சினிமா செய்திகள்
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
Ads
 ·   ·  8178 news
  •  ·  5 friends
  • I

    9 followers

பா.ஜனதா எம்.எல்.ஏ.. வீட்டில் நடந்த சோதனையில் ரூ.6.10 கோடி சிக்கியது

கர்நாடகத்தில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு தாவணகெரெ மாவட்டம் சென்னகிரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தவர் மாடால் விருபாக்ஷப்பா. இவர், கர்நாடக மாநில சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் வாரியத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். மாடால் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த். இவர், கே.ஏ.எஸ். அதிகாரி ஆவார். தற்போது பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் முக்கிய கணக்கு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்திற்கு ரசாயன பொருட்கள் வழங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டு இருந்தது. இந்த டெண்டரை எடுக்க பல்வேறு ஒப்பந்ததாரர்கள் இடடையே போட்டி ஏற்பட்டு இருந்தது. அப்போது ஒரு ஒப்பந்ததாரரிடம் டெண்டர் வழங்குவதற்கு ரூ.81 லட்சம் லஞ்சம் கொடுக்கும்படி பிரசாந்த் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. அவ்வாறு ரூ.81 லட்சம் கொடுத்தால், அந்த டெண்டரை பெற்றுக் கொடுப்பதாகவும் பிரசாந்த் வாக்குறுதி அளித்தாக தெரிகிறது.

இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் பெங்களூரு கிரசென்ட் ரோட்டில் உள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.வான விருபாக்ஷப்பாவின் அலுவலகத்தில் வைத்து ஒப்பந்ததாரரிடம் ரூ.40 லட்சத்தை லஞ்சமாக பெற்ற போது அதிகாரி பிரசாந்தை லோக் அயுக்தா போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தார்கள். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் பேரில் லோக் அயுக்தா போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருந்தனர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரத்தில் அந்த அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் ரூ.1.62 லட்சமும் சில ஆவணங்களும் சிக்கி இருந்தது. அதாவது ஒட்டு மொத்தமாக எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பாவின் அலுவலகத்தில் இருந்து லஞ்ச பணத்துடன் சேர்த்து ரூ.2 கோடியே 2 லட்சம் சிக்கி இருந்தது. அவற்றை லோக் அயுக்தா போலீசார் பறிமுதல் செய்திருந்தார்கள். மேலும் கிரசென்ட் ரோட்டில் உள்ள அலுவலகத்திலும், பெங்களூரு சஞ்சய்நகர் அருகே டாலர்ஸ் காலனியில் உள்ள பிரசாந்திற்கு சொந்தமான வீட்டிலும் நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினார்கள். அலுவலகம் மற்றும் வீட்டில் நேற்று மாலை 6.30 மணியில் இருந்து இன்று அதிகாலை 4 மணிவரை தொடர்ச்சியாக 9½ மணிநேரம் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் பிரசாந்த் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டு லோக் அயுக்தா போலீசாரே அதிர்ச்சி அடைந்தார்கள். வீட்டில் பல்வேறு பகுதிகளில் பணம் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த பணத்தை 3 பைகளில் போலீசார் சேகரித்தனர். பின்னர் பணம் எண்ணும் எந்திரம் மூலமாக எண்ணப்பட்டது. அப்போது பிரசாந்த் வீட்டில் மட்டும் ரூ.6 கோடியே 10 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அதனை போலீசார் பறிமுதல் செய்தார்கள். அதே நேரத்தில் பிரசாந்தின் வீடு, எம்.எல்.ஏ.வின் அலுவலகத்தில் இருந்து டெண்டர் மற்றும் பிற முறைகேடுகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் சிக்கியதாகவும், அவற்றை லோக் அயுக்தா போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ரூ.40 லட்சம் லஞ்சம், வீடு மற்றும் அலுவலகத்தில் சிக்கிய ரூ.7.72 கோடி க்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், லோக் அயுக்தா போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் முதல் குற்றவாளியாக மாடால் விருபாக்ஷப்பாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 2-வது குற்றவாளியாக பிரசாந்த் சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற 4 பேர் மீதும் வழக்குப்பதிவாக இருக்கிறது. இதன் காரணமாக பா.ஜனதா எம்.எல்.ஏ.வான விருபாக்ஷப்பா கைது செய்ய லோக் அயுக்தா போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

  • 263
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads