சினிமா செய்திகள்
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
Ads
 ·   ·  2861 news
  •  ·  1 friends
  • 2 followers

யார் ஆட்சிக்கு வந்தாலும் சட்டத்திலுள்ள விடயங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் - ஜனாதிபதி ரணில் வலியுறுத்து

நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள பொருளாதார மாற்றச் சட்டத்தில் அரசாங்கம் நீண்டகாலத்திற்குக் கடைப்பிடிக்க வேண்டிய பல நடவடிக்கைகள் உள்ளடக்கப்படும் என்றும் எதிர்காலத்தில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதாரத்தை மீண்டும் அதலபாதாளத்தில் தள்ளாமல் சட்டத்திலுள்ள விடயங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற விசேட உரையில் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் பொருளாதார மறுசீரமைப்புகளை நோக்கமாகக் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 இற்கும் மேற்பட்ட புதிய சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதேபோன்ற பல சட்டங்களுடன், பொருளாதார மாற்ற சட்டமூலம் (Economic Transformation Bill), அரச நிதிச் சட்டமூலம் (Public Finance Bill) மற்றும் அரச கடன் முகாமைத்துவச் சட்டமூலம் (Public Debt Management Bill) என்பவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இதனிடையே 1930 இற்குப் பின்னர், சுமார் 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு காணி உரிமைகளை வழங்கும் 'உறுமய' திட்டம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன் ஊடாக முழுமையான காணி உறுதி அவர்களுக்குக் கிடைக்கும் எனவும் இந்த வேலைத் திட்டத்தால், இலங்கை முழுவதிலும் ஆயிரக்கணக்கான விவசாய வர்த்தகர்கள் உருவாவதைத் தடுக்க முடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விவசாய உற்பத்தித்திறன் மேம்பாட்டின் அடிப்படையில் விவசாய நவீனமயமாக்கல் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விவசாயிகளை வலுப்படுத்துவது இந்தத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

மேலும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை மீட்கும் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக பாரிய முதலீடு மேற்கொள்ள அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்தப் பணிகளை ஒருங்கிணைக்க திறைசேரியில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் தொடர்பான விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

000

  • 553
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads