சினிமா செய்திகள்
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
சிவாஜி கணேசனை பாராட்டிய சாவித்திரி
'பாசமலர்’ வெளியான தினத்தில் மாறுவேடத்தில் திரையரங்குக்கு சென்று படம் பார்த்துவிட்டுத் திரும்பிய சாவித்திரி, “படம் பார்த்து முடித்து பெண்கள் வெளியே போன
ரஜினிகாந்தின் கேளம்பாக்கம் பங்களா
ரஜினிகாந்த் எந்த ஒரு பின்புலனும் இல்லாமல் சினிமாவில் உயர்ந்தவர். ஆனால் அவருக்கு சொத்து எக்கசக்கமாக அதிகரித்தது. அப்படி ஒன்று தான் கேளம்பாக்கம் பங்களா.
நடிகர் சிவாஜி நடிப்பின் மேல் வைத்திருந்த தொழில்பக்தி
1972ல் ராஜா படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது பாலாஜியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று தெரியாமலே இருந்தது. 1972, மே 4ல் ராஜா ப
Ads
 ·   ·  7509 news
  •  ·  5 friends
  • I

    9 followers

நாட்டு மக்கள் கவனமாக இருந்தால் முழு ஊரடங்கு தேவை இல்லை - பிரதமர் மோடி

கொரோனா என்னும் கொடிய வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, நாடு முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் முதல் அலையில் ஒரு நாளின் அதிகபட்ச பாதிப்பு 1 லட்சத்தை எட்டியிராத நிலையில், இந்த இரண்டாவது அலை, கடந்த சில நாட்களாக தினந்தோறும் 2 லட்சத்துக்கு அதிகமானவர்களை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. கொரோனா தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து நேற்று இரவு 8.45 மணிக்கு டெலிவிஷனில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது.

கொரோனா வைரசுக்கு எதிரான மிகப்பெரிய போரை நாடு மீண்டும் நடத்தி வருகிறது. சில வாரங்களாக நிலைமை கட்டுக்குள் இருந்தது. ஆனால் இப்போது 2-வது அலையானது, புயல்போல வந்து விட்டது. நீங்கள் அனைவரும் சந்தித்து வருகிற கஷ்டங்களை நான் அறிந்திருக்கிறேன். உங்கள் அன்பானவர்களை இழந்து தவிக்கிறவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொற்று நோய்க்காலத்தில் சேவையாற்றி வருகிற டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், மருத்துவ சார்பு பணியாளர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், பாதுகாப்பு படையினர், போலீசார் என அனைவரும், மற்றவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு தங்களது உயிர்களைப் பணயம் வைத்து சேவையாற்றுவதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மிக வேகமாக மருந்துகளை தயாரித்து அளிக்கிற வலுவான மருந்து துறையை இந்தியா பெற்றுள்ளது.

அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை ஒழுங்குடன் பின்பற்ற வேண்டும். கவனமாக இருக்க வேண்டும். நோய்க்கட்டுப்பாட்டு மண்டலங்களில் கட்டுப்பாடு அவசியம்.

வதந்திகளுக்கு எதிரான விழிப்புணர்வை பரப்ப வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. பொது முடக்கத்துக்கு எதிராக நாம் காத்துக்கொள்ள வேண்டும். இதை மாநிலங்களும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா கடுமையான போராட்டத்தை நடத்தி உள்ளது. இதற்கான பெருமை உங்களைத்தான் (பொதுமக்களை) சேரும்.

பொதுமக்களாகிய உங்களது பங்கேற்பு என்ற ஆயுதத்தின் மூலம் கொரோனா வைரஸ் தொற்றை தோற்கடிக்க முடியும். தேவைப்படுகிற நேரத்தில் உதவுகிற மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன் என்றும் கூறினார்.

  • 491
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads