·   ·  10 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 705
  • More

நயாகரா வீழ்ச்சி

Canada Day நயாகரா வீழ்ச்சி

Comments (0)
Login or Join to comment.
·
Added a news

ஈரான் அரசுக்கு எதிர்ப்பை வெளியிட்டு கனடாவின் வன்கூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஈரான்–கனடியர்கள் சேர்ந்த இரண்டு வெவ்வேறு குழுக்கள் வன்கூவரில் போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.

1979 முதல் ஈரானை ஆட்சி செய்து வரும் இஸ்லாமிய குடியரசு ஆட்சியால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களின் நிலையை வெளிச்சம் போடுவதே இவர்களின் நோக்கமாக இருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

இப்போது நடைபெறும் போராட்டங்களுக்கு முக்கிய காரணமாக, ஈரானை ஆட்டிப்படைக்கும் பொருளாதார நெருக்கடி குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக ஈரான் நாணயத்தின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

முன்னதாக நடைபெற்ற ஈரான் போராட்டங்கள் வன்முறையால் ஒடுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் 86 வயதான உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனெயி, “கலவரக்காரர்கள் தக்க இடத்தில் நிறுத்தப்பட வேண்டும்” என்று சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் போராட்டக்காரர்களுக்கு கனடா அரசியல் தலைவர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  • 107
  • 108
  • 109
·
Added a post

ஒரு மகான் ஒரு ஏழைக்கு காட்டிய வழி!

ஒரு ஊரில் ஆகக் கடைசியான வறுமைக்கோட்டில் குடும்பம் ஒன்று இருந்தது.

வாழ்ந்து கெட்ட குடும்பம். தலைவன், தலைவி, மகன், மகள் என நான்கு பேர் இருந்தனர்.

சோம்பேறிகள் இல்லை என்றாலும் அவர்களுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. கால் வயிற்றைக்கூட தண்ணீரில்தான் கழுவிக் கொண்டனர். கண்ணீர் வடிக்கக் கூட தெம்பற்ற நிலை.

இவர்களின் நிலையைப் பார்த்து பரிதாப்பட்ட ஒருவர், அந்த ஊரின் மலையடிவாரத்தில் காலம் கழித்துக் கொண்டிருக்கும் ஒரு சாமியாரைப் போய் பாருங்கள். ஏதாவது வழி சொல்வார் என்றார்.

சரியென்று அடுத்த நாள் அதிகாலையிலேயே கிளம்பி சாமியை பார்க்க சென்றார். ஒரு ஓலைக் குடிசையில் சாமி சப்பணமிட்டு அமர்ந்து ஏதோ தியானம் செய்து கொண்டிருந்தார். தியானத்தை முடிக்கும் வரை காத்திருந்த அவர், "சாமி நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்!" என்றார்.

"சொல் மகனே! என்ன பிரச்சினை உனக்கு ? "

"சாமி! எங்க குடும்பத்துல என்னையும் சேர்த்து நாலு பேர் இருக்கோம். வசதியா வாழ்ந்து நொடிச்சுப் போனதால இந்த ஊருல எங்கள்ல யாருக்குமே வேலை கிடைக்கல.

நல்லா சாப்பிட்டு பல மாசம் ஆகிப் போச்சு. உங்களை சந்திச்சா ஏதாவது நல்ல வழி சொல்வீங்கனு ஒருத்தர் சொன்னார். அதான் வந்தேன் சாமி " என்றார் பவ்யமாக.

"உனக்கு உழைத்து சாப்பிட ஆசையா, முன்பு போல் உட்கார்ந்து சாப்பிட ஆசையா? "

"உட்கார்ந்து சாப்பிட்டு கெட்டது போதும். இனி உழைத்து சாப்பிடத்தான் ஆசை சாமி "

"சரி அதோ அந்த மூலையில் ஒரு மூடை அரிசியும் அந்த அரிசி தீரும் வரைக்குமான மளிகைப் பொருட்களும் இருக்கின்றன. எடுத்துக் கொள் "

"சாமி நான் உட்கார்ந்து சாப்பிட விரும்பவில்லை. இது தீர்ந்த பின் மீண்டும் இதே நிலைக்குதான் வருவேன். நிரந்தர தீர்வு தாருங்கள் சாமி "

"அவசரப்படாதே மகனே. நான் சொல்வதை மட்டும் செய். ஆனால் ஒரு நிபந்தனை. இன்று கால் படி அரிசியை சமை. நாளை அதை இரட்டிப்பாக்கி அரைப் படி சமை.

நாளை மறுநாள் அதையும் இரட்டிப்பாக்கி ஒரு படி அரிசி சமை. இப்படியே ஒவ்வொரு நாளும் முதல் நாளை விட இரட்டிப்பாக சமை. ஒரு அரிசி கூட வீணாக கூடாது.

என்னைக் கேட்காமல் உன் வீட்டார் தவிர யாருக்கும் சாப்பாடு போடக் கூடாது"

"சாமி இதெப்படி நிரந்தர தீர்வாகும்? "

"நான் சொல்வதை மட்டும் செய்வதென்றால் இவற்றை எடுத்துப் போ. இல்லையென்றால் நீ இப்படியே போகலாம் "

"நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன்.

கோவப்படாதீங்க சாமி"

சாமி சிரித்துக் கொள்ள, அரிசியையும் மளிகைப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

அன்று கால் படி அரிசி சமைத்து கொஞ்சமாய் குழம்பு வைத்து நான்கு பேரும் சாப்பிட்டார்கள். அனைவருக்கும் அரை வயிறு நிரம்பியது.

அடுத்த நாள் அரைப்படி சமைத்து குழம்பு வைத்து வயிறாற சாப்பிட்டார்கள். மூன்றாம் நாள் ஒரு படி சமைத்து சாப்பிட்டது போக பாதி சாதம் மிஞ்சியது.

வீணாக்க கூடாதே என்ன செய்வது என யோசித்தவர், அடுத்த அரை மணி நேரத்தில் சாமியிடம் ஓடினார்.

"சாமி நீங்கள் சொன்னது போல ஒவ்வொரு நாளும் இரட்டிப்பாக சமைத்தேன். ஆனால் இன்று பாதி மிஞ்சி விட்டது.

என்னைக் கேட்காமல் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றீர்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டும். எங்களுக்கு அரைப்படியே போதுமானது. அதை மட்டும் தினமும் சமைத்துக் கொள்ளவா? "

"அரிசி தீரும் வரை இரட்டிப்பாக சமைப்பதை நிறுத்தக் கூடாது என்பது நிபந்தனை.

மிஞ்சியதை அக்கம் பக்கத்தினருக்கு கொடு"

"சரிங்க சாமி " கும்பிட்டு விட்டு கிளம்பினார். வீட்டிற்கு சென்றதும் மிஞ்சிய சாதத்தை அக்கம் பக்கத்தினர் நான்கு பேருக்கு கொடுத்தார்.

அவர்கள் சாப்பிட்டு விட்டு "ஆகா அருமையான சாப்பாடு" என புகழ்ந்தார்கள்.

மறுநாள் இரண்டு படி அரிசியைப் பொங்கி சாப்பிட்டது போக பதினைந்து பேர் அளவு சாப்பாடு மிஞ்சியது.

இப்படியே போனால் அரிசி ஒருவாரத்தில் முடிந்து விடுமே என்ற கவலையில் மீண்டும் சாமியைப் பார்க்க ஓடினார்.

"சாமி இன்னைக்கு பதினைந்து ஆள் சாப்பாடு மிஞ்சி விட்டது. இப்படி சமைத்தால் ஒருவாரம் கூட அரிசி வராதே "

"நீ சுவையாக சமைக்கிறாயா? "

"ஆமாம் சாமி. நேற்று சாப்பிட்ட அனைவரும் எந்த ஓட்டல்லயும் இவ்வளவு ருசியான சாப்பாடு கிடைப்பதில்லைனு பேசிக்கிறாங்க "

"அப்படியானால் மீதமாகும் சாப்பாட்டை நீ விற்பனை செய்"

"சரிங்க சாமி " என்று சந்தோசமாய் வணங்கி வீட்டுக்கு வந்தவர் சாப்பாடு நாற்பது ரூபாயென விற்க ஆரம்பித்தார். பத்து சாப்பாடு மட்டுமே விற்றது.

அஞ்சு சாப்பாடு மிஞ்சியது.

அடடா இன்னைக்கு பதினைஞ்சு சாப்பாடே விக்கல. நாளைக்கு எப்படி நாப்பது சாப்பாட்டை விக்கிறது என்ற கவலை வர அடுத்த அரைமணி நேரத்தில் சாமியின் முன் நின்றார்.

"சாமி பத்து சாப்பாடுதான் வித்துச்சு. இன்னைக்கே அஞ்சு மிஞ்சிருச்சு. நாளைக்கு நாலு படி பொங்குனா வீணாப் போகுமே சாமி "

"ஒரு சாப்பாடு எவ்வளவுனு வித்தே? "

"நாப்பது ரூபாய்க்கு வித்தேன் சாமி "

"ஒரு சாப்பாட்டுக்கு எவ்வளவு செலவாகும்? "

"ஒரு சாதத்துக்கு அஞ்சு ரூபா வச்சா குழம்பு மற்றும் தொட்டுக் கொள்ளும் வகையறாக்களுக்கு பத்து ரூபாயாகும். மொத்தம் ஒரு சாப்பாட்டுக்கு பதினைந்து ரூபாய் செலவாகும் சாமி "

"உன் உழைப்புக்கு அஞ்சு ரூபாய் சேர்த்து வச்சாலும் ஒரு சாப்பாடு தயாரிக்க ஆகும் செலவு இருபது ரூபாயை தாண்டாது. நீ அதையும் இரு மடங்காங்கி விற்றால் எப்படி விற்பனையாகும்? "

"அப்படி விற்றால்தானே நாளை ஏதோ ஒரு வகையில் நஷ்டம் வரும் போது சமாளிக்க முடியும் "

"இதுதான் நிறையப் பேர் செய்யும் தவறு. குறைந்த லாபம் அதிக விற்பனை என்பதே புத்திசாலிகள் கடைபிடிக்கும் அழகான வியாபார முறை.

நாம் செய்யும் தொழிலில் அனைவருக்கும் பயன் இருக்க வேண்டும். நாம் மட்டும் வாழ்ந்தால் போதுமென நினைப்பவன் நல்ல வியாபாரி ஆக முடியாது "

"இப்போது நான் எவ்வளவு விலை வைக்க வேண்டும் சாமி "

"உன் குடிசையின் முன்னால், 'வீட்டுமுறை சாப்பாடு ரூபாய் இருபது மட்டும்' என்று ஒரு அட்டையில் எழுதி தொங்கவிடு "

"சரிங்க சாமி " என்று அரை மனதுடனே நகன்றார் அவர்.

அடுத்த நாளிலிருந்து இருபது ரூபாய்க்கு சாப்பாடு விற்பனை செய்ய சக்கை போடு போடத் தொடங்கியது.

வியாபாரம்.

நான்கே நாட்களில் அரிசி மூடை காலியாக, அதுவரை சேர்ந்த பணத்தை எடுத்துக் கொண்டு சாமியிடம் சென்றார். அவர் முகத்தில் பார்த்த சந்தோசத்தை கண்டு சாமி கேட்டார்.

"என்ன மகனே மகிழ்ச்சியாய் இருக்கிறாயா? "

"தங்கள் ஆசியாலும் ஆலோசனையாலும் மிக நலமாக இருக்கிறேன் சாமி. இந்தாங்க ... இதுவரை சாப்பாடு விற்ற பணம். இது உங்களைச் சேர வேண்டியது சாமி"

"அதை நீயே வைத்துக் கொள். அதில் மூன்று மூடை அரிசியும் மூன்று பை மளிகைப் பொருட்களும் வாங்கி, ஒரு மூடையை நீ வைத்துக் கொள் . நான் கொடுத்த மூடைக்கு இரட்டிப்பு கணக்கில் இரண்டு மூடைகளை எனக்குக் கொடுத்து விடு. இனி நீ உன் வியாபாரத்திலிருந்து எனக்கு எதுவும் தர வேண்டியதில்லை"

"உங்களுக்கு எதற்கு சாமி இரண்டு மூடை அரிசியும் மளிகையும் "

"உன்னைப் போல் இன்னும் பல தங்க மகன்களை உருவாக்கும் பணி இருக்கிறது மகனே! "

"மகானே!" என்று அவரின் கால்களில் விழுந்தார் அவர் !

  • 113
  • 114
  • 117
  • 120
  • 120
  • 121
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். வாசனை திரவிய வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுக இடையூறுகள் ஏற்படும். சில அனுபவம் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

ரிஷபம்

வியாபார பணிகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவுகள் வழியில் இருந்த வேறுபாடுகள் குறையும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மிதுனம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். தோற்றப்பொழிவில் மாற்றம் ஏற்படும். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சகோதரர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

கடகம்

எதிலும் நேர்மறை சிந்தனை உடன் செயல்படவும். மற்றவர்கள் மூலம் நெருக்கடியான சூழல்கள் உண்டாகும். புதிய நபர்களை நம்பி செயல்படுவது தவிர்க்கவும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். மனதளவில் இறுக்கமான சூழல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடுதலாகும். எதிர்ப்பு விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

சிம்மம்

தந்தை வழி உறவுகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொலைதூர பயண வாய்ப்புகள் சாதகமாகும். சஞ்சலமான சிந்தனைகளால் மனதில் குழப்பம் மேம்படும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். தன வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

கன்னி

வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். உறவினர்கள் வழியில் புரிதல்கள் ஏற்படும். ஆன்மீக தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

துலாம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உருவாகும். இணையம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். உயர்கல்வி தொடர்பான தேடல்கள் அதிகரிக்கும். வர்த்தக துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் மேன்மையான சூழநிலைகள் உண்டாகும். கற்பிக்கும் செயல்பாடுகளில் சில புதுமைகள் காணப்படும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

விருச்சிகம்

திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்கள் ஆதரவுகள் கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

தனுசு

சொத்து பிரச்சனைகள் சமூகமாக முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கலைத்துறையில் சாதகமான சூழல்கள் ஏற்படும். தாய் மாமன் வழியில் இருந்த வேறுபாடுகள் மறையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளால் மதிப்புகள் உயரும். கடனை அடைப்பதற்கான வழிகள் கிடைக்கும். செலவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

 

மகரம்

வெளியூர் பயணங்கள் நன்மை தரும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். கலைத்துறையில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். நிர்வாக துறைகளில் உயர்வு ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தடங்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கும்பம்

எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். நண்பர்கள் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். செயல்களில் இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்களின் ஒத்துழைப்புகள் சாதகமாகும். உயர் அதிகாரிகள் வழியில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். திடீர் பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மீனம்

வருமான உயர்வு குறித்த முயற்சிகள் மேம்படும். உடன் இருப்பவர்களின் சுயரூபங்களை அறிவீர்கள். நண்பர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். மனதளவில் திருப்தி ஏற்படும். உத்தியோகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

  • 352
·
Added a post

விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 4.1.2026.

இன்று பிற்பகல் 02.53 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று மாலை 05.49 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.

இன்று காலை 07.31 வரை ஐந்தரம். பின்னர் வைதிருதி.

இன்று அதிகாலை 03.47 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 02.53 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=379&dpx=2&t=1767508284

நல்ல நேரம்:

காலை : 06.00 முதல் 07.00 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 373
  • 367
  • 366

Good Morning...

  • 369

வேண்டாத கற்களை நீக்கினால்,

சிற்பம்.

வேண்டாத கவலைகளை நீக்கினால்,

இன்பம்!

  • 589
·
Added a news

பனிப்புயலையும் பொருட்படுத்தாமல், பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்ணுக்கு இந்திய சாரதி ஒருவர் செய்த உதவிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

கடந்த சனிக்கிழமை இரவு, கனடாவின் கால்கரியில் கடுமையான பனிப்புயல் வீசிக்கொண்டிருக்கும் நேரத்தில், டாக்ஸி சாரதியும் இந்திய வம்சாவளியினருமான ஹர்தீப் சிங் தூருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

பிரசவ வலியில் துடித்த பெண்ணொருவரை சிங்குடைய டாக்ஸியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வரமுடியுமா என அந்தப் பெண்ணின் கணவர் கேட்க, கடும் பனிப்புயல் வீசிக்கொண்டிருந்த நிலைமையிலும் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சம்மதித்துள்ளார் சிங். ஆனால், மருத்துவமனையை அடையும் முன்பே, காரின் பின் சீட்டில் குழந்தையை பிரசவித்துள்ளார் அந்தப் பெண்.

விரைவாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்ததால் அந்தப் பெண்ணின் கணவர் மிகவும் நெகிழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கும் சிங், பின்னர், தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தன்னை அழைத்து தகவல் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தனது காரில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது இதுவே முதல் முறை என கூறும் சிங், அது தனது வாழ்வில் மறக்க இயலாத தருணம் என நெகிழ்கிறார். இந்நிலையில், ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய தூதரான அஜித் சிங் உட்பட, பலரும், அந்த பெண்ணுக்கு உதவிய டெக்ஸியின் சாரதியான சிங்குக்கு புகழாரம் சூட்டிவருகிறார்கள்.

  • 594
  • 847
  • 846
  • 851
·
Added a post

விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை 3.1.2026.

இன்று மாலை 04.42 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.

இன்று மாலை 06.56 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.

இன்று காலை 10.18 வரை பிராமியம். பின்னர் ஐந்தரம்.

இன்று அதிகாலை 05.42 வரை பத்தரை. பின்னர் மாலை 06.43 வரை பவம். பின்பு பாலவம்.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=378&dpx=2&t=1767418566

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 12.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 864
·
Added a post

லெபனானன் (Lebanon) நாட்டில், பெரும் பணக்காரர்களில் ஒருவர் Emile Bustani.

Beirut நகரில், தமக்காகவே அழகழகாக ஒரு கல்லறையை பார்த்துப் பார்த்துக் கட்டினார்.

சொந்தமாக ஒரு ஜெட் விமானம். அதில் அவர் தனியாகவே பயணம் செய்வார்.

ஒருநாள் அந்த விமானம் கடலில் விழுந்தது. அவரது உடலைத் தேட மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவிடப்பட்டன.

ஆனால்… விமானம் மட்டும் கிடைத்தது. உடல் கிடைக்கவே இல்லை.

அவர் கட்டி வைத்த அந்த கல்லறையில் அடக்கம் செய்ய கூட உடல் இல்லை.

இன்னொரு சம்பவம்…

பிரிட்டனைச் சேர்ந்த பெரும் பணக்கார யூதர் Rothschild. அளவற்ற செல்வம். சில நேரங்களில் பிரிட்டன் அரசுக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு.

ரொக்கமாக இருந்த செல்வத்தை பாதுகாப்பாக வைக்க அதிநவீன பாதுகாப்புடன் ஒரு தனி அறை.

ஒருநாள் அறைக்குள் நுழைந்தவர், அறியாமலே கதவை அடைத்துவிட்டார்.

அவ்வளவுதான்… கதவு திறக்கவே இல்லை. சத்தம் போட்டார். கத்தினார்.

யாருக்கும் கேட்கவில்லை.

ஏன் என்றால், அது வீடு அல்ல… அரண்மனை.

பல நாட்கள் அங்கிருந்து உல்லாசப் பயணம் சென்று விடுவார். அன்றும் அப்படித்தான் சென்றிருப்பார் என்று குடும்பத்தினர் நினைத்தனர்.

பசியாலும் தாகத்தாலும், பணக்கட்டுகளின் மேல் கிடந்தபடியே உயிர் பிரிந்தார்.

மரணத்திற்கு முன், விரலை காயப்படுத்தி சுவரில் எழுதினார்:

“உலகிலேயே பெரும் பணக்காரன் பசியாலும் தாகத்தாலும் இறக்கிறான்.”

சில வாரங்கள் கழித்தே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு உண்மைச் செய்தி…

“பணம் இருந்தால் எல்லாம் கட்டுப்பாட்டில்” என்று நினைப்பவர்களுக்கு—

ஒருநாள் இந்த உலகை பிரிந்தே ஆக வேண்டும். ஆனால்… எங்கே?

எப்போது? எப்படி?

இதை யாராலும் கணிக்க முடியாது. உல்லாசப் பயணத்திற்கு போனால் திரும்பி வரலாம்.

ஆனால்… உலகை பிரிந்தால் திரும்ப வர முடியுமா?

ஆகவே…

• யாரையும் வெறுக்காமல் • யாரையும் ஒடுக்காமல் • யாரையும் காயப்படுத்தாமல் • யாரையும் கேவலப்படுத்தாமல் “நாங்கள் மட்டுமே வசதியாக வாழ வேண்டும்” என்ற அகந்தையை விடுவோம்.

வருமானம் அதிகரிக்கலாம். 10 வீடுகள் வாங்கலாம். ஆனால் தூங்க 6 அடி கட்டில் போதும்.

அறுசுவை உணவு ஒவ்வொரு வேளையும் உண்ணலாம். ஆனால் மறுநாள் அதுவே மலமாகி விடும்.

உண்மையான மகிழ்ச்சி எதில்? பிறருக்கு அளிப்பதில். நல்ல நண்பர்களுடன் ஒரு கப் தேநீர் அருந்தும் போது கிடைக்கும் ஆனந்தம்—

நாமே தனியாக ஸ்டார் ஹோட்டலில் வசதியாக சாப்பிடும்போது கிடைக்காது.

கடைசி வார்த்தை…

• சுயநலத்துடன் வாழாதீர்கள் • அகந்தையில் தலைக்கனம் கொள்ளாதீர்கள்

*மனிதமாக வளருங்கள்…

அன்பை விதையுங்கள்.

  • 865

Good Morning...

  • 867
·
Added a news

2026ஆம் ஆண்டில் கனடா தனது குடியேற்ற விதிகளை மேலும் கடுமையாக்கி, புதிய நிரந்தர குடியிருப்பாளர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்க தீர்மானித்துள்ளது.

2024 இறுதியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, 2025 நவம்பரில் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கட்டுப்பாடுகள், வேலைவாய்ப்பு இழப்பு விகிதத்தை குறைப்பது, வீட்டு வசதி பிரச்சினையை சமாளிப்பது, சுகாதாரம் போன்ற பொது சேவைகளின் அழுத்தத்தை தணிப்பது என்பதே முக்கிய நோக்கமாகக் கொண்டவை.

எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டாலும், திறமையான தொழிலாளர்கள், பிரெஞ்சு மொழி அறிவுள்ளவர்கள் மற்றும் கனடாவில் முன் அனுபவம் உள்ளவர்கள் ஆகியோருக்கு இனி முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த கட்டுப்பாடுகள் மூலம் கனடாவுக்கு வருபவர்கள் பொருளாதாரத்தில் பயனுள்ளதாக பங்களிக்கக்கூடியவர்களாக இருப்பதை அரசு உறுதி செய்கிறது என கால்கரியைச் சேர்ந்த குடியேற்ற ஆலோசகர் மந்தீப் லிதர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் குடியேற்றக் கொள்கை இனி குறைந்த எண்ணிக்கையுடன், ஆனால் அதிகத் தேர்வுத்தன்மையுடன் முன்னேறுகிறது,” என தெரிவித்துள்ளார்.

நிரந்தர குடியிருப்பாளர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைக்கப்பட்டு வரும் நிலையை அவதானிக்க முடிகின்றது. இதனால், உயர் கல்வித் தகுதி மற்றும் தொழில்முறை அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே அதிகம் தேர்வு செய்யப்படுவார்கள் என லிதர் கூறுகிறார்.

  • 1049
·
Added a post

* சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள். கொப்பளம் ஏற்படாது.

* தேவைக்கு அதிகமாக இஞ்சி இருந்தால் அதை மண்ணில் புதைத்து வைத்து தண்ணீர் விட்டு வையுங்கள். தேவைப்படும் போது எடுத்து உபயோகிக்கலாம். இஞ்சி காய்ந்து போகாது.

* பாகற்காய் சீக்கிரம் பழுத்துவிடும். இதைத் தவிர்க்க அதை இரண்டிரண்டாக நறுக்கி வைத்து விடுங்கள்.

* உருளைக் கிழங்கை உப்புக் கரைத்த நீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்துவிட்டுப் பிறகு அடுப்பில் வைத்தால் சீக்கிரம் அது வெந்துவிடும்.

* முதல்நாள் மாலையில் வாங்கிய பூ மறுநாள் காலை வரையில் வதங்காமல் இருக்க வேண்டுமா? பூவை ஈரத் துணியில் சுற்றி வைக்காதீர்கள். ஒரு பாத்திரத்தை நன்றாகக் கழுவிவிட்டு அந்தப் பாத்திரத்திற்குள் பூவை வைத்து மூடிவையுங்கள். பூ வாடாமல் வதங்காமல் வைத்த மாதிரியே இருக்கும்.

* ஜாம் பாட்டிலில் ஜாம் தீர்ந்து போனால் அதில் பாலை ஊற்றுங்கள். பாட்டிலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஜாம் பாலுடன் கலந்து கரைந்துவிடும். பிறகு அந்தப் பாலை அருந்தினால் சுவையாக இருக்கும். ஜாம் வீணாகாது.

* வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த ஜவ்வரிசியைச் சாதம்போல் வேகவைத்து மோரில் கரைத்து உப்புப்போட்டுச் சாப்பிட வயிற்றுப்போக்கு நிற்கும். வயிற்று வலியும் இருக்காது.

* குழந்தைகளுக்கு நோய் வராமல் இருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு 5 மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது.

* பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கிக் கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்துவர அல்சர் சீக்கிரமே குணமாகும்.

* தேனில் நெல்லிக்காய்ப்பொடி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்கவே இருக்காது.

* மூட்டு வலி, முழங்கால் வலியைக் குறைக்க முடக்கத்தான் கீரை, பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துத் தோசை மாவில் கலந்து தோசை வார்த்துச் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

* மாதுளம் பழச்சாறுடன் இஞ்சிச்சாறு, தேன் கலந்து மூன்று வேளையும் அருந்தி வர வறட்டு இருமல் நீங்கும். தொண்டைக்கும் இதம் கிடைக்கும்.

* தக்காளியைச் சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும்.

* சொறி, வேர்க்குரு வராமல் தடுக்க பாசிப்பயறு, மஞ்சள் தூள், வேப்பிலையை மைபோல் அரைத்து உடலில் பூசி 10 நிமிடம் கழித்துக் குளித்து வாருங்கள். சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

* மாதுளம் பழச்சாற்றுடன் இஞ்சிச் சாறு கலந்து சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.

* செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகும்.

* திராட்சைப் பழச்சாற்றை மூன்று வேளைகள் அருந்த குடல் புண் குணமாகும்.

* விளாம்பழத்தின் சதையுடன் திப்பிலியையும் மிளகையும் தூள் செய்து சேர்த்துப் பயன்படுத்த பித்த மயக்கம்; தொண்டை நோய்கள் குணமாகும்.

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

* எல்லா அசைவ சமையலுக்கும், குருமாக்களுக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் அவசியம் அதை இஞ்சி அரை கிலோ , பூண்டு 300 கிராம் அளவில் உரித்து சுத்தம் செய்து அரைத்து வைத்து கொள்ளலாம். அரைத்ததும் அதனுடன் சிறிது உப்பு தூள்,கலந்து வைக்கவேண்டும். சின்ன பேமிலிக்கு ஒரு மாதம் வரை போதும். நல்ல ஒரு பெரிய பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும். வேண்டுமானால் நாலில் ஒரு பங்கை எடுத்து பிரீஜரிலும் வைக்கலாம். ச‌மைய‌லை ரொம்ப‌ சுல‌ப‌மாக‌ முடிக்க‌லாம், நேர‌த்தையும் மிச்ச‌ப்ப‌டுத்த‌லாம்.

* புளிவிட்டு செய்யும் சமயலுக்கு வேலைக்கு சொல்பவர்கள் சுடு நீரில் ஊற போட்டு கரைக்கனும் என்ற அவசியம் இல்லை சிறிது உப்பு சேர்த்து இரவே ஊறபோட்டு விடலாம்.

* தேங்காய் நிறைய‌ இருந்தால் அதில் உப்பை த‌ட‌வி வைப்பார்க‌ள், அத‌ற்கு ப‌தில் ப‌த்தைக‌ளாக‌ போட்டோ (அ) பொடியாக‌ அரிந்தோ அதை ஒரு பாக்கெட்டில் போட்டு பிரீஜ‌ரில் வைத்து கொள்ள‌லாம். தேவையான‌ போது ச‌ட்னிக்கு,குருமாவிற்கு கொஞ்சம் எடுத்து சிறிது நேர‌ம் த‌ண்ணீரில் போட்டுவைத்தால் உட‌னே க‌ழ‌ண்டு வ‌ந்துவிடும்.

* ஆப்ப‌த்துக்கு, இடியாப்பத்துக்கு தேங்காய்பால் ஊற்றி சாப்பிட‌ பால் எடுக்கும் போது அத்துட‌ன் ஏலாக்காய் சேர்த்து அரைத்தால் ந‌ல்ல‌ ம‌ண‌மாக‌ இருக்கும்.

* தின‌ம் இஞ்சி டீ குடிப்ப‌வ‌ர்க‌ள் அதை போட்டு த‌ட்டி கொண்டு இருக்காம‌ல் ஒரு பெரிய‌ துண்டு அள‌விற்கு கொர‌ கொர‌ப்பாக‌ ஏல‌க்காய் சேர்த்து அரைத்து ஒரு ட‌ப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து கொண்டால் தின‌ம் டீ கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் அள‌விற்கு எடுத்து போட்டு கொள்ள‌லாம்.அல்ல‌து கேர‌ட் துருவியில் தின‌ம் ஒரு துண்டு துருவிக்கொள்ள‌லாம்.

* பொரித்த‌ எண்ணை ம‌றுப‌டி ப‌ய‌ன் ப‌டுத்தும் போது அதை வ‌டிக‌ட்டி கொள்ளுங்க‌ள். முடிந்த‌ வ‌ரை கொஞ்ச‌மா எண்ணை ப‌ய‌ன் ப‌டுத்தி பொரிக்க‌வும். மீதியை முன்று நாட்க‌ளுக்குள் முடிக்க‌ பாருங்க‌ள்.

* அடுத்த நாள் என்ன சமைக்க போகிறோம் என்பதை ஒரு நாள் முன்பே யோசித்து தேவையானதை வாஙகி வைத்து கொள்ளுங்கள்.காலையில் சமைக்கும் போது டென்ஷன் இல்லாமல் இருக்கும்.

* முருங்கக்காய் அதிகமாக இருந்தால் அதை அப்ப்டியே பிரிட்ஜில்வைத்து காயவிடாதீர்கள். அதை தோலெடுத்து ஒரு விரல் நீளத்துக்கு அரிந்து ஒரு கவரில் போட்டு பிரீஜரில் போட்டு வையுங்கள். முருங்கக்காய் சேர்த்து சமைக்கும் போது அப்ப எடுத்து அப்படியே கழுவி சேர்த்து கொள்ளலாம், இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும்.

* குருமாக்களில் தேங்காயின் அளவை குறைத்து கொண்டு பாதம் சேர்த்து அரைத்து ஊற்றலாம். இது கொலஸ்ராயிலின் அளவை கட்டுபடுத்தும் குழந்தைகளுக்கும் மூளை வளர்சி அதிகரிக்கும். ரிச் டேஸ்டும் கிடைக்கும்.

* கருவேப்பிலை பிரெஷாக வாங்கி அதை கழுவி தண்ணீரை வடித்து ஒரு பேபப்ரில் சுருட்டி பிரிட்ஜில் வைத்தால் கொஞ்சம் நாள் ஆனதும் பொடித்தால் தூளாகிவிடும், அதை பிஸிபேளாபாத் இட்லி பொடி, மற்றும் பொடித்த கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைக்கும் சமையலுக்கு பயன் படுத்தலாம்.

* பால் அடிப்பிடித்து, தீய்ந்த வாசனை வந்தால், அதில் ஒரு வெற்றிலையைப் போடவும். அடிப்பிடித்த வாசனை போய் விடும்.

* இரண்டு வாழைப்பழம், சிறிது சர்க்கரையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதில் ஒன்றரை டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்க வைக்கவும். ஏதாவது ஒரு எசென்ஸ் ஊற்றவும். புதுமையான சுவையான பாயசம் ரெடி.

* அல்வா செய்யும் போது, வெண்ணெயை அரைப் பதமாக உருக்கி வைத்துக் கொள்ளவும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து அல்வா கிளறினால், நெய் பதமாக காய்ந்து ஸ்வீட் கமகமக்கும்.

* பூண்டைப் பொடியாக நறுக்கிப் பாலுடன் சேர்த்து தினமும் உட்கொண்டு வந்தால் இதயக் கோளாறு கட்டுப்படும்.,

* வெண்ணெய் காய்ச்சி இறக்கும் போது, அரை கரண்டி வெந்தயத்தைப் போட்டால் நெய் கமகமக்கும்.

* தண்ணீருக்கு பதிலாக பால் ஊற்றி, கேசரி பவுடர் போடாமல் செய்து பாருங்கள். வெண்மையாக பால் கோவாவுடன் போட்டி போடும் சுவை..!

* பாதுஷா செய்யப் போகிறீர்களா? சோடா, டால்டா இரண்டுடனும் கொஞ்சம் கெட்டியான புளிப்புத் தயிரும் சேர்த்துப் பிசைந்தால், பதர் பதராக மிருதுவாக, சர்க்கரைப் பாகில் ஊறி புதுச்சுவையோடு இருக்கும்.

* பீட்ரூட்டை பாலில் வேக வைத்துவிட்டு, பிறகு மசித்து செய்தால் ‘பீட்ரூட் அல்வா’ பிரமாதம்!

* மோர்க்குழம்பு மீதமாகிவிட்டதா? கொஞ்சம் கடலை மாவைப் பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். எண்ணெயில் பொரித்துக் குழம்போடு சேர்க்கவும். வடைகறி மாதிரி அருமையாக இருக்கும்.

* மோர் நிறைய மீந்துவிட்டால், அதில் ஒரு டீஸ்பூன் துவரம் பருப்பைப் போட்டு வைக்கவும். விரைவில் புளிக்காமலும் வாடை வராமலும் இருக்கும்.

* கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா செய்யும் போது சிறிது பால் பவுடர் சேர்க்கவும்… ருசி கூடும்.

* சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள அவசரத்துக்கு ஒன்றும் இல்லையா? கெட்டித் தயிரில் சிறிது சில்லி சாஸை கலந்து பரிமாறவும். அவசரத்துக்குக் கை கொடுக்கும் இந்த அபார ருசி.

* குளிர் காலத்தில் உறை மோர் விடும் போது, சிறிது புளி உருண்டையைப் போட்டால் கெட்டியான தயிர் கிடைக்கும்.

* தேங்காயை மெல்லியதாக நறுக்கி, தயிரில் போட்டு வைத்தால், இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

* மோர்க்குழம்பு செய்யும் போது, சிறிது வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து சேர்க்கவும். குழம்பு வாசனையாக, ருசியாக இருக்கும்.

* பால் சூடாக இருக்கும் போதோ, ஆறிப் போன பிறகோ உறை ஊற்றினால் தயிர் பக்குவமாக இருக்காது. இளஞ்சூட்டோடு இருக்கும் போது உறை ஊற்றினால், பக்குவத்தோடு கெட்டியாகவும் இருக்கும்.

* தயிர் பச்சடியில் வெங்காயத்துக்கு பதில் கோவைக்காயை சேர்த்தால் புதுச் சுவை.

* ஆப்பத்துக்கு அரைக்கும் போது, தேங்காய் தண்ணீர் சேர்க்கவும். மறுநாள் மாவு பொங்கி இருக்கும். அதில் அரை கப் சூடான பால் சேர்த்து பிறகு ஆப்பம் சுடவும். மென்மையாக இருக்கும்.

  • 1056