- · 1 friends
-
1 followers
நயாகரா வீழ்ச்சி
Canada Day நயாகரா வீழ்ச்சி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர்.
அனிருத் இசை அமைக்கும் இந்தப் படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இதில் இந்தி நடிகரான ஷாருக்கானும் நடிக்க இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. ‘கூலி’ படத்தில் நடிக்க ஷாருக்கானிடம் கேட்டதாகவும் பல்வேறு காரணங்களால் அவர் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதனால் ஆமிர்கான் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இப்போது ஜெயிலர்-2 படத்தில், ஷாருக்கான் நடிப்பார் என்றும் அவர் தொடர்பான காட்சிகள் மார்ச்சில் படமாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.
தீவிர கார் பந்தய வீரரான அஜித், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியையும் சொந்தமாக வைத்திருக்கிறார். இந்த அணி, துபாய், பெல்ஜியம், இத்தாலி போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றது.
அடுத்து மலேசியாவில் நடக்கும் 24 ஹெச் கார் பந்தயத்தில் பங்கேற்கிறது. இதற்காக அவர் மலேசியா சென்றுள்ளார். இந்நிலையில் அங்குள்ள பத்து மலை முருகன் கோயிலில் அவர் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். இந்த கோயிலில்தான் அவர் நடித்த ‘பில்லா’ படத்தில் வரும், ‘சேவல் கொடி பறக்குதடா’ பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அஜித் பத்துமலை முருகன் கோயிலில் சுவாமி கும்பிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகம் ஒன்றை மூட கட்டிட உரிமையாளர்கள் முடிவு செய்ததைத் தொடர்ந்து அந்நிறுவன உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள்.
இந்நிலையில், அந்த உணவகத்தை கனேடிய நிறுவனம் ஒன்று வாங்கி விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
லண்டனிலுள்ள Regent Street என்னும் பிரபலமான தெருவில் அமைந்துள்ள Victory House என்னும் கட்டிடத்தில் வீராஸ்வாமி உணவகம் என்னும் இந்திய உணவகம் அமைந்துள்ளது.
சுமார் 100 ஆண்டுகளாக லண்டனின் அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போன வீராஸ்வாமி உணவகம் அமைந்துள்ள கட்டிடத்தை அலுவலகமாக மாற்ற அதன் உரிமையாளரான Crown Estate என்னும் அமைப்பு முடிவு செய்துள்ளது.
உணவகத்துக்கு Crown Estate மாற்று இடம் தருவதாக கூறியுள்ளது என்றாலும், பாரம்பரியத்தை எப்படி இடம் மாற்ற முடியும் என பிரபல பிரித்தானிய ஹொட்டல் துறை நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஆக, இந்த விடயம் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், Fairfax Financial Holdings Limited என்னும் கனேடிய நிறுவனம் அந்த உணவகத்தை வாங்கி விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
உண்மையில், வீராஸ்வாமி உணவகம், சட்னி மேரி, அமயா என்னும் மூன்று உணவகங்களும் MW Eat Ltd என்னும் நிறுவனத்துக்கு சொந்தமானவை. MW Eat Ltd நிறுவனத்தை நிறுவியவர்கள் நமிதா பஞ்சாபி மற்றும் ரஞ்சித் மத்ரானி என்னும் இந்திய வம்சாவளி தம்பதியர்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தம்பதிகளுக்குள் மனம் விட்டு பேசுவது புரிதலை ஏற்படுத்தும். ஜாமின் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் கவனம் வேண்டும். சஞ்சலமான பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் விவேகத்துடன் செயல்படவும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
ரிஷபம்
ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
எதையும் சமாளிக்கும் மனவலிமை உருவாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். வியாபாரம் நிமித்தமான உதவிகள் சாதகமாகும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கடகம்
முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலை ஆட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். அலுவலகத்தில் மதிப்புகள் உயரும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சிம்மம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். செலவுகளை சமாளிப்பதற்கான சூழல்கள் அமையும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். இழுபறியான சுப காரியம் பேச்சுகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். வெளிநாட்டு பணிகளில் ஆர்வம் ஏற்படும். ஆராய்ச்சி வழி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தடங்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கன்னி
திட்டமிட்ட பணிகள் தள்ளி போய் முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சமூகம் தொடர்பான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மற்றவர்கள் பணிகளையும் பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
துலாம்
மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகளை மேற்கொள்வீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் பெருகும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகள் ஓரளவு குறையும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
விருச்சிகம்
சாமர்த்தியமான செயல்பாடுகளால் காரிய அனுகூலம் ஏற்படும். தன வரவுகளால் நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் முன்னுரிமை ஏற்படும். வியாபாரத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். நேர்மை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
தனுசு
புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். உயர்கல்வி குறித்த எண்ணங்கள் உருவாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மகரம்
வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உறவினர்கள் வழியில் சில உதவிகள் சாதகமாகும். விளையாட்டு துறையில் மேன்மை ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கும்பம்
குடும்ப உறுப்பினர்களிடம் ஒத்துழைப்புகள் மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். அதிரடியான சில செயல்கள் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் மேம்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
தம்பதிகளுக்கு இடையே புரிதல் ஏற்படும். புதிய வாகன செயற்கை உண்டாகும். வெளிவட்டத்தில் அனுபவம் மேம்படும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். முதலீடு குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
டிட்வா புயல் பாதிப்பு காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை கடல் பகுதியில் கடந்த மாதம் 26ம் தேதி உருவான டிட்வா புயல் இலங்கையை தாக்கிய பின் வங்கங் கடல் பகுதியில் கடந்த 29-ம் தேதி நுழைந்தது. இந்த புயல் காரணமாக இலங்கையில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. லட்சக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.
இதையடுத்து இலங்கையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டன. பாதிக்கப்பட்ட 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 1,500 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா சார்பில் நிவாரண பொருட்கள் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப்படை ஜம்போ விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டன. நெருக்கடி நிலையை சமாளிக்க சர்வதேச அமைப்புகளின் உதவியை இலங்கை நாடியது.
இதையடுத்து மேலும் 10 டன் நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். இலங்கையில் மழை பாதிப்பு குறைந்தாலும், தாழ்வான பகுதிகள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இங்கு வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 400 பேரை புயலுக்குப்பின் காணவில்லை. இவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.
வெள்ள பாதிப்பு காரணமாக பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு நாள் ஒன்றுக்கு 1,500 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. அதனால் மக்கள் அதிகளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிம்புவுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, டிசம்பர் 8-ம் திகதி ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குகிறது.
நவம்பர் மாதத்தில் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால், வேல்ஸ் நிறுவனத்துக்கு சிம்புவின் தேதிகள் எப்போது என்பது தெரியாமல் படம் தொடங்க முடியாத சூழல் உருவானது. இதனால் சிம்பு – வேல்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில் வேல்ஸ் நிறுவனத்துக்கு எப்போது தேதிகள் என்பதை சிம்பு தெரிவிக்க வேண்டும் அல்லது அஸ்வத் மாரிமுத்து படத்துக்கு முன்னதாக வேல்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய அட்வான்ஸ் தொகையினை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று சிம்புவிடம் கூறப்பட்டுள்ளது.
இதனால் வேல்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளன. டிசம்பர் 8-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.
வெற்றிமாறன் இயக்கவுள்ள ‘அரசன்’ படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை தாணு தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க வேண்டும் என்று தொடங்கப்படுகிறது.
* தேனை மட்டும் சேகரிக்கும் தேனீக்கள் போல எங்கு சென்றாலும் அங்கிருக்கும் நல்லதை மட்டுமே காணுங்கள்.
* வாழ்வில் குறுக்கிடும் ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்குரிய படிக்கட்டு என்பதை மறக்காதீர்கள்.
* கடவுளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் போதும். அவர் நம்மை நோக்கி நூறடி முன் வர காத்திருக்கிறார்.
* உயிர்கள் மீது அன்பு செலுத்துவதே கடவுள் விரும்பும் சிறந்த நைவேத்யமாகும்.
- அமிர்தானந்தமயி
‘காந்தாரா’ படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பை நகலெடுத்த ரன்வீர் சிங்கிற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர், ‘காந்தாரா’ படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பைப் பாராட்டிப் பேசினார். அப்போது, ‘காந்தாரா’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பூத கோலா வழிபாட்டு முறையை ரன்வீர் சிங் நடித்துக் காட்டினார். மேலும், அந்தத் தெய்வத்தை ‘பெண் பேய்’ என்று அவர் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த செயல் துளு நாடு மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘காந்தாரா’ படத்தில் வரும் காட்சிகள் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் துளு மக்களின் கலாச்சாரம் மற்றும் தெய்வ வழிபாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.
அப்படிப்பட்ட புனிதமான தெய்வத்தை ரன்வீர் சிங் கேலி செய்யும் விதமாக பாவனை செய்ததாகவும், அதனை ‘பேய்’ என்று தவறாக அழைத்ததாகவும் துளு அமைப்புகள் குற்றம் சாட்டின. மேலும், இந்தச் சம்பவம் நடந்தபோது மேடைக்கு எதிரே அமர்ந்திருந்த ரிஷப் ஷெட்டி அதைத் தடுக்காமல் சிரித்ததற்கும் கண்டனங்கள் எழுந்தன.
துளு சமுதாய தலைவர்கள், ரன்வீர் சிங் மற்றும் ரிஷப் ஷெட்டி இருவரும் கத்ரி மஞ்சுநாதா கோயிலுக்கு வந்து தெய்வ சன்னதியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். சமூக வலைதளங்களிலும் ரன்வீருக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்தன.
இதனையடுத்து, ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். அதில், “ரிஷப் ஷெட்டியின் அபாரமான நடிப்பை முன்னிலைப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது. நான் எப்போதும் ஒவ்வொரு கலாச்சாரத்தையும், சம்பிரதாயத்தையும் மதிப்பவன். எனது செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் உளமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில், ஸ்காபரோவில் அமைந்துள்ள Church of the Holy Wisdom என்னும் தேவாலயம் சார்பில் ஒரு உணவு வங்கி இயங்கிவந்தது. தேவாலயத்தில் அத்தியாவசிய கட்டுமானப்பணி செய்யவேண்டிவந்ததால் அந்த உணவு வங்கி மூடப்படும் நிலை உருவானது.
அப்படியானால், இவ்வளவு நாட்களாக உணவு வங்கியை மட்டுமே நம்பியிருந்த மக்கள் என்ன செய்வார்கள் என்ற கவலை அந்த தேவாலய பாதிரியாரான கெர்லின் ஹென்றிக்கு (Rev. Gerlyn Henry) உருவானது. கெர்லின் இந்திய வம்சாவளியினர் ஆவார். ஆகவே, தன் கணவரிடமும், தேவாலய நிர்வாகிகளிடமும் பேசிய கெர்லின் ஒரு முடிவு எடுத்தார்.
அவரது வீட்டில் இருந்த சேமிப்பகம் மற்றும் கார் நிறுத்தும் இடத்திலிருந்த (garage) பொருட்களை எல்லாம் அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடத்தையே உணவு வங்கிக்காக பயன்படுத்திக்கொள்ள ஆவன செய்தார் கெர்லின்.
விடயம் என்னவென்றால், ஏற்கனவே அந்த தேவாலய வளாகத்தில் ஒரு உணவு வங்கி இருந்தது. கட்டுமானப் பணிகள் காரணமாக அது மூடப்படும் நிலையில், வேறு எங்காவது கூட உணவு வங்கி திறக்கலாம்.
ஆனால், இவ்வளவு நாட்களாக இந்த உணவு வங்கியைப் பயன்படுத்தியவர்கள் இந்த பகுதியில் உள்ளவர்கள்.
வேறு எங்காவது உணவு வங்கி திறக்கும்பட்சத்தில், அவர்கள் அந்த உணவு வங்கியைத் தேடிச் செல்லவேண்டியிருக்கும். வாகனங்களை பயன்படுத்தவேண்டிய நிலை வரலாம்.
ஆக, இதே வளாகத்திலிருக்கும் தன் வீட்டிலேயே அந்த உணவு வங்கியைத் திறந்தால், உணவு வங்கியைத் தேடி வந்தவர்கள் ஏமாறவும் மாட்டார்கள், அவர்கள் வழக்கம்போல நடந்தே இங்கு வந்து பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
பாதிரியார் கெர்லினுடய யோசனையால், மக்கள் அவருடைய வீட்டின் கேரேஜிலேயே இயங்கும் உணவு வங்கியை தொடர்ந்து பயன்படுத்திவருகிறார்கள். வாரம் ஒன்றிற்கு 300 பேர் வரை அந்த உணவு வங்கியைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறார் கெர்லின்.
டொராண்டோவில் இன்று இரவு இரண்டு முதல் நான்கு சென்றி மீற்றர் அளவுக்கு பனி பெய்யக்கூடும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பனிப்பொழிவு, வாரத்தின் குளிர்ச்சியான தொடக்கத்துக்கு பின் வருகிறது. இன்று பகல் அதிகபட்ச வெப்பநிலை –1°C ஆக இருக்கும் என்றும், காற்றின் வேகத்தால் –12°C போல உணரப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இரவு வெப்பநிலை –5°C வரை குறையும். வாரத்தின் மீதிப் பகுதியிலும் மேகமூட்டமும் லேசான பனிப்பொழிவும் காணப்படும் நிலையில், வெப்பநிலை பனி உறையும் நிலையைச் சுற்றியே இருக்கும்.
ஒரு ஹெச்.ஆர். எக்ஸிக்யூடிவ் பொண்ணு இறந்து எமலோகம் போனாங்களாம்.
அங்க எமதர்மன் "வாழ்த்துக்கள் நீங்க சொர்க்கம் போக தகுதியானவங்க ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நாள் சொர்க்கத்திலயும் ஒரு நாள் நரகத்திலயும் தங்கணும் அப்புறம் சொர்க்கமா நரகமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்"னார்.
அவங்க "இல்ல நான் இப்பவே சொர்க்கமே போறேன் எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணனும்?"னாங்க.
அவர் "இது இங்க ரூல்ஸ் நீங்க ஃபாலோ பண்ணித்தான் தீரனும்"ங்க... அவங்களும் முதல்ல நரகம் போயி ஒரு நாள் தங்க முடிவு பண்ணி போனாங்க.
அது நரகம் மாறியே இல்ல அழகான பூங்கா அங்க இவளோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்க நாள் முழுக்க பூமிக்கதை எல்லாம் பேசினாங்க.அப்புறம் சாத்தான் வந்தாரு அவளோட ஃப்ரென்ட்ஸ் அறிமுகப்படுத்தி வைக்க அவரும் நல்லாவே பேசினாரு ஆளு பாக்கவும் ரொம்ப க்யூட். அவளுக்கு நரகத்த விட்டு வரவே மனசில்ல.ஒரு நாள் முடிஞ்சு போக நரகமே இப்படி நல்லா இருக்கே சொர்க்கம் எப்படி இருக்கும்னு போயி பாத்தா யாரும் யாரோடும் பேசவே இல்ல பூ பறிக்கறதும் சாமி கும்பிடறதுமாவே இருந்திருக்காங்க இவளுக்கு பயங்கர போர்.
கடைசியா எமன் " நீங்க எங்க போக முடிவு பண்ணிருக்கிறீங்க "ன்னு கேக்க அவ " நான் நரகத்துக்கே போறேன் சொர்க்கத்த விட அது தான் நல்லா இருக்கு"ன்னா.எமன் " நல்லா யோசிச்சுக்கங்க போனா திரும்பி வரமுடியாது"ங்க அவ பிடிவாதமா இருக்க நரகத்துல விட்டு கதவ சாத்திட்டாங்களாம்.
இப்போ பாத்தா முன்ன இருந்த அழகான பூங்கா மாறி பாலைவனமாகி அவளோட ஃப்ரென்ட்ஸ் எல்லாம் கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு இருந்தாங்களாம்.சாத்தான் கூட மேக்-அப் இல்லாத நடிகை கணக்கா கர்ண கொடூரமா இளிச்சானாம்.அவ ஒண்ணும் புரியாம "என்ன இது நேத்த விட எல்லாமே மாறி இருக்கு"ன்னு கேக்க அதுக்கு சாத்தான் சொன்னானாம் ,
"நேத்து உங்களுக்கு நடந்தது இன்டர்வியூ இன்னைக்கு நீங்க ஒரு எம்ப்ளாயீ!
உயிர்ச்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். 100 கிராம் கீரையில், 9 ஆயிரம் உயிர் சத்தான வைட்டமின்கள் உள்ளது. அகத்திக்கீரையில் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது.
குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரையை சாப்பிடுவதன் மூலம் குணமாகும்.
அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்கும்போது தொண்டைப் புண், தொண்டை வலி ஆகிய நோய்கள் நீங்கும். ரத்த பித்தம், ரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை சாப்பிடுவதால் அகலும்.
அகத்திக்கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.
அகத்தி மரப்பட்டை, வேர்ப்பட்டை வகைகளை கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு சுண்டக்காய்ச்சி அதனை வடிகட்டி 100 மி.லி. அளவு என 2 வேளை குடித்து வர காய்ச்சல், கை கால், மார்பு, உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைக் காய்ச்சல் குணமாகும்.
இக்கீரையைப் பிழிந்து அதன் சாறை 2 துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி, சளி, ஜலதோஷம் போன்றவை நீங்கும்.
அகத்தி கீரையை வேக வைத்து அரைத்துக் காயங்களுக்கு கட்ட விரைவில் ஆறும். அகத்திப் பூச்சாறை கண்களில் பிழிய கண்நோய் குணமாகும்.
அகத்தி கீரை வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும். இதற்கு அகத்திக்கீரையை நன்றாக கழுவி இதில் 4 பங்கு சின்ன வெங்காயத்தை சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினமும் 1 வேளை குடிக்கலாம்.
அகத்தி கீரையையும், மருதாணி இலையையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப் போட்டால் வெடிப்புகள் மறையும்.
வேப்பம்பழம் இயற்கையே நமக்கு அளித்த ஒரு அபூர்வ மருந்து.
- சிறந்த இயற்கை 'ஆன்டி-பயாடிக்' (Natural Antibiotic): நவீன மருத்துவத்தின் ஆன்டி-பயாடிக் மாத்திரைகளுக்கு சவால் விடும் சக்தி இந்த சிறிய பழத்திற்கு உண்டு. உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
- வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரி: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் குடல் புழுக்கள் மற்றும் வயிற்றுப் பூச்சிகளை அழித்து, குடலை முழுமையாகச் சுத்தம் செய்வதில் வேப்பம்பழத்திற்கு நிகர் இதுவேதான்.
- இரத்த சுத்திகரிப்பு (Blood Purification): இது ஒரு சிறந்த 'டிடாக்ஸ்' (Detox) உணவு. ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகும்.
- சரும நோய்களுக்கான கவசம்: சுத்தமான ரத்தம் ஓடினாலே சருமம் பொலிவடையும். வேப்பம்பழம் சாப்பிடுவதால் சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற எந்தத் தோல் நோய்களும் நம்மை அண்டாமல் பாதுகாக்கும் ஒரு இயற்கை கவசமாக இது செயல்படுகிறது.
ஒரு சிறு வேண்டுகோள்:
நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் பல இயற்கை மருத்துவ முறைகளை நாம் மறந்து வருகிறோம். "கசக்குதே" என்று முகத்தைத் திருப்பாமல், வேப்பம்பழம் சீசனில் கிடைக்கும்போது, வருடத்திற்கு ஒரு முறையாவது இரண்டு பழங்களையாவது சப்பிச் சாப்பிடுங்கள்.
மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியத்தைக் குறைத்து, நோயற்ற வாழ்வுக்கு இது வழிவகுக்கும்.
காட்டுவழி சென்ற ஆசிரியர் ஒருவரை பிடித்துக் கொண்டனர் கொள்ளைக் கூட்டத்தினர்.அவர் கணித ஆசிரியர் என்று தெரிந்து கொண்டஅக்கூட்டத்தின் தலைவன் ஆசிரியருக்கு ஒரு சோதனை வைத்தான்.
தன கையில் இருக்கும் பூசணிக்காயின் எடையை அவர் சரியாகக் கூறினால் விடுதலை என்றும், சரி பார்க்கையில் தவறாக இருந்தால் தலையை எடுத்து விடுவதாகவும் கூறினான்.
ஆசிரியர் சொன்னார்,''பூசணிக்காய் உன் தலையின் எடையளவு இருக்கும்'' என்று கூறினார்.
எப்படி சரி பார்ப்பது?'நீங்கள் சொன்ன விடை சரிதான்,'என்று கூறி விடுதலை செய்தான்..
“உங்கள் ஏசு சொன்னதைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.
பசித்தவருக்கு ரொட்டி கொடுக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் பசியால் வாடுகிறவர்கள் இல்லை.
அறியாமையில் உழல்வோருக்கு அறிவுப் பாதையைத் திறக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் எல்லோருக்கும் ஒரே தரமான கல்வியை அரசாங்கமே தன் பொறுப்பில் அளிக்கிறது.
நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் யாராக இருந்தாலும் பாகுபாடில்லாமல் உயர்ந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.
குளிரில் வாடுகிறவர்களுக்குக் கூரை கொடுக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் வீடின்றி வீதியில் நிற்போர் ஒருவரையும் காட்ட முடியாது.
அடிமைத் தளையிலிருந்து மீட்டு விடுதலைளிக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் சுயமரியாதையோடு உழைத்து வாழ்வதற்கென எல்லோருக்கும் வேலை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதையெல்லாம் கர்த்தரின் பெயரால் செய்யச்சொன்னார் ஏசு. நாங்கள் புரட்சியின் வெற்றியால் செய்துகொண்டிருக்கிறோம்.
இறை நம்பிக்கை என்பதில் நாம் விலகி நிற்கலாம். ஆனால் மனிதர்களின் விடுதலை, சமத்துவம், பிணியற்ற வாழ்வு, அறிவொளி வெளிச்சம், சமூக மதிப்பு... இவை நாம் சந்திக்க வேண்டிய புள்ளிகள் அல்லவா?”
-அமெரிக்காவில் செய்யப்பட்டுவரும் மோசமான பிரச்சாரத்தின் உண்மையை அறியும் நோக்கத்துடன் தன்னை சந்தித்த கிறிஸ்துவ பேராயர்கள் குழுவிடம் இப்படிச் சொன்னவர் கியூபா புரட்சி நாயகர் ஃபிடல் காஸ்ட்ரோ.
உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனை.... விரைவில் சரியாகிவிடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு வேலையை பாருங்கள். ஆழ் மனதில் (sub consciousness mind) ல் பதிந்து விடும்.
உங்கள் வினைப் பதிவுகளுக்கேற்ப விரைவில் அதிசயம் நடக்கும். (சிலருக்கு உடனே, சிலருக்கு கொஞ்சம் தாமதமாக) ஏற்படபோகும் அதிசயங்களுக்கு நன்றி, என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருந்தால் போதும்.
Auto suggestion.
அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்.
எண்ணும் எண்ணங்கள் நேர்மையாகவும் தூய்மையாகவும் இருத்தல் அவசியம்.
நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும், ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும்.
உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப் பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்துவிடும்...
உங்களை சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை படவேண்டாம்.
உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்த வேண்டாம்.
பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்க கற்று கொள்ளுங்கள். தியானம் உதவும்.
நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன்,
என் நல்ல எண்ணம் செயலாக மலரும். பிரபஞ்சத்திற்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருங்கள். நிறுத்தாமல் சொல்லி கொண்டே இருங்கள். [சக்திவாய்ந்த செயல்முறை]
Positive Thinking and Auto suggestion.
திரும்ப திரும்ப எண்ணும் நல்ல எண்ணங்கள் செயலாக மாறும். இயற்கை நியதி.
Wave Theory தெரிந்தவர்களுக்கு இது எளிதாக புரியும்.
உங்கள் வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள்
மற்றும் நல்ல எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்துவிடும்.
உங்கள் நேர்மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்.
விதைத்தவன் தூங்கி விடுவான்.
விதை தூங்காது.
எண்ணியவன் தூங்கி விடுவான்.
எண்ணம் தூங்காது.
எண்ணம்போல் வாழ்க்கை
எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளல்


















