
பாண்டியன்குளம் பிரதேசத்தில் புதையல்-கிராம அலுவலருக்கு அச்சுறுத்தல்- போலீசில் முறைப்பாடு!
மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதியொன்றில் புதையல் தோண்டப்படுகின்றது என்ற கிராம மக்களின் முறைப்பாட்டிற்கு அமைய குறித்த பகுதிக்கு களப்பரிசோதனை மேற்கொள்ள சென்ற கிராம அலுவலர் அச்சுறுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.பாண்டியன்குளம் பிரதேசத்தில் புதையல் தோண்டப்படுகின்றது என்ற கிராம மக்களின் முறைப்பாட்டிற்கு அமைய குறித்த பகுதிக்கு என்ற பெண் கிராம அலுவலரே புதையல் தோண்ட முற்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களினால் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளார்.பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் முன்னால் குறித்த கிராம அலுவலர் அச்சுறுத்தப்பட்டதாகவும், இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட போதும் போலீசார் அசண்டையீனமாக இருப்பதாக தெரிவித்த கிராம மக்கள், சொந்த காணியில் துப்பரவு பணிகளை செய்வதாயின் பிரதேச செயலகத்தில் அனுமதி பெறப்படல் வேண்டும் என்று கூறி காணி துப்பரவு பணியில் ஈடுபடும் வாகனங்களை பிரதேச செயலாளர் கையகப்படுத்தி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து வழக்கு தாக்கல் செய்பவர், குறித்த சம்பவம் தொடர்பில் மௌனம் சாதிப்பது வேதனையடைய செய்வதாக தெரிவித்தனர்.இதேவேளை மாந்தை கிழக்கு பகுதிக்கு இன்றைய தினம் வருகைதந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விநோதரலிங்கம் புதையல் தோண்டியதாக சந்தேகிக்கப்படும் இடத்தினை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.