சினிமா செய்திகள்
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கிளிநொச்சி அக்கராயன் கமநல சேவை நிலையத்தில் கையிருப்பில் இருந்த ஆயிரத்து 500 கிலோ யுரியா மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஊடாகவே முறைகேடாக பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அக்கராயன் குளம் கமநல சேவைக் குழுவின் தலைவர் ம. புவனேந்திரன் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(08-06-2022) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில Zoom தொழில்நுட்பம் மூலமும் நேரடியாகவும் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விவசாய அமைப்புக்களின் பிரதிநிதி அக்கராயன் கமநல சேவை நிலையத்திலிருந்து உரம் கொண்டு செல்லப்பட்டமை தொடர்பில் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இந்த விடயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் உங்களுக்குத் தேவையான உரத்தை நாங்கள் தருகிறோம் இந்த விடத்தை பெரிது படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும் அக்கராயன் குளம் கமநல சேவைக் குழுவின் தலைவர் பகிரங்கமாக குறித்த குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக மாவட்ட உதவி ஆணையாளர் அவர்களை தொடர்பு கொள்ள பல தடவை முற்பட்ட போதும் பதிலளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கமநல சேவை நிலையங்களில் இரசாயன உரவிநியோகம் நிறுத்தப்பட்டதன் பின்னர் கையிருப்பில் இருந்த சுமார் 63 மெட்ரிக் தொன் இரசாயன உரம் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரின் துணையுடனே இவ்வாறு மாயமாகி இருப்பதாக பல்வேறு தரப்புகளும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் இரசாயன உர பயன்பாட்டை நிறுத்தி சேதன உரத்தை பயன்படுத்தும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது இதனையடுத்து இரசாயன உரம் வினியோகம் கிளிநொச்சி மாவட்ட கமநல சேவைகள் நிலையங்களுடாக நிறுத்தப்பட்டன.

இதன் பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் சுமார் 63 மெற்றிக் தொன் இரசாயன உரம் கையிருப்பில் இருப்பதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டது.

அதாவது 16.25 மெட்ரிக் டன் யூரியா 23.45 மெற்றிக்தொன் ரீ எஸ் பி 23.21 மெற்றிக் தொன் எம்.ஓ.பிஆகியன முழங்காவில் அக்கராயன் இராமநாதபுரம் கிளிநொச்சி புளியம்பொக்கனை ஆகிய கமநல சேவை நிலையங்களில் கையிருப்பில் இருந்தன.

இவ்வாறு கையிருப்பில் இருந்த இரசாயன உரம் இப்பொழுது மாயமாகி உள்ளன அக்கராயன் கமநல சேவை நிலையத்திலிருந்த 30 அந்த யூரியா உரத்தை கொண்டு சென்றமை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று முன்தினம் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • 607
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads