·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 872
  • More

நயாகரா வீழ்ச்சி

Canada Day நயாகரா வீழ்ச்சி

Comments (0)
Login or Join to comment.
·
Added article

சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜய்குமார், கயல் ஆனந்தி நடிக்கும் படம், ‘அறிவு’. மோட்டிவ்ட்ரோன் புரொடக் ஷன் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு, மூணாறு பகுதிகளில் நடைபெற்றது. அங்குள்ள ஒத்தப்பாறை பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் படப்பிடிப்பு நடந்தபோது, அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு போதிய வசதிகள் இல்லாதது தெரியவந்தது.

தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் உடனடியாக அந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுத்தார். அதன்படி, பள்ளி முழுவதும் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாணவர்களுக்கான குடிநீர் வசதி மற்றும் அவர்கள் தினசரி கல்வி பெற தேவையான அடிப்படை வசதிகளும் முழுமையாக வழங்கப்பட்டன. இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். தில் ராஜு ஒளிப்பதிவு செய்கிறார்.

  • 123
·
Added a post

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் சென்னையிலோ, டில்லியிலோ, கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை. விருத்தாசலத்தில் தான் இருக்கிறது.

கிடைத்தற்கரிய பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் இந்த தமிழ் நூல் காப்பகமே.. ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் இது.

தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார்.

இந்த நூலகத்தில் மிகப்பழமையான பல நூல்கள் உள்ளன. இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரை பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பியம் முதல் பதிப்பு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள் எனப் பல முதல் பதிப்பு நூல்கள் அமைந்திருப்பது தமிழ் நூல் காப்பகத்தின் தனிச்சிறப்பு. திருக்குறளின் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான 1500 க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன.

கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் உள்ளன.

நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், சமைய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப் பல பரிமாணங்களில் நூல்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மறைமலை அடிகள், தெ.பொ.மீ., வையாபுரி, மு.வ.,பாவாணர், ந.சி.கந்தையா, முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான ஆய்வு நூல்கள், காந்தியடிகள், காரல்மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், அண்ணா முதலிய சமுதாய சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிறந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் எனப் பல அரிய குறுந்தகடுகளும் அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பு.

தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்த கலை நயம் மிக்க கட்டடமாகத் திகழ்கிறது இது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கட்டடத்தின் பெரிய தூண்களும், நேப்பாள மன்னர் அரண்மனையை நினைவூட்டும் மேல் முகப்பும் என, தன்னைக் கவர்ந்த வடிவமைப்புகளை பழனிவேல் என்ற பொறியாளரின் உதவியோடு வடிவமைத்துள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்கள்.

நூலகத்திற்கான தனி கட்டிடத்தை 50 இலட்ச ரூபாய் செலவில் 2000ஆம் ஆண்டில் கட்டி முடித்ததோடு நூலகத்தின் முன்புறம் கண்ணைக் கவரும் அழகிய பூங்காவையும் கலை நுணுக்கத்தோடு உருவாகி வைத்துள்ளார். இவரது முயற்சியைப் பாராட்டி பொள்ளாச்சி மகாலிங்கம், பதிப்புச்செம்மல் மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அறவாணன், கவிஞர் புரட்சிதாசன், த.பழமலை, க்ரியா ராமகிருஷ்ணன், விடியல் சிவா, ஆகியோர் தங்கள் சேகரிப்பிலிருந்து பல நூல்களை கொடையளித்துள்ளனர்.

பல்லடம் மாணிக்கம் அவர்கள், நிறங்கள் என்ற கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல நூல்களை வெளியிட்டுள்ளார். வள்ளுவம் என்ற இதழை நடத்தியுள்ளார். 24 இதழ்களோடு அது நின்று போனாலும் இலக்கிய இதழ்களில் குறிப்பிடத்தகுந்ததாகும்.

தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என்கிறார்.

பிரபஞ்சன், சிவகாமி, திலகவதி ஆகிய எழுத்தாளர்களுடனான இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளும், பெண்கள் இலக்கியச் சந்திப்பு-2007 ஆகிய இலக்கிய நிகழ்வுகளும் தமிழ்நூல் காப்பகத்தில் தான் நடைபெற்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ஆசியாவிலேயே பெரிய தனிநபர் நூலகமும் இந்தத் தமிழ்நூல் காப்பகம் தான்.

  • 128
·
Added a post

அணையாத தீபம் - ஜுவாலாமுகி கோயில்!

இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஜுவாலாமுகி அம்மன் கோயில், மற்ற கோயில்களைப் போல சில வழிபாட்டுத் தலம் அல்ல.

இங்கு சிலைகளுக்குப் பதிலாக "புனிதச் சுடர்களே" தெய்வமாக வணங்கப்படுகின்றன.

பல நூற்றாண்டுகளாகத் தொடரும் இந்த மர்மம் இன்றும் பக்தர்களையும் விஞ்ஞானிகளையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

எரிபொருள் இல்லாத சுடர்!

இந்தக் கோயிலின் கருவறையில் பாறைகளின் பிளவிலிருந்து ஒன்பது தீபச் சுடர்கள் (ஜுவாலாக்கள்) நீல நிறத்தில் எரிந்து கொண்டிருக்கின்றன. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தத் தீபங்கள் எரிவதற்கு எந்தவிதமான எண்ணெய், நெய் அல்லது திரிகளோ பயன்படுத்தப்படுவதில்லை. பூமியின் ஆழத்திலிருந்து வரும் இந்தச் சுடர்கள் பல நூற்றாண்டுகளாக அணையாமல் எரிந்து கொண்டிருக்கின்றன.

தோற்றுப்போன பேரரசர் அக்பர்!

இக்கோயிலின் மகிமையைக் கேள்விப்பட்ட முகலாயப் பேரரசர் அக்பர், இது வெறும் ஏமாற்று வேலை என்று கருதி அதை அணைக்க முயன்றார். கோயிலைச் சுற்றி கால்வாய் அமைத்து அதன் மேல் நீரை ஊற்றினார். ஆனால், அத்தனை நீராலும் அந்தச் சுடர்களை அணைக்க முடியவில்லை. இறுதியில், அந்த அற்புதத்தைக் கண்டு வியந்த அக்பர், அம்மனுக்குத் தங்கக் குடை ஒன்றை காணிக்கையாக வழங்கினார் என்பது வரலாறு.

எட்டாத ரகசியம் - அறிவியல் தோல்வி!

பிரிட்டிஷ் காலத்திலிருந்தே பல நிலத்தடி ஆய்வாளர்கள் இதற்குக் காரணம் நிலத்தடியில் இருக்கும் இயற்கை எரிவாயுவாக இருக்கலாம் என்று கூறி வந்தனர். ஆனால் பலமுறை தோண்டியும், ஆய்வு செய்தும் அத்தகைய எரிவாயு சேமிப்பு எங்குள்ளது என்பதைக் கண்டறிய முடியவில்லை.

இவ்வளவு சிறிய பிளவிலிருந்து பல நூறு ஆண்டுகள் அணையாமல் எரியும் அளவுக்கு எரிவாயு வர வாய்ப்பே இல்லை என்பதே உண்மை.

ஒன்பது சுடர்களின் தத்துவம்!

இங்கு எரியும் ஒன்பது சுடர்களும் மஹாசக்தி, மஹாவிஷ்ணு, கணபதி உள்ளிட்ட ஒன்பது தெய்வங்களின் அம்சமாக கருதப்படுகின்றன. இதில் பிரதான சுடர் 'மஹாசக்தி' என்று அழைக்கப்படுகிறது.

பூமிக்குக் கீழே இருந்து வெளிப்படும் இந்த தெய்வீக நெருப்பு, இயற்கையின் மர்மமா அல்லது இறையருளா? விடை தெரியாத இந்த அற்புதத்தை ஞானத்தால் மட்டுமே உணர முடியும்.

  • 131
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்கள் மூலம் மனதளவில் புதிய மாற்றங்கள் உருவாகும். தற்பெருமை இன்றி அனைவரையும் அனுசரித்து செல்லவும். செல்லப்பிராணிகள் வழியில் விரயங்கள் ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

ரிஷபம்

சுபகாரிய பேச்சுக்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். அதிகாரிகள் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எதிர்ப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மிதுனம்

வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். உற்பத்தி துறைகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். பயணம் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கடகம்

புதிய வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்விகம் சம்பந்தமான சுபவிரயங்கள் செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு மேலான பொறுப்புகள் கிடைக்கும். தொலைபேசி தொடர்பான செய்திகளின் மூலம் பயணங்களை மேற்கொள்வீர்கள். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். தடைகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

சிம்மம்

வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். வியாபாரப் பணிகளில் வெளியூர் தொடர்புகள் மூலம் நன்மைகள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : கருசிவப்பு

கன்னி

பேச்சு வன்மையினால் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பாகப்பிரிவினை குறித்த சிந்தனைகள் மேம்படும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

துலாம்

விவாதங்கள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் முன்னேற்றம் காணப்படும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். வியாபார பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

விருச்சிகம்

சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். உடல் நிலையில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் பக்குவமாக நடந்து கொள்ளவும். தேவைக்கேற்ப வரவுகள் கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

தனுசு

நினைத்த சில பணிகளை முடிப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். திடீர் பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மகரம்

வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகளை மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். வித்தியாசமான மின்னணு பொருட்களை வாங்குவீர்கள். தம்பதியர்களுக்குள் நெருக்கம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமான விஷயங்களுக்கு முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கும்பம்

உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சுபகாரியங்களை பேசி முடிப்பதற்கான தருணங்கள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம்

கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான மந்தம் தோன்றி மறையும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். இழுபறியான சில விஷயங்கள் முடியும். ஆராய்ச்சி பிரிவில் முன்னேற்றம் ஏற்படும். ஆக்கபூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

  • 205
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 23 ஆம் தேதி திங்கட்கிழமை 6.4.2026.

இன்று பிற்பகல் 01.48 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று முழுவதும் அனுஷம்.

இன்று பிற்பகல் 02.55 வரை வஜ்ரம். பின்னர் வியதீபாதம்.

இன்று அதிகாலை 12.50 வரை பவம். பின்னர் பிற்பகல் 01.48 வரை பாலவம். பிறகு கௌலவம். இன்று காலை 06.08 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=474&dpx=2&t=1775453495

நல்ல நேரம்:

காலை : 06.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 206
·
Added a post

விபத்தில் அப்பா, அம்மா இருவரையும் இழந்த எனக்கு, அக்கா தாயாகவும், மாமா நிழலாகவும் மாறினார்கள் . ஆனால் நான் வளர வளர மாமாவின் நிழல் எனக்குச் சுட்டெரிக்கத் தொடங்கியது. "சும்மா ஊர் சுத்துறதுக்கு பதிலா ஏதாவது வேலைக்கு போடா, அக்கா கஷ்டப்படுறது கண்ணுக்குத் தெரியலையா?" என்று மாமா ஊர் முன்னிலையில் என்னைக் கேலி செய்வா.

ஒருநாள் சோறு தொண்டையில் இறங்காமல் அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறினேன். "நிச்சயம் ஒருநாள் பெரிய ஆளாகி, இந்த மனுஷன் முன்னாடி கார்ல வந்து நிப்பேன்" என்று சபதம் எடுத்தேன். என் உழைப்பு வீண் போகவில்லை. நான்கு ஆண்டுகளில் ஒரு பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் கைநிறையச் சம்பளத்தில் வேலை கிடைத்தது .

புது கார் வாங்கினேன். கெத்தாக வீட்டு வாசலில் வந்து நின்றேன். மாமா அங்கே திண்ணையில் அமர்ந்திருந்தார். அவரைத் திரும்பி கூட பார்க்காமல் அக்காவிடம் சென்றேன். "அக்கா, இதோ என் சம்பளம். இனி நம்ம வேற வீட்டுக்கு போயிடலாம். யாரோட வசையும் இனி நமக்குத் தேவையில்லை" என்று மாமாவைப் பார்த்துக் கத்திக் கூறினேன் .

மாமா மெலிதாக புன்னகைத்துவிட்டு, ஒரு பழைய காகிதத்தை என்னிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். "இத்தனை நாள் அசிங்கப்படுத்தினது பத்தாதுன்னு இப்போ என்ன கொடுக்கிறாரு?" என்ற கோபத்துடன் அதைத் திறந்தேன் .

அது ஒரு வங்கிக் கணக்குப் புத்தகம் (Bank Passbook). அதில் கடந்த 15 ஆண்டுகளாக மாமா உழைத்த ஒவ்வொரு ரூபாயும் என் பெயரில் சேமிக்கப்பட்டிருந்தது. கடைசிப் பக்கத்தில் ஒரு கடிதம் இருந்தது: "தம்பி, நீ அப்பா இல்லாதவன் என்ற உணர்வு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே உன்னைச் செல்லமாக வளர்த்தேன். ஆனால் நீ ஊதாரித்தனமாகச் சுற்றியபோது எனக்குப் பயம் வந்தது. நான் ஒரு டிரைவர், நாளைக்கே ஏதாவது விபத்தில் நான் செத்துப்போனால் உன்னை யார் காப்பாற்றுவார்? அதனால்தான் உனக்கு வைராக்கியம் வர வேண்டும் என்று உன்னைக் காயப்படுத்தினேன். என் மேலிருந்த கோபம்தான் உன்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. நீ பெரிய ஆளாகிவிட்டாய், இனி நான் நிம்மதியாகச் சாவேன்."

படித்து முடித்ததும் என் கால்கள் நடுங்கின. ஓடிப்போய் மாமாவின் கால்களைக் கட்டிக்கொண்டு கதறினேன். "மாமா, என்னை மன்னிச்சிடுங்க மாமா. உங்களை நான் 'அந்த ஆளு'ன்னு தப்பா பேசிட்டேன்" என்று அழுதேன்.

அவர் என் தலையை வருடி, "பரவாயில்லைடா தம்பி, ஒரு அப்பாவா தோற்று, ஒரு மாமாவா ஜெயிச்சுட்டேன்" என்றார். ரத்த பந்தத்தையும் தாண்டி, ஒரு மாமாவின் கண்டிப்புக்குள் ஒளிந்திருந்த அந்தப் பேரன்பு புரிந்தபோது, அன்றுதான் நான் உண்மையான மனிதனாக மாறினேன் .

அன்பு என்பது எப்போதும் கொஞ்சுவதில் மட்டும் இல்லை, சில நேரங்களில் கண்டிப்பு எனும் போர்வையில் நம்மை செதுக்குவதிலும் இருக்கிறது என்பதை அன்று எனக்கு சொல்லிக் கொடுத்தது,

  • 207

இந்தியாவில் - ராகவ் சத்தா “ரைட் டு ரிகால்” என்ற மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதன் பொருள், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ., அல்லது கவுன்சிலர்கள் தங்கள் வேலை சரியாக செய்யவில்லை என்றால், மக்களுக்கு அவர்களை பதவிக்காலம் முடிவதற்கு முன்பே நீக்கும் உரிமை கிடைக்கும்.

இந்த யோசனை, மக்கள் பிரதிநிதிகள் எப்போதும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது.

  • 203

Good Morning...

  • 205

நீங்கள் செய்யும் தர்மம்

ஒரு போதும்

உங்கள்

செல்வத்தைக் குறைக்காது.

  • 207
  • 306
·
Added a post

கரிஷி மந்தபாலர் கடும் பிரம்மச்சாரி. எப்போதும் இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவர். அவருக்கு சொர்க்கம் புகும் ஆசை தவிர வேறு எந்த ஆசையும் கிடையாது. ஜொலிக்கும் விழிகளும் வெண்ணிறத் தாடியும் ஜடாமுடியுமாய் நாளுக்குநாள் அவரது வசீகரம் கூடியது. மந்தபாலர் தம் தவ வாழ்வில் நிறைவுகண்டு, தாமே விரும்பி சொர்க்கம் புக முடிவு செய்தார். அக்கினியை வளர்த்த மந்தபாலர், தன் இறுதி வேண்டுகோளைச் சமர்ப்பித்தார்: ‘‘ஏ அக்கினியே! எத்தனையோ முறை வேள்வித் தீ வளர்த்து, சமித்துக்களை ஆகுதியாகப் பெய்து உன்னை ஆராதித்திருக்கிறேன். இன்று நான் உன்னை வளர்ப்பது என்னையே ஆகுதியாக நீ ஏற்பதன் பொருட்டே. மனத்தாலும் முழு பிரம்மச்சாரியாக வாழ்ந்த என்னை ஏற்று என் ஆன்மாவை சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக!’’

இவ்விதம் முழங்கிய அவர், நெருப்பில் சடாரெனக் குதித்தார். சக முனிவர்கள் சடசடவென அவர் உடல் எரிவதைப் பார்த்துக் கைகூப்பி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அவரது ஆன்மா நட்சத்திரம் போல் ஒளி வீசியவாறு விண்ணில் பறந்தது. சொர்க்கத்திற்குச் சென்ற மந்தபாலர், சொர்க்க வாசல்முன் நின்றார். ஆனால் சொர்க்கத்தின் கதவுகள் அவருக்குத் திறக்கவில்லை. தடதடவென அதன் தங்கக் கதவுகளைத் தட்டினார். கதவைத் திறந்துகொண்டு உள்ளிருந்து வந்தான் ஒரு தேவன். ‘‘யார் நீங்கள்? என்ன வேண்டும்?’’ என்று அதட்டினான்.

‘‘நான் மகரிஷி மந்தபாலன். சொர்க்கம் புக வந்திருக்கிறேன், கதவைத் திறவுங்கள்’’ என்றார் முனிவர்.

தேவன் கடகடவென்று சிரித்தான். ‘‘மந்தபாலரே! சொர்க்கத்தின் கதவுகள் தட்டித் திறக்கப்படுவதல்ல; தானாய்த் திறந்தால்தான் உண்டு. நீங்கள் சொர்க்கம் புகத் தகுதியானவர் என்றால் இந்தக் கதவுகள் உங்களுக்காகத் திறந்து உங்களின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கும். அப்படித் திறவாததால் உங்களுக்கு சொர்க்கம் புகத் தகுதி இல்லை என்றே பொருள்!’’

மந்தபாலர் வியப்படைந்தார். தவ சிரேஷ்டரான தனக்கு சொர்க்கம் புக அனுமதி கிடையாதா? தம் தவ வலிமையின் அர்த்தம்தான் என்ன? ‘‘தேவனே! தவத்தை அன்றி வேறெதையும் நான் செய்ததில்லை. ஏன் எனக்கு சொர்க்கம் மறுக்கப்படுகிறது?’’

தேவன் நகைத்தபடிச் சொல்லலானான்: ‘‘மந்தபாலரே! ஒவ்வோர் உயிரும் பூமிக்கு அனுப்பப்படும்போது படைப்பாற்றலுடன்தான் அனுப்பப்படுகிறது. பூமி தொடர்ந்து இயங்க வேண்டும் இல்லையா? படைப்பாற்றலைப் பயன்படுத்த வேண்டியது ஒவ்வோர் உயிரின் அடிப்படைக் கடமை. இயற்கையிலேயே ஒருவருக்கு மக்கட் செல்வம் கிட்டவில்லை என்றால் அது ஒப்புக் கொள்ளக் கூடியதே. ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக ஒருவர் பிரம்மச்சரிய விரதம் பூண்டால் அதுவும் கூட ஏற்கக் கூடியதே.

ஆனால் எந்தக் குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் சொர்க்கம் புகத் தவம் செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு பிரம்மச்சரிய விரதம் பூணுபவர்களை சொர்க்கம் விரும்புவதில்லை. படைப்பாற்றல் சக்தி அளிக்கப்பட்டும் தர்மநெறிப்படி வாழ்ந்து ஆனால் ஓர் உயிரைக் கூடப் படைக்காமல் சொர்க்கம் புக எண்ணுவது சரியல்ல. உங்களுக்கு இயற்கை வழங்கிய படைப்பாற்றலுக்கு நீங்கள் நியாயம் செய்யவில்லையே! உங்கள் வாரிசு என பூமியில் யாரையாவது காட்டுங்கள். உங்களுக்காக சொர்க்கத்தின் கதவுகள் இப்போதே திறக்கும்.’’

மந்தபாலர் திகைத்தார். இப்படியொரு கோணத்தில் தாம் எண்ணிப் பார்க்கவே இல்லையே என வருந்தினார். தம் தவ ஆற்றலால் தாம் மறுபிறவி எடுத்து தம் படைப்பாற்றலுக்கு நியாயம் செய்தால் அதன் பின் சொர்க்கக் கதவுகள் தமக்குத் திறக்குமல்லவா என்று யோசித்தார். தேவன், ‘‘ஒரு பிறவியின் தவ ஆற்றல் மறுபிறவிக்கும் தொடரும், மறுபிறவியில் அவர் தவம் ஏதும் நிகழ்த்த வேண்டாம், தம் படைப்பாற்றலுக்கு நியாயம் செய்து தம் இனத்தைப் பெருக்க உதவினால் அது போதும்’’ என்று விளக்கம் தந்தான்.

மந்தபாலர் தன்னை விரைவில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு சாரங்கப் பறவையாக உருமாறும்படி மனத்தில் சங்கல்பம் செய்துகொண்டார். அப்போதுதானே சீக்கிரத்தில் சொர்க்கம் வர முடியும்?

மறுகணம் மாபெரும் காண்டவ வனத்தில் ஒரு மரக்கிளையில் அந்த அழகிய சாரங்கப் பறவை போய் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டது. இயற்கையின் நியதிப்படி, அது மறுபிறவி எடுத்த கணத்திலேயே அதன் முற்பிறவி நினைவுகள் மறைந்தன. அதே மரத்தின் கிளையில் சிறகுகளைத் தன் கூரிய அலகால் கோதிக் கொண்டு ஜரிதா என்ற ஒரு சாரங்கி அமர்ந்திருந்தது. அது, தான் அமர்ந்த மரத்தின் இன்னொரு கிளையில் உட்கார்ந்த சாரங்கத்தை வியப்போடு பார்த்தது. ஜரிதாவின் எழிலும் கனிவான பார்வையும் மந்தபால சாரங்கத்தைக் கிறக்கம் கொள்ள வைத்தன. அந்தப் பெண் பறவையிடம் மந்தபால சாரங்கத்திற்குத் தீராக் காதல் தோன்றியது.

மெல்ல மெல்ல அவற்றினிடையே காதல் வளர்ந்தது. அவை இல்லற வாழ்வை மேற்கொண்டு ஒரே கூட்டில் இணைபிரியாமல் வசிக்கலாயின. ஜரிதா நான்கு முட்டைகளை இட்டது. அவற்றை அடைகாத்துக் குஞ்சு பொரிப்பதற்குள் அந்த இனிய இல்லற வாழ்வில் ஒரு விபரீதம்! லபிதா என்ற இன்னொரு சாரங்கி மந்தபால சாரங்கனை வட்டமிட்டது. அதனுடைய ஆண்மை நிறைந்த பேரழகு லபிதாவை மயக்கிக் கொள்ளை கொண்டது. லபிதா பறந்து சென்று அதன் அருகே அமர்ந்து எதையோ தேடுவதுபோல் பாவனை செய்தது.

‘‘யார் நீ? என்ன தேடுகிறாய்?’’ விசாரித்தது மந்தபாலம்.

‘‘உங்கள் அலகின் வளைவிலும் சிறகுகளின் அடர்த்தியிலும் என்னையறியாமல் என் உள்ளத்தைத் தொலைத்துவிட்டேன். அது இங்கே எங்கேயாவது விழுந்து கிடக்கிறதா என்று தேடுகிறேன்!’’

லபிதாவின் மயக்கும் கவிதை மொழி மந்தபாலத்தைக் காந்தம் போல் இழுத்தது. தன்னை வட்டமிட்ட லபிதாவின் அழகில் லயித்த மந்தபாலம் தேடிவந்த வாய்ப்பை நழுவவிட விரும்பவில்லை. ஏற்கெனவே மணமாகி ஒரு மனைவியும் தனக்கு உண்டு என்பதையோ மனைவி இப்போது நான்கு முட்டைகள் இட்டு அடைகாத்து வருகிறது என்பதையோ நான்கு ஆண் குஞ்சுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன என்பதையோ மந்தபாலம் எண்ணிப் பார்க்கவில்லை. காமம் அதன் கண்ணை மறைத்தது.

மனைவி ஜரிதாவிடம் ஏதொன்றும் கூறாமல் ஒருநாள் லபிதாவோடு இணைந்து, விண்ணில் பறந்து, தனியே இல்வாழ்வைத் தொடங்கின.

‘‘அப்பா எங்கே?’’ என்று கேட்டன அப்போது தான் உருப்பெறத் தொடங்கியிருந்த நான்கு ஆண் குஞ்சுகள்.

‘‘உங்கள் அப்பா மனிதர்களைப் பார்த்துக் கெட்ட பழக்கத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார். இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டு விட்டார். போகட்டும், நம்மை மறந்தவர்களை நாம் நினைப்பது நம் சுயமரியாதைக்கு அழகல்ல. உங்கள் நால்வருக்கும் நானே இனித் தாயாகவும் தந்தையாகவும் இருப்பேன். வெளியே சென்று உங்களுக்குத் தேவையான உணவை நானே சம்பாதித்து வருவேன். நான் உணவு பெறுவதற்காகக் கூட்டை விட்டு வெளியே செல்லும்போது மட்டும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!’’ என்றது, ஜரிதா.

ஆண் குஞ்சுகள் மனம் தேறி தாய்ப்பறவை சொன்னதை ஏற்றுக் கொண்டன.

ஒருநாள் திடீரெனக் காண்டவ வனத்தில் தீப்பிடித்துக் கொண்டது. இரண்டாம் மனைவி லபிதாவுடன் சுற்றிக் கொண்டிருந்த மந்தபாலம், நெருப்பைப் பார்த்துத் திகைத்தது. சரிவரச் சிறகு கூட முளைக்காத தன் நான்கு ஆண் குஞ்சுகளும் என்ன பாடுபடுமோ என்று அதன் தந்தை மனத்தில் கவலை எழுந்தது. ‘‘ஏ அக்கினியே! என் நான்கு மகன்களையும் நீ எரிக்காமல் காப்பாற்றுவாயாக!’’ என்று அது மனமாரப் பிரார்த்தனை செய்தது. அதன்முன் அக்கினி பகவான் தோன்றி, ‘‘மந்தபாலமே! உன் முற்பிறப்பில் உன் உடலையே எனக்கு ஆகுதியாக்கினாய். அந்த உன் தியாகத்தை மெச்சி உன் இப்பிறப்பில் உனது ஆண் குஞ்சுகளை நான் ஒன்றும் செய்யமாட்டேன்’’ என வாக்குக் கொடுத்து மறைந்தார்.

இதைக் கண்ட இரண்டாம் மனைவி லபிதா, ‘‘இன்னும் உனக்கு ஜரிதாவிடம் காதல் இருக்கிறது’’ என்று ஊடல்கொண்டு இன்னொரு மரக்கிளையில் தனியே போய் உட்கார்ந்து கொண்டது.

அக்கினியின் வாக்குறுதி பற்றி ஏதும் அறியாத தாய்ப்பறவை ஜரிதாவைக் கலக்கம் கவ்வியது. அக்கினியிடமிருந்து இறகு சரிவர முளைக்காத பிள்ளைகளை எப்படிக் காப்பாற்றுவது?

குஞ்சுகள் பயத்தில் நடுநடுங்கின. ‘‘அம்மா! நீங்கள் தப்பித்துப் போங்கள். எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீங்கள் இருந்தால் வம்சம் விருத்தியாக வாய்ப்புண்டு. நாங்கள் நெருப்பிலேயே மடிந்தாலும் பரவாயில்லை!’’ என்றன.

தாய்ப்பறவை ஜரிதா வேறு வழி தெரியாமல் அழுதுகொண்டே விண்ணில் சுற்றிக் கொண்டிருந்தது.

மூத்த ஆண் குஞ்சான ஜரிதாரி, ‘‘வரப்போகும் கஷ்டத்தை முன்கூட்டியே உணர்ந்து கடவுளைப் பிரார்த்திப்பவனே புத்திசாலி. அவன் கடவுள் அருளால் கஷ்டத்தைக் கடந்துவிடுவான்!” என்றது. சாரி, ஸ்தம்பமித்திரன், துரோணன் ஆகிய பிற மூன்று குஞ்சுகளும் அதை ஆமோதித்தன. அண்ணனுடன் சேர்ந்து பிரார்த்திக்கத் தொடங்கின. ‘‘அக்கினி பகவானே! நீயே சூரியன். நீயே மழை தருபவன். உன்னாலேயே உயிர்கள் உண்ட உணவு ஜீரணமாகிறது. நாங்கள் இளம் குழந்தைகள். எங்களிடம் இரக்கம் காட்டு. எங்களை அழிக்காதே!’’

இளம் குழந்தைகளின் மழலைப் பிரார்த்தனை அக்கினி பகவானைக் குளிரச் செய்தது. ‘‘உங்கள் தந்தைக்கு வரம் கொடுத்திருக்கிறேன். உங்களை அழிக்கமாட்டேன். உங்களுக்கென்று என்ன வரம் வேண்டும்?’’ என்று வெகு பிரியமாகக் கேட்டார்.

‘‘எங்கள் தந்தையை எங்களிடமிருந்து பிரித்த லபிதாவை நாங்கள் வெறுக்கிறோம். எங்கள் தந்தை எங்களுக்கு வேண்டும்!’’ என்றன அவை.

அக்கினி பகவான் சிரித்துக் கொண்டே ‘‘அப்படியே நடக்கும்’’ என்று சொல்லி படபடத்துப் பாய்ந்தார். அதோடு, தனியே மரக்கிளையில் அமர்ந்திருந்த லபிதாவைப் போகிற போக்கில் அள்ளி விழுங்கிச் சென்றுவிட்டார்!

தாய்ப்பறவை ஜரிதா அக்கினி அடங்கியதும் பாய்ந்தோடி வந்தது. சேதமில்லாமல் தன் குஞ்சுகள் இருப்பதைப் பார்த்ததும் அவற்றை அரவணைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் அரற்றியது.

அப்போது மந்தபாலமும் அங்கே வந்துசேர்ந்தது. மனைவி, பிள்ளைகளைக் கண்டு அழுதது. ஜரிதா கணவனை வெறுப்புடன் நோக்க, பிள்ளைகளோ பாசத்தோடு தங்கள் தந்தையிடம் சென்று அமர்ந்தன.

‘‘இந்தப் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் தான் அக்கினி பகவானிடம் வரம் கேட்டேன். அத்தோடு அந்த சாகசக்காரி லபிதாவை இப்போது முற்றிலுமாகத் தலைமுழுகி விட்டேன்! என்னை மன்னிக்கக் கூடாதா?’’ என்று உருகியது மந்தபாலம்.

சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தது ஜரிதா. குழந்தைகளுக்குத் தந்தை முக்கியமல்லவா; திருந்தி மன்னிப்புக் கேட்பவரை ஏற்பதுதான் தர்மமல்லவா என்று சிந்தித்தது. மெல்லப் பறந்துபோய்த் தன் கணவன் அருகில் அது அமர்ந்தபோது குழந்தைகள் அப்போதுதான் முளைக்கத் தொடங்கிய தங்கள் சின்னஞ்சிறு சிறகுகளை அசைத்து ஆர்ப்பரித்தன. ஜரிதாவின் முகத்தில் வெட்கம் படர்ந்த அழகை ரசித்தது மந்தபாலம்.

மேலிருந்து இந்தக் காட்சியைப் பார்த்த அக்கினி பகவான் சிரித்துக் கொண்டார். முதல் மனைவியின் வாழ்வைக் கெடுக்கும் இரண்டாம் மனைவியை வாழ்க்கை நெருப்பு எரிக்கக் கடவது என்று அவர் விதி வகுத்தார்.

காலப்போக்கில் மந்தபாலம் மூப்படைந்து தளர்ந்து உயிர் விட்டபோது அதன் ஆன்மா சொர்க்கம் நோக்கிச் சென்றது. என்ன ஆச்சரியம்! மந்தபால ஆன்மாவை வரவேற்க சொர்க்கத்தின் கதவுகள் தயாராய்த் திறந்திருந்தன. இரு தேவிகள் அந்த ஆன்மாவை வரவேற்கப் பூரண கும்பத்தோடு காத்திருந்தார்கள். இயல்பிலேயே வழங்கப்பட்ட படைப்பாற்றலுக்கு நியாயம் செய்த மந்தபால ஆன்மா அப்படித்தான் சொர்க்கத்தைச் சென்றடைந்தது.

(கிளையில் அமர்ந்து குடும்பம் நடத்திய சாரங்கப் பறவை பற்றிய இக்கதை, மகாபாரதத்தில் வரும் ஒரு கிளைக்கதை!)

  • 319

இது உண்மைதானேநண்பர்களே....

  • 310
  • 309
  • 309

உங்கள் காலடி படும் இடங்கள் யாவிலும் பூக்கள் பூக்க வாழ்ந்திடுங்கள்.

வேறேதும் வேண்டுதல் வேண்டாம்.

வேண்டியன வந்துசேரும்.

நல்வாழ்த்துகள்.

  • 309
·
Added a post

ஒரு காட்டில் காலபைரவி என்ற மந்திரக்கிழவி இருந்தாள். அவள் மிகவும் கொடூரமானவள். அக்காட்டு வழியே வரும் மனிதர்களைப் பிடித்து அவர்களைக் கொன்று களிப்பவள். அவளது இருப்பிடம் ஒரு குகை. அதற்குள்தான் கொன்ற மனிதர்களின் எலும்புக் கூடுகளை நிறுத்தி வைத்து, அவற்றின் மத்தியில் தான் படுத்துத் தூங்குவாள்.

ஓராண்டிற்கு முன் அந்தக் காட்டிலிருந்து கொஞ்ச தூரத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பாலய்யன் என்ற இளைஞன் அந்தக் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தான். காலபைரவி அவனைப் பிடித்துக் கொன்று, அவனது எலும்புக் கூட்டைத் தன் குகைக்குள் வைத்து விட்டாள். இதை அறிந்தபின் அக்கிராமத்தவர்கள் யாருமே அக்காட்டு வழியே செல்லவில்லை.

பாலய்யனுக்கு வீரையன் என்ற அண்ணன் இருந்தான். அவனை 'அஞ்சா நெஞ்சன்' என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். அவன் காட்டிலுள்ள காலபைரவியை ஒழித்து விடுவது என்ற தீர்மானத்தோடு அங்கே சென்றான். அப்போது அவள் விழுதுகளுள்ள ஆலமரத்தடியே உட்கார்ந்து கொண்டு யாராவது ஒரு மனிதன் அவ்வழியே வருவானா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது வீரையன் வருவதைக் கண்டதும் அவள் ஒரேயடியாக மகிழ்ந்து போனாள்.

வீரையன் காலபைரவியின் பக்கம் போய் நின்று, "என்ன பாட்டி! நலம்தானா?" என்று கேட்டான். மந்திரக்கிழவி அவனை விழுங்கி விடுபவள் போலப் பார்த்து, "நலமாக இருப்பதால்தானே இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு காற்று வாங்கிக் கொண்டிருக்கிறேன்? பேரப் பயலே! நீ எங்கே போய்க்கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டாள்.

அவனும், "பாட்டி! என் பெயர் வீரையன். என்னை ஊரார் 'அஞ்சா நெஞ்சன்' என்று கூப்பிடுகிறார்கள். நான் யாருக்கும் எதற்கும் பயப்படாமல் இருப்பதே இப்பெயர் வரக் காரணம். ஊரில் பல ஆசிரியர்களிடம் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன். ஆனால், பயம் என்றால் என்ன என்று தான் தெரியவில்லை.

யாராவது என்னை பயமுறுத்தி அது என்ன என்று அறிய வைக்கிறார்களா என்று தான் அலைந்து கொண்டிருக்கிறேன். இதுவரை என்னை பயமுறுத்துபவன் யாருமே தென்படவில்லை" என்றான்.

காலபைரவி பயங்கரமாகச் சிரிக்கவே, அவனோ, "பாட்டி! நீ என்னை பயமுறுத்தி மேலுலகத்திற்கு அனுப்பப் போகிறாய்? நான் என்னவோ இவ்வளவு நாட்களாக மந்திரக்கிழவி என்றால் பார்க்கவே பயங்கரமாக இருப்பாள் என்றே எண்ணியிருந்தேன். நீயோ மிக அழகாக இருக்கிறாய்" என்றான்.

அதைக் கேட்டு காலபைரவி உச்சி குளிர்ந்து போய், "நீ சொல்வது உண்மையா?" என்று கேட்டாள். வீரையனும், "நான் சொல்வதை நம்ப நீயே இந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்" என்று கூறித் தன் பையிலிருந்து ஒரு கண்ணாடியை எடுத்துக் கொடுத்தான். அவளும் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துவிட்டு, தான் பேரழகியே என்று எண்ணி மகிழ்ந்தாள்.

அப்போது வீரையன், "இது கிடக்கட்டும். முதலில் என்னை பயமுறுத்த முடியுமா பார்" என்று கூறினான். காலபைரவியும் "பொடிப்பயலே! என்னுடன் வா" என்று கூறி அவன்கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் குகைக்குள் சென்றாள். வீரையன் அங்கு பல எலும்புக் கூடுகளைப் பார்த்தான். அவற்றில் ஒன்றுதான் தன் தம்பியுடையது என்று நினைத்ததும் அவன் கண்களில் நீர் எட்டிப்பார்த்தது (நீர்ளதும்பியது).

அப்போது காலபைரவி, "பேரப் பயலே! இவர்களை நான் கத்தியால் குத்தியோ அல்லது விஷம் கொடுத்தோ கொல்லவில்லை. இவர்கள் என் பயங்கர உருவத்தைக் கண்டதுமே பயத்தால் இதயத்துடிப்பு நின்று இறந்து போனவர்கள். இதைத் தெரிந்து கொள்" என்றாள்.

அது கேட்டு வீரையன், "இவர்களெல்லாம் தொடை நடுங்கிகள் போல் தெரிகிறது. அதனால் தான் பயந்து உயிர் விட்டிருக்கிறார்கள். நான் அப்படிப்பட்டவனல்ல. என் இதயம் இரும்பு போன்றது" என்றான்.

காலபைரவியும், "பொடிப்பயலே! அவசரப்பட்டு உளறாதே" எனக் கூறி ஏதோ மந்திரத்தை உச்சரித்தாள். மறு நிமிடமே அவளது தலை புலியின் தலையாக மாறியது. உடல் ஒரு ராட்சசக் கழுகினுடையது போல ஆகியது. அது தன் கூர்மையான நகங்களால் வீரையனைப் பற்றிக் கொண்டு வானில் பறக்கலாயிற்று. சற்று நேரம் வரை அவ்வாறு பறந்து விட்டு கீழே இறங்கி ஏதோ மந்திரத்தை உச்சரிக்கவே, அது பழைய காலபைரவியாக ஆகிவிட்டது. வீரையனோ சற்றும் மனங்கலங்காமல் முன்போலவே இருந்தான்.

அதைக் கண்ட காலபைரவி ஆச்சரியப்பட்டு, "பயலே! இன்னுமா நீ உயிருடன் இருக்கிறாய்? என் பயங்கர உருவைக் கண்டு நீ இறந்து போயிருப்பாய் என்றல்லவா நினைத்தேன்" என்றாள். வீரையனும், "உன் இந்தக் கோமாளி வேஷத்திற்கெல்லாம் நான் பயந்து விடுவேனா? ஏதோ சற்று நேரம் வானவீதியில் என்னுடன் உலா வந்தாய். அவ்வளவுதான்" என்று சிரித்துக் கொண்டே கூறினான். அது கேட்டு காலபைரவி கோபமும் ஆத்திரமும் கொண்டு, இன்னொரு மந்திரத்தை உச்சரித்தாள்.

அப்போது வீரையன், "பாட்டி! உனக்கு நிறைய மந்திரங்கள் தெரியும் போல் இருக்கிறதே. இம்முறை என்னை பயமுறுத்தி உன்னால் என்னை எலும்புக் கூடாக ஆக்க முடியாவிட்டால், எனக்கு நீ ஒரு மந்திரத்தைக் கற்றுத் தர வேண்டும். தெரிந்ததா?" என்றான். அவளும் "நீ மந்திரத்தைக் கற்றுக்கொள்ள இந்தத் தடவை நீ சாகாமல் இருக்கப் போகிறாய்? நீ உயிருடன் இருந்து விட்டால் கற்றுக் கொடுக்கிறேன்" என்று கேலியாகச் சிரித்தாள்.

இந்த முறை காலபைரவி ஒரு மனித எலும்புக் கூடாக மாறினாள். அதிலிருந்து பல விஷப்பாம்புகள் சீறிக்கொண்டு வெளியே வந்தன. அது கண்டு வீரையன் பலமாகச் சிரித்தான். அவன் இறக்காதது கண்டு காலபைரவி முன் போலா (முன்போல) ஆகி, "சரி, சொன்னபடி ஒரு மந்திரத்தை உனக்குக் கற்பிக்கிறேன்" என்றாள். வீரையனும், "பூ...! எதையும் தேளாக மாற்றும் இந்த உபயோகமற்ற மந்திரமா?" என்று கேட்டான். காலபைரவியும், "ஓகோ! உனக்கு சக்தி வாய்ந்த மந்திரத்தைக் கற்றுக்கொடுக்க நான் என்ன ஏமாந்த சோணகிரியா?" என்று கேட்டாள்.

வீரையனும் "நீ ஏமாற மாட்டாய் என்பது தெரியும். நீ இதையே கற்றுக் கொடு" என்றான். அவளும் அந்த மந்திரத்தைக் கற்றுக் கொடுத்து, "நீ எந்த ஒரு பொருளையோ அல்லது ஒரு மனிதனையோ பார்த்து இந்த மந்திரத்தை உச்சரித்தால் அதுவோ அல்லது அவனோ தேளாகி விடுவான்" என்றாள். வீரையனும் 'அப்படியா' என ஆச்சரியப்படுபவன் போல காலபைரவியைப் பார்த்தவாறே அந்த மந்திரத்தை உச்சரித்தான்.

மறு விநாடியே அவள் தேளாகி விட்டாள். வீரையன் சற்றும் தாமதிக்காமல் அந்தத் தேளைத் தன் காலால் மிதித்து நசுக்கிக் கொன்று விட்டான். காலபைரவி மாற்று மந்திரம் உச்சரிக்க நேரமில்லாமல் அவன் செயல்பட்டதால், அந்த மந்திரக்கிழவி துடிதுடித்து இறந்து போனாள்.

கிழவி இறந்ததும் அவளது குகையிலிருந்த மனித எலும்புக் கூடுகளெல்லாம் உயிருள்ள மனிதர்களாகின. அவர்கள் யாவரும் குகையிலிருந்து வெளியே வந்தார்கள். அவர்களில் வீரையனின் தம்பி பாலய்யனும் இருந்தான். வீரையன் அவனைக்கட்டித் தழுவியவாறே எல்லோரிடமும், "இனி உங்களுக்கு பயமே இல்லை. காலபைரவி இறந்து கீழே கிடப்பதைப் பார்த்து மகிழுங்கள்" என்றான்.

அவர்கள் ஆச்சரியத்துடன் மந்திரக்கிழவியின் உடலைப் பார்க்கவே, வீரையன் நடந்ததையெல்லாம் விவரித்துக் கூறினான். அப்போது பாலய்யன் எல்லோரிடமும், "இவன் என் அண்ணன் அஞ்சா நெஞ்சன் வீரையன்" எனவே யாவரும் "அஞ்சா நெஞ்சன் நீடுழி வாழ்க" என வாழ்த்தி வணங்கி விட்டுச் சென்றனர்.

  • 319
  • 310
·
Added a post

இவரது வரலாறு பக்தியின் உச்சத்தை விவரிப்பதாகும்.

​1. பிறப்பு மற்றும் இளமை:

சென்னைக்கு அருகில் இருக்கும் அழகிய திருநின்றவூர் என்னும் ஊரில் ஒரு அந்தணர் குலத்தில் பிறந்தார் பூசலார். இவர் சிறு வயது முதலே சிவபெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டவர்.

​2. கோயில் கட்டும் ஆசை:

சிவபெருமானுக்கு ஒரு அழகான கற்கோயில் கட்ட வேண்டும் என்பது பூசலாரின் நீண்ட கால ஆசையாக இருந்தது. ஆனால், அவரிடம் அதற்கான வசதியோ அல்லது பணமோ இல்லை. செல்வந்தர்களிடம் உதவி கேட்டும் அவருக்குப் பலன் கிடைக்கவில்லை.

​3. மனக்கோயில் (மனதிற்குள் கோயில்):

பணம் இல்லையென்றால் என்ன? என் பக்தியால் சிவனுக்கு கோயில் கட்டுவேன் என்று முடிவு செய்தார். தன் மனதையே கருவறையாக்கி, மனதிற்குள்ளேயே கோயில் கட்டும் பணியைத் தொடங்கினார்.

​ஆகம விதிகளின்படி ஒவ்வொரு கல்லாக மனக்கண்ணால் செதுக்கினார்.

​அஸ்திவாரம் இடுவது முதல், கோபுரம் கட்டுவது வரை அனைத்துப் பணிகளையும் தியானத்திலேயே ஒவ்வொன்றாகச் செய்து முடித்தார்.

​கோயிலுக்குக் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) செய்ய ஒரு தேதியையும் குறித்துக்கொண்டார்.

​4. காஞ்சி மன்னனின் சிவபக்தி:

அதே காலகட்டத்தில், காஞ்சியை ஆண்ட ராஜசிம்ம பல்லவன் என்னும் அரசன், மிகப்பிரம்மாண்டமான கயிலாயநாதர் கோயிலை (Kanchi Kailasanathar Temple) கட்டி முடித்திருந்தான். அவனும் தனது கோயிலுக்குக் குடமுழுக்கு செய்ய அதே தேதியைத் தேர்ந்தெடுத்தான்.

​5. சிவபெருமானின் திருவிளையாடல்:

குடமுழுக்கிற்கு முந்தைய நாள் இரவு, சிவபெருமான் அரசனின் கனவில் தோன்றினார். அவர் மன்னனிடம், "நாளை திருநின்றவூரில் பூசலார் கட்டிய கோயிலுக்கு நான் செல்ல வேண்டியுள்ளது. எனவே உன் கோயில் குடமுழுக்கை வேறொரு தேதிக்கு மாற்றிக்கொள்" என்று கூறினார்.

​மன்னன் திடுக்கிட்டு விழித்தான். "தன்னை விடப் பெரிய கோயிலை திருநின்றவூரில் யார் கட்டியது?" என்று வியந்து, உடனே தனது படைகளுடன் திருநின்றவூர் சென்றான்.

​6. மன்னனின் வியப்பு:

திருநின்றவூர் வந்த மன்னன், ஊர் மக்களிடம் பூசலார் கட்டிய கோயில் எங்கே என்று கேட்டான். ஆனால் அங்கிருந்தவர்களுக்கு அப்படி ஒரு கோயில் இருப்பதே தெரியவில்லை. இறுதியாக ஒரு ஏரிக்கரையின் ஓரத்தில் கண் மூடி அமர்ந்திருந்த பூசலாரைக் கண்டுபிடித்து அவரிடம் கேட்டபோது, பூசலார் கண்கலங்கி,

"அரசே! நான் என் மனதிற்குள்ளே தான் அந்தக் கோயிலைக் கட்டினேன்" என்று உண்மையைச் சொன்னார்.

​பூசலாரின் ஆழ்ந்த பக்தியைக் கண்டு மன்னன் மெய்சிலிர்த்துப் போனான். மனக்கோயிலை நேரில் காண முடியாது என்றாலும், இறைவனே இறங்கி வரும் அளவுக்குப் பெரிய கோயில் அது என்பதை உணர்ந்து பூசலாரை வணங்கினான்.

​​அன்பே சிவம்: இறைவன் எதிர்பார்ப்பது பொருளுதவியோ, தங்கமோ அல்ல; உண்மையான அன்பை மட்டுமே.

​நாயன்மார் அந்தஸ்து: பூசலார் நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.

​திருக்கோயில்: இன்றும் திருநின்றவூரில் பூசலார் நாயனாருக்காகவும், அவர் மனதிற்குள் கட்டிய கோயிலை நினைவுகூரும் வகையிலும் இருதயாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

​பக்தியின் வலிமைக்கு பூசலாரின் இந்த வரலாறு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

  • 320
  • 312
·
Added a post

ஒரு உல்லாச கப்பல் கடலில் சென்ற போது அடித்த புயலினால் கப்பல் உடைந்தது. அதில் இருந்த இரு ஆண்கள் மட்டுமே தப்பி நீந்தி வந்து அருகில் உள்ள ஒரு சிறிய தீவை சென்று அடைந்தனர். அந்த இருவரும் அந்தஸ்த்தில் வேறுபட்டவர்கள். ஒரே நிறுவனத்தில் ஒரே இடத்தில் பணிபுரியும் சூழ்நிலையால் நண்பர்கள் ஆனவர்கள்.

அந்த தீவில் வெறும் புற்களும், புதர்களும் மட்டுமே இருந்தது. சாப்பிடவோ ஒதுங்கவோ நிழலுக்கு மரம் கூட இல்லாதிருந்தது.. அவர்களுக்கு என்ன செய்வது என்பதே தெரிய வில்லை. முடிவில் இருவரும் கடவுளை வேண்டிக் கொள்வது என்று முடிவு செய்தனர்.

அப்போது யாருடைய பிரார்த்தனைக்கு அதிக சக்தி இருக்கிறது பார்ப்போம் என்றும் முடிவு செய்தனர். அதன்படி அந்த தீவின் இருகரைகளிலும் தனி தனியாக தங்குவதற்கு உடன்பட்டனர். முதலில் இருவரும் உணவுக்காக பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பிரார்த்தனையின்படி வசதியானவன் இருந்த பகுதிக்கு சில பழங்கள் மிதந்து வந்தன. அதை அவன் சாப்பிட்டான். ஆனால் ஏழையோ சாப்பிட ஏதும் கிடைக்காமல் பசியோடு இருந்தான்.

பசியாறிய மனிதனுக்கோ போரடித்தது, தனக்கு அருகில் மனைவியாக ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்குமே என்று வேண்டினான். ஆச்சர்யமாக அவன் வேண்டுதல்படியே அந்த தீவுக்கு அருகில் வந்த சிறிய கப்பல் உடைந்து அதில் இருந்த ஒரு அழகிய இளம் பெண் மட்டும் உயிர் தப்பி ஒரு உடைந்த பலகை உதவியுடன் அந்த தீவிற்கு வந்து சேர்ந்தாள். அவளைப் பார்த்ததும் அவள் அழகில் சொக்கி போய் அவளையே தெய்வ சாட்சியாக திருமணம் செய்து கொண்டான். தீவின் மற்றொரு பக்கம் இருந்தவன் இன்னும் பசியால் தனிமையில் இருந்தான்.

முதல் மனிதன் செய்த வேண்டுதல் படி நல்ல உணவுகள், துணிகள், எல்லாம் அவன் இருந்த பகுதிக்கு மட்டுமே மந்திரம் செய்தது போல கரை ஒதுங்கின. ஆனால் அவன் நண்பனுக்கோ ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் உருக்குலைந்து போனான். ஆனால், புது ஜோடிகளோ வந்த பழங்கள் உணவுகளுடன் இருவரும் ஒரு வாரகாலம் உல்லாசமாக களித்தனர். இப்படியாக ஒரு வாரம் கழிந்தது.....

இறுதியாக முதல் மனிதன் தன் புது மனைவியுடன் தன் சொந்த இடத்துக்கு போவதற்கு வேண்டி ஒரு படகுக்காக வேண்டினான். அதுவும் அதிசயம் போல அடுத்த நாளே கரை ஒதுங்கியது.

முதல் மனிதன் தனது பிரார்த்தனையின் சக்தி கண்டு மிகுந்த மகிழ்ச்சியில், துரதிர்ஷ்டம் மிக்க தன் நண்பனை அழைக்காமல் தன் புது மனைவியுடன் அதில் ஏறி அந்த தீவை விட்டு செல்ல ஆயுத்தமானான். இது ஏதும் அறியாத அந்த இன்னுமொருவன் இன்னும் பசியாறாமல் வேதனையில் வாடினான்...

எல்லாம் கிடைத்த நண்பன் நினைத்தான்,

தன் நண்பன் ஒன்றுக்கும் உதவாதவன். கடவுளின் ஆசிர்வாதம் கூட அவனுக்கு கிடைக்க வில்லை. ஒரு சிறு பிரார்த்தனையை கூட கடவுள் நிறைவேற்றி வைக்கவில்லை. ஏற்கனவே ஏழை வேறு.. அதனால், அவனை அழைத்து செல்ல இவனுக்கு இஷ்டமில்லை என்றான் சுயநலம் பிடித்த அந்த நண்பன்..

படிக்கும் நமெக்கெல்லாம் கடவுள் மேல் கோபம் வருகிறது அல்லவா... அப்போது அந்த படகு கிளம்பத் தொடங்கியதும் வானத்தில் இருந்து ஒரு குரல் ஒலிக்க தொடங்கியது... "ஏன் உன் நண்பனை தனியாக இந்த தீவில் விட்டு செல்கிறாய்..?" என்று அந்த குரல் கேட்டது...

அதற்கு அந்த மனிதன் சொன்னான் "நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். அவர் என்னை ஆசிர்வாதித்து இது எல்லாம் எனக்கு மட்டும் கிடைக்க செய்தார். என் நண்பனின் பிரார்த்தனை ஒன்றுக்கும் கூட கடவுள் செவி சாய்க்கவில்லை. அவன் ஒன்று கூட பெற தகுதி இல்லாதவன்" என்று சொன்னான்.

அந்த குரல் அவனிடம் மறுபடியும் பேசியது "மகனே நீ நினைப்பது தவறு. நான் தான் கடவுள்... உன்னை உயிராக நேசிக்கும் உன் நண்பன் பிரார்த்தனையில் ஒன்றே ஒன்று மட்டும் கேட்டான். நான் அந்த ஒரு பிரார்த்தனையை நிறைவேற்றி வைத்தேன். அது மட்டும் அவன் கேட்கவில்லை என்றால் உனக்கு எந்த வித ஆசிர்வாதமும் பலனும் கிடைத்திருக்காது".

"அவன் என்ன கேட்டான் பிரார்த்தனையில்? அவனுக்கு நான் ஏதாவது கடமை பட்டு இருக்கிறேனா?" என்றான்..?

அந்த குரல் மேலும், "உன் நண்பன் பிரார்த்தனையில் 'என் நண்பன் மிகவும் வசதியானவன், நல்லவன். வாழ்க்கையில் சுகம் மட்டுமே அனுபவித்து பழகியவன், அவன் கஷ்டமே அறியாதவன். ஆகவே, என் பிரார்த்தனையெல்லாம் அவன் வேண்டுவதை மட்டும் நிறைவேற்றுங்கள்...

அது போதும், நான் ஏற்கனவே ஏழை தான், இதுமாதிரி சூழ்நிலைகள் எனக்கு புதியதல்ல.... ஆகவே எனக்கென்று கேட்க எதுவும் இல்லை என்றுதான் வேண்டினான்".

அதை கேட்ட அந்த சுயநலம் பிடித்த நண்பன் வெட்கி, மனந் திருந்தி தன்னலமற்ற தன் நண்பனை தேடி ஓடினான்.

கதையின் நீதி:

நம்முடைய பிரார்த்தனைகளால் மட்டுமே நமக்கு எல்லாம் கிடைத்து விடுவதில்லை. அதற்கு மற்றவர்களின் வேண்டுதல்களும் உதவி புரிகின்றன என்பதை மறந்து விட வேண்டாம். நம்மை நேசிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஓதுக்கி வைத்து விட வேண்டாம், சந்தேகப்பட வேண்டாம். உறவையும் நட்பையும் மதிக்க கற்று கொள்ளுங்கள்..

  • 324
  • 316
·
Added a post

இட்லி வெந்திருக்குன்னு சொன்னா Optimism...

இட்லி வேகலைன்னு சொன்னா Pessimism...

இட்லியெல்லாம் சுட முடியாது போடான்னு பொண்டாட்டி சொன்னா Feminism...

இட்லிய 'சுட்டது' யாருன்னு பரபரப்பு கிளப்பின்னா Journalism...

இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகு தான் நமக்குன்னு சொன்னா Imperialism...

இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் Postmodernism...

இட்லி மேல made in Indiaன்னு சீல வச்சா Nationalism...

இட்லி உனக்கு கிடையாதுன்னா Facism...

இட்லி ஒரு ரூபான்னு அம்மா மெஸ்ல எல்லோருக்கும் கொடுக்கிறது Socialism.

இட்லி என்னடா சிறுத்து போயி கிடக்குன்னு சொன்னா Racism.

இட்லி காசு கொடுத்தாத்தான் கிடைக்கும்னு தெரிஞ்சிக்கிறது Realism...

இதுக்கு மேல இட்லி கிடையாதுன்னு சொன்னா Capitalism.

இட்லி மெஷீன்லே பண்ணினா Modernism

இட்லி Fork and Spoon வெச்சி சாப்பிட்டா Elitism

இட்லி North India-la நல்ல இருக்காதோன்னு நினைச்சா Skepticism

இட்லி நல்லா இல்லைன்னு சொன்னா Criticism

இட்லி மட்டும் தான் நல்ல காலை உணவுன்னு ஒத்தை காலில் நின்றால் Fanaticism

இட்லி நன்றாக செமிச்சால் Metabolism

இட்லி பிடிக்காதவனை எனக்கு பிடிக்காதுன்னு சொன்ன Chauvinism

last one

இட்லியே வேணான்னு எந்திரிச்சு போயிட்டா escapism!!!!!

ஒரு இட்லிக்கு இவ்வளவு விளக்கம் தேவையா....என்று என்மேல் கடுப்பாகி... என்னை அடிக்க நீங்க நினைத்தால் அது Terrorism

  • 323
  • 314
  • 316