சினிமா செய்திகள்
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் எரிபொருள் பெற்றுக் கொள்வதில் உள்ள இடப்பாடுகளை தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தமக்கு சீராக எரிபொருள் வழங்கப்படுவதில்லை மற்றும் எரிபொருள் பெற்றுக் கொள்வதில் உள்ள இடப்பாடுகளை தெரிவித்து  மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பேருந்துகளை நிறுத்தி பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு அண்மையில் நேற்று (04-27-2022) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக முல்லைத்தீவிலிருந்து பயணிக்கின்ற அனைத்து அரச பேருந்துகளையும் மறித்து கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் பொதுமக்கள் தமது பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் பல மணி நேரம் பேருந்துகளுக்காக காத்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் தனியார் மற்றும் அரச பேருந்துகளுக்காக இலங்கை போக்குவரத்து சபை சாலைகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டு அதன் ஊடாக போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும் முல்லைத்தீவில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை சாலையில் எரிபொருள் நிரப்புவதற்குரிய வசதிகள் இல்லாததன் காரணமாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கு கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடகவே இதுவரை காலமும் எரிபொருள் வழங்கப்பட்டு வந்தது.

தற்போதைய நிலைமையில் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் எரிபொருள் வராத நிலையிலே தங்களுடைய போக்குவரத்து சேவைகளை மேற்கொள்வதற்காக எரிபொருளை பெற்றுக் கொள்வதில் உள்ள இடர்பாடுகளை பூர்த்தி செய்யுமாறும் அரச பேருந்து சாலையில் உடனடியாக எரிபொருளை நிரப்பக்கூடிய வசதிகளை ஏற்படுத்தி அதனூடாகவேணும் எரிபொருளை பெற்று தருமாறும் இல்லையெனில் தாங்கள் போக்குவரத்து சேவைகளை செய்ய முடியாது என்ற நிலையை வெளிப்படுத்தி குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இவர்களுக்கான எரிபொருள் விநியோகம் வேறு மாவட்டங்களில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்தது.இருப்பினும் குறித்த டீசலை பெற்றுக் கொள்வதற்கு தாம் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாகவும் குறிப்பாக தமது பேருந்துகள் சேவையில் ஈடுபடும் நேரத்தில் தம்மை வரிசைகளில் காத்திருக்க வைத்துவிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தனர்.

இதனால் அங்கு சென்று பெற்றுக்கொண்டு தங்களுடைய நேரத்திற்கு அமைவாக போக்குவரத்து சேவைகளை செய்ய முடியாத உள்ளதாகவும் எனவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு தங்களுக்கான எரிபொருளை உரிய வகையில் பெற்றுத்தந்து போக்குவரத்து சேவைகளை நடத்துவதற்கு வழி செய்யுமாறு கோரி குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டம் காரணமாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் இந்த பிரச்சினை இருப்பதன் விளைவாக இவர்களது நியாயமான கோரிக்கையை ஏற்று போக்குவரத்து சேவைகளை நடத்தாமை காரணமாக அங்கு வருகை தந்த பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் வருகை தந்து நிலைமைகளை கட்டுப்படுத்த முற்பட்டபோதும் மாவட்ட அரசாங்க அதிபர் வருகை தந்து இதற்கான தீர்வுகளை பெற்று தர வேண்டுமென அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அங்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்)க.கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.குணபாலன் ஆகியோர் வருகை தந்து சம்பவங்களை நேரில் கேட்டறிந்து கொண்டார்.

மேலும் குறித்த பிரச்சினை தொடர்பில் தங்களுக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை என கேட்டு குறித்த பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை அவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தி குறித்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்த்தருவதாக அளித்த வாக்குறுதிக்கமைய போராட்டம் கைவிடப்பட்டு காலை முதல் தடைப்பட்டிருந்த பேருந்து சேவைகள் பதினொரு மணியளவில் வழமைக்கு திரும்பின.

  • 455
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads