
முகமாலை கிராமத்தில் மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதாக மீள்குடியேறிய மக்கள் தெரிவிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் மீள்குடியேற்ற கிராமமான முகமாலை கிராமத்தில் மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதாக மீள்குடியேறிய மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முகமாலை கிராமமானது யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகும் என்பதுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் இறுதியாக மீள் குடியேற்றம் செய்யப்பட்ட ஒரு பகுதியாகவும் காணப்படுகின்றதுஇந்த நிலையில் குறித்த பிரதேசத்தில் மீள் குடியேறிய மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் இதுவரை வழங்கப்படாமை மற்றும் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்ற போதும் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க படாத நிலை கானப்படுவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டிய்ள்ளனர்.வடிகால்கள் சீர் செய்யப்படாமல் உள்ளமையால் மழை காலங்களில் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்வதாக கிராம அபிவிருத்தி சங்கத்தினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுகால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடிய வகையில் காணப்படுகின்ற கோவானைக்குளம் முகமாலை குளம் வண்ணாந்துறை குளம் என்பன கடந்த 50 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன.இவ்வாறு காணப்படுகின்ற குளங்களை புனரமைத்து தருமாறு தருவதன் மூலம் இந்தப் பிரதேசத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புகளை முன்னெடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர் அத்துடன் முகமாலை பிரதேசத்திலே மூன்றில் இரண்டு பகுதி நிலப்பரப்பு இதுவரை வெடி பொருள் ஆபத்ததுக்களிலிருந்து விடுவிக்கப்படாத நிலையில் தற்போது வெடிபொருட்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.