
கிளிநொச்சி கமகார அமைப்புகள் கமநலசேவை நிலையங்களுக்கு தெரியப்படுத்தாமையின் காரணமாகவே இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு கிடைக்காமைக்கான காரணம்
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டுக்கான சிறுபோக பயிர்ச்செய்கை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய பயிர் செய்கை மேற் கெள்ளாது கலந்தாழ்த்தி மேற்கொள்ளப்பட்ட விதைப்புக்கள் தொடர்பாக உரிய கமகார அமைப்புகள் கமநல சேவை நிலையங்களுக்கு தெரியப்படுத்தாமையின் காரணமாகவே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு கிடைக்காமைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு 28 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது கிளிநொச்சி மாவட்டதிலுள்ள இரணைமடுக்குளம் உள்ளிட்ட 08 பாரிய மற்றும் நடுத்தரக் குளங்களின் கீழான வயல் நிலங்களில் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கைக்கான கூட்டங்கள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் நீர் விநியோக நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படுகின்றன.
மேற்படி மாவட்ட பயிர்ச் செய்கை குழுவின் தீர்மானங்களின் அடிப்படையிலேயே சிறுபோக செய்கைக்கான உரக் கோரிக்கை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பிரதி ஆணையாளரால் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காலம் பிந்திய விதைப்புக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட கமக்கார அமைப்புக்கள் கமநல சேவை நிலையங்கள் ஊடாக வழங்கப்படாததன் காரணமாகவே தற்போது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு கிடைக்காமைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு 28 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 40 அந்தர் யூரியா உரம் மாத்திரமே கிடைக்கப் பெற்றுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட விவசாய சம்மேளனத்தின் செயலாளார் மு.சிவமோகனை தொடர்பு கொண்டு வினவியை போது கடந்த சிறு போக செய்கையின் போது விவசாயிகள் பயிர் செய்கை கூட்டத் தீர்மானங்களுக்கு அமைவாக பயிர்செய்கை மேற்கொள்ள முடியாத நிலை ஒன்று ஏற்பட்டது காரணம் உரிய காலத்தில் எரிபொருள் கிடைக்க பொறாமையினால் விவசாயிகள் ஒரு மாத காலம் பிந்திய நிலையில் தங்களுடைய பயிர்செய்கையை மேற்கொள்ள கூடியதாக இருந்தது. இது தொடர்பாக கால நீடிப்பு செய்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதங்கள் மூலம் அறிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.