தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு

தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், திரு தனுஷ், பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த திறந்த கடிதத்தை எழுதுகிறேன்.

திரு கஸ்தூரி ராஜாவின் ஆதரவில், உங்கள் அண்ணன் திரு கே. செல்வராகவனின் இயக்கத்துடன் முன்னணி நடிகராக உயர்ந்த நீங்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எந்த பின்னணியும் இல்லாமல், சவாலான சினிமா உலகில் போராடி, நேர்மையான உழைப்பின் மூலம் இன்று நான் பெற்ற இடத்தை அடைந்தேன். என்னை பெருமையாக பார்க்கும் ரசிகர்களும், திரைத்துறையினரும் உள்ளனர்.

'நானும் ரௌடிதான்' திரைப்படத்தின் பாடல்களும் உணர்ச்சி நிறைந்த வரிகளும் இன்றும் மக்களால் கொண்டாடப்படுகின்றன. ஆனால், என் திருமண ஆவணப்படத்தில் அவற்றை பயன்படுத்தக் கூடாது என்று கூறுவதால் எனக்கு ஏற்பட்ட மனவேதனை உங்களுக்கு புரிந்திருக்கும்.

எந்த சட்டப் பிரச்சினையோ அல்லது வணிக ரீதியான காரணத்தாலோ தடையில்லாமல் இருந்திருந்தால் அதைப் பொருத்திருக்கலாம். ஆனால், தனிப்பட்ட வேறுபாடுகள் காரணமாகவே தடைவிதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

சமீபத்தில் வெளியான டிரைலரில் உள்ள மூன்று விநாடி காட்சிக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது எனக்கு அதிர்ச்சி அளித்தது. அதுமட்டுமின்றி, ஒரு தனிப்பட்ட காட்சிக்காக பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்பது எனக்குப் பேரதிர்ச்சியாயிற்று.

இத்தகைய செயல்கள் உங்கள் உண்மையான முகத்தை வெளிக்காட்டுகின்றன. மேடைகளில் நீங்கள் பேசுவது போல வாழ்க்கையிலும் நடக்க முடியாது என்பதையும் நாங்கள் நன்றாகவே அறிவோம்.

என் சினிமா பயணத்தின் இனிய நினைவுகளைச் சொல்லும் பல காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன. அதற்கான அனுமதி கேட்டபோது பல தயாரிப்பாளர்கள் பேரன்புடன் ஒப்புதல் அளித்தனர். அவர்கள் மனிதத்தன்மையுடன் நடந்துகொண்டனர். அதனால் அவர்கள்தான் காலத்தை கடந்தும் வாழ்ந்து வருகின்றனர்.

உங்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் சட்ட ரீதியாக போராட தயாராக இருக்கிறோம். 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்களுக்கு உரிமைகள் பற்றிய விஷயங்களை நீதிமன்றத்தில் விளக்குங்கள். ஆனால் கடவுளின் முன்பில் நீங்கள் விளக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் இருக்கின்றன.

'நானும் ரௌடிதான்' வெளியாகி பத்து ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும், உங்கள் அவமானகரமான செயல்களை மறைக்கும் போலி முகமூடி அணிந்து சுற்றித்திரிய முடியாது. ஆனால் தயாரிப்பாளராக எனக்கு பெரும் வெற்றி அளித்த, மக்கள் இன்றும் கொண்டாடும் அந்தப் படத்துக்கு நீங்கள் கூறிய கடுமையான வார்த்தைகளை மறக்க முடியாது.

அந்த வார்த்தைகள் ஏற்படுத்திய காயம் என்றென்றும் ஆறாது. அந்த படத்தின் வெற்றியால் உங்களுக்கு ஏற்பட்ட உளவியல் பாதிப்பை சினிமா நண்பர்கள் மூலம் தெரிந்துகொண்டேன்.

சினிமா விழாக்களில்(பிலிம்பேர் 2016) நீங்கள் காட்டிய அதிருப்தி எந்த சாதாரண பார்வையாளருக்கும் தெளிவாகத் தெரியும். எந்தத் துறையிலும் வணிக போட்டிகள் தவிர்க்க முடியாதவை என்பதை உணர்ந்தாலும், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக் கூடாது. அநாகரிகமான செயல்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், நீங்கள் பிரபலமான நடிகராக இருந்தாலும் கூட.

கடந்த காலத்தில் உங்களுடன் பயணித்தவர்கள் வெற்றிபெற்றால், எந்த கோபமும் இல்லாமல், அமைதியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்தக் கடிதத்தின் மூலம் வேண்டுகிறேன். உலகம் எல்லோருக்கும் சமமாக இருக்கிறது. கடின உழைப்பின், கடவுளின் அருள், மக்களின் பேரன்பு காரணமாக வெற்றி பெறும் ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்ந்தால், அது உங்களை பாதிக்கக் கூடாது.  

இந்த நேரத்தில், ஜெர்மன் மொழியின் "Schadenfreude" எனும் வார்த்தையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். அதன் பொருளை புரிந்து, யாருக்கும் இனி அப்படி செய்யாமல் இருப்பதை உறுதியாக நினைத்துக்கொள்ளுங்கள்.

"மகிழ்வித்து மகிழ்" என்பதே உண்மையான சந்தோஷம். வாழ்க்கை கொண்டாட்டங்களால் நிறைந்து, அனைவரும் புன்னகையோடு கடக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள். இதை மையமாக வைத்து தான் 'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்தால், உங்கள் எண்ணங்கள் நேர்மறையாக மாறுவது நிச்சயம்.

நீங்கள் கூறும் "Spread Love" என்பதை வெற்று வார்த்தைகளாக மட்டுமல்லாமல், வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும் என இனி நானும் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்," என அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • 874
  • More
சினிமா செய்திகள்
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு