சினிமா செய்திகள்
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

புத்த பெருமானின் போதனையின் அடிப்படையில் அரசியல் கைதிகளை பிரதமர் விடுதலை செய்து தமிழ் மக்களிற்கு பச்சை கொடி காண்பிக்க வேண்டும் என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஊடகமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் அபிவிருத்தியை விட உரிமையே முக்கியமாக காணப்படுகின்றது. அடுத்து வரும் நாட்கள் புத்த பெருமானுடைய முக்கியமான நாளாக இருப்பதனால் புத்த பெருமானின் போதனைகள் படி சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படும் நாட்களாக உள்ளது.இந்த நாட்களில் பிரதமர் பதவியை எடுத்துள்ள நிலையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யநடவடிக்கை எடுத்தால் தமிழ் மக்களிற்கு பச்சைக்கொடி காட்டியதாக கருதப்படும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களில் ஏற்படுத் முரண்பாடான நிலை மாறி இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை மூவின மக்களிற்கும் இருக்க வேண்டும்.முள்ளிவாய்க்கால் என்பது கொத்து கொத்தாக மக்கள் அழிந்த இடம் என்பது உலக நாடுகளிற்கு தெரியும். எத்தனையோ உறவுகள் நம்பிக்கையோடு வணங்கும் நாளாக அது அமைகின்றது. அந்த நாளிற்கு எந்தவொரு அடையும் இல்லாது இருக்க வேண்டும்.அதேபோன்று நவம்பர் 27ம் திகதியும் எமது பிள்ளைகளை நாங்கள் வணங்குவதற்கும், உரிய முறையில் நாங்கள் அஞ்சலி செலுத்துவதற்குமாக அந்த நாளிலும் தடைகள் இல்லாமல் அவ்வந்த இடங்களிலே நினைவேந்த அனுமதிக்க வே்ணடும்.இராணுவம் அப்பகுதிகளிற்கு மக்களை உட்செல்ல விடாமல் தடுத்துள்ளது. அந்த நினைவேந்தலிற்கும் விடுவார்களாக இருந்தால் தமிழ் புதிய பிரதமரில் தமிழ் மக்களிற்கு நம்பிக்கை ஏற்படும்.அரசியல் கைதிகளாக உள்ளவர்களின் பிள்ளைகள் தமது தந்தையை காண்பதற்காக காத்திருக்கின்றார்கள். புத்த பெருமானின் போதனைப்படி அரசியல் கைதிகளை புதிய பிரதமர் விடுதலை செய்தார் என்ற செய்தி எமது காதுகளை அடைய வேண்டும்.முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள உள்ளதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றது. பல்லாயிரம் உயிர்களை இழந்துள்ள நிலையில் அவற்றை மறந்து அமைச்சு பொறு்பபுக்களை ஏற்பது அரசாங்கத்துடன் மறைமுகமாக இணைந்து செயற்படுவதாகவே பார்க்க முடிகின்றது.வடக்கு கிழக்கில் இதுவரை காலமும் அமைச்ச பதவிகளை எடுத்து எ்ன செய்தார்கள்? விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் என்ன விடயத்தினை முன்வைத்து அமைச்சு பதவியை எடுக்க போகின்றார் என்பது தெரியவில்லை. அது உண்மையில் தவறான விடயமாகும்.தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்து பின்னர் வெளியேறி பிந்துபோய் ஒரு தலைமை எடுத்து தனிப்பட அமைச்சு பதவியை எடுத்து செயற்படுவதென்பது கேலிக்கூத்தான விடயமாக இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

  • 417
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads