சினிமா செய்திகள்
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
ஜெயம் ரவி மீது மனைவி ஆர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தனது மனைவியுடன் விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டு
கோட் படத்தில் நடிப்பதற்காக பிரபுதேவா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வருகிறார். அவர் படம் என்றாலே தமிழகம் முழுவதும் திருவிழா கோலமாக இருக்கும். அதிலும் வி
நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படம்
பாலிவுட் நடிகையான ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் தோன்றிய அவர், தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள்
கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா
நடிகர் ஜீவா தனது குடும்பத்தினருடன் சின்ன சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருடைய கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இரு சக்கர வாகனம் குறுக்கே வந்தத
மனைவியை விவகாரத்து செய்கிறார் நடிகர் ஜெயம் ரவி
பிரபல நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் திருமணம் செய்து கொண்டனர். ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்ட
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93ஆவது வயதில் காலமானார். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்க
Ads
 ·   ·  7908 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மீண்டும் டிரெண்டிங்கில் மணிப்பூர்

மணிப்பூரில் கலவரம் வெடித்து ஓராண்டுக்கு மேலாகும் சூழலில், மீண்டும் மணிப்பூர் இணையத்தின் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

காசாவின் ஹமாஸ் படையினரை குறிவைத்து இஸ்ரேல் கடும் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. தற்போது ரஃபா பிராந்தியத்தில் தாக்குதல் தொடுத்து வரும் இஸ்ரேல், பலவகையிலும் சர்வதேச அதிருப்தியை பெற்று வருகிறது. ஹமாஸ் குழுவினருக்கு பதிலாக அப்பாவிகளை கொத்துக்கொத்தாக குண்டு வீச்சில் இஸ்ரேல் கொன்று வருவதே இதற்கு காரணம். முகாம்களில் அடைக்கலமான அப்பாவிகள், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என போருக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் தாக்குதலில் அதிகம் கொல்லப்பட்டு வருகின்றனர்.

ரஃபா மீதான இஸ்ரேலின் கோரத் தாக்குதலை கண்டிக்கும் வகையில் ’ஆல் ஐஸ் ஆன் ரஃபா’ (All eyes on Rafah) என்ற முழக்கம் சமூக ஊடகங்களில் தீயென பரவியது. சர்வதேசளவிலான சமூக ஊடக பிரபலங்கள் இதனை முன்னெடுத்ததில், இந்த ஆண்டின் முன்னணி சமூக ஊடக முழக்கங்களில் ஒன்றானது. இந்தியாவிலும் பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் ’ஆல் ஐஸ் ஆன் ரஃபா’ ஹேஸ்டேக் பிரபலமானது. இதன் மூலம் பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடுமைகள் உலகளவில் கவனம் பெற்றன. தங்கள் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பல்வேறு தேசங்களும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவையும், இஸ்ரேலுக்கு கண்டனத்தையும் அதிகாரபூர்வமாக தெரிவித்து வருகின்றன.

இதனையடுத்து ’ஆல் ஐஸ் ஆன்’ என்ற வைரல் முழக்கம், ரஃபா மட்டுமன்றி, அப்பாவி மக்களுக்கு எதிரான அவலம் அரங்கேறு இடங்கள் அனைத்தையும் தாங்கி வைரலாக ஆரம்பித்தன. காங்கோ இந்த வகையில் இடம் பிடித்தது. இவற்றுக்கு மத்தியில் இந்தியாவின் மணிப்பூரை முன்வைத்து, ’பட் நோ ஐஸ் ஆன் மணிப்பூர்’(But No Eyes on Manipur) என்ற முழக்கம் எழுந்தது. இந்திய பிரபலங்கள், உலகின் எந்த மூலையிலோ இருக்கும் ரஃபா, காங்கோ போன்றவைக்காக கவலைப்படும்போது, சொந்த நாட்டில் ஓராண்டுக்கும் மேலாக துயரத்தில் ஆழ்ந்திருக்கும் மணிப்பை கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம் இந்த முழக்கம் வாயிலாக வெடித்துள்ளது.

மெய்தி - குக்கி இன மக்களிடையே ஓராண்டுக்கு முன்னர் மணிப்பூரில் வெடித்த மோதல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதில் குக்கி தரப்பில் பெருத்த சேதம் எழுந்ததோடு, இன்னமும் இயல்புக்கு திரும்ப இயலாது இருதரப்பு மக்களும் தவித்து வருகின்றனர். சின்னஞ்சிறு மாநிலத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதோடு, சுமார் 50,000 மக்கள் வீடு, பிழைப்பு ஆகியவற்றை இழந்து முகாம்களில் தவித்து வருகின்றனர். குக்கி - மெய்தி தம்பதியர் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் உட்பட அரசின் பாராமுகம் மணிப்பூரை தவிப்புக்கு ஆளாக்கி உள்ளது.

இந்த சூழலில் இயற்கையின் கோரமாக கனமழை மற்றும் வெள்ளம் என உயிர்ப்பலிகள் அதிகரிக்கும் வகையில், மணிப்பூர் தவித்து வருகிறது. வன்முறை மோதல்களுக்கு ஈடாக இயற்கைச் சீற்றத்தின்போது சகோதர இந்தியர்களிடம் இருந்து உதவும் கரங்கள் நீளாது மணிப்பூர் மக்கள் தடுமாறி வருகின்றனர். உலகின் ஏதோவொரு மூலையில் புதிதுபுதிதாய் நடந்தேறும் அவலங்களுக்கு எதிராக பொங்கும் இந்தியப் பிரபலங்கள், ஓராண்டுக்கும் மேலாக தடுமாறித் தவிக்கும் மணிப்பூரை திரும்பிப் பார்க்காதது ஏன் என்னும் பரிதவிப்பை வெளிப்படுத்தும் வகையில் ’பட் நோ ஐஸ் ஆன் மணிப்பூர்’ என்ற முழக்கம் சமூக ஊடக பதிவுகளில் டிரெண்டிங்கில் இன்று இடம் பிடித்துள்ளது.

  • 870
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads