சினிமா செய்திகள்
கேப்ரில்லாவுக்கு லண்டனில் கிடைத்த மோசமான அனுபவம்
அடிக்கடி தனது கிளாமரான புகைப்படங்களையும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் கேப்ரில்லாவுக்கு நெட்டிசன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற
சுந்தர் சி யை கெட்ட வார்த்தையில் திட்டிய மணிவண்ணன் - எதற்காக தெரியுமா?
ஈரோட்டில் பிறந்த விநாயக சுந்தரவேல் என்பவர் தனது தந்தையின் பெயரான சிதம்பரம் என்பதன் முதலெழுத்தைச் சேர்த்து சுந்தர் சி ஆக தமிழ் சினிமாவில் பிரபல இயக்குந
விசுவின் பார்வையில் கண்ணதாசன்
ஒரு பாடலை வாங்கி வருவதற்காக கண்ணதாசனிடம் அனுப்புகிறார் இயக்குநர். விசுவிற்கு மிகுந்த தயக்கம். இருந்தாலும் ‘நாடக உலகப்’புகழ் தந்த துணிச்சலில் சென்று வி
மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளத்தில் ’மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள குறித்து கூ
75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்
தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்போது தொடங்கிய அரண்
42 வயதில் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம்..?
பில்லா, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், சிங்கம் 2, லிங்கா, என்னை அறிந்தால் ருத்ரமா
கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக தன்னுடைய டீனேஜ் வயதிலேயே அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அத
ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் அசத்தும் அழகில் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், படு கிளாமரான உடையில் அசத்தும் நடிகை அமலா பால்
சமூக வலைத்தளங்களிலும் புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணத்தில் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வரும
கிளாமர் உடையில் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
இந்திய அளவில் தற்போது பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில்
பிரபாஸ் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் ராஜமௌலி
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட
அறியப்படாத படம் - இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்
1980 கால கட்டங்களில் வெளியான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பெரும்பாலும் ஹிட் ஆயிருக்கும். அதற்கு காரணம் இசை, பாடியவரின் குரல் வளம் உள்ளிட்ட பல காரணங்கள
Ads
 ·   ·  133 news
  •  ·  0 friends
  • 1 followers

யார் ஆட்சிக்கு வந்தாலும் சட்டத்திலுள்ள விடயங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் - ஜனாதிபதி ரணில் வலியுறுத்து

நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள பொருளாதார மாற்றச் சட்டத்தில் அரசாங்கம் நீண்டகாலத்திற்குக் கடைப்பிடிக்க வேண்டிய பல நடவடிக்கைகள் உள்ளடக்கப்படும் என்றும் எதிர்காலத்தில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதாரத்தை மீண்டும் அதலபாதாளத்தில் தள்ளாமல் சட்டத்திலுள்ள விடயங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற விசேட உரையில் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் பொருளாதார மறுசீரமைப்புகளை நோக்கமாகக் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 இற்கும் மேற்பட்ட புதிய சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதேபோன்ற பல சட்டங்களுடன், பொருளாதார மாற்ற சட்டமூலம் (Economic Transformation Bill), அரச நிதிச் சட்டமூலம் (Public Finance Bill) மற்றும் அரச கடன் முகாமைத்துவச் சட்டமூலம் (Public Debt Management Bill) என்பவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இதனிடையே 1930 இற்குப் பின்னர், சுமார் 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு காணி உரிமைகளை வழங்கும் 'உறுமய' திட்டம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன் ஊடாக முழுமையான காணி உறுதி அவர்களுக்குக் கிடைக்கும் எனவும் இந்த வேலைத் திட்டத்தால், இலங்கை முழுவதிலும் ஆயிரக்கணக்கான விவசாய வர்த்தகர்கள் உருவாவதைத் தடுக்க முடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விவசாய உற்பத்தித்திறன் மேம்பாட்டின் அடிப்படையில் விவசாய நவீனமயமாக்கல் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விவசாயிகளை வலுப்படுத்துவது இந்தத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

மேலும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை மீட்கும் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக பாரிய முதலீடு மேற்கொள்ள அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்தப் பணிகளை ஒருங்கிணைக்க திறைசேரியில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் தொடர்பான விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

000

  • 398
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads