சினிமா செய்திகள்
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கிளிநொச்சி பூநகரி ஞானிமடம் கறுக்காய் தீவு ஆகிய பகுதிகளில் குடிநீர் வழங்கப்படாமையினால் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தமக்கான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி பூநகரி ஞானிமடம் கறுக்காய் தீவு ஆகிய பகுதிகளில் இதுவரை தமக்கான குடிநீர் வழங்கப்படாமையினால் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தமக்கான குடிநீர் வசதியை  ஏற்படுத்தி தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தின் புனகரி பிரதேசமானது வருடமுழுவதும் குடிநீர் நெருக்கடியை எதிர்கொள்ளுகின்ற ஒரு பிரதேசமாக காணப்படுகிறது. இந்த பிரதேசத்தில் குடிநீர் வினியோகத்துக்காக பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை இழுத்தடிக்கப்பட்டும் கிடப்பில் போடப்பட்டு வருகின்றன. இதனால் குறித்த பிரதேசத்தில் வாழும் ஏராளமான மக்கள் தமக்கான குடிநீர் பெற்று கொள்வதில் நாளாந்தம் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.இந்த நிலையில் தமக்கான குடிநீர் வழங்குவதற்கு இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையானது ஏற்கனவே குடிநீர் வளம் கொண்ட பிரதேசங்களுக்கு குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்படுகின்றதே தவிர எந்தவித குடிநீர் வசதியும் இல்லாத தங்களுடைய பிரதேசத்தின் ஊடாக குழாய்கள் பொருத்தப்பட்டு வேறு கிராமங்களுக்கு நீர் கொண்டு செல்லப்படுகின்ற போதும் தமக்கு இதுவரை குடிநீர் தரவில்லை என தெரிவித்தும் தமக்கான குடிநீரை பெற்றுத் தருமாறுகோரியம் இன்று(07-07-2022) ஞானிமடம் சித்தங் குறிச்சி செம்மண் குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களும் செட்டிய குறிச்சி கறுக்காய் தீவு ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களும் இணைந்து பூநகரி ஞானிமடம் பாடசாலை முன்பாக ஒன்று கூடி மாளிகை வீட்டுக்கு நன்னீரா ஏழையின் வீட்டுக்கு உவர் நீரா வழங்கு வழங்க தாமதிக்காது குடிநீரை வழங்க ஏமாற்றாதே ஏமாற்றாதே, தினமும் நம்மை ஏமாற்றாதே, அரசு அதிகாரிகளே முன்னுரிமைப்படுத்தி குடிநீர் வழங்க வேண்டிய எமது பிரதேசம் புறக்கணிக்கப்பட்டது ஏன் என பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு பூநகரி பிரதேச செயலகம் வரை சென்று அங்கு பிரதேச செயலாளர் மாவட்ட அரசு அதிபர் ஆகியோருக்கான மகஜகர்களை கையளித்தனர்,குறித்த பிரதேசத்தில் சுமார் 294க்கு மேற்பட்ட குடும்பங்கள் இதுவரை  குடிநீரின்றி பெரும் சிரமங்களை எதை நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர் குறிப்பாக கடந்த காலங்களிலே பிரதேச சபையினால் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டிருந்தாலும் தற்போது  எரிபொருள் இம்மையை காரணம் காட்டி தங்களுக்கான குடிநீர் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

  • 471
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads