சினிமா செய்திகள்
பாடகி ஜென்சி ஓரங்கட்டப்பட்ட மர்மம் என்ன?
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை
இளைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
இணையத்தில் லீக் ஆன GOAT First Single பாடல்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்) படம் உருவாகி வருகிறது.
நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருபவர் சாயாஜி ஷிண்டே. தமிழில் பாரதியார் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான ‘பாரதி’ படத்தில் நடித்தவர். மகார
மனிஷா கொய்ராலா பற்றி பலரும் அறிந்திடாத தகவல்
உச்சத்தில் இருந்து ஜீரோவான நேபாள ராணி மனிஷா கொய்ராலா.. மது தான் காரணமா?நடிகை மனிஷா கொய்ராலா நேபாள நாட்டின் ராஜகுமாரியாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில்
Ads
 ·   ·  7495 news
  •  ·  5 friends
  • I

    9 followers

இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் ஒரே நாளில் 1,341 பேர் கொரோனாவுக்கு பலி

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மக்களை உலுக்கி எடுத்து வருகிறது. முதல் அலையை விட ஆக்ரோஷமாக சுழன்றடிக்கும் இந்த 2-வது அலையால் அரசும், மருத்துவத்துறையும் செய்வதறியாமல் திணறி வருகின்றன.

கடந்த ஆண்டு புரட்டியெடுத்த முதல் அலையில் கூட, நாளொன்றுக்கு 1 லட்சம் பாதிப்பு என்ற சோகத்தை எட்டவில்லை. ஆனால் இந்த 2-வது அலையோ 2 லட்சத்துக்கு அதிகமான பாதிப்புகளை சமீப நாட்களாக அளித்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கூட 2 லட்சத்து 34 ஆயிரத்து 692 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் ஆகும்.

புதிதாக பாதிக்கப்பட்டுள்ள இவர்களையும் சேர்த்து இந்தியாவில் 1 கோடியே 45 லட்சத்து 26 ஆயிரத்து 609 பேர் இதுவரை இந்த மோசமான தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு மேல் வந்திருக்கிறது. மொத்தத்தில் கடந்த 38 நாட்களாக புதிய பாதிப்புகள் தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

மேற்படி 24 மணி நேரத்தில் ஏற்பட்ட புதிய பாதிப்புகளில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 63,729 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து உத்தரபிரதேசம் (27,426), டெல்லி (19,486) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதுவும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா தோற்றத்துக்கு பிறகு மிகவும் அதிகபட்சமாகும். மேலும் சட்டசபை தேர்தல் நடந்து வரும் மேற்கு வங்காளத்திலும் இதுவரை இல்லாத அளவுக்கு 6,910 பேர் மேற்படி 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதைப்போல பல மாநிலங்கள் புதிய பாதிப்பில் தினந்தோறும் உச்சத்தை தொட்டு வருகின்றன.

லட்சக்கணக்கில் அதிகரித்து வரும் புதிய நோயாளிகளால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் ஆஸ்பத்திரி வளாகங்கள் அனைத்தும் பெரும் சோகமும், பரபரப்புமாக நீடித்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் மேற்படி 24 மணி நேரத்தில் 1,341 பேரின் உயிரை கொரோனா காவு கொண்டிருக்கிறது. இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் ஆகும்.

குறிப்பாக இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை உச்சத்தில் இருந்தபோது கடந்த செப்டம்பர் 15-ந் தேதி ஏற்பட்டு இருந்த 1,275 மரணங்களே ஒருநாள் அதிகபட்சமாக இருந்தது. ஆனால் அதையும் தற்போதைய 2-வது அலை கடந்திருப்பது சோகத்துக்குரியது.

உயிரிழந்த 1,341 பேரையும் சேர்த்து இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1¾ லட்சத்தை கடந்து விட்டது. நேற்று காலை நிலவரப்படி மொத்தம் 1,75,649 பேர் கொரோனாவால் பலியாகி இருக்கிறார்கள். இது மொத்த பாதிப்பில் 1.21 சதவீதம் ஆகும்.

  • 533
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads