- · 1 friends
-
2 followers
நயாகரா வீழ்ச்சி
Canada Day நயாகரா வீழ்ச்சி
ஒரு முதியவர் நர்ஸிடம்,
“எனக்கு கொஞ்சம் அவசரம் இருக்கிறது… தயவு செய்து என்னை சீக்கிரம் பார்த்து டாக்டரிடம் அனுப்ப முடியுமா?” என்றார்.
அதை கேட்ட நர்ஸ் கொஞ்சம் கோபமாக, “அங்கே உட்காருங்கள்,” என்று சொன்னாள்.
சிறிது நேரம் கழித்து டாக்டர் வந்தபோது, அந்த முதியவர் கதவின் அருகில் இருந்து வேண்டிக் கொண்டார்.
நர்ஸ் எதிர்த்தாலும், டாக்டருக்கு கருணை வந்ததால் அவரை உள்ளே அழைத்தார்.
அவரை பரிசோதிக்கும் போது, விழுந்ததும், காயம் ஏற்பட்டதும், ரத்தம் வந்ததும் எல்லாம் அவர் சொன்னார்.
டாக்டர் காயத்தை சுத்தம் செய்து தையல் போட்டார்.
போகும் நேரத்தில் டாக்டர் கேட்டார்:
“ஏன் இவ்வளவு அவசரம்?”
முதியவர் சொன்னார்:
“என் மனைவிக்கு உடல் நலம் இல்லை… அவளுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட வருவேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறேன்.”
டாக்டர் கேட்டார்:
“என்ன நோய்?”
“அல்சைமர்…” என்று அவர் பதிலளித்தார்.
சிறிது ஆச்சரியத்துடன் டாக்டர் மீண்டும் கேட்டார்:
“அல்சைமர் இருந்தால், நீங்கள் போகவில்லை என்றால் அவங்களுக்கு நினைவில் இருக்குமா?”
அப்போது முதியவர் சிரித்துக் கொண்டு சொன்னார்:
“வாக்கு கொடுத்தது நான்தானே… அதை நினைவில் வைத்துக்கொண்டு நிறைவேற்ற வேண்டியது நான்தானே…
அவளுக்கு நோய் இல்லாத காலத்திலும், நான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற அவள் என்னை பின்தொடர வேண்டிய அவசியம் இருந்ததில்லை…
நீங்கள் நினைவைக் குறித்து கேட்டீர்கள் அல்லவா…
கடந்த ஐந்து வருடங்களாக அவள் என்னை அடையாளம் காணவில்லை…
ஆனால், அவள் யார் என்று எனக்குத் தெரியும்… அதனால் நான் தானே போக வேண்டும்.” என்றாராம்.
வெளியில் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்புகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து என் தெரு முழுக்கவும் ரோஜா சாமந்தி பூக்களின் இதழ்கள் சிதறிக்கிடந்தன. தூரத்தில் எங்கோ பறையொலி, கேட்டது.
யாராயிருக்கும்? என்று யோசித்துக் கொண்ட தெருவில் மெல்ல நுழைந்தேன்.
பக்கத்து வீட்டு வாசலில் நிறைய மலர்களின் இதழ்கள்... ஒரு வேளை அந்த வீட்டின் பெரியவர்..? ச்சே இருக்காது. அப்படி இருந்திருந்தால் எனக்கு தகவல் வந்திருக்குமே. அப்போ அவர் வீட்டில் குடியிருக்கும் யாராவது...!
வாசலில் வண்டி நிறுத்தும் போதுதான் கவனித்தேன் தெருவின் எல்லா பகுதியிலுமே பூவிதழ்கள்.
புரியாமல் வீட்டிற்குள் நுழைந்தேன். சோபாவில் சப்பணமிட்டு அமர்ந்திருந்த மகள் , "ஹாய்..! அப்பா" என்று சொல்லிவிட்டு மடியிலிருந்த புத்தகத்தில் மீண்டும் கண் செலுத்தினாள்.
மனைவியிடம் கேட்டேன்.
"யாரு"?
"யாருன்னா"?
"தெருவெல்லாம் பூவா இருக்கே, அதான் யாருன்னு கேட்டேன்".
மனைவி சிரிக்க....
மகள் சொன்னாள் "அப்பா ...கட்சி வேட்பாளரு ஓட்டுக் கேட்க வந்தாரு. நம்ம தெருவுல உள்ள அந்த கட்சிக்காரர்கள் எல்லாம் மலர் தூவி பண்ணின ஆர்ப்பாட்டம் தான் அது... அப்புறம் அவர் நம்ம வீட்டுக்கு வந்து ஓட்டு கேட்டாருப்பா" என்று அதை ஒரு நம்ப முடியாத அதிசயமாக சொன்னாள்.
சமையலறை உள்ளே போய் வந்த மனைவி ஒரு கவரை என்னிடம் நீட்டினாள்.
"என்னது"?
"பிரிச்சிப் பாருங்க".
உள்ளே புத்தம் புதிய ஐநூறு ரூபாய் தாள் இரண்டு இருந்தது.
"ஏது"...?
"அந்தக் கட்சிகாரங்கதான் கொடுத்தாங்க".
"ஏன் வாங்கின".
"ம்ம்ம்...எல்லாரும் வாங்கும் போது நாம மட்டும் வாங்காம இருக்க முடியுமா".
"எல்லாரும்"...என்று மனதில் நினைத்ததை கேட்காமல் வாயடைத்தேன்.
காந்தி ஐநூறில் சிரித்துக் கொண்டிருந்தார்.
தெருவைப் பார்த்தேன். ரோஜா பூவிதழ்கள் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தன.
பறையொலியையும் பூச்சிதறல்களையும் கண்டு யாரோ இறந்துவிட்டார்கள் என்று முதலில் நான் எண்ணியது உண்மை என்றே இப்போது தோன்றுகிறது.
ஆம் செத்தது... நம் ஜனநாயகம்....,
தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. தர்ப்பைப் புல் வளர தண்ணீர் தேவையில்லை. தண்ணீர் இல்லாமலும் வளரும் இது, பல நாட்களுக்கு தண்ணீரிலேயே போட்டு வைத்தாலும் அழுகாத தன்மை கொண்டது. சூரிய கிரகணத்தின் போது இதற்கு வலிமை அதிகம். இதன் காற்றுப்படும் இடங்களில் தொற்றுநோய்கள் அண்டாது. அதனால்தான் கிரகண காலத்தில் இந்த தர்ப்பைப் புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், குடிநீர்களில் போட்டு வைக்கின்றோம். இந்த புல்லில் காரமும், புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அதன் ஓசை திறன் குறையாமல் இருக்குமாம். தர்ப்பைப்புல் சுவையில் இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடையது. குளிர்ச்சியான வீரியமுடையது. சீரணத்தின் இறுதியில் இனிப்புச் சுவையாக நிற்க்கக் கூடியது.
மூவகை தோஷங்களாகிய வாதபித்தகபங்களை அவற்றின் சீற்றத்திலிருந்து கீழிறக்கி சமநிலைப் படுத்துவதனால் தர்ப்பை ஒரு அருமருந்தாக நாம் குறிப்பிடலாம்.
சில சர்க்கரை உபாதை நோயாளிகளுக்கு உடலில் எரிச்சலுடன் மஞ்சள் நிறம் கலந்த சிறுநீர் காணப்படும். இதற்கு ஹாரித்ரமேஹம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் சிலருக்கு துர்நாற்றமுள்ளதாகவும், மஞ்சிட்டை (மஞ்சள்நிறம்) கலக்கிய நீர் போன்றதுமாக சிறுநீர் வெளியேறும் நிலையில் அதற்கு மாஞ்சிஷ்டமேஹம் என்றும் துர்நாற்றம், சூடு, இரத்தம் போன்றும் சிறுநீர் வெளியேறுவதும் இரக்தமேஹமென்றும் கூறப்படுகிறது. இந்த மூன்று வகையான சிறுநீர் உபாதைகள் அனைத்தும் பித்ததோஷத்தினுடைய சீற்றத்தின் விளைவாக ஏற்படுவதால் அதுபோன்ற நிலைகளில் தர்ப்பைக் குடிநீர் அருந்துவது பித்தத்தினால் ஏற்படக் கூடிய சர்க்கரை உபாதையை குறைப்பதுடன் சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று உபாதைகளையும் குணப்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு குடிநீர் ஆகும்.
சுமார் 15 கிராம் தர்ப்பைப்புல்லை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை லிட்டர் ஆகும்வரை குறுக்கிக் காய்ச்சி குளிர்ந்தபிறகு வடிகட்டி அந்த தண்ணீரை ஒரு நாளில் பலதடவை சிறிது சிறிதாகப் பருகிவர மேற்குறிப்பிட்ட உபாதைகள் நீங்கிவிடும். சிலருக்கு தர்ப்பை நீரைக் காய்ச்சுவதற்கான நேரம் இல்லாமல் இருப்பதால் தர்ப்பைப் புல்லை நன்றாக இடித்து இரவு முழுவதும் பானைத் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதைப் பருகுவதன் மூலம் அந்த நீருக்கான மருத்துவகுணங்களை நம்மால் பெற இயலும். இதற்கு "ஹிமகஷாயம்" என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது.
சர்க்கரை உபாதையின் தாக்கத்தையும் நாம் குறைத்துக்கொள்ள முடியும்.
தர்ப்பைப்புல்லுக்கு மேலும் சில நல்ல மருத்துவகுணங்கள் இருக்கின்றன.
தர்ப்பைப்புல் உடலுக்கு குளுமையை ஏற்படுத்துவதால் தர்ப்பைப்புல் குடிநீர் வெயில் காலத்தில் அருந்தவேண்டிய ஒரு அற்புதமான பானமாகும்.
தர்ப்பையிலுள்ள நெய்ப்பு, இனிப்பு மற்றும் குளிர்ச்சியின் காரணமாக தாய்ப்பாலையும், சிறுநீரையும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது.
சிறுநீரகத்தில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை சீராக்கக் கூடிய தர்ப்பைக் குடிநீரின் உபயோகத்தின் மூலம் இரத்தத்தில் தேங்கும் யூரியா, க்ரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றகிறது. சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மை தர்ப்பைப்புல்லுக்கு இருக்கிறது.
தண்ணீர் தாகத்தைப் போக்கும்.
சிறுநீரகப்பையில் ஏற்படும் வலி மற்றும் அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்குள்ள பெண்களுக்கும் தர்ப்பைக் குடிநீர் மிகவும் நல்லது என்று பாவப்ரகாசர் எனும் ஆயுர்வேதமுனிவர் குறிப்பிடுகிறார்.
மஞ்சள் காமாலை உபாதையில் கல்லீரலில் உள்ள கிருமித்தொற்று மற்றும் அதிகமான பித்தஊறல் ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது.
இரத்தத்தில் ஏற்படும் காந்தல் மற்றும் அதன்மூலமாக ஏற்படும் இரத்தமூலம், இரத்தக்கசிவு, வாய்ப்புண் சிறுநீரக எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும். நாவிற்கு நல்ல ருசியை ஏற்படுத்தித் தரும்.
Herpes zoster எனப்படும் நரம்பு தொடர்தோல் எழுச்சியில் தர்ப்பைப் புல் தண்ணீரை வெளிப்புறம் மற்றும் உட்புற உபயோகத்தால் அதில் ஏற்படும் எரிச்சல் மற்றும் குத்தல் வலியை நம்மால் போக்கிக் கொள்ள முடியும் என்று நிகண்டுரத்னாகரம் மற்றும் ராஜநிகண்டு எனும் ஆயுர்வேத புத்தகங்களில் குறிப்புகளாக காணப்படுகின்றன.
இத்தனை சிறப்பு வாய்ந்த தர்ப்பை நீரை தமிழகத்தில் கோடைகாலத்தில் பயன்படுத்தி அதன் நிறைவான பலனை அனைவரும் பெற முயற்சிப்பது ஆரோக்கியத்திற்கான ஒரு திறவுகோலாக அமைத்துக் கொள்வோம்.
1950 வருடம் ஏப்ரல் மாதத்தில் கிருஷ்ண பக்ஷ திரயோதசி திதியில் பிரதோஷ தினத்தில் ரமண மகாிஷி மகா சமாதி அடைந்த தினம். அன்று மிகவும் சிரமப்பட்டுத்தான் பாா்வையாளா்கள் அறைக்கு வந்து கொண்டிருந்தாா். அதுபோல் மகாிஷியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பாா்வையாளா் நேரமும் குறைக்கப்பட்டது. 14.04.1950 அன்று மகாிஷியின் உதவியாளா் சுவாமி சத்யானந்தா., மகாிஷியின் கால்களுக்கு மசாஜ் செய்வித்துக் கொண்டிருந்தாா். சாயங்காலம் சுமாா் 05.00 மணியளவில் தன்னை நிமிர்த்தி உட்கார வைக்குமாறு சுவாமி சத்யானந்தாவிடம் மகாிஷி கூறினார். அதே நேரத்தில் அங்கு குழுமியிருந்த பக்தா்கள் “அருணாசல சிவ., அருணாசல சிவ” என்று பக்தி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். அதுவரை சோர்வாக இருந்த மகாிஷியின் முகம் தனது தந்தையின் பெயரிலான சரண கோஷங்களை கேட்டவுடன் பிரகாசமடைந்தது. நீண்ட நேரமாக அவரது கண்களிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்து. சுவாமி சத்யானந்தாவும் தொடா்ச்சியாக அவரது கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு கொதிக்க வைத்த இஞ்சி தண்ணீரை மகாிஷிக்கு புகட்டி கொண்டிருந்தாா்.
மருத்துவா் மகாிஷிக்கு செயற்கை சுவாசம் பொறுத்த நினைத்தாா். ஆனால் மகாிஷி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. மகாிஷியின் சுவாசம் படிப்படியாக குறைந்து வந்து சாியாக இரவு 08.47க்கு ஆடல்வல்லானின் கமல பாதங்களில் சரணடைந்தாா்.
அவா் கடைசி நேரத்தில் கூறியது :
“நான் இறந்து கொண்டிருப்பதாக எல்லோரும் கூறுகிறீர்களே., நான் எங்கும் செல்லவில்லை. நான் எங்கு செல்வது..? இங்கேயே தான் இருக்கிறேன்”
பக்தா்கள் தங்களை தவிக்கவிட்டு மகாிஷி செல்வதாக கதறிய போது மகாிஷி கூறியது:
“நீங்கள் இந்த உடலுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறீர்கள். குருவிற்கு உடல் வடிவம் கிடையாது. அதனால் இந்த பூத உடலை விட நேர்ந்தாலும் குருவுடனா பந்தம் நீடிக்கும். ஒருவருக்கு குரு அருள் கிடைத்து விட்டால் அவா்கள் கைவிடப் படுவதில்லை”
மகாிஷி எங்கேயும் போய்விடவில்லை. அவா் இங்கேதான் இருக்கிறாா்.
மகாிஷியின் பூத உடல் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது நினைவுகளும் போதனைகளும் ஆத்ம விசாரமும் என்றென்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அருணா சலம்என அகமே நினைப்பவா் அகத்தை வேர்அறுப்பாய் அருணாசலா..! - அருணாசல அஷரமணமாலை.
அருணா சலசிவ அருணா சலசிவ அருணா சலசிவ அருணாசலா!
அருணா சலசிவ அருணா சலசிவ அருணா சலசிவ அருணாசலா!
எங்கு திரும்பினாலும் தோல்வி என்ன வாழ்க்கை இது?
வாழ்வோடு போராடி சலித்த ஒருவன் ஞானி ஒருவரை சந்தித்தான்.
"குருவே, எனக்கு ஏன் இந்த நிலைமை? வெள்ளம்போல பிரச்னைகள் என்னை மூழ்கடிக்கின்றன. இனி என்னால் ஒருபோதும் ஊருக்குத் திரும்பவே முடியாது'' என்று குரு முன் நின்று புலம்பினான் அவன்.
குரு அவனைக் கனிவோடு பார்த்தார். தன் அறைக்கு அழைத்துச் சென்று ஆசுவாசப்படுத்தினார்.
அலமாரியில் இருந்த அலங்காரமான ஒரு பெட்டியை எடுத்து வெளியே வைத்தார்.
"மகனே, இது சாதாரணப் பெட்டியல்ல. சகல பிரச்னைகளையும் தீர்க்கும் மந்திரப்பெட்டி. நீ உன் பிரச்னைகள் ஒவ்வொன்றாகச் சொல். அவற்றை இந்தப் பெட்டியில் போட்டுப் பூட்டிவிடுகிறேன். அதன் பின் நீ நிம்மதியாக வாழலாம்'' என்றார்.
குருவின் மீது நம்பிக்கை வைத்துத் தன் பிரச்னைகளை சொல்லத் தொடங்கினான்.
"நான் தொழில் செய்து கொண்டிருந்தேன். அது பெரும் நஷ்டம் அடைந்துவிட்டது. தொழிலுக்காகக் கடன் கொடுத்தவர்கள் எல்லோரும் என்னை நெருக்குகிறார்கள். அவகாசம் கேட்டால்கூடத் தரமறுக்கிறார்கள்.''
குரு, அவன் சொல்லிமுடித்ததும் காற்றில் எதையோ பற்றுவதுபோல் சைகை செய்து அதைப் பெட்டியில் போடுவதைப்போலப் பாவனை செய்தார்.
"ம், அடுத்து...'' என்றார்.
"என் மனைவிக்கு இவை எல்லாம் பிடிக்கவேயில்லை. வீட்டில் அடிக்கடி சண்டை. நிம்மதியாக ஒருநாள் போகமாட்டேன் என்கிறது'' என்றான்.
மீண்டும் அவர் அதேபோலச் செய்தார்.
"ம், அடுத்து...''
"என் பிள்ளைகள் என்னை மதிப்பதேயில்லை. இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டுமா என்றிருக்கிறது.''
குரு மீண்டும் காற்றில் எதையோ பிடித்துப் பெட்டியில் அடைத்தார். பின்பு,
"உன் பிரச்னைகள் எல்லாம் இந்தப் பெட்டியில் அடைக்கப்பட்டுவிட்டன. இனி இவை உன்னைத் தொடராது. எனவே நீ, இங்கு ஒருநாள் தங்கியிருந்துவிட்டு மறுநாள் உன் ஊருக்கே போகலாம்'' என்றார்.
அவனும் அப்படியே ஒருநாள் ஆசிரமத்தில் தங்கி, பின் தன் ஊருக்குப் புறப்பட்டான். இந்த ஒரு நாளில் அவன் மனம் கொஞ்சம் தெளிவடைந்திருந்தது. உண்மையிலேயே, குரு தன் பிரச்னைகளை அந்தப் பெட்டியில் அடைத்துவிட்டார் என்று நம்பினான்.
ஊருக்குத் திரும்பினான். ஊரின் எல்லையிலேயே நின்றிருந்த ஓர் உறவுக்காரர், அவனைக் கண்டதும்
ஓடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டார்.
நல்லா இருக்கியா, எங்கப்பா போன? உன்னைக் காணாம தவிச்சுப் போயிட்டோம்'' என்றார்.
அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
'அட, இவர் நம்மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பவரா? இத்தனை நாள்களில் ஒருநாள்கூட இதை அவர் வெளிப்படுத்தியதே இல்லையே? அதுசரி, நானும்தான் வெளிப்படுத்தியதில்லை. எல்லாம் அந்த மந்திரப் பெட்டியின் மகிமை' என்று நினைத்துக்கொண்டான்.
கொஞ்சம் தூரம் நடந்ததுமே, அவனுக்குக் கடன்கொடுத்த நபர் ஒருவர் எதிர்ப்பட்டார். வழக்கமாக அவரைக் கண்டதும் பயந்து மறைந்து ஓடும் அவன், இந்தமுறை பயப்படவில்லை. அதுதான் குரு அவன் பிரச்னைகளை அடைத்துவிட்டாரே, நேருக்கு நேராக அவரைச் சந்தித்தான்.
கடன்கொடுத்தவரும், அவன் நேருக்கு நேராக வந்து நிற்பதுகண்டு ஆச்சரியப்பட்டார். நேற்றெல்லாம் அவன் ஊரைவிட்டு ஓடிவிட்டான் என்று கேள்விப்பட்டு, அவன் வீட்டுக்குப் போய் விசாரித்து உறுதி செய்துகொண்டார். 'மொத்த பணமும் போச்சே' என்கிற கவலை. மற்றொருபக்கம், 'ஒரு குடும்பத்தையே தெருவில் நிறுத்திவிட்டானே ' என்கிற வருத்தமும் நிறைந்திருந்தது. அவனை மீண்டும் கண்டது அவருக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது.
"என்னப்பா நீ? பணம் கொடுக்காமலும், பதில் சொல்லாமலும் நழுவி ஓடிக்கொண்டிருந்தாயே என்று நினைத்து கொஞ்சம் கறாராய்ப் பேசினேனே தவிர வேறு ஒன்றும் இல்லை. மனதில் வைத்துக்கொள்ளாதே. உன் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் திருப்பிக் கொடு" என்று சொன்னார்.
இதைக் கேட்டதும் அவன் மனம் நெகிழ்ந்தது.
"ஐயா,மன்னித்துவிடுங்கள். நான் செய்த சில தவறுகளால் தொழிலில் பணத்தை இழந்துவிட்டேன். கூடிய சீக்கிரம் நல்ல முறையில் தொழில் செய்து, உங்கள் கடனை அடைந்துவிடுகிறேன்" என்றான். அவரும் 'சரி' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
மந்திரப் பெட்டியின் மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கை இப்போது இரட்டிப்பாகிவிட்டது. ஆனாலும், 'சும்மாவே சண்டையிடும் மனைவி என்ன சொல்வாளோ' என்று பயந்தான். வீட்டை நோக்கிப் போனான்.
அவனைக் கண்டதும் அவன் மனைவி ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தாள். அவனை உபசரித்து," சாதாரணப் பணப்பிரச்னைக்காக நீங்கள் இப்படி வருந்தலாமா? இனி எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் உணவு உண்ண வாருங்கள்" என்றாள்.
பிள்ளைகளும், அப்பா வந்துவிட்டதை அறிந்து வீடு திரும்பி அவரைக் கட்டிக்கொண்டன. அவனுக்கு எல்லாம் புதியதாக இருந்தது. அன்றைய இரவில் தீர்க்கமாக ஆலோசித்து மறுநாள், மீண்டும் தொழில் தொடங்கினான்.
எதிர்பார்த்ததைவிடத் தொழில் சிறப்பாக நடந்தது. கடனை அடைத்து முடித்தான். கொஞ்சம் பணமும் சேர்ந்தது.
இவற்றுக்கெல்லாம் காரணமான குருவைச் சந்தித்து நன்றிகூற விரும்பினான்.
ஒருநாள் காணிக்கைகளை எடுத்து கொண்டு குருவினைக் காணச் சென்றான். காணிக்கைகளை குருவிடம் சமர்ப்பித்து வணங்கினான்.
"குருவே, அன்று நீங்கள் மட்டும் என் பிரச்னைகளை அந்தப் பெட்டியில் அடைக்காவிட்டால், நான் இந்த நேரம் என்ன ஆகியிருப்பேன் என்றே தெரியவில்லை. உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்..." என்று நெகிழ்ச்சியோடு கூறினான்.
குரு சிரித்துக்கொண்டே, "மகனே, அந்தப் பெட்டியில் உண்மையில் நான் எதையும் அடைக்கவில்லை. உன் பிரச்னைகளைக் கேட்டுக்கொண்டேன், அவ்வளவுதான். நீ பெருங்குழப்பத்தில் இருந்தாய். குழப்பத்தில் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாக இருக்காது. மேலும், நீ பிரச்னைகளில் இருந்து தப்பிப் போக நினைத்தாய்.
அது தவறு. மாறாக, பிரச்னைகளில் இருந்து விலகி நின்று யோசித்தால் மட்டுமே அதைத் தீர்க்கமுடியும்.
உன் பிரச்னைகள் உன்னைவிட்டு நீங்கிவிட்டன என்று நான் சொன்னதை நம்பி, நீ முற்றிலும் அதிலிருந்து விலகி நின்று அவற்றைப் பார்த்தாய்.
அவற்றின் தன்மைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு தீர்க்க முனைந்தாய், அதில் வெற்றியும் பெற்றாய். இதில் என் மாயம் எதுவும் இல்லை" என்றார் குரு.
அவன் கண்ணீரோடு குருவைப் பணிந்தான்.
துன்பங்கள் சூழ்ந்து அழுத்தும்போது இது சுமையே அல்ல என்று துணிச்சலுடன் சொல்லுங்கள்.
துன்பம் சிதறி ஓடுவதை உங்கள் அறிவால் உணர்வீர்கள். துன்பத்தில் இருந்து நிரந்தர விடுதலை பெறுவீர்கள்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உருவாகும். பழகும் தன்மையில் மாற்றங்கள் காணப்படும். புதிய முயற்சிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். செயல்பாடுகளில் இருந்த எதிர்ப்புகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ரிஷபம்
பயணம் தொடர்பான செயல்களில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மனை வாங்குதல் மற்றும் விற்றல் பணிகளில் மேன்மை ஏற்படும். பணி புரியும் இடத்தில் நன்மைகள் உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மதிப்புகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். தனவரவு தாராளமாக இருக்கும். வாகனங்களால் முன்னேற்றம் ஏற்படும். பெரியோர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நிர்வாக துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்த தயக்கங்கள் குறையும். லாபம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
வியாபாரத்தில் சாதகமான சூழல்கள் ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். கால்நடை செயல்களில் சிந்தித்து செயல்படவும். வீடு மாற்ற சிந்தனைகள் மேம்படும். அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் குறையும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
சிம்மம்
குடும்ப உறுப்பினர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழல்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த ஆதரவுகள் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கிய விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். அக்கம்பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
குடும்பத்தில் புதிய நபர்களினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். அரசு சார்ந்த நிலைபாடுகளை புரிந்து கொள்வீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெறுவீர்கள். வியாபார பணிகளில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
துலாம்
மனதில் ஒரு விதமான குழப்பமும் அமைதியின்மைக்கான சூழ்நிலையும் உருவாகும். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும். உடல் தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்கள் காணப்படும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
விருச்சிகம்
காது தொடர்பான இன்னல்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ரகசியமான சில முதலீடுகள் மேம்படும். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் நயமான பேச்சுக்களால் நன்மைகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
தனுசு
வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மகரம்
நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களால் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரம் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புதிய துறை சார்ந்த தேடல்கள் ஏற்படும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். மாமியார் உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். சமூகப் பணிகளில் அலைச்சல் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். திட்டமிட்ட சில காரியங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில்நுட்ப கருவிகளால் விரயங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 3.4.2026.
இன்று காலை 08.51 வரை பிரதமை. பின்னர் துவிதியை.
இன்று இரவு 07.25 வரை சித்திரை. பின்னர் சுவாதி.
இன்று பிற்பகல் 02.06 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம்.
இன்று காலை 08.51 வரை கௌலவம். பின்னர் இரவு 09.30 வரை தைத்தூலம். பிறகு கரசை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- நடிகை நதியா அக்டோபர் 24, 1966-இல் பிறந்தார்.
- நடிகை நதியாவின் இயற்பெயர் ஜெரினா மொய்டு.
- இவர் முதல் முதலாக 1984 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான நோக்கேத தூரத்து கண்ணும் நாடு என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி அந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதையும் வென்றிருக்கிறார்.
- 1985-ல் தமிழில் பூவே பூச்சூடவா திரைப்படம் மூலம் அறிமுகமாகி மிகவும் பிரபலமானார்.
- 80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.
- பிரபு, சத்யராஜ், ரஜினி, விஜயகாந்த், சுரேஷ், மோகன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
- இவரது ஸ்டைலான தோற்றமும், தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களும் இன்றும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
- திரையுலகில் நல்ல மார்க்கெட் இருக்கும் போதே தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறியா நடிகை நதியா, பல வருடம் கழித்து 2004-ம் ஆண்டு ஜெயம் ரவியின் கியூட் அம்மாவாக எம்.குமரன் சன் ஆஃப் மஹாலக்ஷ்மி படத்தின் மூலம் ஸ்ட்ராங் ரீ என்ட்ரி கம்பேக் கொடுத்தார்.
- 80ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது 2கே கிட்ஸ்களும் ரசிக்கும் நடிகையாக இருந்து வருகிறார்.
- நடிகை நதியா 1988 இல் ஷிரிஷ் காட்போல் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
- நடிகை நதியாவிற்கு சனம் மற்றும் ஜனா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
- திருமணத்திற்கு பிறகு தனது கணவர் மற்றும் மகள்களுடன் அமெரிக்காவில் வசித்து வந்த நடிகை நதியா 2008 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பி வந்தார். தற்போது இவர் மும்பையில் வசித்து வருகிறார்.
ஒரு காட்டில் சிங்கமும், காக்கையும் நண்பர்களாயிருந்தனர். ஒருநாள், அவை இரண்டிற்கும் உணவு கிடைக்காததால் மிகுந்த பசியால் வாடின. அதனால், அவை கடவுளிடம், 'தங்கள் பசியைப் போக்கியருள வேண்டும்...' என்று வேண்டிக் கொண்டன.
அவைகளின் வேண்டுகோளுக்கு கடவுளும் செவி சாய்த்தார். சிறிது நேரத்திற்கு பின், சிங்கத்தின் கண்ணில் ஒரு யானை தென்பட்டது. உடனே பாய்ந்து அதைக் கொன்று தின்றது,சிங்கம்.
அதேநேரம் காக்கைக்கு ஒரு எலி கிடைத்தது.
பின்னர், காக்கையிடம், 'உன்னைவிட நானே அதிர்ஷ்டசாலி. எப்படியென்றால் எனக்கு மிகப்பெரிய உணவைக் கொடுத்த கடவுள், உனக்கோ அற்பமான ஒரு சிறு உணவை கொடுத்து விட்டார்...' என்று ஏளனம் செய்தது, சிங்கம்.
அதற்கு, 'சிங்கமே, உண்மை புரியாமல் உளறாதே. கடவுளிடம் பாரபட்சத்தைப் பார்க்கக் கூடாது. அவர், உன் பசி தீர ஒரு யானையைக் கொடுத்தார். என் பசி தீர ஒரு எலியைக் கொடுத்தார். நம்மில் யாருக்கு பெரிய உணவை கொடுத்தார் என்பது முக்கியமல்ல. நம் இருவரின் பசி தீர்ந்ததா என்பதே முக்கியம்...'.
'ஒருவேளை கடவுள் உனக்கு கொடுத்ததுபோல், எனக்கும் யானையை கொடுத்திருந்தால் அதை என்னால் கொல்ல முடியுமா? கொன்றாலும் அதை முழுவதுமாக என்னால் உண்ண முடியுமா?
அல்லது என்னைப்போல் உனக்கு எலியைக் கொடுத்திருந்தால், அதை என்னைப்போல் பிடிக்க முடியுமா? பிடித்து தின்றாலும் உன்னுடைய பசி அடங்கியிருக்குமா?' என்று அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டது, காக்கை.
பதில் ஏதும் பேச முடியாமல், மவுனமாய் நின்றுக் கொண்டிருந்தது, சிங்கம்.
கடவுள் எல்லா உயிரினங்களுக்கும் ஒரே மாதிரியான உணவை அளிப்பதில்லை. ஒவ்வொரு உயிரினத்தின் உடலுக்கும், தகுதிக்கும் ஏற்றவாறே உணவை அளிக்கிறார்.
அதேபோல வசதி படைத்தவர்கள் கடவுளுக்காக ஆடம்பரமான வகையில் தான, தர்மங்களும் பூஜைகளும் செய்வர். அதைப் பார்த்து தங்களால் இந்த மாதிரி செய்ய முடியவில்லையே என்று ஏழைகள் வருத்தப்படக் கூடாது. அவரவர் தகுதிக்கேற்ற அளவுக்கு, கடவுளுக்கு அர்ப்பணம் செய்து வழிபடலாம்.
துாய பக்தியுடன் பயனை எதிர்பார்க்காமல் செய்யப்படும் அர்ப்பணங்களை கடவுள் பாகுபாடின்றி நிச்சயமாக ஏற்றுக் கொண்டு அருள் புரிகிறார்.
அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார்.
என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள்.
அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.
ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.
அக்பர் யோசித்தார்.
பீர்பாலை பார்த்தார்.
பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்.
மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.
மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.
அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.
அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.
கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன்.
அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.
பயம் ஒரு பெரிய நோய் என்றார்.
நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.
ஒரு ஊரில் ஒருவர் இருந்தார். மிகவும் நல்லவர். யாருக்காவது ஏதாவது கொடுத்துக் கொண்டே இருப்பார். தினமும் யாராவது ஒருவருக்கு ஏதாவது கொடுக்கவில்லை என்றால் அவருக்கு தூக்கம் வராது. அப்படி ஒரு பழக்கம். அதுமட்டுமல்ல அவர் கொடுப்பது அடுத்தவர்களுக்கு தெரியாது. அவ்வளவு ரகசியமாக கொடுப்பார்.
ஒரு நாள் இரவு அவர் ஏற்கனவே தயாராக கட்டி வைத்திருந்த பண முடிப்பை கையில் எடுத்துக் கொண்டார். வீட்டை விட்டு வெளியில் வந்தார். தெருவில் இறங்கி நடந்தார். இன்றைக்கு யாருக்கு தர்மம் செய்வது என்று யோசித்துக் கொண்டே இருட்டில் நடந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் ஒருவர் வருவது போல் இருந்தது. உடனே அவரிடம் போனார் . தன்னிடமிருந்த பண முடிப்பை அவசரம் அவசரமாக அவர் கையில் திணித்து விட்டு திரும்பி வந்துவிட்டார்.
அப்பாடா ஒரு வழியாக தருமம் செய்தாகி விட்டது என்கின்ற மகிழ்ச்சி.. மனநிறைவு அவர் முகத்தில்.. நிம்மதியாக தூங்கி எழும்பினார்.
மறுநாள் காலையில் ஊர் பூராவும் ஒரே பேச்சு . நேத்து ராத்திரி ஒரு திருடன் கையில் யாரோ பணத்தை கொடுத்து விட்டு போய் விட்டார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இதை கேள்விப்பட்டதும் பெரியவருக்கு வருத்தமாகிவிட்டது. போயும் போயும் ஒரு திருடனுக்கு உதவி செய்தோம் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டதே என்று நினைத்தார்.
சரி இன்றைக்கு யாருக்காவது உதவி செய்வோம் என்று முடிவு பண்ணினார். எதிரில் ஒரு பெண்ணின் உருவம் மங்கலாகத் தெரிந்தது. உடனே அந்தப் பெண்ணிடம் பணத்தை கொடுத்துவிட்டு போனார். மறுநாள் காலையில் ஊர் பூராவும் நேத்து ராத்திரி விபச்சார பெண்ணின் கையில் யாரோ பணத்தை கொடுத்து விட்டு போய் இருக்கிறார்கள் என்று பேச்சு. அடடா இன்றைக்கும் தவறு நடந்து விட்டது என்று வருத்தப்பட்டார். இருக்கட்டும் இன்றைக்கும் ஏதாவது தர்மம் செய்வோம் என்று நினைத்தார்.
மூன்றாம் நாள் இரவும் புறப்பட்டார். அப்போதும் எதிரில் ஒருவர் வந்தார். இவர் பணத்தை கொடுத்தார். மறுநாள் மக்கள் இரவு ஒரு செல்வந்தர் கையில் யாரோ பணத்தை கொடுத்துவிட்டு போய் இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
தினம் தினம் இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்துக் கொண்டு படுத்து தூங்கினார். அன்று இரவு ஒரு கனவு. அந்த கனவில் இறைவன் வந்தார். நீ கொடுத்த தர்மம் வீணாகப் போய்விடவில்லை. உன்னிடம் பணம் வாங்கிய அந்த திருடன் தவறை உணர்ந்து திருந்தி விட்டான். அந்தப் பெண்ணும் தெளிந்து திருந்திவிட்டாள். அந்த செல்வந்தனும் கொடையாளி ஆகிவிட்டான் என்று கடவுள் சொன்னார். அதாவது நல்ல மனதுடன் தர்மம் செய்தால் அது ஒருபோதும் வீணாகப் போய் விடாது. அது மட்டுமல்லாமல் தருமம் தன்னை மட்டுமல்ல அடுத்தவர்களையும் தீமையிலிருந்து காப்பாற்று சக்தி வாய்ந்தது.
- எளிமையான உணவுகளில்கூட நல்ல ஊட்டச்சத்துகள் நிரம்பியிருப்பது நம்மை ஆச்சரியப்படுத்தலாம். அப்படிப்பட்ட எளிய உணவுகளில் ஒன்றுதான் அவித்த வேர்க்கடலை.
- நிலக்கடலையில் உள்ள குறைந்த கிளைஸ்மிக் இன்டெக்ஸ் உடலின் இரத்த சர்க்கரை அளவை சரியாக வைக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் அதிகரிப்பது தவிர்க்கப்படுகிறது.
- வறுத்த நிலக்கடலையை விட வேகவைத்த நிலக்கடலையில் சத்துக்கள் அதிகம் என கூறப்படுகிறது.
- வேகவைத்த நிலக்கடலையில் புரதம், வைட்டமின்கள், மினரல்கள் அதிகம் உள்ளன. இது உண்பதற்கு மிகுந்த சுவையாக இருப்பதோடு, சத்துக்களையும் அள்ளித் தருகிறது.
- நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
- வேகவைத்த நிலக்கடலையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. மகாத்மா காந்தி தினமும் அவித்த வேர்க்கடலை ஒரு கைப்பிடியும் ஆட்டுப்பாலும்தான் முக்கிய உணவாக எடுத்துக்கொண்டார்.
- தினமும் 40 கிலோ மீட்டர் தொலைவு நடக்கும் வலிமையை அது அவருக்குத் தந்தது என்று சத்திய சோதனை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



