்சித்ரா அப்படிங்கிற பத்திரிக்கை வெளியிட்டது. அதனாலயான்னும் தெரியல. அல்லது அந்த இடுங்கிய கண்களான்னு தெரியல. குயிலியுடைய முகத்துல ஒரு சோகம் இருக்கும். எதுனாலயோ அவரிடம் ஒரு பரிதாபம் தோணும்.

பாலச்சந்தர் பொய்க்கால் குதிரையில் சிறிய ரோல் கொடுத்தாலும், கல்யாண அகதிகளில்நடித்தாலும் 'பூவிலங்கு' படம் ரிலீசான போது முதல் காட்சியே பார்த்ததும் படம் பிடிச்சிடுச்சு. முரளியோட துள்ளல் நடிப்பும், செந்தாமரையோட வில்லத்தனம், கல்லூரி, அழகான பாடல்கள் இதோட குயிலியும் பிடிச்சிருந்தது. ஆனா முரளிக்கு முன்னாடி குயிலி வயதான பெண் மாதிரியான தோற்றம் தந்தது நிச்சயம் அந்தப்படத்தோட கேமராமேன் தவறுன்னு தான் சொல்லணும். ஏனோ அதுக்கப்புறம் குயிலியை நாயகியா பின்னே அதிகம் படங்களில் காணவில்லை. அந்த நேரத்தில் குயிலிக்கு டூப் மாதிரியே மோகனப்ரியான்னு ஒரு நடிகை நடிச்சிட்டிருந்தாங்க.

நாயகன் படத்தில் பல ஆச்சர்ய திருப்பங்கள் நம்மை புருவம் உயர வைக்கும். அதில் ஒண்ணு தான் குயிலியோட நிலா அது வானத்து மேலே பாட்டு. யாருமே நினைச்சுப்பார்க்காத திருப்பம். ஒரு பாலச்சந்தர் நாயகி கவர்ச்சி நடனத்துக்கு இறங்கி வருவார்னு. அதுவும் அந்தப்பாட்டு எடுத்த சூழல் புதுசா இருந்தது. ராஜாவின் குரலும் கச்சும் கச்சும் கூட புதுசா இருந்தது.

அப்பவே முடிவாயிடுச்சி. கவர்ச்சி நடனம்னா குயிலி தான்னு. கட்டுக்கடங்காத காளையான முரளியோட கையில தன் தலையில வச்சிருக்கிற பூவால விலங்கு போட்டு இனிமா யாரையும் அடிக்க கை ஓங்கக்கூடாதுன்னு சொல்லி "போட்டேனே பூவிலங்கு. அன்பாலே நீ அடங்கு"ன்னு பாடின அதே பெண் தான் "போய்யா...என்னோடு மல்லுக்கட்ட வாய்யா"ன்னு வேதாளம் வந்து நிக்குதுன்னு ஆடும் சூழல் ஏற்பட்டது தமிழ் ரசிகர்களால் தான்னு சொன்னா மிகையில்லை.

மனோவோட மெஹபூபா மெஹபூபா குரலோடு ஷைலஜாவோட அழுத்தமான குரலில் கமலோட ஏரோபிக்ஸுகளுக்கிடையே குயிலி அசராம ஆடினதுக்கு குயிலியோட டான்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் தான் காரணம். அதோடு தூங்காதே தம்பி தூங்காதேயில் வானம் கீழே வந்தாலென்ன பாடலுக்கும் கமலோடு ஆடிய அனுபவமும் அவருக்கு இருந்தது வசதியாப்போச்சு. இந்த மூணு பாட்டுக்கப்புறம் நாலாவதா கமலோடு 'அடிச்சிடு கொட்டம் விடியற மட்டும்' அவ்வளவா எடுபடலை. குயிலி மேலே இருக்கும் பரிதாப உணர்ச்சியைத்தான் அது கூட்டியது.

சின்னப்பதாஸ் படத்துல 'பாக்கு வெத்தல வச்சுக்க..வச்சுக்க' பாட்டு தனி ஃப்ளேவர். (கார்த்திக்கோட) 'ஜவ்வாது சந்தனப்பூவு' அப்படிங்கிற மழைப்பாடல் அன்றைய மிட்நைட் மசாலா..சோலைக்குயில் படத்தில் முராரியோட இசையில் 'மலைநாட்டு மச்சானே' அசல் காட்டுவாசி காதல் பாடல். அது அச்சு அசலா இளையராஜா சில்க்குக்காக போட்ட 'புழையோரத்தில் பூந்தோணி எத்தியில்லா' என்கிற மலையாளப்பாட்டிலிருந்து எடுக்கப்பட்ட பேட்டர்ன். புதியபாதை படத்தில் (பார்த்திபனோடு) 'கண்ணடிச்சா கல்லெடுப்பேன் கருப்பு மூஞ்சிக்காரி' பாட்டும் குயிலியோட ஸ்பெஷல் தான்.

இந்த டான்ஸ் கூத்துகளுக்கிடையே 'உன்னை சொல்லிக்குற்றமில்லை' படத்தில் அமீர்ஜான் தன் நாயகிக்கு கொஞ்சம் நல்ல ரோலை தந்திருந்தார்னு சொல்லலாம்.

திடீர்னு பார்த்தா ஜோதிகா அம்மாவா ஒரு படத்துல வர்றாங்க குயிலி...அட....அந்த 'பூவிலங்கு' போட்டவங்களா இவங்க. நிறைய அம்மா ரோல்கள். அதன் பின் டிவி சீரியல்களில் ஒரு கலக்கு. அது வரை தனக்கிருந்த நடிப்புப்பசியையெல்லாம் டிவி சீரியல்களில் சாப்பிட்டு போக்கிக்கிட்டாங்கன்னு சொல்லலாம்.

விதவிதமான பாத்திரங்கள். விதவிதமான நடிப்பு. சீரியல்களில் நல்ல பெயரும் கிடைத்தது அவருக்கு. ஆனாலும் பெரியத்திரை அவரை நிராகரித்தது வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்.

பாலிவுட்டை சேர்ந்த ஸ்டண்ட் இயக்குனரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான குயிலி சிலகாலம் நடிப்பை விட்டு ஒதுங்கி இருக்கார்

  • 694
·
Added article

மலேசியா வாசுதேவன் பாடுவதை நிறுத்தியதற்கு இதுதான் காரணமா?.. ஆச்சரியம் ஆனால் அதுதான் உண்மை

ரஜினி நடித்த மனிதன் மனிதன் என்ற பாடல் ரஜினி என்ற அந்த உச்ச நட்சத்திரத்தையும் தாண்டி மலேசியா வாசுதேவனை நினைவுபடுத்துகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட வசீகரக்குரல் திடீரென நின்று போனது ஏன்? இவரது வெண்கலக் குரலில் தண்ணீ கருத்துருச்சி, ஆகாய கங்கை, ஆசை 100 வகை, கூடையிலே கருவாடு, பட்டு வண்ண சேலைக்காரி ஆகிய பாடல்கள் இன்றும் இனிப்பவை.

சந்திரபோஸ் இசையில் மனிதன் படத்தில் மனிதன் மனிதன் பாடல் ரெக்கார்டிங் ஆகி ஓடிக்கிட்டு இருக்கு. இது ரஜினிக்கே தெரியாது. இந்தப் பாட்டை நம்ம படத்துல வைத்தால் என்னன்னு கேட்கிறார் ரஜினி. அதன்பிறகு தான் அவருக்கே தெரிந்தது இது நம்ம படத்தோட பாட்டு தான் என்று. முதலில் இந்தப் பாடலைப் படத்தில் எங்கு வைப்பது என்று சிக்கல் வந்ததாம். அதன்பிறகு தான் டைட்டிலில் வைத்தார்களாம்.

தமிழ்சினிமாவில் மலேசியா வாசுதேவனின் குரல் மாறுபட்டது. குரலில் பாவங்களைக் கொண்டுவருவதில் ஆற்றல் மிக்கவர் தான் அவர். முதல் மரியாதை படத்தில் அவரது பூங்காற்று திரும்புமா என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். ஒரே வரியில் உங்களைப் பாட்டோடு கலக்கச் செய்து விடுவார் அந்தப் பாடகர். அவர் ஒரு பாடலைப் பாடி விட்டார் என்றால் அது சக்சஸ் தான்.

பாரதவிலாஸ் படத்தில் தான் மலேசியா வாசுதேவன் பாடகராக அறிமுகமானார். அதன்பிறகு வாய்ப்பு வரவே இல்லையாம். இளையராஜா சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி நாட்டுப்புறப் பாடல் சம்பந்தமாக ஒரு இசை ஆல்பம் பண்ணினாராம். அதில் மலேசியா வாசுதேவன் பாடியிருப்பார். 16 வயதினிலே படத்தில் இருந்து தான் அவர் ஹிட் ஆனார். ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற அந்தப் பாடல் உண்மையிலேயே சூப்பர்ஹிட். பட்டிக்காட்டுல எதுவுமே தெரியாத ஒரு அப்பாவிப் பயலின் உணர்ச்சிகளை குரலிலேயே கொடுத்து விடுகிறார் மலேசியா வாசுதேவன்.

எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் சம கால நண்பர்கள். கல்யாணராமன் படத்திலும் அப்பாவி, அறிவாளிக்குமான சிறுவித்தியாசத்தை மலேசியா வாசுதேவன் குரலில் கொண்டு வந்து அசத்தியிருப்பார். அதுதான் காதல் வந்திரிச்சி…பாடல். எதுக்கு வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கக்கூடிய குரல் அம்சம் கொண்டவர் தான் மலேசியா வாசுதேவன்.

சினிமாவிலும் வில்லத்தனத்தில் வெளுத்துக்கட்டினார். ஒரு கைதியின் டைரி படத்தில் இவரது வில்லத்தனத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. அவ்வளவு அருமையாக நடித்து இருப்பார். அந்த நக்கல், நய்யாண்டி, குறும்புத்தனம் எல்லாம் ரொம்பவே நம்மை ரசிக்க வைக்கும்.

நடிப்பாசையைத் தாண்டி சொந்தப்படம் எடுப்பதில் தான் அவர் சிக்கினார். இதில் தான் அவர் ஒரு இடத்துக்கு மேல் அவரால் பண்ண முடியவில்லை. குறிப்பிட்ட காலகட்டத்தில் அவர் படங்கள் இல்லாமல் இருந்தார். அதனால் தான் அவர் பாடுவதையே நிறுத்தி விட்டார்.

மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

  • 696
·
Added article

நடிகர் சசிகுமார் அவர்களின் பேட்டி ஒன்றை சமீபத்தில் பார்த்தேன்.

சொந்தமாக படம் எடுத்து நஷ்டப்பட்டு ஏகப்பட்ட கடன்களில் அகப்பட்டு இருக்கிறார்.

நண்பர்தான் அனைத்து வரவு செலவுகளும் அவரும் உயிரை மாய்த்துக்கொள்ள நடுக்காட்டில் தவிப்பது போல் தடுமாறி உள்ளார்.

முதல் படத்திலே தமிழ் திரையுலகை தன் திரைக்கதை புதுமையால் புரட்டிப்போட்டவர் எதிர்காலமே சூனியமாகி நின்றிருக்கிறார்.

பின் அயராத உழைப்பார் கடன்களை கொஞ்ச கொஞ்சமாக அடைத்து மீண்டு இருக்கிறார்.

அவரின் பேட்டியில் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால்,

"எனக்கே ஏற்பட்ட இக்கட்டிற்கும்,கடனுக்கு யார் காரணமும் இல்லை முழுக்க முழுக்க நானே காரணம்!கடன் வந்துவிட்டது யார் மேலேயும் பழி போட்டு தப்பிக்க கூடாது.முதலில் நமது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் பிறகு நம் மனம் சோர்ந்து விடாமல் இதில் இருந்து எப்படி மீளப்போறோம் என யோசிக்க வேண்டும்.நான் கடன்காரர்களிடம் வலிய போன் செய்து டைம் கேட்டு அடைத்தேன்"என பேட்டியில் சொல்கிறார்.

தனக்கு ஏற்படும் இன்னல்கள்,தடைகள்,கஷ்டங்கள் என எல்லாவற்றிற்கும் யார் மற்றவர்கள் மீது பழி போடுகிறார்களோ அவர்களால் அதை கடந்து வெற்றிப்பெற முடியாது.

பொதுவாக எனக்கு காதல் தோல்வி பாடல்கள் பிடிக்காது காரணம் அந்த பாடல்களில் வரிகள் எல்லாமே என்னை ஏமாற்றிவிட்டு போய்விட்டாள் என புலம்பலாகத்தான் இருக்கும்.

ஆனால்,அபூர்வ சகோதரர்கள் படத்தில்,"உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்"பாடல் மிகவும் பிடிப்பதற்கு காரணம்,

காதல் தோல்வி பாடல்களில் இந்த பாடல் மட்டும்தான்,"என் மேலதான் தவறு,எனக்கு அதிர்ஷ்டம் இல்லை"என காதலியை உயர்வாக சொல்லப்பட்டு இருக்கும்.

"ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம் மற்றவரை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்"என நாயகன் பாடுவதாக வாலி எழுதி இருப்பார்.

எப்போதெல்லாம் வாழ்வில் பின்னடைவை சந்திக்கிறீர்களோ,அப்போது உங்களின் வாழ்வில் பின்னடைவுக்கு யாரும் காரணம் இல்லை நாம் மட்டும் காரணம் என எப்போது எண்ண தொடங்கிறீர்களோ அப்போதே வாழ்க்கையில் வெற்றிப்பெற தொடங்கிறீர்கள் என அர்த்தம்.

- முகநூலில் வந்தது...

  • 696
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மனதளவில் இருந்த சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வர்த்தக பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். தடைப்பட்ட வேலைகளை முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். சுபகாரிய செலவுகள் உண்டாகும். பயணம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

ரிஷபம்

செயல்களில் ஒருவிதமான தாமதம் உண்டாகும். தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். தூர பயணங்களில் கவனம் வேண்டும். நிம்மதி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மிதுனம்

ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார ரீதியான அறிமுகத்தால் லாபம் மேம்படும். மனதிற்கு இதமான செய்திகள் கிடைக்கும். நவீன கருவிகள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். புத்திர வழியில் சுபச்செலவுகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வழக்குகளில் சாதகமான நிலை உண்டாகும். குடும்பத்தில் ஆதரவுகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

சிம்மம்

வரவுக்கு ஏற்ப செலவுகளும் இருக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பயணம் மூலம் வரவுகள் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

 

கன்னி

பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் குறையும். சுபகாரிய செயல்களில் தாமதம் உண்டாகும். வாகன பராமரிப்பு தொடர்பாக விரயம் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உழைப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

துலாம்

குடும்பத்தில் சுப காரிய முயற்சிகள் கைகூடும். சகோதர வழியில் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். புதிய பொருள்கள் மீது ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களால் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். நலம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

விருச்சிகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வேலையாட்களிடம் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

தனுசு

சில விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். வேலை ஆட்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். பணி சார்ந்த ரகசியங்களில் கவனம் வேண்டும். வழக்கு பணிகளில் அலைச்சல் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மகரம்

குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். வெளி உணவுகளை தவிர்க்கவும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவு பெருகும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவும். பெற்றோர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். சிக்கல் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

கும்பம்

வியாபாரத்தில் புதிய பாதைகள் புலப்படும். எதிர்பாராத வரவு வந்து சேரும். எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் சாமர்த்தியம் ஏற்படும். மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகும். கவலைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மீனம்

சமூக பணிகளில் மதிப்பும், மரியாதையும் உயரும். இழுபறியான சில வழக்குகள் முடிவுக்கு வரும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். பணிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

  • 761
·
Added a post

விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 5 ஆம் தேதி சனிக்கிழமை 20.12.2025.

இன்று காலை 07.54 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.

இன்று அதிகாலை 12.04 வரை கேட்டை. பின்னர் மூலம்.

இன்று மாலை 04.50 வரை கண்டம். பிறகு விருத்தி.

இன்று காலை 07.54 வரை நாகவம். பின்னர் இரவு 08.44 வரை கிமிஸ்துக்கினம். பிறகு பவம்.

இன்று அதிகாலை 12.04 வரை மரண யோகம். பின்னர் காலை 06.23 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=363&dpx=2&t=1766235528

 நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.00 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 782

Good Morning...

  • 771
·
Added article

இயக்குநர், நாயகன், நாயகி என்று பலரும் அறிமுகமாக இருக்கும் படங்களின் பாடல்களோ, டிரெய்லரோ வெளியானால், அவை சட்டென்று கவரும் வகையில் இருந்தால் தவிர ரசிகர்களின் ஆதரவு கிடைக்காது. அந்த ஆதரவை ‘ரெட் லேபிள்’ படத்தின் ‘மிளிரா’ என்கிற பாடல் இணையத்தில் பெற்றுள்ளது. மலையாளத்தில் 30 படங்களுக்கு மேல் இசையமைத்த கைலாஷ் மேனன் தமிழில் இசையமைத்துள்ள முதல் படம்.

ஒரு பொறியியல் கல்லூரியில் கதை நடக்கிறது. கல்லூரியின் மாணவர் தலைவராக இருக்கும் நாயகன் மீது விழும் கொலைப்பழியின் பின்னாலி ருக்கும் பிளாஷ்பேக் கதையை எழுதி யிருக்கிறார் பொன்.பார்த்திபன். கே.ஆர்.வினோத் இயக்கத்தில், ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் இப்படத்தைத் தயாரித்து நாயகனாக அறிமுகமாகிறார் லெனின். அவருக்கு ஜோடியாக மலையாளத்திலிருந்து அஸ்மின் அறிமுகமா கிறார். ‘மிளிரா’ பாடலில் அஸ்மின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

  • 1041
·
Added article

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோ-பிக்கில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

உலகளவில் பிரபலமான கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக் கலைஞர் இவர்தான். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படமொன்றை உருவாக்க இருக்கிறார்கள். இதனை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோ-பிக்கை இயக்குநர் கெளதம் தின்னூரி இயக்கவுள்ளார். இவர் ‘ஜெர்சி’, ‘மல்லி ராவா’ மற்றும் ‘கிங்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். சாய் பல்லவியும் சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் அனைத்தும் முடிவானவுடன் முறையாக அறிவிக்கவுள்ளது படக்குழு. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான ‘தண்டேல்’ படத்தில் நாயகியாக நடித்தவர் சாய் பல்லவி. அந்த நட்பின் மூலம் எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோப்பிக்கிலும் நடிக்க அணுகியிருக்கிறார்கள்.

  • 1046
·
Added a news

கனடாவின் மத்திய ஒன்டாரியோ மற்றும் வடமேற்கு கியுபெக் பகுதிகளில் கடும் பனிப்புயல் தாக்கம் காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒன்டாரியோவில் இந்த பனிப்புயல் வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் 30 முதல் 50 செ.மீ. வரை பனிப்பொழிவு பதிவாகக்கூடும். சில இடங்களில் இதைவிட அதிகமாகவும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

வடக்குத் திசையில் இருந்து வீசும் காற்று வேகம் 50–60 கிமீ/மணி வரை இருக்கும் என்றும், Lake Nipigon-க்கு தெற்கான பகுதிகளில் 70 கிமீ/மணி வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

பலத்த வடக்குக் காற்றும் கனமழை போன்ற பனிப்பொழிவும் சேர்ந்து, சில நேரங்களில் வீதிகளில் கடும் பனிமூட்டம் நிலவும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சாலைகள் மற்றும் நடைபாதைகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும், திடீரென பார்வைத் தூரம் மிகக் குறையக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவசியமற்ற பயணங்கள் மற்றும் வெளிப்புற செயல்பாடுகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து, அத்தியாவசிய சேவைகள் மற்றும் மின் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும்; அதற்காக முன் தயாராக இருக்க வேண்டுமென கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

  • 1050
·
Added a post

* வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்து சீழ் வெளியேறி விடும்.

* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.

  • 1048
  • 1047