Ads
கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள் தமக்கு எரிபொருள் பெற்றுத் தருமாறு கோரி மாவட்ட அரசு அதிபரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பச்சிலை பள்ளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமயாற்றும் கிராம அலுவலர்கள் தங்கள் கடமைகளுக்கு செல்வதற்கு எரிபொருள் பெற்றுத் தருமாறு கோரி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.குறிப்பாக மாவட்டத்தில் கிராம அலுவலர்களுக்கு வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் ஒரு கிராம அலுவலர் இரண்டு அல்லது மூன்று பிரிவுகளை கண்காணிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் குறித்த விடயத்தில் சுட்டிக் காட்டி இருந்தனர் இதனை அடுத்து மாவட்டத்தில் எரிபொருளை பெற்றுக் கொடுப்பதற்கான வழிவகைகளை கண்டறிந்து அதன் மூலம் எரிபொருளை பெற்று தருவதாக மாவட்ட அரச அதிபர் சந்திப்பின் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Attachments
Info
Ads
Latest News
Ads