- · 1 friends
-
1 followers
நயாகரா வீழ்ச்சி
Canada Day நயாகரா வீழ்ச்சி
கனடாவின் முன்னாள் பிரதி பிரதமர் மற்றும் கனடாவின் முன்னாள் அமைச்சர் க்ரிஸ்டியா ஃப்ரீலேண்ட் “அடுத்த சில வாரங்களில்” நாடாளுமன்றத்திலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
உக்ரைனின் ஜனாதிபதி வொலோடிய்மிர் ஜெலென்ஸ்கி தனது பொருளாதார ஆலோசகராக நியமித்ததாக அறிவித்திருந்தார்.
உக்ரைன் வம்சாவளியாளர் ஃப்ரீலேண்ட், முன்பு கனடாவிற்கு உக்ரைன் புனரமைப்பு சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்தார்.
2025 செப்டம்பர் மாதத்தில் அவர் உள்நாட்டுப் பொருளாதார வர்த்தக அமைச்சர் பதவியிலிருந்து விலகி புதிய பதவியை ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“உக்ரைன் இன்று உலகளாவிய ஜனநாயகப் போரின் முன்னணி இடத்தில் உள்ளது. அதனால் நான் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அவர்களுக்கு பணம் பெறாமல் பொருளாதார ஆலோசகராக பங்களிக்க இந்த வாய்ப்பை வரவேற்கிறேன் என ஃப்ரீலேண்ட் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
1. 3 நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. ஒருவேளை 3 நாட்களுக்கு மேல் கோபம் நீடித்தால், அது அவர்கள் மீது அன்பு இல்லை என்பதை வெளிக்காட்டும்.
2. உண்மையான அன்பை ஒருவர் உங்கள் மீது கொண்டிருந்தால், உங்களது வலியை உங்கள் கண்களைக் கொண்டே அறிந்து கொள்வார்கள். என்ன தான் நீங்கள் வெளியே போலி சிரிப்பை மேற்கொண்டாலும் அறிவார்கள்.
3. ஆண் மூளை, பெண் மூளை என்று இரு வேறு மூளைகள் உள்ளன என்று மூளையைப் பற்றிய கட்டுக்கதை ஒன்று உள்ளது. உண்மையில் அப்படி ஏதும் இல்லை.
4. சிறு வயதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் வேகமாக வாக்கியம் அமைத்துப் பேசுவார்கள். அதனால் தான் பெண்கள் அதிகமாக பேசுகிறார்கள்.
5. முத்தம் கொடுத்தால், வாழைப்பழம் அல்லது சாக்லேட் சாப்பிட்டால் மற்றும் சூயிங் கம் மென்றால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஆனால் இது உண்மையே.
6. பிறக்கும் போது நம் கண்கள் எந்த அளவில் இருந்ததோ, வளர்ந்தாலும் அதே அளவில் தான் இருக்கும். ஆனால் காதுகள் மற்றும் மூக்குகள் குறிப்பிட்ட வயது வரை வளரும்.
7. இனிப்புக்களையும், சாக்லேட்டுக்களையும் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியானவர்களாகவும், வெளிப்படையாக பேசும் சுபாவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
8. ஒருவர் சிங்கிளாக இருக்கும் போது, சந்தோஷமான தம்பதிகளையும், காதலில் விழுந்த பின் சந்தோஷமான சிங்கிளையும் காணக்கூடும் என மனோதத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது
9. ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 3000 சிந்தனைகளைக் கொண்டிருப்பான் என்பது தெரியுமா?
10. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றொரு வழி குளிக்கும் போது பாட்டு பாடுவது. உண்மையில் இவ்வாறு செய்யும் போது, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்து, மனநிலை மேம்படும்.
குறைவாகச் சாப்பிட்டாலும் தொப்பை மட்டும் வளர்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. இதற்குப் பிரதான காரணம் நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவு என்பதைவிட
உணவின் வகை, உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் (Metabolism) மற்றும் ஹார்மோன் சமநிலையின்ம ஆகியவைதான்.
தொப்பை மட்டும் வளர்வதற்கான முக்கியக் காரணங்கள்:
தொப்பைக் கொழுப்பு (Visceral Fat) என்பது மிகவும் ஆபத்தானது. இது உங்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளைச் சுற்றிச் சேகரமாகிறது. இதற்கான காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
1. தவறான உணவுத் தேர்வுகள் :(Dietary Choices)
நீங்கள் குறைவாகச் சாப்பிட்டாலும், உணவில் சரியான சத்துக்கள் இல்லாவிட்டால் தொப்பை வளரலாம்.
சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்:
நீங்கள் சிறிய அளவில் சர்க்கரை கலந்த பானங்கள், ரொட்டி, பேக்கரிப் பொருட்கள் அல்லது உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப் (High Fructose Corn Syrup)உள்ள உணவுகளைச் சாப்பிடும்போது, உங்கள் கல்லீரல் உடனடியாக அவற்றைக் கொழுப்பாக மாற்றி, பெரும்பாலும் வயிற்றுப் பகுதியில் சேமிக்கிறது.
மறைக்கப்பட்ட கலோரிகள்:
குறைவாகச் சாப்பிடுவது போல் தோன்றினாலும், எண்ணெய், அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள் அல்லது உலர்ந்த பழங்கள் போன்ற அதிக ஆற்றல் அடர்த்தி கொண்ட (Calorie-dense) உணவுகளைச் சிறிய அளவில் உட்கொள்ளும்போது மொத்த கலோரி எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
2. ஹார்மோன் சமநிலையின்மை (Hormonal Imbalances
வளர்சிதை மாற்றம் மற்றும் கொழுப்பு சேமிப்பைக் கட்டுப்படுத்துவதில் ஹார்மோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கார்டிசோல் (Cortisol - மன அழுத்த ஹார்மோன்):
தொடர்ச்சியான மன அழுத்தம் உங்கள் உடலில் கார்டிசோல் சுரப்பை அதிகரிக்கிறது.
கார்டிசோல் ஹார்மோன், கொழுப்பை உங்கள் உடலின் மையப் பகுதியான வயிற்றுப் பகுதியில் சேமிக்கத் தூண்டுகிறது.
இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance):
அதிகச் சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை நீண்ட காலம் எடுத்துக்கொள்வது இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் உடல் சர்க்கரையைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல் போகிறது, மேலும் அதிகப்படியான இன்சுலின் கொழுப்பை, குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சேமிக்கும்படி சமிக்ஞை செய்கிறது.
ஈஸ்ட்ரோஜன் குறைவு:
பெண்களில், மாதவிடாய் நின்ற பிறகு (Menopause)ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும்போது, கொழுப்பு சேமிப்பு இடுப்பு மற்றும் தொடைகளிலிருந்து வயிற்றுப் பகுதிக்கு மாறுகிறது.
வயதாகுதல் மற்றும் மெதுவான மெட்டபாலிசம் (Aging and Slow Metabolism)
வளர்சிதை மாற்ற வீதம் குறைதல்:
வயது ஏறும்போது, குறிப்பாக 40 வயதிற்கு மேல், உங்கள் வளர்சிதை மாற்ற வீதம் இயற்கையாகவே குறைகிறது.
அதாவது, உங்கள் உடல் முன்பு போல் கலோரிகளைச் சீக்கிரமாக எரிக்காது.
தசைக் குறைவு:
வயதாகும்போது தசை நிறை (Muscle Mass) குறைகிறது. தசைகள் கொழுப்பை விட அதிக கலோரிகளை எரிக்கின்றன.
தசைகள் குறையும்போது, உங்கள் உடல் கலோரிகள் எரிக்கும் விகிதம் குறைந்து, மிச்சமுள்ள கலோரிகள் கொழுப்பாக மாறிக் குவிகின்றன.
உடற்பயிற்சியின்மை (Lack of Physical Activity):
நீங்கள் குறைவாகச் சாப்பிட்டாலும், உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால், உங்கள் உடலில் சேரும் கொழுப்பை எரிக்க முடியாது.
உடற்பயிற்சி இல்லாமை ஹார்மோன் சமநிலையின்மையை (குறிப்பாக இன்சுலின் எதிர்ப்பு) மோசமாக்குகிறது,
இதனால் தொப்பைக் கொழுப்பு எளிதில் சேர்கிறது.
தொப்பைக் கொழுப்பைக் குறைக்க, வெறும் குறைவான உணவு மட்டும் போதாது.
பின்வரும் மாற்றங்களைச் செய்ய வேண்டும்:
1. சரியான உணவு:
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் (Refined Carbs)மற்றும் சர்க்கரை பானங்களைத் தவிர்க்கவும்.
அதற்குப் பதிலாக, புரதம் (Protein), நார்ச்சத்து (Fibre) நிறைந்த காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் (நட்ஸ், ஆலிவ் ஆயில்) ஆகியவற்றைச் சேர்க்கவும்.
2. மன அழுத்த மேலாண்மை:
யோகா, தியானம் அல்லது போதுமான தூக்கம் மூலம் கார்டிசோல் அளவைக் கட்டுப்படுத்தவும்.
3. உடற்பயிற்சி (Strength Training):
உடல் எடையைக் குறைப்பதற்கும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், தசையின் அளவை அதிகரிக்கவும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம்.
சாலையில் இரத்தத்தில் மிதந்து, மூச்சு விட முடியாமல் போராடும் இளைஞன்… சுற்றிலும் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கும் மக்களின் நிலை… மருத்துவமனையை அடைவதற்கும் நேரம் இல்லாத அந்த நிமிடம்! அங்கே தான் தெய்வம் போல அந்த மூன்று மருத்துவர்கள் வந்தார்கள்.
எர்ணாகுளம் உதயம் பேரூரின் சாலையில் நடந்தது, வார்த்தைகளால் சொல்ல முடியாத அதிசயம். வாகன விபத்தில் காயமடைந்த லினீஷ், மூச்சுக்குழாய் அடைந்து ‘ரெஸ்பிரட்டரி அரெஸ்ட்’ நிலைக்கு வந்திருந்தார்.
அந்த நேரத்தில் டாக்டர் தோமஸ் பீட்டர், அவரது மனைவி டாக்டர் திடியா (இந்திரா காந்தி ஹாஸ்பிடல்), டாக்டர் மனூப் (கோட்டயம் மெடிக்கல் கல்லூரி) ஆகியோர் மட்டுமே அருகில் இருந்தனர். ஒரு ஆம்புலன்ஸ் வரவைத்து இவரை அதில் ஏற்றி ஆஸ்பத்திரி வரை கொண்டு செல்ல நேரமில்லை அதுவரை உயிர் தாங்காது
பின்னர் நடந்தது அவசர அறுவை சிகிச்சை!
கையில்தான் அறுவை கருவிகள் இல்லை. ஊருக்காரர்கள் ஓடி கொண்டு வந்த ஒரு ஷேவிங் பிளேடு மற்றும் பழச்சாறு குடிக்கும் ஸ்ட்ரோ! 🥤
சாலையில் வைத்தே, பிளேடு கொண்டு மூச்சுக்குழாயை திறந்து, ஸ்ட்ரோவை அதன் வழியாக வைத்து, அவர்கள் அந்த இளைஞருக்கு மூச்சை வழங்கினர். ஊருவாசிகளும் போலீசாரும் மொபைல் ஃபிளாஷ் லைட் கொண்டு ஒளி அளித்து உதவி செய்தனர்.
வையிடில் well care மருத்துவமனையில் கொண்டு சென்றபோது, அந்த இளைஞரின் உயிர் பாதுகாப்பாக இருந்தது. அன்புள்ள மருத்துவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் 🫡. இருப்பதை கொண்டு சிறப்புடன் போராடி ஒரு உயிரை மீட்டு ஒரு குடும்பத்திற்கு நிம்மதியை தேடி தந்த உண்மையான ஹீரோக்கள்!
பல ஆண்டுகளுக்கு முன் டாடா நிறுவனம் தங்கள் நிறுவனம் சார்ந்த ஒரு வேலை வாய்ப்பு விளம்பரத்தை நாளிதழ்களில் தந்தது.
அதில் அந்த வேலைக்குத் தேவையான தகுதிகளை பட்டியலிட்டு விளம்பரத்தின் இறுதியில் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும் என்றும் அறிவித்து இருந்தது.அந்த விளம்பரத்தைப் பார்த்த பொறியாளரான ஒரு பெண்,அதில் குறிப்பிடப்பட்ட அத்தனை தகுதிகளும் தனக்கு இருப்பதாக,அந்த வேலைக்கு விண்ணப்பித்தார்.ஆனால் பெண் என்பதை காரணம் காட்டி,அவருக்கு அந்த வேலையை டாடா நிறுவனம் தரவில்லை.
அதற்காக அந்தப் பெண் விட்டுவிடவில்லை.
"வேலையை செய்ய திறமையும்,அறிவும் தான் தேவை.இதில் ஆண்-பெண் பேதம் என்ன?" என்று விளக்கம் கேட்டு ஒரு கடிதத்தை டாடா நிறுவன உரிமையாளர் ஜே.ஆர்.டி.டாடா வுக்கே எழுதினார்.
அந்தக் கடிததத்தைப் படித்து பார்த்து பெரியவர் ஜே.ஆர்.டி.டாடா உடனே தன் நிறுவன மேலாளர்களை அழைத்து,"இந்தப் பணியை செய்ய,ஆண்-பெண் என்ற வித்தியாசத்தைக் கடந்து,நாம் எதிர்பார்க்கும் தகுதிகள் இந்தப் பெண்ணுக்கு இருக்கிறதா?" எனக் கேட்டார்.
மேலாளர்கள் ஆம் என்று சொல்ல,
அந்த நொடியிலேயே,அந்த பெண்ணுக்கு அவர் விண்ணப்பித்த வேலை கிடைத்தது.
டாடா குழுமத்தின் முதல் பெண் பொறியாளர் என்ற வரலாற்றுப் பெருமையும் ஏற்பட்டது.
அதோடு சேர்த்து இனி டாடா நிறுவனத்தின் எந்த பணிக்கும் ஆண்-பெண் பேதம் இருக்காது,திறமையும் தகுதிகளும் மட்டும் தான் தேவை என்ற உத்திரவும் பறந்தது.
டாடா நிறுவனத்தின் கொள்கையையே தன் திறமையால் உடைத்துக் காட்டிய அந்த பெண் தான் #திருமதி.சுதா நாராயணமூர்த்தி.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் துவக்கிய என்.ஆர்.நாராயணமூர்த்தியின் மனைவி.
இன்னும் சொல்லப் போனால் இன்ஃபோசிஸ் நிறுவனமே கூட சுதா நாராயணமூர்த்தியால் தான் உருவானது.
சமீபத்தில் தஞ்சை பயணத்தின் போது, ஒரு பொறியாளர் பகிர்ந்துகொண்ட தகவல் ஒன்று மனதை அசைத்தது. அது வெறும் வரலாறு அல்ல… ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டியும் நின்று பேசும் அறிவியல் சாதனை.
தஞ்சை பெரியகோவில்— அதன் கோபுர உச்சியை உற்று நோக்குங்கள். அங்கே இருக்கும் ஸ்தூபிக்கல் (பிரம்மாண்ட கல்).
ஒரே கல்லோ, பல கற்களின் சேர்க்கையோ—எடை சுமார் 80 டன்.
அதைத் தாங்கும் சதுரக் கல்—அதுவும் 80 டன்.
அதன் மேல் அமர்ந்திருக்கும் எட்டு நந்திகள்—ஒவ்வொன்றும் 10 டன்.
மொத்தம் 240 டன்!
வியப்பு இங்கேதான் ஆரம்பம்.
பொதுவாக அஸ்திவாரம் என்றால் அடியில் இருக்க வேண்டும். ஆனால் இங்கு…
அஸ்திவாரம் உச்சியில்!
216 அடி உயரம் கொண்ட முழுக் கற்கோவிலுக்கு, அடியில் வெறும் 5 அடி மட்டுமே ஆழமுள்ள அடித்தளம்.
இது எப்படி சாத்தியம்?
இதற்குப் பின்னால் இருக்கும் ரகசியம்—“இலகு பிணைப்பு” (Loose Joint).
ஒவ்வொரு கல்லும் நூலளவு இடைவெளியுடன் அடுக்கப்பட்டுள்ளது. ஏன்?
நம் ஊர்க் கயிற்றுக் கட்டில் நினைவுக்கு வரட்டும்.
ஆரம்பத்தில் தளர்வாக இருக்கும் கயிறுகள், மேலே எடை வந்ததும் ஒன்றோடொன்று இறுகி, மிகப் பலமாக மாறும்.
அதே தத்துவம் தான் இங்கே.
மேலே இருக்கும் 240 டன் எடை, கீழே உள்ள ஆயிரக்கணக்கான கற்களை மெதுவாக இறுக்கி, ஒரே உடலாய் மாற்றுகிறது.
அதனால் பூகம்பம் வந்தாலும் கல் அசையாது. காலம் கடந்தாலும் கோவில் நிலைத்திருக்கும்.
இது வெறும் கட்டிடம் அல்ல.
இது சோழர்களின் அறிவியல், பொறியியல், தொலைநோக்கு.
“சூரியன், சந்திரன் இருக்கும் வரை இக்கோவில் இருக்கும்”
என்ற நம்பிக்கையை விதைத்தவர்—
ராஜராஜ சோழன்.
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும், அந்த நம்பிக்கை இன்று கூட நம் முன் கல்லாய் நின்று பேசுகிறது.
அறிவியலும் ஆன்மீகமும் கை கோர்த்து நிற்கும் அதிசயம்— தஞ்சை பெரியகோவில்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பெரியோர்களிடம் சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விவசாய தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
ரிஷபம்
குடும்பத்தாரின் ஆதரவுகள் மேம்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான செயல்கள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். அதிகாரிகள் இடத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். சிந்தனைகளில் குழப்பங்கள் ஏற்படும். வருவாயில் இருந்த நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் சில சாதகமற்ற சூழல்கள் தோன்றி மறையும். சக ஊழியர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
கடகம்
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயனற்ற அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகப் பணிகளில் தாமதம் உண்டாகும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். நேர்மறை சிந்தனைகளால் தெளிவுகள் பிறக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சிம்மம்
வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் ஈடேறும். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். முக்கிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சிலருக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். கொள்கை தொடர்பான செயல்பாடுகளில் சில மாற்றம் ஏற்படும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கன்னி
உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் உண்டாகும். பழைய நினைவுகளால் செயல்பாடுகள் தடுமாற்றம் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
நண்பர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். பிரபலமானவர்களின் மறைமுக ஆதரவுகள் கிடைக்கும். திறமைக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வாகன வசதிகள் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
விருச்சிகம்
வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும். தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும். தர்ம காரியத்தில் ஈடுபாடு உண்டாகும். மனதில் புதிய தேடல்கள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களில் நன்மைகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை உருவாக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
தனுசு
காப்பீட்டு துறைகளில் ஆதாயம் உண்டாகும். தோற்றப்பொழிவில் சில மாற்றங்கள் காணப்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமை வேண்டும். மறைமுக எதிர்ப்புகளால் விரயங்கள் உண்டாகும். பயனற்ற வாக்குவாதங்களை குறைத்துக் கொள்ளவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
மகரம்
தாய்வழி உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். மறைமுகமான சில தடைகளை அறிந்து கொள்வீர்கள். வர்த்தக தொடர்பான செயல்பாடுகளில் லாபகரமான சூழல் அமையும். தள்ளிப்போன சில காரியம் திடீரென முடியும். பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். ஆன்மீக காரியங்களில் தெளிவுகள் பிறக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மீனம்
ரசனை தன்மையில் மாற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதளவில் புதிய தைரியம் பிறக்கும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 6.1.2026.
இன்று பிற்பகல் 12.16 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.
இன்று மாலை 04.37 வரை ஆயில்யம். பின்னர் மகம்.
இன்று அதிகாலை 02.43 வரை விஸ்கம்பம். பின்னர் பிரீதி.
இன்று அதிகாலை 12.50 வரை வனிசை. பின்னர் பிற்பகல் 12.16 வரை பத்தரை. பின்பு இரவு 11.55 வரை பவம். பிறகு பாலவம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 07.30 முதல் 08.30 மணி வரை
டொரோண்டோ நகரில் உள்ள யோர்க்டேல் GO பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு ஆண் உயிரிழந்ததாக டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யோர்க்டேல் சாலை மற்றும் அலன் எக்ஸ்பிரஸ்வேயை நோக்கிச் செல்லும் ரேம்ப் அருகிலுள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பேருந்திற்குள் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக வந்த தகவலையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒரு ஆணை பொலிஸார் மீட்டுள்ளனர். மருத்துவ அவசர சேவையினர் (Paramedics) சம்பவ இடத்தில் ஒருவரை பரிசோதித்ததாகவும், ஆனால் மருத்துவமனைக்கு எவரையும் கொண்டு செல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதனால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளனர். சந்தேகநபர் சுமார் 20 வயதுகளின் இறுதியில் இருக்கும் ஆண் என்றும், பழுப்பு நிற தோல் கொண்டவர் என்றும், சுமார் 5 அடி 8 அங்குல உயரம் கொண்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுவரை எந்தக் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக பெண்கள் தங்கள் 30 வயதின் நடுப்பகுதி மற்றும் அதற்குப் பிறகு, சுறுசுறுப்பாக இருப்பது முக்கியம். இது ஒரு நல்ல யோசனை மட்டுமல்லாமல் அவர்கள் ஆரோக்கியமாக உணரவும், இதயத்தை வலுவாக வைக்கவும், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
தவிர உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மனநிலையையும் எலும்பு ஆரோக்கியத்தையும் பராமரிக்க மிகவும் அவசியமானது. ஆனால் வாழ்க்கை மிகவும் பரபரப்பானது. வேலை, குடும்பம் மற்றும் மற்ற பரபரப்பான விஷயங்களுக்கு மத்தியில், "தினமும் வாக்கிங் செல்வது மட்டும் போதுமா?" என்று யோசிப்பது இயல்பானதே.. குறிப்பாக ஜிம் செல்வதோ அல்லது கடினமான உடற்பயிற்சிகளைச் செய்வதோ சாத்தியமற்றதாக தோன்றினால் இந்த எண்ணம் வரலாம்.
ஆனால் நல்ல செய்தி என்னவென்றால் வாக்கிங் செல்வது உண்மையில் பல நன்மைகளைத் தருகிறது. தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது பல நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது, மனநிலையை மேம்படுத்துகிறது, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்துகிறது என்பதை பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘பராசக்தி’. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன.10-ல் வெளியாகிது. இதன் பாடல் வெளியீட்டு விழா தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது, “பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்டது. அந்த பெயருக்கு ஏற்றபடி, இந்தப் படமும் அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். 1960-களுக்கு டைம் டிராவல் செய்து பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் படம் இது. மாணவர்கள் எப்போதுமே சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் எந்த அளவுக்கு வலிமை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதை இந்தப் படம் அழுத்தமாக காட்டுகிறது.
படத்தின் உள்ளடக்கம் குறித்து பல கருத்துகள் வெளிவருகின்றன. ஆனால் பலரின் தியாகங்களை நாம் நேர்மறையாகவும் மரியாதையுடனும் பதிவு செய்திருக்கி றோம். இதில் ரவிமோகன் சார், பவர்புல் வில்லன் கதாபாத்திரத்தில் வருகிறார்.
ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் ‘ஜனநாயகன்’ படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள். 33 வருடம் திரைத் துறையில் மகிழ்வித்தவர். கடைசி படம் என்று சொல்லி இருக்கிறார். ஆகவே ஜனவரி 9ம் தேதி அதை கொண்டாட வேண்டும். அடுத்த நாள் ஜனவரி 10ம் தேதி ‘பராசக்தி’ படத்துக்கு வாருங்கள்” என்றார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், அஞ்சலி உள்பட பலர் நடித்து 2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மங்காத்தா’. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது.
அஜித்தின் 50-வது படமான இதில் அவர் தனித்துவமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். க்ளவுட் நைன் நிறுவனம் தயாரித்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது. ஜன. 23-ம் தேதி திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட இருப்பதாக சன்-பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
மறக்கப்பட்ட தவ்வை வழிபாட்டின் ரகசியம்
பாற்கடலைக் கடைந்தபோது,
அமிர்தம் கிடைப்பதற்குமுன்
பல அபூர்வங்கள் தோன்றின.
மந்தார மரம்,
பாரிஜாதம்,
கற்பக விருட்சம்,
காமதேனு,
சந்திரன்,
ஐராவதம்,
சங்க நிதி, பத்ம நிதி,
தன்வந்திரி,
மகாலட்சுமி…
இவை அனைத்திற்கும் முன்னரே
பாற்கடலிலிருந்து தோன்றியவள் ஜேஷ்டா தேவி.
மகாலட்சுமிக்கு முன் தோன்றியவள் என்பதால்,
அவள் “மூத்த தேவி”,
“மூத்தாள்” என அழைக்கப்பட்டாள்.
காலப்போக்கில் அந்தப் பெயரே “மூதேவி” என மருவியது.
‘ஜேஷ்டா’ என்பது வடமொழிச் சொல்.
அதன் பொருள் – முதல், மூத்தவள்.
காகத்தைக் கொடியாகவும்,
கழுதையை வாகனமாகவும்,
துடைப்பத்தை ஆயுதமாகவும் கொண்டு
ஜேஷ்டா தேவி காட்சி தருகிறாள்.
செல்வத்தின் அதிபதியான
மகாலட்சுமியின் மூத்த சகோதரி என்பதால்,
இவள் ‘தவ்வை’
(தமக்கை) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள்.
பெருத்த உடலமைப்புடன்,
மகன் மாந்தன்,
மகள் மாந்தி
இருவருடன் அமர்ந்த கோலமே
ஜேஷ்டா தேவியின் அடையாள வடிவம்.
மாந்தனின் முகம் ரிஷப வடிவில் அமைந்திருப்பது சிறப்பு.
மன்னர்கள் காலத்து ஜேஷ்டா தேவி வழிபாடு
பல்லவ மன்னர்கள் காலத்தில்
ஜேஷ்டா தேவி வழிபாடு
மிகவும் சிறப்பாக இருந்தது.
செல்வச் செழிப்பு
அரசியல் நிலைத்தன்மை
நாட்டின் வளமை
இவற்றிற்காக
தவ்வையை வணங்கும் வழக்கம்
அரச மரபாகவே இருந்தது.
பிற்கால சோழர்கள் காலத்தில்
இந்த வழிபாடு மெல்ல குறைந்தாலும்,
படையெடுப்பிற்குச் செல்லும் முன்
ஆயுதங்களை ஜேஷ்டா தேவியின் முன் வைத்து
வணங்கிச் செல்வது வழக்கமாக இருந்தது.
முற்கால பாண்டியர் காலத்திலும்
இந்த வழிபாடு இருந்ததற்கான
சிற்பச் சான்றுகள் காணப்படுகின்றன.
இன்றும் காணப்படும் ஜேஷ்டா தேவி சன்னிதிகள்
அரையப்பாக்கம் – ஸ்ரீ அருணாதீஸ்வரர் கோயில்
(திருக்கழுக்குன்றம் – மதுராந்தகம் இடையே)
வடமேற்கு திசையில்
ஜேஷ்டா தேவிக்கு தனிச் சன்னிதி.
இருபுறமும் சேடிப்பெண்கள்,
ஒருபுறம் ஏர் கலப்பை,
மற்றுபுறம் கழுகுக் கொடி –
புடைப்புச் சிற்ப வடிவில் காட்சி.
ஆனூர் (செங்கற்பட்டு மாவட்டம்)
சிவன் கோயிலில்
ஜேஷ்டா தேவியின் புடைப்புச் சிற்பம்.
ஆத்தூர் – ஸ்ரீ முக்தீஸ்வரர் ஆலயம்
(தர்மசம்வர்தினி அம்பாள் சமேதம்)
இங்கு ஜேஷ்டா தேவி
விவசாயத்தின் காவல் தெய்வமாக
வளமைக்கு அதிபதியாக
வணங்கப்படுகிறாள்.
தன்னை வணங்குவோரை
விபத்திலிருந்து காக்கும் தெய்வம்
என்பது இங்குள்ள ஐதீகம்.
ஜேஷ்டா தேவி வழிபாட்டின் உண்மை பொருள்
ஜேஷ்டா தேவி
வறுமையின் சின்னம் அல்ல.
வளத்தை பாதுகாப்பவள்
செல்வத்தை நிலைநிறுத்துபவள்
உழைப்பின் பயனை காப்பவள்
என்பதே
பழங்கால மன்னர்களின் நம்பிக்கை.
அதனால்தான்,
முப்பெரும் மன்னர் காலத்தில்
இவள் வழிபாடு
அரசு வழிபாடாகவே இருந்தது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் சாதகமாகும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வழக்கு செயல்களில் சாதகமான சூழல் உண்டாகும். வாகன வசதிகள் மேம்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மறையும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
ரிஷபம்
சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். சிறு தூர பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மிதுனம்
உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
தோற்றப் பொழிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். குண நலன்களின் சில மாற்றங்கள் காணப்படும். செயல்பாடுகளில் ஒரு விதமான ஆர்வமின்மை உண்டாகும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பழைய நினைவுகளால் ஒரு விதமான குழப்பம் உண்டாகும். தடங்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
எதிர்பாராத சில வரவுகள் உண்டாக்கும். உயர்கல்வியில் இருந்த குழப்பங்கள் குறையும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். முத்த சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். சுப காரிய செலவுகள் ஏற்படும். மனதளவில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
கன்னி
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவுகள் பிறக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வித்தியாசமான கற்பனைகள் மனதில் உண்டாகும். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படவும். குழந்தைகளின் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
துலாம்
ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
விருச்சிகம்
தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். நினைத்த பணிகளை முடிப்பீர்கள். உடன் இருப்பவர்களின் சுய ரூபங்கள் வெளிப்படும். சகோதர வகையில் காரிய அனுகூலம் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகளால் கடன்கள் அதிகரிக்கும். இறை சார்ந்த பிரார்த்தனைகள் கைகூடும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
எதிலும் விவேகத்துடன் செயல்படவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வாடிக்கையாளர்கள் இடத்தில் கனிவுடன் நடந்து கொள்ளவும். நண்பர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். பங்குதாரர்களால் சில விரயம் ஏற்படக்கூடும். மனதளவில் சில மாற்றம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
தாய் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வங்கி சார்ந்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
கும்பம்
நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வீடு பழுது பணிகளை மேற்கொள்வீர்கள். தாயாரின் ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக தடைகளை முறியடிப்பீர்கள். சக ஊழியர்கள் வழியில் ஆதரவு ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மீனம்
மனதில் உள்ள சஞ்சலத்தால் குழப்பம் ஏற்படும். வியாபாரத்திற்கான முதலீடுகளை ஏற்படுத்துவதில் தாமதம் உண்டாகும். நெருங்கிய உறவுகளிடம் அனுசரித்து செல்வது மேன்மையை ஏற்படுத்தும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. கோபமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 21 ஆம் தேதி திங்கட்கிழமை 5.1.2026
இன்று மாலை 05.02 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.
இன்று அதிகாலை 03.59 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம்.
இன்று அதிகாலை 02.08 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 01.24 வரை கரசை. பின்பு வனிசை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.30 முதல் 07.30 மணி வரை
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 07.30 முதல் 08.30 மணி வரை
ஈரான் அரசுக்கு எதிர்ப்பை வெளியிட்டு கனடாவின் வன்கூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஈரான்–கனடியர்கள் சேர்ந்த இரண்டு வெவ்வேறு குழுக்கள் வன்கூவரில் போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.
1979 முதல் ஈரானை ஆட்சி செய்து வரும் இஸ்லாமிய குடியரசு ஆட்சியால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களின் நிலையை வெளிச்சம் போடுவதே இவர்களின் நோக்கமாக இருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
இப்போது நடைபெறும் போராட்டங்களுக்கு முக்கிய காரணமாக, ஈரானை ஆட்டிப்படைக்கும் பொருளாதார நெருக்கடி குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக ஈரான் நாணயத்தின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
முன்னதாக நடைபெற்ற ஈரான் போராட்டங்கள் வன்முறையால் ஒடுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் 86 வயதான உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனெயி, “கலவரக்காரர்கள் தக்க இடத்தில் நிறுத்தப்பட வேண்டும்” என்று சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் போராட்டக்காரர்களுக்கு கனடா அரசியல் தலைவர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.






















