Category:
Created:
Updated:
கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயம் வருடாந்தம் நடைபெறும் கொடியேற்ற மகோற்சவ பெருவிழா 18 07.2022 அன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் அன்றைய 27.07.2022 தினம் ஒன்பதாம் திருவிழா தேர் திருவிழா மிகச் சிறப்பான முறையில் சுகாதார நடைமுறைக்கு அமைவாக பல ஆயிர அடியார்கள் புடைசூழ வடம் பிடித்து தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றன. நேர்த்திக்கடனை சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர்.
அன்றைய தினமும் 28.07.2022பத்தாம் திருவிழா அன்றைய தினம் ஆடி அமாவாசை விரத நிகழ்வு நடைபெற உள்ளதால் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் சிறப்பான முறையில் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.