- · 1 friends
-
1 followers
நயாகரா வீழ்ச்சி
Canada Day நயாகரா வீழ்ச்சி
கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கனடியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடியர்களில் ஐந்தில் ஒருவர் (20%) கடந்த ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் ஒரு கட்டணத்தை செலுத்தாமல் தவறவிட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
நானோஸ் ரிசர்ச் நிறுவனம் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில், 55 வயதுக்கு குறைவானவர்கள், உணவுக்காக கார் கடன், கிரெடிட் கார்டு அல்லது மின்சார கட்டணங்களை நிலுவையில் வைக்கும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மாதாந்த செலவுகள் தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
18 முதல் 34 வயதுடையோரில் 18.1% பேர் சில சமயங்களில் அல்லது அடிக்கடி கட்டணம் செலுத்தாமல் விட்டதாக கூறியுள்ளனர். 35 முதல் 54 வயதினரிலும் இதேபோல 17.9% பேர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அணிக்கு ஆதரவாக தொப்பியணிந்த விவகாரத்தில் இளவரசர் ஹாரி கனடாவிடம் மன்னிப்பு கோரி உள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஹாலிவுட் நடிகை மேகனை திருமணம் செய்தபிறகு அரச குடும்பத்தை விட்டு வெளியேறினார். அதன்பின், தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே, கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பேஸ்பால் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது.
இந்த தொடரின் 4-வது போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்ஸ் அணியும், கனடாவின் டொரண்டோ ப்ளூ ஜேஸ் அணியும் மோதின. இதனை பார்ப்பதற்காக ஹாரி தனது மனைவி மேகனுடன் சென்றிருந்தார். அப்போது அவர்கள் இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்சின் தொப்பியை அணிந்திருந்தனர்.
இதற்கு காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள கனடாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஏனெனில் காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக இங்கிலாந்து மன்னர் சார்லஸ் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அவரது மகனான இளவரசர் ஹாரி அமெரிக்க அணிக்கு ஆதரவாக தொப்பியணிந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் அணியின் தொப்பி அணிந்ததற்காக இளவரசர் ஹாரி கனடாவிடம் மன்னிப்பு கோரி உள்ளார்.
ஒருவர் ஒரு ஊருக்கு வந்து தங்கியிருந்தார். மக்கள் கூட்டங்கூட்டமாக வந்திருந்து, அவரை வணங்கி வழிபட்டு அவரின் வழிகாட்டுதலால், வார்த்தைகளால் நிறைவடைந்தனர். ஆனால் ஒரு மனிதனுக்கு மட்டும் அந்தத் துறவியின் புகழ் வெறுப்பைத்தந்தது. அவரை மட்டம் தட்டி ஏளனப்படுத்த வேண்டும் என எண்ணியபடி தன்னுடைய உள்ளங்கையில் ஒரு பட்டாம்பூச்சியை வைத்து ஒளித்தபடி, தன் கைகளை முதுகுக்குப்பின்புறம் மறைத்துக்கொண்டு துறவியின் முன் சென்று நின்றான்
"ஐயா, உம்மை ஞானி என்கிறார்கள், என் கையில் உள்ள பூச்சி உயிருடன் இருக்கிறதா அல்லது செத்துவிட்டதா என்பதை கண்டறிந்து சொல்லுங்கள் பார்க்கலாம்" என்று அவரிடம் சவால் விட்டான். பூச்சி செத்துவிட்டதாக சொன்னால், அதை உயிருடன் காண்பிக்கவும், பூச்சி உயிருடன் உள்ளதாக சொன்னால், அதை உள்ளங்கையிலேயே நசுக்கி சாகடிக்கவும் அந்த மனிதன் எண்ணி உள்ளதை துறவி புரிந்து கொண்டார். "அந்த பூச்சி உயிருடன் இருப்பதும், இறந்து போவதும் உன் கையில் தான் இருக்கிறது" என்று சாதுர்யமாக மறுமொழி கூறினார். இந்த பதிலை எதிர்பாராத அந்த மனிதன் தடுமாறிப்போனான். அவனால் அடுத்து ஏதும் பேச இயலாத நிலையேற்பட்டதால் வெட்கித் தலைகுனிந்து தோல்வியைத் தழுவினான்.
வடக்கே ஒரு தொடர் வண்டியின் ஒரு பெட்டியில் தலை நரைத்த ஒரு முதியவர் மட்டும் பயணம் செய்து கொண்டிருந்தார்..
அடுத்து வந்த ஒரு நிறுத்தத்தில் 10-15 இளைஞர் பட்டாளம் ஏறியது..மீண்டும் வண்டி வேகம் எடுத்து ஓட தொடங்கியது..
இளைஞர்கள் என்றாலே,கூத்தும் கும்மாளமும்தானே.அதிலும் இன்றைய இளைஞர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்..
அவர்களின் ஒருவன்,டேய்! நாம வண்டியின் சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்துவோமா..!?
ஓஓ, நிறுத்தலாம்டா!!
வண்டி நின்றதும் TTE வந்து விசாரிப்பாரே..அபராதம் போடுவாரே!
அதையெல்லாம் சமாளிக்கலாம்டா! நீ இழுடா!! இவன் கிடக்கிறான்.
அதில் ஒருவன் மட்டும் (என்னை மாதிரி பயந்தாங்கொள்ளின்னு வச்சுகங்களேன்) எதற்கும் அபராத தொகையை ரெடியா வச்சுக்கலாம்..
இதுவும் நல்ல யோசனைதான்..யார் யார்கிட்ட எவ்வளவு பணம் இருக்கு..எடுங்கடா..
..எல்லாருமா சேர்ந்து 1500/- ரூபாய் சேர்த்து ஒருவனிடம் கொடுத்துட்டு...யோவ்,பெருசு உன்கிட்டே இருக்கிறதையும் கொடு..
...என்கிட்ட பணம் ஏதும் இல்லையேப்பா என்று அந்த முதியவர் சொல்ல...அதற்குள் ஒருவன்
...டேய்! இந்த பெருசு பணம் தரமாட்டேங்கிறார்டா..பேசாம இந்த பெருசை மாட்டி விட்டுறுவோம்,இவர்தான் சங்கிலியை இழுத்தார் என்று...
அருமையான ஐடியாடா..நமக்கு ஜாலிக்கு ஜாலியுமாச்சு..பணமும் மிச்சம்.இந்த பெருசு என்ன செய்வார்னு பார்ப்போம்..
ஒருவன் சங்கிலியை பிடித்து இழுக்க,தொடர் வண்டி நின்றது..
..சிறிது நேரத்தில் அங்கே வந்த TTE, யார் சங்கிலியை இழுத்தது..ஏன் இழுத்தீர்கள்!!?
அதோ அந்த பெரியவர்தான் சங்கிலியை இழுத்தார்..நாங்களும் எவ்வளவோ சொன்னோம்..ஏன் இழுக்கிறீர்கள் என்று கேட்டோம் என்று கோரஸாக அந்த இளைஞர்கள் சொன்னதும்..
TTE, என்னாச்சு பெரியவரே! ஏன் வண்டியை நிறுத்துனீர்கள்..தகுந்த காரணம் இல்லாமல் சங்கிலியை இழுத்தால் அபராதம் கட்ட வேண்டும் என்று தெரியாதா..
அந்த பெரியவர் சொன்ன பதில்தான் இந்த கதையின் Climax...
நான் என்ன செய்வது சார்..நானோ கூலி வேலை செய்கிறவன்..கஷ்டப்பட்டு சம்பாதித்த என்னுடைய பணம் 1500/- ஐ இந்த பசங்க எல்லோருமாக சேர்ந்து என்னிடமிருந்து பிடுங்கி கொண்டார்கள்...ஊர் வந்ததும் இறங்கி என் பேரப்பிள்ளைகளுக்கு தீபாவளிக்கு துணிமணி எடுக்கனும்..அதற்காகத்தான் சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்தி புகார் கொடுக்கலாம் என்று நினைத்தேன்..நீங்க வேணா பாருங்க சார், அதோ அந்த பையன் பாக்கெட்டில் 1500 ரூபாய் இருக்கும்..
**மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்..ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றி புகழ வேண்டும்...
"உன்னையறிந்தால், நீ உன்னை அறிந்தால்..."
அப்புறம் (என்ன! அடுத்த ஸ்டேஷனில் வண்டி நின்றதும் அங்கிருந்த RPF அந்த இளைஞர்களை கொத்தாக அள்ளிக் கொண்டு போக..தொடர் வண்டி அந்த " நரை முடி முதியவருடன்" தன் பயணத்தை தொடர்ந்தது..!! (தன் சட்டை பையில் 1500 பணத்துடன் அந்த "பெரியவர்")
ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.
உடனே சாக்ரட்டீஸ் அவரிடம்,
"என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.
மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அ வ ரை ப் ப ற்றி கூறலாம்"என்றார்.
சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்
1). "அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அ வ ரை ப் ப ற்றி கூறுகிறாயா..???"
என்று கேட்டார்.
* இல்லை என பதில் சொன்னார்.*
2). "அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா...??? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.
*இல்லை என பதில் சொன்னார்.*
3). 'அந்த நண்பரைப் பற்றி கூறினால் யாராவது பயனடைவார்களா......???' என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.
*இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.
*"யாருக்கும் பயனில்லாத,*
நல்ல விஷயமுமில்லாத.*
* நேரடியாக நீங்கள் பார்க்காத,*
*என் நண்பரை ப் ப ற்றி ய ச ம்ப வ த்தை தயவு செய்து என்னிடம் கூறா தீ ர்க ள்" என்றார்.*
நல்ல நட்பு ஆரோக்கிய மான வி வா த ங்க ளை யே மேற்கொள்ளும்.
ந ண்ப ர்க ள் ஹை ட்ர ஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.
*நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.*
*பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.....!!!*
உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை.
மேலும் மன்னிக்க முடியாத குற்றம் என்றும்
எனவே,
வார்த்தை களால் யாரையும் பழிக்காதீர்கள்...
வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்...!!!
நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்..!!
நட்புறவை இழி மொழியால் துளைக்காதீர்கள்...!!!
மனிதர்கள் ரத்தமும், சதையும், உண ர்ச்சி களாலும் உருவாக்கப்பட்டவர்கள்.
அரசருக்கு அன்று கடுமையான பணி. நகர்வலம் சென்றுவிட்டு, அரண்மனை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தார். தாகமும் பசியும் அதிகமாக இருந்தது. கையில் உணவுப் பொருட்களோ தண்ணீரோ இல்லை. என்ன செய்வது என்றுயோசித்துக் கொண்டிருந்தார். எதிரிலிருந்த வீட்டு வாசலில் ஒரு பெண் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தார்.
“அம்மா, குடிக்க ஏதாவது கிடைக்குமா? தாகமாக இருக்கிறது” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தார் வீரம்மாள்.
“மன்னா, வணக்கம். தாங்கள் பசியுடன் இருப்பதுபோல தெரிகிறது. என் வீட்டில் சாப்பிடுவீர்கள் என்றால் கேழ்வரகுக் கூழ் தருகிறேன் மன்னா” என்று தயங்கியபடியே கேட்டார் வீரம்மாள்.
“என் நிலை அறிந்து கேட்டதற்கு நன்றி. நான் மிகுந்த பசியுடன் இருக்கிறேன். தாங்கள் எது கொடுத்தாலும் சாப்பிடக் காத்திருக்கிறேன்.”
மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் சென்று, ஒரு குவளை நிறையக் கேழ் வரகுக் கூழ் கொண்டுவந்தார் வீரம்மாள். அரசர் அதை ஆர்வத்துடன் வாங்கி, பசி தீரும்வரை குடித்தார்.
“ஆஹா! என் வாழ்நாளில் இவ்வளவு ருசியான ஒன்றை நான் சாப்பிட்டதே இல்லை. எப்படி வந்தது இவ்வளவு ருசி? இதை எப்படிச் செய்ய வேண்டும் என்று எனக்குச் சொல்லுங்கள். நான் அரண்மனைச் சமையல்காரர்களிடம் இதே பக்குவத்தில் சமைக்கச் சொல்கிறேன்."
வீரம்மாளும் கேழ்வரகுக் கூழ் செய்யும் பக்குவத்தை வீரர் ஒருவரிடம் கூறினார். அந்த வீரர் அதை அப்படியே அரண்மனையின் தலைமைச் சமையல் கலைஞரிடம் கூறினார்.
“ என்னது! மன்னர் கூழ் குடித்தாரா! நான் அவருக்குத் தினமும் நெய் சொட்டச் சொட்ட பாதாமும் பிஸ்தாவும் கலந்து பாயசம் செய்கிறேன். அவற்றை விடவும் இது பிரமாதம் என்கிறாரா? ஆச்சரியமாக இருக்கிறது. சரி, சரி நாளையே கூழ் செய்துவிடுகிறேன்” என்றார் சமையல் கலைஞர்.
மறுநாள் காலை கேழ்வரகுக் கூழ் செய்து, மன்னருக்குக் கொடுத்தார். மன்னர் ஆர்வமாக அதை வாங்கிப் பருகினார். அவருடைய முகம் மாறிவிட்டது.
“இது நேற்று நான் பருகியதுபோல இல்லையே? அதே முறைப்படிதான் செய்தாயா?” என்று சற்றுக் கோபமாகக் கேட்டார் மன்னர்.
“ஆம் மன்னா.”
“ஏன் அந்தச் சுவை வரவில்லை? வீரம்மாளை உடனே அழைத்து வாருங்கள். அவர் ஏன் இப்படித் தவறான முறையைச் சொல்லிக் கொடுத்தார்?”
சிறிது நேரத்தில் வீரம்மாள் வந்துசேர்ந்தார்.
“தவறான செய்முறையைச் சொல்லிக் கொடுத்த குற்றத்துக்கு என்ன தண்டனை தெரியுமா?”
“நான் சரியாகத்தான் சொன்னேன் மன்னா.”
“அந்தச் சுவை வரவில்லையே?"
வீரம்மாள் சிறிதும் பயமின்றி, “நான் எதையும் மாற்றிக் கூறவில்லை. நீங்கள் அருந்திய கேழ்வரகு கூழை எனக்கும் சிறிது தரச் சொல்லுங்கள். நான் உண்ட பின் சொல்கிறேன்” என்றார்.
கூழ் வந்தது. பருகிப் பார்த்தார். “மன்னிக்கவும் மன்னா. இது அதே போன்ற சுவையில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இது சுவையாக இல்லை என்று நீங்கள் நினைத்தீர்களானால் அதற்கு மூன்று காரணங்களை என்னால் கூற இயலும்” என்றார் வீரம்மாள்
“என்ன? ”
“மன்னா! ‘பசித்த பின் புசி’ என்பார்கள். நேற்று நீங்கள் கடுமையான பசியில் இருந்தீர்கள். அந்த நேரம் எதை உண்டாலும் மிகவும் ருசியாக இருக்கும். அதையே பசியில்லாத நேரம் உண்டால் ருசிக்காது. இன்று அந்த அளவு பசித்த பின் உண்டீர்களா என்று எனக்குத் தெரியவில்லை.
இரண்டாவது அந்தக் கூழ் என் குடும்பத்துக்காக என் கையால் தயாரிக்கப்பட்டது. அதில் அன்பும் அக்கறையும் அதிக அளவு கலந்திருக்கும். இங்கே பணி செய்யும் சமையல்காரர் தயாரித்த கூழில் அதை எப்படி எதிர்பார்க்க முடியும்?
மேலும் வியர்வை சிந்தி உழைத்த பணத்தில் வாங்கப்படும் உணவுப் பொருளுக்கு உள்ள ருசி மற்றவற்றுக்குக் கிடையாது” என்றார் வீரம்மாள்.
“என்ன அருமையான விளக்கம்!” என்று பாராட்டி, வீரம்மாளுக்குப் பரிசும் கொடுத்து அனுப்பிவைத்தார் மன்னர்.
மயூர பந்தம் என்பது பகை விலக, மாந்திரீக, தந்திர,பில்லி,சூனிய ஏவல் பிணி நீக்க வல்லது. பொதுவாகவே முருக பக்தர்களை பில்லி, சூனியம், ஏவல் போன்றவை தீண்டாது , அதிலும் ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் மயூர பந்தத்தை ஒருவர் வீட்டில் வைத்து தினமும் பூஜித்து வந்தால் அவர்களை இந்த மாந்திரீக ஏவல்கள் அறவே அண்டாது என்பது உறுதி.
“வரதந திபநக ரகமுக வொருகுக வறிதுத புவிரிவிதி
மரகத வரிபர மதுகளி லசலவி மலமழ வெனலிரிய
மரபுறு குறுமுனி வருதிம யலசர மதிவிரி விபுதகுரு
சுரபதி நவரச பரததி நகரம துகமழு முனிவருதி “
ஸ்வாமிகள் எழுதிய மயூர பந்தமானது சகல பிரச்னைகளையும் தீர்க்க வல்லது, இந்த மந்திரத்தை மிகவும் கவனமாகவும் சுத்தமாகவும் பாராயணம் செய்துவந்தால் அனைத்து பிரச்னைகள் மற்றும் தோஷங்களிருந்து விடுபட முடியும் என்பது ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் வாக்கு. இந்த ஸ்லோகத்தை பாராயணம்செய்யும் நாட்களில் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும், ஒழுக்க நெறிகளைக் கடைபிடிக்க வேண்டும். அப்படி செய்து வந்தால் அனைத்து பிரச்னைகளிலிருந்து விடுபட்டு நல்ல ஒரு வாழ்க்கை அமைத்துக் கொண்டு எல்லா காரியங்களிலும் வெற்றியைக் காணலாம்.
இந்த மந்திரத்தைப் பாராயணம் செய்யும்பொழுது மது பழக்கம், புகை பழக்கம் மற்றும் அசைவ உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கோயில் சென்னையில் உள்ள திருவான்மியூரில் அமைந்துள்ளது. பக்தர்கள் இங்குச் சென்று சுவாமிகளின் ஜீவசமாதியை தரிசித்து பலன் பெறலாம்.
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான். அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.
அவள் பெயர் "சிலம்பி" ஊரிலேயே புகழ்பெற்ற தாசி. அவள் எதுக்கு வெறும்பயல் நம்மை சந்திக்க விரும்புகிறாள் என்ற யோசனையோடே போகிறார் கம்பர்.
”உங்க இராமாயணம் படிச்சேன். ரொம்ப நல்லாயிருக்கு. அதுல நீங்க சீதைய புகழ்ந்தும் வர்ணித்தும் எழுதினீங்களே அது போல என்னையும் எழுத முடியுமானு கேட்டா”
"கண்டாரோ… என்ன வார்த்தை சொல்லிட்டா.. சீதைய பாடின வாயால இவளை பாடணுமாம்” அப்படின்னு மனசில் நினைச்சுட்டு.. “அதெல்லாம் சும்மா பாட முடியாது காசு வேணும்” என்றாராம்.
“யோவ்... புலவரே பயங்கரமான ஆளுய்யா நீர்.. தாசிகிட்டயே காசை புடுங்கபார்க்கறீரே.. சரி நீர் வேறு வாயை திறந்து கேட்டுட்டீர்.. ரெண்டு காசுதான் தருவேன் சம்மதமா” என்றாள்.
சரி வந்தவரை லாபம்னு நினைத்துக் கொண்டு “ கையில காசு வாயில பாட்டு, கொடு” என்றாராம். அவள் கொடுக்கவும். கரி கட்டைய எடுத்து அவள் வீட்டு சுவற்றில் வேகமா எழுதினார்.
”தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே”
ரெண்டு வரி எழுதிட்டு ரெண்டு காசுக்கு அம்புட்டுதானுட்டு வேகமா கிளம்பி போயிட்டார்.
சிலம்பியும் என்னடி இது இப்படி ஆயிடுச்சேனு நினைச்சுட்டு. ஊருல நாட்டுல இருக்கிற கவிஞர்களை எல்லாம் அழைச்சு மிச்ச வரிய எழுதக் கேட்டாள்.
கம்பனோட வரிக்கு மறுவரி எழுதற தைரியம் எவனுக்கு இருக்கு. ஒரு பயலும் முடியாதுனுட்டான். இப்படியே கொஞ்சம் நாள் போச்சு.
ஒரு நாள் ஒரு கிழவி சிலம்பி வீட்டு வாசலில் வந்து தண்ணி கேட்டாள். அவளைப் பார்த்ததுமே சிலம்பிக்கு யாருன்னு தெரிஞ்சுடுச்சு. அம்மா.. நீங்க ஒளவைதானேனு உள்ளே கூப்பிட்டா…
இந்த கவிதையின் மிச்ச வரிகளை நீங்க எழுதிட்டா. தண்ணி என்ன கூழே ஊத்தறேன் என்றாள்.
ஒளவை அந்த சுவற்றைப் பார்த்தாள்.
"தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே-
பெண்ணாவாள் பொன் சிலம்பி அம்பொற் சிலம்பே சிலம்பு".
என மிச்ச வரிகளை எழுதி முடித்தாள்.
தண்ணீர் என்றால் காவிரிதான்.. ராஜா என்றால் சோழந்தான்.. பெண் என்றால் சிலம்பிதான் (கம்பன் பாடிய சீதையும் பெண்ணில்லை.. இளங்கோ பாடிய கண்ணகியும் பெண்ணில்லை) அது போல அவள் காலில் உள்ளது தான் சிலம்பு (கண்ணகி போட்டதும் சிலம்பில்லை, பாண்டிமாதேவியதும் சிலம்பில்லை, இளங்கோ எழுதினதும் சிலம்பில்லை)
கம்பனோட வரிக்கு மறுவரி எழுதி இருப்பத அறிந்த கம்பன் அதை வந்து பார்த்தான்..
யப்பா என்ன ஒரு அர்த்தம்.. ஒரே அடியில கம்பனையும் இளங்கோவையும் காலை வாரி நிலத்துல அடிச்சு போட்டாளே இந்த பொம்பளை.
அதுவும் யாரு முன்னால் ஒரு "தாசி" முன்னால. பிரச்சனை சோழனிடம் போச்சு.. ”ஏம்மா நீ இப்படி எழுதலாமா அதுவும் கொஞ்சம் கூழுக்காக” என்று சோழன் கேட்டானாம்.
அதுக்கும் ஒரு பாட்டு சொன்னா ஒளவை கிழவி..
கூழைப்பலா தழைக்கப் பாட -- குலமகளும்
மூழ அழாக்குத் திணை தந்தாள். சோழா கேள்
கூழுக்கும் பாடி உப்புக்கும் பாடி
ஒப்பிக்கும் என் உள்ளம்.
என்றாள்..
நான் மன்னர் தரும் பரிசுக்காகக் கவிதைகளைத் தூக்கிக்கொண்டு அலைபவள் அல்லள் என்று சோழனுக்குச் சொல்லாமல் சொல்லிவிட்டு, கம்பனுக்கும் ஓரு ஊமைக்குத்து சேர்த்தே குத்தும்படி சொன்னாள்.
"அன்னைக்கு ஒரு நாள் உன் வம்சம் தழைக்க கூழைப்பலா தழைக்கணும்னு பாடினேன்..
உன் பொண்டாட்டி முழா அழாக்கு திணை கொடுத்தா..
இன்னைக்கு கூழுக்கு பாடினேன்.
பாட சொன்னா பாடுறதுதான் என் குணம் கூழா உப்பா திணையானு பார்த்து பாட மாட்டேன்" என்றாளாம் ஓளவை கிழவி.
காதலிக்காக எம்.ஜி.ஆர் பாடுவது போல் அமைந்த ஒரு பாடலை, டி.எம்.எஸ்.குரலில் 2 முறை பதிவு செய்துள்ளனர். இதற்கு காரணம் என்ன என்பது குறித்து அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர், நடிப்பில் வெளியான அன்பே வா திரைப்படத்தில் ஒரு பாடலை பாடிய டி.எம்.எஸ்., டேக் ஓகே என்று சொன்னவுடன், சென்றுவிட, மறுநாள் மீண்டும் அதே பாடலை ரீடேக் பாட சொல்லி தயாரிப்பாளர் ஏ.வி.எம். செட்டியார் சொன்னதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பழமையான தயாரிப்பு நிறுவனம் என்று அழைக்கப்படும் ஏ.வி.எம். நிறுவனம் சார்பில், 1966-ம் ஆண்டு வெளியான படம் அன்பே வா. எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ், டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்.
ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் படம், கலர் படம் என்ற அறிவிப்பு வெளியான உடனே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்துள்ளது. அதேபோல் எம்.ஜி.ஆர் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி முழுக்க முழுகக் ஒரு காதல் படத்தில் நடித்தது இது தான் முதல் முறை. அதனால் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற வேண்டும் என்று ஏ.வி.எம் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து சென்சாருக்கு செல்லும் முன் எம்.ஜி.ஆருக்கு படம் ஸ்பெஷல் காட்சியாக திரைபிடப்பட்டுள்ளது. படம் பார்த்து வெளியில் வந்த எம்.ஜி.ஆர் இது எனக்கான படம் இல்லை. எம்.எஸ்.விக்காக எடுக்கப்பட்ட படம். மியூசிக் ரொம்ப நல்லாருக்கு என்று கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் திரைப்பட பாணியில் இருந்து விலகி புதிய கதையசத்துடன் எடுக்கப்பட்ட அன்பே வா இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் போற்றப்படுகிறது.
இந்த படத்தில் இடம் பெற்ற ‘அன்பே வா’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு குரலாக இருந்த பாடகர் டி.எம்.சௌந்திரராஜன் பாடிய இந்த பாடல், முதல் டேக்கிலேயே எம்.எஸ்.வி பாடல் பிரமாதமாக வந்துள்ளது என்று பாராட்டியுள்ளார். இதனால் சந்தோஷமாக அங்கிருந்த சென்ற டி.எம்.எஸ். மறுநாள் வரும்போது அதே பாடலை ரீ-டேக் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியான அவர், என்ன என்று விசாரித்துள்ளார்.
இந்த பாடலுக்கு என்ன ஆச்சு? எதற்காக ரீ-டேக் என்று எம்.எஸ்.வியிடம் கேட்க எனக்கும் தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார். அதன்பிறகு தான் இந்த பாடல் எம்.ஜி.ஆர் மகிழ்ச்சியாக பாடுவது போல் டி.எம்.எஸ். பாடியுள்ளார். ஆனால் அவர் ஏக்கத்துடன் பாட வேண்டும் அதனால் பாடலை திரும்பவும் ரீ-டேக் எடுங்கள் என்று ஏ.வி.எம். செட்டியார் கூறியுள்ளார். அதன்பிறகு இந்த பாடல் ரீ-டேக் ஆக, முன்பைவிட பிரமாதமாக பாடி அசத்தியுள்ளார் டி.எம்.எஸ். இந்த தகவலை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சிந்தனை போக்கில் தெளிவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பயணம் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோக பணிகளில் ஆதரவுகள் கிடைக்கும். வியாபர பணிகளில் இருந்த நெருக்கடியான சூழல் மறையும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ரிஷபம்
மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. வாழ்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மிதுனம்
அநாவசிய செலவுகளை தவிர்க்கவும். பிள்ளைகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சில பணிகள் தடைபட்டு முடியும். அரசு காரியங்கள் இழுபறியாகும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் மேம்படும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்லவும். உத்தியோகத்தில் விவாதம் இன்றி செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். திட்டமிட்ட செயலை மாற்றியமைப்பீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். புத்தி சாதுர்யத்தால் சில தடைகளை வெற்றி கொள்வீர்கள். பெற்றோர்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். சிரமம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
சிம்மம்
இல்லத்தில் மன மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். வியாபார ரீதியான உதவிகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் தனிப்பட்ட ஈடுபாடு உண்டாகும். பணி சார்ந்த முயற்சிகளில் வாய்ப்புகள் தேடி வரும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை.
கன்னி
எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் ஏற்படும். பிற மொழி மக்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் இருந்த தடைகள் விலகும். வர்த்தகத்தில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். பயணம் மூலம் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொழுது போக்கு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். மற்றவர்கள் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். எதிலும் பொறுமை வேண்டும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
விருச்சிகம்
சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். வாகனம் தொடர்பான முயற்சிகள் கை கூடும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வழக்கு விஷயங்களில் மாற்றம் உண்டாகும். வருமான வகையில் இருந்த இழுபறிகள் குறையும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
தனுசு
நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் நலனில் அக்கறை வேண்டும். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்தும் எண்ணம் அதிகரிக்கும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியான பயணங்களில் அறிமுகங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மகரம்
எதிர்காலம் சார்ந்த சில முயற்சிகள் கைகூடி வரும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வாடிக்கையாளர்கள் இடத்தில் கனிவு வேண்டும். உத்தியோகத்தில் எதிர்பாராத பொறுப்புகளால் அலைச்சல்கள் உண்டாகும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். நலம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
கும்பம்
நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். சில விஷயங்களை போராடி மேற்கொள்வீர்கள். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். எதிலும் உழைப்புகள் அதிகரிக்கும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
குடும்பத்தோடு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். விவசாய பணிகளில் அலைச்சல் ஏற்படும். மனை விருத்திக்கான சூழல் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகளால் எண்ணியதை சாதிப்பீர்கள். திட்டமிட்ட கடன் உதவிகள் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 22 ஆம் தேதி சனிக்கிழமை 8.11.2025.
இன்று பிற்பகல் 12.31 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.
இன்று அதிகாலை 04.31 வரை ரோகிணி . பின்னர் மிருகசீரிடம்.
இன்று அதிகாலை 03.28 வரை பரிகம். பின்னர் சிவம்.
இன்று அதிகாலை 01.40 வரை வணிசை. பின்னர் பிற்பகல் 12.31 வரை பத்தரை. பிறகு இரவு 11. 28 வரை பவம். பின்பு பாலவம்.
இன்று அதிகாலை 04.31 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
கனடாவில் குழந்தைகள் உட்பட 6 பேரை இரக்கமின்றி கொலை செய்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவாவில் உள்ள ஒரு வீட்டில், இலங்கை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேரை கொலை செய்த சம்பவத்தின் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கையை சேர்ந்த இளைஞருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம், தண்டனையில் எவ்விதமான தளர்வையும் பெறுவதற்கோ அல்லது விடுதலை பெறுவதற்கோ அவர் 25 ஆண்டுகள் கட்டாயமாக சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் ஃபெப்ரியோ டி சொய்சா என்ற இளைஞர் ஆவார். கனடாவில் கல்வி கற்று வந்த அவர், இந்த குற்றத்தைச் செய்தபோது 19 வயதைக் கடந்து இருந்தார். அவர் மீது நான்கு முதலாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளும், இரண்டு இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளும், ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டிருந்தன. அவர் அக்குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒப்புக்கொண்டார்.
இந்த கொலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயான தர்ஷனி பண்டாரநாயக்க (35), இனூக்க விக்கிரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்கிரமசிங்க (2), கெலி விக்கிரமசிங்க (2 மாதம்) ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும், அந்த வீட்டில் இருந்த காமினி அமரகோன் (40) என்ற நபரும் கொல்லப்பட்டதுடன், குழந்தைகளின் தந்தை படுகாயமடைந்தார்.
2025-ம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகி போட்டி வருகிற 21-ஆம் தேதி தாய்லாந்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் பல்வேறு நாட்டு அழகிகள் தலைநகர் பாங்காக்கில் குவிந்து உள்ளனர். அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில் அதில் மிஸ் பிரபஞ்ச அழகி போட்டி நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
போட்டியின் - மேற்பார்வையாளர் நவத் இட்சராகிரைசில் பேசிய போது, போட்டியாளர்களில் சிலர் ஏன் விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் மெக்சிகோ அழகி பாத்திமா போஷை கூப் பிட்டு விளக்கம் அளிக்குமாறு கேட்டார். அப்போது பாத்திமா போஷ் விளக்கம் அளிக்க முயன்றபோது அவரை முட்டாள் என்று நவத் கூறினார். இதனால் பாத்திமா போஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே அவரை நவத் அமைதியாக இருக்கும்படி கூறினார்.
ஜி.எஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘தீயவர் குலை நடுங்க’. இதன் படப்பிடிப்பு மற்றும் இறுதிகட்ட பணிகள் முற்றிலுமாக முடிவடைந்து சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது. தற்போது நவம்பர் 21-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். விரைவில் இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளன.
தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், பிக் பாஸ் அபிராமி, பிரவீன் ராஜா, ராம்குமார், தங்கதுரை, பேபி அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது.
ஒளிப்பதிவாளராக சரவணன் அபிமன்யு, இசையமைப்பாளராக பரத் ஆசிவகன், எடிட்டராக லாரன்ஸ் கிஷோர் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ போஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காந்தா’. நவம்பர் 14-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
இந்த விழாவில் துல்கர் சல்மான் பேசும் போது, “இக்கதையை 2019ல் தான் கேட்டேன். தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இயக்குநர் செல்வா இருப்பார். சினிமாவை அவ்வளவு ரசிப்பார். இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக காத்திருந்தேன். எங்கள் எல்லோருக்கும் தமிழில் மிக முக்கியமான படமாக ‘காந்தா’இருக்கும். ‘அய்யா’ கதாபாத்திரத்திற்கு மிகப்பொருத்தமான நபராக சமுத்திரக்கனி இருந்தார். எங்களை விட இன்னும் அதிக ஆர்வமாக சமுத்திரக்கனி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருடன் இணைந்து இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும்.
குமாரி கதாபாத்திரத்திற்காக தமிழ் கற்றுக் கொண்டு முழு ஈடுபாட்டோடு பாக்யஸ்ரீ நடித்திருக்கிறார். ராணாவும் நானும் இணைந்து இந்தப் படம் செய்திருப்பது மகிழ்ச்சி. படம் நன்றாக வர வேண்டும் என்று ராணா முழு உழைப்பைக் கொடுப்பார். டைம் டிராவல் செய்வது போன்ற மகிழ்ச்சியை இந்த பீரியட் படங்கள் கொடுக்கும். அதை கலை இயக்குநர் ராமலிங்கம் சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்கு சிறப்பாக உழைத்துள்ளனர். படம் பார்க்கும் அனைவருக்கும் இது மறக்க முடியாத படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் துல்கர் சல்மான்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்ப நபர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வேலையாட்களிடம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எதிர்காலம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
ரிஷபம்
குடும்ப விஷயங்களில் அலட்சியமின்றி செயல்படவும். வாக்கு சாதுரியம் ஏற்படும். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். விலகி நின்றவர்கள் கூட விரும்பி வருவார்கள். தியானம் மூலம் மன அமைதி உண்டாகும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்லவும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்கு வரும். விவசாய பணிகளில் அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும்.புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சக ஊழியர்களால் வருத்தங்கள் நேரிடும். மனதில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். வியாபாரம் நிமித்தமான உதவிகள் சாதகமாகும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு.
சிம்மம்
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடன் இருப்பவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலகி இருந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கன்னி
எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் மேம்படும். பழைய கடன் பாக்கிகளை கனிவாக பேசி வசூலிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் வந்து போகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். சொத்து சம்பந்தப்பட்ட செயல்களில் பொறுமையுடன் செயலபடவும். நேர்மை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
துலாம்
எதிலும் நேர்மையுடன் செயல்படவும். மனை விற்பனையில் மந்தமான சூழல் ஏற்படும். வர்த்தகத்தில் கவனம் வேண்டும். நட்பு வட்டங்களில் புதிய அனுபவங்கள் உண்டாகும். மற்றவர்களின் குறைகளை பெரிது படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். உயர் அதிகாரிகளால் பொறுப்புக்கள் மேம்படும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விருச்சிகம்
விரும்பிய காரித்தை நினைத்த படியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். பண விஷயத்தில் கவனம் வேண்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
உறவினர்களுடன் சிறு சிறு விவாதங்கள் வந்து போகும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். முயற்சி ஏற்ப புதிய வேலைகள் சாதகமாகும். பங்குதாரர்களிடம் அனுசரித்து செல்லவும். அரசு வழியில் ஆதாயம் ஏற்படும். வீடு மனை விற்பனையில் லாபம் உண்டாகும். நெருக்கமானவர்கள் மூலம் ஒத்துழைப்பு ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். பொழுதுபோக்கு விஷயங்களால் செலவுகள் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கும்பம்
குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். பெரியோர்கள் ஆதரவு கிடைக்கும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் செழிப்பான வாய்ப்புகள் கிடைக்கும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மீனம்
சுப காரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 7.11.2025.
இன்று பிற்பகல் 02.48 வரை துவிதியை. பின்னர் திரிதியை .
இன்று காலை 06.58 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி.
இன்று காலை 06.34 வரை வரீயான். பின்னர் பரிகம்.
இன்று அதிகாலை 03.58 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 02.48 வரை கரசை. பிறகு வணிசை.
இன்று காலை 06.07 வரை மரணயோகம். பின்னர் காலை 6.58 வரை சித்தயோகம். பிறகு மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் அண்மைய வாரங்களில் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அண்மையில், நார்த் பே பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் இருந்து 250,000 டொலர் தொகை மோசடி செய்யப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களில் கிரிப்டோகரன்சி மோசடிகள், ஆன்லைன் சந்தை ஏமாற்றங்கள், காதல் மோசடிகள் மற்றும் பரிசு அட்டை மோசடிகள் தொடர்பான பல புகார்களுக்கு எங்கள் அதிகாரிகள் பதிலளித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நார்த் பே பகுதியில் ஒருவர் 2025 ஜூலை மாதம் முதல் போலியான இணையதளம் மற்றும் கணக்கில் பணம் செலுத்தி வந்ததாகவும், அது முதலீட்டு மோசடியாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிகவும் நூதனமான முறையில் மோசடிகள் இடம்பெறுவதாகவும் பல்வேறு வழிகளில் மக்கள் ஏமாற்றப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து, சிறிது சோடா உப்பையும் கலந்து குடித்தால், வயிற்று வலி நீங்கும்.
* அகத்திக்கீரையில், 65 விதமான சக்திகள் அடங்கி இருக்கின்றன. மலச்சிக்கல், பித்தம் அதிகமாக உள்ளோர், அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட வேண்டும். வெயிலில் அலையும் வேலை உடையவர்களும், காபி, டீ சாப்பிடுபவர்களும் அகத்திக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* வேப்பிலை, மருதாணி, மஞ்சள் ஆகிய மூன்றையும் அரைத்து குதிகால் வெடிப்பில் பூசி வந்தால், பித்த வெடிப்பு குணமாகும். இரவு படுக்க போகும்போது, இந்த மருந்தை போடுவது நல்லது.
* உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியவில்லை. மூட்டு வலிக்கிறது என்று சொல்பவர்கள், தேங்காய் எண்ணெயில் கற்பூர கட்டியை சிறிதளவு போட்டு கலக்கி, சூடுபடுத்திய பிறகு மூட்டுகளில் பூசி வந்தால், கீல் வாத வலி, மூட்டு வலி குணமாகும்.
* கறிவேப்பிலையை துவையல் செய்து சாப்பிடுவது பித்தத்தை போக்கும். சுக்கும், பனை வெல்லமும் போட்டு காய்ச்சிய நீரை குடித்து வந்தால், பித்தம் ஏற்படாது.
* செம்மண்ணை தண்ணீரில் கரைத்து அடுப்பில் சுட வைத்தால், கெட்டியாக சூடாக இருக்கும். இந்த மண்ணை காலில் வீக்கம் உள்ள இடத்தில் கை பொறுக்குமளவு சூடாக எடுத்து, இரவு நேரத்தில் பூச வேண்டும். காலையில் வீக்கம் குறைந்து காணப்படும். இரண்டு மூன்று முறை போட்டால், பூரண குணமடையும். இது, யானைக்கால் உள்ளவர்களுக்கு பொருந்தாது. திடீர் வீக்கம், இடிபட்ட வீக்கம் இவைகளுக்கு மட்டும் பொருந்தும். கடையில் விற்கும் காவியில் போடக் கூடாது, செம்மண்ணில் தான் போட வேண்டும்.
* ஒரு தேக்கரண்டி மிளகு துாள், சிறிதளவு இஞ்சி, ஒரு பிடி துளசி இலை சேர்த்து கஷாயம் போல் செய்து சர்க்கரை, பால் சேர்த்து அருந்த, தொண்டை வலி, சாதாரண ஜுரம் ஆகியவை குணமாகும்.
வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு மூட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தான்.
வழியில் ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெள்ளத்தை பொருட்படுத்தாத வைர வியாபாரி எப்படியாவது ஆற்றை கடந்து சென்றுவிடலாம் என்று எண்ணி அந்த ஆற்றில் இறங்கினான். அப்போது வெள்ளம் அவனை நிலை தடுமாற செய்தது.
இதனால் அவன் தன் பண மூட்டையை வெள்ளத்தில் தவறவிட்டான். உடனே "ஐயோ என் பண மூட்டையை வெள்ளம் அடித்து செல்கிறதே யாராவது காப்பாற்றுங்கள்" என்று கதறினான்.
அந்த ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒரு மீனவனின் காதில் இந்த வைர வியாபாரியின் கதறல் சத்தம் கேட்டது.
உடனே அவன் ஆற்றில் குதித்து கடுமையாக போராடி அந்த பணமூட்டையை எப்படியோ மீட்டு எடுத்து கரையை அடைந்தான்.
இந்த பண மூட்டையை காப்பாற்ற சொல்லி யாரோ கதறினீர்களே, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் ? நான் உங்கள் பண மூட்டையை மீட்டுக்கொண்டு வந்துவிட்டேன். வந்து பெற்றுக்கொள்ளுங்கள்" என்று சத்தம் போட்டு அழைத்தான். ஆனால் வெகு நேரம் ஆகியும் யாரும் அதை பெற வரவில்லை.
பிறகுதான் அவனுக்கு புரிந்தது, அந்த பண மூட்டைக்கு சொந்தக்காரர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் என்று. "ஐயோ பாவம், அந்த பணக்காரர் இந்த பண மூட்டைக்கு பதிலாக தன்னை காப்பாற்றும்படி குரல் கொடுத்திருந்தால் அவரை காப்பாற்றி இருப்பேனே" என்று அந்த மீனவன் வருந்தினான்.
இப்படிதான் நாமும் நம் தேவைகளை சில நேரங்களில் இறைவனிடம் சரியாக கேட்காமல் வெறும் பணத்தையும் வசதிகளையும் மட்டுமே கேட்கிறோம். அதனால் பல நேரங்களில் நாம் நம் வாழ்வில் நிம்மதியை தரும் ஆரோக்கியத்தையும் மனநிறைவையும் பொருட்படுத்துவதேயில்லை..!!
ரஷ்ய நாட்டு யூதர் ஒருவருக்கு இஸ்ரவேலில் சென்று குடியேற அனுமதி கிடைத்தது.
ரஷ்ய விமான நிலையத்தில் அவரது பொதிகளை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரி, லெனினின் உருவச்சிலை ஒன்று அவரிடம் இருப்பதைக் கண்டார்.
இது என்ன?" என்று அவரிடம் அந்த அதிகாரி வினவினார். "தப்பு...சேர்...! உங்கள் கேள்வியே தப்பு...! இவர் யார் என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்...! இவர்தான் கம்யூனிஸத்தின் தந்தை லெனின்! ரஷ்ய மக்களுக்கு நல்லது செய்தவர், நாட்டின் வளர்ச்சிக்கு தீபம் ஏற்றியவர். இந்த மாமனிதரின் ஞாபகர்த்தமாக இதை நான் என்னுடன் கொண்டுசெல்கிறேன்." என்று அந்த ரஷ்ய யூதர் பதிலளித்தார். "சரி, நீங்கள் போகலாம் " என்றார் அந்த அதிகாரி.
இஸ்ரவேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் அவர் வந்திறங்கிய போது அங்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.
அங்குள்ள அதிகாரி "இது என்ன?" என்று வினவினார். "தப்பு...சார்...! இவன் யார்? என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்!
இவன்தான் பித்துப் பிடித்த மகா கொடியவன், லெனின்! இவனின் கொடுமையால்தான் நான் ரஷ்யாவை விட்டு வரவேண்டியதாயிற்று! நாளாந்தம் இவன் முகத்தைப் பார்த்து திட்டித் தீர்க்கவே இந்த உருவச்சிலையை என்னுடன் கொண்டுவந்தேன்." என்றார்.
இதைக் கேட்டு பெருமிதம் அடைந்த அதிகாரி "சரி, நீங்கள் போகலாம்." என்றார்.
தனது குடியிருப்புக்கு சென்ற ரஷ்ய யூதர், அந்த உருவச்சிலையை தன் வீட்டின் முன் மண்டபத்தில் தெரியும் படியாக மாட்டிவைத்தார். பின்னர் தான் இஸ்ரவேல் தேசத்தில் குடியேருவதை முன்னிட்டு தனது நண்பர்களை, உறவினர்களை அழைத்து விருந்து படைத்தார்.
அங்கே வந்த விருந்தினர்கள் அந்த உருவச்சிலையைக் கண்டு "இவர் யார்?" என்று வினவினார்கள். "தப்பு மக்களே...! இது என்ன?" என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்." இது 24 கரட் கொண்ட 10 கிலோ கிராம் தங்கம்! நான் இதை வரி ஏதும் கட்டாமல், சுங்கத்துறையிடம் சிக்காமல் சாதுரியமாக கொண்டு வந்தேன்." என பெருமையுடன் பதில் அளித்தார்.
பித்தலாட்டம் என்பது: மக்களிடம் ஒரே விடயத்தை பற்பல விதமாக, அதுவும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் புரிய வைக்கும் சூட்சுமமாகும்!




















