
கிளிநொச்சி - அக்கராயன் குளம் கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை (07-06-2022)முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே கமநல சேவை நிலையத்தில் இருந்த உரம் திணைக்களங்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக அக்கராயன் கமநல சேவை நிலையத்தின் பெரும் பாக உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
கமநல சேவை நிலையத்திலிருந்த 1500 கிலோ யூரியா கடந்த சனிக்கிழமை காணாமல் போயுள்ளதாகவும் உண்மை நிலையை அதிகாரிகள் தெரிவிக்குமாறு கோரி குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
போராட்டக்காரர்கள் யூரியா எங்கே இராணுவத்திற்கு வழங்கப்பட்டதா அதிகாரிகள் களவா? எங்கே யூரியா எவர் கைக்குப் போனது எங்களுக்குச் சேதனம் உங்களுக்கு யூரியா சீதனமா! என பல பதாகைகளை ஏந்தியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் முன்னெடுத்திருந்தனர்.
இது தொடர்பாக கமநல சேவை நிலைய அதிகாரிகளிடம் வினவிய போது 30 பை யூரியா மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே கமநல சேவை நிலையத்தில் இருந்த உரம் திணைக்களங்க ளுக்கு விநியோகிக்கப்பட்டதாகதெரிவித்தனர்.
ஆனால் இது தொடர்பில் விவசாய அமைப்புகளுக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.