சினிமா செய்திகள்
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கோரக்கன் கட்டுப்பகுதியில் சிறு போக செய்கை தொடர்பான கலந்துரையாடல்கள் எதுவும் நடத்தப்படவில்லை பற்றுச் சீட்டுக்கள் இன்றி எந்த ஒரு பணமும் அறவிட முடியாது என பரந்தன் கமநல சேவை

கிளிநொச்சி பரந்தன் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட கோரக்கன் கட்டுப்பகுதியில் இவ்வாண்டுக்கான சிறு போக செய்கை தொடர்பான கலந்துரையாடல்கள் எதுவும் நடத்தப்படவில்லை  என்பதுடன் பற்றுச் சீட்டுக்கள் இன்றி எந்த ஒரு பணமும் அறவிட முடியாது என பரந்தன் கமநல சேவைநிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட கோரக்கன் கட்டுப்பகுதியில் அப்பகுதி கமக்கார அமைப்பினால் எந்த வித பயிர் செய்கை கூட்டங்களும் நடத்தப்படாது சிறு போக செய்கைக்கான வாய்க்கால் அமைப்பிற்கென ஒவ்வெரு விவசாயிகளிடமிருந்தும் மிக அவசரமாக தலா இரண்டாயிரத்து ஐநுாறு ரூபா வீதம் பற்றுச் சீட்டுக்கள் எதுவுமின்றி அறவிடப்பட்டுள்ளதாக குறித்த பிரதேச விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் உள்ள நீர் பாசன பிரதேசத்துக்குள் உள்வாங்கப்படாத குறிப்பிட்ட அளவு காணிகளை இம்முறை பரீட்சார்த்தமாக உள்வாங்கி விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்வது என்று அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கமைவாக குறித்த பிரதேசத்தில் நீர்ப் பாசனக் கட்டுமானங்கள் வாய்க்கால்கள் இல்லாத காரணத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயிர் செய்கை மேற்கொள்வதாக மாவட்ட அரச அதிபர் தலைமையில் இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பில் இதுவரை பிரதேச மட்டத்தில் பயிர்செய்கை கூட்டங்கள் எதும் நடத்தப்படாது 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு கோரக்கன் கட்டுப்பகுதியில் செய்கைக்கு உட்படுத்தப்ட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகிய வற்றின் எந்தவித அனுமதிகளுமின்றி வாய்க்கால் அமைப்பதற்கென ஒவ்வொரு விவசாயிகளிடமிருந்தும் தலா 2,500 ரூபா வீதம் அறவிடப்பட்டிருப்பதாக விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தெடர்பில் பரந்தன் கமநல சேவைநிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு கேட்டபோது கோரக்கன் கட்டுப்பகுதியில் இவ்வாண்டுக்கான சிறு போக செய்கை தொடர்பான கலந்துரையாடல்கள் எதுவும் நடத்தப்படவில்லை.  எந்த தீர்மாணங்களுமின்றி பற்றுச் சீட்டுகள் இல்லாது விவசாயிகளிடமிருந்து பணம் அறவிட பட்டிருந்தால் அது ஒரு சட்டவிரோதமான செயற்பாடாகும் இது தொடர்பாக விவசாயிகள் முறைப்பாடு தெரிவிக்கும் இடத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தாங்கள் தயார் என்றும் தெரிவித்துள்ள அவர் குறித்த பிரதேசத்தில் சிறு போக செய்கை மேற் கொள்வதற்கான எந்த தகவல்களும் எங்களுக்கு உத்தியோக புரவமாக கிடைக்கவில்லை.  அவ்வாறு கிடைக்கும் போது தான் மானிய கொடுப்பனவுகள் பயிர் காப்புறுதிகள் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பில் விவசாயிகளுடன் பிரதேச மட்ட கலந்துரையால்களை நடத்தி தீர்மானங்களை எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

  • 626
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads