
எங்களது வரலாறுகள் வித்தியாசமானது அதனை பேசுவதற்குரிய காலம் இன்னும் இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவு விசுவமடு மத்தியில் அமைந்துள்ள சனசமூக நிலைய வளாகத்தில் நீண்ட காலம் வசித்து வந்த வயோதிப தம்பதியினருக்கு வோல் தம் ஸ்ரோ லண்டன் கற்பக விநாயகர் ஆலய ஸ்தாபகர் கோபாலகிருஷ்ணன் அவர்களால் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியில் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இதன் போது நுாலகத்தை பார்வையிட்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்; எங்களுடைய மக்கள் இன்றும் வீடுகள் இன்றி அல்லல்படுகின்றார்கள் குறிப்பாக நீண்ட எதிர்பார்ப்புகளோடும் கனவுகளோடும் வாழும் இது போன்றவர்களுக்கு அவர்களுடைய இறுதிக்காலத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு ஒரு வீட்டினை லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தின் தாபதர் கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட இருக்கின்றது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்லாது வடக்கு கிழக்கு மலையகம் என்று அவருடைய பணிகள் மிகப்பெரிய பணியாக இருக்கின்றது என்று குறிப்பிட்ட அவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலேயே பழமையான கட்டிடம் ஒன்று இன்று வரையும் இருக்கின்றது. அதில் விவேகானந்தர் வந்து பேசினா,ர் நாவலர் வந்து சென்றவர், மகாத்மா காந்தி வந்து பேசினார் என்றும் அதன் அடையாளமாக அந்தக் கட்டடம் இன்றும் இருக்கின்றது.
அதே போல இந்த நுாலகமும் இங்கே உள்ளது. இதிலும் பெரும்பெரும் மகான்களும் தலைவர்களும் தடம் பதித்த இடம் பழைய வரலாறுகள் வித்தியாசமானது. அதனை பேசுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. எங்களை நாங்களே ஆளுகின்ற ஆட்சி வரட்டும் அதன் பின்னர் எங்கள் அடையாளங்களை பலப்படுத்தலாம். ஆயிரம் ஆயிரம் மனிதர்களையும் வரலாறுகளையும் கொண்ட இந்த இடம் புனிதத்திறிகுரிய இடமாக இருக்கின்றது.
நல்ல ஒரு சனசமூக நிலையமாகவும் ஒரு அறிவுசார் திறனை வளர்க்கும் ஒரு கலை கூடமாகவும் இந்த விசுவமடு மத்திய சன சமூக நிலையம் இயங்கி வருகின்றது. இதற்காக உழைக்கும் அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.