சினிமா செய்திகள்
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில்
ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார் பிரியாமணி
பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்க
மதுரையில் நடந்து முடிந்தது ரோபோ சங்கர் மகளின் திருமணம்
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. குடும்பத்தினரால் நிச்சயிக்கப் பட்டு கோலாகலமாக நடந்து முடிந்த
வேறொரு பெண்ணுடன் 4 வருஷமாக தொடர்பில் இருக்கும் கணவன் குறித்து வருந்திய நடிகை
துக்ளக் தர்பார், வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ள சமயுக்தா பிக் பாஸ் மூலம் பிரபலமானார். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், கணவர் கார்த்திக் துபாயில் வேல
தன் குழந்தை முன்னிலையில் காதலனுடன் நிச்சயதார்த்த மோதிரம் மாற்றிக்கொண்ட நடிகை
நடிகை எமி ஜாக்சனுக்கு லண்டனில், கடந்த சில நாட்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் பரவி வரு
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் எரிபொருள் பெற்றுக் கொள்வதில் உள்ள இடப்பாடுகளை தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தமக்கு சீராக எரிபொருள் வழங்கப்படுவதில்லை மற்றும் எரிபொருள் பெற்றுக் கொள்வதில் உள்ள இடப்பாடுகளை தெரிவித்து  மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பேருந்துகளை நிறுத்தி பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு அண்மையில் நேற்று (04-27-2022) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக முல்லைத்தீவிலிருந்து பயணிக்கின்ற அனைத்து அரச பேருந்துகளையும் மறித்து கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் பொதுமக்கள் தமது பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் பல மணி நேரம் பேருந்துகளுக்காக காத்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் தனியார் மற்றும் அரச பேருந்துகளுக்காக இலங்கை போக்குவரத்து சபை சாலைகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டு அதன் ஊடாக போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும் முல்லைத்தீவில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை சாலையில் எரிபொருள் நிரப்புவதற்குரிய வசதிகள் இல்லாததன் காரணமாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கு கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடகவே இதுவரை காலமும் எரிபொருள் வழங்கப்பட்டு வந்தது.

தற்போதைய நிலைமையில் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் எரிபொருள் வராத நிலையிலே தங்களுடைய போக்குவரத்து சேவைகளை மேற்கொள்வதற்காக எரிபொருளை பெற்றுக் கொள்வதில் உள்ள இடர்பாடுகளை பூர்த்தி செய்யுமாறும் அரச பேருந்து சாலையில் உடனடியாக எரிபொருளை நிரப்பக்கூடிய வசதிகளை ஏற்படுத்தி அதனூடாகவேணும் எரிபொருளை பெற்று தருமாறும் இல்லையெனில் தாங்கள் போக்குவரத்து சேவைகளை செய்ய முடியாது என்ற நிலையை வெளிப்படுத்தி குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இவர்களுக்கான எரிபொருள் விநியோகம் வேறு மாவட்டங்களில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்தது.இருப்பினும் குறித்த டீசலை பெற்றுக் கொள்வதற்கு தாம் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாகவும் குறிப்பாக தமது பேருந்துகள் சேவையில் ஈடுபடும் நேரத்தில் தம்மை வரிசைகளில் காத்திருக்க வைத்துவிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தனர்.

இதனால் அங்கு சென்று பெற்றுக்கொண்டு தங்களுடைய நேரத்திற்கு அமைவாக போக்குவரத்து சேவைகளை செய்ய முடியாத உள்ளதாகவும் எனவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு தங்களுக்கான எரிபொருளை உரிய வகையில் பெற்றுத்தந்து போக்குவரத்து சேவைகளை நடத்துவதற்கு வழி செய்யுமாறு கோரி குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டம் காரணமாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் இந்த பிரச்சினை இருப்பதன் விளைவாக இவர்களது நியாயமான கோரிக்கையை ஏற்று போக்குவரத்து சேவைகளை நடத்தாமை காரணமாக அங்கு வருகை தந்த பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் வருகை தந்து நிலைமைகளை கட்டுப்படுத்த முற்பட்டபோதும் மாவட்ட அரசாங்க அதிபர் வருகை தந்து இதற்கான தீர்வுகளை பெற்று தர வேண்டுமென அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அங்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்)க.கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.குணபாலன் ஆகியோர் வருகை தந்து சம்பவங்களை நேரில் கேட்டறிந்து கொண்டார்.

மேலும் குறித்த பிரச்சினை தொடர்பில் தங்களுக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை என கேட்டு குறித்த பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை அவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தி குறித்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்த்தருவதாக அளித்த வாக்குறுதிக்கமைய போராட்டம் கைவிடப்பட்டு காலை முதல் தடைப்பட்டிருந்த பேருந்து சேவைகள் பதினொரு மணியளவில் வழமைக்கு திரும்பின.

  • 365
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads